ஞ்சா விற்றால், லாரி கடத்தினால் பாஜக-வின் மாவட்டத் தலைவராகலாம் ;
பணமோசடி, பாலியல் குற்ற புரிந்தால் பாஜக-வின் மாநிலத் தலைவராகலாம் ;
நாட்டையே கூறுபோட்டு விற்றால் பாஜக-வின்தேசியத் தலைவராகலாம் !
செய்தி 1 : சேலம் மேற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் அன்புச்செல்வன் என்பவர் லாரி திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால் தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்தி 2 : சேலம் மாவட்டம் கெங்கவல்லி மேற்கு ஒன்றிய பாஜக வர்த்தக அணி பொருளாளராக உள்ளவர் பிரகாஷ். 1.5 டன் கிலோ பான்பராக்கை பதுக்கி வைத்தற்காக கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
செய்தி 3 : பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.டி.ராகவன் தனது வீட்டின் பூஜை  அறையில் ‘ஆகம’ விதிப்படி அமர்ந்து ஒரு பெண்ணிடம் அலைபேசி மூலம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் பாஜக-வின் உள்ளடி வேலைகளின் காரணமாக வெளியே வந்திருக்கிறது. அன்னார் பாஜகவில் இருந்து வெளியேறியிருக்கிறார்.

மு. துரை