அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
னவரி 2021 இதழ் வெளிவந்த பிறகு, கொரோனா ஊரடங்கினாலும் இதர காரணங்களாலும் கடந்த ஆறு மாதங்களாக புதிய ஜனநாயகம் இதழ் வெளிவராமல் இருந்தது. வாசகத் தோழர்களின் தொடர்ச்சியான வலியுறுத்தலால், கார்ப்பரேட் − காவி பாசிசம் அரங்கேறிவரும் இன்றைய காலகட்டத்தின் அரசியல் தேவையை உணர்ந்து பெரும் முயற்சியில் ஆகஸ்டு 2021 இதழைத் தயாரித்து வெளியிட்டோம்.
தமிழகத்தில், 35 ஆண்டுகளுக்கு மேலாக மார்க்சிய − லெனினிய அரசியல் ஏடாக புதிய ஜனநாயகம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக அரசியல் சக்திகள், திராவிட, தலித்திய, பெண்ணிய, தமிழின அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள், விவசாய சங்க, தொழிற்சங்க தோழர்கள் − என பல்வேறு தரப்பினரின் ஆதரவோடு புதிய ஜனநாயகம் இதழ் இயங்கி வந்தது.
பல நூறு தோழர்களின் கடுமையான, அயராத உழைப்பு புதிய ஜனநாயகத்தில் பொதிந்துள்ளது. தமிழகத்தில் தனக்கென ஒரு பெரும் அரசியல் வாசகர் வட்டத்தைக் கொண்டுள்ளது எனில், அது புதிய ஜனநாயகம் இதழ் மட்டுமே. அந்த வகையில், புதிய ஜனநாயகத்திற்கு ஆறு மாதகால ‘இடைவெளி’ என்பது அதன் வாசகத் தோழர்களுக்குப் பேரிழப்பாகும்.
புதிய ஜனநாயகம் இதழ் மீண்டும் வெளிவரவுள்ள செய்தியைக் கேட்ட பலரும் எமக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சில நண்பர்கள் ரூ.1,000, ரூ.5,000 − என நன்கொடைகளை வழங்கியுள்ளனர். பல வாசகர்கள் ‘‘புதிய ஜனநாயகம் இனி வெளிவராது எனக் கருதியிருந்தோம்; இதழைப் பார்த்த பின்னர் மகிழ்ச்சியாக இருக்கிறது’’; ‘‘அரசியல் பேசுவதற்கு ஆளே இல்லாமல் இருந்த சூழலில், புதிய ஜனநாயகத்தைப் பார்க்கும்போது உற்சாகமாக இருக்கிறது’’ − என கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சில வாசகர்கள் 5 படிகள், 10 படிகள் என கேட்டு வாங்கி தமது நண்பர்களிடம் கொடுத்துள்ளனர். சில வாசகர்கள், புதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2021 இதழ் குறித்த வாசகர் கடிதங்களையும் அனுப்பியுள்ளனர். இத்தோழர்கள் அனைவருக்கும் எமது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகத் தோழர்களின் இத்தகைய நல்லாதரவு எமக்கு பெரும் உற்சாகத்தையும் உந்துதலையும் அளித்துள்ளது. இனி, புதிய ஜனநாயகம் இதழ் முறையாக மாதந்தோறும் முதல் தேதியில் வெளிவரும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருச்சி உள்ளிட்ட சில பகுதிகளில் நேரடி சந்தாக்களுக்கு இதழை விநியோகம் செய்துவந்த சிலர் கலைப்புவாத − சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு, பொறுப்பிலிருந்தும் விலகிவிட்டதால், அந்த நேரடிச் சந்தாதாரர்களுக்கு இதழைக் கொடுக்க இயலவில்லை என்று முகவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே நேரடியாக சந்தா செலுத்திய வாசகர்கள், தங்களுக்கு இன்னமும் இதழ் கிடைக்கவில்லை எனும் பட்சத்தில், எமது அலுவலக எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தெரிவித்தால், இதழ் முறையாகக் கிடைக்க ஆவன செய்கிறோம்.
கடும் நிதி நெருக்கடியில்தான் தற்போதையை புதிய ஜனநாயகம் இதழைக் கொண்டுவந்துள்ளோம். நிதி நெருக்கடியை ஈடு செய்ய நன்கொடை மற்றும் சந்தா சேகரிக்கும் பணியை முகவர்கள் மூலம் மேற்கொண்டு வருகிறோம். புதிதாக பெற்றுக் கொள்ளப்படும் சந்தாக்கள் ஜனவரி 2022 முதல் நடைமுறைக்கு வரும். வாசகத் தோழர்கள் நன்கொடை மற்றும் சந்தா செலுத்தி ஆதரித்து, இதழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து உதவுமாறு கோருகிறோம்.
– நிர்வாகி
000
புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2021 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. இதழை வாங்குவதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !!
தொடர்பு விவரங்கள் :
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 = ரூ.25
G-Pay மூலம் பணம் கட்ட :  94446 32561
வங்கி கணக்கு விவரம்,
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.
நொறுங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம்
இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  1. நொறுங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம்!
  2. பாசிச மோடி அரசுக்கு எதிராக வளர்ந்துவரும் போராட்டங்கள்!
  3. பத்திரிகை செய்தி : பார்ப்பனரல்லாத அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர்களில் 24 பேர் அர்ச்சகராக நியமனம்! சரியான அரசியல் தலைமை, தொடர்ச்சியான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி!
  4. “திராவிட மாடல்” ஆட்சி : கார்ப்பரேட் சேவை! காவியுடன் சமரசம்!!
  5. கார்ப்பரேட் சேவையில் கழக ஆட்சி!
  6. காவி பாசிசத்துடன் சமரசம் செய்துகொள்ளும் தி.மு.க. அரசு!
  7. வெள்ளை அறிக்கையா? கட்டண உயர்வுகளுக்கான முன்னறிவிப்பா?
  8. தேசியக் கடல் மீன்வள மசோதா – 2021 : கடல்வள பேரழிப்பின் ஒரு அங்கம்!
  9. காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு : துளிர்விடுகிறது விடுதலை முழக்கம்!
  10. பெரு நாட்டில் ‘சோஷலிஸ்டு’க் கட்சியின் வெற்றி : இது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வெற்றியா?

3 மறுமொழிகள்

  1. பதிவிறக்கம் செய்ய வசதியாக pdf வடிவில் முன்னரே வழங்கியது போல் ,கட்டண முறையில் வழங்கலாமே . வினவு மற்றும் புதியஜனநாயகம் இருவரும் பரிசீலிக்கவும் .

    • நீங்கள் அளிக்கும் உற்சாகத்திற்கும், உங்களது ஆர்வத்திற்கும் நன்றி தோழர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க