ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்-கின் 114-வது பிறந்தநாள் புமாஇமு மற்றும் மக்கள் அதிகாரம், பு.ஜ.தொ.மு தோழர்களால் சென்னை, வேலூர், தருமபுரி, உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் கொண்டாடப்பட்டது. பகத்சிங் பற்றிய வெளியீடு, மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வினியோகிக்கப்பட்டது.
***
சென்னை :
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சிம்ம சொப்பனமாக விளங்கிய தோழர் பகத்சிங்-கின் 114-வது பிறந்த நாளை ஒட்டி சென்னை சேத்துப்பட்டு பகுதியில் பு.மா.இ.மு, மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் பகுதி இளைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் ஜெய காமராஜ் அவர்கள் “அந்த வீரன் இன்னும் சாகவில்லை” என்ற பகத்சிங்கின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடலை பாடினார்.
காவி – கார்ப்பரேட் பாசிசம் ஒவ்வொரு நாளும் மக்களை சுரண்டுகிறது, குறிப்பாக கார்ப்பரேட் கொள்ளைக்காக இந்த நாட்டு மக்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகிறது என்பதையும் அதற்கு எதிராக மக்களை போராடவிடாமல் தடுக்க மக்களை சாதி, மத ரீதியாக இந்து மதவெறி பார்ப்பன பாசிச கும்பல் மதவெறியை தூண்டிவிட்டு மக்களை பிளவுபடுத்துகிறது என்பதையும் பு.மா.இ.மு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் விளக்கிப் பேசினார்.
This slideshow requires JavaScript.
தோழர்களின் இந்த உணர்வுபூர்வமான நிகழ்ச்சியை பகுதியில் இருந்த மக்களும், ஆட்டோ தொழிலாளர்களும் கடைக்காரர்களும் நின்று கவனித்தனர்.
மேலும், இந்த நிகழ்ச்சியை கவனித்த மாணவர்கள் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் பகத்சிங்கின் பிறந்த நாளை ஒட்டி இனிப்பு வழங்கப்பட்டது. அவர்களுக்கு பு.மா.இ.மு சார்பில் வெளியான பகத்சிங் வெளியீடு விநியோகிக்கப்பட்டது.
தகவல்:
பு.மா.இ.மு,
சென்னை.
***
தருமபுரி :
பகத்சிங்கின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் தோழர் சத்தியநாதன் தலைமையில் பேனர் வைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. புதிய கல்விக் கொள்கை, வேளாண் திருத்தச் சட்டம், மின்சார திருத்தச் சட்டம், பொதுத்துறைகளை தனியார்மயமாக்கல், தொழிலாளர் திருத்தச் சட்டம் உள்ளிட்ட மோடி அரசின் காவி – கார்ப்பரேட் பாசிசத் திட்டங்களையும் சட்டங்களையும் பகத்சிங் காட்டிய வழியில் முறியடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
This slideshow requires JavaScript.
இதனை சாதிக்க மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு போராடுவோம் என பு.மா.இ.மு சார்பாக அறைகூவல் விடுக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பும், பகத்சிங் வெளியீடும் விநியோகம் செய்யப்பட்டது. இதில் மக்கள் அதிகாரம் தோழர்களும் கலந்து கொண்டனர். பகுதியைச் சேர்ந்த மாணவர்களும், பொதுமக்களும் நிகழ்வை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
தருமபுரி மாவட்டம்
செல்: 63845 69228.
***
உளுந்தூர்பேட்டை :
உளுந்தூர்பேட்டை பாலி கிராமத்தில் தோழர் பகத்சிங் பிறந்த நாளை முன்னிட்டு பகத்சிங் படத்திருப்பு மற்றும் பகத்சிங்கின் புத்தகம், பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்? என்ற புத்தகம், துண்டு பிரசுரம், இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மக்கள் அதிகாரம் தோழர் வினாயகம் மற்றும் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பகத்சிங் பற்றி பேசப்பட்டது.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத போராளி பகத்சிங். இன்றும் இளைஞர்கள் நெஞ்சில் விடுதலை வேள்வியைப் பற்ற வைக்கும் தீப்பொறியாக இருக்கிறார் அவர்.
“புரட்சியாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் தியாகத்தின் மூலம்தான் வலுவடையும். நீதிமன்றத்தின் மேல் முறையீடுகள் மூலம் அல்ல. அநீதிக்கு எதிரான இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை. எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை. புரட்சி என்பது ஒரு செயல். திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் மாற்றங்களை கொண்டு வருவதுதான் புரட்சி. திட்டமிடாத எதுவும் நடந்து விடாது. புரட்சி என்பது ரத்தவெறி கொண்ட மோதலாகதான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அது வெடிகுண்டுகள் துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. புரட்சியின் மூலம் அநீதியான சமூகம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். உலகப் புரட்சியின் நோக்கம் முதலாளித்துவத்தை தூக்கி எறிவது.
ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவை விடுதலை அடையச் செய்வது மட்டுமல்ல, இந்திய முதலாளிகளிடமிருந்தும் உழைக்கும் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும்” என்பதில் தெளிவாக இருந்தார் பகத்சிங்.
This slideshow requires JavaScript.
இன்று அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும், வேதாந்தா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும்தான் வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஏற்கனவே அரசின் பாதி சொத்துகளை தனியாரிடம் தாரை வார்த்து அவர்களுக்கு சலுகைகளை அளித்து, அவர்கள் மக்களை சுரண்டுவதற்கு வழி செய்கிறது மோடி அரசு.
மீண்டும் பகத்சிங் வழியில் ஓர் விடுதலைப்போரை முன்னெடுப்போம் !
தகவல் :
வினாயகம்,
மக்கள் அதிகாரம்,
உளுந்தூர்பேட்டை.
7200112838.
***
வேலூர் :
செப் 28, தோழர் பகத்சிங்-கின் 114-வது பிறந்த நாளையொட்டி வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை பேருந்து நிறுத்தம் அருகில் “விடுதலைப் போரின் கலங்கரை விளக்கம் பகத்சிங்!” என்னும் பு.ஜ.தொ.மு வெளியீட்டை பொது மக்களிடம் வினியாகித்து, பகத்சிங்கின் தியாகத்தையும், தற்போது இந்தியாவின் நிலைமைகளுக்கு தோழர் பகத்சிங்-ன் தேவையையும் இளைஞர்கள் பகத்சிங்கை படிக்க வேண்டிய அவசியம் குறித்தும் தோழர் சுந்தர் உரை நிகழ்த்தினார்.
This slideshow requires JavaScript.
தகவல்:
பு.ஜ.தொ.மு,
வேலூர்.
Related