“ஜனநாயக உச்சி மாநாடு” என்ற பெயரில் எதிர்வரும் டிசம்பர் 9,10 ஆகிய தேதிகளில் அமெரிக்கா நடத்த இருக்கும் மாநாட்டுக்கு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 110 நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
“ஜனநாயகம்” – அமெரிக்காவுக்கு உயிராதாரமான சொல்லல்லவா ?
உயிராதாரமான சொல் என்றால் ஜனநாயகத்தை உயிர் அளவிற்கு நேசிப்பது என்ற பொருளில் புரிந்து கொண்டால் கம்பெனி பொறுப்பாகாது. ஜனநாயகம் என்ற வார்த்தையை வைத்துத் தான் பிற நாடுகள் மீது போர்தொடுத்து அந்த நாடுகளை கபளீகரம் செய்து, அங்கு தனது பொம்மை அரசாங்கங்களை நிறுவி அந்த நாடுகளைக் கொள்ளையடித்துக் கொழுத்துள்ளது.
அதன் காரணமாகத்தான் “ஜனநாயகம்” அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அந்த ஜனநாயகத்தைக் காப்பாற்ற பாகிஸ்தான், இந்துத்துவ மோடியின் கீழ் சிக்கியிருக்கும் இந்தியா உள்ளிட்ட 110 நாடுகளை அழைத்த அமெரிக்கா சீனாவையும் ரசியாவையும் அழைக்கவில்லை என்பது சர்வதேச அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சீனாவிலும், ரசியாவிலும் ஜனநாயகம் இல்லை என்பது ஒருபுறமிருக்கட்டும், ஜனநாயகம் குறித்துப் பேசுவதற்கு அமெரிக்காவிற்கு என்ன தகுதியிருக்கிறது என்பதை இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் சில கேலிச் சித்திரங்கள் விளக்குகின்றன.



அசிஸ்டண்ட் : உள்நாட்டிலேயே அது கிழிஞ்சிதான் தொங்குது. அத முதல்ல சரி பண்ணப் பாருங்க பாஸ் !




