“இஸ்லாமியருக்கு ஹிஜாப் தடை, தில்லையில் தமிழனுக்கும் தமிழுக்கும் தடை. தில்லை இருப்பது தமிழ்நாடா இல்லை அதற்குள் ஒரு தனி நாடா? தில்லைக் கோயிலை இந்து அறநிலை துறையின்கீழ் கொண்டு வர சிறப்பு சட்டம் இயற்று” என்ற முழக்கத்தின் கீழ், கடந்த 28. 02. 2022 அன்று மாலை 3 மணிக்கு, பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கர்நாடகாவில் கலவரத்தைத் தூண்டி அதன் மூலம் ஆட்சியை தக்க வைக்கவும், மீண்டும் மீண்டும் இந்து மதவெறியின் சோதனைச் சாலையாக மாற்றுவதற்கும், கர்நாடக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே இந்து-முஸ்லிம் என்ற மத உணர்வை தூண்டி அதன்மூலம் பிரிவினையை ஏற்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்ற ஆர். எஸ். எஸ், பாஜக-வின் சதியை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
அந்தவகையில் பாஜக ஆர்.எஸ்.எஸ். கும்பல் நாடு முழுவதும் திட்டமிட்டு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, பொதுச்சொத்தை சூறையாடுவதை மறைப்பதற்காகவும் தங்களது இந்து ராஷ்டிரக் கனவை நனவாக்கவும் இந்த கலவரத்தைத் தூண்டி வருகிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் தில்லை நடராஜர் கோயில் தமிழ் மக்களால் கட்டப்பட்ட கோயிலாகும். இந்தக் கோயிலில் தமிழில் பாடினால் சாமி தீட்டாகிவிடும் என்றும் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடக்கூடாது என்றும் மொழி தீண்டாமையை இன்றும் கடைபிடிக்கும் தீட்சிதர்களுக்கு எதிராக, தில்லை கோயிலை தீட்சித பார்ப்பன கும்பலிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அது உழைக்கும் மக்களின் போராட்டத்தின் மூலமாக தான் வெற்றி கொள்ள முடியுமே, தவிர வெறுமனே நீதிமன்ற போராட்டத்தின் மூலமாக மட்டும் நீதி கிடைக்காது.
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழர்கள் சோற்றை சாப்பிட்டுவிட்டு, தமிழ் மண்ணுக்கு துரோகமிழைக்கும் பார்ப்பனக் கும்பலை தமிழகத்தை விட்டே விரட்டி அடிக்க வேண்டும். லட்சுமி என்ற பெண்ணை தாக்கிய தீட்சதர் கும்பலை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும். என்ற அடிப்படையில் தோழர்கள் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் பென்னாகரம் வட்டார செயலாளர் தோழர் அருண் அவர்கள் தலைமை தாங்கினார். கண்டன உரையாக சிபிஐ மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் மாதையன், விசிக பென்னாகரம் தொகுதி செயலாளர் தோழர் கருப்பண்ணன்,  மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தோழர் பெரியண்ணன்,  மக்கள் அதிகாரம் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் முத்துக்குமார் ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக மக்கள் அதிகாரம் பென்னாகரம் வட்டார இணைச்செயலாளர் தோழர் சிவா அவர்கள் நன்றி உரையாற்றினார்.

தகவல்
மக்கள் அதிகாரம்
தர்மபுரி மண்டலம்
9790138614

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க