இஸ்லாமியருக்கு ஹிஜாப் தடை! தில்லையில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை! தில்லை இருப்பது தமிழ்நாடா? இல்லை அதற்கு ஒரு தனி நாடா? என்ற தலைப்பின் கீழ் தருமபுரி, கோவை, மதுரை ஆகிய இடங்களில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பட்டம் 7.3.22 அன்று நடைபெற்றது.
000
இஸ்லாமியருக்கு ஹிஜாப் தடை! தில்லையில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை! தில்லை இருப்பது தமிழ்நாடா? இல்லை அதற்கு ஒரு தனி நாடா? என்ற தலைப்பின் கீழ் தர்மபுரி மண்டலம் முழுவதும் மக்கள் மத்தியில் வீச்சாக பிரச்சாரம் செய்யப்பட்டு அதனடிப்படையில் தர்மபுரி (BSNL)தந்தி அலுவலகம் அருகில் 7.3.2022 காலை 11 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மண்டல பொருளாளர் தோழர் செல்வராசு அவர்கள் தலைமை தாங்கினார். தோழர் கோவிந்தராஜ் CPi(ml) லிபரேசன் மாவட்ட செயலாளர், தோழர். மாரிமுத்து cpim மாவட்ட குழு உறுப்பினர், தோழர் பாண்டியன் விசிக தர்மபுரி மாவட்ட செய்தி தொடர்பாளர், தோழர் சின்னவன் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் மாவட்ட அமைப்பாளர், தோழர் குறிஞ்சிவேந்தன் வழக்கறிஞர் தர்மபுரி, தோழர் பழனி மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி தருமபுரி, தோழர் வில்கிருஷ்ணன் cpi (ml) மாவட்ட செயலாளர், தோழர் கோபிநாத் மக்கள் அதிகாரம் மண்டல செயலாளர் தர்மபுரி மண்டலம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக தோழர் ராஜா மண்டல குழு உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தார்.
தகவல் :
மக்கள் அதிகாரம்
தர்மபுரி மண்டலம் 9097138614
000
இஸ்லாமியர்களுக்கு ஹிஜாப் தடை!
தில்லையில் தமிழனுக்கு தமிழுக்கும் தடை!
தில்லையில் இருப்பது தமிழ்நாடா?
அதற்குள் ஒரு தனி நாடா?
தில்லை கோயிலை இந்து அறநிலைத்துறையின் கீழ் சிறப்பு சட்டம் இயற்று. என்ற தலைப்பின்கீழ் 07.03.2022 காலை 11 மணியளவில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் அதிகாரம் சார்பாக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

இதில் ஐனநாயக அமைப்பு தோழர்கள் கலந்துகொண்டனர். திராவிட விடுதலைக் கழகம் கோவை மாவட்டத் தலைவர்.
தோழர் நேருதாஸ்.
போல்ஷிவிக் IMT இந்தியா அமைப்பாளர்
தோழர்.லூயிஸ் வழக்கறிஞர்.
தமிழ்த் தேச இறையாண்மை.
தோழர். திருமொழி.
மக்கள் அதிகாரம் உடுமலை பகுதி செயலாளர்
தோழர் குமார்.
மக்கள் அதிகாரம்
கோவை மாவட்ட செயலாளர்.
தோழர் ராஜன்.
கோவை மணடல செயலாளர்
தோழர் சங்கர்.
கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
ரெட் ஸ்டார்-
தோழர் குமார்.மற்றும் மக்கள் அதிகார தோழர்களும் பெண்களும் கலந்துகொண்டனர்கள்.
தகவல்:
மக்கள் அதிகாரம்
கோவை.
9488902202
000
இஸ்லாமியருக்கு ஹிஜாப் தடை!
தில்லையில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை!
தில்லைக் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர சிறப்புச் சட்டம் இயற்று! என்பதை மையமாக வைத்து மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் 7,8,9 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம்.
அதன் ஒரு பகுதியாக மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக மக்கள் மத்தியில் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டோம். அதன் பிறகு இன்று (07/03/ 2022) காலை 10.30மணி அளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேச மக்கள் முன்னணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( ஐக்கிய விவசாயிகள் முன்னணி) ,தந்தை பெரியார் திராவிடர் கழகம், குடியுரிமை பாதுகாப்பு நடுவம், தமிழ் புலிகள், புரட்சிகர இளைஞர் முன்னணி,திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ் தேச குடியரசு கட்சி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி போன்ற ஜனநாயக சக்திகளும் அவர்களுடைய நிர்வாகிகளும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட்) தோழர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் வர முடியாததை பதிவு செய்தனர்.
மக்கள் அதிகாரம் தோழர்களும் பல்வேறு ஜனநாயக சக்திகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர் முழக்கமிட்டனர்.
இறுதியாக காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த அனைவரும் சேர்ந்து வேலை செய்வோம் என்பதை வந்திருந்த ஜனநாயக சக்திகளும் தோழர்களும் பதிவு செய்தனர்.
தகவல்:
மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்.
தொடர்புக்கு-7826847268

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க