மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! | வீடியோ

சென்னை ஆவடியில் மோடி அரசை கண்டித்து பு.ஜ.தொ.மு-வின் முன்னாள் மாநிலப் பொருளாளர், தோழர் விஜயகுமார் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் ஆகியோர் ஆற்றிய சிறப்புரைகளை இங்கு காணொலிகளாகப் பதிவிடுகிறோம்.

மார்ச்-28,29 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் ! மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! என்ற தலைப்பில் சென்னை ஆவடியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் தொழிலாளர் விரோத சட்டங்களை கொண்ட 4 தொகுப்புகள், இன்னும் பிற சட்டத் திருத்தங்கள், வேலையின்மை, வாழ்வாதாரம் இழப்பு, பணமதிப்பழிப்பு, கார்ப்பரேட் நலத் திட்டங்கள் ஆகியவற்றால் தொழிலாளர்களையும் நாட்டின் உழைக்கும் மக்களையும் வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து பு.ஜ.தொ.மு-வின் முன்னாள் மாநிலப் பொருளாளர், தோழர் விஜயகுமார் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் ஆகியோர் ஆற்றிய சிறப்புரைகளை இங்கு காணொலிகளாகப் பதிவிடுகிறோம்.

காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க