தமிழகம் முழுவதும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு), மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக மே தினத்தன்று பேரணி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
000
அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம்!
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! என்ற தலைப்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மக்கள் அதிகாரம் சார்பாக திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதி தமிழர் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, வழக்கறிஞர் தோழர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியனர்.  புரட்சிகர  பாடலுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. தோழர் செல்வம் நெல்லை மண்டல செயலாளர் தலைமை உரையில் மே தினம் வரலாறு பற்றியும், மேதினம் கொண்டாட்டத்திற்கு  நாள் அல்ல,  நம்ம உரிமைகளை போராடி மீட்டெடுக்க வேண்டிய நாள் என்பதை வலியுறுத்திப் பேசினார்.
தோழர் வழக்கறிஞர் சிறப்புரை பிரபாகரன் தனது உரையில் மோடி ஆட்சி எந்த வந்த பின்னர் தொழிலாளர்கள் பெற்ற உரிமை அனைத்தும் இவ்வாறு கழிப்பறை காகிதமாக  வீசப்படுகிறது என்பதையும் தொழிலாளர்களுக்கான சட்டமாக நான்காக சுருக்கி  எவ்வாறு கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்கிறது. அதை நாம் எவ்வாறு செங்கொடி ஏந்தி போராடி மீட்க வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு அறை கூவினார்.
ஆதித்தமிழர் கட்சி இரா.ராமமூர்த்தி மாவட்டச் செயலாளர் :  உழைக்கும் மக்களை பல்வேறு கட்சிகள் இயக்கங்கள் தங்களதுபிழைப்புக்காகபயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தியும் அதை முறியடிக்க மக்கள் அதிகாரம் போன்ற புரட்சிகர இயக்கங்களுடன் பயணிக்க வேண்டி உள்ளது என்பதையும் தனது உரையை ஆற்றினார்.
தமிழ் புலிகள் கட்சி தமிழரசு மாவட்ட செயலாளர், துப்புரவு தொழிலாளர்களின் அவல நிலையும் அவர்களை இந்த அரசு அதிகார வர்க்கம் சுரண்டுவதை பற்றியும் பல கட்டமாக மேல்மட்ட அதிகாரிகளை சந்தித்து பிரச்சினைகளை தீர்த்து வைக்கவில்லை. இந்த மே நாளில் உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராடுவது ஒன்றே தீர்வு என்று உரையாற்றினார்.
தோழர் கின்ஷன்  நெல்லை மண்டல இணை செயலாளர் மக்கள் அதிகாரம். ரஷ்யா அமெரிக்கா பனிப்போர் சீன அமெரிக்க மேலாதிக்க போட்டியாகும் மொத்த உலகமே எப்படி அபாயத்தில் சேர்க்க வைக்கப்பட்டு உள்ளது என்பது பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் இதைப் பயன்படுத்திக் கொண்டு பாசிசம் எப்படி முன்னுக்கு வருகிறது என்பதைப் பற்றியும் இந்தியாவில் பார்ப்பன பாசிச அபாயத்தை பற்றியும் உரையாற்றினார்.
முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிசத்தை கட்டி அமைப்பது இந்த மண்ணிலும் காவி கார்ப்பரேட் பாசித்தை வேறோடு பிடுங்கி எறிவது தொழிலாளர் வர்க்கத்தின் கடமை என்பதை இந்த மே நாள்  நமக்கு நினைவு படுத்துகிறது என்று பதிவு செய்தார்.
தோழர் பொன் மாடசாமி நெல்லை மண்டலப் பொருளாளர் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து : நம்பிக்கையற்ற சூழலில் நம்பிக்கை அளிப்பதற்காக அங்கு இருக்கும் கடைக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை பற்றி தெரிவித்தனர்.
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம் – 9385353605
000
தஞ்சை மண்டலம், மக்கள் அதிகாரம், அமைப்பின் சார்பாக திருவாரூர், அம்மையப்பன் பகுதியில்,  மே தினத்தையொட்டி கொடியேற்றப்பட்டது.
அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம் !
ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை வீழ்த்தி ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டியமைக்கும் போதுதான் மே நாள் தியாகிகளின் கனவு நிறைவேறும். மே நாள் தியாகிகளது தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் நெஞ்சில் ஏந்துவோம் என்று தியாகத்தைப் போற்றும் வகையில் மே தின, நிகழ்ச்சி நடைபெற்றது.
அதேபோல், தஞ்சையிலும்,  மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கொடி ஏற்றப்பட்டது, மே நாளில் தியாகிகளின் தியாகத்தை நெஞ்சில் ஏந்துவோம்!  என முழக்கமிட்டு மே தின நிகழ்ச்சி நடைபெற்றது.
தகவல் : 
மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம், திருவாரூர் – தஞ்சை
000
மே நாள்  பேரணி ஆர்ப்பாட்டம்!
அமெரிக்காவின் உலக மேலாதிக்க போர்வெறியை முறியடிப்போம்!
காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம்! என்ற முழக்கத்தின் கீழ் மதுரை, உசிலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி  மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி  தோழர்கள் இணைந்து உசிலை பேருந்து நிலையம் அருகில் மாலை 4 மணி அளவில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டது.
இதில் மக்கள் அதிகாரம் மாநில இணைச் செயலாளர் தோழர் குருசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.
அவர் பேசும்போது இந்த சமூகம் வாழத் தகுதியற்றதாக மாறிக்கொண்டிருக்கிறது அதற்கு காரணம் இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு தான் என்பதை விளக்கி காவி கார்ப்பரேட் பாசிசமும் எப்படி மேலேறி தாக்கி ஒட்டுமொத்த மக்களின் வாழ்வை சூறையாடுகிறது எப்படி இங்கு இந்தியாவில் மக்கள் பசியிலும் பட்டினியிலும் வறுமையிலும் இருக்கிறார்கள் இதற்கு இந்த கட்டமைப்புக்குள் தீர்வு இல்லை மக்கள் மத்தியில் ஊன்றி நின்று பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டி அமைப்பதன் மூலமே காவி கார்ப்பரேட் பாசிசத்தை தூக்கி எறிய முடியும் என பேசி முடித்தார்.
அடுத்ததாக தோழர். கணேசன்,மக்கள் அதிகாரம்,போடி கம்பம். அவர் பேசும்போது ” பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் கேஸ் விலை ஏற்றம், மக்களை வாட்டி வதைக்கிறது. சட்டசபையின் அருகிலேயே ஏதும் அற்றவர்கள் பிளாட்பாரங்களில் தெருக்களிலும் அலைகிறார்கள். மக்கள் நன்றாகவா வாழ்கிறார்கள்? நரிக்குறவர் வீட்டுக்கு போய் முதல்வர் வேஷம் போடுகிறார். என்பதை தெளிவாக இன்றைய நடப்பு மக்கள் பிரச்சனைகளிலிருந்து பேசினார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் பேசும்போது இன்று கல்வி பறிக்கப்படுகிறது கலாச்சாரம் என்ற பெயரில் குப்பைகளை திணிக்கிறார்கள் மதக் கலவரங்களைத் தூண்டுகிறார்கள்.   இத்தனையும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை மறைப்பதற்காக தான் செய்கிறார்கள்.
இன்று மக்கள் மத்தியில் வேர்விட்டு வளர்ந்து உள்ளார்கள் இவர்களை திமுகதான் வீழ்த்துமா? மக்கள் மத்தியில் அடித்தளத்தைக் கொண்டுள்ள ஒரு மார்க்சிய லெனினிய அமைப்புதான் இந்த காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தும் என பேசி முடித்தார்.
அடுத்ததாக மக்கள் அதிகாரம் தோழர் சிவகாமு பேசும்போது தொழிலாளர்களும் விவசாயிகளும் நாடு முழுவதும் விசிறி யடிக்கப்படுகிறார்கள். விவசாயம் எப்படி கார்ப்பரேட் மயமாக மாறும் என்பதையும் எப்படி நாம் உரிமையிலந்து அடிமையாக வாழப்போகிறோம் என்பதை பல்வேறு விஷயங்களுடன் எளிமையாக எடுத்து வைத்தார்.
இறுதியாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர் ரவி பேசும்போது எப்படி நம் நாட்டில் காவி கார்ப்பரேட் பாசிசம்  வீரியமாக செயல்படுகிறது.
அது எப்படி உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியின் விளைவாக பல்வேறு நாடுகளிலும் பாசிசத்தை அரங்கேற்றி வருகிறது. மேலும் அமெரிக்க ரஷ்ய பதிலிப்போர், அமெரிக்கா-ரஷ்யா சீனா இடையிலான  மேலாதிக்க போட்டி, அதனால் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றை பதிவு செய்தார். இறுதியாக நன்றியுரையுடன் கூட்டம் முடிவடைந்தது. இதில் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 60 பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.
தகவல் :
புமாஇமு, தமிழ்நாடு.
000
அமெரிக்காவின் உலக மேலாதிக்க போர் வெறியை முறியடிபோம்!
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிபோம்! என்ற முழக்கத்தை முன் வைத்து மே நாள் ஆர்ப்பாட்டம் காலை  11 மணிக்கு மஞ்சக்குப்பம் கார் ஸ்டாண்டில்  மக்கள் அதிகாரம் தோழர்.கோ.பெருமாள் தலைமையில் மே நாள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தோழர்  மு.பெரியாண்டவர், மாவட்ட தலைவர் தமிழ்நாடு மின் வாரிய அலுவலர் தொழிலாளர் முன்னணி (வி.சி.க), தோழர் சி.குமார் (கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு), தோழர் மு.கார்திகேயன் (மக்கள் அதிகாரம்), தோழர் கஜேந்திரன் (மாநில செயலாளர் தமிழ்நாடு மீனவர் பேரவை), தோழர் வி.செல்வம் (அண்ணா தனியார் பேருந்து பணியாளர்கள் சங்கம் கடலூர்), தோழர் M.சண்முகம், மாவட்ட செயற்குழு  உறுப்பினர் (புதிய ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம்) தோழர் கோ.சாய்ராம் (சமூக நீதி பாசறை) தோழர் சுகுமார் (கடலூர் பேருந்து  நிலைய உட்புற சிறு வியாபாரிகள் நல சங்கம்), தோழர் பரிதிவாணன் (கடலூர் வெள்ளி கடற்கரை சிறு வியாபாரிகள் நல சங்கம்), தோழர் திருவரசு (கடலூர் பொது நல சங்கம்) ஆகியோர் மே நாள் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினார்கள்.
தோழர் இராமலிங்கம் (புதிய ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம்) மற்றும் தோழர் முருகானந்தம் (மக்கள் அதிகாரம்) ஆகியோர் மே நாள் வரலாற்றையும், இந்திய  தொழிலாளி வர்க்கம் இழந்திருக்க கூடிய தொழிலாளர் உரிமையை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தையும் தொழிலாளர்கள் சாதிரீதியாக பிளவுபடுத்துவதை அம்பலபடுத்தியும், உழைக்கும் மக்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி தேவையை பற்றியும், அதனுடன் அணிதிரள வேண்டிய காலத்தின் கட்டாயத்தையும் உணர்த்தும் வகையில் கண்டன உரை நிகழ்த்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கார்ப்பரேட் முதலாளித்துவதையும், காவி – கார்ப்பரேட் பாசிசத்தையும் அம்பலப்படுத்தி உணர்ச்சி மிக்க முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இறுதியில் தோழர் பஞ்சாச்சரம் (மக்கள் அதிகாரம் கடலூர்) நன்றி உரை நிகழ்த்தினார்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்
000
மே 1 மே நாள் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட நாள் அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர் வெறியைத் முறியடிப்போம் காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்  இந்தியாவில் தீவிரமாகி வருகின்ற  காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் தோழர். ராஜன் தலைமை தாங்கினார்.
உடுமலை பகுதி தோழர் சூர்யா உரையாற்றினார். கோவை மண்டல செயலாளர். தோழர்.சங்கர் உரையாற்றினார் மற்றும் பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்:
மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம், 9488902202.
000
136வது மே நாளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தலைமையேற்று இயங்கி வரும் தொழிலாளர் ஒருங்கிணைப்பு அணி  சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணலி SRF ஆலை சங்கத்தின் தலைவரும், பு.ஜ.தொ.மு. முன்னாள் மாநில பொருளாளரும் தோழர் பா.விஜயகுமார் கொடியேற்றி  உரையாற்றினார்.
தகவல் :
தொழிலாளர் ஒருங்கிணைப்பு அணி – SRF மணலி.
000
புதிய ஜனநாயகக் தொழிலாளர் முன்னணி கிருஷ்ணகிரி – தருமபுரி-சேலம் மாவட்டம் சங்கத்தின் சார்பாக ஓசூர் மாநகரில் கமாஸ் வெக்ட்ரா ஆலையில் மே நாள் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கிளை சங்கத்தின் தலைவர் தோழர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மே நாள் வரலாற்றை விளக்கி அச்சங்கத்தின் சிறப்பு தலைவர் தோழர் பரசுராமன் கொடியேற்றினார்.
அதனைத் தொடர்ந்து பாகலூரில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
அதை தொடர்ந்து ஒசூர் பழைய நகராட்சி ஆபிஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
தோழர் சங்கர் தலைமைத்தாங்கினார். தோழர்.சின்னசாமி புஜதொமு, தோழர் சந்தோஷ் ததொமு, தோழர் ரவிச்சந்திரன் மக்கள் அதிகாரம், தோழர் பரசுராமன் புஜதொமு, தோழர் சரவணன் மக்கள் அதிகாரம் ஆகியோர் ஆர்ப்பட்டத்தில் உரையாற்றினர்.
இறுதியாக தோழர் வெங்கடேஷ் புஜதொமு, நன்றியுரையாற்றினார்.
உலகத் தொழிலாளர் வர்க்கம் 8 மணிநேர வேலை உரிமைக்காக 80 ஆண்டுகள் போராடி, உயிர்த்தியாகம் செய்து உரிமையை நிலைநாட்டியது. காவி-கார்ப்பரேட் கும்பலோ 8 ஆண்டுகளில் இந்திய தொழிலாளர்களின் மொத்த சட்ட உரிமைகளையும் பறித்துவிட்டது.
குறிப்பாக இந்தியாவில் 36 ஆம் ஆண்டு மே நாளிலும் தொழிலாளர் வர்க்கத்திற்கு 8 வேலை நேரம், பணி நிரந்தரம், நியாயமான ஊதியத்திற்கு எந்த உத்திரவாதமுமில்லை.
பொதுமக்களுக்கு பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, GST வரிக் கொள்ளை, பொதுமக்களின் சொத்திற்கு கூட வரி உயர்வு, குடிநீருக்குக் கூட கட்டணம் என கழுத்து நெரிக்கப்படுகிறார்கள்.

மற்றொரு பக்கம், சர்வதேச அரங்கில் இலங்கை திவால், பாகிஸ்தானில் ஆட்சிக் கவிழ்ப்பு, பிரிட்டனில் 25% பணத்தின் மதிப்பு வீழ்ச்சி, உக்ரைன் மீதான போர் என உலகம் முழுவதும் கார்ப்பரேட்களின் இலாபவெறிக்கு மக்கள் உயிர், உடமை இழந்து படாதபாடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த சூழலில் குறிப்பாக அண்டை மாநிலத்தில் ஹூஜாப் அணியத்தடை என அரசி சூழலை மடைமாற்ற காவி பாசிசத்தை தூண்டிவிடுகிறது, RSS-BJP தலைமைகள்.
மொத்தத்தில் உலக உழைக்கும் மக்கள் முதலாளித்துவ சுரண்டல், அதன் வழியிலான சொத்துக்குவிப்பினை முறியடிக்காமல் தீர்வில்லை. அதேசமயம், இந்நிலைமைக்கு தீர்வுகாண உழைப்பினால் உண்டாகும் உபரியை பொதுவில் வைத்திடக் கோரி ரும் கம்யூனிஸ்டுகளிடமே தீர்வு உள்ளது சாரமாக தோழர்கள் பேசினர்.
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
000
அன்பார்ந்த தொழிலாளர்களே, அமெரிக்காவின் உலக மேலாதிக்கப்  போர்வெறியை முறியடிப்போம்! இந்தியாவில் தீவிரமாகிவரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம்! என்ற தலைப்பில் சென்னை – திருவள்ளூர் மாவட்டக்குழுக்களின் சார்பாக மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம் ஆவடியில்  நடைபெற்றது.
இதில் பேரணியை துவக்கி வைத்து தோழர் பா.விஜயகுமார் (பு.ஜ.தொ.மு. முன்னாள் மாநில பொருளாளர்) உரையாற்றினார். அதை தொடர்ந்து விண்ணதிரும் முழக்கத்துடன் பேரணி துவங்கியது. பேரணியின் இறுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு  தோழர் ஆ.கா.சிவா (மாவட்டத் தலைவர், பு.ஜ.தொ.மு, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, வேலூர்) தலைமை ஏற்று உரையாற்றினார். தொடர்ந்து புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன், மற்றும் மக்கள் அதிகாரம் சென்னை மண்டலத்தை சேர்ந்த தோழர் புவனேஸ்வரன் ஆகியோர் உரையாற்றினார்கள் இடையிடையே முழக்கம் முழங்கப்பட்டது.
அடுத்து பு.ஜ.தொ.மு.- வின் சென்னை,திருவள்ளூர், காஞ்சி, வேலூர் மாவட்ட செயலாளர் தோழர் ம.சரவணன் மே நாள் உரையாற்றினார். இறுதியாக மாவட்ட பொருளாளர் தோழர் ப.சக்திவேல் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் முடிவுற்றது. மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என  சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.
தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள அதிகாரம்.
000
அன்பார்ந்த உழைக்கும் வர்க்கத்திற்கும் மேதின தியாகிகளுக்கும் செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் அமெரிக்க மேலாதிக்கத்தை முறியடிப்போம்!  காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! என்ற தலைப்பில் மே 1 அன்று மாலை 4.30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் சுந்தர் தலைமை உரையாற்றினார்.
இன்றைய சூழலில் தொழிலாளிகள் முதலாளித்துவத்திற்கு அடிமையாகவும் இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க தொழிலாளி வர்க்கத்தின் நிலையும் அதுதான் என்றும் இதை தடுக்க வேண்டும், வேரறுக்க வேண்டும் என்றால் தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே தீர்வு என்றும் இந்து பாசிச கட்டமைப்பை தவிர்க்க வேண்டுமென்றால் ஜனநாயக அமைப்புகள் பாசிச ஏதிர்ப்பு ஐக்கிய முன்னணி கூட்டமைப்பை உருவாக்குவது போன்ற நிகழ்ச்சிகளில் நாம் முன்னெடுத்தால் மட்டுமே இன்று காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்று தன்னுடைய தலைமையில் உரையாற்றினார்.
அடுத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது முழக்கத்திற்கு பிறகு ஆக்சில் இந்தியா கிளை பொருளாளர் தோழர் கே சௌந்தரராஜன் அவர்கள்  இன்றைய சூழ்நிலையில் தொழிலாளி வர்க்கம் என்ற தலைப்பில் இளம் தொழிலாளர்கள் இன்றைக்கு மே தினம் என்றால் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போடுவது பேஸ்புக்கில் லைக் போடுவது ஷேர் செய்வது என்றுஆன்லைனில் ஆழ்ந்து மூழ்கி போவதும் தொழிலாளி உரிமை என்றால் என்ன என்ற விவரம் கூட இல்லாமல் இன்று இருப்பதாகவும் மேலும் இனி நவீன கொத்தடிமைகளாக தொழிலாளி வர்க்கம் மாற்றப்படுகிறது சட்டத்திருத்தம் என்ற பெயரில் 12 மணிநேர வேலை நேரமாக மாற்றுவது உரிமையை கேட்டால் வேலை நீக்கம் செய்வது என்று தொழிலாளர்களுடைய நிலைமையை பற்றி தோழர் விளக்கினார்.
பிறகு மக்கள் அதிகாரம் காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலாளர் தோழர் சரவணன் தொழிலாளி வர்க்கத்திற்காக  ஒரு பாடலை பாடினார் அவரே இயற்றி பாடினர்.
அதன்பிறகு மேதின சூளுரையை தோழர் வெற்றிவேல்செழியன் மக்கள் அதிகாரம் மாநில செயலாளர் தமிழ்நாடு கண்டன உரை பதிவு செய்தார். உக்ரைன் ரஷ்யா போர் எதற்காக நடத்தப்படுகிறது இன்றைய சூழ்நிலையில் முதலாளி வர்க்கத்தின் மற்றொரு தாக்குதல் என்பதையும் அதற்கும் இந்தியாவில் இருக்கும் மக்களுக்கும் சம்பந்தம் இல்லை. அதைப் பற்றி கருத்து சொல்வதற்கும் கம்யூனிஸ்டுகளுக்கு வேற வேலை இல்லை என்ற ஒரு பார்வை உள்ளது. ஏன் அதை எப்படி பார்க்க வேண்டும் என்றும் உலகம் முழுக்க முதலாளி வர்க்கம் தன்னுடைய வர்த்தகத்தை வைத்துள்ளான் அவன்  நினைப்பதும் நடப்பதும் தான் நடக்கிறது என்றும் ஊடகங்கள் முதல் அரசு அலுவலகங்கள் உயர்மட்ட ஆணைகள் அனைத்தும் முதலாளி வர்க்கத்திற்கு ஏற்ப இன்று செயல்படுகிறது.
இன்று ரஷ்யா உக்ரைன் போர் மட்டுமல்ல உலகம் முழுக்க இன்று போர்கள் அங்கங்கு நடப்பதும் அங்கு இருக்கிற இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதும் தான் முதலாளி வர்க்கத்தின் முதல் வேலை இந்தியாவில் தனியார்மயம் தாராளமயம் வந்தபிறகு வளர்ச்சி வளர்ச்சி என்று கூறிய அரசு இன்று நிலைமை என்ன ஹூண்டாய் போர்டுநிறுவனம் வந்துவிட்டது   தொழிலாளி வர்க்கம் வளர்ச்சியை நோக்கி செல்கிறது என்றும் ஆனால் ஒரு தலைமுறை 20 வருடங்கள் கூட ஆகவில்லை போர்டு நிறுவனம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது அது நிறுவனம் மூடினால் அதில் உள்ள தொழிலாளர்கள் மட்டும் அல்ல அதை சுற்றி இயங்கக்கூடிய துணை நிறுவனங்கள் மற்றும் அதை சுற்றி இருக்கிற உழைக்கும் மக்கள் வியாபாரிகள் சிறு குறு தொழில்கள் முற்றிலும் அழிந்துவிடும் இது ஏதோ ஃபோர்டு நிறுவனத்தின் பிரச்சினை மட்டுமல்ல ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சனை தான் இந்த முதலாளித்துவம் தனியார் மயம் தாராளமயம் என்ற கொள்கையை மூலம் இயற்கை வளங்களை கொள்ளையடித்து தொழிலாளி வர்க்கத்தை நவீன கொத்தடிமைகளாக வைப்பது தான் முதல் வேலையாக உள்ளது அதற்கு இந்த காவி கும்பல் எடுபிடியாக வேலை செய்கிறது இது போதாதென்று இன்று இந்தியாவின் பொது துறைகள் முதலாளிக்கு தாரைவார்க்க படுகிறது பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுகிறது ஆங்காங்கே போராட்டங்கள் வெடிக்கிறது டெல்லி விவசாயிகள் போல, விவசாய போராட்டம் போல, ஜல்லிக்கட்டு போராட்டம் போல இங்கு பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பை நிறுவுவதும் அதன் மூலம் தன்னுடைய வர்க்கத்தின் அடித்தளத்தை அமைத்துக் கொண்டு முதலாளி வர்க்கத்திற்கு சாவுமணி அடிக்கும்போது தான் தீர்வாக இருக்கும் என்று தோழர் அவர்கள் கண்டன உரையை பதிவு செய்தார் அதைத்தொடர்ந்து முழக்கமிட்டு நன்றியுரையை தோழர் மோகன் அவர்கள் மக்கள் அதிகாரம் காஞ்சிபுரம் மாவட்டம் அவர்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார்
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கணைப்புக்குழு)
000
அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம்!
காவி- கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! என்ற தலைப்பில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மே தினத்தை முன்னிட்டு மக்கள் அதிகாரம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பென்னாகரம் வட்டக்குழு உறுப்பினர் தோழர் சி. வெங்கடேசன் தலைமை தாங்கினார். முதல் நிகழ்ச்சியாக பறையிசையும் அதனை தொடர்ந்து தோழர்கள் விண்ணதிர முழக்கமிட்டனர்.
தலைமை உரையில் தோழர் வெங்கடேசன் மே தின வரலாற்றை விளக்கி பேசினார்.  ஆர்ப்பாட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக மக்கள் அதிகாரம் தருமபுரி மாவட்டத்தின் கலைக்குழுவினர் கோடானு கோடி மக்களுக்காக என்ற தியாகிகளுக்கான வீரவணக்கப்பாடலை இசைத்தனர். இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் . பென்னாகரம் நகர செயலாளர் தோழர் இலட்சுமன் சனாதன பாசிசத்தை ஆட்சியிலிருந்து வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை விளக்கி பேசினார்.
இதன் பின்னர் உரையாற்றிய பென்னாகரம் வட்ட இணைச்செயலாளர் தோழர் சிவா தனது உரையில் இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் மது, கஞ்சா போன்ற போதை கலாச்சாரத்தால் இளைஞர்கள், மாணவர்கள் சீரழிவதையும், இதற்கு போலிசு மாமுல் வாங்கிக்கொண்டு அனுமதிப்பதையும் பொறுப்பற்ற அரசு நிர்வாகத்தையும், தனியார்மயம், தாராளமயம் உலகமயம்தான் இலங்கையை திவாலாக்கியுள்ளது. அதை நோக்கிதான் இந்தியா சென்றுகொண்டிருக்கிறது என்றும் இதற்கு ஒரே தீர்வு இந்த முதலாளித்துவ ஆட்சி முறைக்கு முடிவு கட்டுவதுதான எனப்பேசினார்.
இதன் பின்னர் சிறப்புரை ஆற்றிய மக்கள் அதிகாரத்தின் தருமபுரி மண்டல செயலாளர் தோழர் கோபிநாத், நாம் அணிந்திருக்கிற சிவப்பு உடை என்பது வெறும் நிறம் மட்டுமல்ல, அது இரத்தத்தில் தோய்ந்த தியாகத்தின் அடையாளம் என்பதையும், அவ்வாறுதான் மேதினம் உருவானது. ஆனால், இன்று அந்த உரிமைகள் எல்லாம் பறிபோய்கொண்டிருக்கிறது, நாடு முழுதும் கார்ப்பரேட் நலனிற்காக போலிசு அடியாள் வேலை செய்வதையும், இதனால் உழைக்கும் மக்கள் சொல்லொண்ணா துயரங்களை சந்தித்துவருவதையும் எடுத்துக்காட்டி பேசினார். இதை மறைக்க காவி பயங்கரவாதத்தை பாசிச பாஜக தீவிரமாக அமுல்படுத்தி வருவதையும், எனவே, காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டவேண்டும் என்பதையும் விளக்கி பேசினார்.
இடையிடையே வேலை வேணுமா வேலை வேணுமா என்ற இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கும் பாடலையும் ஏலையா ஏலோலையா எலையா ஏலோலையா ஏழ்மையை விரட்டிடவே ஏந்துவோம் துப்பாக்கியை என்ற பாடலையும் பாடினர். இறுதியில் சர்வதேச பாட்டாளி வர்க்க கீதத்தை தோழர்கள் பாடினர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் இபொக மா-லெ(விடுதலை) கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் கோவிந்தராஜ் மற்றும் பல அமைப்பினர், திரளான பொதுமக்கள் என சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம், 9790138614.

000

மே – 1 தொழிலாளர் தினத்தில் காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த சூளுரைப்போம் என்று சேலம் மாவட்ட மக்கள் அதிகாரம் தோழர் கந்தம்மாள் தலைமையில் அப்பகுதி மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல்:
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்.

000
136 வது மே நாளையொட்டி  தூசான் தொழிலாளர் சங்கம் (இணைப்பு: புஜதொமு மாநில ஒருங்கிணைப்புக் குழு) சார்பாக கொடியேற்றப்பட்டது.
சங்கத்தின் தலைவர் தோழர் உதயகுமார் தலைமை தாங்கிய இந்த கொடியேற்றத்தில் சங்கத்தின் செயலாளர் ம.செ.சந்திரமோகன் உரையாற்றினார். சங்கத்தின் சிறப்புத்தலைவரும், பு.ஜ.தொ.மு முன்னாள் மாநிலப் பொருளாளருமான தோழர் விஜயகுமார் தூசான் நிர்வாகம் நட்டக்கணக்கு காட்டி ஆலையை மூட முயற்சி செய்வதோடு, ஏப்ரல் 2022 மாதத்துக்கான சம்பளத்தை வழங்காமல் தொழிலாளர்களை பட்டினிப் போட்டு பணிய வைக்க முயற்சி செய்வதை முறியடிக்க அறைகூவல் விடுத்தார்.மேதின போராட்டங்களுக்கான தேவை முதலாளித்துவம் நீடிக்கும் வரை தொடரும் என்பதை தொழிலாளர்களுக்கு உணர்த்தியும், நம்பிக்கையூட்டியும் பேசப்பட்டது.
தகவல் :
தூசான் தொழிலாளர்கள் சங்கம்,
பூவிருந்தவல்லி.
000
136 வது மே நாளையொட்டி ஏ சி என் ரெப்ரோகிராப் கிளையில் மாவட்டத் தலைவர் தோழர் ம. சரவணன் கொடியேற்றி இன்றைய சூழலில் தொழிலாளர்களின் நிலை குறித்து உரையாற்றினார்.
தகவல்:
ஏ சி என் ரெப்ரோகிராப் கிளை,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
000
136 வது மே நாளையொட்டி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்புக் குழு வின் இணைப்பு சங்கமான டி ஐ மெட்டல் பார்மிங் ஆலையில் சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் பா.விஜயகுமார் கொடியேற்றி உரையாற்றினார்.
சங்கத்தின் தலைவர் தோழர் ம.சரவணன் தலைமை தாங்கினார்.
தகவல் :
டி ஐ மெட்டல் பார்மிங் தொழிலாளர்கள் சங்கம்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
சென்னை, திருவள்ளூர், காஞ்சி,வேலூர் மாவட்டங்கள்
000
136 வது மே நாளில் TPI ஆலை ஆவடியில் மே நாள் கொடியேற்ற நிகழ்சி நடைபெற்றது.
தகவல் :
தொழிலாளர் ஜனநாயக அமைப்பு,
ஆவடி.
000
136வது மே நாளையொட்டி சாய்மிர்ரா கிளையில் மாவட்டத் தலைவர்
தோழர் ம. சரவணன் கொடியேற்றி உரையாற்றினார். சங்கத்தின் செயலாளர் தோழர் ராஜா தலைமை தாங்கினார்.
தகவல் :
சாய்மிர்ரா கிளை,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
000
136 வது மே நாளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ( மாநில ஒருங்கிணைப்புக்குழு ) தோழர் பா.விஜயகுமார் அவர்களை தலைவராகக் கொண்டு இயங்கி வரும் TPI IBP தொழிலாளர் சங்கம், ஆவடியில் இன்று காலை 6.15 மணிக்கு மேதின கொடியேற்றி உரையாற்றப்பட்டது.
தகவல்:
TPI IBP தொழிலாளர்கள் சங்கம்
ஆவடி
000
மே தின பிரசுரம் திருச்சியில் புஜதொமு மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பாக வீடு வீடாக சென்று மே தினத்தால் தொழிலாளிவர்க்கம் போராடி பெற்ற உரிமைகள் எல்லாம் இன்று மோடி அரசால் பறிக்கப்படுவது பற்றி திருவெறும்பூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
தகவல் :
புதிய தொழிலாளி
000

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க