தமிழகத்தில் இரட்டை ஆட்சி : அண்ணாமலையை காப்பாற்றும் தமிழக அரசு | தோழர் மருது | வீடியோ

பறையன் என்று சாதி இழியை கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டன செய்யும் விதமாக நெட் பிக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது அவர்களின் நேர்காணல் வீடியோ.

மிழகத்தை இன்னும் ஒரு குஜராத் மாற்றியே தீருவோம் என்ற திமிர் பிடித்த ஆணவம் பிடித்த ஒரு நபரின்(அண்ணாமலையின்) கருத்து அது; போலீசில் புகார் கொடுப்பதெல்லாம் விட செருப்பால்தான் அடிக்க வேண்டும். ஒரு பத்திரிகையாளர் என்ன சார் இப்படி சாதியை இழிவாக பேசியுள்ளீர்களே என்று அண்ணாமலையை கேட்டதற்கு ஆங்கில அகராதியை புரட்டிபாருங்கள் என்று திமிராக பதிலளித்திருக்கிறார்.
ஒருவரை பார்த்து தமிழில் நாயே என்று திட்டினால், அது தமிழில்தான் நாய் ஆப்பிரிகாவில் நாய் என்றால் அர்த்தமே வேற என்று சொல்லி பேச முடியுமா? அந்த யுத்தியைத்தான் அண்ணாமலை கையாள்கிறார். இதுவே ஒரு பார்ப்பன சாதியை சார்ந்த ஒரு நபரை இப்படி பேசியிருந்தால் விசயம் வேறவாக இருந்திருக்கும்.
இஸ்லாமியர்களையும், தாழ்த்தப்பட்டிவர்களையும் கொன்றொழிக்கின்ற அந்த விஷ்வ குரு என்பதுதான் கேவலம். இந்த கேவலம் அநியாயத்தை பார்த்துக்கொண்டு தமிழகம் ஏன் அமைதியாக இருக்கிறது?. அண்ணாமலை மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தமிழக மக்கள் செருப்பையும் துடைப்பத்தையும் வைத்துக்கொண்டுதான் வரவேற்க வேண்டும்.
மோடி ஊரெல்லாம் சுற்ற முடியும், ஆனால் தமிழ்நாட்டிற்கு வந்தால் மூத்திர சந்து வழியாகத்தால் ஐஐடி-க்கு செல்லமுடியும் என்ற நிலையை உருவாக்கிய தமிழ்நாடு, இன்றைக்கும் இழிவான விஷயத்திற்கு ஒரு சுடுகாட்டு அமைதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
பறையன் என்று சாதி இழியை கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டன செய்யும் விதமாக நெட் பிக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது அவர்களின் நேர்காணல் வீடியோ.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!