13.06.2022
மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை வாரியம் முடிவு !
தமிழகத்துக்கு துரோகம் செய்யும் பாசிச மோடி அரசை முறியடிப்போம் !
பத்திரிகை செய்தி
இம்மாதம் (ஜூன்) 17-ம் தேதி நடைபெற உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் தமிழகத்திற்கு எதிராக, மேகதாது அணை குறித்து விவாதிப்பதற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது என்பது தமிழகத்துக்கு ஒன்றிய அரசு செய்த மாபெரும் துரோகமாகும்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, கே.ஆர்.எஸ்., மற்றும் கபிணி அணைகளில் இருந்து தமிழகத்தின் எல்லையான பிலிகுண்டுக்கு மாதாந்திர அடிப்படையில் 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும்.
இந்த தண்ணீரை தேக்க வேண்டுமானால் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதியளிக்கக் கூடாது என தமிழக அரசு 50 ஆண்டுகளாக போராடி வருகிறது.
மேகேதாட்டுவில் அணை கட்ட உரிமை இல்லாத கர்நாடக அரசு வைத்த வாதத்தின் அடிப்படையில், அதனை நிகழ்ச்சிநிரலில் சேர்த்து விவாதிக்கலாம் என்று ஒன்றிய அரசு முடிவு செய்தது கடும் கண்டனத்துக்குரியது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் மேகேதாட்டு தொடர்பான எந்த விவாதமும் நடைபெறக் கூடாது. அவ்வாறு நடைபெறும் விவாதம் தமிழகத்தின் உரிமையை அடகு வைப்பதாகும். ஆகவே, ஒன்றிய அரசு மேகேதாட்டு தொடர்பான விவாதத்தை நடத்தக் கூடாது என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தமிழ் இனத்துக்கும் தமிழகத்துக்கும் தொடர்ந்து துரோகத்தையும் வஞ்சத்தையும் விளைவித்து வரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – பாசிச மோடி அரசுக்கு எதிராக தமிழ்நாடு ஓரணியாய் நின்று போராட வேண்டிய தருணம் இது.
2018-ல் காவிரி நீர் உரிமைக்காக மோடியை விரட்டியடித்த தமிழ்நாடு, மீண்டும் அந்த களத்திற்கு வந்தால் மட்டுமே காவிரி நதிநீர் உரிமையை காப்பாற்ற முடியும்.
தோழமையுடன்,
தோழர் குருசாமி,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

1 மறுமொழி

Leave a Reply to ரவி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க