கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டு வருகிறது. ஒருபக்கம் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.காரர்கள்தான் கலவரத்தை தூண்டினார்கள் என்று திமுகவை விமர்சிக்காத ஓர் கருத்து உளவுகிறது. எடப்பாடி ஆட்சிக்காலத்தில் ஜெயராஜ் பென்னிக்ஸ் படுகொலை, துத்துக்குடி மக்கள் படுகொலையை நாம் பார்த்தோம் ஆனால் எடப்பாடி திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூறுகிறார். எந்த தகுதியும் இல்லாத இந்த கருத்தையும் நாம் புறம் தள்ளுவோம்; மற்றும் சிலர், மக்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்கிறார்கள். இன்னும் சிலர் இப்பிரச்சினையில் அரசு தலையீடு தவறாக உள்ளது என்று கருத்து கூறுகிறார்கள்.
இவை அனைத்து கருத்துக்களையும் நாம் ஏற்க கூடியதாக இல்லை. உண்மையில் அரசு என்பது தனியார்மயத்தையும், தனியார் முதலாளிகளையும் வாழவைக்கத்தான் – அவர்களை பாதுகாக்கத்தான் – செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட அரசு ஒருபோது மக்களுக்கு உதவப்போவது இல்லை. தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக நின்று போராடும் மக்களை மட்டுமே ஒடுக்கும். கடுமையான போராட்டங்களினால் மட்டுமே அரசை அடிபணியவைக்க முடியும். இதற்கு ஸ்டெர்லைட் போராட்டம் மிக சிறந்த உதாரணம்.
தனியார் கல்வி நிறுவனங்களை பாதுகாக்க வேண்டியதுதான் அரசின் வேலை. மக்களுக்கு சேவை செய்வதற்கு அல்ல. கல்வி தனியார்மயத்தின் விளையே இந்த மாணவின் மரணம். மக்கள் போராட்டம் அதை எதிர்த்துத்தான் நடக்கிறது. எனவே கல்வி தனியார்மயத்தை ஒழிக்காமல் கள்ளக்குறிச்சி மாணவியை போன்ற மரணங்களை நாம் தடுக்க முடியாது.
கள்ளக்குறிச்சி கல்வி தனியார்மய போராட்டம் குறித்தும், போராடும் மக்கள் குறித்து இந்த காணொலியில் விளங்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர், தோழர் வெற்றிவேல் செழியன்.
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!