எழுபது ஆண்டுகளாக பாலஸ்தீனத்தின் மீது யூத இனவெறி பிடித்த இசுரேல் நடத்தி வரும் இந்த ஆக்கிரமிப்புப் போரில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு காசா பகுதியில் இஸ்ரேல் “குண்டு மழையை பொழிந்து உள்ளது”. இவ்வான்வழி தாக்குதலின் மூலம் 16 குழந்தைகள் உட்பட 45 அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்றுகுவித்து பிள்ளை கறி தின்று இரத்த ருசிபர்த்து உள்ளது இசுரேல். 2000-லிருந்து இதுவரை 2,200க்கும் அதிகமான பாலஸ்தீனிய குழந்தைகள் இஸ்ரேலிய படைகளால்
படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறக்குறைய 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சுவத்தில் அடிக்கும் சாணியை போல் பாலஸ்தீன மக்களின் உடல்கள் இஸ்ரேல் வீசும் குண்டில் அவர்கள் மண்ணிலே அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறி சிதறி கிடக்கின்றன. மேலும் அரிதாகவே செயல்பட்டுக் கொண்டிருந்த மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் நிரம்பி வழிந்துள்ளன.

காசாவில் வாழும் சுமார் 2.3 மில்லியன் பாலஸ்தீனியர்கள் இசுரேலிய மற்றும் எகிப்திய இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். வெறும் 141 சதுர மைல்கள் மட்டுமே கொண்ட அதாவது டெட்ராய்ட் நகரத்திற்குச் சமமான பரப்பளவில் உள்ள ஒரு பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான சக்திவாய்ந்த குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் தாக்கியுள்ளது.

உக்ரைன் போரில் ரஷ்யாவின் அட்டூழியங்கள் என்று செய்தி ஊடகங்களுக்கு தலைமை தாங்கி பிரச்சாரம் செய்த நியூ யார்க் டைம்ஸ் இசுரேலின் அட்டூழியங்களை “கடுமையான எல்லை தாண்டும் சண்டை” என கூறுகிறது. இது சண்டை அல்ல!, ஆக்கிரமிப்புப் போர்!, என்ற வரலாற்று உண்மை திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருகிறது. இந்த முதலாளிதத்துவ வேசி ஊடகங்கள் ஆக்கிரமிப்பு போரை திட்டமிட்டு இரு தரப்பினருக்கு இடையிலான சண்டை என்றே சித்தரித்து வருகின்றது.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இசுரேல் என்ற தேசம் ஒன்றே இல்லை. ஆனால் இன்று நாடாக மாற்றப்பட்டு அது பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பு செய்யும் அளவிற்கு வந்திருக்கின்றது என்றால் அதன் பின்னணியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நாசிசக் கொடுங்கோலன் ஹிட்லரின் ஆட்சியில் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட யூதர்கள் பல நாடுகளில் தஞ்சம் அடைந்தார்கள்.

தஞ்சம் பிழைக்க வந்தவர்களை “பாலஸ்தீன மக்கள் அரவணைத்தார்கள்”. ஆனால் யார் தங்களை அரவணைத்தார்களோ எந்த மண் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததோ அந்த மண்ணையே கைப்பற்றிக் கொண்டார்கள் யூத வெறியர்கள். அப்படி பாலஸ்தீனத்தின் சில நகரங்களை கைப்பற்றிக்கொண்டு 1940-களின் பின்பகுதியில் இசுரேல் என்ற தனி நாட்டை அறிவித்தார்கள். அந்த இசுரேல் என்ற நாட்டை முதன் முதலில் அங்கீகரித்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். காரணம் மத்திய கிழக்காசியப்பகுதியில் தன்னுடைய பேட்டை ரவுடியாக இசுரேலை வளர்த்து அதன் மூலம் தனது உலக மேலாதிக்கத்தை நிறுவுவது தான்.

அதன் விளைவு பாலஸ்தீனம் என்ற பரந்து விரிந்த தேசம் கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றப்பட்டு காசாமுனை, மேற்கு கடற்கரை என்ற இரு பகுதிகளாக சுருக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிறிய பகுதியையும் கைப்பற்றி அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவவே லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களின் மீதான இசுரேலின் போர் நடக்கிறது.
இந்த தாக்குதல் நடப்பதற்கு முன்னதாக ஜூலை 13 மற்றும் 14 ஆம் தேதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு சென்று வந்துள்ளார். இதன் மூலம் இப்பொழுது நடந்துள்ள தாக்குதலுக்கு கைகாட்டியது ஜோ பைடனே என்பது அம்பலமாகி உள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உதவியுடன் இஸ்ரேல் மத்திய கிழக்கில் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளுடனும் ராணுவ படை பலத்துடன் குவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து Palestinian Islamic Jihad (PIJ) என்ற பாலஸ்தீன போராளி குழு தன்னிடம் இருக்கும் ராக்கெட் ஏவுகணைகளை வைத்துக்கொண்டு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டு வருகிறது.

நியூ யார்க் டைம்ஸ் வெளியீட்டு உள்ள அறிக்கையில், “காசா இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றது” என்று குறிப்பிட்டுள்ளது “பாலஸ்தீன மக்களுக்கோ கடந்த 70 ஆண்டுகள் போர் மட்டுமே இயல்பு நிலையாக உள்ளது”.

இது மீள முடியாத ஒரு இயல்பு நிலைக்கு அவர்களை தள்ளியுள்ளது. மேலும் , 50 சதவிகித வேலையின்மை விகிதம் மற்றும் நொறுங்கி போன உள்கட்டமைப்பு வசதிகள் பாலஸ்தீனத்தின் அடிவயிற்றை இருக்க பற்றி கொண்டு உள்ளது. பாலஸ்தீனத்தில் வசிப்பதற்காக ( breathing space ) ஏதோ மின்நிலையம் இயங்கி வந்தன ஆனால் அதுவும் இப்பொழுது ஒழிக்கப்பட்டுள்ளது .இதற்கு வீசிய குண்டு காரணமல்ல, மாறாக அது இயங்க தேவையான எரிபொருளை இஸ்ரேலும் எகிப்தும் விநியோகிக்க தடை விதித்த குண்டினால்.

இப்பொழுது நம் மனதில் ஒரு கேள்வி எழலாம், பாலஸ்தீனத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது எப்படி?
எந்தவொரு பிற்போக்குத்தனமான தேசியவாத ஆட்சிகள் மூலமாகவோ அல்லது ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுடனான சூழ்ச்சிகள் மூலமாகவோ உலகத்தின் மையமான வாஷிங்டனால் நடத்தப்படும் “சமாதான” பேச்சுக்கள் எல்லாம் உலக மேலாதிக்கத்தை நிறுவுவதை நோக்கமாக கொண்டுள்ளது என்பது தெள்ள தெளிவாக உள்ளது.

சோசலிச மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அரபு, இஸ்ரேலிய, துருக்கிய மற்றும் குர்திஷ் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் பிரச்சாரத்தின் மூலமும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சர்வதேச இயக்கத்தின் மூலம் மட்டுமே இயல்பு நிலையை கொண்டு வர முடியும்!

சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் வரிசையில், தெற்காசியாவில் பாட்டாளி வர்க்கத்தின் சூறாவளியாக மையம் கொண்டுள்ள சூறாவளி ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் விடுதலைக்கு தோள் கொடுத்து உலக பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றிணைவுக்கு முன்னேறுவோம்.

எழிலன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க