மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: குற்றவாளிகளுக்கு வாதாடும் நீதிபதி! போராடினால்தான் நீதி கிடைக்கும்! | மருது வீடியோ

இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளை பெற்றோர்களுக்கு கொடுத்தார்கள். ஆனால், அவை மீதான ஜிப்மர் அறிக்கையை பெற்றோர்களுக்கு தரவில்லை. ஆனால் நீதிபதி படித்துவிட்டு கருத்து சொல்கிறார். இது என்ன ஜனநாயகம்!

ந்த வழக்கிற்கு சம்மந்தம் இல்லாத பல்வேறு கருத்துக்களை உயர்நீதிமன்றம் பேச முடியும் என்று சொன்னால், அப்பாவிகளும் தலித் மக்களும் வன்னியர்களும் திட்டமிட்டு கைது செய்யப்பட்டர்கள் என்பதை பற்றி ஏன் பேச முடியவில்லை.

தகுதி இல்லாத ஒரு பெண்ணை கொண்டுபோய் தகுதி உள்ள ஓர் பள்ளியில் சேர்த்து விட்டீர்கள்; உங்கள் பொண்ணு செத்துவிட்டால் நான் பொறுப்பேற்க முடியாது; நீங்கள் தான் பொறுப்பேற்க முடியும். இப்படி, அந்த குற்றவாளிகளின் பிணை உத்தரவில் பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 27 ஆம் தேதி ஸ்ரீமதியின் அம்மாவிடம் குற்றவாளிகளை தண்டிப்பேன் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். தற்போது பிணை கொடுக்கப்பட்டதில் இருந்து பார்க்கும் போது குற்றவாளிகள் யாரும் இல்லை; குற்றவாளிகள் ஸ்ரீமதியின் பெற்றோர்கள் என்றுதான் ஆகிவிட்டது. தற்போது ஸ்டாலின் யாரை தண்டிப்பார்?

இது ஒரு அதிகார வர்க்க பின்னணி கொண்ட ஒரு பள்ளி! ஓர் சாதி ஆதிக்கம் நிறைந்த ஒரு பள்ளி! ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட ஒரு பள்ளி! அப்போ இந்த பள்ளியை யாரும் எந்த கேள்வியும் கேட்க கூடாது என்ற அடிப்படையில்தான் இந்த அரசு போலீசு நீதிமன்றம் எல்லோரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளை பெற்றோர்களுக்கு கொடுத்தார்கள். ஆனால், அவை மீதான ஜிப்மர் அறிக்கையை பெற்றோர்களுக்கு தரவில்லை. ஆனால் நீதிபதி படித்துவிட்டு கருத்து சொல்கிறார். இது என்ன ஜனநாயகம்!

தனியார் கல்வி கொள்கையை ஆதாரிக்கும் இந்த அரசு, ஸ்ரீமதிக்கு நீதியை தராது என்பதே உண்மை!

கள்ளக்குறிச்சி கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியின் குற்றவாளிகளை விடுதலை செய்ததை கண்டித்தும், பிணை ஆனையை பற்றியும் பல்வேறு கருத்துக்களை தமிழ்மிண்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க