சியப் புரட்சியின் ரதம் மின்னல் வேகத்தில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. புரட்சிகரப் போராளிகளின் படைப்பிரிவுகள் எல்லா இடங்களிலும் வளர்ந்து கொண்டும் பரவிக்கொண்டும் இருக்கின்றன. பழைய அதிகாரத்தின் தூண்கள் அவற்றின் அடித்தளங்களின் மீது அதிர்ந்து குலுங்கிக் கொண்டிருக்கின்றன, நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. இப்போது, எப்போதும்போல, பெட்ரோகிராடு முன்னணியில் இருக்கிறது. அதற்குப் பின்னால் எண்ணற்ற மாகாணங்களைத் தட்டுத்தடுமாறி இழுத்துவந்துகொண்டிருக்கின்றன.

பழைய அதிகாரத்தின் சக்திகள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன, ஆனால் அவை இன்னும் அழிக்கப்படவில்லை. அவை தாழ்வாக இருக்கின்றன, தமது தலையை உயர்த்தி, சுதந்திர ரசியா மீது வேகமாக எழுந்து தாக்குவதற்குத் தருணம் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றன. சுற்றிலும் பாருங்கள், இருண்ட சக்திகளின் தீய வேலை இடையீடின்றி நடந்து கொண்டிருப்பதைக் காண்பீர்கள்……..

வென்றெடுக்கப்பட்ட உரிமைகளை உயர்த்திப்பிடிக்க வேண்டும், அதன்மூலம் பழைய சக்திகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், மாகாணங்கள் தொடர்பில் ரசியப் புரட்சியை மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் – இதுதான் தலைநகரின் பாட்டாளி வர்க்கத்தின் அடுத்த உடனடிப் பணியாக இருக்க வேண்டும்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | தோழர் லெனினுடைய விடுமுறை குறிப்புகள் | தோழர் ஸ்டாலின்

ஆனால் இதை எப்படிச் செய்வது?

இதைச் செய்து முடிக்க தேவையாக இருப்பது என்ன?

பழைய அதிகாரத்தைத் தூள் தூளாக்குவதற்கு கிளர்ச்சிக்காரத் தொழிலாளர்களுக்கும் மற்றும் படைவீரர்களுக்கும் இடையிலான ஒரு தற்காலிகக் கூட்டணி போதுமானது. ஏனென்றால் ரசியப் பலம் படை வீரர்களின் சீருடையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கூட்டணியில் இருக்கிறது என்பது தானாகவே தெளிவாகத் தெரியக் கூடியதாகும்.

ஆனால் அடையப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் புரட்சியை மேலும் வளர்த்தெடுக்கவும், தொழிலாளர்களுக்கும் படைவீரர்களுக்கும் இடையிலான ஒரு தற்காலிகக் கூட்டணி போதுமானதல்ல.

இதற்கு அந்தக் கூட்டணி உணர்வுபூர்வமானதாகவும் உறுதியானதாகவும் செய்யப்பட வேண்டியதும், அது நீடித்து நிலைத்து நிற்க வேண்டியதும், எதிர்ப்புரட்சியாளர்களின் ஆத்திரமூட்டும் தாக்குதல்களைத் தாக்குப்பிடித்துப் போதுமான அளவுக்கு நிலைத்து நிற்க வேண்டியதும் அவசியமாகும். ஏனென்றால் ரசியப் புரட்சியின் இறுதி வெற்றியின் உத்தரவாதம் புரட்சிகரத் தொழிலாளர்கள் மற்றும் புரட்சிகரப் படைவீரர்களுக்கு இடையிலான கூட்டணியைப் பலப்படுத்துவதில் அடங்கியிருக்கிறது என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்ததாகும்.

தொழிலாளர்களின் மற்றும் படைவீரர்களின் பிரதிநிதிகளின் சோவியத்துகள் இந்தக் கூட்டணியின் அமைப்புகள் ஆகும்.

இந்தச் சோவியத்துகள் எந்த அளவுக்கு மிகவும் நெருக்கமாக இணைக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு அவை மிகவும் பலமாக அமைப்பாக்கப்படுகின்றன, அவை வெளிப்படுத்தும் புரட்சிகர மக்களின் புரட்சிகர சக்தி அந்த அளவுக்கு மிகவும் செயலூக்கம் கொண்டதாக இருக்கும், மேலும் எதிர்ப்புரட்சிக்கு எதிரான உத்தரவாதங்கள் மிகவும் நம்பிக்கை வாய்ந்தவையாக இருக்கும்.

புரட்சிகர சமூக-ஜனநாயகவாதிகள் இந்தச் சோவியத்துகளைப் பலப்படுத்துவதற்குப் பாடுபட வேண்டும், எல்லா இடங்களிலும் அவற்றை அமைக்க வேண்டும், தொழிலாளர்களின் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதிகளின் மத்திய சோவியத் ஒன்றியத்தின் கீழ் அவற்றை ஒன்றாக இணைக்க வேண்டும்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | லெனின் புரட்சியின் மேதை – தோழர் ஸ்டாலின்

தொழிலாளர்களே, உங்கள் அணிகளை நெருக்கமாகக் கொண்டு வாருங்கள், ரசிய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியைச் சுற்றி அணிதிரட்டுங்கள்!

விவசாயிகளே, விவசாயிகள் சங்கங்களில் அமைப்பாகுங்கள், ரசியப் புரட்சியின் தலைவரான புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துடன் அணிதிரளுங்கள்!

படைவீரர்களே, உங்கள் சொந்தச் சங்கங்களில் அமைப்பாகுங்கள், ரசியப் புரட்சிகரப் படையின் ஒரே உண்மையான கூட்டாளியான ரசிய மக்களைச் சுற்றி அணிதிரளுங்கள்!

தொழிலாளர்களே, விவசாயிகளே, படைவீரர்களே, எல்லா இடங்களிலும் கூட்டணியின் அமைப்புகளாக, ரசியாவின் புரட்சிகர சக்திகளின் ஆற்றலாக தொழிலாளர்களின் படைவீரர்களின் பிரதிநிதிகளின் சோவியத்துகளில் ஒன்றிணையுங்கள்!

அதில்தான் பழைய ரசியாவின் இருண்ட சக்திகளின் மீதான முழுமையான வெற்றியின் உத்தரவாதம் அடங்கியிருக்கிறது.

அதில்தான் விவசாயிகளுக்கு நிலம், தொழிலாளர்களுக்கு உழைப்புப் பாதுகாப்பு, ரசியாவின் அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரு ஜனநாயகக் குடியரசு ஆகிய ரசிய மக்களின் அடிப்படைக் கோரிக்கைகள் மெய்யாக்கப்படும் என்ற உத்தரவாதம் அடங்கியிருக்கிறது.

பிராவ்தா, எண் 8,
மார்ச் 14, 1917

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க