நவம்பர் 7 ரசிய சோசலிச புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்!
ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்!

காஞ்சிபுரத்தில் அரங்கக் கூட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்பு குழு) மற்றும் மக்கள் அதிகாரம் சார்பில் காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள் இணைந்து நடத்திய நவம்பர் விழாவிற்கு மக்கள் அதிகாரம், காஞ்சிபுரம் மாவட்ட இணைச் செயலாளர், தோழர் சரவணன் தலைமை ஏற்று நடத்தினார்.

முதல் நிகழ்ச்சியாக தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தலைமை உரையில் இன்றைய பாசிச நெருக்கடியில் ஏகபோகமாக வளர்ந்துள்ள கார்ப்பரேட் பாசிசத்தின் நெருக்கடியை சமாளிக்க ரஷ்ய புரட்சி அவசியம் என்பதை எளிமையாக விளக்கினார். அதில் சீனாவில் நடந்த சுகாதாரத் துறையில் ஏற்பட்ட மிகப் பெரும் புரட்சியை எடுத்துரைத்துப் பேசினார். அடுத்த நிகழ்ச்சியாக “வந்திடும் வந்திடும் நவம்பர் 7 வந்திடும்” என்ற பாடல் கலைக்குழுச் சார்பாக பாடப்பட்டது.

பாலாறு கூட்டியக்கத்தை சார்ந்த காஞ்சி அமுதன் அவர்கள், சுற்றுச்சூழல் பிரச்சினை என்று நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டி உள்ள தொழிற்சாலைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என வளர்ந்து இன்று கால்வாய்கள் ஏரி குளங்கள் அழிக்கப்பட்டு  இயற்கை வளங்களை சின்னாபின்னம் ஆக்கியுள்ளது. மேலும் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் இடம்  சென்னைக்கு செல்லும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் இடமாகவும் மீனம்பாக்கம் விமான நிலைய அமைந்துள்ள இடமும் நீர் நிலைகள்  இருந்ததையும் சுட்டிக்காட்டி, இதனால் இந்த பகுதி முழுக்க இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இது எதிர்கால சங்கதிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்” என உரையை நிறைவுசெய்தார்.

“போராட்டம் வேண்டாமா போலீஸ் வேண்டாமா” என்ற பாடலை பாடினார்கள். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் (மாநில ஒருங்கிணைப்பு குழு) தோழர் ஆகா சிவா அவர்கள் விலைவாசி ஏற்றம், வேலை இழப்பு, வரி விதிப்பு, ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம் என்ற முழக்கத்தின் கீழ் தனது உரையை தொடங்கினார். எப்படி சோசலிசம் என்பது மக்களுக்கானது என்பதையும் மக்களுக்கான அரசு எப்படி பாசிசத்தை வீழ்த்தும் என்பதையும் ஆணித்தனமாக அழுத்தத்துடன் பேசினார்.

வரி எதற்காக விதிக்கப்படுகிறது? ஒரு பக்கம் இந்தியாவினுடைய வளர்ச்சி பற்றி கூறிவிட்டு இன்னொரு பக்கம் வாராக்கடனை தள்ளுபடி செய்து கார்ப்பரேட்டின் நலனுக்காக மோடி மாடல் வளர்ச்சி என்ற பெயரில் சாமானிய மக்களையும் உழைக்கும் மக்களையும் விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள் என பலதரப்பட்ட மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் இந்த அரசமைப்பை தூக்கி எறிய வேண்டும் என்றால் ஒரு பாசிசை எதிர்ப்பு கூட்டமைப்பு தேவை. அது ரஷ்ய புரட்சி போல ஒரு சோசலிசப் புரட்சி. இங்கு, நாம் இந்த ஏகாதிபத்தியங்களை எதிர்த்துப் போராட வேண்டிய தருணம் என்பதையும் அழுத்தமாக விளக்கிப் பேசி தனது உரையை நிறைவு செய்தார்.

அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளில் “கம்யூனிசம் வெல்லும்” என்ற பாடல் பாடப்பட்டது. மழலைகள் யுகேஷ், கபிலன், கஷ்மிதா, கலை ஆகியோர் உலகப் பொதுமறையான திருக்குறள் மற்றும் அம்பேத்கரின் பொன்மொழிகள் குறித்துப் பேசினார்கள்.

கலைக்குழு சார்பாக தோழர் திலகவதி அவர்கள் தலைமையில் நாடகத்தில், செல்வகுமார்(கட்டபொம்மன்), சரண்(ஊமைத்துரை), ஜிவிதா(வேலுநாச்சியார்), மகா(குயிலி), பவித்ரா (நெறியாளர்) ஆகியோர்  இணைந்து இன்று நவீன பாசிசத்தில் இவர்களுடைய பங்கு இன்றைய காலகட்டத்தில் எப்படியிருக்கும் என்பதை விவாதமாக நடத்தி உணர்வுபூர்வமாக நடத்தினார்கள்.

வேலூர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் (மாநில ஒருங்கிணைப்புக் குழு) தோழர் சுந்தர் அவர்கள் நன்றி உரையாற்றினார். இறுதியாக பாட்டாளி வர்க்க சர்வதேச கீதம் பாடப்பட்டு நிகழ்ச்சி முடித்து வைக்கப்பட்டது. நமது மக்கள் அதிகார அமைப்பின் ஆதரவாளர், இந்த நவம்பர் விழாவிற்கு வருகை தந்து அனைத்து தோழர்களுக்கும் சிற்றுண்டி ஏற்பாடு செய்து கொடுத்தார்.

தகவல்:
பு.ஜ.தொ.மு(மாநில ஒருங்கிணைப்புக்குழு)
மக்கள் அதிகாரம், சென்னை மண்டலம்.

0-0-0

நவம்பர் 7 ரசிய சோசலிச புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்!
ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்!

கடலூரில் அரங்கக் கூட்டம்

நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாளை உயர்த்தி பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி;அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் நவம்பர் 7 நிகழ்ச்சி தீன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக, தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்பு பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தோழர் ஜெயக்குமார் (மக்கள் அதிகாரம் பகுதி பொருளாளர்) தலைமை உரையில், “நாம் நம் வாழ்வில் பல பண்டிகைகளை கொண்டாடிக் கொண்டு வருகிறோம். முக்கியமான ஒரு மகத்தான விழா எதுவென்றால் நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாள்தான். ஏனென்றால், அன்றுதான் உழைக்கும் மக்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த நாள். தனிவுடைமை சுரண்டலை ஒழிக்காத வரையில் பொதுவுடமை சமூகம் மலராது என்றும் பேசினார். உழைக்கும் மக்களுக்கும் மாணவர்களுக்கும் பாட்டாளி வர்க்க நலனை எடுத்துக் கூறி, வர்க்க அரசியலை பயிற்றுவிப்பதன் மூலமாகதான், ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி;அம்பானி-அதானி பாசத்தை முறியடிக்க முடியும்” என்று கூறி நிறைவு செய்தார்.

உத்தரவேல் (மாவட்ட வழக்கறிஞர் பிரிவு விசிக) அவர்கள் தமது உரையில், “பாசிச பாஜக அரசு மனுதர்மத்தின் அடிப்படையில் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த மனுதர்மத்தின் கட்டமைப்பை அடித்து நொறுக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை அழித்தொழிக்க வேண்டும்” என்று பேசினார்.

ஜே.அப்துல் காதர் (SDPI­) அவர்கள் தனது உரையில், “பார்ப்பனப்பாசிசம் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை உருவாக்கி உள்ளது. காலில் செருப்பு போட்டு நடக்கக்கூடாது தோளில் துண்டு போடக்கூடாது. குறிப்பிட்ட சமூகப் பெண்கள் ஜாக்கெட் அணியக் கூடாது போன்ற கொடுமைகள் நடந்துள்ளன. அது எதிர்த்து அன்று போராடினார்கள் இன்று மீண்டும் இந்துராஷ்டத்தை அமைக்கும் நோக்கில் பாசிச மோடி அரசு செய்து வருகிறது. தன்னை எதிர்த்து போராடும் அனைவரையும் இன்று கைது செய்து சிறையில் அடைகிறது. இஸ்லாமியர்களை முதன்மை எதிரியாக காட்டி வருகிறது. இந்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க அதானி-அம்பானி பாசிசத்தை புரிந்து கொண்டவர்கள் ஓரணியில் திரண்டு எதிர்த்து போராட வேண்டும்” என்று பேசினார்.

தோழர் முருகானந்தம் (மக்கள் அதிகாரம் கடலூர் மண்டலச் செயலாளர்) அவர்கள், “நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாளின் ரஷ்யாவில் நடைபெற்ற சாதனங்களைப் பற்றி விளக்கு பேசினார். பால்காரப் பெண்மணி பாராளுமன்ற உறுப்பினர் ஆனது ஐந்தே ஆண்டில் ரஷ்யாவை மின்சாரமயம் ஆக்கியது. மருத்துவம் கல்வி பயின்று முடித்த பின் உத்தரவாதமான வேலை உள்ளிட்டவை அடிப்படை சட்டமாக்கப்பட்டதை முதியோர் உதவித்தொகை மகப்பேறு உதவித்தொகை இன்னும் பல்வேறு ரஷ்ய புரட்சியின் சாதனைகளை” விளக்கி பேசினார்.

திருவரசு (அனைத்து பொதுநல சங்கம், கடலூர்) அவர்கள், “மோடி  டீ  வித்தவர்  என்று சொல்லி அன்றைக்கு அனைவரும் பெருமையாக பேசினார்கள் ஆனால் மோடி டி வித்தவர் என்பதை தாண்டி இன்றைக்கு இந்தியாவே விற்கும் நிலைமைக்கு வந்துட்டாரு, இன்னைக்கு ரயில்வே, மின்சாரம், வங்கி, மருத்துவம், கல்வி என பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்துமே தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு வருகிறது. பாசிச மோடி அரசு மக்களுக்கான அரசு அல்ல, கார்ப்பரேட்டுக்களுக்கான அரசு” என்று கூறினார்.

தோழர் மருது (செய்தி தொடர்பாளர் மக்கள் அதிகாரம்) அவர்கள், “கோயம்புத்தூர் கார் குண்டுவெடிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளில் முஸ்லீம் என்றாலே தீவிரவாதிகள் என சித்தரிக்கிறார்கள். இஸ்லாமியர்கள் உயிர் வாழலாமே தவிர அவர்களுக்கு ஓட்டு உரிமை வழங்கக் கூடாது; இரண்டாம் தர குடிமக்களாக இங்கே அவர்களை நடத்த வேண்டும் என்பதை நோக்கி ஆர்.எஸ்.எஸ் கும்பல் திட்டமிட்ட வேலையாக செய்து வருகிறது.

இன்றைக்கு ஊடகங்கள் அனைத்தும் கார்ப்பரேட் பிடியில் சிக்கி உள்ளது. ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் ஜனநாயகம் மற்றும் முற்போக்காளர்கள் வேலை செய்வார்கள் என்ற நிலைமை இப்போது இல்லை. எந்த ஊடகம் எந்த பத்திரிகை மோடி எதிர்த்துப் பேசினாலும் அதை தடை செய்வது; அந்த ஊழியர்களை தாக்குவது பணியை விட்டு நீக்குவது போன்ற பல்வேறு வேலைகளை செய்து வருகிறது; எனவே அன்றைக்கு எப்படி ஹிட்லர் முசோலினி பாசிசத்தை மக்கள் கம்யூனிஸ்டுகள் தலைமையில் உயிரைக் கொடுத்து தியாகம் செய்து வீழ்த்தினார்களோ அதுபோல இன்று நமக்குத் தேவைப்படுவது அற்பணிப்பும் தியாக உணர்வும்தான். எனவே இந்த ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி அம்பானி அதானி பாசிசத்தை முறியடிக்க அனைவரும் ஓணியில் திரண்ட போராட வேண்டும்” என்று தனது உரையை நிறைவுசெய்தார்.

தோழர் பஞ்சாட்சரம்( மக்கள் அதிகாரம் கடலூர்) நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் பாட்டாளி வர்க்க சர்வதேச கீதம் பாடப்பட்டது. இறுதியாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது.

தகவல்: மக்கள் அதிகாரம், கடலூர் மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க