அரிய நாயகிபுரம் – 7ஆம் வகுப்பு மாணவன் சந்தேக மரணம்: உண்மையறியும் குழு பத்திரிகையாளர் சந்திப்பு! | வீடியோ

அரியநாயகிபுரம் கிராமத்தில் பள்ளி சிறுவன் மர்ம மரணம் தொடர்பாக உண்மையறியும் குழு நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.

தென்காசிக்கு அருகில் உள்ள அரியநாயகிபுரம் எனும் கிராமத்தில் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த எழாம் வகுப்பு பயிலும் 12 வயதாகிய சிறுவன், அவர் வீட்டிலே கடந்த 14-10-22 ஆம் தேதி காலை பத்துமணி வாக்கில் மர்மமான வகையில் தூக்கில் மரணமடைந்து கிடந்தார்.

இதுகுறித்து உண்மையை அறிய மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய செயலர் பேரா. இரா.முரளி, தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் முத்துக்குமார்,மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலர் வழக்கறிஞர் ஆ.ஜான்வின்சென்ட், வழக்கறிஞர் ச.மனோகரன் (குடியுரிமை பாதுகாப்பு நடுவம்(CPCL), வழக்கறிஞர் முனைவர் கரு.சித்தார்த்தன், மற்றும் மக்கள் கலை இலக்கிய கழக மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் இரா.சங்கர் ஆகியோர் அடங்கியக் குழு 11-11-22 அன்று அக்கிராமத்திற்குச் சென்று கள ஆய்வு நடத்தியது.

அரியநாயகிபுரம் கிராமத்தில் பள்ளி சிறுவன் மர்ம மரணம் தொடர்பாக உண்மையறியும் குழு நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.

கணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க