தோழர் ஸ்டாலின் அவர்களின் 145-ஆவது பிறந்த நாளான டிசம்பர் 21 அன்று அவரை நினைவு கூர்வோம்.
ஆசான் லெனினுக்கு பிறகு பாட்டாளி வர்க்க ரஷ்யாவை வழி நடத்தினார் தோழர் ஸ்டாலின். சோசலிச கட்டுமானத்தை கட்டியெழுப்பினார். 1945 ரஷ்யாவை சூழ்ந்த இட்லரின் பாசிச இருளை, உழைக்கும் மக்கள் உட்பட சிகப்பு படையை (Red Army) கொண்டு கிழித்தெரிந்தார். அவரது வாழ்கை வரலாற்றை ”ஸ்டாலின் சகாப்தம்” என்ற ஆவணப்படமாக என்பது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்த ஆவணப்படத்தை உள்ளடக்கம் மாறாமல் புதுப்பித்து தற்போது வெளியிடுகிறோம்.
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் நாடு முழுவதும் பரவி வரும் இத்தருணத்தில் மீண்டும் தோழர் ஸ்டாலின் நமக்கு தேவைப்படுகிறார் என்பதை உணர்த்துகிறது இந்த ஆவணப்படம்.
ஸ்டாலின் சகாப்தம் | ஆவணப்படம்
ஆவணப்படத்தை பாருங்கள்! பகிருங்கள்!!
ஸ்டாலின் சகாப்தம் ஆவணப்படம்,
அதன் செய் நேர்த்தியில் ஒரு படைவீரனனாக திமிறி நிற்கிறது.
படத்திற்கு செறிவூட்டும் களம் சார்ந்த, ஆழ்ந்த அமைதியும் அவசியமான விவரிப்பும் ஆவணப்படத்தை அடுத்த தளத்திற்கு உயர்த்துகிறது.
படம் முழுக்க தெறிப்புகளாக மின்னும் காட்சி விவரிப்புகள் பார்வையாளனின் மூளையை விடாமல் சூடேட்றுகிறது.
“எதிரிகளான ஆரிய சாம்ராஜ்ஜிய தேவர்களுக்கு கம்யூனிச நரகாசூர்ர்களால் கதிமோட்சம் கிடைக்கும்படி வரலாற்றின் விதி அவர்களை சோவியத்தின் வாசலுக்கு அழைத்து வந்தது…
.அங்கே..எதிரிக்கு சாவைத்தவிர பதுங்குவதற்கு வேறு இடம் இல்லாமல் போனது….
ஏதும் செய்ய முடியாமல் போன பாசிச இட்லரோ பயந்து நடுங்கி தற்கொலை செய்து கொண்டான்..
.இந்திய இட்லர்களின் கதையோ தோழர் ஸ்டாலின் வாரிசுகளுக்காக காத்திருக்கிறது….!”
இந்த தெறிப்புகள் மூலம், கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்ற புரட்சிகர முழக்கத்தை ஓங்கி ஒலிக்கிறது.
மறுபுறம்,சந்தை திரைப்படங்களின் மலிவான ரசனைகளுக்கு சாவு மணி அடிக்கிறது.
2014-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட. ஆவணப்படத்தை உள்ளடக்கம் மாறாமல் புதுப்பித்து வெளியிட்டது நன்று.
பார்ப்பவரின் மனதுக்கு நெருக்கமாகி,
புரட்சிகர அரசியலை உயர்த்தி பிடிக்குமாறு
உழைக்கும் மக்கள்அணைவரையும் அறைகூவி அழைக்கிறது ஆவணப்படம்..
ஆங்கிலத்திலும் வெளியிட தோழர்கள் முயற்ச்சிக்கவும்.
தோழர் ஸ்டாலின் அவர்களின் 145-ஆவது பிறந்த நாளான டிசம்பர் 21 அன்று அவரை நினைவு கூர்வோம்.
ஆசான் லெனினுக்கு பிறகு பாட்டாளி வர்க்க ரஷ்யாவை வழி நடத்தினார் தோழர் ஸ்டாலின். சோசலிச கட்டுமானத்தை கட்டியெழுப்பினார். 1945 ரஷ்யாவை சூழ்ந்த இட்லரின் பாசிச இருளை, உழைக்கும் மக்கள் உட்பட சிகப்பு படையை (Red Army) கொண்டு கிழித்தெரிந்தார். அவரது வாழ்கை வரலாற்றை ”ஸ்டாலின் சகாப்தம்” என்ற ஆவணப்படமாக என்பது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்த ஆவணப்படத்தை உள்ளடக்கம் மாறாமல் புதுப்பித்து தற்போது வெளியிடுகிறோம்.
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் நாடு முழுவதும் பரவி வரும் இத்தருணத்தில் மீண்டும் தோழர் ஸ்டாலின் நமக்கு தேவைப்படுகிறார் என்பதை உணர்த்துகிறது இந்த ஆவணப்படம்.