சாத்துக் கூடல் கிராம தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களின் மீது ஆலிச்சிகுடி வன்னிய சாதி வெறியர்களின் கொலை வெறித் தாக்குதல்! | வீடியோ

டலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள சாத்துக் கூடல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் ஆர்வமாகவும் உற்சாகத்துடனும் பொங்கள் விழாவினைக் கொண்டாடினர்! கடந்த 17ம் தேதி பொங்கள் விழா நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது, விழாவிற்குத் தேவையான சில பொருட்களை வாங்குவதற்காக 4 இளைஞர்கள் இரவு சுமார் 7 மணி அளவில் இரு சக்கர வாகனங்களில் அருகிலுள்ள விருதாச்சலம் நகருக்கு சென்றுள்ளனர்.

சாத்துக் கூடல் இளைஞர்கள் வரும் போது, திட்டமிட்டே வழிமறித்துள்ளது கஞ்சா, சாராய கும்பல்! வேறு வழியின்றி இளைஞர்கள் வண்டியை நிறுத்தவே, எந்த ஊருடா என எந்த மட்டு மறியாதையுமின்றி கேட்டுள்ளது சாதி வெறியிலும் போதையிலுமிருந்த கும்பல்! சாத்துக் கூடல் என்றதும் காலனியா ஊரா எனக் கேட்டுள்ளனர்! இளைஞர்கள் காலனி எனக் கூறி முடிப்பதற்குள், சரமாரியாக போதை கும்பல் தாக்கத் தொடங்கியுள்ளது! தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் என்ன நடக்கிறது என புரிந்து கொள்வதற்கு முன்னே, ஒரு போதை ஆசாமி கனமான கட்டை ஒன்றால் ஒரு இளைஞனின் தலையிலும் உடலிலும் தாக்க, ரத்தம் கொட்டத் தொடங்கியுள்ளது. அப்போதும் தாக்குதலை நிறுத்தவில்லை அந்த போதை, சாதி வெறி கும்பல். அடிபட்டவருக்கு பத்திற்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டுள்ளது. மற்றொரு போதை, சாதி வெறி இளைஞன், இரும்புத் தடி கொண்டு இன்னொரு தலித் இளைஞரைத் தாக்க அவருக்கு கால் எலும்பு இரண்டாக முறிந்து போனது!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க