ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானியை பற்றி வாய்திறக்காத மோடி அரசு! | தோழர் பரசுராமன் வீடியோ

ன்பான உழைக்கும் மக்களே! தொழிலாளர்களே! தோழர்களே! அமெரிக்காவைச் சார்ந்த ஹின்டன்பர்க் (Hindenburg) ஆய்வு நிறுவனம் அதானி குழுமம் குறித்து வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலமாக உலகில் மூன்றாவது பணக்காரராக இருந்த அதானி என்றைக்கு ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். ₹10 இலட்சம் கோடி சொத்து மதிப்பு என்று காட்டியிருந்த அதானி குழுமம் இன்றைக்கு ₹2.40 இலட்சம் கோடி மதிப்பை இழந்து இருக்கிறது.

எதனால் இந்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது? கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹின்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தை ஆய்வு செய்ததாகவும், அதனுடைய பங்கு மதிப்புகள் ஊதிப் பெருக்கப்பட்டதாகவும், அதனுடைய நிறுவனங்கள் பல போலியானதாகவும், அவருடைய குடும்ப உறுப்பினர்களை கொண்டு ஏற்படுத்தப்பட்டதாகவும், இந்த பங்குச்சந்தை விதிகளுக்கு புறம்பாக பெருவாரியான பங்குகளை அவர்களே வைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியது. 70 சதவிகித பங்குகள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விதியை மீறி 80 – 90 சதவிகித பங்குகளை அவர்களே வைத்துக்கொண்டு எஞ்சி இருக்கக்கூடிய 10 – 20 சதவிகித பங்குகளை எல்.ஐ.சி போன்ற அரசு நிறுவனங்களை வாங்க வைத்து ஊதிப் பெருக்கியிருக்கிறார்கள். ஹின்டன்பர்க் நிறுவனம் 88 கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க