ஹிஜாப் விவகாரம்: ஈரான் அரசுக்கு எதிராக போராடும் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள்! | தோழர் அமிர்தா வீடியோ

ரானில் மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்லக்கூடாது என்பதற்காக, ஹிஜாபை எதிர்த்து போராடினார்கள் என்பதற்காக பள்ளி மாணவிகள் பழிவாங்கப்படுகிறார்கள். 650-ம் மேற்பட்ட மாணவிகளுக்கு விசம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோம் மற்றும் போருஜெர்ட் நார்களில் உள்ள பள்ளிகளில் இச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

ரசாயன வாயுவால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, உமிழ் நீர் அதிகமாக சுரப்பது, குடல் பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மாசா அமினி-இன் மரணத்தை தொடர்ந்து நடைபெற்ற ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்குபெற்றதற்காக தற்போது மாணவிகள் பழிவாங்கப்படுகிறார்கள்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க