மே 15 மாநாடு: தமிழ்நாடு தழுவிய பிரச்சாரத்தில் தோழர்கள்!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாநாட்டிற்கான பிரச்சார களத்தில் தோழர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சுற்றி வளைக்குது பாசிசப்படை வீழாது தமிழ்நாடு துவளாது போராடு என்ற தலைப்பில் மே 15 மதுரை பழங்காநத்தத்தில் மாநாடு நடத்த மக்கள் கலை இலக்கிய கலகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்பு குழு), மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநாட்டை வெற்றிகரமாக மக்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அதை தொடர்ந்து மதுரையில் மே 15-ஆம் தேதி நடக்கவிருக்கும் மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி எழுத்தாளர் ச.தமிழ்செல்வன், எழுத்தாளர் அழகிய பெரியவன், கவிஞர் விவேகா, பேரா.வீ.அரசு, இயக்குநர் கரு.பழனியப்பன் போன்றவர்களை சென்னை மக்கள் அதிகாரம் தோழர்கள் நேரில் சந்தித்து மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் மற்றும் வெளீயிடுகளை வழங்கினர்.

மேலும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பாக வடசென்னை பகுதி மற்றும்  திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் தீவிர பிராச்சாரத்தை மேற்கொண்டனர்.

குறிப்பாக ஆலை நுழைவு வாயில் மக்கள் குடியிருப்பு பகுதி, பேருந்துகள், ரயில்கள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் மாநாட்டிற்கான பிரச்சாரத்தை  வீச்சாக எடுத்துச் சென்றனர்.

அதை தொடர்ந்து மக்கள் அதிகாரம் சென்னை மண்டலம் சார்பாக சென்னை எம்.ஜி.ஆர் நகர் காய்கனி மார்க்கெட் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள சிறுகடை வியாபாரிகள் மத்தியில் மாநாட்டின் நோக்கத்தை விளக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதைபோன்று மதுரை மாநகரம் முழுவதும் அமைப்பு தோழர்களால் முன்னெடுக்கப்படும் மாநாட்டு  பிரச்சாரங்களால் மிரண்டு போன ஆர்.எஸ்.எஸ் காவிகும்பல் மாநாட்டிற்கு பல தடங்களை ஏற்படுத்தியபோதும் தடைகளை தகர்த்தெறிந்து செயல்படுவது ஜனநாயக சக்திகளை நம்மை நோக்கி வர வழைக்கிறது.

அதை போன்று கோவை மண்டலத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக  குடியிருப்பு பகுதிகளுக்கு சென்ற தோழர்கள் ஒவ்வொரு  வீடாக சென்று மாநாடு பிரச்சுரத்தை விநியோகித்து விளக்கி பேசினர். ஆர்வத்துடன் கேட்ட மக்கள் மாநாட்டிற்கு முழு ஆதரவு அளித்தனர்.

மேலும் திருநெல்வேலி மண்டலம் சார்பாக மேலப்பாளையம் பகுதியில்  மக்கள் அதிகாரம்  சார்பாக தோழர்கள் பிரச்சாரத்தை  மேற்க்கொண்டனர். கடைகள், பேருந்துகள் என அனைத்து இடங்களிலும் பிரச்சுரம் விநியோகித்து வருகின்றனர்.

கடலூர் விருதாச்சலம் போன்ற பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டுவரும் மக்கள் அதிகாரம்  தோழர்கள் உழைக்கும் மக்களிடம் மே 15 மாநாட்டின் நோக்கத்தை விளக்கிப்பேசி நிதி திரட்டினர்.

இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாநாட்டிற்கான பிரச்சார களத்தில் தோழர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க