மே 15, 2023, மதுரை மாநாட்டிற்கான தீர்மானங்கள் | ஸ்டெர்லைட் | தீர்மானம் 17

தீர்மானம் 17

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!
சுற்றிவளைக்குது பாசிசப் படை:
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!

மாநாட்டிற்கான தீர்மானங்கள்

2022-ஆம் ஆண்டு செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற, “ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்!” என்ற மாநாட்டின் தீர்மானங்களை இந்த மாநாடு வழிமொழிகிறது.

தீர்மானம் 17:

கிறித்தவ தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடவைப்பதற்கு மக்களைத் தூண்டிவிட்டதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒரு கட்டுக்கதையை தயாரித்துள்ளது; அதை அடியொற்றி பரப்புரை செய்கிறார், தமிழ்நாட்டு ஆளுநரும் பாசிச உளவாளியுமான ரவி. இதனூடாக, ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்பதற்கான சதியை முறியடிக்க வேண்டும்; ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு தமிழ்நாடு அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும்; ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதற்கு தனிச்சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று மாநில அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

ஸ்டெர்லைட் படுகொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை பரிந்துரைத்துள்ளபடி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான `17 போலீசார் மீதும், 4 மாவட்ட போலீசு அதிகாரிகள் மீதும் கொலை வழக்கைப் பதிவு செய்து சிறையில் அடைக்குமாறும், அவர்களின் சொத்துக்களைப் பறித்து, அவர்களது அரசியல் உரிமைகளையும் ரத்து செய்யுமாறும் இம்மாநாடு கோருகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க