மக்களின் முழக்கமாகிய “BAN BJP – BAN RSS” சிவப்பு அலை பாடல்..

பா.ஜ.க வேண்டாம் என்பதே ஜனநாயகம் என்று பலரும் பேசிகொண்டிருக்கும் சூழலில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்வதே ஜனநாயகம் என்று நாம் முழங்கியுள்ளதை மக்களும் ஜனநாயக சக்திகளும் அங்கீகரித்துள்ளனர்.

டந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி மணிப்பூர் கலவரத்தை ஒட்டி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு சார்பாக BAN BJP – BAN RSS என்ற பாடலை வெளியிட்டோம். இப்பாடல் மாணவர்கள், இளைஞர்கள், பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் என்று பல்வேறு தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்று வெளியிட்ட 6 நாட்களில் பத்தாயிரம் பார்வைகளை கடந்துள்ளது.

யூடியூப் சேனலில் பார்த்தவர்கள் மட்டுமின்றி பலரும் “BAN BJP – BAN RSS” பாடலை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் சில பதிவுகள் ஆயிரக்கணக்கான பார்வைகளை எட்டியுள்ளது. இதனடிப்படையில், யூடியூப் சேனலில் பார்த்த பத்தாயிரம் பேர் மட்டுமின்றி லட்சகணக்கானோரை இப்பாடல் சென்று சேர்ந்துள்ளது

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க மதவெறியை மூர்க்கமான ஆயுதமாக கையாண்டு வரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலுக்கு சம்மட்டி அடியாக BAN BJP – BAN RSS (பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்-வை தடை செய்) என்று முழங்கிய இப்பாடலானது பாசிச எதிர்ப்பு கொண்ட அனைவரையும் கவர்ந்துள்ளது.

வினவு யூடியூப் சேனலில் இந்த காணொளியை வெளியிட்டதிலிருந்து பலரும் தங்களது வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். இந்த பாடல் வெளியானதையொட்டி இரண்டு இஸ்லாமியார்கள் (நான் ஒரு முஸ்லீம் என்று அவர்களே கூறினர்) தனித்தனியாக நம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டனர். அதில் ஒருவர் இன்றைய சூழலுக்கு இப்பாடல் மிகவும் பொருத்தமானது என்றும் மீண்டும் ஒருமுறை பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் நாட்டையே ஒழித்துக் கட்டி விடுவார்கள் என்றும் கூறினார். இன்னொருவர், “இது தான் சரியான அரசியல். இதை நீங்கள் தொடர்ந்து பேச வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்று ஒரு போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும்” என்றார்.

மேலும், “தேசபக்தி உள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய பாடல்” என்று நமது பாடலை வாட்ஸ் அப் மூலம் அதிகம் பேர் பகிர்ந்துள்ளனர். அதைப் பார்த்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனுசியா என்பவர் நம்மை அழைத்து மணிப்பூர் கலவரம் தொடர்பான தனது ஆதங்கத்தை நம்மிடம் வெளிப்படுத்தினார்.

இந்த பாசிச காலகட்டத்தில், குறுகிய காலத்தில் இப்பாடலுக்கு கிடைத்த வரவேற்பு என்பது புரட்சிகர பாடலுக்கும் மக்களின் உணர்வுகளை சரியாக பிரதிபலித்ததற்கும் கிடைத்த அங்கீகாரம் ஆகும். தேர்தலில் பா.ஜ.க வேண்டாம் என்பதே ஜனநாயகம் என்று பலரும் பேசிக்கொண்டிருக்கும் சூழலில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்வதே ஜனநாயகம் என்று நாம் முழங்கியுள்ளதை மக்களும் ஜனநாயக சக்திகளும் அங்கீகரித்துள்ளனர். இனியும் தொடர்ச்சியாக நாம் நடப்பு அரசியல் மீது பாடல்கள் மூலம் வினையாற்றுவோம். அதற்கும் தாங்கள் இதேபோன்று தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க