ஈரோடு புத்தகக்கண்காட்சி – ஆர்.எஸ்.எஸ் பற்றிய புத்தகங்களை அகற்றச் சொல்லும் தமிழ்நாடு போலீசு

மே17 இயக்க தோழர்கள்  வெளியிட்ட  ஆர்.எஸ்.எஸ் (உலகின் மிகப்பெரிய பயங்கரவாத குழு) எனும் புத்தகம், மதிமுகவின் பொருளாளர் தோழர்.செந்திலதிபன் அவர்கள் எழுதிய ‘இந்துத்துவ பாசிசம் வேர்களும், விழுதுகளும்’ எனும் நூலும், திராவிடர் கழகத்தின் தோழர்.மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய ‘அர்த்தமற்ற இந்துமதம்’ ஆகிய நூல்களை ஈரோடு புத்தகக்கண்காட்சியின் அரங்கிலிருந்து அகற்றச் சொல்லி காவல்துறை மிரட்டியுள்ளார்கள்.

இப்புத்தகங்களை நீக்க மறுத்த நிமிர் அரங்கின் தோழரை காவல்நிலையத்திற்கு வரச்சொல்லி காவல்துறை வண்டியில் ஏறுமாறு அச்சுறுத்தியுள்ளனர். பின் அவரது கையை பிடித்து காவல்துறை இழுத்துள்ளது. இவற்றிற்கான அடிப்படை காரணம், சமூகவிரோத சங்கிகள் சிலர் இப்புத்தகங்கள் பற்றி காவல்துறையில் புகார் தெரிவித்ததாக காவல்துறை சொல்லுகிறது. சமூகவிரோதிகளுக்கு கட்டுப்பட்டு ஈரோடு காவல்துறை வேலைசெய்கிறதா எனும் கேள்வியை இது எழுப்புகிறது. இந்த நடவடிக்கை எவ்வகையில் சட்டபூர்வமானது என காவல்துறை தெரிவிக்க வேண்டும்.

மேலும், வணிக தளத்திற்குள் நுழைந்து வணிகத்தை தடுக்கும் அதிகாரத்தை எங்கே இருந்து பெறுகிறார்கள். கருத்துரிமை தளத்திலும், பதிப்பக உரிமையிலும் காவல்துறை சங்கிகளின் விருப்பத்திற்காக தலையிடுவது கடுமையான கண்டனத்திற்குரியது. இதுபற்றி திமுக அரசு உடனடியாக காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக நந்தினி ஆனந்தன் சகோதரிகள் கிட்டதட்ட 1 மாதமாக சிறையில் உள்ளார்கள். தமிழக காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துகிறதா எனும் கேள்வியை இந்த நடவடிக்கைகள் எழுப்புகின்றன.

திருமுருகன் காந்தி முகநூல் பக்கத்திலிருந்து

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க