நீட் எனும் மோசடித் தேர்வு: முதுநிலை மருத்துவ படிப்பில் சேர “0” மதிப்பெண் போதுமாம்!

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க நீட் தேர்வில் பங்கேற்றிருந்தால் போதுமானது என்றும், தகுதி மதிப்பெண் தேவையில்லை என்றும் எம்.சி.சி. கூறியுள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்தும் அதிக இடங்கள் காலியாக உள்ளதால் அந்த இடங்களை நிரப்புவதற்காக நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக (0 percentile) அறிவித்துள்ளது மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க நீட் தேர்வில் பங்கேற்றிருந்தால் போதுமானது என்றும், தகுதி மதிப்பெண் தேவையில்லை என்றும் எம்.சி.சி. கூறியுள்ளது.

இந்த அறிவிப்பு நீட் தேர்வில் தேர்ச்சியடையாமல்  போனவர்களை காப்பாற்றுவதற்காக அல்ல, ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வரை கல்விக்கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும்  தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான ஏற்பாடாகும்.

ஒருபேச்சுக்கு  நாளை இளநிலை மருத்துவ படிப்புகளிலும் இதேபோன்று காலியிடங்கள் உருவாகுகிறது என வைத்துக்கொள்வோம் அப்போது, இளநிலைக்கும் நீட் தேர்வு மதிப்பெண்ணும் பூஜ்ஜியமாக்கப்படும். இந்த நீட் எனும் மோசடித் தேர்வே, மருத்துவ துறையை தனியார் முதலாளிகளின் லாபவெறிக்கு பலியாக்க கொண்டுவரப்பட்டதுதான்.

நீட் தேர்வு மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தும், தகுதியான மருத்துவர்களை உருவாக்கும் என்ற காவிகளின் பிரச்சாரத்தின் சாயம் மீண்டும் வெளுத்துவிட்டது. நீட் தேர்வு தனியார் முதலாளிகளின் நலனுக்காகத் தான் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

புதிய ஜனநாயகம்
23.09.23



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க