மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சேக்கிப்பட்டி என்னும் கிராமத்தில் உள்ள மலையை வரும் அக்டோபர் 31 அன்று கிரானைட் குவாரிக்காக டெண்டர் விடுகிறது தமிழ்நாடு அரசு. இம்மலை அவ்வூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக உள்ளது. இம்மலையின் அடிவாரத்தில் வருடம் 365 நாட்களிலும் தண்ணீர் தேங்கி குளம் போன்று இருக்கும். இதுதான் அவ்வூர் மக்களின் தண்ணீர் தேவையையும் விவசாய பாசனத்திற்கும் உயிராதமாக திகழ்கிறது. ஒருமுறை மழை பெய்தாலும் அப்பகுதி சற்றிலும் உள்ள விவசாயத்திற்கு போதுமானதாக தண்ணீரை சேமித்து வைக்கும் கொள்கலனாக இருக்கிறது. மலையை சுற்றி விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்ப்பு என்று இம்மலையினை நாடியே இக்கிராம மக்களின் வாழ்வதாதரம் அமைந்துள்ளது.
இம்மலை சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆனால் அரசு, ஐந்து ஏக்கருக்கும் குறைவான பரப்பளவு கொண்டதாக இருந்தால் கருத்துக் கூட்டம் நடத்தாமலேயே, மக்களிடம் கருத்து கேட்காமலேயே டெண்டர் விடலாம் என்று கூறுகிறது. இதற்காகவே மலையின் மொத்தப்பரப்பளவை இரண்டு சர்வேயாக பிரித்து மூன்று ஏக்கருக்குள் கொண்டு வந்து கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக மக்களின் வாழ்வாதரத்தை அழித்து படுகுழியில் தள்ளும் கிரிமினல் வேலையை செய்கிறது தமிழ்நாடு அரசு.
இக்கேடுகெட்ட செயலைக் கண்டித்து டெண்டர் விடுவதை ரத்து செய்யும் வரை விடாப்பிடியாக போராட உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதனையொட்டி நாளை (26/10/23) முதல் தொடர் போராட்டம் நடைபெறவுள்ளது.
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube