மூன்று குற்றவியல் சட்டங்கள் – சென்னை அரங்கக்கூட்டத்திற்கான பிரச்சாரம்

“பாசிச மோடி அரசு, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெறு”

– சென்னை அரங்கக்கூட்டத்திற்கான பிரச்சாரம்

11.08.2024 அன்று சென்னை புரசைவாக்கத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக பிரச்சாரம் நடைப்பெற்றது. அப்போது மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டுமென்பதை வலியுறுத்தியும் அதுதொடர்பாக 20-ஆம் தேதி சென்னை தாம்பரத்தில் நடைபெறவுள்ள அரங்கக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது, வியாபாரிகள் மிகுந்த ஆதரவு கொடுத்தனர்.

11.08.2024 அன்று காஞ்சிபுரம் பணப்பாக்கம்
கடை வீதியில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டதை எதிர்த்தும் வழக்குரைஞர்கள் போராட்டத்தை ஆதரித்தும் உரிமைக்காக போராடக்கூடிய மக்களை ஒடுக்கும் இச்சட்டத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் போராடக்கூடிய மக்களுக்கு ஆதரவாக மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் பிரச்சாரம் செய்தனர்.

புதிய மூன்று குற்றவியல் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மக்கள் அதிகாரம், பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு., ம.க.இ.க. ஆகிய அமைப்புகளின் சார்பாக சென்னை, மதுரை, கோவையில் அரங்கக்கூட்டங்கள் நடக்கவிருப்பதையொட்டி சென்னை பல்லாவரம், எழும்பூர் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.03:13 PM

“பாசிச மோடி அரசே, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு” என்ற முழக்கத்தின் அடிப்படையில்,
சென்னை அரங்கக் கூட்டத்திற்காக “இந்திய முஸ்லிம் லீக் கட்சி”யின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் அவர்களையும் முன்னாள் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தோழர் கே.ஏ.எம்.முகம்மது அபுபக்கர் அவர்களையும் சந்தித்து அரங்கக்கூட்ட அழைப்பிதழ் கொடுத்து அரங்கக் கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தோழர்கள் அழைப்பு விடுத்தனர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க