இலவசங்களால் தமிழர்கள் சோம்பேறியாகிவிட்டார்கள் அல்லது இலவசங்கள் சோம்பேறிகளுக்கு வழங்கப்படுகிறது என்பது பார்ப்பனிய சக்திகளாலும் ஆளும் கார்ப்பரேட் ஊடகங்களாலும் பரப்பப்படும் கருத்தாகும். குறிப்பாக, அரசுப் பணத்தைச் சோம்பேறிகளுக்குக் கொடுத்து வீணடிக்கப்படுவதாகவும் இப்பிரிவினர் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவிப்பது வழக்கமாகும்.
உழைக்கும் மக்களுக்கு எதிரான கடைந்தெடுத்த பார்ப்பன வக்கிர புத்தியின் வெளிப்பாடு தான் இந்த கருத்து. விவசாயிகள், தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அனைத்திலும் இந்த சிந்தனையின் வெளிப்பாடுகள் இருக்கின்றன.
இந்த நச்சுக் கருத்தைப் பரப்புவதை இடைவிடாது பார்ப்பன கும்பல் செய்து வருகின்றது.
இந்தவாரம் ஆனந்த விகடன் கேள்வி பதில் பகுதியில், தி.மு.க.வின் ரூ.5,000 ஊக்கத்தொகை அறிவிப்பைப் பற்றி ஒரு ‘வாசகர்’ கேள்வி கேட்டதற்குப் பதிலளிப்பதாகக் கூறி தனது வக்கிரப் புத்தியை ஆனந்தவிகடன் கக்கியுள்ளது.
வக்கிரக் கேள்வி வக்கிர பதில்:
ஸ்டாலின் திடீரென 5,000 ரூபாய் உரிமைத் தொகை கொடுத்து ‘இன்ப அதிர்ச்சி’ தந்ததுபோல, இன்னும் சில தரப்பினருக்கு அவர் உதவித்தொகை வழங்கினால் எப்படி இருக்கும்?
– இது கேள்வியாம்.
- மொபைல் போன் ‘அடிமைகளுக்கு’: வீட்டுல ஒரு வேலையும் செய்யாம, 24 மணி நேரமும் ரீல்ஸ் பார்த்துட்டு இருக்கிறவங்களுக்கு ‘டேட்டா ரீசார்ஜ் உதவித்தொகை’ கொடுக்கலாம். ‘ஒரு நாளைக்குக் குறைந்தது 100 ரீல்ஸாவது பார்த்திருக்க வேண்டும்’ என்பதைத் தகுதியாக நிர்ணயிக்கலாம்.
- இந்த ‘சிங்கிள்’ பசங்க பாவம் இல்லையா?: கல்யாணம் ஆகாம ‘வாழ்க்கைன்னா என்ன?’ எனத் தத்துவமாகப் பேசும் முரட்டு சிங்கிள்களுக்கு ‘ மனவேதனை உதவித்தொகை’ கொடுக்கலாம். இந்தக் காசை வெச்சு அவங்க ‘தனிமை’யைக் கொண்டாட ஒரு கிலோ அல்வா வாங்கிச் சாப்பிடலாம்.
- ஜிம்முக்குக் கிளம்பிப் போகாத ‘உத்தமர்கள்’: வருஷக்கணக்கா ஜிம் மெம்பர்ஷ்ப் கட்டிட்டு, ஒரு நாள் கூடப் போகாம வீட்டுல தூங்குறாங்களே, அவங்களுக்கு ‘ஜிம் மெம்பர்ஷிப் ரீஃபண்ட் உதவித் தொகை’ கொடுக்கலாம். பாவம், அந்தத் தொப்பையை வளர்க்க அவங்க பட்ட கஷ்டம் இருக்கே!
- வாட்ஸ்அப் ‘குரூப்’ அட்மின்கள்: குரூப்ல யார், என்ன பேசினாலும் கண்டுக்காம, எல்லாரையும்ம் சமாளிச்சுட்டு இருக்கிற அட்மின்களுக்கு ‘தலைவலி நிவாரண உதவித்தொகை’ வழங்கலாம். குரூப்ல யாரும் ‘குட் மார்னிங்’ மெசேஜ் போடாமல் பார்த்துக்கொள்ளும் அட்மின்களுக்கு போனஸ் ரூ.2,000 கூடுதலாக வழங்கலாம்.
- தியேட்டர்ல ‘மொக்கை’ படம் பார்ப்பவர்கள்: நம்பிக்கையோடு தியேட்டருக்குப் போய், ‘மொக்கை’ படத்தைப் பார்த்துவிட்டு வெளிய வர்றவங்களுக்கு ‘பொறுமை விருது மற்றும் உதவித்தொகை’ கொடுக்கலாம். அந்த மூன்று மணி நேரத்தியாகம் சாதாரணமானது அல்ல!
– இது விகடன் கொடுத்துள்ள பதிலாம்.
தி.மு.க. அரசு மகளிருக்கான உதவித் தொகை ரூ.5,000 அறிவித்தது, பா.ஜ.க.விற்கு எந்த அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதோ அதைவிட பல மடங்கு விகடனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பா.ஜ.க.விற்கு ஓட்டுப்போய்விடுகிறதே என்ற கவலை. விகடன் குடுமிக்கோ, ’சூத்திராளுக்கு’ கொடுக்கறாலே என்ற கவலை.
ஏழை மக்களுக்குச் சிறு உதவியும் சென்று சேர்ந்துவிடக் கூடாது, அவர்கள் அடிமையாகவே இருக்க வேண்டும் என்பதுதான் இந்தப் பார்ப்பன வக்கிரப் புத்தி.
அதனால்தான், பல இடங்களில் இரட்டை அர்த்தம் கொடுக்கும் வகையில், மேற்கோள் போட்டு எழுதியுள்ளது, இந்த விகடன் குடுமி கும்பல்.
பார்ப்பன கும்பல் என்ன செய்து கொண்டிருக்கும்; கோவிலில் மந்திரம் ஓதிப் பிழைக்கும் வேலையே ஒரு சோம்பேறிகளின் வேலை. அந்தக் குடுமி சோம்பேறிகள் கொழுப்பெடுத்து, கோவிலுக்கு வரும் பெண்களைக் கருவறையில் வைத்தே பாலியல் வக்கிரத்தில் ஈடுபட்டதுதான் தமிழ்நாடு அறிந்த உண்மை.
பார்ப்பனக் குடுமி கும்பலின் இந்த அயோக்கியத்தனங்களும் அவர்கள் உழைக்காமல் மக்களை ஏய்த்துப் பிழைப்பதைப் பற்றியும் சொன்னால் நாள் கணக்கில் எழுதிக் கொண்டிருக்கலாம்.
ஒரு பக்கம், எஸ்.வி.ராஜதுரை, தொல்.திருமாவளவன் போன்றவர்களை அழைத்து விருது கொடுத்து ‘நடுநிலை’ போலக் காட்டிக்கொள்ளும் இந்த விகடன் கும்பல், பா.ஜ.க. எதிர்ப்பு மனநிலை கொண்டவர்கள் மத்தியில், பார்ப்பனியத்தை நைச்சியமாக நுழைக்கும் இழிவான வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த கும்பல் வழங்கும் விருதுகளை வாங்குவது, இதற்கு சமூக அங்கீகாரம் கொடுப்பதுதான், தமிழர்களைத் தடம்புரளச் செய்கிறது.
நடிகர் விஜய் கட்சித் தொடங்குவதற்கு முன்பு வரை அழைத்து விழா நடத்தி, தி.மு.க-விற்கு எதிராக ஏவிவிட முயன்று தோல்வியடைந்து, விரக்தியில் இருக்கும் விகடனுக்கு, தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காகத் தனது வக்கிரப் புத்தியை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.
தேர்தல் நெருங்க நெருங்க, இந்தக் கும்பல் இன்னும் பல வகைகளில் தனது வக்கிரத்தை வெளிப்படுத்தவே செய்யும். பா.ஜ.க-வோ, விகடனோ தி.மு.க-வை அரசியல் ரீதியாக எதிர்க்கட்டும். அதுபற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதை ஒருகாலும் நாம் சகித்துக்கொள்ளக் கூடாது.
மேலும், ‘இலவசத் திட்டங்களை’ ரேவடி கலாச்சாரம் என முத்திரை குத்துவதன் மூலம் பாசிச பா.ஜ.க. கும்பல் மக்கள் நலத் திட்டங்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டத் துடிக்கிறது. இதற்குச் சாதகமாக உச்சநீதிமன்றமும் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறது. சமீபத்தில் கூட, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரிய காந்த், உணவு முதல் மின்சாரம் வரை அனைத்தும் இலவசமாகக் கொடுத்தால் யார் வேலைக்குச் செல்வார்கள் என்று மக்களை இழிவுபடுத்தினார்.
இதற்கேற்ப, தமிழ்நாட்டில் தினமலர், விகடன் போன்ற பார்ப்பன குடுமிக் கும்பல் உழைக்கும் மக்களுக்கு எதிராக வக்கிரத்தைக் கக்குகிறது. தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்ட போது, “காலை உணவுத் திட்டம்: மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு! ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது” என்று தினமலம் வக்கிரத்தைக் கக்கியது. அதன் தொடர்ச்சியே ஆனந்த விகடனின் இந்த கேள்வி பதிலும். அரசிடம் செல்லும் மக்களின் வரிப்பணம் எந்த வகையிலும் எளிய மக்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே இந்த பார்ப்பன கும்பலின் நோக்கமாகும்.
இந்தக் கும்பலைப் பார்க்கும் இடங்களிலெல்லாம் ஜனநாயக சக்திகளும் மக்களும் தமது கண்டங்களைத் தெரிவிக்க வேண்டும். இக்கும்பலின் நிகழ்ச்சிகளை உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் புறக்கணிக்க வேண்டும்.
![]()
மகேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











