திருப்பரங்குன்றம்: சமூக அமைதியைக் கெடுப்பவர்கள் யார்?
| தோழர் ராமலிங்கம்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 15, இதழ் 22-24 | அக்டோபர் 1-31, நவம்பர் 1-15, 2000 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பிரிட்டிசார் இந்திய நிலப்பரப்பைக் கைப்பற்றியபோது வளம் நிறைந்த நீர்ப் பாசனமுள்ள விளைநிலங்களெல்லாம் ஒரு சில பார்ப்பன, வெள்ளாளப் பண்ணையார்களிடம் குவிந்திருந்தது. அப்பண்ணையார்கள் தங்கள் நிலங்களைப் பயிரிடுவதற்கான பண்ணையடிமைகளாக, பெரும்பாலும் பஞ்சமர்களாக அடிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பறையர் மக்களைத்தான் சுரண்டிக் கொண்டிருந்தனர்.
பிரிட்டிசார் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் கொண்டுவந்த மிராசி முறையானது, நிலவுடமையாளர்களாக இருந்த ஆதிக்கச் சாதி மிராசுதார்களுக்கே சாதகமாக இருந்தது. அதாவது, கிராமத்துக்குப் பொதுவாக இருந்த நிலங்கள் எல்லாம், பார்ப்பன, வெள்ளாள ஆதிக்கச் சாதியினருக்கும், ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களின் வசமும் ஒப்படைக்கப்பட்டது. கிராமங்களில் உள்ள நிலங்களுக்கு வரி கட்டும் பொறுப்பு மிராசுகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த நிலங்களைக் குத்தகைக்கு விட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை அரசுக்கு வரியாகச் செலுத்துவார்கள்.
இந்நிலையில், தரிசு நிலங்களில் கூட பட்டியலின மக்களுக்கு உரிமை பறிக்கப்பட்டது. மிராசுதார்கள் சிறிதளவு நிலம் வைத்திருக்கும் பட்டியலின மக்களிடம் அதிகமாக வரி வசூலிப்பது, நிலத்துக்குத் தண்ணீர் மறுப்பது, மீண்டும் மீண்டும் வரி கட்டச் சொல்வது என அடாவடியாக நடந்துகொண்டனர். இதனால் ஏற்கெனவே சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு வந்த பட்டியலின மக்கள், மேலும் பாதிப்புக்குள்ளாயினர்.
அதன் பின்னர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் த்ரெமென்கீர் என்பவர் “பறையர்கள் பற்றிய குறிப்புகள்” என்ற பெயரில் பறையர் சாதி மக்கள் குறித்த நீண்டதொரு அறிக்கையைத் தயாரித்து, 1891-ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசிடம் தாக்கல் செய்தார்.
பஞ்சமர்கள் (பறையர்கள்) மனிதர்களாக நடத்தப்படவும் சுயமரியாதையுடன் சுயமுன்னேற்றம் காணவும், வாழ்க்கைத்தரம் மேம்படவும் அவர்கள் நிலவுடைமையாளர்களாக இருக்க வேண்டியது கட்டாயம் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அவருக்கு முன்னதாகவே, திராவிட மகா ஜன சபை நிறுவனரும், “ஒரு பைசா தமிழன்” பத்திரிக்கை ஆசிரியருமான அயோத்திதாச பண்டிதர், கிருத்துவ மிஷனரி சபையைச் சேர்ந்த ஆடம் ஆண்ட்ரூ மற்றும் வெஸ்லியன் சபையைச் சார்ந்த வில்லியம் கௌடி ஆகிய மூவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான விவாதங்களைத் தொடங்கி வைத்திருந்தனர்.
ஆனால், த்ரெமென்ஹீரின் அறிக்கையை வருவாய்த்துறை ஏற்றுக்கொள்ளாமல் மிராசுகளுக்கு ஆதரவாக நடந்துகொண்டது. அதன் பின்னர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் 1892, மே 16-ஆம் தேதி அந்த அறிக்கை விவாதத்துக்கு வந்தது. இதனையடுத்து, 1892-இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பஞ்சமி நிலம் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தின்படி, இந்தியா முழுவதும், பட்டியலின மக்களுக்கு நிலங்கள் இலவசமாக அளிக்கப்பட்டன. அன்றைய சென்னை மாகாணத்தில் மட்டும் பட்டியலின மக்களான பறையர்களுக்கு 12 இலட்சத்து 61 ஆயிரத்து 13 ஏக்கர் விளைநிலங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிலங்களில், பட்டியலின மக்கள் பயிர் செய்தோ, வீடுகளைக் கட்டிக்கொண்டோ அனுபவிக்கலாம். முதல் பத்தாண்டுகளுக்கு இந்நிலங்களை யாருக்கும் விற்கவோ, தானம் செய்யவோ, அடைமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோக் கூடாது; அதன் பிறகு அவர்கள் விற்பதாக இருந்தால், அவர்கள் வகுப்பைச் சார்ந்தவர்களிடம் விற்பதற்கான உரிமையே வழங்கப்பட்டது. வேறு வகுப்பினரிடம் விற்றால் அந்த விற்பனை செல்லாது. மீறி வாங்கினால், எந்த காலத்திலும் அந்த நிலங்களை வாங்கியவரிடமிருந்து, அரசு பறிமுதல் செய்யலாம். அதற்கு நஷ்ட ஈடு கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் இந்திய அரசு, வருவாய்த்துறை பதிவேடுகளில், பஞ்சமி நிலம் என்று தனியாகவும் மற்ற நிலங்களை, நத்தம் நிலம், நன்செய், புன்செய், புறம்போக்கு என்றும் அனைத்து விளைநிலங்களையும் வகைப்படுத்தியுள்ளது.
1950-க்குப் பிறகு, பூமி தான இயக்கத்தை மேற்கொண்ட வினோபா பாவே, இந்தச் சட்டப்படிதான் பட்டியலின மக்களுக்கு அரசின் மூலம் நிலங்களை வழங்கினார். 1960-களில் கூட்டுறவு முறையில் நிலங்கள் வழங்கப்பட்டதும் இதனடிப்படையில்தான்.
பஞ்சமி நிலங்களைப் பட்டியல் வகுப்பினருக்குத் தவிர பிற வகுப்பினருக்கு விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ முடியாது என சென்னை உயர்நீதிமன்றமும் 2012-ஆம் ஆண்டில் ஒரு தீர்ப்பை அளித்துள்ளது.
இவ்வாறு சட்ட ரீதியாக உரிமை நிலைநாட்டப்பட்டிருந்தும் பஞ்சமி நிலத்தின் இன்றைய உண்மை நிலை என்ன?
தற்போது தமிழ்நாட்டில் 1 இலட்சத்து 26 ஆயிரத்து 13.6 ஏக்கர் பஞ்சமி நிலம்தான் இருப்பதாக நில நிர்வாகத்துறையின் அறிக்கை கூறுகிறது. மீதமுள்ள 10 லட்சத்து 73 ஆயிரத்து 887 ஏக்கர் நிலங்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டுள்ளதை பல்வேறு புள்ளிவிவரங்களில் இருந்து அறிய முடிகிறது. பஞ்சமி நிலங்களை வேறுவகையில் மாற்றி ஆதிக்கச் சாதி பண்ணையார்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் மொத்த பஞ்சமி நிலங்களில் பாதிக்கு மேல் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களில்தான் உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 77 சதவிகித பஞ்சமி நிலங்கள் கைமாறியுள்ளன. இந்த நிலங்களை மீட்க தற்போது வரை பட்டியலின மக்கள் சட்டரீதியாகவும் களத்திலும் போராடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காரணை கிராமத்தில் 1994-இல் பஞ்சமி நில மீட்புப் போராட்டம் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, 1994 அக்டோபர் 10-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தில் ஜான்தாமஸ், ஏழுமலை ஆகிய செயற்பாட்டாளர்கள் அரசின் அடக்குமுறையால் கொல்லப்பட்டனர்.
1996-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து பட்டியலின மக்களிடம் ஒப்படைப்பதற்கென அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் அதுவும் கிடப்பில் போடப்பட்டது.
அதன் பின்னர், பல ஆண்டுகள் கழித்து ஜனவரி 2011-இல் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பஞ்சமி நிலங்களை மீட்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பஞ்சமி நிலங்கள் குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் ஒரு குழு அமைத்தது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையின்படி, தமிழ்நாடு அரசு பஞ்சமி நிலங்களை மீட்பது குறித்து குழு அமைத்தது.
அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம் வெறும் கண்துடைப்பாகவே உள்ளன. உண்மையில் பறிக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் எதுவும் மீட்கப்பட்டு பட்டியலின மக்களிடம் அரசினால் ஒப்படைக்கப்படவில்லை என்பதே கசப்பான உண்மை.
தமிழ்நாட்டில் இருக்கும் மத நிறுவனங்கள், பெரும் வணிக நிறுவனங்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் சொத்துக்கள் எல்லாம் பஞ்சமி நிலங்கள் மீதுதான் எழுப்பப்பட்டுள்ளன. அ.தி.மு.க-வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி மாதத்தில் பஞ்சமி நிலத்தை வாங்கியது அதிகாரப்பூர்வமாக அம்பலமாகி, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கார்ப்பரேட்கள் சிப்காட் அமைப்பதற்குப் பஞ்சமி நிலங்களைக் கைப்பற்றுவதை எதிர்த்து மக்கள் போராடியதும் செய்திகளாக வெளிவந்துள்ளன.
10 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட பஞ்சமி நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன என்பது கடந்து போகும் செய்தி அல்ல. அது பட்டியலின மக்களின் உரிமைகள் எப்படிக் கேட்பாரற்று பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு முக்கிய சான்று.

இயல்பாகவே தலித் மக்கள் மீதான வெறுப்புணர்ச்சியை கொண்டுள்ள அரசு, பஞ்சமி நிலத்தை மீட்பது ஆதிக்கச் சாதி வாக்கு வங்கியை பாதிப்புக்குள்ளாக்கும் என்பதால் இதில் தலையிடுவதில்லை. இது பட்டியலின மக்களை அரசு எவ்வாறு புறக்கணிக்கிறது என்பதற்கு துலக்கமான சான்றாகும்.
இதனை வெறும் புறக்கணிப்பு என்று மட்டும் கடந்து சென்று விட முடியாது. ஒரு பக்கம் ஆதிக்கச் சாதியினர், அதிகார வர்க்கம், நிலவுடைமையாளர்கள், அரசியல் கொள்ளைக் கும்பல் பஞ்சமி நிலங்களை அபகரித்துக் கொண்டுள்ளதை ஆய்வுகள் அம்பலப்படுத்துகின்றன. இன்னொரு பக்கம் கார்ப்பரேட்மயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், பஞ்சமி நிலங்கள் அரசின் துணையோடு அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளால் அபகரிக்கப்படும் ஆபத்தும் உள்ளது.
இது வெறும் அவதானிப்பு அல்ல. வக்ஃபு சொத்துகளை இஸ்லாமியர்களிடமிருந்து பறித்து, கார்ப்பரேட்டுகளுக்கு படையலிட பாசிச பா.ஜ.க. அரசு துடித்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். அவ்வாறு சட்டப்படியே கூட, வளர்ச்சி என்ற பெயரில் பஞ்சமி நிலங்கள் பறிக்கப்படும் ஆபத்தும் உள்ளது.
எனவே, பட்டியலின மக்களின் பஞ்சமி நில உரிமையை முழுமையாக மீட்பதற்கான களப்போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டியதும், அதனை பேசுபொருளாக மாற்ற வேண்டியதும் அவசியமான பணியாகும்.
![]()
அய்யனார்
(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 15, இதழ் 20-21 | செப்டம்பர் 1-30, 2000 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

இந்தியாவின் மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேத மருத்துவப் படிப்பையும் (BAMS – Bachelor of Ayurvedic Medicine and Surgery) அலோபதி எனும் ஆங்கில மருத்துவப் படிப்பையும் (MBBS – Bachelor of Medicine and Bachelor of Surgery) இணைத்து புதிய ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பை அறிமுகப்படுத்த உள்ளதாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது.
கடந்த மே 27-ஆம் தேதி, புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையில் அவசர மற்றும் விபத்து சிகிச்சை மையத்தைத் (Emergency and Trauma Care Centre) திறந்துவைத்த ஒன்றிய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ், புதிய ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு குறித்தான அறிவிப்பை வெளியிட்டார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலிருந்து இந்த புதிய ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு தொடங்கும் என்றும் அறிவித்தார்.
மருத்துவத்தை காவிமயமாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுவரும் பாசிச கும்பல், அதன் அடுத்தக் கட்டமாகவே இந்த ஒருங்கிணைப்பை கையிலெடுத்துள்ளது. இதற்கு மருத்துவர்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மாணவர்களுக்கு பாடச்சுமை மக்களுக்கு பாதிப்பு
ஒருங்கிணைந்த எம்.பி.பி.எஸ் – பி.ஏ.எம்.எஸ் பாடத்திட்டம் என்பது இரண்டு வெவ்வேறு கடினமான பாடத்திட்டங்களை இணைத்து மருத்துவ மாணவர்களின் முதுகில் சுமையைக் கூட்டுவதாகும். ஏனெனில், ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு பாடத்திட்டங்களை கற்றுத் தேர்ச்சி பெறுவது மிகச் சவாலானதாகும்.
சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட ஒவ்வொரு மாற்று மருத்துவப் பட்டப் படிப்புகளும் அலோபதியை போன்றே ஐந்தரை வருடங்களுக்கான பாடத்திட்டங்களைக் கொண்டுள்ளன. எனவே, தற்போதுள்ள மருத்துவப் பாடத்திட்டங்களே மிகவும் கடினமானதாக உள்ள நிலையில், ஆயுர்வேதம்-அலோபதியை இணைத்து புதிய பட்டப் படிப்பு உருவாக்கப்பட்டால் அது ஆறிலிருந்து ஆறரை வருடங்கள் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மருத்துவத்தை முறையாக பயின்று தேர்ச்சி பெறும் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். இதன் விளைவாக மக்களுக்கான மருத்துவ சுகாதாரக் கட்டமைப்பு சீர்குலையும் அபாயம் உள்ளது.
மருத்துவத்தை காவிமயமாக்கத் துடிக்கும் சங்கிக் கும்பல்
மோடி கும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அறிவியலுக்குப் புறம்பான – மக்கள் விரோத – இந்துத்துவ சனாதன பிற்போக்கு கருத்துகளை சங்கிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்துவருகின்றனர். அதிலும், கல்வித்துறை மற்றும் அதிகாரத்தில் உயர்மட்டத்தில் உள்ள சங்கிகள் இப்பிரச்சாரத்தை பொதுவெளியில் செய்து வருகின்றனர்.
டெல்லியில் இயங்கும் லட்சுமிபாய் கல்லூரி முதல்வர் பிரத்யுஷ் வத்சலா என்பவர் கல்லூரி வகுப்பறைகளின் வெப்பத்தை குறைப்பதற்காக மாட்டுச் சாணத்தை பூசியது; டெல்லி ஐ.ஐ.டி-யில் பஞ்சகவ்யம் (மாட்டு சாணம், மூத்திரம், பால், தயிர், நெய்யின் கலவை) மூலம் இயற்கை மருந்துகளை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது; சென்னை ஐ.ஐ.டி-யின் இயக்குனர் காமகோடி மாட்டு மூத்திரத்தில் கிருமி நாசினி, உணவு செரிமானத்திற்குத் தேவையான பல நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுடன் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என்று கூறியது போன்றவை இதற்கான சமீபத்திய சான்றுகளாகும்.
இவையெல்லாம் இந்திய மருத்துவக் கட்டமைப்பை இந்துத்துவமயமாக்கும் சதி ஏற்கெனவே அரங்கேறி வருவதை உணர்த்துகின்றன. இதன் தொடர்ச்சியாகவே ஒருங்கிணைந்த மருத்துவம் என்ற பெயரில் ஆயுர்வேத மருத்துவத்தை அலோபதி மருத்துவத்துடன் இணைத்து, மருத்துவத்தை காவிமயமாக்கும் சதித்திட்டத்தை மோடி அரசு கையிலெடுத்துள்ளது.
ஏனெனில், இன்றளவும் ஆயுர்வேத மருத்துவத்திற்கென தனி தத்துவ அடிப்படை கிடையாது. இந்தியாவில் உள்ள பல்வேறு இனக்குழுக்களின் பாரம்பரிய மருத்துவ முறைகளை பார்ப்பனியத்தால் சுவீகரித்து உருவாக்கப்பட்டதே ஆயுர்வேதம். ஒவ்வொரு பாரம்பரிய மருத்துவ முறையையும் வேத-சாஸ்திரங்களோடு தொடர்புபடுத்தி, அதற்கு வேத முலாம் பூசிதான் ஆயுர்வேதம் உருவாக்கப்பட்டது. எனவே, ஆயுர்வேத மருத்துவம் பெரும்பாலும் இந்துமத கருத்துகள் மற்றும் நம்பிக்கைகளை உள்ளடக்கியதாகவே உள்ளது.
இந்தியாவில் தற்போது அலோபதி மருத்துவமானது மிகப்பெரும் அளவிலான மருத்துவக் கட்டமைப்புகளைக் கொண்ட பல லட்சம் கோடி ரூபாய் புழங்குகின்ற துறையாக இருக்கின்றது. இத்தகைய மருத்துவ முறையுடன் ஆயுர்வேதத்தை இணைப்பதானது மிக விரைவில் ஆயுர்வேதத்தை முன்னிலைக்கு கொண்டுவருவதற்கான சதி நடவடிக்கையாகும்.
இதன்மூலம், சங்கிகளின் இந்துத்துவக் கருத்துகள் மற்றும் மூடத்தனங்கள் மருத்துவத்துறையில் வேகமாக புகுத்தப்படும். இது மட்டுமல்லாமல் இந்துத்துவக் கார்ப்பரேட் சாமியார்களான பாபா ராம்தேவ் போன்றவர்களின் ஆயுர்வேத மருந்து தயாரிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வர்த்தகத்தை விரிவுப்படுத்துவதற்கான சதித்திட்டமும் இதில் அடங்கியுள்ளது.
மேலும், ஆயுர்வேதத்தை மட்டும் இந்திய மருத்துவ முறையாக உயர்த்திப்பிடிக்கும் மோடி அரசு, தங்களுடைய இந்துத்துவக் கொள்கைகளுக்கு எதிராக இருக்கும் தமிழர்களின் சித்த மருத்துவம் உள்ளிட்ட பிற மாற்று மருத்துவ முறைகளை நசுக்கி அழிக்கும் வேலைகளைத் தொடர்ச்சியாக செய்து வருகிறது.
மாற்று – ஒருங்கிணைந்த மருத்துவம்
2022-ஆம் ஆண்டில் தேசிய மருத்துவ ஆணையம் (NMC) இந்தியாவிலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் “ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சித் துறை” நிறுவப்படுவதை கட்டாயமாக்கியது. ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற இந்திய மருத்துவ முறைகளுடன் நவீன மருத்துவத்தை ஒருங்கிணைப்பதே இதன் நோக்கமென கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது ஆயுர்வேதம், அலோபதி மருத்துவத்தை இணைக்கும் மோடி அரசின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ஆனால், ஒருங்கிணைந்த மருத்துவம் என்று குறிப்பிடும்போது அலோபதி எனும் ஆங்கில மருத்துவ முறையுடன் மாற்று மருத்துவ முறைகளான சித்தா, ஹோமியோபதி, யுனானி, அக்குபஞ்சர் போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறைகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதே சரியானதாகும். அதாவது, எல்லா மருத்துவமனைகளிலும் மேற்குறிப்பிட்ட அனைத்து மருத்துவர்களையும் நியமித்து நோயளிகளுக்கு எந்த மருத்துவ முறையில் சிறப்பாக சிகிச்சையளிக்க முடியுமோ அந்த முறையில் சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.
இந்த அனைத்து மாற்று மருத்துவ முறைகளிலும் ஒவ்வொரு தனிச்சிறப்புகள் உள்ளன. குறிப்பிட்ட சில நோய்களுக்கு சில மருத்துவ முறைகளில் நல்ல பயன்கள் ஏற்படும். சான்றாக, டெங்கு நோய் பரவலின்போது சித்த மருத்துவத்தின் மருந்தான நிலவேம்பு கசாயம் அனைத்து மருத்துவமனைகளிலும் கொடுக்கப்பட்டது. கொரோனா தொற்றின்போது கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. மேலும், கொரோனாவிற்கு ஹோமியோபதி மருத்துவத்தில் ஆர்சனிகம் ஆல்பம் (Arsenicum album) என்ற தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு நெருக்கடியான சூழல்களிலும் ஒவ்வொரு மருத்துவமுறைகள் மூலம் மக்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
அதேபோல், ஒவ்வொரு மருத்துவ முறைக்கும் குறிப்பிட்ட வரம்புகள் உள்ளன. அந்த வரம்புகளுக்குள் நல்ல தீர்வுகள் கிடைக்கின்றன. மேலும், இந்த மாற்று மருத்துவ முறைகள் அனைத்தும் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டு தனி அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றன. இவற்றிற்கான பாடத்திட்டங்களில் அலோபதி மருத்துவத்தில் பயிலும் மனித உடற்கூறியல் மற்றும் உடல் இயங்கியல் (Anatomy and Physiology) சார்ந்த அனைத்துப் பாடங்களும் உள்ளன. இந்த மாற்று மருத்துவ முறைகளில் நம்பிக்கை கொண்ட கோடிக்கணக்கான மக்களும் உள்ளனர். ஆகையால், மேற்குறிப்பிட்ட வகையில் மருத்துவ ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும்போதே அது மக்களுக்கு நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கும்.
மாறாக, தற்போது மோடி-அமித்ஷா பாசிச கும்பல் முன்னெடுக்கும் ஒருங்கிணைந்த மருத்துவம் என்ற இத்திட்டமானது ஒரே நாடு – ஒரே தேர்தல் – ஒரே கல்வி – ஒரே மதம் – ஒரே கலாச்சாரம் என்ற வரிசையில் ஒரே நாடு – ஒரே மருத்துவம் என்ற பாசிச கொள்கையின் அடிப்படையில் ஆயுர்வேதத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, மருத்துவத்தினை காவிமயமாக்கும் நோக்கத்துடனும் மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கும் வகையிலும் கொண்டுவரப்படும் இந்தத் திட்டத்திற்கெதிராக அனைத்து மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் மருத்துவர் சங்கங்களும் குரலெழுப்ப வேண்டும்.
![]()
அசுரன்
(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

வெறிபிடித்த தெருநாய்கள் தங்கள் கண்ணில் படும் மனிதர்களையும் விலங்குகளையும் கடித்துக் குதறுவதைப் போல, அதிகார வெறிபிடித்த போலீசு மிருகங்கள் காலங்காலமாக ஏழை-எளிய, தலித், பழங்குடியின, சிறுபான்மையின மக்கள் மீது தனது கோரமுகத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
கடந்த ஜூன் 27 அன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்குட்பட்ட மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு, போலீசால் மிகக் கொடூரமாக சித்திரவதை செய்து கொட்டடிப் (லாக்கப்) படுகொலை செய்யப்பட்டிருப்பது இதனை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
போலீசின் பச்சைப் படுகொலை
கடந்த ஜூன் 27 அன்று மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்துவந்த அஜித்குமார் மீது மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா, திருப்புவனம் போலீசு நிலையத்தில் நகை திருட்டு புகாரளித்தார். ஜூன் 27 அன்று நிகிதா தனது தாயுடன் மடப்புரம் கோவிலுக்கு சென்றதாகவும், தனது காரை வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தக்கூறி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், கோவிலிருந்து திரும்பிவந்த போது வாகனத்தின் பின் இருக்கைக்கு அடியில் வைத்திருந்த 9.5 சவரன் தங்க நகை மற்றும் ரூ.2,500 பணத்தை காணவில்லை என்றும் அப்புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருப்புவனம் போலீசு நிலையத்தில் பல நகைத் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும், 27-ஆம் தேதி இரவே விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துக் கொடுமைப்படுத்தியது போலீசு. தான் நகையை திருடவில்லை என்று அஜித்குமார் கூறிய போதிலும், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் மாவட்ட ஆட்சியர் தகுதிக்குரிய அதிகாரி மூலம் சிவகங்கை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஆதிஷ் ராவத்திற்கு நிகிதா அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அன்றிரவே மானாமதுரை போலீஸ் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரத்தின் கீழ் உள்ள குற்றப்பிரிவு தனிப்படையைச் சார்ந்த ஆறு போலீசுகளிடம் அஜித்குமார் ஒப்படைக்கப்பட்டார்.

எத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் கைது செய்யப்படுபவர்கள் 24 மணி நேரத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், போலீசு மிருகங்கள் அஜித்குமார் மீது முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யாமல், ஏறக்குறைய 40 மணி நேரம் அவரை பல்வேறு இடங்களில் வைத்து இரும்புக்கம்பிகள், மரக்கட்டைகள், பிளாஸ்டிக் பைப்களால் உடல் முழுவதும் காட்டுமிராண்டித்தனமாக அடித்து துன்புறுத்தியுள்ளன. அவரின் பிறப்புறுப்பு, வாய், காதுகளில் மிளகாய் பொடியை கொட்டுவது; குடிக்கத் தண்ணீர் கேட்டால், தண்ணீரில் மிளகாய் பொடியை கலந்து கொடுப்பது உள்ளிட்ட சகித்துக்கொள்ள முடியாத கொடூரங்களை அரங்கேற்றியுள்ளன. இதனால் வலிப்பு வந்து சிறுநீரில் இரத்தம் வெளியேறி துடிதுடித்து இறந்து போயிருக்கிறார், அஜித்குமார்.

அஜித்குமார் இறந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழத் தொடங்கிய பிறகுதான் போலீசு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. அதிலும், அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டதை மூடிமறைத்து, போலீசிடமிருந்து தப்பிச் செல்லும்போது வலிப்பு வந்து இறந்துவிட்டதாக அயோக்கியத்தனமாக குறிப்பிட்டிருந்தது. ஆனால், அஜித்குமார் போலீசால் மிருகத்தனமாக தாக்கப்படும் காணொளியும் அவரது உடலில் 44 காயங்கள் இருப்பதை அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளியாகி அஜித்குமார் போலீசால் பச்சைப் படுகொலை செய்யப்பட்டிருப்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின.
இச்சம்பவம் பெரும் பேசுபொருளான பிறகு, அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரியின் தாவரவியல் துறைத் தலைவர் என்பதும் இவர் தனது குடும்பத்தின் செல்வாக்கை பயன்படுத்தியும் போலீசின் துணையுடனும் பலரிடம் பணம் பறித்து ஏமாற்றி வந்ததும் அம்பலமானது. மேலும், தனிப்பட்ட விரோதம் காரணமாகவே அஜித்குமார் மீது நிகிதா பொய்யாக புகாரளித்திருப்பார் என்றும் நிகிதாவால் பாதிக்கப்பட்டவர்கள் அம்பலப்படுத்தினர். ஆனால், அப்பாவியான அஜித்குமாரை அநியாயமாக படுகொலை செய்துள்ளது போலீசு.
போலீசை பாதுகாக்கும் தி.மு.க. அரசு
அஜித்குமார் இறந்த உடனேயே போலீசும் அரசும் கூட்டு சேர்ந்துகொண்டு குற்றத்தை மூடிமறைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டன. ஜூன் 28 அன்று மாலையில் அஜித்குமார் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாள் மாலைதான் உடற்கூராய்வு நடத்தப்பட்டது. மேலும், அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் 50 லட்சம் ரூபாய் இழப்பீடும் அஜீத்குமாரின் தம்பிக்கு கோயிலில் பணியும் வழங்குவதாக தி.மு.க-வினரும் போலீசும் பேரம் பேசி படுகொலையை மூடிமறைக்க முயன்றனர்.
ஆனால், அஜித்குமார் படுகொலை செய்யப்பட்ட ஜூன் 28 அன்று மாலையே அவரின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் திருப்புவனம் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மடப்புரம் பகுதி வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால், அஜித்குமார் படுகொலை செய்யப்பட்ட செய்தி தமிழ்நாடு முழுவதும் பரவி தி.மு.க. அரசுக்கு கண்டனங்கள் வலுக்கத் தொடங்கின.
அஜித்குமாரின் படுகொலையை அலட்சியமாக கையாண்டுவந்த தி.மு.க. அரசு, மக்கள் போராட்டத்தையடுத்து வேறுவழியின்றி சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆறு தனிப்படை போலீசுகளை பணியிடை நீக்கம் செய்து, அவர்களில் வாகன ஓட்டுநர் தவிர மற்ற ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தது; அஜித்குமார் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றியது; வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றியது தி.மு.க அரசு. ஆனால், சண்முக சுந்தரம், ஆதிஷ் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யாமலும் போலீசுக்கு அழுத்தம் கொடுத்த தலைமைச் செயலக அதிகாரி யார் என்பதை வெளிக்கொணராமலும் மூடிமறைத்து குற்றவாளிகளை பாதுகாத்தது.
தி.மு.க. ஆட்சியில் நடந்த கொட்டடிக் கொலைகள் குறித்து போலீசுதுறை அமைச்சரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இதுவரை வாய்திறந்ததில்லை. ஆனால், தி.மு.க. அரசு மீதான மக்களின் அதிருப்தியை குறைப்பதற்காக, அஜித்குமார் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் ஸ்டாலின் ‘மன்னிப்பு’ கேட்டார்; அஜித்குமாரின் குடும்பத்திற்கு மூன்று செண்ட் வீட்டு மனை பட்டாவும் அவரது தம்பிக்கு அரசு வேலையும் வழங்குவதாக அறிவித்தார்.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்ததைப் போலவே, தி.மு.க. ஆட்சியிலும் கொட்டடிப் படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து, 31 கொட்டடிப் படுகொலைகள் நடந்துள்ளதாக “மக்கள் கண்காணிப்பகம்” அமைப்பு கூறுகிறது. உண்மை நிலவரங்கள் இதை விட அதிகமாகவே இருக்கும்.
இப்படுகொலைகள் ஊடக வெளிச்சம் பெறுவதிலிருந்து திட்டமிட்டு தடுக்கப்படுவதால் அரிதினும் அரிதாக சில செய்திகள் மட்டுமே வெளியாகின்றன. அஜித்குமார் தவிர்த்த மற்ற கொட்டடிப் படுகொலைகளில், போலீசு மீது குற்ற வழக்கு கூட பதிவு செய்யாமல் அவர்களை தி.மு.க. அரசு பாதுகாத்து வருகிறது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதே எதார்த்தமாக உள்ளது.
அதேபோல, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் -பென்னிக்ஸை அடித்துப் படுகொலை செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரையின் இறப்பிற்கு பிறகு அவரது மகனுக்கு போலீசு வேலை கொடுத்திருப்பது; நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் 15 அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற 17 கொலைகாரப் போலீசுகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய மறுத்ததுடன், அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியிருப்பது; பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை முன்னின்று பாதுகாத்த போலீஸ் கண்கானிப்பாளரான எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்காமல், அவரை முதல்வரின் கொளத்தூர் தொகுதியிலேயே துணை ஆணையராக நியமித்திருப்பது என அ.தி.மு.க. ஆட்சியில் கொடூர குற்றமிழைத்த போலீசுகளையும் தி.மு.க. அரசு பாதுகாத்து வருகிறது.
காவல்படை அல்ல, சட்டப்பூர்வ ரவுடிக் கும்பல்
தமிழ்நாடு போலீசால் கொட்டடிப் படுகொலை செய்யப்படுபவர்கள் அஜித்குமார், ஜெயராஷ்-பென்னிக்ஸ் ஆகியவர்களைப் போன்று சாதி, மத, வர்க்க ரீதியாக பின்தங்கியவர்களாகவே உள்ளனர். மேட்டுக்குடி வர்க்கத்தை சேர்ந்தவர்களோ பணக்காரர்களோ போலீசால் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டு கொட்டடிப் படுகொலை செய்யப்பட்டதாக ஒரு நிகழ்வைக் கூட நாம் காண இயலாது. தங்களது அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்டதற்காகவும் பொய் வழக்குகளை ஏற்றுக்கொள்ள வைப்பதற்காகவும் மிகக்குறைந்த தண்டனைக் கொண்ட குற்றச் செயல்களுக்காகவும் இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் ஈவிரக்கமின்றி படுகொலை செய்து வருகிறது.
மேலும், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மக்கள் போலீசின் கொட்டடிச் சித்திரவதைகளால் உடலுறுப்புகள் சிதைக்கப்பட்டு தங்களின் அன்றாட தேவைகளுக்குக் கூட பிறரை சார்ந்திருக்கும்படி முடமாக்கப்படுகிறார்கள். போலீசு மிருகங்களிடம் சிக்கிக்கொள்ளும் பெண்கள் போலீசு நிலையத்திலேயே நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படும் கொடூரங்களும் அரங்கேறுகின்றன. ஆனால், இச்செய்திகள் எந்த ஊடகங்களிலும் வெளியாகுவதில்லை.

மேலும், விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் கை, கால்களை உடைத்து மாவுக் கட்டு போடுவதும், கழிவறையில் வழுக்கி விழுந்து அடிபட்டுவிட்டதாக திமிர்த்தனமாக பொய்யுரைப்பதும் தமிழ்நாடு போலீசுத்துறையில் இயல்பாக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் புழல் சிறைக்கு அனுப்பப்பட்ட கைதிகளில் 300-க்கும் மேற்பட்டோரின் கை, கால்கள் உடைக்கப்பட்டிருப்பதாக யூ-டர்ன் (YouTurn) இணையதளம் கூறுகிறது.
மேலும், யூ-டர்ன் இணையதளத்தின்படி, கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் 21 போலி என்கவுண்டர்கள் (Encounters) போலீசால் நடத்தப்பட்டுள்ளது. இவையனைத்திற்கும் ‘தற்காப்புக்காக சுடுதல்’ என்ற ஒரே கதையே கூறப்படுகிறது. ஆனால், இந்த போலி என்கவுண்டர் மூலம் உண்மையான குற்றவாளிகளைப் போலீசு பாதுகாப்பது மட்டுமின்றி, குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்கப்படுவது போன்ற பொய்யான பிம்பத்தை மக்களிடத்தில் கட்டமைக்க முயல்கிறது. இதன்மூலம் யாரையும் எப்போதும் எங்கு வேண்டுமானாலும் சுட்டுக் கொல்லலாம் என்ற கட்டற்ற அதிகாரத்தை போலீசு நிறுவி வருகிறது.
இவ்வாறு போலீசுக்கு கட்டற்ற அதிகாரங்களை வழங்கிவரும் தி.மு.க. அரசு, கார்ப்பரேட் ஆதரவுத் திட்டங்களுக்கு எதிராகவும் வாழ்வாதார, பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவும் போராடும் மக்களையும் முன்னணியாளர்களையும் போலீசை ஏவி ஒடுக்கி வருகிறது. தனது ஆட்சிக்கு எதிரான குரல்களை நசுக்குவதற்கும் மக்கள் போராட்டங்களை மிருகத்தனமாக ஒடுக்குவதற்கும் சமூக செயற்பாட்டாளர்களை கைது செய்து சிறையிலடைப்பதற்குமான சட்டப்பூர்வ ரவுடிக் கும்பலாக போலீசை பயன்படுத்தி வருகிறது. மக்கள் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுத்தால் தி.மு.க-வின் கூட்டணி கட்சிகளுக்கு கூட நெருக்கடி கொடுக்கிறது.

போலீசுதுறை கிரிமினல்மயமாகி வருவதன் விளைவாக, முன்னர் கனிமவளக் கொள்ளையர்கள், சமூக விரோதிகளுக்கு மூளையாகவும் கூட்டாளியாகவும் செயல்பட்டுவந்த நிலை மாறி, தற்போது குற்ற நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடும் கிரிமினல் கும்பலாக போலீசு மாறியிருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் கனிமவள-இயற்கைவள கொள்ளைக்கு எதிராகப் போராடும் செயற்பாட்டாளர்கள் மீது பொய் வழக்கு சுமத்தி ஒடுக்குவதுடன், திட்டமிட்டே பாதுகாப்பு வழங்காமல் அவர்களை கொலையுண்டு வருகிறது.
ஆதிக்கச் சாதி வெறியர்கள் போலீசுதுறைக்குள் திட்டமிட்டு புகுத்தப்படுவதால் தமிழ்நாட்டில், குறிப்பாக தென்மாவட்டங்களில் தலித் மக்கள் மீதான சாதியத் தாக்குதல்கள், படுகொலைகளில் போலீசு நேரடியாக ஈடுபடுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் பெரம்பலூரில் ஏட்டு ஸ்ரீதர் துணையுடன் தாழ்த்தப்பட்ட இளைஞர் மணிகண்டன் கழுத்தறுத்து கொல்லப்பட்டது; நெல்லையில் ஐ.டி. ஊழியரை போலீசு உதவி ஆய்வாளர்களின் மகன் சுர்ஜித் ஆணவப்படுகொலை செய்தது இதனை நிரூபிக்கின்றது.
அதுமட்டுமின்றி, பாலியல் வக்கிர புத்தி கொண்டவர்கள் போலீசுதுறையில் நிரம்பியுள்ளதால் அண்ணா நகர் சிறுமி பாலியல் வல்லுறவு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, விருத்தாச்சலம் மனநலம் குன்றிய பெண் பாலியல் வன்கொடுமை என அனைத்து வழக்குகளிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரோதமாகவும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவுமே போலீசு செயல்பட்டு வருகிறது.
மாற்றுத் தீர்வு என்ன?
கொட்டடிப் படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள், குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும், போலீசு சித்திரவதை எதிர்ப்பு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்வுகளை முன்வைக்கின்றனர். ஆனால், கொட்டடிப் படுகொலைகள் பற்றிய செய்திகளே வெளிவராத சூழலில், கடுமையான தண்டனைகளும் புதிய சட்டங்களும் இப்பிரச்சினைக்கான தீர்வாகாது.
மேலும், கட்டமைப்பு ரீதியாகவே போலீசு, இராணுவம் உள்ளிட்ட அதிகார வர்க்க உறுப்புகளுக்கு வரம்பற்ற அதிகாரங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷின் காலனியாதிக்க காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த அதிகார வர்க்கக் கட்டமைப்புகள், 1947-ஆம் ஆண்டு போலி சுதந்திரத்திற்குப் பிறகு சிற்சில மாற்றங்களுடன் அப்படியே பெயர்த்தெடுத்து நிர்வகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் மக்கள் மீதான கொடூரமான ஒடுக்குமுறைகள் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதுடன், மக்களிடமிருந்து மேலும் அந்நியமாகி மக்கள்விரோதமாகிக் கொண்டிருக்கின்றன.
போலீசின் இந்த கட்டற்ற அதிகாரம் குறித்து தேர்தல் அரசியல் கட்சிகள் அறிந்திருந்த போதிலும், போலீசின் ஒடுக்குமுறைகளை சட்ட வரம்பிற்குள் நின்று தடுத்துவிட முடியும் என்பதுபோல மக்களிடத்தில் போலியான நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், போலீசு துறையை ஜனநாயக விழுமியங்கள் கொண்டதாக மாற்றாமல் மக்கள் மீதான போலீசின் ஒடுக்குமுறைகளை தடுத்து நிறுத்த முடியாது.
ஆகவே, போலீசு பணிக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்கள் மக்கள் சேவையிலும் சமூகநலப் பணியிலும் ஈடுபட்டிருப்பதை கட்டாயமாக்க வேண்டும்; ஆதிக்கச் சாதிவெறி சங்கங்கள், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகளில் செயல்பட்டுள்ளவர்கள், தொடர்பிலுள்ளவர்கள் போலீசு பணிக்கு தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட வேண்டும்; போலீசு துறையை மக்கள் கண்காணிப்பின்கீழ் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட மாற்றங்களை போலீசு துறையில் மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்ற வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும்.
ஆனால், இந்தியாவில் பாசிசத்தை அரங்கேற்றிவரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பல், மக்களை மென்மேலும் ஒடுக்கி அம்பானி-அதானிகளின் கார்ப்பரேட் கொள்ளையைத் தீவிரப்படுத்துவதற்கு போலீசு கும்பலாட்சியை நிறுவுவதற்கு ஏதுவாக மூன்று குற்றவியல் சட்டங்களை கொண்டுவந்துள்ளது.
எனவே, மக்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான அரசியலமைப்புச் சட்டத்தை கொண்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்று கட்டமைப்பில்தான் மேற்கூறிய மாற்றங்களை நடைமுறைக்கு கொண்டுவர முடியும். எனவே, கொட்டடிப் படுகொலைகள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி போராட்டங்களைக் கட்டியமைப்பதும், அப்போராட்டங்களை பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்பதற்கான பாதையில் வளர்த்தெடுப்பதுமே கொட்டடிப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான ஒரே தீர்வு.
![]()
அமீர்
(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 15, இதழ் 18-19 | ஆகஸ்ட் 1-31, 2000 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அம்பானி – அதானி கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காக இந்தியாவின் இயற்கை வளங்களை சூறையாடி வருகிறது பாசிச மோடி அரசு. ஜி.எஸ்.டி. மூலம் சிறு-குறு வணிகத்தை ஒழித்துக்கட்டுவது தொடங்கி பிற மாநிலங்களின் முதலீடுகளை குஜராத்திற்கு மடைமாற்றுவது வரை இந்திய சந்தையை அம்பானி – அதானிகளுக்கானதாக மாற்றி வருகிறது.
இப்பாசிச பா.ஜ.க-வை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் எதிர்க்கட்சிகளோ மக்கள் நலன் கொண்ட மாற்று அரசியல்-பொருளாதாரத் திட்டங்களை உருவாக்கி பாசிச சக்திகளை எதிர்கொள்வதற்கு பதிலாக, கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க. உடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.
கார்ப்பரேட் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏதுவாக சலுகைகளை வாரி வழங்கியும் நகரமயமாக்கல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியும் வருகின்றன. இதற்காக பழங்குடியின மக்கள், தலித் மக்கள், விவசாயிகளின் நிலங்களை பறித்து அவர்களை அகதிகளாக்குகின்றனர். எதிர்க்கட்சிகளின் இந்த மக்கள் விரோத போக்கிற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் தேவனஹள்ளியில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடந்த விவசாயிகள் போராட்டத்திற்கு கர்நாடக மாநில காங்கிரசு அரசு அடிபணிந்துள்ளது. மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த இவ்வெற்றியை தேவனஹள்ளி விவசாயிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கர்நாடக மக்களும் கொண்டாடி வருகின்றனர்.
ஒடுக்குமுறைகளை கடந்து வெற்றியடைந்த போராட்டம்
கடந்த 2022-ஆம் ஆண்டில் கர்நாடகாவின் பெங்களூரு விமான நிலையத்திற்கு அருகே “உயர் தொழில்நுட்ப விண்வெளி பூங்கா” அமைக்க உள்ளதாக அப்போதைய பா.ஜ.க. அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தேவனஹள்ளி தாலுக்காவின் 13 கிராமங்களிலிருந்து சுமார் 1,777 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான தொடக்கக்கட்ட அறிவிப்பை கர்நாடக தொழிற்துறைப் பகுதி மேம்பாட்டு வாரியம் (KIADB) வெளியிட்டது.
ஏற்கெனவே, பெங்களூரு விமான நிலையம், ஹரலுரு தொழிற்துறைப் பகுதி மேம்பாட்டு திட்டம்-1 உள்ளிட்ட பல்வேறு கார்ப்பரேட் நல திட்டங்களுக்காக தேவனஹள்ளியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கர்நாடக தொழிற்துறைப் பகுதி மேம்பாட்டு வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய கார்ப்பரேட் திட்டங்களுக்காக பெங்களூரு முழுவதும் தங்களது நிலங்களைப் பறிகொடுத்த விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்தும், பலர் இழப்பீடு கூட கிடைக்கப்படாமலும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது விண்வெளி பூங்கா திட்டத்திற்காக 13 கிராமங்களிலிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அங்கு வாழும் 800 குடும்பங்களும் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து அகதிகளாக்கப்படுவர். இதனை உணர்ந்த கிராம மக்கள் “கெ.ஐ.ஏ.டி.பி. நில கையகப்படுத்துதல் எதிர்ப்பு போராட்டக் குழு” என்ற பெயரில் தங்களை அமைப்பாக்கிக் கொண்டு சாதி கடந்து ஒன்றிணைந்து போராடத் தொடங்கினர்.
இந்நிலையில், 2023-ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, போராடும் மக்களை சந்தித்த கர்நாடகாவின் தற்போதைய முதல்வரான சித்தராமையா, காங்கிரசு ஆட்சிக்கு வந்தால் தேவனஹள்ளியில் நில கையகப்படுத்துதலுக்கான அறிவிப்பு திரும்பப் பெறப்படும் என்று வாக்குறுதியளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதியை நிறைவேற்றாமல், பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பை மீறி சட்டவிரோதமாக நிலங்களைப் பறிக்க முயன்றது காங்கிரசு அரசு.
மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் நிலங்களை கையகப்படுத்துவதற்கான இறுதி அறிவிப்பை வெளியிட்டு மக்களின் முதுகில் குத்தியது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
இதற்கிடையே, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக “டெல்லி சலோ” போராட்டத்தை முன்னெடுத்த சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் (எஸ்.கே.எம்.) அங்கமான “சம்யுக்தா ஹோரட்டா கர்நாடகா” என்ற ஜனநாயக சக்திகளின் கூட்டமைப்பு இப்போராட்டத்தில் தலையிட்டது. ஜூன் 25 அன்று “தேவனஹள்ளி சலோ” அணிவகுப்பிற்கு இக்கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது.
போராட்டம் தீவிரமடைவதை உணர்ந்துகொண்ட காங்கிரசு அரசு, அதனை மழுங்கடிப்பதற்காக மூன்று கிராமங்களிலுள்ள பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான 495 ஏக்கர் நிலங்களுக்கு மட்டும் கையகப்படுத்துதலிலிருந்து விலக்களிப்பதாக அறிவித்தது. ஆனால், இது போராடும் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி என்றும் 13 கிராமங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் வரை ஒற்றுமையாகப் போராடுவோம் என்றும் அம்மூன்று கிராம மக்கள் உறுதிபடக் கூறினர்.
அதேபோல், தேவனஹள்ளி சலோ அணிவகுப்பிற்கு முந்தைய நாளில், அப்போராட்டத்தை சீர்குலைப்பதற்காக ஓர் ஏக்கருக்கு 10,771 சதுர அடி வணிக நிலங்களை இழப்பீடாக வழங்குவதாக காங்கிரசு அரசு அறிவித்தது. மேலும், ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பலைச் சார்ந்தவர்களை விவசாயிகளாக சித்தரித்து, அவர்கள் நிலங்களை விற்கத் தயாராக இருப்பது போல மோசடி செய்தது.
ஆனால், கர்நாடக அரசின் அனைத்து சதிகளையும் முறியடித்து, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள், ஜனநாயக சக்திகளின் பங்கேற்புடன் தேவனஹள்ளி சலோ அணிவகுப்பு வெற்றிகரமாக நடைபெற்றது. அணிவகுப்பில் நில கையகப்படுத்துதலுக்கான இறுதி அறிவிப்பை எரித்து, “இந்த அறிவிப்பு இரத்து செய்யப்படாவிட்டால் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம். 24 மணி நேரத்திற்குள் அரசு பதிலளிக்கவில்லை என்றால் தாலுக்கா அலுவலகத்தை இழுத்து மூடுவோம்” என்று கர்நாடக அரசுக்கு மக்கள் கெடு விதித்தனர்.
ஆனால், மக்கள் போராட்டத்தைக் கண்டு பீதியடைந்த காங்கிரசு அரசு, போராடும் மக்கள் மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது. கர்நாடக அரசின் இவ்வொடுக்குமுறைக்கு எதிராக மாநிலம் முழுவதும் மக்கள் போராட்டங்களில் இறங்கினர். நடிகரும் செயற்பாட்டாளருமான பிரகாஷ்ராஜ் தலைமையில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஜனநாயக சக்திகள் பலர் முதல்வர் வீட்டை நோக்கி பேரணி நடத்தினர். ஜூன் 29 முதல் பெங்களூருவின் சுதந்திர பூங்காவில் பல நூறு விவசாயிகள் “பூமி சத்தியாகிரகம்” போராட்டத்தைத் தொடங்கினர்.
இதனையடுத்து, வேறுவழியின்றி, விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலிப்பதற்கு பத்து நாட்கள் அவகாசம் கேட்ட முதல்வர் சித்தராமையா, ஜூலை 15 அன்று நில கையகப்படுத்துதலைக் கைவிடுவதாக அறிவித்தார். இந்த வெற்றியை 13 கிராம மக்களும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்தியா முழுவதுமே கனிமவளச் சூறையாடல், கார்ப்பரேட் லாபவெறித் திட்டங்களை எதிர்த்து உழைக்கும் மக்கள் போரடிவரும் நிலையில், தேவனஹள்ளி விவசாயிகளின் போராட்டம் வெற்றியடைந்திருப்பது போராடும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது.
அதேசமயத்தில், தேவனஹள்ளியில் நில கையகப்படுத்துதலைக் கைவிடுவதாக முதல்வர் சித்தராமையா அறிவித்தபோது, “தேவனஹள்ளி பெங்களூரு விமான நிலையத்திற்கு அருகே அமைந்திருப்பதால் மாநிலத்தில் அனைவரின் வருமானத்தையும் அதிகரிப்பதற்கு இந்நிலம் தேவைப்படுகிறது. சில விவசாயிகள் தங்கள் நிலத்தை கொடுக்க முன்வந்துள்ளனர். அதற்கு மாற்றாக அவர்களுக்கு இழப்பீடும் மாற்று நிலமும் வழங்கப்படும்” என்று குறிப்பிட்டார். இது எதிர்காலத்தில் தேவனஹள்ளி மக்களின் நிலங்களை பின்வாசல் வழியாக பறிக்கும் காங்கிரசு அரசின் சதித்திட்டத்தை வெளிப்படுத்துகிறது. எனவே, தேவனஹள்ளி விவசாயிகள் விழிப்புடன் இருந்து இச்சதிகளை முறியடிக்க வேண்டும். அதற்கு கர்நாடக மாநில உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஆதரவளிக்க வேண்டும்.
பரந்தூரை பாதுகாத்திடுவோம்
தேவனஹள்ளி விவசாயிகள் போராட்டம் தொடங்கிய அதே சமயத்தில்தான், தமிழ்நாட்டில் ‘பசுமை’ விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக பரந்தூர் மக்களின் போராட்டமும் தொடங்கியது.
‘பசுமை’ விமான நிலையத் திட்டத்திற்காக பரந்தூர் உள்ளிட்டு 20 கிராமங்களிலிருந்து 5,746 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த உள்ளதாக தி.மு.க. அரசு அறிவித்தது. விளைநிலங்கள், நீர்நிலைகளை அழித்து மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்த நாசகரத் திட்டத்திற்கு எதிராக 2022-ஆம் ஆண்டில் தொடங்கிய மக்கள் போராட்டம் சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக உறுதியுடன் நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால், போராடும் விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல் விமான நிலையம் அமைப்பது தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது தி.மு.க. அரசு. மேலும், மக்கள் போராட்டத்தைப் போலீசு மூலம் ஒடுக்குவது; மக்களை மிரட்டி நிலங்களை கையகப்படுத்துவது என பரந்தூர் மக்கள் போராட்டத்தை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. “திராவிட மாடல்” என்ற பெயரில் அப்பட்டமான கார்ப்பரேட் மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.
ஆனால், தேவனஹள்ளி மக்களைப் போலவே, நிலத்தின் மீதான தங்களது மரபுரிமையை பற்றி நிற்கும் பரந்தூர் மக்கள் 1,100 நாட்களை கடந்து விடாப்பிடியாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.
கர்நாடகாவில் தேவனஹள்ளி விவசாயிகள் போராட்டத்தில் ஜனநாயக சக்திகள் நேரடியாக பங்கெடுத்தது; முதல்வர் வீடு முற்றுகை போராட்டம் நடத்தியது என ஒருங்கிணைந்த வகையில் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதுதான் அப்போராட்டம் வெற்றியடைந்ததற்கு முக்கிய காரணமாகும்.
இதனை முன்மாதிரியாக கொண்டு தமிழ்நாட்டின் ஜனநாயக சக்திகளும் போராடும் பரந்தூர் மக்களுடன் ஒன்றிணைந்து அவர்களின் கோரிக்கைகளை வெற்றியடையச் செய்வதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டியுள்ளது.
![]()
பானு
(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 15, இதழ் 16-17 | ஜூலை 1-31, 2000 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

உத்தராகண்டின், புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த மாதம் ஜூலை 16-ஆம் தேதி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்திடம் (National Council Of Educational Research And Training – NCERT) இராமாயணம் போன்ற புராணக் கதைகளை மாநில பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஏற்கெனவே, ஜூலை 14-ஆம் தேதி உத்தராகண்ட் அரசு பள்ளிகளின் காலை ‘பிரார்த்தனை’யின் போது, தினமும் ஒரு பகவத் கீதை வசனத்தை சொல்வது கட்டாயமாக்கப்பட்டது. இதன்மூலம், “வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்கிற சனாதன தர்ம நம்பிக்கையை மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள்” என பா.ஜ.க. அரசு தெரிவித்தது.
பா.ஜ.க. அரசின் இந்நடவடிக்கைக்கு மாநிலம் முழுவதுமுள்ள ஆசிரியர் சங்கங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. மத நூல்களை பள்ளிகளில் கற்றுக்கொடுப்பது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சஞ்சய் குமார் தம்தா கூறுகையில், “இந்திய அரசியலமைப்பின் பிரிவு 28(1), அரசின் முழு நிதியுதவி அல்லது உதவி பெறும் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும், எந்தவித மத போதனையும் வழங்கப்படக்கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது. பிரார்த்தனைக் கூட்டங்களின் போது மாணவர்களை கீதை வசனங்களை ஓதச் சொல்வது இந்த அரசியலமைப்பு விதியை மீறுவதுடன் அரசுப் பள்ளிகளில் மதச்சார்பற்ற கல்வி முறையை அச்சுறுத்துகிறது. எங்கள் பள்ளிகளில் பல மதங்கள், சாதிகள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளனர். ஒரு மதத்தின் நூல்களை கட்டாயப்படுத்துவது மற்றவர்களை சங்கடமாகவும் பாகுபாடாகவும் உணர வைக்கும். இது சமூக நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கிய கல்விக்கு எதிரானது” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பை துளியும் பொருட்படுத்தாத மாநில கல்வி இயக்குநர் முகுல் குமார், “கீதையின் போதனைகளானது, சாங்கிய தத்துவம், உளவியல், தர்க்கம், நடத்தை அறிவியல் மற்றும் தார்மீக தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதையும் மதச்சார்பற்ற கண்ணோட்டத்திலிருந்து மனிதகுலத்திற்கு உலகளாவிய நன்மை பயக்கும் என்பதையும் மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.” என்று பாசிச கும்பலின் கட்டாய மத நடவடிக்கையை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.
ஒருபுறம், பள்ளிகளில் பாடத்திட்டத்தை காவிமயமாக்கும் பாசிச கும்பல் மறுபுறம் இஸ்லாமிய மன்னர்களின் வரலாற்றை பாடத்திட்டங்களிலிருந்து நீக்கி வருகிறது. என்.சி.இ.ஆர்.டி. 7-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்திலிருந்த முகலாயர்கள் குறித்த வரலாற்றை நீக்கி, அதனை திருத்தி, 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இணைத்துள்ளது. இப்புத்தகத்தில் முகலாய மன்னர்களான பாபர், அக்பர், மற்றும் ஔரங்கசீப் ஆகியோரை “கொள்ளையர்கள்”, “வெளிநாட்டு படையெடுப்பாளர்கள்” என மாணவர்களிடையே இஸ்லாமிய வெறுப்பை விதைக்கும் வகையில் சித்தரித்துள்ளது.
மேலும், திருத்தப்பட்ட பாடப்புத்தகத்தில் திப்பு சுல்தான், ஹைதர் அலி மற்றும் ஆங்கிலேய-மைசூர் போர்கள் (1767-1799) குறித்தான பகுதியையும் நீக்கியுள்ளது. இதன்மூலம் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரானப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கை மூடிமறைக்கிறது.
இவ்வாறு பாசிச கும்பல் பள்ளிகளில் புராணக் குப்பை கதைகளையும் இஸ்லாமிய வெறுப்பையும் திணிப்பதன் மூலம் மாணவர்களை சிந்தனையற்றவர்களாகவும் மதவெறிப் பிடித்தவர்களாகவும் மாற்றுகிற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
எனவே, கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு பாசிச கும்பலுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் சங்கங்கள், மாணவர் சங்கங்கள் போராட்டங்களை கட்டியெழுப்ப வேண்டும். இல்லையெனில், நாளைய இளைய சமுதாயம் பாசிஸ்டுகளின் மதவெறிக்கு பலியாவதை நம்மால் தடுக்க முடியாமல் போய்விடும்.
![]()
இன்குலாப்
(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 15, இதழ் 13-15 | மே 16-31, ஜூன் 1-30, 2000 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அமெரிக்க – இந்திய காம்பாக்ட் எனப்படும் இராணுவக் கூட்டணி, துரித வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல் (US-India COMPACT – Catalyzing Opportunities for Military Partnership, Accelerated Commerce & Technology) என்ற திட்டத்தை கடந்த சில மாதங்களாக பாசிச மோடி அரசு இந்தியாவில் அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகள், நிதிமூலதனக் கும்பலின் சூறையாடலுக்காக இந்தியாவின் விவசாயம், எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைத் திறந்துவிடும் வகையில் இத்திட்டத்தின் கூறுகள் உள்ளன.
டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றவுடன், கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். அப்போதுதான் இந்தக் “காம்பாக்ட் திட்டம்” இறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க-இந்திய கூட்டுத் தலைவர்களின் அறிக்கை (United States – India Joint Leaders’ Statement) என்ற பெயரில் இத்திட்டத்தின் விவரங்கள் வெள்ளை மாளிகையால் பிப்ரவரி 13 அன்று வெளியிடப்பட்டுள்ளன.
அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாகும் இந்தியா
காம்பாக்ட் திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமான இருதரப்பு வர்த்தகத்தை 2030-ஆம் ஆண்டிற்குள் 500 பில்லியன் டாலராக உயர்த்துவது என்ற இலக்கின் அடிப்படையிலேயே, சமீப மாதங்களாக இரு நாடுகளும் இருதரப்பு ஒப்பந்தத்திற்கான (Bilateral Trade Agreement) பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த ஒப்பந்தத்தில் விவசாய மற்றும் பால் பொருட்களுக்கான இந்திய சந்தையை அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கு திறந்துவிடக் கோரி அமெரிக்க அரசு மோடி அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து வருகிறது. அமெரிக்க அரசின் விருப்பத்திற்கேற்ப நடந்துகொண்டால் கோடிக்கணக்கான விவசாய மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சம் மோடி அரசுக்கு உள்ளது. இதனால் நேரடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல், இந்திய விவசாய மற்றும் பால் பொருட்களுக்கான சந்தையை அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு படிப்படியாகவும் மறைமுகமாகவும் திறந்துவிடுவது என்ற நோக்கத்திலிருந்தே மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

மேலும், விலை அதிகமாக உள்ள போதிலும் அமெரிக்காவிடமிருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி. எரிவாயு கொள்முதலை அதிகரிக்கக்கோரி மோடி அரசை காம்பாக்ட் திட்டத்தின் அடிப்படையில் அமெரிக்க அரசு நிர்பந்தித்து வருகிறது. இதற்கு மோடி அரசும் அடிபணிந்துள்ளது. இதனால் 2024 ஜனவரி-ஏப்ரல் மாதங்களில் 1.69 மில்லியன் டன்னாக இருந்த அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி, 2025 ஜனவரி–ஏப்ரல் மாதத்தில் 6.31 மில்லியன் டன்னாக அதிகரித்து இருக்கிறது. 2026-ஆம் ஆண்டுக்குள் எல்.பி.ஜி. எரிவாயு இறக்குமதியில் 10 சதவிகிதத்தை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்ய மோடி அரசு இலக்கு வைத்துள்ளதாகவும், எரிவாயுக்கான இறக்குமதி வரியை நீக்குவதற்கு பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
அதேபோல, இந்திய அணுசக்தித் துறையில் அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில், கோடிக்கணக்கான மக்களின் உயிரை பணயம் வைத்து இந்தியாவில் சிறிய அணு உலைகளை அமைப்பதற்கு மோடி அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. இதற்கு சாதகமாக சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ள உள்ளது. மேலும், தொலைதொடர்புத் துறையில் எலான் மஸ்க்-இன் ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனத்திற்கு இணைய சேவை வழங்க அனுமதியளித்திருப்பது போன்றவையும் காம்பாக்ட் திட்டத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், இந்தியாவின் காடுகள், மலைகள், கடற்பரப்புக்கு அடியில் புதைந்து கிடக்கும் லித்தியம், கிராஃபைட், கோபால்ட் உள்ளிட்ட அரிய வகைத் தனிமங்களையும் பெட்ரோலிய கச்சா எண்ணெய், எரிவாயுக்களையும் கையகப்படுத்தும் வகையில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றிணைந்து புதிய கூட்டிணைவுத் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக காம்பாக்ட் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அரிய வகைத் தனிமங்களில் ஆதிக்கம் செலுத்துவதற்காக சீனக் கார்ப்பரேட்டுகளுடன் போட்டிபோட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காகவே இத்திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே, பாசிச மோடி அரசு அம்பானி-அதானிகளின் கனிமவளக் கொள்ளைக்காக, “சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை)” திருத்தச்சட்டம், வனப் பாதுகாப்பு திருத்தச் சட்டம் உள்ளிட்டு பல்வேறு சட்டத் திருத்தங்களையும் சுரங்கத்துறையில் அதானியின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

மேலும், நாடு முழுவதும் எங்கெல்லாம் அரியவகைக் கனிமங்கள் புதைந்துள்ளன என்பதை கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து மிகத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. அக்கனிமங்களை வெட்டியெடுப்பதற்கான சுரங்க ஏலங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
சமீபத்தில் கூட, மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை அறிவித்து மக்களின் போராட்டத்தினால் மோடி அரசு அதை நிறுத்தி வைத்திருக்கிறது. சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்குத் தடையாக இருக்கும் மாவோயிஸ்டுகளையும் பழங்குடியின மக்களையும் நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் நரவேட்டையாடி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக காம்பாக்ட் திட்டத்தை மோடி அரசு ஏற்றுக்கொண்டிருப்பதானது, இந்தியாவில் கனிமவளக் கொள்ளை மேலும் தீவிரப்படுத்தப்படுவதற்கான பேராபயத்தைக் கொண்டிருக்கிறது.
அதேபோல, அமெரிக்காவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களை இந்தியாவில் தொடங்க வேண்டும் என்று காம்பாக்ட் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் கிளைகளை கொண்டுள்ள அமெரிக்காவின் பொருளுற்பத்தி மற்றும் தொழில்நுட்ப கார்ப்பரேட் நிறுவனங்களை அமெரிக்காவிற்கு திருப்பி அழைக்கும் ட்ரம்ப் அரசு, அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகளை தொடங்குவதற்கு மட்டும் அனுமதிக்கிறது.
பாசிச மோடி அரசோ, தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் உயர்கல்வித் துறையை கார்ப்பரேட்மயமாக்கும் தன்னுடைய நோக்கத்திலிருந்து அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கையை மோடி அரசு அமல்படுத்தத் தொடங்கியதிலிருந்தே, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதித்து வருகிறது. இப்பல்கலைக்கழகங்களின் கட்டுமானப் பணிகள் முடிவடையாத நிலையிலும் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதியளித்து மக்களின் பணத்தை கோடிக்கணக்கில் சூறையாட உடந்தையாக இருக்கிறது.
அதாவது அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு ஒருபுறம் மூடுவிழா நடத்திக்கொண்டு, பணம் படைத்தவர்கள் மட்டும் தனியார், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் பயில முடியும் என்ற நிலைமையை மோடி அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
மேலும், அமெரிக்க ஆயுத வியாபாரிகளின் நலன்களுக்காக அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றிணைந்து இராணுவக் கூட்டணியை உருவாக்குவது; அதில் அடுத்த பத்தாண்டுகளுக்கு இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது; அமெரிக்காவிலிருந்து ஆயுத ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக அமெரிக்காவின் “சர்வதேச ஆயுத போக்குவரத்து விதிமுறைகள்”-ஐ (ITAR) மறு ஆய்வுக்கு உட்படுத்துவது; கப்பல் மற்றும் டாங்கிகளை தாங்குவதற்கான ஏவுகணைகளையும் போர்க் கப்பல்களையும் இந்தியா கொள்முதல் செய்வது; அமெரிக்க ஆயுத நிறுவனங்கள் இந்தியாவின் மகேந்திரா மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் காம்பாக்ட் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் போராட்டங்களை கட்டியமைப்போம்!
அமெரிக்காவில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ட்ரம்ப்-மஸ்க் கார்ப்பரேட் கும்பலின் மேலாதிக்க நோக்கத்திற்கேற்ப இந்தியாவை மறுகாலனியாக்குவது என்ற நோக்கத்திலிருந்து அமல்படுத்தப்படும் காம்பாக்ட் திட்டமானது, மோடி அரசின் அமெரிக்க அடிமை சாசனமாகவே உள்ளது. அந்தவகையில், ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற கடந்த ஜனவரி மாதத்திலிருந்து காம்பாக்ட் திட்டத்தில் உள்ள கூறுகளை மோடி அரசு அமல்படுத்தி வருகிறது.
அதாவது, அமெரிக்க அரசின் அடாவடித்தனங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மெக்சிகோ, பிரேசில் உள்ளிட்ட சிறிய நாடுகளே எதிர்ப்பு தெரிவித்து எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் போது, ‘56 இன்ச் மார்பு’ கொண்ட மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசோ, அமெரிக்க அரசின் செல்லப்பிராணியைப் போல அதன் காலில் விழுந்து கிடக்கிறது.
கடந்த ஜூலை 30 அன்று கூட, “ஆகஸ்ட் 1 முதல் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்படும்” என்று அமெரிக்க அரசு அடாவடித்தனமாக அறிவித்திருக்கிறது. மேலும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மிரட்டியிருக்கிறது. ஆனால், எப்போதும் போல இந்த வரி விதிப்பிற்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் பேச்சுவார்த்தையின் மூலம் வரியைக் குறைக்கும் நடவடிக்கையிலேயே மோடி அரசு ஈடுபடும்.
மேலும், காம்பாக்ட் திட்டத்தை மோடி அரசு இந்தியாவில் செயல்படுத்தி வருவதில் அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பலின் நலன் அடங்கியிருக்கிறது. சான்றாக, அமெரிக்காவிலிருந்து விவசாய மற்றும் பால் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டால், ஏற்கெனவே விலைவாசி உயர்வு, உரத் தட்டுப்பாடு, விளைச்சலுக்கு உரிய விலை கிடைக்காததால் நொடித்துப் போயிருக்கும் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுவது பன்மடங்கு அதிகரிக்கும். அதனைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களின் நிலங்களை கைப்பற்றி கார்ப்பரேட் விவசாய பண்ணையார்களாக உருவெடுக்க வேண்டும் என்ற சதித்திட்டம் அம்பானி-அதானி கும்பலுக்கு உள்ளது.
ஆகவே, “காம்பாக்ட் திட்டத்திலிருந்து வெளியேறு”, “அமெரிக்காவுடனான அடிமை ஒப்பந்தங்களை கிழித்தெறி” உள்ளிட்ட முழுக்கங்களை முன்வைத்து புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மாபெரும் மக்கள்திரள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியுள்ளது. அத்தகைய போராட்டங்களே இந்திய, அமெரிக்க அரசுகளை பணிய வைக்கும்.
![]()
கதிர்
(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 15, இதழ் 10-12 | ஏப்ரல் 01-30, மே 1-15, 2000 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 15, இதழ் 8-9 | மார்ச் 1-31, 2000 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த ரிதன்யா என்பவர் வரதட்சணைக் கொடுமைத் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன் ரிதன்யா தன்னுடைய தந்தைக்கு அனுப்பிய குரல் பதிவில், “மனதளவிலும் உடலளவிலும் சித்திரவதையை அனுபவித்து வருகிறேன். எல்லோரும் சகித்துக்கொண்டு வாழ சொல்கிறார்கள். என்னால் முடியவில்லை” என்று கதறி அழுந்துகொண்டே கூறும் வார்த்தைகள் கேட்போரின் மனதை உலுக்குகிறது.
ரிதன்யாவின் மரணத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் வரதட்சணைக் கொடுமை சம்பவங்களும் வழக்குகளும் கவனம் பெறத் தொடங்கியுள்ளன. இச்சம்பவங்கள் மறுகாலனியாக்கக் காலகட்டத்தில், வரதட்சணைக் கொடுமைகளும் பெண்கள் மீதான குடும்ப வன்முறைகளும் புதிய பரிமாணம் எடுத்துள்ளதை எடுத்துக்காட்டுகின்றன.
பெண்கள் மீதான குடும்ப வன்முறை
இந்தியாவில் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கை தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மறுகாலானியாக்கக் காலகட்டத்தில் ஆபாச திரைப்படங்கள், போதைக் கலாச்சாரம் காரணமாக ஒட்டுமொத்த சமூகத்திலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் உச்சநிலையை அடைந்துள்ளன. இதன் விளைவாக, பெண்கள் மீதான குடும்ப வன்முறைகளும் மிகவும் கொடூரமானதாக மாறியிருக்கின்றன.
சமீபத்தில், மதுரையைச் சேர்ந்த பூபாலன் என்பவன் வரதட்சணைக் கேட்டு தன் மனைவியை சித்திரவதை செய்ததை சிரித்துக்கொண்டே தன்னுடைய சகோதரியிடம் பகிர்ந்துகொள்ளும் குரல் பதிவு சமூக ஊடகங்களில் பரவி அனைவரிடத்திலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இத்தகைய குரூர மனநிலைக் கொண்ட பூபாலன் ஒரு போலீசு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல், வேலூரில் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டும் வீட்டை எழுதி வாங்கி வரச் சொல்லியும் கணவனே மனைவியை மாடியிலிருந்து தள்ளிவிட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.
இவ்வன்முறைகளில் பெண்களை அடித்து துன்புறுத்துவது மட்டுமின்றி பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதும் அதிகரித்து வருகிறது. 2019-2021 இடையிலான ஆண்டுகளில், 31.2 சதவிகிதப் பெண்கள் இந்தியாவில் குடும்ப வன்முறையை எதிர்கொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில், 5.7 சதவிகிதம் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். உண்மை நிலவரமோ இதனைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக இருக்கும்.
ரிதன்யா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் தன் தந்தைக்கு அனுப்பிய குரல் பதிவில், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். கணவன் குடும்பத்தாரின் கொடுமை தாங்காமல் தன்னுடைய வீட்டிற்கு வந்த ரிதன்யா, நொண்டி நொண்டி நடந்ததாகவும் இடுப்பு அமைப்பே மாறியிருப்பதாகவும் அவருடைய அப்பா கூறியிருக்கிறார். இது இயற்கைக்கு மாறான பல வழிகளில் ரிதன்யா பாலியல் வல்லுறவு செய்யப்பட்டிருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.
அதேபோல், கடந்த ஜூலை மாதம் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர் வரதட்சணைக் கொடுமையால் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இவர் தனது வாக்குமூலத்தில், மாமனாரும் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியாக தெரிவித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் சமூகத்தில் அரங்கேறும்போது அதற்கெதிராக குரல் கொடுக்கும் அளவிற்கு கூட, குடும்பத்திற்குள் பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்பப்படுவதில்லை.
ஏனெனில், பெரும்பான்மையானோர் கணவன் தனது மனைவியிடம் அத்துமீறுவதை வன்முறையாகவோ வல்லுறவாகவோ கருதுவதில்லை. குறிப்பாக, “பெண் என்பவள் ஆணுக்குக் கட்டுப்பட்டவள். அவளுக்குத் தனி உரிமைகள் கிடையாது. அவளும் அடிமையும் ஒன்றே.” என்ற பார்ப்பனிய ஆணாதிக்கக் கருத்துகள் பெண்களை தனது உடைமையாக கருதுவதற்கும் வன்முறையை ஏவுவதற்கும் அடிப்படையாக இருக்கிறது.
திருமணம் என்பதே பெண்கள் மீது பாலியல் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களைத் தொடுப்பதற்கு ஆணுக்கு வழங்கப்படும் சமூக அங்கீகாரமாகத்தான் கருதப்படுகிறது.
எனவேதான், இத்தகைய அத்துமீறல்களை சகித்துக்கொண்டு செல்ல வேண்டும் என்று பெற்றோர்களே பெண்களை வற்புறுத்துகின்றனர். ரிதன்யா தனக்கு நேர்ந்த கொடுமைக் குறித்து, பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்கள் ரிதன்யாவை சகித்துக்கொள்ள சொன்னதற்கும், ரிதன்யாவின் மரணத்திற்குப் பிறகு அவருடைய தந்தை “ஒருவனுக்கு ஒருத்தி என்று என்னுடைய மகள் இருந்துவிட்டாள்” என்று கூறியதற்கும் இந்த பார்ப்பனிய ஆணாதிக்க மனநிலையே அடிப்படை காரணம்.
மேலும், பல கோடி ரூபாய் செலவு செய்து திருமணம் செய்துவிட்டோம், பெண் கணவனுடன் வாழாமல் பிரிந்து வந்துவிட்டால் “குடும்ப கௌரவம்” பறிபோய்விடும் என்ற ஆணாதிக்க-சொத்துடைமைக் கண்ணோட்டத்திலிருந்தும் இத்தகைய குடும்ப வன்முறைகளை பெண்களும் அவர்களது பெற்றோர்களும் சகித்துக் கொள்கின்றனர்.
மறுகாலனியாக்க நுகர்வுவெறி
தீவிரமாகும் வரதட்சணைக் கொடுமை
இந்தியாவில் வரதட்சணைக் கொடுமை எந்தளவிற்கு தீவிரமாக இருந்தது என்பதற்கான சாட்சியம்தான் பெண்சிசுக் கொலை. பெண் குழந்தையை வளர்த்து வரதட்சணைக் கொடுத்து திருமணம் செய்து வைக்க முடியாது என்று பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்துவிடுவர். 1970-களில் தமிழ்நாட்டில் பெண்சிசுக் கொலை தலைவிரித்தாடியது. தற்போதும் அவ்வப்போது பெண்சிசுக் கொலை நடப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இதனை வரதட்சணைக் கொடுமை குறைந்து விட்டதால் பெண் சிசுக்கொலை குறைந்துவிட்டது என்று பார்க்க முடியுமா? உண்மையில், பெண் சிசுக்கொலை நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கருக்கொலையாக பரிணமித்திருப்பதைப் போல, வரதட்சணையின் பரிமாணமும் இன்றைய காலகட்டத்திற்கேற்ப மாறியுள்ளது.
படித்த இளைய சமுதாயம் உருவாகியுள்ள இந்தக் காலகட்டத்தில், வரதட்சணை வாங்கும் பழக்கம் வெகுவாக குறைவதற்குப் பதிலாக, வரதட்சணை என்பது திருமணத்திற்கான நிபந்தணையாக மாறியிருக்கிறது.
இன்றைய காலத்தில் வரதட்சணையாக நகை, பாத்திரங்கள், பெட்டிப் பணம் கொடுப்பதைத் தாண்டி, பெண்ணின் வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைப்பு வைப்பது, நிலம்-வீடு என்ற வகையில் சொத்தாக எழுதிக் கொடுப்பது, மாப்பிள்ளை தொழில் செய்பவராக இருந்தால் அவருக்கு தொழில் ஏற்படுத்திக் கொடுப்பது என்று இருதரப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுதான் திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. இவையெல்லாம் வரதட்சணை இல்லையாம் திருமணப் பரிசாம். ஆம், இன்றைய காலகட்டத்தில் வரதட்சணையானது திருமணப் பரிசாகப் பரிணமித்திருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம், திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கிவரும் இருட்டுக் கடை அல்வா உரிமையாளரின் மகள் கனிஷ்கா, கணவர் வீட்டில் இருட்டுக் கடை உரிமையை வரதட்சணையாக கேட்டுக் கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகாரளித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
உண்மையில், வரதட்சணை என்பதே பெண்களை ஆடு, மாடுகளைப் போல பேரம் பேசி விற்கும் பெண்ணடிமைத்தனமாகும். இதனை சுயமரியாதையுடன் எதிர்த்து நிற்க வேண்டிய பெண்கள் இன்றைய திருமண சந்தையில், தங்களுக்கான வரதட்சணையைத் தாங்களே கேட்டு பெறும் இழிநிலை உருவாகியிருக்கிறது. மேலும், இந்தியாவில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளது என்று சட்டமிருந்தாலும், நடைமுறையில் அவ்வாறு வழங்கப்படுவதில்லை. இதனால் தங்களுக்கான குறைந்தபட்ச சொத்தாக வரதட்சணையை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கும் பெண்கள் தள்ளப்படுகிறார்கள்.
திருமண சந்தை பகாசுரமாக வளர்ந்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் நாளுக்கு நாள் திருமணங்களில் குடி-கூத்தின் பரிணாமங்கள் விரிவடைந்துக் கொண்டு செல்கின்றன. இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகளை நடத்திக்கொடுப்பதற்கென பல நிகழ்ச்சி மேற்பார்வை நிறுவனங்கள் (Event Management) செயல்படுகின்றன. திருமண அரங்குகள், ஆடைகள், நகைகள், உணவு தானியங்கள், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், ஆடம்பர பரிசுப் பொருட்கள், சாராயம் என திருமணத்தையொட்டி மிகப்பெரிய வர்த்தகம் கட்டியமைக்கப்பட்டுள்ளது. இந்தியத் திருமணங்களின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.10.7 லட்சம் கோடி என்று கணக்கிடப்படுகிறது.

இந்தத் திருமணச் சந்தையை ஊக்குவிப்பதற்காகவே “இந்தியாவில் திருமணம்” என்ற திட்டத்தை மோடி அரசு தொடங்கி வைத்துள்ளது. இத்திட்டத்திற்கான விளம்பரமாகவே அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் நடைபெற்றது.
பல லட்சம் கோடி ரூபாய் புழங்கும் இந்தியத் திருமணச் சந்தையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு கார்ப்பரேட்டுகள் போட்டிபோடுகின்றன. தங்களுடைய இலாபவெறிக்காக, வன்னியர், நாடார், செட்டியார் என ஒவ்வொரு சாதியினருக்கும் தனித்தனியாக “மேட்ரிமொனி” (Matrimony) செயலிகளை நடத்துவது தொடங்கி, வரதட்சணையை ஊக்குவிக்கும் வகையிலான நகை, ஆடை விளம்பரங்களை பரப்புவது வரை பார்ப்பனிய சாதி-ஆணாதிக்கப் பிற்போக்குத்தனங்களை கார்ப்பரேட்டுகள் ஊக்குவிக்கின்றன.
பாசிச கும்பலாட்சியில் தீவிரமாகும்
பெண்கள் மீதான வன்முறைகள்
சமூகத்தில் பெண்களுக்கு நடக்கக்கூடிய அநீதிகளை தடுக்கப்பதாகக் கூறிக்கொள்ளும் போலீஸ், நீதித்துறை, இராணுவம் முதலிய அரசு நிறுவனங்கள்தான் பெண்கள் மீதான வன்முறைகளை பாதுகாக்கும் அமைப்பாக உள்ளன என்பதுதான் இந்திய சமூகத்தின் அவலநிலை.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரப்படி, 2017-2022 இடையிலான காலத்தில் சராசரியாக ஆண்டுக்கு 7,000 வழக்குகள் வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படுகின்றன. இதில் வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளில் உத்தரப்பிரதேசம் (4,807) முதலிடத்திலும், பீகார் (3,580) இரண்டாம் இடத்திலும், கர்நாடகா (2,224) மூன்றாம் இடத்திலும் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இவை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டுமே. உண்மையில், பல பெண்கள் குடும்ப மானம், குடும்பத்தினர் மிரட்டல் காரணமாக தங்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகளை வெளியில் சொல்வதே இல்லை. அப்படியே சொன்னாலும் அது குடும்பதிற்குள்ளேயே பஞ்சாயத்து செய்து முடித்து வைக்கப்படுகிறது. அதனை மீறி சிலர்தான் வழக்கு தொடுக்க முன்வருகின்றனர். அப்படி முன்வரும் பல வழக்குகளிலும் போலீசுத் துறையினர் – அது மகளிர் போலீசாக இருந்தாலும் – தம்முள் ஊறியுள்ள ஆணாதிக்கப் புத்தியைக் கொண்டு அக்குடும்பத்திற்கு அறிவுரைக் கொடுத்து கட்டப்பஞ்சாயத்து நடத்தி அனுப்பி வைக்கின்றனர் என்பதே எதார்த்தம்.
தற்போது, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பையும் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கேற்ப மறுவார்ப்பு செய்துவருகிறது. இது, பெண்கள் மீது அரசு நிறுவனங்கள் தொடுக்கும் வன்முறைகளை பல மடங்கு அதிகரித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தண்டனை விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. சான்றாக, 2021-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை விகிதம் வெறும் 26.5 சதவிகிம்தான். அதேபோல், ஆர்.எஸ்.எஸ். அடியாட்கள் திட்டமிட்டு புகுத்தப்படுவதால் காவிமயமாகிவரும் நீதிமன்றங்கள், பெண்களுக்கு எதிராக மனுநீதி அடிப்படையில் தீர்ப்புகளை வழங்கி பெண்களை வஞ்சிக்கின்றன.
கடந்த ஆண்டு, உச்சநீதிமன்றத்தில் திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்முறையை (Marital Rape) குற்றம் என்று அறிவிக்கக்கோரி நடந்த வழக்கில், திருமண பாலியல் வன்முறையை குற்றமாக்குவது மிகக் கடுமையானது என்றும் திருமணமான பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக போதுமான சட்டங்கள் உள்ளன என்றும் கூறி ஒன்றிய பா.ஜ.க. அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவில், 25 பெண்களில் ஒருவர் தங்களது கணவனால் பாலியல் வன்முறையை அனுபவிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில், திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்முறையைக் குற்றமாக்கக் கூடாது என பா.ஜ.க. அரசு வாதிடுவது அதன் பெண்கள்-விரோத சித்தாந்தத்தைப் பட்டவர்த்தனமாக வெளிக்காட்டுகிறது.
அடிப்படையிலேயே பெண்களுக்கு விரோதமான பார்ப்பனியத்தை தனது சித்தாந்தமாகக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் ஆட்சியில், பாசிசமயமாகிவரும் அரசு கட்டமைப்பானது அப்பட்டமாக பெண்களுக்கு எதிரானதாக மாறி வருகிறது. இதனால், பெண்கள் மீதான குடும்ப வன்முறைகள், பாலியல் வன்முறைகள் மென்மேலும் தீவிரமாகும் அபாயம் உள்ளது.
![]()
அப்பு
(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
