privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காவரலாற்றுப் பார்வையில் E = mc2 – வீடியோவும் விளக்கமும்

வரலாற்றுப் பார்வையில் E = mc2 – வீடியோவும் விளக்கமும்

-

முன்னுரை:

emc21905-ம் ஆண்டு இன்றைய தேதியான ஏப்ரல் 11 அன்றுதான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது புகழ் பெற்ற சிறப்பு சார்பியல் தத்துவத்தை வெளியிடுகிறார். அதை நினைவு கூர்ந்து இந்த ஆவணப்பட விளக்க கட்டுரையை வெளியிடுகிறோம். நெடிய இந்த கட்டுரை ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகளை வரலாற்றுப் பார்வையோடு விளக்குகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள், ஒரு சில தனிமனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல, கூடவே அதன் நெடிய பாதையில் அரசியலும், மக்கள் புரட்சிகளும், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களும் எப்படி பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கின்றன என்பதையும் இங்கே புரிந்து கொள்ள முடியும். மதங்களையும், கடவுள்களையும் அருங்காட்சியகத்திற்கு மட்டும் அனுப்ப வேண்டிய அடையாளங்கள் என்பதை ஐன்ஸ்டீனது கண்டுபிடிப்புகள் நமக்கு வலியுறுத்துகின்றன. அறிவியலை கற்பது என்பது அரசியல் போராட்டம், மனித குல வரலாறு கற்பதோடு பிரிக்க முடியாத ஒன்று என இந்த ஆவணப்படம் எடுத்துக் கூறுகிறது. படியுங்கள், நண்பர்களிடம் பகிருங்கள்!

வினவு

___________

வீன இயற்பியலின் தலை சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை பற்றியும் அவருடைய உலகப்புகழ் பெற்ற சமன்பாடான E=mc2 பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கலாம்.

இந்த சமன்பாட்டின் படி ஒரு ரூபாய் நாணயத்தின் மொத்த நிறையையும், திட, திரவ, வாயு மிச்சம் ஏதுமின்றி ஆற்றலாக உருமாற்றம் செய்தால், அதைக் கொண்டு மொத்த தமிழ் நாட்டின் இரண்டு நாட்களுக்கான மின் தேவையை பூர்த்தி செய்துவிட முடியும். இது சாத்தியமா? உண்மையில் இச்சமன்பாட்டின் பொருள் என்ன? அது எப்படி உருவானது? அது மனித வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை நம்மில் வெகுசிலரே அறிந்திருக்கிறோம்.

நோவாவின் “ஐன்ஸ்டீனின் பெரும் சிந்தனை” என்ற ஆவணப்படம் பார்ப்பதற்கு எளியதாக தோன்றும் இந்த சமன்பாட்டின் வரலாற்றையும், அது உருவான கதையையும் நம் சிந்தனையை தூண்டும் விதத்தில் விளக்குகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள், கருதுகோள்கள் ஒரு வெற்றிடத்திலோ அல்லது ஒரு விஞ்ஞானியின் மூளைக்குள்ளிருந்து மட்டும்  உருவாக்கப்படுவதில்லை. மனிதகுலம் பல நூற்றாண்டு காலமாக திரட்டிய அறிவுச் செல்வத்தின் மீது நின்று கொண்டு அறிவியலாளர்களின் கடும் உழைப்பின் மூலம் அவை கட்டியெழுப்பபடுகிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது.

இளம் ஐன்ஸ்டீன்
இளம் ஐன்ஸ்டீன்

E=mc2 என்ற சமன்பாட்டை நினைக்கும் போது ஐன்ஸ்டீனை வெள்ளை முடியும் சுருக்கம் விழுந்த வயதான மனிதராக பலர் உருவகப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் இச்சமன்பாட்டை உருவாக்கிய போது ஐன்ஸ்டீன் வயோதிகர் இல்லை; துடிதுடிப்பும் துள்ளலும் நிறைந்த இளைஞர். காதல், குடும்பம், கல்லூரி வகுப்புகள், வேலை தேடல், அலுவலக நெருக்கடிகள் என்ற சராசரி போராட்டங்களுக்கு மத்தியில்தான் இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்.

அவருக்கு முன் இச்சமன்பாட்டின் ஒவ்வொரு பகுதியையும் உருவாக்கப் போராடிய, பலருடைய வேலையை கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைத்து அவற்றைக் கொண்டு ஒரு கோட்பாட்டு பாய்ச்சலை செய்ததுதான் ஐன்ஸ்டீனின் மேதைமை. இச்சமன்பாட்டின் ஒவ்வொரு பகுதிக்கு பின்னாலும் சாதனை, தோல்வி, சண்டை, பகை, காதல், போட்டி, அரசியல் மற்றும் பழிவாங்கும் கதைகள் உள்ளன.

E = mc2 சமன்பாட்டின் கதை ஐன்ஸ்டீனுக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் ஆற்றல் மாறும் கோட்பாடு கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து துவங்குகிறது.

E – ஆற்றல்

19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் விஞ்ஞானிகள் ஆற்றலை அடிப்படையாக கொண்டு உலகை புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கவில்லை. அவர்கள் காற்றின் சக்தி, கதவு மூடப்படும் விசை, மின்னலின் சக்தி இப்படி ஒவ்வொன்றையும் விசைகளாகவும், சக்திகளாகவும் தனித்தனித் தீவாக ஆய்ந்து வந்தனர். அவர்களைப் பொறுத்தவரை  ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனிமுதலானவை, தனித்தனியாக ஆராயப்பட வேண்டியவை.

அக்காலகட்டத்தில் அறிவியல் என்பது மேன்மக்களுக்கான துறையாகவே இருந்தது. அவர்களுக்கே அறிவியல் கல்வி கற்கவும், ஆய்வுகள் நடத்தவும் வாய்ப்புகள் கிடைத்தது. ஒவ்வொரு சக்தி அல்லது விசையின் பின்னிருந்து இயக்கக் கூடிய, அவை அனைத்தையும் ஒருங்கிணைக்கக்கூடிய ஆற்றல் பற்றிய கருத்தாக்கம் இன்னும் அந்த மேன்மக்களிடையே உருவாகவில்லை. இது அறிவியலின் அன்றைய வரம்பு என்பதோடு கனவான்களின் புத்தார்வ தடைகளும் சேர்ந்த ஒன்று. கல்விக்கும், அறிவியலுக்கும் பிறப்பு காரணமாக அனுமதி மறுப்பில்லை என்ற மேலை நாடுகளிலேயே இதுதான் நிலைமை என்றால் இந்தியாவில் பார்ப்பனியத்தின் பிடியில் அவை வளராமல் சிக்குண்டிருந்தன எனலாம். இந்த பின்னணியில்தான் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு மனிதனின் இயற்கையின் புதிர்களை புரிந்துகொள்ளும் உந்துதல், ஆற்றல் குறித்த அறிவியல் கோட்பாட்டை மாற்றியமைப்பதற்கான தொடக்கமாக அமைந்தது.

மைக்கேல் ஃபாரடே - 1842ல்
மைக்கேல் ஃபாரடே – 1842ல்

ஒரு இரும்புக் கொல்லரின் மகனான மைக்கேல் ஃபாரடே, புத்தகம் பைண்டிங் செய்யுமிடத்தில் பழகுநராக வேலை செய்து வருகிறார். 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழில் புரட்சிக்கு பிந்தைய இங்கிலாந்தில் உழைக்கும் மக்களுக்கு உயர்கல்வி கற்கும் வாய்ப்பு இருக்கவில்லை. அவர்கள் சிறுபட்டறைகளிலும், தொழிற்கூடங்களிலும் தொழில் பழகுனராக சேர்ந்து தொழில் கற்றுக்கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டியிருந்தது. ஃபாரடே பைண்டிங் தொழிலின் திறனை கற்றுக் கொண்டதோடு நில்லாமல், அவர் கைகளுக்கு வரும் எல்லா புத்தகங்களையும் படித்து சுயமாக கல்வி கற்கிறார்.

தனது வேலையை விட அறிவியல் ஆய்வுகளில் ஆர்வம் அதிகம் கொண்டிருந்த ஃபாரடே, தனது சொற்ப வருமானம், ஓய்வு நேரம் அனைத்தையும் சுயகல்வி கற்பதிலும், இயற்கை விஞ்ஞானத்தை அறிந்து கொள்வதிலும் செலவிட்டார். அன்றைய சமூகத்தில் விஞ்ஞானிகள் நட்சத்திர அந்தஸ்து உடையவர்களாக மதிக்கப்பட்டதுடன் அவர்களை சந்திப்பதோ, அவர்களுடைய விரிவுரைகளுக்கு செல்வதோ சாதாரண மக்களுக்கு அரிதாக கிடைக்கும் வாய்ப்பாகவே இருந்தது. இளம் ஃபாரடேயின் உற்சாகத்தையும், பேரார்வத்தையும் கண்ட வாடிக்கையாளர் ஒருவர், பிரபுகுலத்தை சேர்ந்தவரும் அக்காலத்தைய மிகப்பிரபலமான வேதியியலாளருமான சர் ஹம்ஃப்ரி டேவியின் விரிவுரைகளை கேட்பதற்கு ஃபாரடேவுக்கு அனுமதிச்சீட்டு பெற்றுத் தருகிறார்.

ஹம்ஃப்ரி டேவியின் விரிவுரைகளை கேட்ட ஃபாரடே உற்சாகமடைந்து அவரை தனது ஆதர்ச நாயகனாக மதிக்க ஆரம்பிக்கிறார். ஹம்ஃப்ரி டேவியின் விரிவுரைகளில் தான் எடுத்த குறிப்புகளை புத்தகமாக தொகுத்து அதை அவரை நேரில் சந்தித்து பரிசளிக்கிறார். கட்டுப்பாடுகள் மிகுந்த, அறிவுத் தேடலை முடக்கிப் போடும் மற்றும் சுயநலம் மிகுந்த வர்த்தக உலகிலிருந்து தான் விடுபட விரும்புவதாகவும், சுதந்திரமும், முற்போக்கானதும் தனது மனதிற்கினியதுமான அறிவியலுக்கு சேவையாற்ற தனக்கு வாய்ப்பளிக்குமாறும் கோரி டேவியின் உதவியாளராக சேர விண்ணப்பிக்கிறார். டேவி ஆரம்பத்தில் ஃபாரடேவை அவமானப்படுத்தி அவரது கோரிக்கையை நிராகரிக்கிறார். பின்னர் ஆய்வகத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் காயமுற்ற பிறகே தனது ஆய்வுகளில் உதவி செய்ய ஃபாரடேயை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்.

சர் ஹம்ப்ரி டேவி
சர் ஹம்ப்ரி டேவி

அக்காலத்தின் கவர்ச்சிகரமான அதிசயிக்கத்தக்க ஒன்றான மின்கலமும் மின்சக்தியும் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. விசித்திரமான மின்சக்தியை குறித்து அறிந்து கொள்ள அனைத்து விதமான சோதனைகளும் நடத்தப்பட்டு வந்த போதிலும் அதைப் பற்றி இன்னும் சரியாக மதிப்பிடப்பட்டிருக்கவில்லை.

1821-ல் டேனிஷ் (டென்மார்க்) ஆய்வாளர் மின்சாரம் பாயும் மின் கடத்தியின் அருகில் காந்த திசைகாட்டியை கொண்டு செல்லும் போது அதன் ஊசி செங்கோணத்தில் விலக்கப்படுவதை கண்டறிந்தார். மின்கடத்தியின் எந்த பக்கத்தில் வைத்தாலும் ஊசி செங்கோணத்தில் விலக்கப்பட்டது.

உயர்கல்வி கற்ற மேன்மக்களான அப்போதைய அறிவியலாளர்கள் மத்தியில், குழாயினுள் நீர் பாய்வதைப்போல் மின்கடத்தியினுள் மின்சாரம் பாய்வதாக கருத்து நிலவி வந்தது. அப்படித்தான் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது என்று அவர்கள் ஃபாரடே போன்ற ‘தற்குறி’களுக்கு இடித்துரைக்கவும் செய்கின்றனர். ஆனால், ஃபாரடே மின்கடத்தியில் மின்சாரம் பாயும் போது அதை சுற்றிலும் காந்தப்புலத்தை உருவாக்குகிறது எனும் கருத்தை முன்வைத்தார். அக்காந்தப்புலமே காந்த திசைகாட்டியின் ஊசியை விலக்குகிறது என்றும் விளக்கினார்.

அத்துடன், நிலை காந்தத்தின் அருகில் வைக்கப்படும் மின்கடத்தியில் மின்சாரம் பாயும் போது, கடத்தியை சுற்றி உருவாகும் காந்தப்புலத்திற்கும், நிலை காந்தப்புலத்திற்கும் இடையேயான எதிர் வினை விலக்குவிசையை உருவாக்கும் என்பதை கண்டறிந்தார். இதுவே அந்நூற்றாண்டின் மிகப்பெரும் கண்டுபிடிப்பான மின் மோட்டார் ஆகும். இவ்வாய்வே எல்லா இயக்க சக்திகளையும் ஒருங்கிணைக்கும் ஆற்றல் பற்றிய கோட்பாடு உருவாக காரணமாக அமைந்தது.

பிரிட்டனின் உயர் அறிவியல் அமைப்பான ராயல் சொசைட்டியில் – அவ்வமைப்பின் தலைவராக அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஹம்ஃப்ரி டேவி, ஃபாரடேவை கருத்து திருடர் என குற்றம் சுமத்தி ஆய்வறிக்கையை திரும்பப் பெறுமாறு நிர்பந்தித்ததையும் மீறி – ஃபாரடே தனது ஆய்வை சமர்ப்பிக்கிறார்.

ஹம்ஃப்ரி டேவியின் மரணத்திற்கு பின் ஃபாரடே தனது பணிகளுக்கான அங்கீகாரத்தை பெற்றதோடு தனது புகழ்பெற்ற அடுத்த கண்டுபிடிப்பான மின்காந்த தூண்டல் விதிகளை கண்டறிந்தார். அதாவது, மின்கடத்தியை சுற்றியுள்ள காந்தப்புலம் மாறுதலடையும் போது கடத்தியுள் மின்சாரத்தை உருவாக்கும் என்பதை கண்டறிந்தார்.

இவ்விரு கண்டுபிடிப்புகளும், மின்சக்தியும், காந்தசக்தியும் ஒன்றை ஒன்று சார்ந்தியங்குகின்றன என்பதையும் ஒன்று மற்றொன்றை தூண்டுகிறது என்பதையும் வெளிக்கொணர்ந்ததுடன், ஆற்றல் அழிவின்மை விதி உருவாக காரணமாக அமைந்தன.

ஃபாரடேவின் வாழ்க்கையைப் பற்றிய சித்திரத்தைத் தொடர்ந்து ஐன்ஸ்டீன் ஆற்றல் பற்றிய இயற்பியலில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டதை இந்தப் படம் விவரிக்கிறது.

குழந்தை ஐன்ஸ்டீன்
குழந்தை ஐன்ஸ்டீன்

ஐன்ஸ்டீனின் குழந்தைப்பருவத்திலிருந்தே அவருக்கு நம் கண்களுக்கு தெரியாத மின்சக்தி, காந்தசக்தி போன்றவற்றின் மீது கவர்ச்சி ஏற்பட்டது. அவரது பள்ளி மற்றும் கல்லூரிப்பருவத்தில் இயற்பியல், கணிதம், தத்துவம் ஆகிய துறைகளில் மட்டுமே ஆர்வம் காட்டினார். அவரது பள்ளி, கல்லூரி பேராசிரியர்களை பொருத்தமட்டில் உலகின் எல்லா ஆற்றலும் – சக்தியும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு விட்டன.

ஆனால், ஐன்ஸ்டீன் பின்னாட்களில், ஒரு புதிய, கண்டறியப்படாத மீப்பெருமளவிலான ஆற்றலை பொருட்களின் இதயமான அணுவில் கண்டறிந்து அவர்களுடைய கருத்து தவறென்பதை நிருபிக்கப்போகிறார்.

E=mc2 சமன்பாட்டில் M என்பது Mass – நிறையை குறிக்கிறது. இதை பற்றி அறிந்து கொள்ள ஐன்ஸ்டீன் பிறந்ததற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நிலபிரபுத்துவ அரசு அல்லது எதேச்சதிகார முடியாட்சியை எதிர்த்த மக்கள் புரட்சி (முதலாளித்துவ புரட்சி) காலகட்டத்திலான பிரான்சுக்கு செல்லவேண்டும். அதுவரை திருச்சபைக்குள் அடைபட்டுக்கிடந்த அறிவியலை வெளிக்கொணர்ந்து ஒவ்வொரு துறையையும் பகுத்தறிவின் மூலம் பிரித்தாய்ந்து வளர்த்தெடுத்த காலம் அது. இந்தியாவில் அத்தகைய அரசியல் புரட்சி நடப்பதற்கு பார்ப்பனியம் பெரும் தடையாக இருந்ததால் இங்கே அறிவியல் வளரவில்லை மட்டுமின்றி காலனி ஆதிக்கமும் சடுதியில் நிலைநாட்டப்பட்டது.

பிரான்சில் பிரபுகுலத்தை சேர்ந்த அன்டோன் லவாய்சியர், பிரபலமான வேதியலாளரும், மன்னர் பதினாறாம் லூயி-யின் வரிவசூலிக்கும் அதிகாரியும் ஆவார். வரி வசூலை பெருக்குவதற்கு பாரிஸ் நகரத்தைச் சுற்றி சுவரெழுப்பி நகரத்தினுள் நுழையும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி வசூலிக்கும் முறையை கொண்டு வந்து மக்கள் மத்தியில் ‘இழி’புகழ் ஈட்டிய பணியை செய்தவர். ஆனால், அவரது முக்கிய பங்களிப்பு வேதியல் துறையில், வேதி வினைகளில் பொருட்களின் நிறை மாறாமல் இருக்கும் கோட்பாட்டை நிரூபிப்பதில் இருந்தது.

அவர் மொத்த இயற்கையும் மூடிய அமைப்பாக இருப்பதையும், வேதியல் நிலைமாற்றங்கள் அனைத்திலும், எந்தப் பொருளின் நிறையும் அழிவதுமில்லை, புதிதாக உருவாவதுமில்லை என்பதை ஆய்வுக்கூடத்தில் நிருபித்துக் காட்டினார். அவருடைய ஆய்வுக்கூடத்தில் செஞ்சூட்டிலிருக்கும் இரும்புக் குழாயின் வழியாக நீராவியை செலுத்தி மறுபுறம் அதை சேகரித்து குளிர்வித்தார். (அதாவது இரும்புக் குழாயை துருப்பிடிக்க வைக்கும் வேதி வினையை நிகழ்த்தினார்).

சூடேற்ற பயன்படுத்திய நீரின் நிறைக்கும், இறுதியில் குளிர்வித்து பெறப்பட்ட நீரின் நிறைக்கும் இருந்த வித்தியாசம் வேதி வினையின் போது வெளியான வாயுவின் நிறை மற்றும் இரும்பு குழாயின் அதிகரித்த நிறையின் கூட்டுத்தொகைக்கு சமமாக இருந்தது. இச்செயல் முறையை பின்னோக்கி – தலைகீழாக – செய்து காட்டி தனது கோட்பாட்டை நிரூபிக்க அவர் முயன்றார்.

லவாய்சியர்
அன்டோன் லவாய்சியர்

லவாய்சியரின் சிறப்பு துல்லியமான அளவீடுகளிலும், தரவுகள் அனைத்தையும் முழுமையாக சேகரித்து ஆய்வு செய்யும் நேர்த்தியுமாகும். லவாய்சியர் வரிவசூல் அதிகாரியாக ஈட்டிய செல்வம் அனைத்தையும் தனது அதிதுல்லியமான ஆய்வுக்கூடத்தை மேம்படுத்துவதற்கே செலவிட்டுக் கொண்டிருந்தார். லவாய்சியரின் ஆய்விலிருந்து எந்த பொருளும் தப்பவில்லை.

அவருடைய கோட்பாடு பொருள் முதல்வாதத்திற்கு நிரூபணமாகவும், எல்லாப் பொருளும் எல்லா வகையான நிலைமாற்றங்களிலும் வேறொன்றாக மாறுவதாகவும், அவற்றின் அடிப்படை துகள் (பருப்பொருள்) அழிவதில்லை என்ற நிறைமாறாக் கொள்கை (நிறை அழிவின்மை கொள்கை) உருவாகவும் காரணமாக அமைந்தது.

அவருடைய பங்களிப்பு விஞ்ஞானத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது எனினும், அப்போதைய சமூக சூழலில் உயர் பிரபுகுலத்தோர் சமூகத்தின் மீது கேள்விக்கிடமற்ற அதிகாரம் வகித்ததுடன் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வாய்ப்புகளை ஏகபோகமாக ஒதுக்கிக் கொண்டனர். ஆனால், இந்த ஆதிக்கத்தை எதிர்த்த பரந்து பட்ட மக்களின் போராட்டமும் வலுப்பெற்று வந்தது.

ஜோன் பால் மாரட் என்ற உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த அறிவியல் ஆர்வலர் நெருப்பின் துகள்களை திரையில் படம்பிடிக்கும் கருவியை தாம் கண்டறிந்துள்ளதாக லவாய்சியரிடம் வருகிறார். மாரட்டின் சோதனைச்சாலை வாய்ப்புகள் கிடைக்கப்பெறாத வர்க்க பின்னணியையும், அறிவியல் ஆர்வத்தையும் கணக்கில் கொள்ளாத லவாய்சியர், நெருப்பின் துகளை பிடித்து அதை துல்லியமாக அளவிட்டிருந்தால் மட்டுமே மாரட்டின் கண்டுபிடிப்பை தான் கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியும் என்று அவரை அலட்சியப்படுத்தி அனுப்பி விடுகிறார்.

1789-ல் மகத்தான பிரஞ்சு புரட்சி நடக்கிறது. எதேச்சாதிகாரத்தின் தலைகளை மக்களும் புரட்சியாளர்களும் கில்லட்டினால் வெட்டியெறிகின்றனர். இப்போது ஜேகோபின் புரட்சியாளர்களில் ஒருவராக இருக்கும் ஜோன் மாரட், வரி வசூலிக்கும் அதிகாரியாக மக்களை ஒடுக்கிய லவாய்சியருக்கு சம்மன் அனுப்ப, லவாய்சியரும் கில்லடினுக்கு தப்பமுடியவில்லை.

சமூக அலைவீச்சில் அடித்துச் செல்லப்பட்டு குறுக்கப்பட்ட லவாய்சியேவின் வாழ்வைத் தொடர்ந்து ஐன்ஸ்டீனை ஒளியைப் பற்றி சிந்திக்க வைத்த நிகழ்வுகளை பார்க்கிறோம்.

பேராசிரியர் ஃபாரடே
பேராசிரியர் ஃபாரடே (முதிய வயதில்)

ஐன்ஸ்டீனின் இளம்பருவத்தில் அவரை அதிகம் கவர்ந்த, அவர் அதிகம் சிந்தித்து கொண்டிருந்த விசயம் ‘ஒளி’யைப் பற்றியது. கல்லூரி நாட்களில் அவர் தனது நண்பர்களுடன் மட்டுமின்றி தனது காதலியான மிலெவா மாரிக்குடனும் ஒளியைப் பற்றியும் அதன் வேகத்தை பற்றியும் விவாதிப்பதில் நேரத்தை செலவிடுகிறார். ஐன்ஸ்டீனின் ஒளியை பற்றிய பேரார்வம், பின்னர் ஆற்றலையும், பருப்பொருளையும் (நிறை) ஒருங்கிணைத்து மனிதகுலத்தின் பிரபஞ் பார்வையையே மாற்றியமைத்தது.

E=mc2 சமன்பாட்டின் அடுத்த பகுதி c என்பது ஒளியின் திசைவேகத்தைக் குறிக்கிறது. 19-ம் நூற்றாண்டிற்கு வெகுகாலத்திற்கு முன்னரே அறிவியலாளர்கள் ஒளியின் திசைவேகத்தை செயல்முறை அளவீடுகள் மூலம் கணக்கிட்டிருந்தனர். உலகின் அறியப்பட்ட அனைத்திலும் அதிவேகமாக பாய்வது ஒளி. அதன் வேகம் வினாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர்.

ஹம்ஃப்ரி டேவியின் மரணத்திற்கு பிறகு ஃபாரடே, பேராசிரியர் ஃபாரடேவாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், மின்சக்தியும், காந்தசக்தியும் மின்காந்த அலைகள் என்ற ஒரே ஆற்றலின் இரு வடிவங்கள்தான் என்ற அவரது கருதுகோளையும், ஒளியும் அதே மின்காந்த அலையின் ஒரு வடிவம்தான் என்பதையும் அறிவியல் உலகம் ஏற்க மறுத்தது. தன்னுடைய கருதுகோளை நிரூபிக்கத் தேவையான உயர்கணித புலமை ஃபாரடேவிடம் இருக்கவில்லை.

சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்னர் வயது முதிர்ந்த ஃபாரடேவின் உதவிக்கு வருகிறார் ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல். உயர்கணிதம் கற்ற இளம் பேராசிரியர் மேக்ஸ்வெலும் ஃபாரடேவும் வயது வரம்பைத் தாண்டிய நண்பர்களாயினர். மேக்ஸ்வெலின் புதிய உயர்கணித சமன்பாடுகள் மின்விசையும் காந்தவிசையும் ஒன்றையொன்று சார்ந்தும் ஒன்று மற்றொன்றை தூண்டுவதாகவும், அவை மின்காந்த அலைகள் என்ற ஒரே ஆற்றலின் கூறுகள் என்பதை உறுதி செய்தன. அம்மின்காந்த அலைகள் ஒரு குறிப்பிட்ட திசைவேகத்தில் ஒன்றையொன்று தூண்டி பரவுவதாக அச்சமன்பாடுகள் உறுதிசெய்தன. அவ்வேகம் ஒளியின் திசைவேகமான வினாடிக்கு 3லட்சம் கிலோமீட்டர் என்பதை மேக்ஸ்வெலின் சமன்பாடுகள் நிரூபித்தன. இவ்வகையில் ஃபாரடேயின் மின்காந்த அலை என்ற கருது கோளும், ஒளியும் மின்காந்த அலையின் ஒரு வடிவமென்பது கணிதவியலால் உறுதி செய்யப்பட்டது. மேலும், மேக்ஸ்வெல்லின் சமன்பாடுகள் ஒளியின் வேகம் அளக்கப்படும் ஆதாரத்தைப் பொறுத்தும், நிலைமத்தொகுதிகளை (Inertial Frame) பொறுத்தும் வேறுபடா மாறிலி என்று முன் வைத்தது.

இப்போது ஒளியின் வேகம் எந்த நிலையிலும் மாறுவதில்லை என்ற மேக்ஸ்வெல் கோட்பாட்டை சார்பியல் தத்துவமாக வளர்த்தெடுக்கும் நிகழ்முறை ஐன்ஸ்டீனின் வாழ்வில் எப்படி உருவாகிறது என்பதை பார்க்கலாம்.

ஐன்ஸ்டீன்
ஐன்ஸ்டீன்

ன்ஸ்டீன் தான் பார்க்கக்கூடிய அனைத்தையுமே ஒளியின் பண்புகளுடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ள முற்பட்டார். உதாரணமாக ஆற்றில் படகு நீரைக் கிழிப்பதால் ஏற்படும் அலைகள். படகும் அலைகளும் ஒரே வேகத்தில் செல்வதால் படகில் அமர்ந்திருகும் பயணியைப் பொறுத்தமட்டில் நீரலைகள் நிலையாக இருக்கிறது. கரையிலிருந்து பார்க்கும் பார்வையாளரோ அலைகள் படகின் வேகத்தில் நகர்வதாக காண்பார். ஒளியுடன் இதை ஒப்பிட்டால், நாம் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது நம் முன் இருக்கும் கண்ணாடிக்குப் போய்ச் சேரும் ஒளி திரும்பி நம்மை வந்து அடையாமலே போய் விட, கண்ணாடியில் நமது உருவம் தெரியாமல் இருக்கும். இது எப்படி சாத்தியம்?

மேக்ஸ்வெல்லின் சமன்பாடுகளின்படி படி ஒளியின் வேகத்தில் நாம் பயணித்தாலும் ஒளியின் c என்ற அளவை விட குறையாத வேகத்தில் நம்மை விட்டு விலகிச் சொல்லும். மற்ற அறிவியலாளர்கள் ஏற்றுக் கொள்ளாத இந்த கோட்பாட்டை அங்கீகரிப்பதன் மூலம் ஐன்ஸ்டீன், பருப்பொருள் (நிறை), ஆற்றல், ஒளியின் வேகம் இம்மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் மிகை யதார்த்த (Surreal) அண்டத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார்.

E=mc2 என்ற சமன்பாட்டில் அடுத்து பார்க்க வேண்டியது கணிதக்கூறான நிறையை வேகத்தின் வர்க்கத்தால் (c Squared) பெருக்குவதை பற்றி. பிரெஞ்சு புரட்சி ஆரம்பிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர், அறிவியலாளர்கள் பொருட்களின் இயக்கத்தை அளவிடவும் வரையறுத்துக் கூறவும் முயன்று வந்தனர்.

18-ம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ பிரான்சில் உயர்குலத்தைச் சேர்ந்த எமிலி டு சாட்லே என்ற பெண் அடுத்த 150 ஆண்டுகளில் கூட பெரும்பாலான பெண்களுக்கு வழங்கப்படாத சுதந்திரமும், வாய்ப்புகளும் கிடைக்கப்பெற்றார். சிறுவயது முதலே அறிவு தேடலில் நாட்டம் கொண்டிருந்த எமிலி, அறிவியல், உயர்கணிதம், தத்துவத்துறைகளில் சிறப்பான பயிற்சியை பெற்றார். பிரான்சின் பிரபல கணிதவியலாளரும், நியூட்டன் இயற்பியல் வல்லுனருமான பியர் டி மாபெர்டசிடம் (Pierre de Maupertuis) உயர்கணிதம் கற்கிறார்.

பிரஞ்சு இராணுவ அதிகாரி ஒருவரை மணந்த எமிலியைச் சுற்றி அப்போதைய அறிவுஜீவிகள் கூட்டம் நண்பர்களாகவும் வழிகாட்டியாகவும் இருந்தனர். பிரஞ்சு புரட்சியின் வித்தகர்களில் ஒருவரும் கவிஞருமான வால்டருடன் எமிலிக்கு நெருங்கிய நட்பு இருந்தது. முடியரசையும், திருச்சபையையும் கடுமையாக விமர்சித்ததால் வால்டர் இரு முறை சிறை தண்டனைக்குள்ளாகிறார். ஒரு முறை இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்படுகிறார். நாடு திரும்பும் வால்டருக்கு எமிலியும் அவரது கணவரும் அடைக்கலம் தருகின்றனர். அன்றைக்கு அறிவியலாளர்களும் அரசியல் புரட்சி ஆர்வமும் பிரிக்க முடியாத படி இருந்ததை இது காட்டுகிறது.

எமிலி டூ சாட்லே
எமிலி டூ சாட்லே

நியூட்டனின் இயக்கம் பற்றிய பிரபலமான கட்டுரையான பிரின்சிபா (Principia) வை எமிலி பிரஞ்சு மொழியாக்கம் செய்கிறார். இன்று வரை பிரான்சின் கல்வி நிலையங்களில் எமிலியின் மொழி பெயர்ப்பே பாடப்புத்தகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நியூட்டனின் கோட்பாட்டின்படி, ஒரு பொருளின் இயக்க ஆற்றல், அப்பொருளினது நிறையின் மடங்கு திசைவேக அளவு (E=mv) இருக்கும். ஆனால், ஜெர்மனியை சேர்ந்த கோட்ஃபிரைட் லெப்னிஸ் (Gottfried Leibniz) ஒரு பொருளின் இயக்க ஆற்றல், அப்பொருளின் நிறையின் திசைவேகத்தின் இருபடி மடங்காக (E = mv2) இருக்கும் என்று முன்மொழிந்தார். அதை பெரும்பாலான அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

கோட்ஃபிரைடின் கோட்பாட்டின் மீது ஈர்ப்படைந்த எமிலி, நியூட்டனின் விதியை சந்தேகிக்க ஆரம்பித்தது, அவருடைய வழிகாட்டிகளான மேதைகளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. உண்மை என்பது நடைமுறையில் சோதித்தறியப்பட்டு நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்று எனும் அறிவியல் அணுகுமுறையின்படி எமிலி கோட்ஃபிரைடின் கோட்பாட்டை பரிசோதனை மூலம் உறுதி செய்கிறார். 1740-ம் ஆண்டு மிகப் பிரபலமானதும், சர்ச்சையைக் கிளப்பியதுமான இயற்பியலின் நிறுவன விதிகள் (Institutions of Physics) என்ற கட்டுரையை வெளியிடுகிறார்.

“பெண்ணாகப் பிறந்த மிகச்சிறந்த ஆண்மகனென்று” எமிலியைப் பற்றி வால்டர் வருணித்தார். எமிலி அவருடைய 43-ம் வயதில் கருவுற்று குழந்தையைப் பெற்றெடுத்த பின் நோய்தொற்றினால் உயிரிழந்தார். தன் காலத்தின் தளைகளை உடைத்துக் கொண்டு அறிவியல் தேடலில் ஈடுபட்டு அறிவியலுக்கு அழியா பங்காற்றிய முன்னோடிகளில் ஒருவராக எமிலி தூ சாட்டலே விளங்குகிறார்.

இப்போது, ஐன்ஸ்டீன் எப்படி ஆற்றலையும், நிறையையும் இணைத்து 20-ம் நூற்றாண்டின் நவீன அறிவியலுக்கு அடித்தளம் இடுகிறார் என்று பார்க்கலாம்.

1903-ம் ஆண்டு தன்னுடன் பயின்ற மிலெவா மாரிக்கை மணந்து கொண்ட ஐன்ஸ்டீன் பல்கலைக் கழகங்களில் வேலை தேடுவதற்கு தேவையான பரிந்துரைகளை அவரது பேராசிரியர்கள் யாரும் தரத் தயாராக இல்லாத நிலையில் சுவிட்சர்லாந்தில் வடிவுரிமை அலுவலகத்தில் ஒரு கீழ்நிலை எழுத்தராக வேலை செய்து பொருள் ஈட்டுகிறார். மரபுகளை உடைத்துக் கொண்டு ஒரு துறையின் இயற்பியல் விதியை இன்னொரு துறைக்கு பொருத்தி இயற்கையின் அடிப்படை இயக்க விதிகளை, அதாவது இப்பிரபஞ்சத்தை படைத்த கடவுளின் சிந்தனையை அறியும் தேடலில் இருக்கும் ஐன்ஸ்டீனுக்கு பதவி உயர்வு, கூடுதல் ஊதியம், குடும்ப வாழ்க்கை, துணைவியின் குறிக்கோள்கள் அனைத்துமே அற்ப விசயங்களாகப்படுகின்றன. எழுத்தர் வேலையில் கவனத்தை செலுத்தாததால் பதவி உயர்வு மறுக்கப்படுகிறார். குடும்பச் சுமை தன்னுடைய சுயத்தையும் மேல் கல்வி கற்கும் வாய்ப்பையும் முடக்கிப் போடுவதை உணரும் மிலெவா, ஐன்ஸ்டீனுக்கு ஊதிய உயர்வு கிடைக்காமல் போனதைக் கேட்டு ஆத்திரப்படுகிறார். அவர்களுடைய திருமண வாழ்க்கை முரண்பட ஆரம்பிக்கிறது.

Albert_Einstein_(Nobel)ஐன்ஸ்டீன் தன்னுடைய நெருங்கிய நண்பரான மிக்கேல் பெஸ்ஸொவுடன் நகரில் உலாவச் செல்லும் போது வெவ்வேறு தொலைவிலிருக்கும் கோபுர கடிகாரங்களிலிருந்து வரும் ஒளி தங்களை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரத்தை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது மிக முக்கியமான நுண்ணறிவுப் புரிதலை அடைந்தார்.

மேக்ஸ்வெலின் சமன்பாடு முன்னறிவித்து ஒளியின் வேகம் மாறாதது என்பதை ஏற்றுக் கொண்டு நாமறிந்த மற்ற எல்லா நிகழ்வுகளையும் அத்துடன் பொருத்த முயன்றார். அப்படி பொருத்துவதற்கு இயங்கும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க நேரம் குறுக்கப்பட வேண்டும் என்று அவர் உணர்ந்தார்.

அது வரை காலம் என்பதை தனிமுதலான ஒன்றாக அதாவது காலம் என்பது கடவுளின் கையிலிருக்கும் கடிகாரத்திலிருப்பதை போல் எல்லா இடங்களுக்கும் மாறாத நிலையான ஒன்றாக அறிவியலாளர்கள் கருதி வந்தனர்.

ஒரு பொருள் ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க அப்பொருளின் காலம் சுருங்கிக் கொண்டே போவதால்தான் ஒளிஅலை அதனின்று வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் என்ற மாறா வேகத்தில் விலகிச் செல்கிறது என்று ஐன்ஸ்டீனின் முன் வைத்தார். 1905-ம் ஆண்டு ஐன்ஸ்டீன் ஐந்து மிக முக்கியமான ஆய்வறிக்கைகளை வெளியிட்டார். அவற்றுள் நான்காவது ஆய்வறிக்கையில் விளக்கப்பட்ட ‘சிறப்பு சார்பியல் தத்துவத்தின்’ (Special Relativity) படி ஐன்ஸ்டீனின் பிரபஞ்சத்தில் தனிமுதலான மாறிலி (constant) காலமோ, வெளியோ அல்ல. ஒளியும், அதன் வேகமும் தான் மாறிலியாகும்.

வேகமாக செல்லும் ரயில் வண்டியை உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் வேகத்தை கூட்ட ஆற்றலை அதாவது மேலும் மேலும் கூடுதல் எரிபொருளை போட்டுக் கொண்டே செல்கிறோம். அதன் வேகம் ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க ஒளி அதை விட்டு மாறா வேகமான வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டரில் விலகிச் செல்லும், ரயில் வண்டியினுள் காலம் சுருங்கும் எனில் நாம் உயர்த்திக்கொண்டே செல்லும் ஆற்றல் எங்கே செல்கிறது?

E = mc2

அது நிறையாக மாறுகிறது. ஆம் ஆற்றல் பருப்பொருளாக மாறுகிறது. ஆற்றலும் பொருளும் ஒன்றை ஒன்று சாராத தனிமுதலானவை அல்ல. ஆற்றல் பொருளாக மாறும், பொருள் ஆற்றலாக மாறும், பொருளையும் ஆற்றலையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது.

ஒரு பொருளில் உறைந்திருக்கும் ஆற்றலை கணக்கிட அதன் நிறையுடன் ஒளியின் வேகமான 3 லட்சம் மீட்டர் என்பதன் “வர்க்க”த்தை (அதாவது 9 ஆயிரம் கோடியை) பெருக்க வேண்டும். அவ்விதத்தில் பருப்பொருள் (அணு) ஒவ்வொன்றும் உறைந்திருக்கும் ஆற்றலின் சேமக்கலனாக உள்ளது. ஒரு பேனாவின் நிறை முழுவதையும் ஆற்றலாக மாற்றினால் அது அணுகுண்டு வெடிப்பதற்கு சமமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒரே ஆண்டில் இயற்பியல் உலகைக் குலுக்கிப் போடக் கூடிய 5 ஆய்வறிக்கைகளை வெளியிட்ட ஐன்ஸ்டீனின் சாதனைக்கு எதிர்வினையாக என்ன நடந்தது? எதுவுமே நடக்கவில்லை என்பதுதான் பதில். ஐன்ஸ்டீனின் சராசரி, காப்புரிமை அலுவலக எழுத்தர் வேலையும், சச்சரவுகள் நிறைந்த திருமண வாழ்வும் தொடர்ந்தன. அடுத்த 4 ஆண்டுகளில் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் குறித்து ஒவ்வொன்றாக கடிதங்கள் வர ஆரம்பித்தன. அவை அனைத்துக்கும் ஐன்ஸ்டீனை பொறுமையாக பதில் எழுதினார். இறுதியில் மேக்ஸ் பிளாங்க் என்ற முக்கியமான விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் ரசிகர் மன்றத்தின் ஒரே உறுப்பினராக சேர்கிறார். அவரது உதவியால் ஐன்ஸ்டீன் ஜூரிக் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பதவி நியமனம் பெறுகிறார்.

ஐன்ஸ்டீனின் வெற்றி அவரது திருமண வாழ்க்கையின் தோல்வியாக முடிந்தது. 1919-ம் ஆண்டில் ஐன்ஸ்டீன், மிலேவாவை விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்து கொண்டார்.

E=mc2 இயற்பியல் உலகின் புனிதக் கோட்பாடாக மாறியது. அணுக்களில் பூட்டப்பட்டிருக்கும் ஆற்றலை விடுவிப்பதற்கு குறைந்தது 100 ஆண்டுகள் பிடிக்கும் என்று ஐன்ஸ்டீன் கருதினார். ஆனால், அவர் இரண்டாம் உலகப் போரையும், ஹிட்லரின் ஜெர்மனியில் பணியாற்றிய ஒரு யூதப் பெண்ணின் மேதமையையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கவில்லை.

1907-ம் ஆண்டு ஆஸ்திரியவைச் சேர்ந்த 28 வயதான யூதப் பெண் லிசா மைட்னர் கதிரியக்கத் துறையில் ஆய்வு மேற்கொள்வதற்காக பெர்லின் நகருக்கு வருகிறார். அன்றைய ஜெர்மனியில் பல்கலைக்கழகங்களும், ஆய்வு நிறுவனங்களும் பெண் ஆய்வாளர்களை பணிக்கமர்த்துவதில்லை.

ஆட்டோ ஹான்
ஆட்டோ ஹான்

ஜெர்மானிய வேதியலாளர் ஆட்டோ ஹான், லிசாவுக்கு உதவ முன்வருகிறார்.  கதிரியக்கம் பற்றிய தனது ஆய்வில் லிசாவை சககூட்டாளியாக சேர்த்துக் கொள்கிறார். 1912ல் அவ்விருவரும் கைசர் வில்ஹெல்ம் (Kaiser Wilhelm) ஆய்வு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். பல்கலைக் கழகத்தின் பிற பேராசிரியர்கள் லிசா மைட்னரை தொடர்ந்து புறக்கணித்து அவமதிக்கின்றனர். ஆனால் ஆட்டோ ஹானுடனான நட்பும் இயற்பியல் மீதான வேட்கையும் அவரை தாக்குப்பிடிக்க வைக்கிறது.

லிசா மைட்னர் ஜெர்மனியின் முதல் பெண் பேராசிரியராக நியமிக்கப்படுகிறார்.

1930-களில் பருப்பொருளின் அடிப்படைத் துகளான அணுவின் அணுக்கரு புரோட்டான், நியூட்ரான் போன்ற துகள்களால் ஆனது என்பது கண்டறியப்பட்டிருந்தது. அந்த ஆண்டுகள் அணுக்கரு ஆய்வுகளின் பொற்காலமாக திகழ்ந்தன. அன்றைக்கு அறியப்பட்ட தனிமங்களில் மிகப்பெரிய உட்கருவைக் கொண்டிருந்த தனிமம் யுரேனியம். 238 புரோட்டான்களும் நியூட்டான்களும் கொண்ட யுரேனியத்தின் உட்கருவுக்குள் நியூட்ரான்களை செலுத்தி புதிய தனிமங்களை உருவாக்கும் ஆய்வில் லிசாவும் ஆட்டோவும் ஈடுபட்டிருந்தனர். ஆய்வின் வேதியல் செயல்முறைகளை ஆட்டோவும், இயற்பியல் கோட்பாடுகளை லிசாவும் பங்களித்து வந்தனர்.

1930-களில் ஆட்சிக்கு வந்த நாஜிக்கள், இனவெறி காரணமாக யூதர்களை அறிவுத்துறையில் இருந்து வெளியேற்றத் துவங்கினர். அதனால் 1933-ல் ஐன்ஸ்டீன் நாட்டை விட்டு வெளியேறினார். தனது ஆய்வுகளில் தீவிரமாக இருந்த லிசாவுக்கு எதிராகவும் நாஜிக்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பிக்கின்றனர். நாஜி எதிர்ப்பு கருத்துக்களை கொண்ட ஹான், லிசாவை பாதுக்காக்க முயற்சிகள் மேற்கொள்கிறார். ஆயினும், சூழ்நிலை மோசமடைந்து லிசா ஜெர்மனியில் தங்கியிருக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அவரைக் காப்பாற்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் அறிவியல் அமைப்புகளிலிருந்தும் அறிவியல் உரையாற்ற அழைப்புகள் அனுப்பப்படுகின்றன. ஆனால், நாஜிக்கள் அவரை நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. ஆட்டோ ஹானும், லிசாவுக்கு சார்பான தனது போராட்டங்களை கைவிடுகிறார்.

1938-ம் ஆண்டு சூழ்நிலை மிகவும் மோசமடைய, டச்சு நண்பர் ஒருவரின் உதவியுடன், தனது வாழ்நாள் முழுவதும் ஈட்டிய பொருட்கள், ஆய்வுப் பணிகள் அனைத்தையும் விட்டு விட்டு ஒரு பெட்டியுடன் அகதியாக ஹாலந்துக்கு தப்பிச் செல்கிறார் லிசா. பெர்லினில், நடந்து வரும் ஆய்வு விபரங்களை கடிதம் மூலம் பெற்று ஆட்டோ ஹானுக்கு தனது வழிகாட்டல்களை அளித்து வருகிறார்.

யுரேனியம் அணுக்கருவில் நியூட்ரானை உட்செலுத்திய சோதனையில் பேரியம் உருவாக்கப்படுவதாக ஆட்டோ ஹான் தகவல் அனுப்புகிறார். எதிர்பார்த்தபடி பெரிய தனிமத்தை உருவாக்காமல் சிறிய தனிமம் எப்படி உருவானது என்பதை ஆட்டோ ஹான் புரிந்து கொள்ள முடியவில்லை. லிசா, அதைப்பற்றி தனது மருமகனும் அறிவியலாளருமான ஒட்டோ ராபர்ட் ஃபிரிட்சுடன் விவாதிக்கிறார். ஒரு பெரிய நீர்க் குமிழி  எந்த நேரமும் உடைந்து சிதறும் நிலையில் இருப்பதைப் போல பெரிய உட்கருவான யுரேனியத்துக்குள் நியூட்ரானை செலுத்தும் போது, அது ஆட்டோ ஹான் மற்றும் பிற அறிவியலாளர்கள் நினைத்தது போல பெரிய தனிமத்தை உருவாக்காமல், சிறிய தனிமங்களாக உடைகிறது என்று லிசா உணர்கிறார்.

லிசா மைட்னர்
லிசா மைட்னர்

ஆனால், உட்கரு பிளவுபட்டால் இரண்டு பகுதிகளும் உயர் ஆற்றலுடன் (இரு அணுக் கருக்களுக்கிடையிலான எதிர்விசை சுமார் 200 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட் இருக்க வேண்டும்) ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து விலக வேண்டும். அவ்வாற்றல் எங்கிருந்து  பெறப்படுகிறது என்று இருவரும் ஹானின் ஆய்வு முடிவுகளை சரிபார்க்கிறார்கள். பிளக்கப்பட்ட அணுக்களின் நிறைகளின் கூட்டுத்தொகையானது யுரேனியம் அணுவின் நிறையை விட, புரோட்டானின் நிறையில் ஆறில் ஒரு பங்கு குறைவாக இருந்தது. அந்நிறையை ஐன்ஸ்டீனின் சமன்பாட்டில் பொருத்திப்பார்க்கும் போது அது கிடைக்கும் ஆற்றல் அவர்கள் பரிசீலிக்கும் அணுப்பிளவில் எதிர்பார்க்கும் அளவிலானது என்பதை லிசா மெய்ட்னர் கணக்கிடுகிறார்.

“அவர் (ஆட்டோ ஹான்) அணுவை பிளந்து விட்டார்” என்கிறார் லிசா. அவரது மருமகனோ, “இல்லை! இல்லை! நீங்கள் அணுக்கருவை பிளந்திருக்கிறீர்கள்!” என்கிறார்.

ஐன்ஸ்டீன் சொன்னது மிகச்சரியென நிரூபிக்கப்பட்டாகி விட்டது. யுரேனியம், ரேடியம் போன்ற தனிமங்கள் கதிரியக்கத்தின் மூலம் ஆற்றலை வெளியிடுவதை ஐன்ஸ்டீனின் சமன்பாட்டின் மூலம் விளக்க முடிந்தது.

லிசா மைட்னரும் பிரிட்சும் தங்களது கண்டுபிடிப்பான அணுக்கரு பிளப்பை பற்றிய ஆய்வுக்கட்டுரையை வெளியிடுகிறார்கள். ஆனால், ஜெர்மனியில் ஓட்டோ ஹான் தனது ஆய்வு முடிவுகளை சமர்ப்பிக்கும் போது நாஜிக்களின் நெருக்குதலால் அதில் யூதரான லிசாவின் பெயரை குறிப்பிடாமல் விட்டுவிடுகிறார். அணுக்கரு பிளப்பிற்கு 1944-ம் ஆண்டில் ஹானுக்கு நோபல்பரிசு வழங்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னரும் கூட ஹான், லிசா மெய்ட்னரின் பங்களிப்பை அங்கீகரிக்காமல் தாமே அணுப்பிளவை கண்டறிந்ததாக கூறுகிறார். ஆளும் வர்க்கம் மற்றும் அரசியல் காரணங்கள் கூட ஒரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை கண்டு கொள்ளாமல் செய்து விடும்.

1942-ம் ஆண்டில் அமெரிக்காவில் “மான்ஹட்டன் திட்டம்” என்ற பெயரில் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்துவந்தன. அத்திட்டத்தில் பணிபுரிய லிசாவுக்கு வந்த அழைப்பை அவர் நிராகரித்து விடுகிறார். அவருடைய மருமகன் ராபர்ட் பிரிட்ஸ் நாஜி ஜெர்மனை தோற்கடிக்க அணு ஆயுதம் தேவை என நம்பி அத்திட்டத்தில் சேர்ந்து பணியாற்றுகிறார். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உணர்ச்சி சார்ந்த உத்வேகத்தை மக்கள் போராட்டங்களும், ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வுமே வழங்குகின்றன.

அமெரிக்காவின் மான்ஹட்டன் திட்டத்தில் செய்யப்பட்ட இரண்டு குண்டுகளில் ஒன்று 1945 ஆகஸ்டு 6ம் நாள் ஜப்பானின் ஹிரோசிமாவிலும் மற்றொன்று மூன்று நாட்களுக்கு பின் நாகசாகியிலும் போடப்பட்டு, மனித குலம் இதுவரை கண்டிராத பேரழிவு நிகழ்த்திக் காட்டப்பட்டது. நூற்றாண்டு கால விஞ்ஞானிகளின் உழைப்பும், தியாகமும் முதலாளிகளின் கையில் பேரழிவுக்கு பயன்படுத்தப்படுவது அதற்கு முன்பும், பின்னரும் தொடர்ந்து நடக்கின்றன.

ன்ஸ்டீனின் E=mc2 என்ற சமன்பாடு நமது சூரியனின் இயக்கத்தைப் பற்றியும், அதனுள் நடக்கும் அணுக்கரு பிணைப்பில் நிறை உருமாறி வெளிப்படும் பேரளவு ஆற்றலை விளக்க உதவுகிறது. நட்சத்திரங்களின் தோற்றத்தையும், வாழ்வையும், மறைவையும், பிரபஞ்சம் தோன்றியதையும், இயங்குவதையும் புரிந்து கொள்ள உதவுகிறது.

முதலில் பெரும் அழுத்தத்தில் இருந்த பேரளவு ஆற்றல், பெருவெடிப்பாக வெடித்து சிதறியது. அப்போது ஆற்றல், நிறையாக – பருப்பொருளாக மாறி இப்போது நாம் காணும் பிரபஞ்சத்தை உருவாக்கியிருக்கிறது.

இன்று அறிவியலாளர்கள், அணுத்துகள் முடுக்கிகளில் அணுத்துகள்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு பெருவெடிப்பை ஆய்வக அளவில் செய்து பார்க்கின்றனர். சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட அத்தகைய ஆய்வில் தான் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போசான் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு உலகத்தைப் பற்றிய மனிதகுலத்தின் பார்வையையே ஐன்ஸ்டீனுடைய சமன்பாடு மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது.

அறிவியல் கண்டுபிடிப்பாளர்களின் வரலாறு சில நேரங்களில் மகிழ்ச்சியானதாகவும், சில நேரங்களில் வலிமிகுந்ததாகவும் இருக்கிறது. ஆனால் இயற்கையை புரிந்து கொள்ள முனையும் மனிதனின் பேரார்வம் எப்போதும் முடிவுறுவதில்லை.

இந்த பிரபஞ்சத்தை தோற்றுவித்து அதன் எண்ணிலடங்கா இயக்கங்களையும், விசித்திரங்களையும் கடவுள்கள் தோற்றுவித்திருப்பதாக மதங்கள் இன்றைக்கும் ஊளையிடுகின்றன. கீதையிலும், குர்ரானிலும், பைபிளிலும் அனைத்து அறிவியல்களும் விளக்கங்களும் பொதிந்திருப்பதாக மதத்தை வைத்து பிழைக்கும் மதகுரு முட்டாள்கள் தொடர்ந்து ஓதி வருகின்றனர். பிழைப்பதற்கு ஓடிக்கொண்டிருக்கும் அப்பாவிகள் அதை நம்பவும் செய்கின்றனர்.

ஆனால் இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தை உள்ளது உள்ளபடி எடுத்துக் கூறும் கடமையை மனித குலம் தனது கூட்டுழைப்பு சமூகப் போராட்டத்தால் சாதித்து அதை அறிவியலாளர்கள் மூலம் நிரூபித்திருக்கிறது.

இன்றைக்கு முதலாளித்துவம் அறிவியலை பிடித்து வைத்துக் கொண்டு அறிவுக்கு எதிராகவும், சந்தைக்கு ஆதரவாகவும் நடந்து வருவதால் நாம் மதங்களை முறியடித்து அறிவியலை அதன் பீடத்தில் வைத்து மரியாதை செய்ய முடியாமல் இருக்கிறது.

ஆனால் ஐன்ஸ்டீன் போன்ற அறிவியலாளர்கள் மதங்களையும், கடவுள் நம்பிக்கைகளையும் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டு எல்லாம் மகாபாரதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது என்று கண்ணை மூடிக் கொண்டிருந்தால் இந்த அழகான உலகத்தை நாம் அறிந்திருக்கவும் முடியாது. இத்தனை தொழில்நுட்ப புரட்சிகளும் சாத்தியமாகியிருக்காது.

–    மார்ட்டின்.

  1. என்னது ஐன்ஸ்டீன் லவ் செய்தாரா ?

    வினவு வர வர Maxim Gorky ரேஞ்சுக்கு “எதார்த்தமா”[Socialist realism format ] கட்டுரைகள் கூட எழுத்துகின்றது !

    நன்று Socialist realism பாணியிலான இலக்கிய பணி வினவில் தொடரட்டும்.

    //துடிதுடிப்பும் துள்ளலும் நிறைந்த இளைஞர். காதல், குடும்பம், கல்லூரி வகுப்புகள், வேலை தேடல், அலுவலக நெருக்கடிகள் என்ற சராசரி போராட்டங்களுக்கு மத்தியில்தான் இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்//

    • ஆம் ஐன்ஸ்டீன் காதல் செய்தார் என்று வேறு ஒரு புத்தகத்திலும் நான் படித்திரிக்கிறேன் . ஏன் அறிவியலாளர்கள் காதல் செய்யக்கூடாதா?

      • வினவு வர வர Maxim Gorky ரேஞ்சுக்கு “எதார்த்தமா”[Socialist realism format ] கட்டுரைகள் கூட எழுத்துகின்றது !

        நன்று Socialist realism பாணியிலான இலக்கிய பணி வினவில் தொடரட்டும்.

        //அறிவியலாளர்கள் காதல் செய்யக்கூடாதா?

  2. இவரின் கண்டு பிடிப்பு இன்று அழிவு சக்திக்காகவே பயன் படுகிறது.

    இந்த பூமியில் வாழும் கோடானு கோடி மனிதர்கள் விலங்குகள் உயிரினங்கள் தாவரங்கள் பல்கிபெருகுவது, கடல் மலைகள் மண் காற்று ஆகியவை அனைத்தும் தானாகவே உருவாகி இருக்கிறது என்று கூறுவதும், இரவும் பகலும் மாறி மாறி வருவது தானாகவே என்று கூறுவதும், கடலில் உள்ள உப்புநீர் மேக கூட்டங்களாக மாறி சுவை மிகுந்த நன்னீராக தானாகவே மழை பொழிகிறது என்று கூறுவதும், பூமியில் விளும் விதை தானாகவே முளைத்து பூத்து காய் கனிகளை தருகிறது என்று கூறுவதும், ஆண் செலுத்தும் விந்து பெண்ணின் கர்ப்பத்தில் உண்டாகி உயிருள்ள மனிதனாகிறான் என்பது தானாகவே நிகழ்கிறது என்று கூறுவதும், மரணித்த மனித உயிர் எங்கோ சென்று விடுகிறது என்று கூறுவதும், உலகில் உள்ள உயிரினங்கள் அனைதிற்க்கும் தானாகவே உணவளிக்கபடுகிறது என்று கூறுவதும், சந்திரன் பூமியை சுற்றுவது, பூமி சூரியனை சுற்றுவது தானாகவே நடைபெறுகிறது என்று கூறுவதும், விண் வெளியில் உள்ள கோள்கள் அனைத்தும் குறிபிட்ட ஒழுங்கில் இடம் பெயர்தல் தானாகவே நடைபெறுகிறது என்று கூறுவதும், இந்த அனைத்து கட்டமைப்புகள் யாருடைய ஆட்சியில் இல்லை என்று கூறுவதும், இறைவனின் வேதங்களையும் தூதர்களையும் மறுப்பதும், நாம் அறியாத இறைவனின் படைப்புகளை மறுப்பதும், அனைத்தும் இறைவன் விதிப்படி நடக்கிறது என்பதை மறுப்பதும், நாம் இவ்வுலகில் செய்த செயல்களுக்கு உரிய கூலி வழங்கும் தீர்ப்பு நாளை மறுப்பதும் சிந்தித்து அறியும் மனிதனுக்கு அறிவுடைமை ஆகாது. இவை அனைத்தும் ஒரு இறைவனின் ஆட்சியில் உள்ளது ஆகும். இதனையும் மீறி இறைவனை நிராகரிப்பது இறை நிராகரிப்பு (குப்ர்) ஆகும்.

    http://muminabdullah.blogspot.in/2013/02/blog-post.html

    • //இதனையும் மீறி இறைவனை நிராகரிப்பது இறை நிராகரிப்பு ஆகும்///

      இது எங்களுக்கு தெரியாதா? இதுக்காக உட்கார்ந்து 15 லைன் கமெண்ட் போடனுமா? இல்லை 5 வருசம் உட்காந்து இஞ்சினீயருக்கு படிக்கனுமா?

      அய்யோ அல்லாவே, என்னய ஏன் இந்த “அறிவார்ந்த” கமெண்ட்ட எல்லாம் படிக்கவைக்கிறே…

    • நீங்க மதராசால படிச்சீங்களா? பள்ளி கூடத்துல படிச்சிருந்தீங்கனா physics, chemistry, maths, biology புத்தகங்கள எடுத்து கொஞ்சம் படுச்சு பாருங்க உங்க கேள்விக்கு விடை கிடைக்கும்.

      பாஸ் குரானைத்தவிர மத்த புத்தகங்களையும் படிங்க.

      • முற்போக்கு,Univerbuddy,ஆணி,

        muslimmoomin செய்யும் நகைசுவையை ரசிக்காமல் பதில் வேற கொடுக்கிறிங்களே !

        muslimmoomin நீங்க என்ன வடிவேலுக்கு தம்பியா ?

        ஹலோ வடிவேலுக்கு தம்பி, இண்டர்நெட்டு கூடத்தான் “இன்று அழிவு சக்திக்காகவே பயன் படுகிறது”, எனவே இந்த பக்கம் வாராதிங்க என்ன ?

        //இவரின் கண்டு பிடிப்பு இன்று அழிவு சக்திக்காகவே பயன் படுகிறது.//

      • ஒருவன் பள்ளி – கல்லூரி நாட்களில் physics, chemistry, maths, biology ஆகிய பாடங்களை ஒழுங்கா புரிஞ்சு படிச்சா அவனுக்கு இறை நம்பிக்கை கண்டிப்பாக வராது. இறை நம்பிக்கை ஒருவனுக்கு இருக்குமேயானால் அவன் மேற்கண்ட பாடங்களை ஒருங்காக படிக்கவில்லை என்று பொருள்; புரிந்து படித்தவன் இறை நம்பிக்கை பற்றி பேசுகிறான் என்றால் அவன் நடிக்கிறான் என்று பொருள். நடிப்புப் பேர்வழிகளே (படித்தவர்களில்)நாட்டில் அதிகம்.

        அறிவை ஆண்டவனா கொடுக்கிறான்?
        http://hooraan.blogspot.com/2011/03/blog-post_15.html

    • மூமின் அய்யா,

      கொஞ்சம் அறிவியல் புத்தகங்களையும் அடிக்கடி படியுங்கள். படிக்க கடினமாக இருந்தால் கொஞ்சம் டிஸ்கவரி சேனல், நேஷனல் ஜியாக்ரபி, போன்ற விடியோக்களையும் அப்பப்போது பாருங்கள். மத நூல்கள் மட்டுமே அறிவை தராது. நாமும் கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டும்.

      நீங்கள் இப்போது பதிவு செய்யும் தளம், கணினி இவை அனைத்தும் வெறும் மத நூல்களை மட்டும் படித்து கொண்டு இருந்தால் கிடைத்திருக்குமா? கொஞ்சம் ப்ராக்டிகலாக யோசியுங்கள் நண்பரே.

      மின்சாரம், இயந்திரங்கள், வேதியியல், மருத்துவம், மற்றும் ஏனைய அறிவியல் கண்டுபிடிப்புகளும் தீர்ப்பு நாளை மனதில் கொண்டு வெறும் வேத நூல்களை மட்டும் படித்தால் எப்படி வந்திருக்கும்.

      நான் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் குறை சொல்ல மாட்டேன். எல்லா மதங்களிலும் உள்ள நல்ல விடயங்களை கடைபிடியுங்கள், தற்காலத்துக்கு உகந்தாத விடயங்களை தவிருங்கள். இதை உங்கள் மதத்தவருக்கு மட்டும் சொல்லவில்லை. எல்லா மதத்தவருக்கும் சேர்த்தே சொல்கிறேன்.

    • //கடலில் உள்ள உப்புநீர் மேக கூட்டங்களாக மாறி சுவை மிகுந்த நன்னீராக தானாகவே மழை பொழிகிறது //

      //சந்திரன் பூமியை சுற்றுவது, //

      //பூமி சூரியனை சுற்றுவது //

      //விண் வெளியில் உள்ள கோள்கள் அனைத்தும் குறிபிட்ட ஒழுங்கில் இடம் பெயர்தல் //

      மேற்கூறிய கருத்துக்களெல்லாம் குரானில் எந்த அத்தியாயத்தில் உள்ளன muslimmoomin அவர்களே…???

    • அந்தந்த நிலப் பகுதிகளுக்கு ஏற்ற சிந்தனைகள்தான் மதங்களில் சொல்லப்படுகின்றனவே ஒழிய உலகப் பொதுமறை என்றோ அனைத்தும் மத நூல்களில் அடக்கம் என்று கூறுவது மடமை . இந்துமதம் இமயமலையைத் தாண்டியும் குரான் பாலைவனத்தை தாண்டியும் சிந்தித்ததில்லை . அங்கே கிறித்துவத்தில் பூமி தட்டைதான் . இதை வைத்துக்கொண்டு எல்லாம் எங்கள் மதத்திலேயே சொல்லியிருக்காங்க என்று கஷ்ட்டப்பட்டு கண்டு பிடிக்கிறத கேவலப்படுத்தாதிங்க நண்பரே .

    • நாத்திகர்களுக்கு மரண அடி கொடுப்பதாக நினைத்துக்கொண்டு ,நாத்திக வாதத்தை மிக அழகாக முன் மொழிந்துள்ள முஸ்லிம் மூமின் அவர்களுக்கு நன்றி !

      • நண்பா நீங்கள் கூறியது உண்மை நன் நாத்திகன் என்பதில் பெருமை அடைகிறேன் காரணம் இப்பொழுதுதான் என்னால் மிகச்சரிய்ய்யக யோசனை செய்யமுடிகிறது அறிவு கூர்மையாக உள்ளது இப்பொழுதுதான் நான் என் என்னை நம்புகிறேன் அதனால் என் வாழ்க்கையை சரிவர கொண்டுசெல்ல என்னால் முடியும்

    • முதலில் பெரும் அழுத்தத்தில் இருந்த பேரளவு ஆற்றல், பெருவெடிப்பாக வெடித்து சிதறியது. அப்போது ஆற்றல், நிறையாக – பருப்பொருளாக மாறி இப்போது நாம் காணும் பிரபஞ்சத்தை உருவாக்கியிருக்கிறது.

      இன்று அறிவியலாளர்கள், அணுத்துகள் முடுக்கிகளில் அணுத்துகள்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு பெருவெடிப்பை ஆய்வக அளவில் செய்து பார்க்கின்றனர். சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட அத்தகைய ஆய்வில் தான் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போசான் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு உலகத்தைப் பற்றிய மனிதகுலத்தின் பார்வையையே ஐன்ஸ்டீனுடைய சமன்பாடு மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது.

      அறிவியல் கண்டுபிடிப்பாளர்களின் வரலாறு சில நேரங்களில் மகிழ்ச்சியானதாகவும், சில நேரங்களில் வலிமிகுந்ததாகவும் இருக்கிறது. ஆனால் இயற்கையை புரிந்து கொள்ள முனையும் மனிதனின் பேரார்வம் எப்போதும் முடிவுறுவதில்லை.

      இந்த பிரபஞ்சத்தை தோற்றுவித்து அதன் எண்ணிலடங்கா இயக்கங்களையும், விசித்திரங்களையும் கடவுள்கள் தோற்றுவித்திருப்பதாக மதங்கள் இன்றைக்கும் ஊளையிடுகின்றன. கீதையிலும், குர்ரானிலும், பைபிளிலும் அனைத்து அறிவியல்களும் விளக்கங்களும் பொதிந்திருப்பதாக மதத்தை வைத்து பிழைக்கும் மதகுரு முட்டாள்கள் தொடர்ந்து ஓதி வருகின்றனர். பிழைப்பதற்கு ஓடிக்கொண்டிருக்கும் அப்பாவிகள் அதை நம்பவும் செய்கின்றனர்.

      ஆனால் இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தை உள்ளது உள்ளபடி எடுத்துக் கூறும் கடமையை மனித குலம் தனது கூட்டுழைப்பு சமூகப் போராட்டத்தால் சாதித்து அதை அறிவியலாளர்கள் மூலம் நிரூபித்திருக்கிறது.

      இன்றைக்கு முதலாளித்துவம் அறிவியலை பிடித்து வைத்துக் கொண்டு அறிவுக்கு எதிராகவும், சந்தைக்கு ஆதரவாகவும் நடந்து வருவதால் நாம் மதங்களை முறியடித்து அறிவியலை அதன் பீடத்தில் வைத்து மரியாதை செய்ய முடியாமல் இருக்கிறது.

      ஆனால் ஐன்ஸ்டீன் போன்ற அறிவியலாளர்கள் மதங்களையும், கடவுள் நம்பிக்கைகளையும் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டு எல்லாம் மகாபாரதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது என்று கண்ணை மூடிக் கொண்டிருந்தால் இந்த அழகான உலகத்தை நாம் அறிந்திருக்கவும் முடியாது. இத்தனை தொழில்நுட்ப புரட்சிகளும் சாத்தியமாகியிருக்காது.

  3. /// பார்ப்பனியம் பெரும் தடையாக இருந்ததால் இங்கே அறிவியல் வளரவில்லை ///
    அப்பப்ப முற்போக்கு பட்டத்துக்காக ஓம் நமஹான்னு – அதுதான் பார்ப்பனீயம்தான் காரணம்னு சொல்ல வேண்டியது..இத பாக்கும் போது எனக்கு ஒரு பழைய பாட்டு தோணுதுண்ணா..
    அடுப்பே அடுப்பே ஏன் எரியல.. விறகு ஈறம்.. விறகே விறகே ஏன் ஈரம்.. மழை வந்துச்சு.. மழையே மழையே ஏன் வந்த.. இடி இடிச்சுது.. இடியே இடியே ஏன் இடிச்ச.. மேகம் வந்துச்சு.. மேகமே மேகமேன்னு பாடிக்கிட்டே போகும்…. அது போல.. நம்மாளுங்க எதையும் செய்யல.. அத ஒத்துக்காம, வீணா ஏதோ குடுமி கெடச்சுன்னு அத போட்டு இழுத்துக் கிட்டு என்ன பண்ணப் போறோம்.. விடுங்கண்ண…

    • பாப்பார பசங்களா,

      நீங்க தானே இத்துன வருடமா கல்வித் துறையில் இருந்தீங்க…, என்னத்த கண்டு பிடிச்சீ பூடுங்கனிங்க?

      சாம்பார் வைக்க ,மிக்சர் செய்ய கண்டு பிடிச்சா மட்டும் போதுமா ?

      //அப்பப்ப முற்போக்கு பட்டத்துக்காக ஓம் நமஹான்னு – அதுதான் பார்ப்பனீயம்தான் காரணம்னு சொல்ல வேண்டியது//

    • இத்துன வருடமா ஒன்னுமே கண்டுபீடிக்காத நீங்க டுபாகூர் பாப்பார பசங்க தானே ?

  4. //அறிவியல் கண்டுபிடிப்புகள், ஒரு சில தனிமனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல//

    I agree this without any ifs, buts, half measures and disclaimers.

    • //அறிவியல் கண்டுபிடிப்புகள், ஒரு சில தனிமனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல//

      வெள்ளைக்காரன் கண்டுபிடிக்க வேண்டும் . நாம் சினிமா பார்த்து கொண்டே , அடுத்தவர் செய்யும் கண்டுபிடிப்புகளுக்கு உரிமை கோரி கொள்ளலாம் .

      எங்க தாத்தா சைபர் கண்டுபிடிக்காட்டி நீங்க எதுவுமே கண்டுபிடிச்சு இருக்க முடியாது. என்று வசனம் பேசலாம்

      • Mr. Raman,

        We are not sure who invented zero. But what we are sure is that the whites, blacks, browns, yellows, and shades in between are all our relatives and we all are entitled to benefit from one anothers’ work.

        • //We are not sure who invented zero.//

          Learn your history.

          //sure is that the whites, blacks, browns, yellows, and shades in between are all our relative nd we all are entitled to benefit from one anothers’ work//

          Hey world, Did you hear? Univerbuddy is “entitled” for your hard work. Please share everything you invent with him for free.

          • Mr. Raman,

            //Learn your history//

            Where is the absolute proof on who invented 0?

            By the by,

            I said ‘one another’s work’. The relation is mutual. I am contributing to the betterment of the humanity. My comments, blogs, etc also are part of my contribution. In addition, the scientists and inventors did/do not work for themselves. And as this article itself explained, all of them have benefited from the forerunners. I hope now you would understand.

  5. “அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு ” என்னும் புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது .

    அறைவ்யலாளர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் எப்படி விவாதித்தார்கள் , எப்படி சண்டை போட்டார்கள் , மதங்கள் , கார்பரேட் நிறுவனங்கள் எதிர்ப்பு பின்னனி போன்றவை மிக சுவாரஸ்யமாக எழுதப்பட்டு உள்ளது

  6. //இந்த சமன்பாட்டின் படி ஒரு ரூபாய் நாணயத்தின் மொத்த நிறையையும், திட, திரவ, வாயு மிச்சம் ஏதுமின்றி ஆற்றலாக உருமாற்றம் செய்தால், அதைக் கொண்டு மொத்த தமிழ் நாட்டின் இரண்டு நாட்களுக்கான மின் தேவையை பூர்த்தி செய்துவிட முடியும். இது சாத்தியமா? //

    Ada ariveketta padhargalaa.. Appadi mass-energy equivalence principle padi vadivamaicha koodangulam nuclear reactor’a edhirthaa eppadi saathiyam aagum????

  7. /// பார்ப்பனியம் பெரும் தடையாக இருந்ததால் இங்கே அறிவியல் வளரவில்லை ///

    முற்றிலும் உண்மையில்லை..

    பார்ப்ப்னீயம் இருந்த காலத்தில் தான் ஆர்யபட்டா பாஸ்கர போன்றவர்கள் அறிவியல் நூல்கள் எழுதியிருக்காங்க..
    ஆனா கிபி 1100 முதல் 1600 வரையிலும் அதுக்கு அப்புறம், ஆங்கிலேயர்கள் கையிலும் மாட்டிகொண்டதும் நம்ம ஊரில் அறிவியல் வளர்ச்சி த்டைபட்டக்கு பெரிய காரணம்..

    • சிலருக்கு எது எழுதினாலும் பார்ப்பனீயம் என்ற சொல்லை தொடர்ந்து சொல்லாவிட்டால் தலை வெடித்து விடும். ஆங்கிலேயர் வந்த பின்னர் தான் இந்தியாவில் பொருளாதாரம் சீரழிந்தது. ஆங்கிலேயரும், அவர்களுக்கு முன்னர் வந்த மங்கோலிய, துருக்கிய இஸ்லாமியப்படை எடுப்பாளர்களும் இந்தியாவில் இருந்து கொள்ளை அடித்துச் சென்றது ஏராளம். மேலே ஒரு நண்பர் மறுமொழியில் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு அழிவு வேலைக்கு பயன்படுகிறது என்று சொல்லியுள்ளார். அதற்கு ஐன்ஸ்டீன் எப்படி அய்யா பொறுப்பாவார். கத்தி காய்கறி நறுக்கவும் , பிறமனிதரை கொலை செய்யவும் கூட பயன்படும். அதனால் கத்தியை கண்டு பிடித்தவர் மேல் குற்றம் சொல்வது முறையா ? மதங்கள் ஒழிவது உலகில் உள்ள மனித சமுதாயத்துக்கு நல்லது. ஆனால் கடவுள் நம்பிக்கை வேறு மதம் வேறு.மதம் என்றால் பித்து என்று ஒரு பொருள் உண்டு. கடவுள் என்றால் எல்லை கடந்து எங்கும் வியாபிக்கும் பரம்பொருள் என்று பொருள். மதத்துக்கும் கடவுளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மதம் என்பது கொள்ளையர்கள் தங்கள் சுரண்டலை மறைக்கவும், அதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் பெறவும் ரோமானியர்களாலும், அதன்பிறகு சவூதி அரேபியாவிலும் உருவாக்கப்பட்ட தீய சக்திகள் ஆகும். மதம் மனிதனுக்கு தேவை அற்றது. ஆனால் கடவுள் நம்பிக்கை என்பது மனித இனம் இருக்கும் வரை இருக்கும். மதத்துக்கும் கடவுளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

  8. வினவு….

    //ஆனால் ஐன்ஸ்டீன் போன்ற அறிவியலாளர்கள் மதங்களையும், கடவுள் நம்பிக்கைகளையும் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டு எல்லாம் மகாபாரதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது என்று கண்ணை மூடிக் கொண்டிருந்தால் இந்த அழகான உலகத்தை நாம் அறிந்திருக்கவும் முடியாது. இத்தனை தொழில்நுட்ப புரட்சிகளும் சாத்தியமாகியிருக்காது.//

    அப்படியா.. ஐன்ஸ்டீன் மிக பெரிய விஞ்ஞானி என்பது உலகு அறிந்த உண்மை தான்.. ஆனால் வினவிற்கு ஒன்று புரியவில்லை. மகாபாரதத்தின் ஒரு அங்கம் தான் பகவத் கீதையும். அந்த பகவத் கீதை தான் தன்னுடைய அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு உத்வேகத்தை அளித்தது என்று கூறிகிறார்.. அவர் வார்த்தைகளிலேயே கேட்போம்,

    “I have made the Bhagwad Gita as the main source of my inspiration and guide for the purpose of scientific investigations and formation of my theories”.

    “When I read the Bhagavad-Gita and reflect about how God created this universe everything else seems so superfluous”.

    மேலும், இந்தியர்களின்(இந்துக்களின்) விஞ்ஞான அறிவை பற்றி கூறும்போது..

    “We owe a lot to Indians, who taught us how to count, without which no worthwhile scientific discovery could have been made”. ஐன்ஸ்டீனின் இந்த கூற்று உலகம் அறிந்த ஒன்று..

    //கீதையிலும்,……………. அனைத்து அறிவியல்களும் விளக்கங்களும் பொதிந்திருப்பதாக மதத்தை வைத்து பிழைக்கும் மதகுரு முட்டாள்கள் தொடர்ந்து ஓதி வருகின்றனர். பிழைப்பதற்கு ஓடிக்கொண்டிருக்கும் அப்பாவிகள் அதை நம்பவும் செய்கின்றனர்.//

    அவர் மட்டும் இல்லை அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர் அணு சக்தி ஆயுதத்தின் தந்தை. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உடன் பணியாற்றிய இராபர்ட் ஓப்பன்ஹீமர்(Julius Robert Oppenheimer) தன்னுடைய அணு ஆயுத கண்டுபிடிபிற்கு மிக உத்வேகம் அளித்தது பகவத் கீதை தான் என்று கூறியுள்ளார்…தன்னுடைய ஆய்வு கூடத்திற்கு செல்லும் போதெல்லாம் எப்போதுமே பகவத் கீதை நூலை உடன் கொண்டு செல்வது அவருடைய வழக்கம்.. அவர் கூறுவது …

    Oppenheimer later recalled that, while witnessing the explosion, he thought of a verse from the Hindu holy book, the Bhagavad Gita (XI,12):

    If the radiance of a thousand suns were to burst at once into the sky, that would be like the splendor of the mighty one …

    Years later he would explain that another verse had also entered his head at that time: namely, the famous verse: “kālo’smi lokakṣayakṛtpravṛddho lokānsamāhartumiha pravṛttaḥ” (XI,32), which he translated as “I am become Death, the destroyer of worlds.”

    In 1965, he was persuaded to quote again for a television broadcast:

    We knew the world would not be the same. A few people laughed, a few people cried. Most people were silent. I remembered the line from the Hindu scripture, the Bhagavad Gita; Vishnu is trying to persuade the Prince that he should do his duty and, to impress him, takes on his multi-armed form and says, ‘Now I am become Death, the destroyer of worlds.’ I suppose we all thought that, one way or another.//

    அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக செய்த ஓப்பன்ஹீமர் சோதனைச்சாலையில் அணுசக்தியின் வெடித்து கிளம்பும் நெருப்பு பிழம்பின் ஆற்றலை கண்டு மகிழ்ச்சி அடைந்த அவர் அந்த ஆற்றலை பகவத் கீதையில் வரும் 11 அத்தியாயத்தில் வரும் 12 ஸ்லோகத்தோடு ஒப்பிடுகிறார்

    “If the radiance of a thousand suns were to burst at once into the sky, that would be like the splendor of the mighty one” … அதாவது,

    “வானத்தில் ஆயிரம் சூரியர்களுடைய ஒளியானது ஒருமிக்க உதித்திருக்குமானால் அது ஒரு மகாத்மாவின் ஒளிக்கு ஒப்பாகும்” என்கிற வரிகளை தான் தன்னுடன் பணியாற்றிய சக விஞ்ஞானிகளிடம் உணர்ச்சி பொங்க கூறினார்..

    பின்னாளில் 1965ஆம் ஆண்டு அவர் தொலைக்காட்சி பேட்டியில் கூறும்போது….

    //We knew the world would not be the same. A few people laughed, a few people cried. Most people were silent. I remembered the line from the Hindu scripture, the Bhagavad Gita; Vishnu is trying to persuade the Prince that he should do his duty and, to impress him, takes on his multi-armed form and says, ‘Now I am become Death, the destroyer of worlds.’ I suppose we all thought that, one way or another//

    தனுடைய ஆராய்ச்சியில் தொய்வு ஏற்படும் போதெல்லாம் தனக்கு உத்வேகம் தருவது பகவத் கீதையில் வரும் 11ஆம் அத்தியாயம் 32 ஆம் ஸ்லோகத்தில் கூறப்படும்..

    “உலகங்களை அழிக்க வல்ல காலம் நான். உலகங்களை சங்கரிக்க தலைபட்டிருக்கிறேன். நீ போரினின்று பின்வாங்கினால் , எதிர்த்துள்ள சேனைகளில் அணிவகுத்து நிற்கும் போர்வீரர்கள் எல்லோரும் வாழ மாட்டார்கள்”.

    என்னும் வரிகள் தான் என்று கூறினார்.. இந்த ஸ்லோகத்தின் மொத சாரத்தை அவர் சுருக்கமாக ‘Now I am become Death, the destroyer of worlds.’ என்று கூறினார். இதற்குள் ஒளிந்திர்க்கும் தத்துவம் யாதெனில்.. இந்த படைப்புகளுக்கு காரணமாக விளங்கும் அணுசக்தி(atomic fusion ). அழிக்கவும் செய்யும் என்பதுதான் அதன் உள்ளர்த்தம்..

    ஜப்பானின் கொட்டத்தை அடக்கி ..இதன் மூலமாக தான் இரண்டாம் உலக போர் ஒரு முடிவுக்கு வந்தது…

    மேற்கண்ட வற்றிற்கான ஆதாரம்

    The Gita Of J. Robert Oppenheimer நூலில் கண்டு கொள்ளலாம் …

    ஆதாரம்:http://en.wikipedia.org/wiki/J._Robert_Oppenheimer

    அவரின் தொலைக்காட்சி பேட்டி…

    http://www.youtube.com/watch?v=e67mIPR6ryA

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இராபர்ட் ஓப்பன்ஹீமர் மட்டுமல்ல இந்து வேத சாஸ்திரங்களை அறிந்த பல உலக விஞ்ஞானிகள் பாராட்டி கூறி இருக்கிறார்கள். தேவை என்றால் அதையும் ஆதாரத்துடன் அளிக்க தயார். இந்து வேத சாஸ்திரத்தின் அருமை என்ன என்பது அவர்களுக்கு தெரியும். ஏனென்றால், அவர்கள் படித்தவர்கள் மேலும் விஞ்ஞான மேதைகள்.. எதையும் நுண்மையாக அராய்ச்சி செய்யும் அறிவு அவர்களுக்கு இருக்கிறது.. பெரியார் போன்றும் அவரை பின் பற்றி நடக்கும் பெரியாரிஸ்டுகள் போன்றும் எதையும் மேலோட்டமாக பார்க்கும் முட்டாள்கள் அல்ல அவர்கள்..

    • மோசடியாளர் தாயுமானவன் பிள்ளை,
      ”உலகத்தில் சொல்ல வேண்டியதை எல்லாம் 3000 வருடங்களுக்கு முன்பே கங்கைக் கரையிலும் காவிரிக்கரையிலும் சொல்லி முடித்துவிட்டதாக கூறிக்கொள்ளும் அரிசி உணவை உட்கொள்ளும் பிராணிகளின்” வகையினத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீனை சேர்க்கும் கயமைத்தனத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

      கீதையை பற்றி – இந்து மதத்தை பற்றி ஐன்ஸ்டீன் சொன்னதாக நீங்கள் குறிப்பிட்டவற்றுக்கு தகுந்த ஆதாரம் கொடுக்க வேண்டும்.

      நீங்கள் ஆதாரமாக காட்டிய ஓப்பன்ஹீமரின் மேற்கோள்கள் கீதை தனக்கு மன உந்துதல் அளித்ததாகவும், தமது ஆன்மீக தேடலகளுக்கு உத்வேகமளித்ததாகவுமே குறிப்பிடுகின்றனவே அன்றி எங்கும் கீதையிலிருந்து அவர் அறிவியல் கருத்துகளை பெற்றுகொண்டதாக குறிப்பிடவில்லை. சாரமாக அவை பேரழிவு ஆயுதங்களை தயாரித்ததற்காக பாவ மன்னிப்பு கோருவதாகவோ மற்றும் தனது செயலை கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்தும் ஆன்மீக முயற்சிகளாகவுமே உள்ளன.

      ஆதாரமின்றி ஓப்பன்ஹீமரின் மேற்கோள்களையும் லிங்குகளையும், வைத்துக்கொண்டு ஐன்ஸ்டீன் கீதையை பற்றி புகழ்ந்து பேசியதாக பித்தலாட்ட மோசடி செய்யக்கூடாது.

      இத்தகைய பித்தலாட்டங்களை செய்ய தேர்ந்த ஆர்.எஸ்.எஸ் காரர்களால் தான் முடியும். இதை தான் அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் செய்து வருகின்றார்கள். முன்னர் தோழர் அசுரன் தனது தளத்தில் நடந்த விவாதங்களில் அவர்களின் காக்கி டவுசரை கழற்றியிருக்கிறார்.

      ஆர்.எஸ்.எஸ் மற்றும் பார்ப்பன பரிவாரங்களுக்கு மோசடியும் பித்தலாட்டமும் கைவந்த கலை. இதைத்தானே ஆயிரம் வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறீர்கள்.

      பெரியார் மட்டும் உங்கள் கீதையை – உங்கள் பொந்து மத அயோக்கிய தனங்களை அம்பலப்படுத்தவில்லை. இந்து வேத சாஸ்திரங்களை அறிந்த இந்திய விஞ்ஞானியான டி.டி.கோசாம்பியே கூட அம்பலப்படுத்தியிருக்கிறார்.

      அந்தக்கால சாருவாகர்களில் ஆரம்பித்து ராகுல சாங்கிருத்தியாயன், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா உள்ளிட்டு பலரும் அம்பலப்படுத்தியுள்ளனர். குறிப்பாக தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, டி.டி.கேசாம்பி போன்றோர் வேதம், கீதை, உபநிசத்துகள் அனைத்தும் இந்திய பழங்குடி மரபுகளை களவாடி உட்செரித்தன என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளனர். இதில் டி.டி.கோசாம்பி ஒரு தலை சிறந்த அறிவியலாளர், என்பதுடன் அவர் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஓப்பன்ஹீமருடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

      அன்று பழங்குடி மரபுகளை களவாடி சுவீகரித்து கொண்டு தான் வேதங்களும், சாஸ்திரங்களும் உருவாகின. கருத்து முதல்வாத வேத மரபை எதிர்த்து கேள்விக்குட்படுத்திய பொருள்முதல்வாத சாங்கியம், சாருவாகம், பவுத்தம், போன்ற வேத எதிர்ப்பு மரபுகளை அழித்தொழித்த சுவீகரித்துக் கொண்டதால் தான் வேத மரபு நிலைத்திருக்க முடிந்தது.

      அன்று கருத்து பித்தலாட்டத்தை செய்தவர்கள் இன்று உலகில் கண்டுபிடிக்கப்படுபவை எல்லாம் ஏற்கனவே தங்கள் வேதங்களிலும், சாஸ்திரங்களிலும் இருப்பதாக கதைவிட்டு தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சி செய்கின்றனர்.

      கீதையிலும், வேத சாஸ்திரங்களிலும் எல்லாமும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதென்றால் அதை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வேறு எவரையும் படிக்கவிடாமல் தாங்கள் மட்டுமே படித்து வந்த பார்ப்பனர்கள் எதையுமே கண்டுபிடிக்கவில்லையே ஏன்?

      தாங்கள் எதையுமே செய்யாமல், யார் எதை கண்டுபிடித்தாலும், இது ஏற்கனவே சொல்லப்பட்டாகிவிட்டது என்பது மிக மலினமான மோசடி யுத்தி என்பது பார்பன மூளைக்கு மட்டும் புரியமாட்டேன் என்கிறது.

      ஐன்ஸ்டீன் எங்கு எப்போது கீதையைப்பற்றி பேசியுள்ளார், எழுதியுள்ளார்? புத்தகம் அல்லது லிங்க் ஆதாரம் கொடுங்கள்.

        • பச்சரிசியில்தான் பொங்கல் வைக்க முடியும்.. புழுங்கல் அரிசியிலும் வைக்கலாம்.. ஏதோ அரிசியில்தான் பொங்கல் வைக்க முடியும் என்பது அறிவியல் உண்மையாகும்.. ஆணிக்கு அரிசியின் மேல் உள்ள வெறுப்பு அவரது அறிவியல் பார்வையை மறைக்கிறது என்ற உண்மையை நுட்பமாக எடுத்துக்காட்டிய உங்கள் நயம் நன்று, நன்று..

      • திருத்தம் :

        “பச்சரிசி” உணவை உட்கொள்ளும் பிராணிகளின்” வகையினத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீனை சேர்க்கும் கயமைத்தனத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

    • ஐன்ஸ்டினும், சில விஞானிகளும் பாராட்டிவிட்டார்கள் என்பதாலேயே பகவத்கீதை சரியானது என்று பேசக்கூடாது. பாசிசத்தை ஆதரித்த விஞ்ஞானிகள் கூடத்தான் இருந்தார்கள், அதற்காக விஞ்ஞானிகளே கூறிவிட்டார்கள் என்று பாசிசத்தை ஆதரிக்க முடியுமா? பகவத்கீதை சரியானது என்பதை அதன் உள்ளடக்கத்திலும், பயன்பாட்டிலிருந்தும் வாதிட வேண்டும். ஆனால் கீதையால் நேர்மைறை பயன் எதுவும் இல்லை, அது பெரும்பாண்மை மக்களுக்கு எதிரானது என்பதால் நீங்கள் அதன் பயன்பாட்டிலிருந்தும் பேச முடியாத துர்பாக்கிய நிலையிலிருக்கிறீர்கள். கீதையின் பக்கம் நின்று கொண்டு நன்மையை தேடினால் அதற்கு நங்கள் என்ன செய்ய முடியும் அய்யா?

      மேலும், ஐன்ஸ்டின் சோசலிசத்தை ஆதரித்து கட்டுரை எழுதியிருக்கிறார் தெரியுமா?

  9. \ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உடன் பணியாற்றிய இராபர்ட் ஓப்பன்ஹீமர்(Julius Robert Oppenheimer) தன்னுடைய அணு ஆயுத கண்டுபிடிபிற்கு மிக உத்வேகம் அளித்தது பகவத் கீதை தான் என்று கூறியுள்ளார்…தன்னுடைய ஆய்வு கூடத்திற்கு செல்லும் போதெல்லாம் எப்போதுமே பகவத் கீதை நூலை உடன் கொண்டு செல்வது அவருடைய வழக்கம்..\

    1. அணு ஆயுத கண்டுபிடிப்பிற்கு மிக உத்வேகம் அளித்தது பகவத் கீதையா?, லிசா மெய்ட்டனரா? யுரேனியத்தைப் பிளந்த பொழுது மிகக்குறைந்த அணு எடை கொண்ட பேரியம் ஏன் வருகிறது என்பதை விளக்குவதற்கு பயன்பட்டது தைத்ரிய பிரமணாவா? அல்லது ஜெர்மனியில் இருந்து தப்பி கடிதம் மூலம் விளக்கிய லிசா மெய்ட்டனரா? கட்டுரையை கொஞ்சம்வாவது வாசியுங்கள் தாயுமானவன் அவர்களே.

    2. ஒபன் ஹெய்மர் தினமும் ஆய்வகத்திற்கு பகவத் கீதையை எடுத்துச் சென்றாரோ இல்லையோ லிசா மெய்ட்டனரின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்யும் தன் நைச்சியமான இதயத்தை எடுத்துச் சென்றிருப்பார்!

    3. ஒன்று உண்மை. நோபல் பரிசு வாங்கிய பொழுது, அது யாருக்குப் போய்ச் சேர வேண்டுமென்பதை ஹெய்மர் நினைத்திருக்கும் பொழுது கீதையின் அந்த சிறப்பான “உலகங்களை அழிக்க வல்ல காலம் நான். உலகங்களை சங்கரிக்க தலைபட்டிருக்கிறேன். நீ போரினின்று பின்வாங்கினால் , எதிர்த்துள்ள சேனைகளில் அணிவகுத்து நிற்கும் போர்வீரர்கள் எல்லோரும் வாழ மாட்டார்கள்” என்பதை நினைத்திருப்பார் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்!!

    4. அடுத்தவர் வேலையை தன் வேலையாக காட்டிக் கொள்வதற்கு ஒருவரால் வேதத்தில் இருந்து மேற்கொள் காட்டமுடிகிறவரதென்றால் “அகம் பிரம்மாஸ்மி’ என்பதை மேக்ஸ் முல்லர் எவ்வளவு சிறப்பாக ஜெர்மன் மொழியில் பெயர்த்திருப்பார் என்பதை நினைக்கும் பொழுது ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டதைப் போல் இருக்கிறது!

    “I have made the Bhagwad Gita as the main source of my inspiration and guide for the purpose of scientific investigations and formation of my theories”.
    “When I read the Bhagavad-Gita and reflect about how God created this universe everything else seems so superfluous”.

    வேதத்திற்கு ஹெய்மர். புராணத்திற்கு ஐன்ஸ்டீன்!

    வருண சிந்தாமணி நூலில் (1905), தன் சாதிப் பெருமைக்காக புராணங்களை புரட்டு என்று சொல்லிய வேளாளர்களை ஐன்ஸ்டீனுக்கு தெரிந்திருக்கவாய்ப்பில்லை. தாயுமானவருக்கு கூடவா தெரியாது? புராணங்களைப் பற்றி அப்பொழுது ஒரு நிலைப்பாடு. அதை தக்காட்டுவதற்கு இப்பொழுது ஒரு நிலைப்பாடு என்றால் எது உங்கள் நிலைப்பாடு?

    சித்துர் அதாலாத் கோர்ட் தீர்ப்பு கனகசபாபதி பிள்ளையால் 1930ல் வெளியிடப்பட்டது. அத்தீர்ப்பில் ஆசாரிமார்கள் விஸ்வகுலப் பிராமணர்களான நாங்களே பெரியவர்கள் என்றும் வேதோக்தா முறையில் கலியாணம் செய்வதற்கு பார்ப்பனர்கள் தேவையில்லை என்பதையும் புராணங்களும் கீதையும் கட்டுக்கதை என்று விவாதித்து குண்டைய பிராமணர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றனர். இரண்டும் வானமாமலையின் தமிழகத்தில் சாதி சமத்துவ போராட்ட கருத்துக்கள் என்பதிலிருந்து எடுக்கப்பட்டது.

    நம்முடைய வரலாற்றில் புராணங்களும் வேதங்களும் சாதிப் பெருமை பேசுவதற்கு மட்டுமே பயன்பட்ட பொழுது ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளுக்கு இவை எப்படி inspiration ஆக இருந்தது என்பதை விளக்குவீர்கள் என்று நம்புகிறேன்.

    \ஏனென்றால், அவர்கள் படித்தவர்கள் மேலும் விஞ்ஞான மேதைகள்.. எதையும் நுண்மையாக அராய்ச்சி செய்யும் அறிவு அவர்களுக்கு இருக்கிறது.. பெரியார் போன்றும் அவரை பின் பற்றி நடக்கும் பெரியாரிஸ்டுகள் போன்றும் எதையும் மேலோட்டமாக பார்க்கும் முட்டாள்கள் அல்ல அவர்கள்..\
    நீங்களாவது முட்டாள் இல்லையென்றால், வேதத்தில் மாட்டுக்கறி பிரதான உணவாக இருக்கும் போது, இந்து வெறியர்கள் ஏன் பசுமாட்டை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர் என்பதையும், செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் நடுரோட்டில் அடித்தே சொல்லப்பட்டனர் என்பதையும் அம்பலப்படுத்துவதற்கு எங்களுடன் நீங்கள் வருவீர்களா தாயுமானவன்.

    நீங்கள் வரமாட்டீர்கள் என்று தெரியும். தாழ்த்தப்பட்டவர்கள் குறித்த நிலைப்பாட்டில் ஏற்கனவே ஒருமுறை இப்படிச் சொன்னீர்கள் “சரி,வேண்டுமானால், உங்கள் வீட்டில் ஏதாவது திருமண விசேஷம் என்றால் மறக்காமல் என்னை கூப்பிடுங்கள். வந்து வயிறார தங்களின் பொற்கரங்களால் பரிமாற பட்டு உண்டு. (ஆனால், உணவு கண்டிப்பாக சுத்த சைவமாக தான் இருக்க வேண்டும்) மணமக்களுக்கு பகுத்தறிவு புஸ்தகங்களை பரிசளித்து விட்டு, வாழ்த்தி செல்கிறேன்.”

    “…gam alabhate [2]; yajno vai gauh; Yajnam eva labhate; atho annam vai guah; Annam evavarundhe….”
    ‘(At the horse-scarifice) he (the Adhvaryu) seizes (binds) the cow (i. e. cows). The cow is the sacrifice. (Consequently) it is the sacrifice he (the scarificer) thus obtains. And the cow is certainly is food. (Consequently) it is food he thus obtains’
    English Translation by Paul-Emile Dumont, Proceedings of the American Philosophical Society 92.6 (December 1948). Page. 485. டி. என். ஜாவின் ‘the myth of the holy cow’ என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

    இதை ஆதாரமாக கொண்டு ஆர். எஸ். எஸ் மற்றும் பிஜேபியை அம்பலப்படுத்த ஒரு இந்துப் புருசனாக வருவீர்களா தாயுமானவன்?

    நம் நாட்டில் இதற்கே துப்பில்லாமல் எள் காய்கிற இடத்தில் எலிப்புழுக்கையாக ஐன்ஸ்டீன், ஹெய்மரையும் வேத புராணத்திற்கு ஆதரவாக இழுப்பதற்கு சிறிதளவும் வெட்கப்படவில்லையா?

    • அற்புதமான பதில்! தன் மன சாட்சியின் உறுத்தல்களை மறைத்துக்கொள்ளவே கீதையை மேற்கோள் காட்டுவர்! வேதம் எது? அதில் கூறப்படும் இறை கொள்கை என்ன? கீதை அவற்றினின்றும் எப்படி முறண்படுகின்றது என்றெல்லாம் யார் சிந்தித்து பார்த்தார்கள்? மேற்கோள் காட்டுவதற்கு, தனது அழிவு செயலுக்கு தான் மட்டுமே பொறுப்பல்ல என்று கைகழுவி விடவே கீதை பயன்படுகின்றது! அது மகாபாரதத்தின் ஒரு அங்கம் என்பதே புரட்டல்தான்! பழைய வால்மீகி ராமாயணத்தில் அது இல்லை! பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது! புஜபலம் கொண்ட ஷத்திரியர்களை பயன்படுத்தி, பார்ப்பன ஆதிக்கத்தை நிலைனிருத்த குள்ளனரிக்கும்பல் புனைந்தது!

  10. அற்புதமான கட்டுரையும் வாசகரின் பின்னூட்டங்களும் வினவையும் வாசகரையும் எங்கேயோ உயரக் கொண்டு போய் விட்டன. இணைந்து பணி ஆற்றிய அனைவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கிறேன்.

  11. வினவு ,

    தயவு செய்து அறிவியல் சார் கட்டுரைகளில் பின்னூட்டம் பகுதியை மூடுங்கள் அல்லது அறிவியல் மீது சிலர் வைக்கும் அறிவியல் அற்ற பின்னூட்டங்களையாவது தடை செய்யுங்கள்.

    தாயு, muslimmoomin போன்ற அறிவியல் அறிவு அற்ற அறிவிலிகளின் மதம் சார் பொய் ,புனைக்கதைகள் ,பித்தலாட்டம் அளவு கடந்து செல்கின்றது.

  12. விட்டா இந்த மதம் சார் அறிவிலிகள் [தாயு etc]விஷ்ணு சக்கரத்தில் இருந்து தான் மின் விசிறி கண்டுபீடிக்கப்பட்டது , கண்ணன் ஊட்டு தயீர் கடையும் மத்தில் இருந்து தான் வாஷிங் மெஷின் கண்டுபீடிக்கப்பட்டது என்று பெனத்துவார்கள்!

    • சேச்சே… இந்தியாவுல அது எல்லாத்தயும் கண்டுபிடிச்சது வினவும் சரவணும் தான்…

  13. என்னது ஒளியை பற்றியும் அதன் வேகம் பற்றியும் ஐன்ஸ்டீன் அவர் காதலியுடன் விவாதித்தாறா?

    இருவருமே scientist ஆக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

    “ஐன்ஸ்டீன் A true Love[science] Story” பற்றி வினவில் Socialist realism format கட்டுரையை எதிர்பார்கிறேன்.

    Note :

    Dear Tamil film directors pls read vinavu,by the way you can get lot of TRUE love stories instead of steeling stories from foreign move DVDs

    //ஐன்ஸ்டீனின் இளம்பருவத்தில் அவரை அதிகம் கவர்ந்த, அவர் அதிகம் சிந்தித்து கொண்டிருந்த விசயம் ‘ஒளி’யைப் பற்றியது. கல்லூரி நாட்களில் அவர் தனது நண்பர்களுடன் மட்டுமின்றி தனது காதலியான மிலெவா மாரிக்குடனும் ஒளியைப் பற்றியும் அதன் வேகத்தை பற்றியும் விவாதிப்பதில் நேரத்தை செலவிடுகிறார்//

  14. திரு.ஆணி…

    நான் மோசடி செய்யவில்லை.. நான் எனக்கு தெரிந்ததை கூறினேன்.. நான் கூறியது தவறாக இருப்பின் மன்னிக்கவும். முடிந்தால் ஐன்ஸ்டீன் கூறியதில் உண்மை இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்த்து கூறுகிறேன் .. தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி…

    //இந்து வேத சாஸ்திரங்களை அறிந்த இந்திய விஞ்ஞானியான டி.டி.கோசாம்பியே கூட அம்பலப்படுத்தியிருக்கிறார்.//

    டி.டி கோசம்பி ஒரு மார்க்சிய ஆய்வாளர்… வரலாற்றை பொறுத்த வரை மார்க்சிய கண்ணோட்டத்தில் இருந்துதான் அவர் தன்னுடைய ஆய்வுகளை நிகழ்த்தினார்.மார்க்சியர்களின் கண்ணோட்டத்தில் வரலாறு என்றாலே “அது வர்க்கங்களுக்கு இடையிலான ஒரு முரண்பாடு” என்று அடிப்படையில் தான் வரலாற்றை அணுகுவார்கள். அந்த அளவுகோலின் படி பார்த்தால் அவருடைய இந்திய வரலாற்று ஆய்வு நூல்களான “An Introduction to the Study of Indian History” மற்றும் “The Culture and Civilisation of Ancient India in Historical Outline”. ஆகிய இரண்டு நூல்களிலும் வழி நெடுக எங்கு பார்த்தாலும் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக எந்த விஷயங்களும் இந்திய வரலாற்றில் இல்லை என்று கூறுவார்..மேலும், அவரின் நூலான என்னும் நூலில் டி.டி.கோசாம்பி அஜந்தா ஓவியங்கள் குறித்த ஒரு விமர்சனத்தை முன்வைப்பார். சமுதாயத்தின் உபரியிலிருந்து உருவான இந்த ஓவியங்களில் இந்த சமுதாயத்தின் ’பாமர’ மக்கள் காட்டப்படவில்லை. அவற்றில் எந்த அன்றாட வாழ்க்கை செயல்பாடும் சித்தரிக்கப்படவில்லை. வானகத்து மங்கையர், போதிசத்வர்கள், துறவிகள், புத்தர் – ஆனால் சாதாரண மக்கள்? என வினவுவார் அவர். (Ancient India: A History of Its Culture and Civilization, Pantheon Books, 1966 பக். 179.) . என்று அவருக்கே உண்டான இயல்பான மார்க்சிய பார்வையில் தான் வரலாற்றை பார்க்கிறார் ஆகவே, மார்க்சிய, பெரியாரிய சரித்திர கண்ணோட்டத்தின் படி பார்த்தல். வரலாறு அனைத்துமே இருண்ட காலமாக தான் தெரியும்.. டி.டி கோசாம்பியின் கண்ணோட்டத்தின் படி பார்த்தால் இலங்கையில் சிங்களர்களை வென்று 12,000 சிங்களர்களை போர் கைதிகளாக அழைத்து வந்து அவர்களை கொண்டே கரிகாலன் கல்லணையை கட்டுவித்தான் என்பது கூட அநியாயமாக தான் படும். என்னளவில் அது தமிழனின் சரித்திர சாதனை.. கோசாம்பியின் அளவில் அது கரிகாலன் செய்த பாசிச வேதனை. வரலாற்றை மன்னர்களின் வெற்றியாகவே கண்டு பழக்க பட்ட நம்மவர்களுக்கு. ஒரு புதிய கோணத்தில் (மார்கிச்ய) கூறியதால் அன்றைய காலகட்டத்தில் அது பெரிதும் அனைவராலும் விதந்தோத பட்டது.. இன்றும் கூட உலகில் உள்ள அனைத்து மார்க்சியவாதிகளால் பெரிதும் மதிக்க தக்க ஒரு ஆய்வாளர் கோசம்பி… ஆகவே, இந்து சமயத்தை தோல் உரித்து காட்டினார் என்று நீங்கள் கோசம்பியை கொண்டாடுவதில் ஆச்சர்ய படுவதில் ஒன்றும் வியப்பில்லை…

    //ராகுல சாங்கிருத்தியாயன், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா உள்ளிட்டு பலரும் அம்பலப்படுத்தியுள்ளனர். குறிப்பாக தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, டி.டி.கேசாம்பி போன்றோர் வேதம், கீதை, உபநிசத்துகள் அனைத்தும் இந்திய பழங்குடி மரபுகளை களவாடி உட்செரித்தன என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளனர்.//

    நான் இதற்க்கான பதிலை முன்பே கூறி விட்டேன்.. ராகுல சாங்கிருத்தியாயன் நூலான வால்கா முதல் கங்கை வரை என்னும் நூலில் வரும் “ப்ரவாஹன்” என்னும் தலைப்பில் வருவதை படித்தாலே மார்கிச்ய பார்வையின் லட்சணம் தெரியும். ஒன்றும் இல்லை நாத்திகர்களுக்கு ஆதரவான கருத்துக்களாக அதில் கூறி கூறி இருப்பார்.. அவர் அவர்களின் கண்ணோட்டத்தில் இந்திய வரலாற்றையும் இந்து சமய தத்துவங்களையும் திரிகிறார்கள் . உங்களுக்கு புரியும் படி கூற வேண்டுமானால் தெய்வ நாயகம் என்கிற ஒரு கிருத்துவர் ” இந்திய தத்துவஞான” மரபிற்கு முக்கிய காரணமே புனித தோமா(saint thomas) இந்தியாவிற்கு வந்தது தான் காரணமாம்.. வேதம் உபநிஷதங்களில் கூறி இருப்பதெல்லாம் இயேசு நாதரை பற்றி தானாம். அவ்வளவு என் ,தமிழர்களுக்கு சிந்திக்க கற்று கொடுத்தே தோமா தானம். இதற்க்கு என்ன சொல்வது.. கேட்டால் என்னிடம் இதற்கான ஆதராம் இருபதாக கூறுகிறார்.. எதையோ பேர் வேத தத்துவ ஞான மரபை சிதைக்க பார்கிறார்கள். ஆனாலும், இந்து சமயம் அதன் பாதையில் எந்த சிதைவும் இல்லாமல் பயணித்து கொண்டு தான் இருக்கிறது.

    //கீதையிலும், வேத சாஸ்திரங்களிலும் எல்லாமும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதென்றால் அதை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வேறு எவரையும் படிக்கவிடாமல் தாங்கள் மட்டுமே படித்து வந்த பார்ப்பனர்கள் எதையுமே கண்டுபிடிக்கவில்லையே ஏன்?//

    ஆயிரம் அல்ல 2000 ஆண்டுகளுக்கு மேலாக என்று மாற்றி கொள்ளவும்.. இதற்க்கு பார்பனர்களின் பிழைப்புவாதம் கூட காரணமாக இருக்கலாம். வேதத்தில் இருக்கும் அறிவு கருவூலங்களை விட்டு. அதன் ஒரு அங்கமான வெறும் யாகங்களை செய்து பொருளீட்டும் விச்யதிர்க்காக மட்டும் அவர்கள் வைத்து கொண்டார்கள். அதனால் தான் வரலாற்றில் வேதங்கள் அதிக விமர்சனத்திற்கு உள்ளானது..

    //நீங்கள் ஆதாரமாக காட்டிய ஓப்பன்ஹீமரின் மேற்கோள்கள் கீதை தனக்கு மன உந்துதல் அளித்ததாகவும், தமது ஆன்மீக தேடலகளுக்கு உத்வேகமளித்ததாகவுமே குறிப்பிடுகின்றனவே அன்றி எங்கும் கீதையிலிருந்து அவர் அறிவியல் கருத்துகளை பெற்றுகொண்டதாக குறிப்பிடவில்லை.//

    ஆம் நானும் அதை தான் கூறினேன்..தனக்கு உந்துதலாக இருப்பதாக தான் அவர் கூறினார் என்று சொன்னேனே தவிர அதில் இருந்து தான் அணு ஆயுதத்தை தயாரிக்க அவர் “Formula” வை எடுத்து கொண்டார் என்று எங்கும் நான் கூறவில்லையே.. உந்துதல் என்பதற்கு ஆங்கிலத்தில் inspiration என்று தான் சொல்வார்கள்..

  15. எந்த மதத்தயும் விஞ்ஞானரீதியில் நிறுவ முயலாதீர்கள் அது தோல்வியில்தான் முடியும் பைபிலில் பகவத்கீதையில் குரானில் எதிலும் விஞ்ஞானம் இல்லை நயவஞ்சக மத வாதிகள் பணம் பெறுவதற்க்கும் தங்கள் மதத்திற்க்கு ஆள் பிடிக்கவும் மதத்தை விஞ்ஞான ரீதியில்நிருபிக்க முயன்று அவர்களின் மத புத்தகதின் மூலமே மூக்குடை பெற்று இருக்கிறார்கள்,மதம் அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை அதில் விஞ்ஞானத்தை தேடுவது வீண் வேலை

  16. இதன் சுருக்கம் என்னவென்றால் அறிவியலை வளர்த்தது பாட்டாளி வர்க்கம்(புஜமுக வின் பாட்டனார் முப்பாட்டனார்கள்.)வளரவிடாமல் தடுத்தது — சரியாக யூகித்துவிட்டீர்களே … கரெக்ட் … பார்ப்பனர்கள்.

    இந்த உண்மையைக் கண்டு பிடித்தது வினவும் நமது பெரியாரிசத் தோழர்களும்.

  17. மிக மிக அருமையான பதிவு. முதலில் ஒரு அறிவியல் ஆராச்சியாளர் என்ற முறையில் நன்றி கூறுகிறேன். அறிவியல் பற்றி பேசும் தமிழ் ஊடகங்கள் இப்போது தமிழ் சூழலில் இல்லை. எனவே இந்த பதிவு தமிழ் வாசகர்களுக்கு அதிக முக்கியத்தும் பெறுகிறது. கடந்த ஒரு வருடமாகத் தான் வினவினை படித்து வருகிறேன். எனக்குள் ஒரு சமுதாய விழிப்புணர்வை, சமுதாயம் பற்றிய சிந்தனையை, தினம் தினம் வளர்த்து கொண்டு வருகிறது. வினவுக்கும் அதன் தோழர்களுக்கும் கோடி நன்றிகள்.

  18. வியப்பூட்டிய சில தகவல்கள் அளித்தமைக்கு நன்றி வினவுக்கு.என் நம்பிக்கை இப்போது பன்
    மடங்கு அதிகரித்துள்ளது.

  19. தாயுமானவன் அவர்களே.

    நீங்கள் கூறிய கருத்துக்கள் தொடர்பாக நான் எழுப்பிய வினாக்களுக்கு விடையளிக்கவில்லை. இருந்தபோதிலும் ஆணிக்கு நீங்கள் அளித்த பதிலும் மோசடியாகவே இருக்கிறது.

    வரலாற்றில் E=mc^2 எனும் கட்டுரை ஹெய்மரைப் பற்றி கூறும் பொழுது மெய்ட்டனரின் கடின உழைப்பையும் சரியாக பதிவு செய்கிறது. ஹெய்மரும் ஒரு கட்டத்தில் மெய்ட்டனரை நைச்சியமாக புறக்கணித்துவிட்டு தன் ஆராய்ச்சிக்கு இந்து ஞான தத்துவவிசாரம் அளிப்பது வேசைத்தனமானது என்பது என் கருத்து. இது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?

    ஒரு கருத்தை ஆராய்வதற்கு நீங்கள் வைக்கும் அளவுகோல் வக்கிரமாக இருக்கிறது. டி.டி.கோசாம்பி மற்றும் சட்டபாத்யாயா மார்க்சிய பார்வையில் ஆராய்வதால் தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று எழுதுகீறிர்கள். நீங்கள் நேர்மையாளர் என்றால் அவர்கள் வைத்த கருத்தில் எது சரி? எது தவறு? இந்து ஞான மரபு எப்படியெல்லாம் திரிக்கப்பட்ட்து (?!!!) என்பதைச் சொல்லவேண்டும். கருத்து தளத்தில் விமர்சனமும் சுயவிமர்சனமும் தான் இலக்குகள் எனும் போது இக்கால மனுவை போன்று நீங்கள் நடந்து கொள்வது அருவெறுக்கத் தக்கதாக இருக்கிறது.

    தோமையாரைப் பற்றி கூறும் பொழுதே உங்களுக்கு சிரிப்பாய் வருகிறது. யுரேனியத்தைப் பிளந்து பேரியம் வருவதை விளக்குவதற்கு வேதம் உந்துதலாக இருந்தது என்று ஹெய்மர் சொல்லும் பொழுது உங்களுக்கு ஒன்றுமே தோன்றவில்லையா? ‘மனிதரைப் போல், இருக்கீன்றீர் என்ன வாழ்வு?’

    ஹெய்மர் ஒருவேளை “சோமபானம் அருந்திய இந்திரனின் வயிறு கடல்போல் பரவுகிறது” எனும் ரிக்வேத சம்ஹிருதைக்கு சியர்ஸ் போட்டிருப்பார் என்று நினைக்கிறேன். கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்கள்.

    \\மார்க்சிய, பெரியாரிய சரித்திர கண்ணோட்டத்தின் படி பார்த்தல். வரலாறு அனைத்துமே இருண்ட காலமாக தான் தெரியும்.\\

    நம் வரலாறு அனைத்துமே இருண்ட காலமாகத்தான் இருக்கிறது. இடங்கை, வலங்கை சாதிகள் மேவாரம் தாவாரம் என்று வரிகட்டியே சாகவில்லையா? திருவாதங்கூர் சமாஸ்தனத்துக்கும் எட்டு வீட்டு பிள்ளைமார்களுக்கும் (நிலக்கிழார்கள்) திருப்படித்தானம் (பத்மனாபனின் ஆட்சி) என்ற பெயரில் தலை வரி, முலை வரி கட்டவில்லையா? தீண்டாமை போதாது என்று காணாமை வேறு இருந்ததே அந்த வரலாறு என்ன பொற்காலமா? உம்மைப் பொறுத்தவரை எது பொற்காலம்? எது பண்பாடு? விளக்குங்களேன் தெரிந்து கொள்கிறோம்.

    ஆபிரகாம் பண்டிதரின் தமிழ் இசை ஞான மரபு தெரியும். அது என்ன இந்து ஞான மரபு? தத்துவம் என்று சொல்லி ‘பன்றி எதற்கு தங்கத்தில் மூக்குத்தி’?

    \\ஆயிரம் அல்ல 2000 ஆண்டுகளுக்கு மேலாக என்று மாற்றி கொள்ளவும்.. இதற்க்கு பார்பனர்களின் பிழைப்புவாதம் கூட காரணமாக இருக்கலாம். வேதத்தில் இருக்கும் அறிவு கருவூலங்களை விட்டு. அதன் ஒரு அங்கமான வெறும் யாகங்களை செய்து பொருளீட்டும் விச்யதிர்க்காக மட்டும் அவர்கள் வைத்து கொண்டார்கள். அதனால் தான் வரலாற்றில் வேதங்கள் அதிக விமர்சனத்திற்கு உள்ளானது\\

    சரி. வேதத்தை ஆதாரமாகக் கொண்டு வருண சிந்தாமணி எழுதி, வேளாள சாதியே சிறந்தது என்று பிள்ளைமார்கள் சொல்லவில்லையா? சித்தூர் அதலாத் கோர்ட் தீர்ப்பில் வேதத்தின் படி நாங்களே சிறந்தவர்கள் என்று ஆசாரிகள் சொல்லவில்லையா? ‘வன்னிய சத்ரியாஸ்’ என்று சொல்பவனும் வேதத்தையும் புராணத்தையும் வைத்துதானே சாதிப் பெருமை பேசுகிறான்? இந்து மதமே கொடூரங்களின் கூடாரம் எனும் போது ஒரு இந்துவிற்கு சமூகம் என்பது தான் சாதி எனும்பொழுது (அம்பத்கேர் கூறியது) அறிவு கருவூலங்களைப் பற்று பேச என்ன யோக்கியதை இருக்கிறது தாயுமானவன்?

    \\ஆம் நானும் அதை தான் கூறினேன்..தனக்கு உந்துதலாக இருப்பதாக தான் அவர் கூறினார் என்று சொன்னேனே தவிர அதில் இருந்து தான் அணு ஆயுதத்தை தயாரிக்க அவர் “Formula” வை எடுத்து கொண்டார் என்று எங்கும் நான் கூறவில்லையே.. உந்துதல் என்பதற்கு ஆங்கிலத்தில் inspiration என்று தான் சொல்வார்கள்..\\

    உந்துதல் குறித்து நான் ஒரு கேள்வியை முன்வைத்தேன்; “நம்முடைய வரலாற்றில் புராணங்களும் வேதங்களும் சாதிப் பெருமை பேசுவதற்கு மட்டுமே பயன்பட்ட பொழுது ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளுக்கு இவை எப்படி inspiration ஆக இருந்தது என்பதை விளக்குவீர்கள் என்று நம்புகிறேன்.”

    பதில் வரவில்லை. என்ன காரணம்? யார் செய்த தாமதம்?

    சென்ற பதிவில் வேதத்தைப் பயன்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக மாட்டுக்கறி பிரதான உணவு என்று வேதங்களில் இருந்து சான்றுகளை வைத்து இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

    “நீங்களாவது முட்டாள் இல்லையென்றால், வேதத்தில் மாட்டுக்கறி பிரதான உணவாக இருக்கும் போது, இந்து வெறியர்கள் ஏன் பசுமாட்டை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர் என்பதையும், செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் நடுரோட்டில் அடித்தே சொல்லப்பட்டனர் என்பதையும் அம்பலப்படுத்துவதற்கு எங்களுடன் நீங்கள் வருவீர்களா தாயுமானவன்.”

    “…gam alabhate [2]; yajno vai gauh; Yajnam eva labhate; atho annam vai guah; Annam evavarundhe….

    ‘(At the horse-scarifice) he (the Adhvaryu) seizes (binds) the cow (i. e. cows). The cow is the sacrifice. (Consequently) it is the sacrifice he (the scarificer) thus obtains. And the cow is certainly is food. (Consequently) it is food he thus obtains’
    English Translation by Paul-Emile Dumont, Proceedings of the American Philosophical Society 92.6 (December 1948). Page. 485.

    டி. என். ஜாவின் ‘the myth of the holy cow’ என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
    இதை ஆதாரமாக கொண்டு ஆர். எஸ். எஸ் மற்றும் பிஜேபியை அம்பலப்படுத்த ஒரு இந்துப் புருசனாக வருவீர்களா தாயுமானவன்?

    நம் நாட்டில் இதற்கே துப்பில்லாமல் எள் காய்கிற இடத்தில் எலிப்புழுக்கையாக ஐன்ஸ்டீன், ஹெய்மரையும் வேத புராணத்திற்கு ஆதரவாக இழுப்பதற்கு சிறிதளவும் வெட்கப்படவில்லையா?”

    இதற்கு இன்னும் பதில்வரவில்லை.

    நீங்கள் எங்களுடன் பழகுவதற்கு உணவு சுத்தசைவமாக இருக்கவேண்டும் என்று நிபந்தனை வேறு போடுகீறிர்கள். காந்தி வேறு ஹரிசன் என்று பெயர் வைக்கிறார்.

    பெயர்வைத்தவரைப் பார்த்து “ஹரிசன் என்று பேருவைக்க யாரடா நாயே?” என்று நாங்கள் விமர்சனம் வைத்தோம். நீங்கள் வேதத்தைப் பயன்படுத்தி பசு புனிதம் இல்லை என்று ஒரு இந்துவாக அம்பலப்படுத்தாவிட்டால் உங்களைப் பற்றியும் பாடல் எழுதுவோம். தர்மசிரத்தையோடு பரிசீலிப்பீர்கள் என்று நினைக்கிறேன். மற்றபடி நமக்கு அறிவியல் சுட்டுப்போட்டாலும் வராது என்பதை சண்டபிரசண்டமாக ருசுவாக்கீவிட்டீர்! சமேத ஸ்ரீ பகவதே நமஹ!

    • இது மட்டுமின்றி எல்லா நவீன அறிவியியல் கண்டுபிடிப்புகளும் “இந்து ஞான மரபினால்” உத்வேகம் (Inspiration) பெற்று உருவானவை என்பதால் அதற்கு வடிவுரிமைகளை (Patents & Copyrights) பெற்று வைத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவும், அந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொம்பு தூக்கும் பா.ஜ.க பரிவாரங்களுக்கும் எதிராக போராட வருவீர்களா தாயுமானவன்?

      முக்கியமாக, இந்திய வேளான் மரபை திருடி அவற்றுக்கு கயமைத்தனமாக வடிவுரிமை பெற்றிருக்கும் அமெரிக்காவுக்கும் அதற்கு உடந்தையாக இருந்த (பிஜேபி உட்பட) இந்திய அரசுகளுக்கும் எதிராக போராட எங்களுடன் கைகோர்ப்பீர்களா தாயுமானவன் அல்லது அதற்கும் நாங்கள் சுத்த சைவர்களாக இருக்க வேண்டுமா ?

    • தென்றல், உங்கள் கவனத்திற்கு – சிறு திருத்தம் – ராபர்ட் ஓபன்ஹெய்மரும், ஓட்டோ ஹானும் வேறு வேறு நபர்கள். ஓட்டோ ஹானே லிசா மைட்னருடன் ஆய்வில் ஈடுபட்டு பின்னர் அவரை புறக்கணித்துவிட்டு நோபல் பரிசை பெற்றார்.

  20. ஆணி ,தென்றல் போன்றவர்கள் கேட்டுக்கும் தர்க்க பூர்வமான ,அறிவியல் பூர்வமான கேள்விகள் இந்து-சாதி வெறியார்களின் சில்லி மூக்கை உடைத்து இரத்தம் சொட்ட வேக்கின்றது.

    • அது என்னய்யா இந்து சாதி வெறியர்கள் ? இந்துவாக இருப்பவர்கள் எல்லாமே சாதி வெறியர்களா ?

      • நந்தன் அவர்களே,

        இந்துவாக இருப்பவர்கள் எல்லோரும் சாதி வெறியர்கள் அல்ல.
        அனால் சரவணன் அவர்கள் குறிப்பிட்டது அனைத்து இந்துக்களையும் அல்ல, இந்த பதிவின் பின்னூட்டங்களில் விவாதம் செய்த குறிப்பிட்ட சில இந்து-சாதி வெறியர்கள் பற்றி தான்.
        நீங்கள் சாதி வெறியராக இல்லாத பட்சத்தில் நீங்கள் சரவணனின் பதிவிற்கு கோபப்படவேண்டிய அவசியம் இல்லை நண்பரே.

        • சிலர் இந்து மதத்தில் அறிவியல் இருப்பதாக நம்புகிறார்கள். இப்படி நம்புவதால் அவர் இந்து சாதி வெறியர்கள் ஆகி விடுவார்களா ?

          “இந்த பதிவின் பின்னூட்டங்களில் விவாதம் செய்த குறிப்பிட்ட சில இந்து-சாதி வெறியர்கள் பற்றி தான்.”

          எந்த அடிப்படையில் அவர்களை இந்து சாதி வெறியர்கள் என்று சொல்கிறீர்கள் ? பின்னூட்டங்களை மறுபடியும் படித்து பாருங்கள். யார் சாதியைப் பற்றி பேசுவது ?

          இந்துவாக தன்னை கூறிக் கொள்பவன், சங்கரரின் சாதீயத்தை ஒதுக்கி விட்டு அவரின் அத்வைதத்தை ஏற்றுக் கொள்ள முடியும்.

          • nanthan,

            “நீங்கள் எப்படி எப்போதும் கையில் கள்ளு பானையுடன் தீண்டாசேரியில் மொக்கை கவிதைகளை பாடிக் கொண்டு புலையர்களுடன் ஆடி கொண்டிருப்பீரோ… யாம் அறியோம் பராபரமே…”

            comment no 135 in
            https://www.vinavu.com/2014/03/05/cricket-indian-patriotic-chauvnism/#respond

            இதை கூறிய இந்து-சாதி வெறி — யார்?
            இது எந்த IIT யில் படித்தது ?
            சாதி வெறி பீடித்த இதை எதால் அடிக்கலாம் ?

            nanthan//எந்த அடிப்படையில் அவர்களை இந்து சாதி வெறியர்கள் என்று சொல்கிறீர்கள் ? பின்னூட்டங்களை மறுபடியும் படித்து பாருங்கள். யார் சாதியைப் பற்றி பேசுவது //

          • nanthan,

            “அறிவில் சிறந்த பார்பனர்,வெள்ளாளர் ஆகிய இருவரும் தான் அந்நாளில் நீதி துறை, நிர்வாக துறை(Civil departments) இரண்டையும் கவனித்து கொண்டார்கள். அதனால் அவர்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது.. இன்றும் கூட இந்த இரு துறைகளிலும் இருபவர்களுக்கு தான் மதிப்பும் கௌரவமும் அளிக்க படுகிறது.”
            comment 62 in
            https://www.vinavu.com/2014/03/05/cricket-indian-patriotic-chauvnism/#respond

            இதை கூறிய இந்து-சாதி வெறி — யார்?

            nanthan///சிலர் இந்து மதத்தில் அறிவியல் இருப்பதாக நம்புகிறார்கள். இப்படி நம்புவதால் அவர் இந்து சாதி வெறியர்கள் ஆகி விடுவார்களா ?//

        • இந்து-சாதி வெறியர்கள் பற்றி என் சார்பாக பதில் அளித்தமைக்கு நன்றி கற்றது கையளவு

          • சரி. தாயுமானவர் திருத்திக் கொள்ள வேண்டும். சாதி சாகவில்லையென்றால் இந்து மதம் சாகும். இதை தாயுமானவர் போன்றோர் உணர வேண்டும். அறிவு பிறப்பு சார்ந்ததில்லை, வாய்ப்பு சார்ந்தது. உருவ வழிபாடு செய்பவர்களை மிருகத்துக்கும் கீழே மதிக்கும் மனித கூட்டமும் உலகில் உண்டு. பிறப்பில் ப்ராமணனாக இருந்தாலும் இதே கதிதான். ஆப்கானிஸ்தானில் பிறந்த நாயும் , ப்ராமணன் உட்பட எல்லா சாதி இந்துக்களும் தீண்டக் கூடாதவை என்பதை உணர வேண்டும். அடிமை புத்தி உள்ளவனுக்குத்தான் தனக்கு ஒரு அடிமை வேண்டும் என்று தோன்றும்.

            • ‘தாயுமா’க்கு அட்வைஸ் செய்த உடனே flightலுல ஏறி சர்ருனு ஆப்கான் போயிட்டிக்களே தல !

              நம்ம ஊரு மேட்டருக்கு வாங்க தல !

              இந்து மதம் என்று எதுவும் கிடையாது தல . பார்பனர்கள் தங்கள் வாழ்க்கை முறையை பார்பனர் அல்லாதவர் மீதும் ஏற்றி அவர்களையும் இந்துகளாக மாத்திடாங்க!

              நம்ம பாட்டன், முப்பாட்டன்…… காலத்துல நாம நம்ம குல தெய்வத்துக்கு தானே கடா வெட்டி,கள்ளு குடித்து வழிபட்டேம்.

              “சிறுதினை மலரொடு,மறி அறுத்து” உண்டு வாழ்ந்த திருமுருகாற்றுப்படை அசைவ முருகன் பார்பனர்களால் குட முழுக்கு சிகிச்சை மூலம் சைவனாக மாற்றப்பட்ட கதை தெரியுமா தல ?

              http://vansunsen.blogspot.in/2014/01/murugan-is-nonvigitarian.html

              //ஆப்கானிஸ்தானில் பிறந்த நாயும் , ப்ராமணன் உட்பட எல்லா சாதி இந்துக்களும் தீண்டக் கூடாதவை என்பதை உணர வேண்டும். அடிமை புத்தி உள்ளவனுக்குத்தான் தனக்கு ஒரு அடிமை வேண்டும் என்று தோன்றும்.//

              • சரவணன், எனக்கு இந்தியா எப்படியோ அப்படித்தான் ஆப்கானிஸ்தான். இரண்டுமே தூர தேசம்தான். இந்தியா உங்க ஊரு, எங்க ஊரு இல்ல.

                எனக்கு முழுமையாக இந்து மதம் பற்றி தெரியாவிட்டாலும் சிலநல்ல விசயங்களை ஏற்றுக் கொள்கிறேன். பார்ப்பனர்கள் சொன்னார்கள் என்பதற்காக மட்டுமே ஒன்றை ஒதுக்குவது அறிவுடைமை ஆகாது.

                மேலும் உங்க ஊர் சினிமா பாணியில் தல போடுவது அவ்வளவாக பிடிக்கவில்லை.

                • நந்தன் அவர்களே,

                  தங்களின் பெயருடைய நந்தனாரின் உண்மை கதை உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்.
                  ஜோதியில் கரைந்தார் என்று கள்ளம் உரைத்து அவரை எரித்தது யார்?

                  தாங்கள் இந்தியாவில் இல்லை என்கிறீர்கள். அப்போது இங்கு நடக்கும் சங்கதிகள் எல்லாம் தூர தேசத்தில் உள்ள உங்களுக்கு முழுவதுமாக தெரிய வாய்ப்பில்லை. பெரும்பாலும் அயல்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு தமிழக நிலவரங்கள், இந்திய நிலவரங்கள் மேம்போக்காக தான் தெரிகிறது. முகநூல், ஆங்கில ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் மோடி புகழ் பரப்பும் கூலிகளின் பின்னூட்டங்களை மட்டும் படித்தால் இந்தியாவை பற்றி தமிழகத்தை பற்றி தவறான கண்ணோட்டமே வரும்.

                  இந்து மதத்தினில் உள்ள நல்ல விடயங்களை நானும் தான் ஆதரிக்கிறேன். பார்ப்பனர்கள் சொன்னார்கள் என்பதற்காக ஒன்றை ஒதுக்குவது அறிவுடைமை இல்லை தான். ஆனால் அவர்கள் காலம் காலமாக நம் அனைவரின் மூளையையும் மழுங்கடித்து செய்த வேலைகளின் வரலாற்றை தெரிந்தும் அவர்கள் சொல்வது அத்தனையும் எப்படி நாம் நம்ப முடியும்.

                  இராமாயண, மகாபாரத, புராண கதைகளின் மூலம் பார்ப்பனர்கள் பொதுமக்களின் மூளையை மழுங்கடித்து வந்துள்ளனர். எல்லோருக்கும் ஒரு சட்டம் என்றால் அதில் பார்ப்பனர்களுக்கு மட்டும் விதிவிலக்கு. மற்ற சாதியினர் தவறு செய்தால் கொலை தண்டனை. ஆனால் பார்ப்பனர்களை வெறும் ஒதுக்கி வைப்பது, நாடு கடத்துவது போன்ற மென்மையான தண்டனை. பார்ப்பனர்களை கொல்ல கூடாது என பயந்து தான் அவர்களை கொன்றால் பிரம்மகத்தி தோஷம் என்று பயமுறுத்தி வந்துள்ளனர்.

                  மேலும் தற்கால நிகழ்வுகளிலும், அலுவலகங்களில் மேலிடத்தில் “போட்டு கொடுத்து” பெயர் வாங்குவது, மேலதிகாரியை வீட்டுக்கு கூப்பிட்டு விருந்து அளித்து காக்காய் பிடிப்பது போன்ற அவர்களின் செயல்களை நேரடியாக பார்த்து அனுபவப்பட்டவன் நான். தேவைபட்டால் எந்த ஒரு நிகழ்வையும் அப்படியே உல்டாவாக திருப்பி போட்டு கோயபல்ஸ் வகை பிரச்சாரம் செய்ய துணிந்தவர்கள் என்பதை நேரடியாகவே பல முறை கண்டுள்ளேன். சில சமயம் என்னையும் பார்ப்பனன் என்று நம்பி அவர்கள் வட்டத்திற்குள் என்னை சேர்த்து அவர்கள் பேசும் விடயங்களை நேரடியாக கேட்டு வந்துள்ளேன்.

                  வெளி உலகத்திற்கு அவர்கள் நேர்மை, நியாயம், நீதி, தேசபக்தி என்று பல வகை முகமூடிகளை போட்டுகொன்டாலும், உள்ளூர அவர்களின் எண்ண ஓட்டங்கள் என்ன என்பதை அருகில் இருந்து பார்த்தவன் என்ற வகையில் எனக்கு அவர்கள் சொல்வதை சந்தேகம் கொள்ளாமல் அப்படியே நம்புவதில் எனக்கு விருப்பம் இல்லை.

                  பார்ப்பனர்கள் எல்லோரும் தவறானவர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களின் சில செய்கைகள் (போட்டு கொடுப்பது, காக்காய் பிடிப்பது) எனக்கு அவர்கள் மேல் ஒரு அவநம்பிக்கை கொள்ள காரணமாக உள்ளது.

                • தலைவர் என்பதை சுருக்கி தல என்று அழைத்ததே உங்களுக்கு பிடிக்கவில்லை. சரி இனி அழைக்கவில்லை.

                  பார்பனர்கள் இந்து மதம் பற்றி கூறியதில் எது சரி என்று நீங்கள் கூறினால் நானும் ஆய்வு செய்து சரி என்றால் ஏற்கிறேன்.

                  மேலும் நம் தமிழ்ர்களீன் வழிபாட்டு முறை “சிறு தெய்வ” வழிபாட்டு முறை சார்ந்தது. பார்பனர்கள் வழிபாட்டு முறை ஆரிய வேதம் சார்ந்த தெய்வ[ஷிவா,விஷ்ணு,பிரம்மா] வழிபாட்டு முறை சார்ந்தது.

                  //எனக்கு முழுமையாக இந்து மதம் பற்றி தெரியாவிட்டாலும் சிலநல்ல விசயங்களை ஏற்றுக் கொள்கிறேன். பார்ப்பனர்கள் சொன்னார்கள் என்பதற்காக மட்டுமே ஒன்றை ஒதுக்குவது அறிவுடைமை ஆகாது.//

                  • Mr. Saravanan

                    //தமிழ்ர்களீன் வழிபாட்டு முறை “*** தெய்வ” வழிபாட்டு முறை சார்ந்தது.//

                    இவ்வளவு முற்போக்காக பேசும் நீங்களே நமது தெய்வங்களை சிறுமை படுத்துவது கண்டு மிகவும் அயர்ச்சியாக இருக்கிறது.
                    தெய்வங்களுக்கு சிறு பெரு போன்ற அடையாளங்கள் ஏய்த்துப் பிழைக்கும் எத்தர்களால் கற்பிக்கபட்டிருக்கின்றன. மற்றவர்கள் அவற்றை ஏற்றுக்கொள்வது முட்டாள்தனம்.

                    • Mr Univerbuddy,

                      சிறுதெய்வம் to -> நாட்டார் தெய்வம்.

                      Is it right Univerbuddy?

                    • Mr. Saravanan,

                      Still not right. It means Gods of villagers and so it is not right. I would say குல தெய்வங்கள். The thing is one should make them to be main gods instead of making them to be something else. All other gods you mentioned are also Aryans’ and others’ குல தெய்வங்கள். We can discuss if you have anything more to say.

                    • yes you are right “குல தெய்வங்கள்”.

                      It is a correct term we can use.

                    • இத்தகைய “சிறு தெய்வங்கள்” ஊர்காவல் தேவதைகள், தான் நம் முன்னோரின் உண்மையான தெய்வங்கள். மற்றவை எல்லாம் இடைச்செருகல்கள் தான்.

                      முருகன், குமரன் – ஆதிகால திராவிடர்கள், மலைவாழ் குறவர்களின் தெய்வம். அதை ஆரியர்கள்,பார்வதியை நோக்கி பாய்ந்த சிவனின் ஸ்கந்தம் டார்கெட் மிஸ் ஆகி அது பொதிகை ஆற்றில் விழுந்து ஸ்கந்தத்தில் இருந்து கந்தனாக மாறியது என்று கதை திரித்து நம்மவர்களை ஏமாற்றினார்.

                      சேரநாட்டில் இருந்த எல்லைக்கடவுளான அய்யப்ப சாமியை சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த குழந்தையாக கதை விட்டு கோவிலை கைபற்றினார்.

                      திருப்பதியில் இருப்பது கூட பெருமாள் சிலை அல்ல. காளி சிலை தான்.
                      திருப்பதி சிலையின் பின்புறம் பார்த்தால் நீண்ட கூந்தல் முடிப்போடு இருக்கும் பெண் வடிவத்தை காணலாம்.

                    • Mr. Saravanan,

                      அம்மன் போன்ற தெய்வங்களுக்கும் குல தெய்வங்களுக்கும் சிறுது வேறுபாடு இருப்பதால் அம்மன் போன்ற தெய்வங்களுக்கு தமிழர்/ திராவிடர் தெய்வங்கள் என்று அழைக்கலாம்.

                      All we need is a little bit of imagination and sense of self-respect.

            • நந்தன் உங்கள் வாதத்தை மறுக்கிறேன்.
              சாதி அழிந்தால் பார்பன-இந்து மதமும் அழீயும் ஏன் எனில் பார்பன-இந்து மதமே சாதிய்த்தீன்[@@@ 4+1வர்ணத்தீன்] அடிபடையில்[base] கட்டபட்டது தானே !

              @@@
              பிராமண
              ஷத்ரீய
              வைசீய
              ஷுத்ர
              பஞசம

              //சாதி சாகவில்லையென்றால் இந்து மதம் சாகும்//

            • நந்தன் ,

              இது மிகவும் நேர்மையான அனுகுமுறை
              நன்றி

              //அறிவு பிறப்பு சார்ந்ததில்லை, வாய்ப்பு சார்ந்தது. //

              • சரி. எனக்கு சரியாக தெரியவில்லைதான். இங்கே எங்களை இந்துக்கள் என்றுதான் கூறிக் கொள்கிறோம். 90% காதல் திருமணம் என்பதால் சாதி கிட்டத்தட்ட இல்லாமல் ஆகி விட்டது.

                எனக்கு அத்வைதம் பிடித்திருக்கிறது. முழுமையாக தெரியாவிட்டாலும் ஓரளவுக்கு படித்திருக்கிறேன்.

                தண்டனை முறையை நானும் படித்திருக்கிறேன். கருட புராணம் கிடைத்தால் படித்து பாருங்கள். இன்னும் கேவலமாக இருக்கும்.

                சாதி வெறியை சினிமாவிலும் , செய்தியிலும் பார்த்திருக்கிறேன். ஒருவேளை நீங்கள் நேரில் அனுபவித்ததால் கோபம் அதிகம் இருக்கலாம்.

                சீனர்கள் உட்சாதிக்குள் திருமணம் செய்வதை ஆதரிப்பதில்லை. கலப்புதான் “புதிய” ” சிறந்ததை” உருவாக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. அது போலவே அவர்கள் சிறந்தும் விளங்குகிறார்கள்.

                நமது இன மர மண்டைகளுக்கு எப்பொழுதுதான் இதெல்லாம் விளங்க போகிறதோ தெரியவில்லை.

                • ஆம் நீங்கள் கூறுவது போல சாதி கலப்புதான் அறிவியல் படி சிறந்தது. [நம்பிக்கை மட்டும் அன்று ]

                  என்ன பயம் நந்தன்?

                  தைரீயமாக கூறுங்கள் “நமது தமிழ் நாட்டு மர மண்டைகளுக்கு எப்பொழுதுதான் இதெல்லாம் விளங்க போகிறதோ தெரியவில்லை” என்று கூறுங்கள்!

                  உங்கள் வாதத்தில் இருந்து உங்களை secular Hindu ஆக கருதமுடிகிறது. நன்று.

                  //சீனர்கள் உட்சாதிக்குள் திருமணம் செய்வதை ஆதரிப்பதில்லை. கலப்புதான் “புதிய” ” சிறந்ததை” உருவாக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. அது போலவே அவர்கள் சிறந்தும் விளங்குகிறார்கள்.

                  நமது இன மர மண்டைகளுக்கு எப்பொழுதுதான் இதெல்லாம் விளங்க போகிறதோ தெரியவில்லை.//

                • All good,but Caste is not an ethnic marker.

                  To achieve pluralism in DNA,you have to go and marry someone atleast from another state and even that wont count much.

                  All Tamils dont have much difference in genes,perhaps one thing to avoid is marrying within family.

  21. பகவத் கீதையிலிருந்து தான் பகவான் பிறந்தார். பகவானிடமிருந்து தான் பகவத் கீதை பிறந்தது.பகத்சிங் கூட பகவத் கீதையின் மறுபதிப்பு.ஆம்ஸ்டிராங் நிலவுக்குப் போகும்போது பகவத் கீதையை பைபிளுக்குப் பின்னால் ஒழித்து வைத்து எடுத்துப் போனார்.என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.ஒரு அறிவியலாளர் தன் கண்டுபிடிப்புக்கு உறுதுணையாகக் கொள்வது அவருடைய கண்டுபிடிப்புக்கு முந்தயனிலையில் தீர்க்கப்படாமலிருப்பது எதுவோ அதிலிருந்துதான் தொடங்குவார்.தொடங்கமுடியும்.அதற்கு முன்பாக, அவர் நம்பினால் சாமியைக்கூட கும்பிடலாம்.ஆனால் ஆய்வை அங்கிருந்து தொடங்கமுடியாது.பெரும்பாலும் இப்படிப்பட்ட தகவல்களை பின்னர் வருகிறவர்கள் தான் சொல்கிறார்கள்.அவர்களுடைய நோக்கம் அறிவியல் கண்டுபிடிப்பின் பயனைவிட கடவுள் நம்பிக்கையை பரப்புவதாக மாறிவிடுகிறது.இயற்கையில் அறியப்படாத புதிர்கள் நிறையவே உள்ளதால் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மேல் தங்களை நிறுத்திக் கொள்ளும் போக்கு ஆன்மீகவாதிகள் அல்லது மதவாதிகளிடம் எப்போதும் இருந்துவருகிறதுதான்.அவர்கள் அவர்களின் ’புனித’ நூல்களை வைத்துக்கொண்டு ஓதிக்கொண்டிருக்கிறார்களே தவிர அதை வைத்துக்கொண்டு எதையும் கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை. இசுலாமிய மதப் பேச்சாளர் ஒருவர் பேசுகிறார்,”இந்த உலகில் பிறக்கிற ஒவ்வொரு உயிரும் முசுலீமாகத்தான் பிறக்கிறது”என்று அல்லா சொல்கிறார்.ஆர்.எஸ்.எஸ்.சொல்கிறது இந்தியாவில் பிறக்கிற ஒவ்வொரு உயிரும் இந்து தான் என்று.அறிவியலின் வளர்ச்சி காரணமாக கடவுள்,மத நம்பிக்கைகள் தகர்ந்து வருகிறது.அதை தடுத்து நிறுத்த அவர்கள் இவ்வளவு கீழ்த்தரமாக இறங்குகிறார்கள்.ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பினால் இவ்வுலகத்திற்கு கிடைத்த பயன்கள் அல்லது எதிவினைகள் என்னென்ன என்பதை ஆய்வு செய்வதை விட்டுவிட்டு கீதை சொன்னது .குரான் சொல்லியது.பைபில் சொல்லியது என்பதா தேவை.இது மக்களை மடமையில் இருத்தி வைத்திருப்பதற்கான சூழ்சிகள் தவிர வேறென்ன?

  22. தவறு தான் ஆணி. அணு ஆராய்ச்சியில் மூவரும் ஈடுபட்டதால் ஹெய்மரையும் ஹாணையும் மெய்ட்டனரையும் குழப்ப நேர்ந்தது. திருத்திக் கொள்கிறேன்.

    அணுவைப் பிளப்பதற்கு ஹெய்மர் கொடுத்த வேதபின்புலமும், அதற்கு அண்ட கொடுக்கும் தாயுமானவரின் கருத்தும் மெய்ட்டனரின் உழைப்பை உதாசீனப்படுத்துவதால் இதைக் குறிப்பிட வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.

  23. கல்லூரி நாட்களில் பாடங்களில் படித்த அறிவியலாளர்கள் அனைவரையும் நினைவூட்டிச் செல்கிறது இக்கட்டுரை. அன்று விரிவாக படித்தவைகளை மீண்டும் படிக்கத் தூண்டியுள்ளது இக்கட்டுரை. மீண்டும் ஒரு முறை அப்படி படித்தால் மட்டுமே இக்கட்டுரையை முழுமையாக புரிந்து கொள்ள முடியும் எனக் கருதுகிறேன். அதற்கு முன் இக்கட்டுரையை ஒரு முறைக்கு பல முறை படிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

    நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை புராணங்களில் தேடும் அதிமேதாவி ‘அறிஞர்கள்’கள் பலர் இருக்கவே செய்கின்றனர். அவர்கள் அறிவியலை மக்களின் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்குப் பதிலாக புராணங்களை பாதுகாக்கவே அதிகம் முற்படுகின்றனர். ஒரு முறை ஒரு கருத்தரங்கின் போது நெய்வேலி நிலக்கரிச் சுரங்க அதிகாரி ஒருவர் (பார்ப்பனர்) இந்து மதப் புராணங்களிலேயே ஐன்ஸ்டீனின் வதிகள் விளக்கப்பட்டுள்ளதாகக் கதை அளந்தார். அப்போது நான் குறுக்கிட்டு “அப்படியானால் E=mc2 எந்தப் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆதாரம் காட்டமுடியுமா?” என கேள்வி கேட்டபின் நான் அமர்ந்திருந்த பக்கமாகத் திரும்பி பேசுவதையே தவிர்த்துவிட்டார்.

    சிறந்ததொரு ஆக்கம். வாழ்த்துகள்!

  24. திரு.தென்றல் …

    //வரலாற்றில் E=mc^2 எனும் கட்டுரை ஹெய்மரைப் பற்றி கூறும் பொழுது மெய்ட்டனரின் கடின உழைப்பையும் சரியாக பதிவு செய்கிறது. ஹெய்மரும் ஒரு கட்டத்தில் மெய்ட்டனரை நைச்சியமாக புறக்கணித்துவிட்டு தன் ஆராய்ச்சிக்கு இந்து ஞான தத்துவவிசாரம் அளிப்பது வேசைத்தனமானது என்பது என் கருத்து. இது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?//

    ஹெய்மரின் கருத்து வேசைத்தனமானது என்பது உங்கள் நிலைப்பாடு.. அதையே அனைவரும் ஏற்றுகொள்ள வேண்டும் என்று நினைத்தால் எப்படி.. ஹெய்மர் பகவத் கீதை குறித்து என்ன கூறினார் என்பதை தான் நான் மேற்கோள் காட்டினேன்.. அதில் எனக்கு சந்தோஷமே.

    //ஒரு கருத்தை ஆராய்வதற்கு நீங்கள் வைக்கும் அளவுகோல் வக்கிரமாக இருக்கிறது. டி.டி.கோசாம்பி மற்றும் சட்டபாத்யாயா மார்க்சிய பார்வையில் ஆராய்வதால் தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று எழுதுகீறிர்கள். நீங்கள் நேர்மையாளர் என்றால் அவர்கள் வைத்த கருத்தில் எது சரி? எது தவறு? இந்து ஞான மரபு எப்படியெல்லாம் திரிக்கப்பட்ட்து (?!!!) என்பதைச் சொல்லவேண்டும். கருத்து தளத்தில் விமர்சனமும் சுயவிமர்சனமும் தான் இலக்குஎன்கள் எனும் போது இக்கால மனுவை போன்று நீங்கள் நடந்து கொள்வது அருவெறுக்கத் தக்கதாக இருக்கிறது.//

    ஓஹோ… உங்கள் மார்க்சிய பார்வையில் சரித்திரத்தை காண முடியாது என்று சொன்னால் வக்கிர புத்தி என்று அர்த்தமா.. சரி, மார்க்சிய பார்வையில் பார்க்காததால் எனக்கு நீங்கள் வக்கிர புத்தி காரன் என்று பெயர் வைப்பீர்களானால் மகிழ்ச்சியோடு ஏற்று கொள்கிறேன் அதற்காக எனக்கு எந்த வருத்தமும் இல்லை…

    வரலாற்றில்… உலகின் எல்லா மூலைகளிலும் ஒடுக்க பட்ட மக்கள் என்று இருக்க தான் செய்வார்கள். அதற்க்கு என்ன செய்வது. இன்றும் கூட இருக்கிறார்கள்.. அதற்காக தமிழரின், தமிழ் மன்னர்களின் வரலாற்றை பொற்காலத்தை ஒதுக்கி தள்ள என்னால் முடியாது.. நீங்கள் சோழ மன்னர்களின் வரலாற்றை கோசாம்பியின் மார்க்சிய அடிப்படையில் வரலாற்றை பார்பதுபோல். நான் சதாசிவ பண்டாரத்தார், குடவாயில் பாலசுப்ரமணியம், நீலகண்ட சாஸ்த்ரி, அமரர் கல்கி போன்றோரின் பார்வையில் தான் வரலாற்றை என்னால் கண்ணுற முடியும்.. அந்த அளவில் பார்த்தால் சோழர்கள் காலம் தமிழர்களின் பொற்காலமே.. அதை வக்கிர புத்தி என்றோ, அருவெறுப்பானது என்றோ கூற தங்களுக்கு எள்ளளவும் உரிமை இல்லை..

    //தோமையாரைப் பற்றி கூறும் பொழுதே உங்களுக்கு சிரிப்பாய் வருகிறது. யுரேனியத்தைப் பிளந்து பேரியம் வருவதை விளக்குவதற்கு வேதம் உந்துதலாக இருந்தது என்று ஹெய்மர் சொல்லும் பொழுது உங்களுக்கு ஒன்றுமே தோன்றவில்லையா?//

    இதில் எனக்கு தோன்றுவதற்கு என்ன இருக்கிறது.. ஒரு சிறந்த அராய்ச்சியாளர் பகவத் கீதையை பற்றி கூறியதை.. தக்க ஆதாரங்களுடன் அளித்து விட்டேன்.. ஆனால் தோமையார் தான் இந்து தத்துவ ஞான மரபிற்கு காரணம் என்று அவதூறுகளை வைத்து கொண்டு எந்த ஆதாரமும்இல்லாமல் ஒருவர் உளறுகிறார்…

    //நம் வரலாறு அனைத்துமே இருண்ட காலமாகத்தான் இருக்கிறது.//

    அது உங்களின் பார்வை.. எனக்கு தமிழ் மன்னர்களின் காலம் பொற்காலமாக தான் தெரிகிறது..

    //திருவாதங்கூர் சமாஸ்தனத்துக்கும் எட்டு வீட்டு பிள்ளைமார்களுக்கும் (நிலக்கிழார்கள்) திருப்படித்தானம் (பத்மனாபனின் ஆட்சி) என்ற பெயரில் தலை வரி, முலை வரி கட்டவில்லையா?//

    இது 300 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் வரலாறு. தலைவரியும்,முலைவரியும் தாழ்த்தபட்டவர்களுக்கு விதிக்க பட்டது என்று கீற்று தளத்தில் ஒரு முறை படித்ததாக ஞாபகம்.. சரி யாராக இருந்தாலும் கேரள அரசன் செய்தது தவறு தான் …

    //எது பொற்காலம்? எது பண்பாடு? விளக்குங்களேன் தெரிந்து கொள்கிறோம்.//

    விளக்கி பயனில்லை.. வாழ்க மார்க்சியம்.

    //சரி. வேதத்தை ஆதாரமாகக் கொண்டு வருண சிந்தாமணி எழுதி, வேளாள சாதியே சிறந்தது என்று பிள்ளைமார்கள் சொல்லவில்லையா? சித்தூர் அதலாத் கோர்ட் தீர்ப்பில் வேதத்தின் படி நாங்களே சிறந்தவர்கள் என்று ஆசாரிகள் சொல்லவில்லையா? ‘வன்னிய சத்ரியாஸ்’ என்று சொல்பவனும் வேதத்தையும் புராணத்தையும் வைத்துதானே சாதிப் பெருமை பேசுகிறான்? //

    ஹ்ம்ம்.. என்ன பண்றது எல்லாம் விதி.. எனக்கு தெரிந்த ஒரு கல்லூரி பேராசிரியர் மீனவ சமுகத்தை சேர்ந்தவர். அவர் என்னிடம் தான் மிக உயர்ந்த இனத்தை சேர்ந்தவர் என்று கூறினார் எப்படி என்று கேட்டதற்கு. இந்து மதத்தில் உயர்வானதாக கருத படும் நான்கு வேதங்களையும் தொகுத்த வியாசர் மீனவ பெண்ணுக்கு பிறந்தவர் தான். வேதமே புனிதமானது என்னும் போது. அதை தொகுத்த மீனவ குலத்தில் பிறந்த வியாசர் எவ்வளவு மென்மையானவர்..ஆகவே, அவரின் வழிவந்த நாங்களும் மேன்மை பொருந்தியவர்களே. என்று என்னிடம் சண்ட பிரசண்டம் செய்து கொன்று இருந்தார்.. இந்த காலத்திலே இப்படி என்னும் போது அப்போது கேட்கவா வேண்டும்.. சாதி பெருமை பேசுவதற்கு எல்லாம் உலகின் மிக சிறந்த அறிவு பொக்கிஷமான வேதங்களை துணைக்கு அழைப்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது..

    \\ஆம் நானும் அதை தான் கூறினேன்..தனக்கு உந்துதலாக இருப்பதாக தான் அவர் கூறினார் என்று சொன்னேனே தவிர அதில் இருந்து தான் அணு ஆயுதத்தை தயாரிக்க அவர் “Formula” வை எடுத்து கொண்டார் என்று எங்கும் நான் கூறவில்லையே.. உந்துதல் என்பதற்கு ஆங்கிலத்தில் inspiration என்று தான் சொல்வார்கள்..\\

    இதை நான் ஹெய்மருக்கு தான் கூறினேன்.. ஐன்ஸ்டீனுக்கு அல்ல…

    //டி. என். ஜாவின் ‘the myth of the holy cow’ என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
    இதை ஆதாரமாக கொண்டு ஆர். எஸ். எஸ் மற்றும் பிஜேபியை அம்பலப்படுத்த ஒரு இந்துப் புருசனாக வருவீர்களா தாயுமானவன்?//

    அது குறித்த ஆய்வுகள் இன்னும் நடக்கின்றன… டி.என்.ஜாவின் நூலை மட்டும் ஆதாரமாக வைத்து கொண்டு நான் ஏதும் கூற முடியாது.. கொஞ்சம் பொறுக்கவும்… உண்மை இருப்பின் மாட்டு இறைச்சியை தேசிய உணவாக அறிவிக்க முயற்சி எடுப்போம் போதுமா..

    //நீங்கள் எங்களுடன் பழகுவதற்கு உணவு சுத்தசைவமாக இருக்கவேண்டும் என்று நிபந்தனை வேறு போடுகீறிர்கள். //

    என்னை தவறாக புரிந்துள்ளீர்கள் ..எனக்கு தான் சுத்தசைவம் வேண்டும். நீங்கள் என் நண்பராவதற்க்கு எந்த நிபந்தனையும் கிடையாது.. நீங்கள் எதை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம் அது உங்கள் விருப்பம்…

    //மற்றபடி நமக்கு அறிவியல் சுட்டுப்போட்டாலும் வராது என்பதை சண்டபிரசண்டமாக ருசுவாக்கீவிட்டீர்! சமேத ஸ்ரீ பகவதே நமஹ!//

    என்ன ஒரு கண்டு பிடிப்பு.. உங்கள் அளவுக்கு எனக்கு விஞ்ஞான அறிவு கிடையாது தான்.. ஏதோ என்னால் முடிந்தது 12ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்றேன் .. அதன் பிற்கு டெல்லியில் உள்ள IIT உள்ள என்னும் அகில இந்திய உயர் தொழில் நுட்ப நிறுவனத்தில் என் உயர் கல்வியை முடித்தேன்.. விஷயம் என்னவென்றால் இங்கு நான் விஞ்ஞானம் பேச வரவில்லை. இந்து மத தத்துவார்த்தங்கள்.. இந்திய வரலாறு.. மார்க்சியர்கள் செய்யும் திரிபுகள் ஆகியன பற்றி தான் பேச வந்தேன்.. இந்த திரியில் இத்துடன் என் பேச்சை முடித்து கொள்கிறேன்.

    43இல் இருக்கும் மறுமொழிகளை 430 வரை கொண்டு செல்ல எனக்கு விருப்பம் இல்லை.. நன்றி

    • \\சைவ உணவு சாபிட்டால் உடலுக்கு நல்லது.. மனதிற்கும் நல்லது.. அறிவிற்கும் நல்லது.//

      டிஸ்டிரிக்ட் பர்ஸ்ட் வந்தவரு,தில்லி IIT இல பட்சவரு,அவ்ரு சொன்னா சரியாதா இருக்கும்.இன்னும் கொஞ்ச நாள்ல பாருங்க.அய்யிரு வூட்டு புள்ளங்களும் வெள்ளாள வூட்டு புள்ளங்களும் நோபல் பரிசா வாங்கி குமிச்சுருவாங்க.ஏன்னா அவுங்கதா சுத்த சைவமாச்சே.அறிவு வளந்துருக்கும்ல.

      பிள்ளை ”வால்”.நீங்க டிஸ்டிரிக்ட் பர்ஸ்ட் வந்த வருஷம் ஸ்டேட் பர்ஸ்ட் வந்தவன் சைவமா அசைவமா.

  25. திரு.ஆணி ….

    //இது மட்டுமின்றி எல்லா நவீன அறிவியியல் கண்டுபிடிப்புகளும் “இந்து ஞான மரபினால்” உத்வேகம் (Inspiration) பெற்று உருவானவை என்பதால் அதற்கு வடிவுரிமைகளை (Patents & Copyrights) பெற்று வைத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவும், அந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொம்பு தூக்கும் பா.ஜ.க பரிவாரங்களுக்கும் எதிராக போராட வருவீர்களா தாயுமானவன்?//

    கண்டிப்பாக ஆனால் எங்கே …அதற்க்கும் அவர்கள் காப்புரிமை வைத்து கொண்டார்களே..இப்போது பாருங்கள் ரிக் வேதத்தில் கூறப்பட்டிருக்கும் Super தேன் வகை மதுவை லித்துவேனிய நாடு ஆரய்ச்சி செய்து தனதாக்கி கொண்டது.. மேலும் அதற்க்கு காப்புரிமையும் பெற்று கொண்டது..என்ன செய்ய பிழைத்து போகட்டும் என்று பெருந்தன்மையாக விட்டு கொடுத்து விட வேண்டியது தான்..

    //முக்கியமாக, இந்திய வேளான் மரபை திருடி அவற்றுக்கு கயமைத்தனமாக வடிவுரிமை பெற்றிருக்கும் அமெரிக்காவுக்கும் அதற்கு உடந்தையாக இருந்த (பிஜேபி உட்பட) இந்திய அரசுகளுக்கும் எதிராக போராட எங்களுடன் கைகோர்ப்பீர்களா தாயுமானவன் அல்லது அதற்கும் நாங்கள் சுத்த சைவர்களாக இருக்க வேண்டுமா ?//

    நிச்சயமாக… சூப்பர் தேன் மதுவை போல் இதில் விட்டு கொடுக்க முடியாது. மஞ்சள் வேப்பமரம் என்று ஒவ்வொன்றாக அவர்கள் நம் நாட்டு இயற்க்கை வளத்தை திருடி காப்புரிமை பெற்று கொள்வதை நிச்சயம் எதிர்க்க வேண்டும்.. எப்போது என்று சொல்லுங்கள் உங்களுடன் கைகோர்த்து போராடுகிறேன்…

    //அல்லது அதற்கும் நாங்கள் சுத்த சைவர்களாக இருக்க வேண்டுமா ?//

    அப்படியெல்லாம் இல்லை… சைவ உணவு சாபிட்டால் உடலுக்கு நல்லது.. மனதிற்கும் நல்லது.. அறிவிற்கும் நல்லது. (அறிவு என்று சொல்லியவுடன் அதில் எதாவது சாத்திய திமிர் இருக்கிறதா என்று தேடி விடாதீர்கள்). மற்றபடி உங்கள் விருப்பமே..

  26. நல்லதோர் அறிவியல் கட்டுரை..

    //இது அறிவியலின் அன்றைய வரம்பு என்பதோடு கனவான்களின் புத்தார்வ தடைகளும் சேர்ந்த ஒன்று. கல்விக்கும், அறிவியலுக்கும் பிறப்பு காரணமாக அனுமதி மறுப்பில்லை என்ற மேலை நாடுகளிலேயே இதுதான் நிலைமை என்றால் இந்தியாவில் பார்ப்பனியத்தின் பிடியில் அவை வளராமல் சிக்குண்டிருந்தன எனலாம். //

    மேலை நாடுகளின் திருச்சபைகள் கலிலியோவுக்கும், கோப்பர்நிக்கசுக்கும் அளித்த ஆதரவு போன்று பார்ப்பனிய இந்தியாவில் கிடைத்திருக்காது.. பெரியார் ஒரு நூற்றாண்டுக்கு முந்தி பிறந்திருந்தால் பெரியார் பிறந்த மண்ணில் ஐன்ஸ்டீனைவிட சிறந்த அறிவியல் அறிஞர்கள் உருவாகி சார்பியல் தத்துவத்தை ஐன்ஸ்டீனுக்கு முன்பே கண்டுபிடித்திருப்பார்கள்.. முதல் புரட்சி ரசியாவுக்கு பதில் இந்தியாவில் நடந்திருக்கும்..

    //வேகமாக செல்லும் ரயில் வண்டியை உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் வேகத்தை கூட்ட ஆற்றலை அதாவது மேலும் மேலும் கூடுதல் எரிபொருளை போட்டுக் கொண்டே செல்கிறோம். அதன் வேகம் ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க ஒளி அதை விட்டு மாறா வேகமான வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டரில் விலகிச் செல்லும், ரயில் வண்டியினுள் காலம் சுருங்கும் எனில் நாம் உயர்த்திக்கொண்டே செல்லும் ஆற்றல் எங்கே செல்கிறது?

    E = mc2

    அது நிறையாக மாறுகிறது. ஆம் ஆற்றல் பருப்பொருளாக மாறுகிறது. ஆற்றலும் பொருளும் ஒன்றை ஒன்று சாராத தனிமுதலானவை அல்ல. ஆற்றல் பொருளாக மாறும், பொருள் ஆற்றலாக மாறும், பொருளையும் ஆற்றலையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது. //

    ரயில் வண்டியை விடுங்கள்.. ஒரு பேனாவை ஒளியின் வேகத்துக்கு முடுக்குவதற்கு செலவிடப்படும் ஆற்றல் நிறையாக மாறினால் பேனாவின் நிறை மாறுமா..?! நிறையுள்ள எந்த பொருளும் ஒளியின் வேகத்தை அடையமுடியாததற்கு வேறு அறிவியல் காரணங்கள் இல்லையா..?!

    //சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட அத்தகைய ஆய்வில் தான் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போசான் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு உலகத்தைப் பற்றிய மனிதகுலத்தின் பார்வையையே ஐன்ஸ்டீனுடைய சமன்பாடு மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது.//

    அணுக்கரு துகள்களுக்கு நிறையை அளிக்கும் ஹிக்ஸ் புலம் என்ற கண்ணுக்கும் கருத்துக்கும் பிடிபடாத நுண்புலத்தில் இன்றைய அணுத்துகள் அறிவியல் சிக்கிக்கொண்டிருக்கிறது.. இதை கடந்து செல்ல ஒரு மேலும் ஒரு நூற்றாண்டாவது ஆகலாம்.. அதன்பின் எதை எதிர்கொள்ளப் போகிறதோ.. கடவுள் இல்லை என்று நிறுவ அறிவியலை நம்புவது விரக்தியில் கொண்டுபோய் விடலாம்.. ஆகவே, பகவத் கீதையில் பகவான் உபதேசித்த ஞான யோகத்தை அறிவியல் அறிஞர்கள் சைடு ஆராய்சியாகக் கொள்வது நல்லது..

    • திரி 37இல் சில பதில்களை முயற்சி செய்திருக்கிறேன். உங்கள் கருத்தை எழுதுங்கள்.

  27. பார்ப்பனர்கள் எதையுமே புதிதாக கண்டுபிடிக்க தேவை இல்லை. நீங்கள் invent பண்ணின எல்லாமே வேதத்திலேயே சொல்லப்பட்டு விட்டன.இனிமேல் என்னென்ன கண்டுபிடிச்சாலும் வேதத்தில் இல்லாதது இல்லை.

    • அப்படியனால், வேதம் படிக்கும் பார்ப்பனர்கள் இனி வேறொன்றும் படிக்க தேவையில்லையே! தயவு செய்து கல்விநிலயங்களை காலி செய்யுங்களேன்! ஆனால் ஒன்று, உங்கள் வேதத்தை எந்த சூத்திரனுக்கும் சொல்லாதீர்கள், வெளுத்த தோல் மாக்ச்முல்லர் விதி விலக்காக இருக்கட்டும்!

  28. சேஷாத்ரி சார்,

    கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன். நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.
    Invent பண்ணின எல்லாமே…. -> எப்படி நீங்க எல்லாவற்றையும் என்று Generalize செய்கிறீர்கள்.
    இனிமேல் என்னென்ன கண்டுபிடிச்சாலும் வேதத்தில் இல்லாதது இல்லை – இது கொஞ்சம் டூ மச் சார்.

    ஒரு பக்கம் அறிவியல் உள்ள அனைத்தும் குர்ஆனில் முதலிலேயே கூறப்படுள்ளது என்று ஒருவர் கூறினார். இப்போது நீங்கள் அதையே தான் வேதத்தில் கூறப்பட்டுள்ளது என்று சொல்கிறீர்கள்.
    அடுத்து இன்னொருவர் இதெல்லாம் பைபிளில் எப்போதோ சொல்லப்பட்டுள்ளது என்பார்.

    அப்புறம் எதற்கு நாம் எல்லோரும் அறிவியலை படிக்க வேண்டும். எல்லாம் வேதத்தை, மத நூல்களை படித்து, ஒருவரை ஒருவர் திட்டி கொண்டு வாழலாம். 🙂

  29. தாயுமானவன் அவர்களுக்கு,

    43இல் இருக்கும் மறுமொழிகளை 430 வரை கொண்டு செல்ல விருப்பமில்லை என்று இந்த திரியுடன் முடித்து கொள்வதாக கூறுகிறீர்கள். நீங்கள் இந்தவகை கருத்தைத்தான் சார்ந்தவர் என்று தெரிந்தால் விட்டுவிடலாம். ஆனால் எனக்கு ஒன்றும் புலப்படவில்லை. கருத்தின் சாரத்தைக் கூறாமால், ஒரு விசயத்தை இப்படி ஆராய்வதில் எனக்கு மகிழ்ச்சியே என்கிற முன்முடிவுதான் தெரிகிறது. மன்னர்களின் காலம் பொற்காலம், இந்து ஞான மரபு, வேத சிறப்பு என்று சொல்கீறிர்களே தவிர என்ன விசயம் என்று கூறமாட்டேன் என்கீறிர்கள். மதவெறி மோடியோடு உங்களை ஒப்பிடவும் முடியவில்லை. கருத்து தளத்தில் பாக்கெட் மைக்கை ஒரு நிமிடத்தில் கழற்றிவைத்துவிட்டு நான் இப்படித்தான் என்று மோடி சொல்லும்போது நீங்கள் கொஞ்சம் defensiveஆக அணுகுகீறிர்கள். மேலும் என் அனுபவத்தில் என் தோழர்களுடனான முதல் விவாதத்தில் ஓடி ஒளியேவே செய்தேன்! உங்கள் கருத்து வன்மமாக இருந்தாலும் முடிந்தவரை முயற்சியாவது செய்கீறீர். ஆக உங்கள் உழைப்பு கருதி சில மறுப்புரையை வைக்கவேண்டியது அவசியம். எனவே கீழிருந்து மேலாக செல்வோம்.

    \\“என்ன ஒரு கண்டு பிடிப்பு.. உங்கள் அளவுக்கு எனக்கு விஞ்ஞான அறிவு கிடையாது தான்.. ஏதோ என்னால் முடிந்தது 12ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்றேன் .. அதன் பிற்கு டெல்லியில் உள்ள IIT உள்ள என்னும் அகில இந்திய உயர் தொழில் நுட்ப நிறுவனத்தில் என் உயர் கல்வியை முடித்தேன்.. விஷயம் என்னவென்றால் இங்கு நான் விஞ்ஞானம் பேச வரவில்லை. இந்து மத தத்துவார்த்தங்கள்.. இந்திய வரலாறு.. மார்க்சியர்கள் செய்யும் திரிபுகள் ஆகியன பற்றி தான் பேச வந்தேன்.. இந்த திரியில் இத்துடன் என் பேச்சை முடித்து கொள்கிறேன்.”\\

    உங்கள் கல்விதகுதி சிறப்புதான். இருந்தாலும் படித்தவர்களை வைத்து என்ன செய்ய? நீங்கள் வடக்கில் உள்ள உயர் கல்வி நிறுவனத்தில் நான் தெற்கில் உள்ள நிறுவனத்தில். இருந்தாலும் நம் இருவரால் யாருக்கு என்ன பயன்? ஒரு உழைப்பாளிக்கு நன்றாக தெரியும் படித்தவர்களை வைத்து பத்து சட்டி மண்ணைக் கூட அள்ளமுடியாது என்று. படித்தவர்களை வைத்தா இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது? அதுவும் நான் இருக்கும் தெற்கு நிறுவனம் முழுக்க முழுக்க சாதி வெறியர்களை கொண்டது. விசாலமான மனிதர்களை கண்டதேயில்லை. நீங்கள் ஆராதிக்கிற ஹெய்மரின் தொழில்பக்திகூட அங்கெல்லாம் இல்லை. இவர்களுக்கு அறிவியலின் புரிதல் எப்படி இருக்கும்? காக்கி டவுசர்கள் வேதக்கணிதம் பேசுவார்கள். யூ டியுப்பில் ஒருமுறை பாருங்கள். நீங்கள் சார்ந்திருக்கிற தத்துவஞான மரபு எவ்வகைப்பட்டது என்று? இதை அணுகுவதற்கு மார்க்சியமெல்லாம் தேவையில்லை. நீங்கள் மதநம்பிக்கையாளர் என்றால் புத்தர் சொல்வதை எப்படி புரிந்து கொள்வீர்கள் “உண்மையை உண்மையாகவும் உண்மையல்லாதவற்றை உண்மையல்லாதவையாகவும் புரிந்து கொள்” அதே புத்தம் இலங்கையில் எப்படி எதேச்சதிகார மதமாக இருக்கிறது என்பதற்கும் பதில் கூற முயற்சி செய்யுங்கள். என்னைப் பொறுத்தவரை நீங்கள் தூங்குவதைப் போல் நடிக்கீறிர்கள்.

    விஞ்ஞானம் பேசவரவில்லை என்றால் வரலாற்றுப் பார்வையில் E=mc^2 பற்றி உங்கள் கருத்து என்ன? இங்கு வந்து வேதத்தைப்பற்றி கூறுவதற்கு என்ன அவசியம் இருக்கிறது? அப்படி என்ன இந்து ஞானமரபை முன்வைத்தீர்கள்?

    \\அது குறித்த ஆய்வுகள் இன்னும் நடக்கின்றன… டி.என்.ஜாவின் நூலை மட்டும் ஆதாரமாக வைத்து கொண்டு நான் ஏதும் கூற முடியாது.. கொஞ்சம் பொறுக்கவும்… உண்மை இருப்பின் மாட்டு இறைச்சியை தேசிய உணவாக அறிவிக்க முயற்சி எடுப்போம் போதுமா.. என்னை தவறாக புரிந்துள்ளீர்கள் ..எனக்கு தான் சுத்தசைவம் வேண்டும். நீங்கள் என் நண்பராவதற்க்கு எந்த நிபந்தனையும் கிடையாது.. நீங்கள் எதை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம் அது உங்கள் விருப்பம்…\\

    மாட்டுக்கறி தேசிய உணவு என்று சொல்லிவிட்டு எனக்குதான் சுத்த சைவம் என்றால் இந்த முரண்பாட்டை எப்படி புரிந்து கொள்வது. மனதளவில் இதை ஏன் ஒருவித ஒவ்வாமையுடன் அணுகுகீறிர்கள்? நீங்கள் சைவம் என்றால் உருளைக்கிழங்கும் ஒர் உயிர் தானே? ஈவு இரக்கமின்றி வறுத்தா தின்பது? வாடிய பயிரைக் கண்டு வாடியவரை கொளுத்திவிட்டு ஜோதியில் ஜக்கியமானார் என்ற வரலாறு உண்டு. அல்லது திகம்பர்கள், தானியம் செடியிலிருந்து உதிரும் வரை காத்திருப்பார்களாம். இப்படியெல்லாம் ஒருவரால் இருக்க முடியுமா? சங்கீதா ஹோட்டலில் வறுத்த முந்திரி தின்றால் சுத்த சைவமா? சைவம் என்பதற்கு என்ன வரையறை? ஆணிக்கு அளித்த பதிலில் உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்று கூறினீரே. எப்படி?

    ‘உண்மை இருப்பின்’ என்று முழங்குவது சரியாகப்படவில்லை. மதம் என் நம்பிக்கை என்று சொல்பவர் டி.என்.ஜாவின் புத்தகத்தை படிப்பது அவசியம். அத்துணையும் ஆதாரங்கள் தான். Libgen இணையதளத்தில் ஆங்கிலபதிப்பை இலவசமாக தரவிறக்க இயலும். படியுங்கள். உங்கள் வாதத்தையும் முன்வையுங்கள்.

    \\ஹ்ம்ம்.. என்ன பண்றது எல்லாம் விதி.. எனக்கு தெரிந்த ஒரு கல்லூரி பேராசிரியர் மீனவ சமுகத்தை சேர்ந்தவர். அவர் என்னிடம் தான் மிக உயர்ந்த இனத்தை சேர்ந்தவர் என்று கூறினார் எப்படி என்று கேட்டதற்கு. இந்து மதத்தில் உயர்வானதாக கருத படும் நான்கு வேதங்களையும் தொகுத்த வியாசர் மீனவ பெண்ணுக்கு பிறந்தவர் தான். வேதமே புனிதமானது என்னும் போது. அதை தொகுத்த மீனவ குலத்தில் பிறந்த வியாசர் எவ்வளவு மென்மையானவர்..ஆகவே, அவரின் வழிவந்த நாங்களும் மேன்மை பொருந்தியவர்களே. என்று என்னிடம் சண்ட பிரசண்டம் செய்து கொன்று இருந்தார்.. இந்த காலத்திலே இப்படி என்னும் போது அப்போது கேட்கவா வேண்டும்.. சாதி பெருமை பேசுவதற்கு எல்லாம் உலகின் மிக சிறந்த அறிவு பொக்கிஷமான வேதங்களை துணைக்கு அழைப்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது..\\

    விதி கர்மாவெல்லாம் ஒன்றுமில்லை. சாதிப் பெருமை பேசுவதற்கு பயன்பட்ட வேதம் ஹெய்மருக்கு மட்டும் உந்துதலாக இருந்தது எப்படி என்பதுதான் என் கேள்வி. மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்புக்கான பாத்திரம் குறித்து எங்கெல்ஸ் கூறுவதுபோல் வேத சமூகத்தில் இருந்து மோடி சமூகம் வரை இந்தியாவில் உழைப்பிற்கான பாத்திரம் என்னவாக இருந்தது அல்லது இருக்கிறது? கெளடியல்னாக சு. சாமி இருப்பார். வேறென்ன?

    \\ விளக்கி பயனில்லை.. வாழ்க மார்க்சியம்.\\
    கோசங்கள் எல்லாம் வேண்டாம். நமக்கு கோரிக்கைகள் தான் வேண்டும். அதுபோல இழப்புகள் முக்கியமல்ல. இலக்குகள்தான் முக்கியம். விட்டால் பாரத்மாதா ஹீ ஜே என்பீர்கள் போலிருக்கிறது.

    \\இது 300 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் வரலாறு. தலைவரியும்,முலைவரியும் தாழ்த்தபட்டவர்களுக்கு விதிக்க பட்டது என்று கீற்று தளத்தில் ஒரு முறை படித்ததாக ஞாபகம்.. சரி யாராக இருந்தாலும் கேரள அரசன் செய்தது தவறு தான் …\
    அது உங்களின் பார்வை.. எனக்கு தமிழ் மன்னர்களின் காலம் பொற்காலமாக தான் தெரிகிறது.. \

    கேரள அரசனைப் போல் ஒவ்வொரு ஆதாரமாய் தமிழ் மன்னர்களுக்கும் வைத்தால் ஏற்று கொள்வீர்களா? அடுத்த பதிலை படியுங்கள். அதற்கான முயற்சியை எனக்குத் தெரிந்தவரை சொல்லியிருக்கிறேன்.

    \\ ஓஹோ… உங்கள் மார்க்சிய பார்வையில் சரித்திரத்தை காண முடியாது என்று சொன்னால் வக்கிர புத்தி என்று அர்த்தமா.. சரி, மார்க்சிய பார்வையில் பார்க்காததால் எனக்கு நீங்கள் வக்கிர புத்தி காரன் என்று பெயர் வைப்பீர்களானால் மகிழ்ச்சியோடு ஏற்று கொள்கிறேன் அதற்காக எனக்கு எந்த வருத்தமும் இல்லை…
    வரலாற்றில்… உலகின் எல்லா மூலைகளிலும் ஒடுக்க பட்ட மக்கள் என்று இருக்க தான் செய்வார்கள். அதற்க்கு என்ன செய்வது. இன்றும் கூட இருக்கிறார்கள்.. அதற்காக தமிழரின், தமிழ் மன்னர்களின் வரலாற்றை பொற்காலத்தை ஒதுக்கி தள்ள என்னால் முடியாது.. நீங்கள் சோழ மன்னர்களின் வரலாற்றை கோசாம்பியின் மார்க்சிய அடிப்படையில் வரலாற்றை பார்பதுபோல். நான் சதாசிவ பண்டாரத்தார், குடவாயில் பாலசுப்ரமணியம், நீலகண்ட சாஸ்த்ரி, அமரர் கல்கி போன்றோரின் பார்வையில் தான் வரலாற்றை என்னால் கண்ணுற முடியும்.. அந்த அளவில் பார்த்தால் சோழர்கள் காலம் தமிழர்களின் பொற்காலமே.. அதை வக்கிர புத்தி என்றோ,
    அருவெறுப்பானது என்றோ கூற தங்களுக்கு எள்ளளவும் உரிமை இல்லை..\\

    மார்க்சிய பார்வையில் நீங்கள் பார்க்காததால் உங்களை வக்கிரப் புத்திக்காரர் என்று கூறவில்லை. மார்க்சியம் என்ற காரணத்திற்காக ஏன் நிராகரிக்கிறீர்கள் என்பது தான் என் கேள்வி. உங்களால் அதன் குறைகளை சுட்டிக்காட்ட பேச இயலவில்லை? ஒன்றை ஆராய்வதற்கு நீங்கள் வைக்கும் அளவுகோல் வக்கிரமாக இருக்கிறது என்பதுதான் என் கருத்து. ஒன்றுக்கும் உதவாத வேதத்தில் எடுத்துக்காட்டுகள் கூறித்தான் அம்பேத்கரும் பெரியாரும் தங்கள் வாதங்களை வைத்தார்களே தவிர தனக்கு தோன்றியதை வைத்தல்ல.

    அல்லாக்காரர்களுடன் விவாதம் செய்கிற பொழுது முதலில் மண்ணடிக்கு கூப்பிடுவார்கள். இருந்தபோதிலும் குரானில் இருந்து “உங்களுடன் அழகிய முறையில் விவாதிப்பவருடன் தர்க்கிப்பீராக” என்பதைக் காண்பித்துவிட்டு பதில் சொல்லாமால் அழகில்லை என்பார்கள். அஸ்கர் அலி போன்ற ஆய்வாளர்கள் அழகிய முறையில் பதிலளித்தும் எனக்கு தெரிந்து எந்த முசல்மானும் பதில் சொன்னதாக தெரியவில்லை.

    தற்பொழுது என் கேள்வி இந்து ஞானமரபு என்று சொல்கீறிரே. எதாவது ஒன்றை அளவுகோலாக கொண்டு விவாதிக்க முடியுமா?

    தமிழ் மன்னர்களின் காலம் பொற்காலம் என்ற தூர்தர்ஷனின் கருத்துக்கு பலியாகி இருக்கீறிர்கள். மார்க்சியத்தைக் கண்டு மருள வேண்டாம். தொ. பரமசிவனின் அறியப்படாத தமிழகம். தி.நா.சுப்ரமணியனின் கல்வெட்டு குறித்த குறிப்புகள். வானமாமலையின் தமிழகத்தில் சாதி சமத்துவ போராட்டக் கருத்துக்கள், ‘பேகட மீகட’ என்று சொல்பவர்களுக்குப் பதிலடியாக ஆபிரகாம் பண்டிதரின் தமிழ் இசை ஞான மரபு, ‘குகையிடிக்கலகம்’ குறித்த திருத்துறைப் பூண்டி கல்வெட்டு ஆகியவற்றையும் வாசியுங்கள்.

    சீர்திருத்த கருத்துக்களையே பொறுத்துக் கொள்ள முடியாதவர், புரஷ்சி என்றால் புழுவாக துடிக்கத்தான் செய்வீர்!

    நீரும் ஒடுக்கப்பட்டவர்களுக்குச் சார்பாக என்னென்ன ஒட்டு வேலைகள் செய்தாலும் உமது கொண்டை தெரிகிறது! இருந்தாலும் ஒரு கேள்வியை வைக்கிறேன்.

    ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப்போராட்டங்களின் வரலாறு என்பதில் உமக்கு உடன்பாடு என்றால் நீர் யார் பக்கம் நிற்கிறீர்? ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாகவா அல்லது உமது பொற்கால மன்னர்களின் பக்கமா? இங்குதான் நான்முடிவு செய்ய முடியும். நீங்கள் எதைப் பிரதிபலிக்கீறிர்கள் என்று.

    \\ஹெய்மரின் கருத்து வேசைத்தனமானது என்பது உங்கள் நிலைப்பாடு.. அதையே அனைவரும் ஏற்றுகொள்ள வேண்டும் என்று நினைத்தால் எப்படி.. ஹெய்மர் பகவத் கீதை குறித்து என்ன கூறினார் என்பதை தான் நான் மேற்கோள் காட்டினேன்.. அதில் எனக்கு சந்தோஷமே.\\

    நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறவில்லை. உங்கள் நிலைப்பாடு என்னவென்று தான் வினவினேன். உண்மையில் நான் இதை உணர்ச்சிப்பூர்வமாகத்தான் அணுகினேன். ஏனெனில் வரலாற்று பார்வையில் மெய்ட்டனரின் வாழ்வை அணுகும் பொழுது துயரங்களும் இழப்புகளுமாக இருக்கிறது. ஆனால் உங்கள் ஹெய்மர் அச்சரசுருதியாக வேதம் என்று வியந்தோதுகிறார். இருவரையும் ஒப்பிட்டால் ஒரு பார்வை கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் நீரென்னவென்றால் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியாக இருக்கிறீர்.

    ஆனாலும் நீங்கள் ஒன்றை கவனிக்கவேண்டும். விவாதத்தின் மூலச் சிறப்பான பலன் கூட்டுழைப்பு. தோழர் செங்கதிர் செல்வன் (23) உணர்ச்சி நிலையில் இல்லாமல் உங்களின் பார்வைக்கு சரியான கோணத்தை வழங்கியிருக்கிறார். என்னவென்று சற்று கவனியுங்கள். அது குறித்தும் வினையாற்றுங்கள்.

    தோழர் ஆணிக்கு நீங்கள் அளித்த பதில் விரக்தியான மனநிலையை காட்டுகிறது என்பது என் கருத்து.

    • //வாடிய பயிரைக் கண்டு வாடியவரை கொளுத்தி விட்டு//

      கொளுத்துனக்கு வத்திபொட்டி கொடுத்தது நீங்கதானா? இப்படி புளுக மட்டும் எந்த ஆதாரமும் தேவை இல்லை இல்லையா? நடத்துங்க.

      • சிதம்பரம் தீச்சதர்களுக்கும் ,வடலூர் வள்ளலாருக்கும் என்ன தீரா பகை ?

        வள்ளலாரை தீ இட்டு தீயீத்து கொன்று ஜோதியில் கலந்த பார்பனர்கள் யார்?

        ராம் அதனை மறைக்க முயலும் மர்மம் என்ன ?

        • நீங்கதான் மொக்கை செந்தில் என்று எனக்கு தெரியுமே.இப்படிதான் கேட்பீர்கள்.ஆதாரம் ஆதாரம் என்னன்னு கேட்டேன் புரியுதா? தி.க மீட்டிங்ல சொன்னாங்கன்னு சொல்லாதிங்க.

          • அட ராமா ராமா பார்பன ராமா ,

            பார்பன எதிர்பாளர்களை ஜோதியில் கலக்கும் உங்கள் “பார்பன கொலை நுட்பம்” என்ன வள்ளலார் இடம் தான் முதலில் தொடகியதா?

            நந்தன் முதல் வள்ளலார் வரை ஜோதியில் கலக்கும் மர்மம் என்ன ?

            “ஜோதியீல கலந்துட்டார்” என்று பார்பனர்கள் ஊளையீடும் மர்மம் என்ன ?

            அறிவியல் பூர்வமாக யாராவது ஜோதியில் கலக்க முடியுமா?

            //நீங்கதான் மொக்கை செந்தில் என்று எனக்கு தெரியுமே.இப்படிதான் கேட்பீர்கள்.ஆதாரம் ஆதாரம் என்னன்னு கேட்டேன் புரியுதா//

            • தமிழ் பெயரை மாற்றி மாற்றி வைத்துகொள்ளும் இஸ்லாமியரே! நான் கேட்டது என்னன்னு புரியுதா இல்லையா? அவரு ஒரு ரூம்ல போயி கதவ சாத்திகிட்டார்.ரெண்டு நாள் கழித்து கலெக்டர் முன்னிலையில் கதவ உடைச்சு பாத்தப்ப உள்ள யாரும் இல்லை.இது இரண்டுக்கும் வரலாற்று ஆவணம் இருக்கு.

              நெருப்பு வைத்து கொளித்தியதுக்கு ஆதாரம் இருந்தா சொல்லுங்க இல்லன்னா மொக்கை போடாம விடுங்க.[நான் கேட்டது தென்றலை உங்களை இல்லை எனவே உங்கள் மொக்கை பிளேடை ஆரம்பிச்சுடாதிங்க.பிளீஸ்.]

              • காந்திய கொன்னவனுக்கு இஸ்லாமியர் பெயரை பச்சை குத்தியது போல எனக்கும் இஸ்லாமியர் பெயரை பச்சை குத்த நீனைக்கும் RSS காரரே , உங்கள் சதி நிறைவேறாது.

                //தமிழ் பெயரை மாற்றி மாற்றி வைத்துகொள்ளும் இஸ்லாமியரே! நான் கேட்டது என்னன்னு புரியுதா இல்லையா? //

              • அறிவுக்கும் ,அறிவியலுக்கும் எதிராக பேசுவது எப்படி என்று rss ல் ஏதாவது சிரப்பு மொக்கை பயிற்சி பெற்று வினாவுக்கு வந்திர்களா ராம் ?

                புள்ளையர் பால் கூடிப்பது ,

                நந்தனை எரித்து “ஜோதியீல கலந்துட்டார்” என்று பார்பனர்கள் ஊளையிடுவது ,

                காந்திய கொன்னவனுக்கு இஸ்லாமியர் பெயரை பச்சை குத்தியது,

                வள்ளலாரை தீய்த்து “ஜோதியீல கலந்துட்டார்” என்று பார்பனர்கள் பாடுவது ,

                இதை எல்லாம் கூறும் நீங்கள் [பார்பனர்கள்] பொய்யர் மகா திலகங்கள்

                • ஆதாரம் என்னன்னு எத்தனைதடவை கேட்டாலும் அதுக்கு பதில் சொல்லாம உளர ஆரம்பித்துவிட்டார் செந்தில்.

                  மொக்கை போடுவதற்காக அல் உம்மாவில் விசேச பயிற்சி பெற்றவர் அவர்.அவர யாரும் பீட் அடிக்க முடியாது.

                  • பார்ரா ,

                    RSS அய் குற்றம் கூறினால் நம்மை “அல்கொய்தா” ,”அல்உம்மா” மதவாதிகளுடன் சேர்த்துட்டாரு நம்ம RSS ராம்.

                  • ராம் செய்யும் சூப்பர் டுபர் காமடிக்கு அளவு இல்லாம போவுது.வடிவேலு இல்லாத குறையை நிவர்த்தி செய்கின்றார் நம்ம ராம் !

                    //அவரு ஒரு ரூம்ல போயி கதவ சாத்திகிட்டார்.ரெண்டு நாள் கழித்து கலெக்டர் முன்னிலையில் கதவ உடைச்சு பாத்தப்ப உள்ள யாரும் இல்லை.இது இரண்டுக்கும் வரலாற்று ஆவணம் இருக்கு.//

                    • Mr.Mokkai senthil,

                      It will be interesting to note the facts of disappearance of the Vallalar Mr.J.H.Garstein, collector of south Arcot in the south Arcot Gazette 1878.

                      “In 1874,he locked himself in a room[still in existence] in Mettukuppam[hamlet of Karunguli],which he used for samadhi or majestic meditation,and instructed his disciples not to open it for some time.He was never seen thereafter and the room in still found locked.It is considered by those who still believe in him,that he was miraculously created one with his God and that in fullness of time he would reappear to the faithful…”

                  • Dear Mokkaiyo mokkai Non-scientific ram,
                    Vallalar has been killed by Chadambaram Nadrajar Temple Deathathers
                    ——————————————————————————–

                    [1] Thinking in terms of Science…..Is it possible to be disappeared from a room while it is locked?

                    [2] Are We still live in the stone age by the way we can believe all these nonsense rummers what you are saying here?

                    [3] The evidence what you have shown here clearly tells that mr.Vallalar was assassinated by his enemies during his disappearing last days.

                    [4] Next We are in the situation to think about who are his enemies for his life time. All the historical evidence shows that he had only one set of enemies from Chadambaram nadarajar Temple Detathars. So They can only killed him for his speech about the truth of God.

                    //It will be interesting to note the facts of disappearance of the Vallalar Mr.J.H.Garstein, collector of south Arcot in the south Arcot Gazette 1878.//

                    • @Ram: Do you seriously believe in that story? Have you ever seen these kinds of miracles?

              • தென்றல்,ராம்,

                அன்டோன் லவாய்சியர் மொத்த இயற்கையும் மூடிய அமைப்பாக இருப்பதையும், வேதியல் நிலைமாற்றங்கள் அனைத்திலும், எந்தப் பொருளின் நிறையும் அழிவதுமில்லை, புதிதாக உருவாவதுமில்லை என்பதை ஆய்வுக்கூடத்தில் நிருபித்துக் காட்டினார். அவருடைய ஆய்வுக்கூடத்தில் செஞ்சூட்டிலிருக்கும் இரும்புக் குழாயின் வழியாக நீராவியை செலுத்தி மறுபுறம் அதை சேகரித்து குளிர்வித்தார். (அதாவது இரும்புக் குழாயை துருப்பிடிக்க வைக்கும் வேதி வினையை நிகழ்த்தினார்).

                சூடேற்ற பயன்படுத்திய நீரின் நிறைக்கும், இறுதியில் குளிர்வித்து பெறப்பட்ட நீரின் நிறைக்கும் இருந்த வித்தியாசம் வேதி வினையின் போது வெளியான வாயுவின் நிறை மற்றும் இரும்பு குழாயின் அதிகரித்த நிறையின் கூட்டுத்தொகைக்கு சமமாக இருந்தது. இச்செயல் முறையை பின்னோக்கி – தலைகீழாக – செய்து காட்டி தனது கோட்பாட்டை நிரூபிக்க அவர் முயன்றார்.
                —————————-

                நீங்கள் இருவரும் இவ் அறிவியலை வள்ளலார் மூடிய அறையில் காணமல் போனது பற்றீய தடயத்துடன் ஒப்புமை படுத்தி பாருங்கள். அப்போது வள்ளலார் மூடிய அறையில் காணமல் போனது பற்றீய தடயத்தீன் அபத்தம் உங்களுக்கு புரியும்! :-
                —————————–

                //அவரு ஒரு ரூம்ல போயி கதவ சாத்திகிட்டார்.ரெண்டு நாள் கழித்து கலெக்டர் முன்னிலையில் கதவ உடைச்சு பாத்தப்ப உள்ள யாரும் இல்லை.இது இரண்டுக்கும் வரலாற்று ஆவணம் இருக்கு.//

      • தோழர் ராம் மற்றும் சரவணன் (31.1 லிருந்து 31.1.1.1.1.1.2.1.3 தொடர்பாக),

        \\“கொளுத்துனக்கு வத்திபொட்டி கொடுத்தது நீங்கதானா? இப்படி புளுக மட்டும் எந்த ஆதாரமும் தேவை இல்லை இல்லையா? நடத்துங்க.\\

        செங்கல்லை வைத்து விட்டு ‘சோத்துல கல்!’ என்பதைப் போல் இருக்கிறது உங்கள் வாதம். இருந்தாலும் நான் தப்பிக்க விரும்பவில்லை.ஜோதியில் இரண்டற கலந்தார் என்று சொல்வதிலும் எனக்குப் பிரச்சனையில்லை. ஆனால் அது தலைநகரம் நாய் சேகரிடம் ‘எல்லாமே சுகப்பிரசவம் தான்’ என்று சொல்வதாக முடிந்துவிடும் என்று அஞ்சுகிறேன்.

        ஜோதியில் கலந்தார் என்று நான் எழுதுகிற பொழுது ‘கலக்கிவிட்டது நீர் தானா? என்று சரவணன் கேட்டால் நான் எப்படி பதில் சொல்லமுடியும்? கொஞ்சம் எனக்கு உதவி செய்யுங்கள்!

        உம்மை சரவணன் வறுத்தெடுக்கிறார் என்று சலித்துக் கொள்ளாதீர். நீர் ஏதோ ஒன்றை என்னிடம் கேட்கப்போய் உம்மைக் மிகவும் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறார் சரவணன் (31.1.1.1.1.1.2.1.3 வரை கொஞ்சம் ஓவர் தான்). உங்களது இருவரது நட்பும் கட்டுரையைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது! ஆனால் நீர் அவரை உதாசீனப்படுத்துவதிலேயே குறியாய் இருக்கீறிர்!

        கொளுத்தியது குறித்து நான் எழுதியதை பரீசிலிக்கிறேன். அதே சமயம் உங்களது அளவுகோலை இதற்கு பொருத்தமுடியுமா என்று கூறுங்கள்; கொஞ்சம் அசிங்கமாக இருந்தாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை. கவிச்சக்ரவர்த்தி கம்பன் ஸ்ரீ ராம கதையை கவிதையாக வடிக்கிற பொழுது ஒன்றைச் சொல்வார் இப்படி; ‘ராமனைக் கண்டதும் சீதையின் அல்குல் அகன்றது’ என்று; என்னைத் தண்டிப்பதைப் போல் கம்பரை ‘நீர்தான் போய் பார்த்தீரா?’ என்று கேட்க முடியுமா உங்களால்?

        கற்பு குறித்து வியந்தோதுகிற நம் தமிழகத்தில் கம்பன் கழகம் என்று ஒரு கூட்டம் கழிவறை நிரப்புவதிலேயே குறியாய் இருக்கிறது. நீங்கள் இதுபோன்ற கேள்விகள் மூலம் அவர்களை அம்பலப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். அப்படிச் செய்கிற பொழுது உம் பிரியமான நண்பர் சரவணன் உமக்கு அரணாய் இருப்பார் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். பரீசிலியுங்கள்.

        வரலாற்று ஆவணம் குறித்து நீங்கள் செய்த முயற்சிகளுக்கு பாராட்டுகள். சரவணன் தேவையான கேள்விகளை வினவியிருக்கிறார்; வினை செய்யுங்கள். அதே சமயம் “சிவ பெருமான் மூவாயிரம் தீட்சிதர்களுள் ஒருவர்” என்பது கோர்ட் அபிடவட்டில் இருக்கிறது; மிகவும் வலுவான கோப்பு அது!. வரலாறு மிக முக்கியம் அமைச்சரே என்ற கதையாக இருநூறு வருடங்கள் கழித்து பார்க்கும் ஒருவர் அதைவைத்து வாதிட்டால் எப்படி இருக்கும் என்பதை பாருங்கள். நடந்ததும் அதுதான். நமது மனித உரிமை பாதுகாப்பு வழக்கறிஞர்கள் எவ்வளவு திணறியிருப்பர் என்பதை சிந்தித்துப் பாருங்கள் (!!!)

        இதன் குரூரத்தை உணரவேண்டுமானால் பாபர் மசூதி இடிப்புவழக்கைப் பாருங்கள்; பச்சை கலர் ராமன் மனுவாதியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். நிலப்பிரச்சனையில் அவர் சார்பாக வைத்த பிராதை கோர்ட் ஏற்றுக் கொண்டது என்கிற பொழுது வரலாற்று ஆவணங்களை ஒருவர் எந்தக் கோணத்தில் ஆராய வேண்டும் என்பதை எனக்குப் புலப்படுத்துங்கள்.

        மற்றபடி ‘மதம் என் நம்பிக்கை’ என்று சொல்கிற பக்தர்களிடம் வள்ளலாரை வைத்து வாதாடினால் அவர்களின் இரட்டை நாக்கை அம்பலப்படுத்தலாம் என்று யூகித்தேன். வாதம் எடுபடவில்லை என்று நினைக்கிறேன். அவ்வளவுதான்.

        • இது தேவை இல்லாத வாதம்.

          வினவு சென்சார் செய்து இருக்கலாம்.

          வள்ளலாரை பார்பனர்கள் கொன்றார்கள் என்று வாதாடும் நான் எப்படி RSS ராமுக்கு நண்பனாக இருக்க முடியும் ?

          அரசு ஆவண படுத்தி உள்ள தடயங்கள் [வள்ளலார் கொலையில்] எவ்வளவு அபத்தமாக உள்ளது என்று கூற கூடாதா ?

          ஒரு அறிவீயர் கட்டுரையீல் அறிவுக்கு எதிராக rss ராம் பேசும் போது நான் மறுதலிக்க கூடாதா ?

          //அதே சமயம் உங்களது அளவுகோலை இதற்கு பொருத்தமுடியுமா என்று கூறுங்கள்; கொஞ்சம் அசிங்கமாக இருந்தாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை. கவிச்சக்ரவர்த்தி கம்பன் ஸ்ரீ ராம கதையை கவிதையாக வடிக்கிற பொழுது ஒன்றைச் சொல்வார் இப்படி; ‘ராமனைக் கண்டதும் சீதையின் அல்குல் அகன்றது’ என்று; என்னைத் தண்டிப்பதைப் போல் கம்பரை ‘நீர்தான் போய் பார்த்தீரா?’ என்று கேட்க முடியுமா உங்களால்?

          கற்பு குறித்து வியந்தோதுகிற நம் தமிழகத்தில் கம்பன் கழகம் என்று ஒரு கூட்டம் கழிவறை நிரப்புவதிலேயே குறியாய் இருக்கிறது. நீங்கள் இதுபோன்ற கேள்விகள் மூலம் அவர்களை அம்பலப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். அப்படிச் செய்கிற பொழுது உம் பிரியமான நண்பர் சரவணன் உமக்கு அரணாய் இருப்பார் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். பரீசிலியுங்கள்.//

        • தமிழகத்தில் secular Hindus அதிகம். நாம் ஹிந்து மதத்தை அரசியலில் கலக்கும் மத வெறிர்களை தான் குற்றம் கூறலாமே தவிர secular Hindus களை குற்றவாளி ஆக்கி BJP பக்கம் தள்ளி விட கூடாது.

          //மற்றபடி ‘மதம் என் நம்பிக்கை’ என்று சொல்கிற பக்தர்களிடம் வள்ளலாரை வைத்து வாதாடினால் அவர்களின் இரட்டை நாக்கை அம்பலப்படுத்தலாம் என்று யூகித்தேன். வாதம் எடுபடவில்லை என்று நினைக்கிறேன். அவ்வளவுதான்.//

          • உங்களது பணி சிறப்பாகத்தான் இருக்கிறது.

            ஆவணப்படுத்திய தடயங்கள் அபத்தமாக உள்ளது என்று நீர் நன்றாகவே கேள்வி கேட்டபிறகு தனியாக நான் வேறு கேட்கவேண்டுமா?

            அப்பிராணியாக அவர் அதை நம்புகிற பொழுது ஒரு மாற்றுப் பார்வையை வழங்கமுடியுமா என்று முயற்சி செய்தேன் அவ்வளவே.

            கம்பன் குறித்த என் கேள்வி ராமிற்கு வைத்தது. புராணங்களின் தாக்கம் அதிகம் என்பதால் கம்பரை இழுத்தேன். எனக்குத் தவறகாப் படவில்லை. தவறை சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வேன்.

            RSSகாரர்கள் விவாத்திற்கு எல்லாம் வரமாட்டார்கள். வாரமலரைத்தாண்டி பயனித்ததில்லை. நம்முடன் சகஜமாக உரையாடுகிறார் என்றால் நாம் அதன் நீளம் வரை போவதில் தப்பில்லை. கருத்தைப் பரிசீலிக்கிறவர் நண்பர்தான் சரவணன். அதனால் தான் கருத்து மக்களைப் பற்றும் பொழுது பவுதீக சக்தியாக மாறுகிறது என்று சமூகவிஞ்ஞானத்தில் கூறுகிறோம். அவர் விசயங்களை புரிவதற்கு நீர் உதவுவதால் நண்பர் தானே?

            உழைப்பவனுக்கு அதிகாரம் என்று சொல்லிவிட்ட பியற்கு Secular Hindu என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?

            • தென்றல்,

              தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையில் RSS,BJP,முஸ்லீம் fundamentalist என்று ஒரு சிலரை [at most 10 lac people ] தவிர்த்து மீதி அனைவரும் secular Hindu or secular musilam or secular christian தான்.

              இவர்கள் தான் சமுக-அரசியல் மாற்றத்துக்கான வேதிவினையில்[ socio-political change through revolution ] பங்கு எடுத்தாக வேண்டும்.

              மாக்ஸ்ம் கோர்கியீன் “தாய்” நாவலில் தாய் எப்படி பட்டவர் ?புரட்சிகாரரா ? இல்லை secular christian ஆ ?

              //உழைப்பவனுக்கு அதிகாரம் என்று சொல்லிவிட்ட பியற்கு Secular Hindu என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?//

            • தென்றல்,

              [1]வள்ளலாரை பார்பனர்கள் கொன்றார்கள் என்று அறீவீயல் அடிப்படையீல் வாதாடும் நான் எப்படி RSS ராமுக்கு நண்பனாக இருக்க முடியும் ?

              [2]கம்பன் கழகம் என்று ஒரு கழிவறை கூட்டத்தை ராமுடன் இணைத்து பின்பு ராமை என்னுடன் பிரியமான நண்பனக்கும் உங்கள் நேக்கம் எனக்கு புரியவில்லை.

              [3]உங்களுக்கு பொறுமை வேண்டும் தென்றல்

              //கம்பன் கழகம் என்று ஒரு கூட்டம் கழிவறை நிரப்புவதிலேயே குறியாய் இருக்கிறது. நீங்கள் இதுபோன்ற கேள்விகள் மூலம் அவர்களை அம்பலப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். அப்படிச் செய்கிற பொழுது உம் பிரியமான நண்பர் சரவணன் உமக்கு அரணாய் இருப்பார் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். பரீசிலியுங்கள்//

        • தென்றல்,

          அறிவியல் பூர்வமாக யாராவது தடயம் இன்றி[with out ash] ஜோதியில் கலக்க முடியுமா?

          “அவரு ஒரு ரூம்ல போயி கதவ சாத்திகிட்டார்.ரெண்டு நாள் கழித்து கலெக்டர் முன்னிலையில் கதவ உடைச்சு பாத்தப்ப உள்ள யாரும் இல்லை.இது இரண்டுக்கும் வரலாற்று ஆவணம் இருக்கு”

          என்று ராம் கூறும் இது சாத்தியமா? இது அறீவீயல் படி சாத்தியமா ? விளக்கவும்.

          கொளுத்தியது குறித்து நீங்கள் எழுதியதை பரீசிலிப்பது ஏனோ ?

          //ஜோதியில் கலந்தார் என்று நான் எழுதுகிற பொழுது ‘கலக்கிவிட்டது நீர் தானா? என்று சரவணன் கேட்டால் நான் எப்படி பதில் சொல்லமுடியும்? கொஞ்சம் எனக்கு உதவி செய்யுங்கள்!//

          //கொளுத்தியது குறித்து நான் எழுதியதை பரீசிலிக்கிறேன்//

          • நான் எழுதியது (Sarcasam) எள்ளலாக உங்களுக்குத் தெரியவில்லையா? பயிற்சி எடுக்கிறேன்.

        • தென்றல்,

          //அதே சமயம் “சிவ பெருமான் மூவாயிரம் தீட்சிதர்களுள் ஒருவர்” என்பது கோர்ட் அபிடவட்டில் இருக்கிறது; மிகவும் வலுவான கோப்பு அது!.***//

          //குரூரத்தை உணரவேண்டுமானால் பாபர் மசூதி இடிப்புவழக்கைப் பாருங்கள்; பச்சை கலர் ராமன் மனுவாதியாக சேர்க்கப்பட்டிருக்கிறார்.//

          Wonderful.

          By the by,

          Are you the author of the latest post on MS Windows?

  30. indhu மதம் வளர்ந்ததற்கு காரணம் அறிவியல் அறிவு எனபது ஏன் கருத்து

    பாபிலோநியர்களிடம் இருந்து பெற்ற வனவியல் அறிவை சற்றே மாற்றி உதாரணமாக ஏழு கரடிகள் என்னும் நட்சதிரகூட்டதை சப்த ரிஷி மண்டலம் என்று மாற்றி தங்களுக்கு வசதியாக தங்கள் கலாச்சாரத்திற்கு பொருந்தும்படி மாற்றி கொண்டார்கள்

    மற்றும் கிருத்திகை , பூரம் போன்ற நட்சத்திரங்களின் மூலமும் காலத்தை அளக்க முற்பட்டுள்ளர்கள்

    அந்த அறிவை சற்றே மேலும் வளர்த்து ராஹு கேது போன்ற நிலாவின் இடத்தை கணக்கிடுதல் மற்றும் சூரிய சிததாந்தா போன்ற பஞ்சாங்கத்தின் மூலம் சூரிய உதயம் கனகிடுதல் , கிரகணங்களை முன் கூட்டியே கூறுதல் போன்ற அறிவியலை பார்பனர்கள் வளர்த்து இருந்து இருக்கிறார்கள்

    அந்த அறிவுதான் சமஸ்கிருதம் இந்தோனேசியா வரை செல்ல உதவியது

    உலகம் அழிந்து அழிந்து மீண்டும் உருவாகும் என்கின்ற சிந்தனையும் அந்தகால மனித சிந்தனையில் மிகவும் மேம்பட்ட சிந்தனை ஆகும்

    அடுத்து ஒன்று இரண்டு என்று ஒவ்வொன்றுக்கும் தனி குறியீடு அளித்தது சம்ஸ்கிருதம்தான். அதுவே உலகம் முழுதும் பயன்படும் ஹிந்து -அரபிக் ந்யூமரல்ஸ்

    நம் முன்னோர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று நம்மை தாழ்த்தி கொள்ள வேண்டியது இல்லை

  31. என்னுடையா தாத்தா பருப்பொருள் சக்தியாக மாறுகிறது என்று கூறுவார் . அவருக்கு சொல்லி கொடுத்தது அவருடைய தாத்தா.

    அதனால் தான் நல்லா சாப்பிடு சக்தி வரும் என்று எங்கள் வீட்டில் கூறுவார்கள்

    என்ன செய்ய அயின்ஸ்டீன் இதை புத்தகமாக போட்டு பெரிய ஆளாவார் என்று நாங்கள் நினைக்கவில்லை

    • ராமன் நீங்கள் கூறுவது பார்ப்பனர்களின் கலாச்சாரம். பார்ப்பனர்களின் கலாச்சாரம் தான் இந்து மதத்தின் கலாச்சாரம் என்று சொல்ல வருகிறீர்களா?

      உங்களுடைய தாத்தா பருப்பொருள் தான் சக்தி என்று சொல்லி நீங்கள் நல்லா சாப்பிடுகிறீர்கள். எங்கள் தாத்தா அடிமையாக இருந்தவர். வெண்பொங்கல் பருப்பொருள் என்றால் கூலும் பருப்பொருளா? கூலைக் குடித்தால் சக்திவருமா? அதவாது அதன் நிறையை ஒளியின் திசைவேகத்தின் வர்க்கத்தால் எப்படி பெருக்குவது?

      குறிப்பிட்ட கூட்டத்தால் பெருக்க முடியாத நிறை வழு (Mass defect) இருக்கிறதே. என்ன செய்ய?

      ஏழு கரடிகள் சப்த ரிஷி மண்டலம் என்பதைப் போல பல்லாயிரம் மனைவிகள் என்பீர்களே அது என்ன பால்வழி மண்டலமா?

      வானவியல் அறிவு சற்று சகிக்கவில்லை. ஜாதகம் மற்றும் பஞ்சாங்கம் இன்றுவரை புவிமையக் கோட்பாடு! கோமியம் புனிதம் என்று கருதினால் கோபர்நிகசிடம் கொஞ்சம் பெற்றுத் தெளித்துக் கொள்ளுங்கள்! சாம்பல் அகங்காரம் நீக்குமென்றால் புரூனோவை எரித்த ஆளும் வர்க்கத்திடம் அள்ளிப் பூசுங்கள்.

      பூரம் நட்சத்திரம் மூலம் கால அளவு? பூஜ்யமும் நீங்கள் தானே கண்டுபிடித்தீர்கள்? பிறகு ஏன் வெண்ணிலா கபடிக்குழுவில் புரோட்டோ சூரி தின்பதை கரிக்கோடால் கணக்கிட்டார்கள்! சதுர்வேதி திரிவேதி பிராமணர்களிட்திலும் கேட்டுச் சொல்லுங்கள்.

      நிலாவைப் பொறுத்தவரை முஸ்லீம்கள் தான் முதல். பாலைவனத்தில் இருந்தவர்களுக்கு வாழ்வில் நிலா ஒரு நெருக்கமான குறீயிடு. மற்றபடி உங்கள் ராகு சற்று டொங்கலாகத் தெரிகிறார்!

      சூரியன் உங்களுக்குத்தான்! துளசியைச் சுற்றி பயன் பெறுகிறீர்களல்லவா.

      கிரணங்கள் மட்டுமா? பிரம்ம முஹூர்த்த்திற்கும் தானே!

      அது ஏன் சலுகையாக இந்தோனசியா வரை? ஜெர்மனிவரை மேக்ஸ் முல்லர் கொண்டு சென்றிருக்கிறாரே!

      உலகம் மீண்டும் மீண்டும் அழிவது; அதாவது Pulsating Universe theory பற்றி சொல்கீறிர்களா? கொஞ்சம் அவசரப் படுகீறிர்கள்; இன்னும் நிருபிக்கப்படவில்லை. நிருபணமானதும் சொல்லி அனுப்புகிறோம்; வந்து சொந்தம் கொண்டாடுங்கள்.

      உங்கள் கலாச்சாரம் தான் இந்துக் கலாச்சாரம் என்று சொன்னதற்கு நன்றி. சூத்திரன் எனக்கு என்று சொல்லிக்கொள்ள ஒன்றுமேயில்லை. நல்லவேளையாக இந்த இந்து மதத்தில் எங்களையெல்லாம் நீங்கள் சேர்த்துக் கொள்ளவில்லை. பாண்டி முனியை வைத்து என்ன Pulsar நட்சத்திரங்களையாக விளக்கமுடியும்?

      அடுத்தமுறை அக்காரா அடிசலை கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் மயங்கிய நிலையில் இன்னொரு ஐன்ஸ்டீன் உங்களது பொக்கிசத்தை திருடிவிடப் போகிறார்.

      • ஓருல எல்லோரும் பார்பானை திட்டுறாங்க , நாமுளும் திட்டுவோம் என்பதை தவிர சரக்கு ஒன்னும் இல்லை

    • //give me a reasonable proof//
      If you want to know your history, Please find the right books and educate yourself.

      // how trustworthy arabs are//
      You have no idea,how much Arabs have contributed to science.If not for them it would have takes us more time to understand astronomy/optics/mathematics

      Just blaming, will take you nowhere

      • Raman,

        //You have no idea,how much Arabs have contributed to science.//

        First, the Muslim world benefited greatly from the Greek sciences, which were translated for them by dhimmi Christians and Jews.
        Secondly, many of the scientific advances credited to Islam were actually “borrowed” from other cultures conquered by the Muslims, like Persia, Syria, India, etc.
        Third, even accomplished Muslim scientists and cultural icons were often considered heretics.

        • You dont get it. Instead of burning books of other culture, they translated books from different culture for better understanding. They acted as a knowledge hub at that time allowing exchange of ideas.

          They dint force their book in throat.

          On the other hand some Christian priest burned the library of Inca’s accusing Satan’s work
          Arabs could have burned all the books in alexandria instead they chose to translate it.

          //greatly from the Greek sciences//
          And greeks borrowed it from Egyptions and Babylonians

          //many of the scientific advances credited to Islam//
          Who credited to Islam? Scientists belong to the religion. You are judging things with your hatred for Islam

          • Raman,

            // Instead of burning books of other culture//

            They have burnt a lot, more than any other group.

            // knowledge hub//

            This is a geographical accident. Exchange of ideas took place in spite of them.

            // Christian priest burned the library of Inca’s//

            I don’t deny it. But Europeans contributed more both by their own creation and by bringing out the works of other people.

            // Alexandria//

            Alexandrian library was fully burnt. Another important example is Nalandha.

            // And greeks borrowed it from Egyptions and Babylonians//

            This is exactly my point. No one is sure of who borrowed what from where, be it 0 or others. That is why I am against giving and taking too much credit.

            // You are judging things with your hatred for Islam//

            I hate Muhamadism. No doubt. But it does not influence my judgement. If the subject is ‘arabs’, I have my reservations. But If a specific person or thing is the subject, I accept it or question it, based on the evidence. I accept that there have been some notable persons from the areas of Muhamadan rule.

    • well,they accept themselves that they borrowed the number system from india.

      Real arabs like Iraqis/Syrians/Jordanians are very honourable people unlike GCC folks.

  32. Mr. Raman,

    //They have to contribute by inventing madecine for cancer.//

    Neither me nor my close relatives need medicine for Cancer. Cancer is a disease resulting from life style and environmental degradation. It is an effect caused by many chemicals, environmental pollutions, etc. caused mainly by West. It is the greed that has taken the humanity to face the problems like Cancer. It is normal that the polluter pays and finds solutions. Cancer cure is a trial and error method. Mostly the cure is the removal of the infected part. In other cases, it is radiotherapy or chemo therapy which does not guarantee anything and produce very bad side effects. It is patients themselves who contribute in finding new procedures. If Cancer cure inventors are prompted by greed to get more out of tragedies, they are worth considering as a part of humanity.

  33. ஒளிவேகத்தை விட இன்னும் கூடுதலான வேகத்தை மனிதன் கண்டறியும் போது சாதாரண மக்களுக்கு புரியாத ஐயன்டையின் “தியறி” பலருக்கும் புரிந்தது ஆகிவிடுமென கருதலாம்.

    அது வரை இந்த மாமேதைகள் மனிதவரலாறு “வர்க்கப் போராட்டத்தின் வரலாறு” என்பதை சிரமப்பட்டாவது புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்!.

    “இதுகாறும் போற்றி பாராட்டபட்டு பணிவுக்கும் பக்திக்குமுரியதாய்க் கருதப்பட்ட ஒவ்வாரு பணித்துறையையும் முதலாளிவர்க்கம் மகிமை இழக்கச் செய்துள்ளது. மருத்துவரையும் வழக்கறிஞரையும் சமயகுருவையும் கவிஞரையும் விஞ்ஞானிகளையும் அது தனது கூலியுழைப்பாளர்கள் ஆக்கிவிட்டது”. -கம்யூனிட்கட்சி அறிக்கை

    ஆகவே இயற்பியல் விதிகளை சுலபமாக கற்றுக் கொண்டவர்கள் குரோசிமா நாகசாக்கி அழிவிலும் மனிதநேய அத்துமீறல்களிலும் சிறுபங்குண்டு என்பதை தமது மனச்சாட்சியை தொட்டு கேட்டுக் கொள்ள வேண்டும்!.

    அதுமட்டுமல்ல… இந்தியாவில் இரண்டுவீதமான பிராமணிய சமூகத்தினரே உள்ளார்கள். அவர்கள் அனைவரும் அரசியலில் உள்ளவர்களோ வசதிபடைத்தவர்களோ அல்ல. அதில் பெரும் பாண்மையானவர்கள் நாளைய வாழ்க்கைக்காக வழிதெரியாது ஏங்கிக் கொண்டிருப்பவர்கள்…?

    இரண்டாம் உலகமாகயுத்த காலத்தில் தான் முதாலிவர்க்கம் யூத எதிர்ப்பை தொழிலாவர்க்கத்தை பிளவு படுத்துவதற்காக அலையாக எழுப்பி விட்டது. அதுபோல இந்தியாவிலும் பிராமணிய எதிர்ப்பு இருக்க வேண்டாம்.

    பிராமணிய சமூகம் தான் இந்தியாவை கெடுத்தது என நினைத்தால் வரலாற்றை புரிந்து கொண்டதில் மிகப் பெரிய தவறு இருக்கிறது.

  34. கட்டுரை தொடர்பாக திரி 28ல் அம்பி எழுப்பும் சில முக்கிய வினாக்களுக்கான பார்வை.

    \\ரயில் வண்டியை விடுங்கள்.. ஒரு பேனாவை ஒளியின் வேகத்துக்கு முடுக்குவதற்கு செலவிடப்படும் ஆற்றல் நிறையாக மாறினால் பேனாவின் நிறை மாறுமா..?! நிறையுள்ள எந்த பொருளும் ஒளியின் வேகத்தை அடையமுடியாததற்கு வேறு அறிவியல் காரணங்கள் இல்லையா..?!\\

    இந்தக் கேள்வியிலேயே பதில் இருக்கிறது அம்பி. முடுக்கம் (Acceleration) என்கிற வார்த்தையை மிகச் சரியாக பயன்படுத்தியிருக்கிறீர். முடுக்கம் என்கிற பொழுது உந்தம் (Momentum) என்பதையும் வரையறுக்க வேண்டும்.

    நேர்கோட்டு உந்தம் (Linear Momentum) ஒரு பொருளின் நிறையையும் திசைவேகத்தையும் பெருக்குவதால் கிடைப்பது. பேனா என்பதிற்கு பதிலாக துப்பாக்கியிலிருந்து குண்டு என்று வைத்துக் கொள்வோமே! நீங்கள் கேட்பதைப் போல துப்பாக்கி குண்டு ஒளியின் வேகத்தை அடைய வேண்டுமானால் அதை முடுக்குவதற்கு அமைதி நிலையில் உள்ள ஒரு பொருளை உந்துவதற்கு தேவையான உந்தத்தை அளிக்க வேண்டும். எங்கே போவது?

    ஒரே சாத்தியம், நிறையுள்ள ஒரு பொருள் பல்அடுக்கு முடுக்கத்தால் ஒளியின் வேகத்தை அடைய முடியும் என்பது; (கருதுகோள்). அதாவது ராக்கெட்டை செலுத்துவதைப் போன்றது. குறிப்பிட்ட தூரம் வரை ஒரு வேகம், பிறகு வேகத்தை அதிகரிப்பது; இதைத் தவறு என்கிறது சிறப்பு சார்பியல் கொள்கை (Special Theory of Relativity). ஏனெனில் முதலில் நீங்கள் நிலைமப் புள்ளியை வரையறுக்க வேண்டும் அதாவது எதைப் பொறுத்து திசைவேகம் என்பதை நீங்கள் வரையறுக்க வேண்டும். எதன் திசைவேகம் என்பதைச் சொல்ல வேண்டும். இதற்கு Inertial Frame of Reference தேவை.

    பல்வேறு முடுக்க நிலையை என்பதில் உறுதியாய் இருந்தால் அமைதிநிலையில் உள்ள பொருளைப் பொறுத்து திசைவேகம் அதிகரிக்கிறது. ஒருவேளை நீங்கள் குண்டின் மீதே அமர்ந்து செல்வீர்களேயானால் உங்களால் திசைவேக அதிகரிப்பை உணர இயலாது. அப்படியானால் ஒரு முடிவுக்கு வர வேண்டும்; அதாவாது தனித்து இயங்குவது என்று எதுவும் இல்லை (Nothing is absolute). ஒவ்வொன்றும் ஒன்றை சார்ந்தே இயங்குகின்றன (Everything is related). ஆக சார்பியல் கொள்கையின்படி; ஒளியின் திசைவேகத்தில் செல்லும் பொருளின் நிறை ஈறிலி (Infinity).

    ஒரு எண்ணை பூஜ்யத்தில் வகுக்கும் பொழுது அது மிகப்பெரிய எண் என்பதை விட கணிதத்தில் இவை தேறப்பெறா வடிவங்கள் (Indeterminant form) என்றே அழைக்கப்படுகின்றன. அதாவது சார்பியல் கொள்கையின் படி நிறை அதிகரிக்க வேண்டும். அதே சமயம் ஒளியின் வேகத்தில் செல்லும் ஒளித்துகளின் (Photon) நிறை சுழியாகும் என்றால் நிறையுள்ள ஒரு பொருள் ஒளியின் வேகத்தில் செல்லமுடியுமா என்பதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?

    முடியும் என்கிறது மற்றுமொரு ஆய்வு. அடிப்படைத் துகள்களில் (Fundamental Particles) காலநீட்டிப்பு (Time dilation) என்பதை நிரூபித்துவிட்டால் நிறையுள்ள ஒரு பொருள் ஒளியின் திசைவேகத்திற்கு சற்று சமமாக செல்கிறது என்பதைச் சொல்ல முடியும். காலநீட்டிப்பின் படி ஒளியின் திசைவேகத்தில் செல்லும் ஒரு பொருளின் அரை ஆயுட்காலம் (தன் வாழ்நாளில் பாதியாக குறையும் காலம்) அமைதிநிலையில் இருப்பதை விட அதிகம் என்பதை அளவிடம் பொழுது இது சாத்தியம். காஸ்மிக் கதிர் பொழிவில் மீசான் துகளின் சிதைவு இதை நிரூபித்திருக்கிறது. ஒளியின் திசைவேகத்தில் செல்கிறது என்று மனிதன் சொல்வதற்கு தடையாய் இருப்பது நிறை அளவிடுவதில் நமது பிழைகளே. அதனால் ‘சற்று’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். ஒருவரால் அடிப்படைத் துகளின் நிறையை துல்லியமாக அளவிடும் பொழுது அறிவியல் இன்னும் சில விஷயங்களை கறாராக பேசும்.

    சமூகவிஞ்ஞானத்தில் ஐன்ஸ்டீன் கோட்பாட்டின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி இங்கிலாந்து கம்யுனிஸ்ட் கிறிஸ்டோபார் கால்டுவெல் “The Crisis in Physics” என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இந்தத் திசையில் நீங்களும் நானும் ஆய்வு செய்யவேண்டுமானால் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கு முதலில் போராட வேண்டும். சூத்திரன் உலகிற்கு நித்ய நைத்ய உணவுகளை வழங்குவதற்காக படைக்கப்பட்டிருக்கிறான் என்கிற சிந்தனை தூக்கியெறியப்பட்டால் மட்டுமே சாத்தியம்.

    \\கடவுள் இல்லை என்று நிறுவ அறிவியலை நம்புவது விரக்தியில் கொண்டுபோய் விடலாம்..\\

    உழைப்பவனுக்கு அதிகாரம் என்று சொல்கிற நாம், கடவுள் இல்லை என்று சொல்லத் தேவையில்லை. நம்முடைய நோக்கம் அதிகாரப் பகிர்வு எனும் பொழுது கடவுளிடமிருந்தும் அதைப் பிடுங்கவே செய்வோம். முதலாளிகளுக்கு எதிரான போராட்டத்தில் ‘ஆயிரக்கணக்கானவர்களுக்கு எதிராக கோடிக்கணக்கானவர்கள்’ எனும் பொழுது தனிச்சொத்துரிமையைத் தகர்க்கும் பொருட்டு ‘ஒருவருக்கு எதிராக கோடிக்கணக்கானவர்கள்’ என்றாலும், கோட்பாட்டிலும் எதைப் பெறவேண்டும் என்பதிலும் சரியாகத்தான் இருக்கிறோம்.

    ஆக கடவுள் இருந்தால் கம்யுனிசம் என்றால் என்ன என்பதை உழைப்பாளிகளுக்கு எங்களால் மிக எளிதாக புரிய வைக்க முடியும். ஒருமுறை ஸ்ரீரங்கத்தில் நமது தோழர்கள் உள்ளே சென்றே உலுக்கியிருக்கிறார்கள்; தூங்கிறியா? நடிக்கிறியா? ரங்கநாதா! என்கிற பாடல் கடவுளைப் பார்த்துதான்;

    நீங்கள் கடவுள் என்றால் என்ன? என்று சொல்லுங்கள். பிறகு இருக்கிறதா இல்லையா என்று முடிவு செய்வோம். இக்லிபிக்லி இருக்கிறதா என்றால் எப்படி புரிந்து கொள்ள முடியும்? அறிவியல் எதை அம்பலப்படுத்தியது என்றால் கடவுள் பெயரில் மதங்களின் அதிகாரத்தை. அவர்களின் நாய்ச் சண்டையை.

    \\ ஆகவே, பகவத் கீதையில் பகவான் உபதேசித்த ஞான யோகத்தை அறிவியல் அறிஞர்கள் சைடு ஆராய்சியாகக் கொள்வது நல்லது..\\

    வேண்டாம் அம்பி. ஒளியின் திசைவேகம் தொடர்பாக நிறைய கட்டுரைகள் வந்துள்ளன. எனக்கும் அதில் ஆழ்ந்த அறிவெல்லாம் கிடையாது. தொழிலாளர்களுக்கும் நீங்கள் அறிவியலின் சாரத்தைக் கொண்டு செல்ல விரும்பினால் நீங்கள் தோழர்களுடன் இயங்குவதைப் பற்றி சிந்தியுங்கள்.

    http://WWW.alternativephysics.org என்ற தளத்தில் உள்ள கட்டுரைகளை பொதுமக்களுக்கு புரியும்படி சொல்வதற்காக மொழிபெயர்த்துத் தாருங்கள். இன்னும் எத்துணை காலத்திற்குத்தான் அம்பியாக இருக்க உத்தேசம்?

    • // பேனா என்பதிற்கு பதிலாக துப்பாக்கியிலிருந்து குண்டு என்று வைத்துக் கொள்வோமே! நீங்கள் கேட்பதைப் போல துப்பாக்கி குண்டு ஒளியின் வேகத்தை அடைய வேண்டுமானால் அதை முடுக்குவதற்கு அமைதி நிலையில் உள்ள ஒரு பொருளை உந்துவதற்கு தேவையான உந்தத்தை அளிக்க வேண்டும். எங்கே போவது?//

      ரயில் வண்டிக்கு பதில் பேனாவை எடுத்துக் கொண்டது எளிமை கருதியே.. ரயில் வண்டியை ஒளியின் வேகத்துக்கு முடுக்க முடிந்தால் பேனாவின் வேகத்தையும் எளிதாக முடுக்க முடியும் என்பதால் ( அது ஒரு பேனா ராக்கெட் என்றோ அல்லது பேனாவை முடுக்கும் ஒரு தனி வகை சைக்ளொட்ரானில்(!) முடுக்கத்துக்குள்ளானாலோ என்ற கற்பனையில்)..!

      //பல்வேறு முடுக்க நிலையை என்பதில் உறுதியாய் இருந்தால் அமைதிநிலையில் உள்ள பொருளைப் பொறுத்து திசைவேகம் அதிகரிக்கிறது. ஒருவேளை நீங்கள் குண்டின் மீதே அமர்ந்து செல்வீர்களேயானால் உங்களால் திசைவேக அதிகரிப்பை உணர இயலாது.//

      திசை வேக அதிகரிப்பை உணராமல் இருக்க இயலாது என்பதுதான் சரி.. ஐன்ஸ்டீனில் சார்பியல் தத்துவத்தில் நிறையீர்ப்பு விசையும், முடுக்கத்தால் உண்டாகும் விளைவும் ஒன்றாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது.. எடுத்துக்காட்டாக, வினாடிக்கு 9.8 மீட்டர் வேக அதிகரிப்புடன் கீழிறங்கும் லிஃப்டினுள் நீங்கள் இருந்தால் எடை இழந்து மிதப்பதை உணர்வீர்கள்.. லிஃப்ட் அதே திசைவேக மாற்றத்துடன் மேலேரும்போது உங்கள் எடையை இரு மடங்காக உணர்வீர்கள்..

      //ஒளியின் திசைவேகத்தில் செல்லும் பொருளின் நிறை ஈறிலி (Infinity).//

      ஒரு அணுத்துகளை ஒளியின் வேகத்துக்கு முடுக்க முடிந்தால் அதன் ஆற்றல் ஈறிலியாகும் என்று கூறலாம்.. ஆனால் அதன் நிறை (rest mass) ஈறிலியாகும் என்றால் நமது சைக்ளோட்ரான்கள், LHC போன்ற அணுத்துகள் முடுக்கிகள் சிதறிவிடும்.. முடுக்கத்துக்கு செலவிடப்படும் ஆற்றல் பருப்பொருளாகிறது என்ற கட்டுரையின் கூற்றுக்கு விளக்கம் கேட்டது அதனால்தான்.. இங்கு, E=mc^2 -ல் c மாறிலி, அந்த அணுத்துகளின் ஆற்றல் E தான் அதிகரிக்கிறதே தவிர அதன் நிறை (rest mass) m மாறிலி.. அதாவது ஆற்றல் பருப்பொருள் ஆவதில்லை..

      // ஒரு எண்ணை பூஜ்யத்தில் வகுக்கும் பொழுது அது மிகப்பெரிய எண் என்பதை விட கணிதத்தில் இவை தேறப்பெறா வடிவங்கள் (Indeterminant form) என்றே அழைக்கப்படுகின்றன. அதாவது சார்பியல் கொள்கையின் படி நிறை அதிகரிக்க வேண்டும். அதே சமயம் ஒளியின் வேகத்தில் செல்லும் ஒளித்துகளின் (Photon) நிறை சுழியாகும் என்றால் நிறையுள்ள ஒரு பொருள் ஒளியின் வேகத்தில் செல்லமுடியுமா என்பதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்? //

      ஒளித்துகள் திசைவேக முடுக்கத்துக்குள்ளாவதில்லை.. ஒளித்துகளின் திசைவேகம் அந்தத் துகளின் தோற்றம் முதல் மறைவு வரை c தானே..?! ஆனால் நிலையாகவோ அல்லது ஒரே திசைவேகத்திலோ (inertial state) இருக்கும் ஒரு நிறையுள்ள பொருளை படிப்படியான முடுக்கத்துக்குள்ளாக்கி ஒளித்துகளின் திசைவேகத்துக்கு கொண்டு செல்ல ஈறிலி ஆற்றல் தேவைப்படும் என்று கூறலாம்..

      // முடியும் என்கிறது மற்றுமொரு ஆய்வு. அடிப்படைத் துகள்களில் (Fundamental Particles) காலநீட்டிப்பு (Time dilation) என்பதை நிரூபித்துவிட்டால் நிறையுள்ள ஒரு பொருள் ஒளியின் திசைவேகத்திற்கு சற்று சமமாக செல்கிறது என்பதைச் சொல்ல முடியும். காலநீட்டிப்பின் படி ஒளியின் திசைவேகத்தில் செல்லும் ஒரு பொருளின் அரை ஆயுட்காலம் (தன் வாழ்நாளில் பாதியாக குறையும் காலம்) அமைதிநிலையில் இருப்பதை விட அதிகம் என்பதை அளவிடம் பொழுது இது சாத்தியம். காஸ்மிக் கதிர் பொழிவில் மீசான் துகளின் சிதைவு இதை நிரூபித்திருக்கிறது. ஒளியின் திசைவேகத்தில் செல்கிறது என்று மனிதன் சொல்வதற்கு தடையாய் இருப்பது நிறை அளவிடுவதில் நமது பிழைகளே. அதனால் ‘சற்று’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். ஒருவரால் அடிப்படைத் துகளின் நிறையை துல்லியமாக அளவிடும் பொழுது அறிவியல் இன்னும் சில விஷயங்களை கறாராக பேசும்.//

      மியூ மீசானின் சிதைவு நேரம் அதிகரிப்பது காலநீட்டிப்பை உறுதி செய்கிறது, அதன் மூலம் ஒளியின் திசை வேகத்தை நெருங்கும் போது காலநீட்டிப்பு ஏற்படுகிறது என்பதையும் உறுதி செய்கிறது.. ஆனால் இது போன்ற உயர் வேகங்களில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட அதன் வர்க்கங்களில் (squares) மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்.. அத்தகைய உயர்வேகங்களில் ஒரு சிறிய அதிகரிப்பை ஏற்படுத்தக்கூட மிகப் பெரும் அளவிலான ஆற்றல் செலவிடப்படவேண்டும்..

      //உழைப்பவனுக்கு அதிகாரம் என்று சொல்கிற நாம், கடவுள் இல்லை என்று சொல்லத் தேவையில்லை. நம்முடைய நோக்கம் அதிகாரப் பகிர்வு எனும் பொழுது கடவுளிடமிருந்தும் அதைப் பிடுங்கவே செய்வோம். முதலாளிகளுக்கு எதிரான போராட்டத்தில் ‘ஆயிரக்கணக்கானவர்களுக்கு எதிராக கோடிக்கணக்கானவர்கள்’ எனும் பொழுது தனிச்சொத்துரிமையைத் தகர்க்கும் பொருட்டு ‘ஒருவருக்கு எதிராக கோடிக்கணக்கானவர்கள்’ என்றாலும், கோட்பாட்டிலும் எதைப் பெறவேண்டும் என்பதிலும் சரியாகத்தான் இருக்கிறோம்.//

      உங்களது கொள்கையில் தெளிவு தெரிகிறது.. அறிவியலோ, மார்க்சியமோ கடவுளை புறக்கணிக்கிறது என்று புரிந்து கொள்வது வேறு, கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று வாதிட்டுக் கொண்டு திசை மாறுவது வேறு..

      • //உங்களது கொள்கையில் தெளிவு தெரிகிறது.. அறிவியலோ, மார்க்சியமோ கடவுளை புறக்கணிக்கிறது என்று புரிந்து கொள்வது வேறு, கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று வாதிட்டுக் கொண்டு திசை மாறுவது வேறு..// கடவுள் என்பதற்கு என்ன பொருள் கொள்கிறிர்கள் என்பதைபோருத்தது, கடவுள் இல்லை என்பதும் , உண்டு என்பதும்! உண்டு என்போர்கள், அதை தனக்கு தெரிந்த அபாயமான விலங்கினமாகவோ, ஆற்றல் மிக்க எதிரி அல்லது காப்பாற்றும் துணையாகவோ உருவகப்படுத்தி, தனது வேட்டை பகுதியை பங்கிட்டு லஞசமாக கொடுத்து தாஜா செய்யும் காட்டு மிராண்டி பழக்கத்தை ஏற்படுத்தினர்!நாகரிகம் வளர வளர, குட்டு உடைந்து விடாமலிருக்க அச்சுருத்தும் புராணகதைகள், பிழைப்பு வாதிகளான குருமார்களாலும், ஆதிக்க வாதிகளின் வசதிக்காக மதங்களாக, ஒரு குழுவிற்கு எதிராக மற்றொரு குழுவை அல்லது கூட்டணியை உருவாக்கவே இவை இன்னும் பயன்படுகின்றன! உண்மையான படைப்பு அல்லது மூலாதார சக்தியை கண்டுபிடிக்க இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம், அல்லது முடியாமலே போகலாம்! ‘போசான’ கண்டுபிடித்த விஞ்ஞானிகள் கூட கடவுள் படைப்பு கொள்கையை ஒப்புக்கொள்ளவில்லை! உதாரணம் ஸ்டிபன் காக்கின்ஸ்

    • ஹரிகுமார்,

      கணிதத்தில் தேறப் பெறாவடிவங்கள் குறித்து நீங்கள் சுட்டிக் காட்டியது 100% சரியான வரையறை. மொழிவளம் என்பதற்காக நான் அதைப் பயன்படுத்தினேன். தமிழ்வழியில் பயின்றதால் தேறப் பெறாவடிவம் என்பதைப் பற்றி அதிகம் கற்பனை செய்திருக்கிறோம். ஆழமாக விவாதித்திருக்கிறோம். இதற்காக கணித ஆசிரியரும் என்னை வெறுக்கவே செய்வார். முடிவிலி என்பதை நான் அப்படிச் சொல்வதற்கு காரணம் முடிவில்லா நிறை என்றால் என்ன என்பதை ஒருவாக்கியம் காத்திரமாகக் காட்டும் என்பதால் தான் தேறப்பெறா வடிவம்.

      கேட் தேர்வு நம்மை நாலில் ஒன்றை தேர்ந்தெடுக்கத்தான் அனுமதிக்கிறதவிர சிந்திக்க அனுமதிப்பதில்லை.

      நிலையில்லாக் கோட்பாடும், லேசர் உமிழதலையும், சிக்கலெண் தீர்வுகள் இரட்டையாகத்தான் நிகழும் என்பதும், ஒரு அணுவில் உள்ள இரண்டு எலக்ட்ரான்களின் நான்கு குவாண்டம் எண்களின் மதிப்பும் தொகுப்பும் ஒன்றாயிராது என்பது போன்ற பல கருத்துக்களை சொந்த மொழியில் அசைபோட்டிருக்கிறோம்.

      ‘ஈறிலாத் தொலைவிலிருந்து நேர்மின்னூட்டம் பெற்ற அயனி ஒன்றை மின்புலத்தில் நகர்த்தும் பொழுது’ என்று சொல்கிற பொழுது முடிவிலி என்பது நாம் நினைப்பதைப் போல மிகப்பெரிய தொகையாக இல்லாமல் மின்புலத்தை உணராத எந்த ஒரு தொலைவும் ஈறிலா தொலைவு என்றே வரையறுக்கப்படுவதால் அது வெறும் 10 அல்லது 20 சென்ட்டிமீட்டராக்க் கூட இருக்கமுடியலாம் என்பதால் நான் தேறப் பெறாவடிவம் என்பதை அப்படியே இழுத்திப் பொருத்தினேன்.

      மற்றபடி நீங்கள் சொல்வது மிகச் சரியே.

      • ஒரு வேளை இது சரியான விளக்கமாக இருக்கக் கூடும்;

        நிறைப் பெருக்கம் m=mo/sqrt(1-v^2/c^2) என்பதில் பொருளின் திசைவேகம் (V) ஒளியின் திசைவேகத்திற்கு (c) சமமாகிற பொழுது சமன்பாடு m=m0/sqrt(0) என்பதாகிறது. 1/0 தேறப்பெறா வடிவமல்ல. ஆனால் 1/sqrt(0) என்பது தேறப்பெறா வடிவமே.

  35. @கற்றது கையளவு,

    முதலில் ஒன்று.நான் பதிவிட்டது கதை இல்லை.அதாவது புனைவிலக்கியம் இல்லை.அரசு ஆவணம்.ஆவணப்படுத்தியவர் வள்ளலார் அடியவர் இல்லை ஆங்கிலேய அரசு உயர் அதிகாரி.

    என்னுடைய பார்வையில் அந்த கலெக்டர் நடுநிலையாளர்.வள்ளலாரின் ஆயிரக்கணக்கான பக்தர்களின் எதிர்ப்பை மீறி பூட்டிய அறையை உடைத்து திறக்க உத்தரவிட்டவர்.காவல் துறை,மருத்துவர்கள் பூட்டிய அறையை முழுமையாக ஆய்வு செய்தபிறகு அதை ஏற்று தான் அறிந்ததை ஆவணப்படித்தியவர்.வள்ளலார் வரலாற்றை எழுதுபவர்களால் கதவை உடைக்க சொன்னதற்காக வசைபாடபடுபவர்.நான் அவரது கருத்தை சரியானதாக கருதுகிறேன்.

    அடுத்துள்ளது இதற்கான அறிவியல் அடிப்படை.வள்ளலார் செய்தது யோக விஞ்ஞானம் ஆகிய அக அறிவியலின் உச்சசாதனையை.அது குறித்த அறிவுதுறை வளர்ச்சி அடையவில்லை.எதிர்கால விஞ்ஞானம் அதை வளர்த்தெடுக்கலாம் என நம்புகிறேன்.

    • ///அரசு ஆவணம்.ஆவணப்படுத்தியவர் வள்ளலார் அடியவர் இல்லை ஆங்கிலேய அரசு உயர் அதிகாரி.///

      1) அரசு ஆவணத்திற்கு லிங்க் – ஸ்கேன் காப்பி ஏதாவது இருக்கிறதா? அல்லது ஏதாவது ஒரு “வரலாற்று” ஆசிரியர் தனது புத்தகத்தில் அந்த கலெக்டர் ஆவணப்படுத்தியுள்ள கதையளந்துள்ள ஆதாரம் தானா?

      ///ஆதாரமின்றி ஓப்பன்ஹீமரின் மேற்கோள்களையும் லிங்குகளையும், வைத்துக்கொண்டு ஐன்ஸ்டீன் கீதையை பற்றி புகழ்ந்து பேசியதாக பித்தலாட்ட மோசடி செய்யக்கூடாது. ///

      2) அந்த கலெக்டர் ஆவணப்படுத்தியிருந்தாலும் கூட அவர் மீதான சமூக நிர்பந்தங்களை / அவரது நோக்கத்தைய் நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது.

      ///அடுத்துள்ளது இதற்கான அறிவியல் அடிப்படை.வள்ளலார் செய்தது யோக விஞ்ஞானம் ஆகிய அக அறிவியலின் உச்சசாதனையை.அது குறித்த அறிவுதுறை வளர்ச்சி அடையவில்லை.எதிர்கால விஞ்ஞானம் அதை வளர்த்தெடுக்கலாம் என நம்புகிறேன்.///

      3) அறிவியல் கருத்து முதலில் கருதுகோளாக உருவாக்கிறது. பின்னர் அது கணிதத்தின் மூலம் நிறுவப்படுகிறது, சோதனைகள் மூலம் மெய்ப்பிக்கப்படுகிறது.
      உங்கள் கருத்தை முரணற்ற முறையில் விளக்கி கூற வேண்டும். அப்படு விளக்கி கூறினாலன்றி அதை கருதுகோளாக கருதமுடியாது, அது வெறும் நம்பிக்கை மட்டுமே. நம்பிக்கை அறிவியல் ஆகிவிடாது ராம்.

      சரி, அறிவியலின் உச்ச சாதனையை செய்த வள்ளலார் , தனது (யோக) அறிவியல் கருத்து பற்றி ஏதாவது குறிப்பு எழுதி வைத்திருக்கிறாரா? யாரிடமாவது பேசியிருக்கிறாரா?

      இதற்கும் யாராவது கதையளந்துள்ளதை ஆதாரங்களாக எடுத்துக்கொள்ள முடியாது.
      ஆதாரமும் முரணற்ற முறையில் இருக்கவேண்டும்.

      • ஆணி,

        1.நீங்கள் ஆவணகாப்பக மூல ஏட்டின் நகல் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன்.வடலூர்[மேட்டுகுப்பம்]சித்திவளாக மாளிகையில் மூல ஏட்டின் நகல் கண்ணாடி சட்டம் இட்டு வைக்கபட்டுள்ளது.நேரில் சென்று பார்க்கலாம்.அதை நம்பாத பட்சத்தில் சென்னை ஆவணகாப்பகத்தில் உள்ள தென்னார்க்காடு மாவட்ட 1878ம் ஆண்டு கெஜட்டில் பக்கம் 316,317ல் உள்ளது.அங்கு சென்று வாசித்து அறியலாம்.

        2.எந்த மாதிரியான சமூக நிர்பந்தம் அதாவது யார் நிர்பந்தித்து இருப்பார் என சொல்லுங்கள்.அவருக்கு என்ன நோக்கம் இருந்து இருக்கலாம் என்ற கதையையும் சொல்லுங்கள்.

        3.அனைத்து அறிவியல் கருதுகோளும் கணிதத்தின் மூலம் நிறுவமுடியுமா?.இது உடற்கூறு மற்றும் மனக்கூறு[உளவியல்] இனைந்தது அதை எப்படி கணிதத்தின் மூலம் நிறுவுவது என்று தெரியவில்லை.தேக சித்தியை[அழியாத உடல்] பற்றி பேசும் யோக விஞ்ஞானம் சித்தர்களுடையது.சித்த மருத்துவமும் அதில் ஒரு பகுதி.இன்று சித்த மருத்துவத்திற்கு அறிவியல் நிறுபனம் இல்லை.அதனால் அது பொய்யாகி விடுமா? இல்லை அதை யாரும் நம்பகூடாதா?

    • ஆங்கிலேய அதிகாரி ஆவணப்படுதியது, வள்ளலாரை சேர்ந்தவர்கள் கூற்றையே! அவர்களே வள்ளலாரை அப்புறப்படுத்திவிட்டு பின்னர் அறையை பூட்டீயிருக்க வாய்ப்புள்ளது! பின்னர் அதிகாரி முன்னிலையில் அறையை திறந்த போது அங்கு ஒன்றும் இல்லை! அது தான் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது! வள்ளலார் அவர்காலத்திலேயே பார்ப்பன மத எதிர்ப்பாளராக உருவாவதை, அவரின் புரவலராக இருந்த பார்பன விசுவாசிகளான அன்பர்களால் விரும்பப்படாமையால், அவர் மோட்சத்திற்கு அனுப்பபட்டார்! மற்ற பார்ப்பன மத எதிர்ப்பாள்ர்களைப்போலவே! திருமூலர்,நந்தனார், வள்ளலாரைப்போல மோட்சம் பெற்ற பார்ப்பனர்கள் உண்டா? பார்ப்பனர்கள் மற்றவர்களுக்கு விசா வாங்கிக்கொடுத்து மோட்சத்திற்கு அனுப்பும் ஏஜன்டுகள் மட்டும்தானா? பார்பன சம்பந்தனுக்கு இறைவியின் முலைப்பாலும்?, திருமணத்தையே தடுத்துநிருத்தியபின்னர் பிராயச்சித்தமாக ஆடல்மகளிரிடம் தூது செல்வதும் தானா இறைவன் பார்பானர்களுக்கு செய்யும் பணி?

      • அவர் திருக்காப்பிட்டு கொண்டார் என்று அடியவர்களும்,தனக்கு தானே பூட்டி கொண்டார் என்று ஆங்கிலேய அதிகாரியும் கூறுவதை கவனிக்கவும்.வள்ளலார் அடியார்களை தமிழ் சினிமா வில்லன்கள் அளவுக்கு கற்பனை செய்து விட்டீர்கள்.பார்பன விசுவாசிகளாகிய அவர் புரவலர்?! களின் பெயரை சொல்லமுடியுமா?

        பார்பன மதத்தை ஆதரித்த திருஞானசம்பந்தர்,மாணிக்கவாசகர் போன்ற பார்ப்பனர்களையும் கொளித்தி இருக்கிறார்களே?

    • நண்பர் ராம் அவர்களே,

      //யோகா விஞ்ஞானம், அறிவியலின் உச்ச சாதனை…. //
      நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், இதை நீங்களே நம்புகிறீர்களா? 🙂
      இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர் சார். கொஞ்சம் ப்ராக்டிகலாக யோசியுங்கள் 🙂

  36. தோழர் தென்றல்,

    நான் கேட்டது பார்ப்பனர்கள் வள்ளலாரை கொளுத்தியற்கு ஆதாரம் எதாவது உண்டா என்றுதானே? யூகங்கள் ஆதாரங்கள் ஆகாது இல்லையா? எனவே நீங்களோ,சரவணனோ ஆதாரங்கள் இருந்தால் பதிவிடுங்கள்.

    வள்ளலார் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த உண்மையான மனிதர்.அவர் குறித்த அரசு ஆவணத்தை புராண கதாபாத்திரங்களாகிய சிவன்,ராமன் போன்றோரிடம் ஒப்பிட்டு குழப்ப பார்க்காதீர்கள்.

    சரவணனுக்கு எதிர்வினையாற்ற எதுவும் இல்லை.அவர் “சந்தைக்கு போகனும் ஆத்தாவையும் காசு கொடு” என்ற பாணியில் பின்னுட்டமிடுகிறார்.

    உங்களுக்கும் சரவணனுக்குமான விவாதத்தை பார்த்தேன்,”யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”

    • ramக்கு எதிர்வினையாற்ற எதுவும் இல்லை.அவர் “சந்தைக்கு போகனும் ஆத்தாவையும் காசு கொடு” என்ற loosu பாணியில் பின்னுட்டமிடுகிறார்.

      ram said://அடுத்துள்ளது இதற்கான அறிவியல் அடிப்படை.வள்ளலார் செய்தது யோக விஞ்ஞானம் ஆகிய அக அறிவியலின் உச்சசாதனையை.அது குறித்த அறிவுதுறை வளர்ச்சி அடையவில்லை.எதிர்கால விஞ்ஞானம் அதை வளர்த்தெடுக்கலாம் என நம்புகிறேன்.//

      • அறிவியல் அறிவு சிறிதும் இன்றி “மு ட் டா ள் ” போல பேசும் ராமுக்கு என் ஆ ழ் ந் த அனுதாபங்கள்.

        ram said://அடுத்துள்ளது இதற்கான அறிவியல் அடிப்படை.வள்ளலார் செய்தது யோக விஞ்ஞானம் ஆகிய அக அறிவியலின் உச்சசாதனையை.அது குறித்த அறிவுதுறை வளர்ச்சி அடையவில்லை.எதிர்கால விஞ்ஞானம் அதை வளர்த்தெடுக்கலாம் என நம்புகிறேன்.//

    • ///பார்ப்பனர்கள் வள்ளலாரை கொளுத்தியற்கு ஆதாரம் எதாவது உண்டா என்றுதானே?///

      இது ஜெயேந்திரன் சங்கர்ராமனை கொன்றதற்கு நேரில் பார்த்த சாட்சி இருக்கிறதா? என்று கேட்பதை போல் இருக்கிறது.
      சதி திட்டம் தீட்டினாரே என்றால் அதை நேரில் பார்த்த சாட்சி இருக்கிறதா? என்று கேட்பதை போல் இருக்கிறது.

      சங்கர்ராமனை கொலை செய்த கூலிப்படையினரும் இதே கேள்வியை கேட்கலாம் : நாங்கள் சங்கர்ராமனை கொன்றதற்கு நேரில் பார்த்த சாட்சி இருக்கிறதா?

      சம்பவம் நடந்த சூழ்நிலை, முன் நிகழ்ந்தவை, பின் நிகழ்ந்தவை என்று அனைத்தியும் சேர்த்து ஆராயும் போது தான் முழுமையை புரிந்து கொள்ள முடியும்.

      • இது ஒரு ஒப்பீடா? முன் நடந்தது பின் நடந்தது எல்லாத்தையும் சேர்த்து ஆராய்ந்து சொல்லுங்களேன்.குறிப்பாக கொலை செய்ய என்ன மோடிவ் என்று சொல்லுங்கள்.

        • //பார்பன மதத்தை ஆதரித்த திருஞானசம்பந்தர்,மாணிக்கவாசகர் போன்ற பார்ப்பனர்களையும் கொளித்தி இருக்கிறார்களே?//

          //கொலை செய்ய என்ன மோடிவ் என்று சொல்லுங்கள்…/

          நண்பர் ராம் இப்போதுதான் சிந்திக்க ஆரம்பித்திருக்கிரார்!

          வல்லாரை கொலை செய்ததற்கு காரணம் அவர் மத சமரச நோக்குடன் உருவமிலா இறையை, சாதி சமய விதியாசமில்லாமல் அனைவரும் அறியலாம் என்றதால், அப்போதிருந்த மேல்வருண ஆதிக்கம் அழியும் என்ற பார்ப்பன மத வெறி தான்!

          திருஞான சம்பந்தர், முதலில் உறவினர்களால், யேசுவைபோல கடவுள் அவதாரமாகநிரூபிக்க முயற்சிக்கப்பட்டு, சைவ அரசு ஆதிக்கம் நிலைனாட்டப்பட்டு, பார்ப்பன ஆதிக்கம் உறுதிப்பட்டதும், துணைனின்ற திருனாவுக்கரசர் பார்ப்பன சாதி அல்லாமையால் பிற்காலத்தில் அவமானப்படுத்தப்பட்டு , பார்ப்பனர்களால் கொலையும் செய்யப்படுகிரார்! பார்பன புரொகிதர்கள், தங்களுக்குள் யார் அசல் என்ற கோத்திர சண்டையில் இறங்கி தென்னாட்டு பார்பனர்களை, அவர்கள் தமிழ்மீது சிறிது பற்றுகொண்டதே அபச்சாரம் என்று கருதி அருள்னந்திசிவம் முதியவர்களை எதிர்த்தனர்! மாணிக்கவாசகர் உயிருடன் இருந்தபோது அவர் அறியப்படவில்லை என்பதே உண்மை! தேவாரப்பாடல்கள் வழக்கொழிந்து, பின்னர் உமாபதி சிவம் வழிவந்தவர்களிடம் , மீட்டெடுக்கப்பட்டபோது, திருவாசகபாடல்களும் வெளி உலகுக்கு தெரிந்தது! திருவள்ளுவர், திருமூலர் போல இயற்றியவருக்கு புனை பெயராகவே மாணிக்க வாசகரென்றும்,நரியை பரியாக மாற்றும் அம்புலிமாமா கதைகளும் ஏற்பட்டன! அவர்தம் பாடல்களின் சிறப்பு கருதியே அவருக்கு, அனேகமாக அவர் பார்பனர் என்று கருதி, சைவ தலைனகரான தில்லையில் மோட்சம் அளிப்பதாக புனையப்பட்டது! சாதிய எல்லையை கடக்க, நந்தனாருக்கு அக்கினி வழியும், கார்த்தவீரியார்ச்சுனன் என்ற கார்த்தவ ராயனுக்கு கழுமர மோட்சமும்தான் என்று சூசகமாக தெரிவிக்கப்பட்டது!முதியவர் திருனாவுக்கரசருக்கு வாசியான காசும், வேதாரண்யத்தில் கதவடைப்பு அவமறியாதையும், இருதியில் கபால மோட்சமும்தான் கிட்டியது! திருனாவுக்கரசர்பால், பெருமதிப்பு கொண்டு, அவரின் பல தர்ம காரியங்களையும்நிர்வகித்த வேளாள சாதியினர் திருஞான சம்பந்தர்பால் பழி தீர்த்துக்கொண்டிருக்ககூடும்!

          சுந்தரருக்கு வைப்பாட்டிகள் ஏற்பாடு செய்து கொடுத்த இறைவன், எந்த ஊரில் எப்படி மோட்சமளித்தான் என்று தெரியவில்லை! பக்தியில் மூழ்கியவருக்கு புத்தி மழுங்கிபோவதால் இவைகளை யாரும் சிந்தித்து பார்ப்பதில்லை!

  37. சரவணன், ஆணி,தென்றல்

    சரி உங்களின் வாதப்படியே நந்தனார், வள்ளலார் ஆகியோரை பார்பனர்கள் எரித்து கொன்று விட்டு சோதியில் இரண்டற கலந்தார்கள் என்று புரட்டை கூறினார்கள் என்று வைத்து கொள்வோம். சரி,ஸ்மார்த்த பிராம்மணர் என்று கூறப்படும் ஞானசம்பந்தரும் சோதியில் ஐக்கியம் ஆனதாக கூறப்படுகிறதே. பார்பனரான மாணிக்கவாசக பெருமான் என்னும் திருவாதவூராரும் சோதியில் ஐக்கியம் ஆகி இறைவனுடம் இரண்டற கலந்ததாக வரலாற்றில் இருக்கிறதே இதற்க்கு என்ன சொல்வது. இவர்கள் இருவரையும் எந்த பார்ப்பான் தீக்கிரை ஆகினான். ஆகவே, எதையும் நாம் பொய் என்று நிராகரிக்கவும் முடியாது.. விஞ்ஞானத்தின் எல்லை ஓரளவிற்கு தான். அதை வைத்து கொண்டு ஆணவத்தின் உச்சத்தில் ஆட கூடாது. வள்ளல் பெருமானே மனிதனின் உடல் மூன்று நிலைகள் இருப்பதாக கூறிகிறார். அவை, சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான தேகம்(ஒளி உடல்) என்று. இதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள வள்ளலாரின் ஆறாம் திருமுறைகளில் வரும் பாடல்களை படித்து பார்த்தாலே தெரியும். அவர் கூறுவது

    “என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது.”

    ஆகவே, ஆணவத்தோடு நீங்கள் அணுகினால் எதுவும் உங்களை அணுகாது. அவரை பார்பனர்கள் எரித்து கொன்றார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வெறும் உங்கள் அனுமானங்களை வைத்து கொண்டு ஒரு உயர்ந்த மாகானை சுத்த ஞானியை அவதூறு செய்வதை நீங்கள் இத்தோடு நிறுத்தி விடுவது நல்லது. உங்கள் ஈனமான கம்யுனிச பார்வையில் சுத்த ஞானிகளை மதிப்பிடுவதை நிறுத்தி கொள்ளுங்கள். இல்லை என்றால் ஒன்று நிச்சயம் ” வினவிற்கு விநாச காலம் தொடங்கி விட்டது”.விபரீதத்தில் தான் போய் முடியும்

    • //“சரி,ஸ்மார்த்த பிராம்மணர் என்று கூறப்படும் ஞானசம்பந்தரும் சோதியில் ஐக்கியம் ஆனதாக கூறப்படுகிறதே. பார்பனரான மாணிக்கவாசக பெருமான் என்னும் திருவாதவூராரும் சோதியில் ஐக்கியம் ஆகி இறைவனுடம் இரண்டற கலந்ததாக வரலாற்றில் இருக்கிறதே இதற்க்கு என்ன சொல்வது.”//

      அக்காலத்திலேயே தன்னைத் தமிழன் என அழைத்துக் கொண்டு,அதைப் பெருமிதத்துடன், தன்னை நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன், தமிழ்ஞானசம்பந்தன், தமிழ் விரகன், தமிழாகரன், முத்தமிழ்விரகன், நாளும் தமிழ் வளர்க்கும் ஞானசம்பந்தன் என்று அடையாளப் படுத்திக் கொண்டும், தமிழின் மகிமையை அறியாதவர்களைப் பார்த்து “செந்தமிழ்ப் பயனறியாத அந்தக மந்திகள்” என்று கூறித் தமிழைப் போற்றியதாலும், தமிழில் தேவாரங்கள் பாடி சிவபெருமானை உருக வைத்துத் சம்பந்தர் அற்புதங்கள் நடத்தி, தமிழின் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தியமையாலும், வைதீகப் பார்ப்பனர்கள் ஆத்திரமடைந்து, அவரை அவரது திருமணநாளில் உயிரோடெரித்து விட்டு அவர் சோதியில் கலந்து விட்டார் என்று கதை பரப்பி விட்டனர் என்றும் கூறுவர். வேதங்களாலும் சமக்கிருத மந்திரங்களாலும் தான் அற்புதங்கள் நடத்தலாம் என்ற நம்பிக்கையைத் தகர்த்து, தெய்வத்தமிழுக்குத் தான் அற்புதங்கள் செய்யும் வல்லமை உண்டு என்பதை நிரூபித்தவர்கள் திருஞானசம்பந்தரும் ஏனைய நாயன்மார்களும்.

      வைதீக பழக்க வழக்கங்களின் படி ஒழுகாத பாரதியாரை எவ்வாறு பார்ப்பனர்கள் ஒதுக்கினர் என்பதை நாமறியக் கூடியதாக இருக்கிறது, அதனால், தமிழைப் போற்றிய தமிழ்ஞானசம்பந்தனுக்கும், மணிவாசகருக்கும் கூட நந்தனுக்கு நடந்த கதியே நடந்திருக்கலாம் என்று சிலர் கூறுவதையும் மறுக்க முடியாது.

    • மர்மயோகி,

      ‘புண்ணில் சரம்பெடுக்கும்’ பொய்முகமாக புளுத்து நாறுகிறது உங்கள் வாதம்.

      முதலில் வள்ளலார் சோதியில் கலந்தார் என்று சொல்வதன் மூலமாக அவரது மொத்த இருப்பையும் கேள்விக்குள்ளாவதும் அவரின் வாழ்க்கையை அசிங்கப்படுத்துவதும் நீங்கள் தான்.

      இரண்டவாதக ஞான சம்பந்தரோடு வள்ளலாரை இணைப்பது வக்கிரத்தின் உச்சம்.

      எப்படி என்று பார்ப்பதற்கு முன்னர் வள்ளலார் குறித்து ஆணி, சரவணன், கற்றது கையளவு, நான் ஆகியோர் வினையாற்றியதற்கு எந்த பதிலும் அளிக்க முயற்சி செய்யவில்லை என்பதை நினைவுபடுத்துகிறேன்.

      இருந்தபோதிலும் ஏன் பதில் அளிக்கிறோம் என்றால், விவாதத்தில், ஒன்று விவாதிக்கிற விசயங்கள் அம்பலப்படும்; அல்லது விவாதிப்பவர் அம்பலப்படுவார்; இரண்டாவது பிரதானமாக இருக்கிறது!

      ஆதாரம் குறித்தும், கோப்புகள் குறித்தும், வரலாற்று ஆவணங்கள் குறித்தும் சிவபெருமான்-தீட்சிதர்கள் தொடர்பான கோர்ட் அபிடவிட், ராமன் மனுவாதியாக சேர்க்கப்பட்டது போன்றவற்றை வைப்பதை நீங்கள் எப்படி அணுகுகீறிர்கள்?

      வள்ளலார் செய்த பணிகளை புறக்கணித்துவிட்டு ஜோதியில் கலந்தார் என்று ஒரு கூட்டம் அகநிலை அறிவியல் என்று ராம் பிரவண தேகம் என்று நீங்கள் கூறினால் பாரதிதாசனின் வரிகள் தான் நினைவிற்கு வருகிறது; “நக்கிக் குடி; அதை நல்லதென்று சொல்; தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்து நாயினும் தாழ்ந்து போ”

      வள்ளலாளர் செய்த பணிக்கும் இந்து மதத்தின் பார்ப்பனீய கொடூரங்களையும் உங்கள் வாதத்திலிருந்து இப்படி அறியலாம். வள்ளலார் சொன்னதாக நீங்கள் கூறுவது இதை;

      \\“என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது.”\\

      ஆனால் இதே தயவு குறித்து மகா பெரியவரான சங்கராச்சியார் என்ன கூறுகிறார் என்பதைப் பாருங்கள் “யாகம், யக்ஞம், தர்மம், திவசம் போன்றவைகளை மனிதன் தனக்கு செய்வதாக மட்டும் நினைக்கக் கூடாது; மாறாக பிறலோகங்களுக்கும் சேர்த்து செய்யவேண்டும்”

      ஈறேழுலோகத்தில் மேலோகத்தில் (7 அடுக்கு உண்டு; சத்தியலோகத்தில் பிரம்மன், தபோலோகத்தில் தேவதைகள், ஜனோலோகத்தில் பித்ருக்கள், சொர்க்கத்தில் இந்திரன் முதலான தேவர்கள், மஹர்லோகத்தில் முனிவர்கள், புனர்லோகத்தில் கிரகங்கள், நட்சத்திர தேவதைகள், பூலோகத்தில் மனிதர்கள், விலங்குகள் வசிக்கின்றனர்.) தர்மத்தின் பலனை பெரியவா சுட்டிக்காட்டுவது இவர்களுக்குத் தான்.

      ஆனால் பாதாள லோகத்தை ஹிந்து மதம் தஸ்யூக்கள் என்று சொல்கிறது. தஸ்யூக்கள் என்றால் தீங்கானவர்கள். பாதாள லோகத்தை (7 அடுக்கு உண்டு; அதல, விதல லோகங்களில் அரக்கர்கள், சுதல லோகத்தில் அரக்கர் குலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி, தலாதல லோகத்தில் மாயாவிகள், மகாதல லோகத்தில் புகழ்பெற்ற அசுரர்கள், பாதாள லோகத்தில் வாசுகி முதலான பாம்புகள், ரஸாதல லோகத்தில் அசுர ஆசான்கள்); பாதாளலோகம் இருட்டாக இருப்பதற்கு காரணம் இருட்டடிப்பு தான்.

      தயவு குறித்து வள்ளலார் சொல்வதில் சுயமரியாதை தன்மானம் உண்டு. தயவு குறித்து பூஜ்ய ஆச்சாரியார்கள் கூறுவதில் என்ன உண்டு? LICயின் விளம்பரத்தைப் போன்று வாழும் போதும் வாழ்க்கைக்குப்பிறகும் படிநிலை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.

      மகாபலியே பாதாளத்தில் இருக்கும் பொழுது, வள்ளலாரை பார்ப்பனீயம் எரித்தது என்பது புரட்டாகத்தான் இருக்க வேண்டுமா இல்லையா?

      பக்திக்கும் சுயமரியாதை உண்டு. தன்மானம் உண்டு; அதை கம்யூனிஸ்ட் நாங்கள் சொல்ல தேவையில்லை; அதை கண்ணப்பநாயனாரும், நந்தனும் வள்ளலாரும் கூறுவதால் தான் அவர்களை நாம் நன்றியுடன் நோக்குகிறோம்.

      ஆனால் எந்த ஒன்று இல்லாமல் மொட்டுக்கட்ட தனமனமாக வள்ளலாரை பிரம்மதேகம் என்கீறிர்கள்! பாரதிதாசன் இங்கும் பயன்படுகிறான் “நாயும் வயிறு வளர்க்கும் வாய்ச் சோற்றை பெரிதென்று நாடலாமோ?”

      சம்பந்தர் அடுத்த திரியில்.

    • \\ஸ்மார்த்த பிராம்மணர் என்று கூறப்படும் ஞானசம்பந்தரும் சோதியில் ஐக்கியம் ஆனதாக கூறப்படுகிறதே. பார்பனரான மாணிக்கவாசக பெருமான் என்னும் திருவாதவூராரும் சோதியில் ஐக்கியம் ஆகி இறைவனுடம் இரண்டற கலந்ததாக வரலாற்றில் இருக்கிறதே இதற்க்கு என்ன சொல்வது.\\

      வரலாற்று ஆவணங்களையே பதிலாக வைப்போம்.

      கல்வி, மாணவர், மாணாக்கியர், பள்ளி ஆகிய வார்த்தைகள் சமணர்கள் நமக்கு வழங்கினார்கள் (தொ. பரமசிவன், அறியப்படாத தமிழகம்).

      தீண்டாமை கூடாது; அனைவருக்கும் கல்வி என்று மனம் முழுவதும் கொள்கைகள் இருந்ததால் திசைகளையே ஆடையாக உடுத்திய திகம்பரர்கள் உடலில் ஆடைகளை களைந்து சன்னியாசம் பூண்டு தமிழக தெருக்களில் பிச்சையெடுத்து வாழ்ந்தார்கள்.

      ஆனால் கொல்லாமையைப் போதித்த சமணர்களுக்கு, சம்பந்தர் கொள்கையில் அம்மணமாக இருந்துவிட்டு, உடல் முழுதும் ஆடைகளை அணிந்து கருட புராணத்தின் படி குத்துவிளக்கை வைத்து கும்பிபாகத்தைப் போதித்தார். அவரை ஸ்மார்த்த பிராம்மணர் என்றழைப்பது சாலப் பொருந்தும்.

      ————————–
      மாணிக்கவாசர் தில்லையம்பலத்தில் தானே முக்தி பெற்றார். அவரும் சோதியில் கலந்தார் என்பதன் சூக்குமத்தை உணரவேண்டுமானால், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகையின் முதல் வரியை நோக்க வேண்டும்.

      பாணபத்திர ஓணாண்டியாக அவர் ஒன்றைச் சொல்வார் இப்படி “தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் 7.39.1”

      அந்த ஓணாண்டிப்புலவன் சொன்னதை அபிடவிட்டாக வைத்தார்கள் தீட்சிதர்கள். வைத்துவிட்டு மற்றொன்றையும் சொன்னார்கள்; ஆனானப்பட்ட மாணிக்க வாசகரே சிற்றம்பல மேடையில் ஏறிப் பாடவில்லை; ஆறுமுக சாமி எப்படிப் பாட முடியும் என்று கேட்டார்கள்;

      உமது மாணிக்க வாசகர் சோதியில் கலக்கவில்லை. மாறாக தீட்சிதரின் சாதியில் கலந்தார்.

      கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இருக்கிறது! ஒன்று மட்டும் உண்மை. கையில் எலுமிச்சையை வைத்துகொண்டு புலிகேசி இப்படிச் சொல்வார் “அரண்மனை முழுவதும் நாறி நச நசத்துவிட்டது!”

      \\ வெறும் உங்கள் அனுமானங்களை வைத்து கொண்டு ஒரு உயர்ந்த மாகானை சுத்த ஞானியை அவதூறு செய்வதை நீங்கள் இத்தோடு நிறுத்தி விடுவது நல்லது. உங்கள் ஈனமான கம்யுனிச பார்வையில் சுத்த ஞானிகளை மதிப்பிடுவதை நிறுத்தி கொள்ளுங்கள். \\

      நீங்கள் தன்மானமுள்ள பக்தராக இருந்தால் உள்ளது உள்ளபடி ஞானிகளை சுத்தமாக மதிப்பிட இப்பொழுது முதல் முயல்வது நல்லது. சுயமரியாதையில்லாத பக்தி தான் ஈனமானது.

    • மர்மயோகிக்கு உள்ள அக சிக்களுக்காக நாம் அனுதாபப் படலாமே தவீர ,அவரை வசை பாடி அவரை மேலும் ஆழ்நத பிரச்சனையில் மாட்டி விடக்கூடாது.

      சூரிய ஆற்றல் மின்சாரமாக மாற்றப்படுகிறது.

      அணு சக்தி மின்சாரமாக மாற்றப்படுகிறது.

      நீர் ஆற்றல் மின்சாரமாக மாற்றப்படுகிறது.

      பழுப்பு நிலக்கரியீன் வெப்ப ஆற்றல் மின்சாரம் மாற்றப்படுகிறது.

      போன்ற அடிப்படை அறிவு மர்மயோகிக்கு இல்லாமைக்காக நாம் வருந்த வேண்டுமே தவீர அவரை வசை பாட கூடாது.

      கணினி அறிவியலின் செல்லக்குழந்தையாகிய இணையத்தை[internet] blogs மூலம் http://marmayogie.blogspot.in/ பயன் படுத்திகொண்டே அறிவியலை தூற்றும் மர்மயோகி “பால் கொடுக்கும் தாயீன் நெஞ்சையே” விளையாட்டாக எட்டி ஒதைக்கும் சிறு குழைந்தை போன்றவர். இக் குழந்தை அறிவியலின் வளரும்போது பிரச்சனைகள் தீரும்.

      //விஞ்ஞானத்தின் எல்லை ஓரளவிற்கு தான். அதை வைத்து கொண்டு ஆணவத்தின் உச்சத்தில் ஆட கூடாது//

    • எல்லா கட்சிகளையும் [காங்கிரஸ் தவிர்த்து] சரியான முறையில் விமர்சிக்கும் மர்மயோகிக்கு காங்கிரஸ்சின் டெல்லி சீக்கிய படுகொலை முதல் ஈழம் படுகொலை வரை கண்ணுக்கு தெரியாத மர்மம் என்ன யோகி? மர்மயோகி?[May 16 வரை பொறுங்கள் யோகி. காங்கிரஸ் கொலை கார நரிகள் RSS,BJP போன்ற மத வெறி நாய்க்லீடம் தோற்று ஓடுவதை பார்க்க போகின்றிர்கள் ]

      http://marmayogie.blogspot.in/search/label/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

      “விநாச காலே விபரீத புத்தி” யாருக்கு என்பது “ஈனமான கம்யுனிச பார்வை” என்று எம்மை நீர்தூற்றும் போதே புரிகிறது அல்லவா ?

      //உங்கள் ஈனமான கம்யுனிச பார்வையில் சுத்த ஞானிகளை மதிப்பிடுவதை நிறுத்தி கொள்ளுங்கள். இல்லை என்றால் ஒன்று நிச்சயம் ” வினவிற்கு விநாச காலம் தொடங்கி விட்டது”.விபரீதத்தில் தான் போய் முடியும்//

  38. தென்றல்…

    நான் என்ன சொல்ல வந்தேன் நீங்கள் என்ன பேசுகிறீகள். வள்ளலார் போன்ற சுத்த ஞானிகளை குறித்து அவதூறு பேசாதீர்கள் என்று கூறினால். உடனே, காஞ்சி சங்கர மடத்து சாக்கடைகளை பற்றி என்னிடம் அளந்து கொண்டு இருகிறீர்கள். காஞ்சி சங்கராச்சாரிகளை சுத்த ஞானிகள் என்று எவன்யா சொன்னது. நான் சொன்னேனா. முதலில் அவர்கள் யாரும் ஞானிகளே கிடையாது. வள்ளலாரோடு காஞ்சி சங்கரச்சரிகளை ஒப்பிட்டு பேசுவதே பெரும் பாவம்.உண்மை ஞானிகளாக இருந்திருந்தால் இந்நேரம் சங்கர மடத்தில் அனைத்து சாதியினரும் வலம் வந்திருப்பார்கள். பார்பனர் அல்லாத ஒருவர் எப்போதோ சங்கராச்சாரியாக தலைமைக்கு வந்திருப்பார். வடலூர் சத்திய ஞானசபைக்கு போய் பாருங்கள் தாழ்த்தபட்டவர், வன்னியர், வெள்ளாளர் என்று அனைவரும் சன்மார்கிகளாக இருப்பதை காணலாம்.

    //ஆனால் எந்த ஒன்று இல்லாமல் மொட்டுக்கட்ட தனமனமாக வள்ளலாரை பிரம்மதேகம் என்கீறிர்கள்! //

    நீங்கள் பேசுவதுதான் தட்டுகெட்ட தனமாக இருக்கிறது. நானா கூறினேன் . ஆன்மாவின் பக்குவத்திற்கு ஏற்றார் போல் மூன்று நிலைகள் எடுப்பதாக எடுப்பதாக வள்ளல் பெருமானார் தான் கூறுகிறார். சந்தேகம் இருந்தால் திருஅருட்பா உரை நடை பகுதியில் தெளிவாக கூறி இருக்கிறார் போய் படித்து பாருங்கள். சுத்த ஞானியின் அடையாளங்களாக அவர் கூறுவது என்ன. அவர் வார்த்தைகளிலேயே பாருங்கள்.

    “நாம் நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணை ஆசாரியர் அனுக்கிரகத்தால் திறக்கப் பெற்றுக் கொள்வது நலம். ஏனெனில், மேற்படி நெற்றிக் கண்ணைத் திறக்கப்பெற்றுக் கொண்டவனுக்கு எல்லா அனுபவங்களும் பட்டப்பகல்போல் தெரியும். அவன்தான் சுத்தஞானி. மேற்படி ஞானி தயவோடு ஒரு பிரேதத்தைப் பார்த்த மாத்திரத்தில் பிரேதம் உயிர்பெற்றெழும். மேற்படி ஞானிக்கு ஆன்மாக்களினது அபக்குவ பரிபாகத்தால் சினம் தோன்றினால். உடனே அந்த ஜீவன் பஸ்பமாகி விடுவன். மேற்படி ஞானிக்கு மேற்குறித்த அடையாளங்களுள. மேற்படி கண்ணைத் திறப்பதற்கு ஒரு கதவும் பூட்டுமுளது. மேற்படி பூட்டை அருளென்கிற திறவுகோலைக் கொண்டு திறக்க வேண்டும். ஆதலால், மேற்படி அருளென்பது ஆன்ம இயற்கையாகிய பெருந்தயவு. நாம் தயாவடிவமானால் மேற்படி அனுபவம் நேரும்.”

    ஆதாரம்:திருஅருட்பா உரைநடை பகுதியில் வரும் “ஞானசித்தியும் ஒளிநிலையும்”. என்னும் தலைப்பில் இருந்து. ஒரு வேலை இது கூட வள்ளலார் கூறியதாக விஷம பார்பனர்கள் எழுதி வைத்ததாக இருக்குமோ.

    //இரண்டவாதக ஞான சம்பந்தரோடு வள்ளலாரை இணைப்பது வக்கிரத்தின் உச்சம்.//

    நால்வர் நான்மணி மாலை என்னும் திருஅருட்பா பாடலில் வள்ளலார் ஞானசம்பந்தரை ஏற்று போற்றி பாடி இருப்பதை படித்து விட்டு வாருங்கள். அதற்க்கு பிறகு யார் பேசுவது வக்கிரத்தின் உச்சம் என்று பார்போம்.

    வள்ளலார் ஜோதி நிலை அடையவில்லை என்று தற்காலத்தில் கம்யுனிஸ்டுகள் நீங்கள் மட்டுமல்ல காஞ்சி மடம், ரமணர் ஆசிரமத்தில் இருக்கும் பார்பான்களும் ஒத்துக்கொள்வதில்லை. காரணம் ரமணரும், இவர்கள் ஏற்று போற்றும் பிராடு ஜகத்து குருக்களும் அந்த நிலையை அடையவில்லை என்பதற்காக.

    இறுதியாக ஒன்று சொல்கிறேன், பார்பனர்களால் ஏற்படும் சமுக அநீதிகளை எதிர்த்து போராடுங்கள் அதில் தவறு ஒன்றும் இல்லை. கோவில்களை அரசுடமை ஆக்குங்கள், அனைத்து சாதியினரும் அரச்சகர் ஆகட்டும். தில்லையில் தமிழ் ஒலிக்கட்டும். இதற்காக நாங்களும் தோள் கொடுக்கிறோம். அதற்காக, தயவு செய்து வள்ளலார் போன்ற சுத்த ஞானிகளை கொச்சை படுத்தாதீர்கள்.

    • “வள்ளலார் ஜோதி நிலை |—-அடைந்தார்—-| என்று தற்காலத்தில் கம்யுனிஸ்டுகள் நீங்கள் மட்டுமல்ல காஞ்சி மடம், ரமணர் ஆசிரமத்தில் இருக்கும் பார்பான்களும் ஒத்துக்கொள்வதில்லை”

      என்று சரியாக எழுதுங்கள் மர்மயோகி!

      //வள்ளலார் ஜோதி நிலை அடையவில்லை என்று தற்காலத்தில் கம்யுனிஸ்டுகள் நீங்கள் மட்டுமல்ல காஞ்சி மடம், ரமணர் ஆசிரமத்தில் இருக்கும் பார்பான்களும் ஒத்துக்கொள்வதில்லை//

    • மர்மயோகி,

      வள்ளலாரை பற்றி என்ன அவதூறு பேசுகின்றேம்? அவர் மரணம் ஏற்படுத்தும் சர்ச்சைகள் ஒன்றும் புதியது அல்லவே !. வள்ளலாருக்கும் சிதம்பரம் தீச்சதர்களுக்கும் இருந்த பகையை மறைக்க முடியுமா ? வள்ளலார் பிற்காலத்தில் சிதம்பரம் நட ராஜர் கோவிலுக்கு செல்லாததன் காரணம் என்ன ? வள்ளலார் மீது யாழ் நாவலர் வழக்கு தெடுத்தது ஏன் ? இதை நாம் நம் தமிழ் சமுகத்துக்கு தெரிவித்தால் தானே இப் பார்பனர்களின் சதியை அம்பலபடுத்த முடியும்.

      தென்றல் அவர்கள் வள்ளலாரை பார்பன சங்கரசாரியுடன் ஒப்பாய்வு செய்ததால் தானே வள்ளலாரின் பரந்த சமுக பார்வையும், பார்பனர்களின் சிறுமையும் மக்களுக்கு புலப்படும்.

      பாருங்கள் நீங்களே எவ்வளவு அழகாக ஒப்பாய்வு செய்து உள்ளீர்கள் :

      ” உண்மை ஞானிகளாக இருந்திருந்தால் இந்நேரம் சங்கர மடத்தில் அனைத்து சாதியினரும் வலம் வந்திருப்பார்கள். பார்பனர் அல்லாத ஒருவர் எப்போதோ சங்கராச்சாரியாக தலைமைக்கு வந்திருப்பார். வடலூர் சத்திய ஞானசபைக்கு போய் பாருங்கள் தாழ்த்தபட்டவர், வன்னியர், வெள்ளாளர் என்று அனைவரும் சன்மார்கிகளாக இருப்பதை காணலாம். ”

      //நான் என்ன சொல்ல வந்தேன் நீங்கள் என்ன பேசுகிறீகள். வள்ளலார் போன்ற சுத்த ஞானிகளை குறித்து அவதூறு பேசாதீர்கள் என்று கூறினால்…………..//

  39. திரு.வியாசன் …

    //தமிழில் தேவாரங்கள் பாடி சிவபெருமானை உருக வைத்துத் சம்பந்தர் அற்புதங்கள் நடத்தி, தமிழின் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தியமையாலும், வைதீகப் பார்ப்பனர்கள் ஆத்திரமடைந்து, அவரை அவரது திருமணநாளில் உயிரோடெரித்து விட்டு அவர் சோதியில் கலந்து விட்டார் என்று கதை பரப்பி விட்டனர் என்றும் கூறுவர்.//

    8000 சமணர்களை கழுவில் ஏற்றிய ஆத்திரத்தில் சமணர்கள் இதை செய்தார்கள் என்று கூட சொல்கிறார்கள். நீங்கள் இப்போது புதுசாக வைதீக பார்பனர்கள் செய்து விட்டதாக சொல்கிறீர்கள். இரண்டிற்குமே வெறும் அனுமானத்தை தவிர உருப்படியாக வலிமையான எந்த ஆதாரமும் இல்லை.

    ஞானசம்பந்தராக இதை செய்யவில்லை(கழுவில் ஏற்றியது) சமணர்களாகவே தேவை இல்லாமல் வாதுகழைத்து தாங்களாகவே இந்த கதியை ஏற்படுத்தி கொண்டார்கள் என்று தான் பெரிய புராணத்தில் சேக்கிழார் பதிவு செய்கின்றார்.

    வள்ளலாரின், மாணிக்க வாசகரின் ஞான சித்தி பெற்ற பெருநிலையை கம்யுனிஸ்டுகள் கிண்டலடித்து கூறினாலும் பரவில்லை. அதில் ஆச்சர்ய பட ஒன்றும் இல்லை. ஆனால் தமிழரின் பண்பாட்டு விழுமியங்களை காக்க வேண்டும் என்று போராடும் நீங்கள் இதை பொய் என்று கூறுவது தான் வருத்தமாக இருக்கிறது.

    • ///இரண்டிற்குமே வெறும் அனுமானத்தை தவிர உருப்படியாக வலிமையான எந்த ஆதாரமும் இல்லை.///

      என்ன செய்வது எல்லாமே அனுமானம் தான், இக்காலத்தில் நடந்த கொலைகளுக்கே ஆதாரமில்லை, நரூபிக்க முடியாதென்று கூறி ‘அவாளை’ விடுதலை செய்கிறார்கள். இது பொய்யா, உண்மையா என்று நிரூபிக்க என்னிடம் ஆதாரமேதுமில்லை, ஆனால் இப்படியும் சிலர் கருத்துத் தெரிவித்ததை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இக்காலத்திலேயே தீட்சிதர்களின் தமிழெதிர்ப்பையும், தள்ளாத வயதில் படியில் ஏறக்கூட முடியாமல் தடுமாறிய சிவனடியார் ஆறுமுகசுவாமியை, எவ்வளவு வெறியுடன் தீட்சிதர்கள் தள்ளினார்கள் என்பதை நினைக்கும் போதும், அத்துடன், அவர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு, ஏனைய பார்ப்பனர்களும் அவர்களுடன் எல்லோரும் கூட்டுச் சேர்ந்து தமிழ் நாட்டிலேயே தமிழர்களுடன் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்பதையும் பார்க்கும் போது, தமிழ், தமிழ் என்று தமிழைப் புகழ்ந்த ஞானசம்பந்தரும் தீட்சிதர்களால் எரிக்கப்பட்டிருக்கலாம் என்ற கதையை, என்னைப் போன்ற தமிழர்களும் நம்பத் தான் செய்வார்கள்.

      • திருஞானசம்பந்தரை தீட்சிதர்களோ பார்ப்பனர்களோ அல்லது வேறு யாரேனுமோ எரித்துக் கொன்றார்கள் என்பதை நீங்கள் நம்பினால், அதை வேடிக்கை பார்த்த சிவபெருமானையும், பாலூட்டிய அன்னை பார்வதியையும் பற்றி அவர் பாடிய தேவாரப்பாடல்கள் அனைத்தும் பொருளற்றதாய்ப் போய்விட்ட தமிழ் பாடல்கள் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா..?! இதையே ’கொலையுண்ட’ திருநாவுக்கரசருக்கும், மாணிக்கவாசகருக்கும், சிவயோகிகளான 18 ‘ஆசீவக’ சித்தர்களுக்கும் பொருத்தினால் சைவமும் தமிழும் பிரிய வேண்டியதாயிருக்குமே.. திரைக்கதை எழுதுவதில் நாத்திகர்களுக்கிருக்கும் சுதந்திரம் உங்களுக்கில்லை சைவரே..!

  40. How could there been a debate between the followers of different religions and when the kings supporting a particular religion?How principles of different religions could be compared?The debates must have been conducted with the sole aim of eliminating the jains.

  41. தோழர்கள் அம்பலபடுத்தும் ஆன்மீகபடுகொலைகளின் எண்ணிக்கையும் அதற்கான காரணங்களின் எண்ணிகையும் அதிகரித்து வருவது குறித்து மகிழ்ச்சி.தோழர்களின் கவனத்தில் இருந்து தப்பிய சில படுகொலைகளை அம்பல படுத்த முயன்றுள்ளேன்.தோழர்கள் அளவுக்கு எனக்கு பயிற்சி போதாது என்பதை நான் அறிவேன்.இருப்பினும் உண்மையை உலகுக்கு உணர்த்த வேண்டிய உத்வேகத்தால் இதை செய்துள்ளேன்.பிழை பொறுத்தருள்க.

    ஆன்மீக படுகொலைகளும் அதற்கான காரணங்களும்
    —————————————————

    1]கண்ணப்ப நாயனார்.
    கொலைசெய்த விதம்: கண்ணப்ப நாயனார் பூஜை செய்ய வருவதை அறிந்த பார்ப்பனர்கள் அதற்கு முன்பே தக்காளி சட்டினியை சிவனின் கண்ணில் வழியவிட்டு அதில் சிறிது கோந்தையும் வைத்து விட்டனர்.தக்காளி சட்டினியை ரெத்தம் என்று நினைத்து தனது ஒரு கண்ணை பிடுங்கி சிவனின் கண்ணில் அப்ப கோந்து இருந்ததால் கண்ணும் ஒட்டி கொண்டது.அத்தோடு விட்டார்களா? மறுகண்ணிலும் அதே போன்று செய்து கண்ண்

    • பின்னுட்டம் 46ன் தொடர்ச்சி…கண்ணப்பநாயனாரின் மற்றொரு கண்ணையும் காவுவாங்கினார்கள்.ரெத்த இழப்பால் அவர் மரணமடைய மோட்சம் அடைந்து விட்டதாக சொல்லி கதையை முடித்தார்கள்.

      கொலைக்கான காரணம்: அவர் வரலாறை படித்தவர்களுக்கு காரணம் வெளிப்படையாக தெரியும்.

      2]மாணிக்க வாசகர்.
      ——————-.
      கொலை செய்த விதம்: இவர் சிதம்பரம் மூலவர் சன்னிதியில் இரண்டற கலந்தார் என புராணம் கூறுவதால் கருவறையில் உள்ள மணி முதலிய பொருட்களால் தாக்கி கொன்றுவிட்டு கருவறைக்குள்ளேயே புதைத்துவிட்டார்கள் என அறியலாம்.

      கொலைக்கான காரணம்: தீட்சதர்கள் நடராஜருடன் கைலாயத்தில் இருந்து வந்ததாக கூறிகொண்டிருக்கையில் இவர் “தில்லையில் கூத்தனே தென்பாண்டிநாட்டானே” என்று பாடி தொலைத்துவிட்டார்.வேறுகாரணமும் வேண்டுமா?

  42. ஆன்மீக படுகொலைகளும் காரணங்களும் தொடர்ச்சி…

    திருநாவுக்கரசர்: இவர் கயிலையில் மூழ்கி திருவையாற்றில் உள்ள குளத்தில் எழுந்தார் என்றும் ஜல சமாதி ஆனார் என்றும் கூறுவதால் ஐந்தாறு பார்ப்பனர்கள் சேர்ந்து கொண்டு குளத்துகுள்ளேயே வைத்து கொன்று விட்டார்கள் என்று தெரிகிறது.

    கொலைக்காண காரணம்: திருஞான சம்பந்தரோடு இவருக்கு இருந்த நட்புதான் காரணம்.சம்பந்தர் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரையும் கொன்றவர்கள் அவருடைய நெருங்கிய நண்பராகிய அப்பரை மட்டும் விடுவார்களா?[அப்பர் மீது பக்தி கொண்ட காரணத்தால் அப்பூதியடிகள் என்ற நாயன்மாரும் படுகொலை செய்யப்பட்டார் அது பற்றி பிறகு விளக்கபடும்]

    பின் குறிப்பு: பெரிய புராணத்தை பார்க்கும் போது 63 நாயன்மார்களும் மோட்சமடைந்ததாக உள்ளது.எனவே அவர்கள் அனைவரும் பார்ப்பனர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.அதை பற்றி தினம் ஒன்றாக எழுதலாம் எனநினைக்கிறேன்.படுகொலைகளை அம்பலபடுத்துவதில் பயிற்சியும் நிபுணத்துவமும் உடைய தோழர்களின் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.நன்றி.

  43. ராமுக்கு ஏற்பட்டு உள்ள பதட்டமும், இதய துடிப்பு அதிகரிப்பும் ,BP உயர்வும் நம்மால் புரிந்து கொள்ள கூடியதே !

    ராம் அவர்கள் காஞ்சி சங்கரவால் ஆடிட்டர் தாக்கபட்ட சம்பவம் ,சங்கர ராமன் கொலை ஆகியவற்றையும் பட்டியல் இட்டால் பார்பனர்களீன் பாவ செயல் முழுமை பெறும்.

  44. பார்பனர்களின் கொலை வெறி
    ———————————————
    Ram மேலும்,

    இரண்டாம் ஆதித்தன் என்ற ராஜ ராஜ சோழனின் அண்ணனை கொலை செய்த பார்பனர்கள் சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதி ராஜன், பரமேசுவரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்போர். அந்நால்வரும் உடன்பிறந்தோர் என்பது அக்கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது. பஞ்சவன் பிரமாதிராஜன், இருமுடிச் சோழ பிரமாதி ராஜன் என்னும் உயர்ந்த பட்டங்கள் பெற்றவராக இருத்தலால் அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்திருத்த அந்தணர் ஆவர். அவர்கள் அரசியல் அதிகாரிகளாயிருந்தும் தம் இளவரசனான ஆதித்தகரிகாலனை வஞ்சகமாகக் கொன்றமைக்குக் காரணம் என்ன ராம் ????

    ஆதாரம் : உடையார் குடியில் காணப்படும் கல் வெட்டு

  45. ram,

    தமிழர்களால் தலை சிறந்த அரசனாக போற்றப்படும் ராஜ ராஜன், அவன் அண்ணனை கொலை செய்த “பார்பனர்கள்” சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதி ராஜன், பரமேசுவரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் ஆகியேருக்கு மரண தண்டனை அளிக்க முடியாமல் தடுத்த சட்டம் என்ன ராம் ? மனு நீதியா? கொலை காரர்களீன் சொத்துக்கள் மட்டும் சோழ அரசால் பறிக்க பட்டு , கொலை காரன்கள் விடுவிக்கபட்டது ஏன் ராம்?

  46. ராம்

    பட்டினத்தாரை விட்டு விட்டேர்களே..

    அவர் சித்தர் நிலையை அடைந்ததால் மக்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகியது அதை கண்டு பொறமை பிடித்த பார்பனர்கள் கேவலம் ஒரு செட்டி பயலை இவ்வளவு தூரம் வளர விடுவதா என்றெண்ணி அவரை மண்டையில் ஓங்கி அடித்து தூக்கி சென்று மண்ணில் புதைத்து விட்டார்கள். கேட்டதற்கு அவர் ஜீவ சமாதி நிலை அடைத்து விட்டதாக கதை கட்டி விட்டார்கள்.

    கம்யுனிச தோழர்கள் தான் மேற்படி நடந்த ஆன்மீக கொலைகளை துப்பறிய வேண்டும். உங்கள் அளவிற்கு யாராலும் துப்பறிந்து அறிக்கை சமர்பிக்க முடியாது. நீங்கள் தான் அதில் கைதேர்ந்த வல்லவர்கள். ம்ம்.. சீக்கிரம் செய்யுங்கள்.. குற்றம் செய்தது பார்பனர்கள். அப்புறம் அவர்கள் சார்பாக சுப்ரமணிய சாமியை வாதாட அழைத்து வந்து விட போகிறார்கள்..

    • ராம் அவர்களாவது பரவாயீல்லை! பார்பனர்களால் கொல்லப்பட்ட மனிதர்களை துல்லியமாக-நகைசுவைக்காக பட்டியல் இடுகின்றார்.

      ஆனால் சொல் புத்தியும், சுய புத்தியும் இல்லாத யோகி,மர்ம யோகி அவர்கள் கம்யூனிஸ்ட்களை அவதூறு செய்வதை மட்டுமே நேக்கமாக கொண்டு வினாவில் மறைவதும் மீண்டும் ஒளிர்வதுமாக இருக்கின்றார்.

      வாழ்த்துகள் யோகி,மர்ம யோகி!

      //ஈனமான கம்யுனிச பார்வையில் சுத்த ஞானிகளை மதிப்பிடுவதை நிறுத்தி கொள்ளுங்கள். இல்லை என்றால் ஒன்று நிச்சயம் ” வினவிற்கு விநாச காலம் தொடங்கி விட்டது”.விபரீதத்தில் தான் போய் முடியும்//

      //கம்யுனிச தோழர்கள் தான் மேற்படி நடந்த ஆன்மீக கொலைகளை துப்பறிய வேண்டும். உங்கள் அளவிற்கு யாராலும் துப்பறிந்து அறிக்கை சமர்பிக்க முடியாது. நீங்கள் தான் அதில் கைதேர்ந்த வல்லவர்கள். ம்ம்.. சீக்கிரம் செய்யுங்கள்//

  47. ராம் ,

    நீங்கள் கூறும் கண்ணப்ப நாயனார் கதை வலி மிகு காமடியாக இருந்தாலும் சார்லி சாப்ளின் அவர்கள் “Modern Times” என்ற படத்தில் அவர் வேகம் ஏற்றபட்ட “assembly line” ல் வேலை செய்யும் தொழிலாளரின் வலிகளையும்,முதலாளிகலின் லாபத்துக்கான கோர பசியையும் காட்டுவது போல நீங்களும் கண்ணப்ப நாயனார் கதை மூலம் அவர் போன்றேர் அடைந்த வலிகளை காட்சிபடுத்தி உள்ளீர்கள். நன்றி.

    கண்ணப்ப நாயனார் கதை:
    ——————————

    கண்ணப்ப நாயனார் என்பவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். திண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், வேடர் குலத்தில் பிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாட சென்றபோது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார். அந்நாள் முதல் வாயில் நீர்சுமந்து வந்து அபிசேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர், இலைகளால் அர்சனை செய்தும், பக்குவப்பட்ட பன்றி இறைச்சியை படைத்தும் வந்தார். இதைக்கண்டு ஆகமவிதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவ கோசரியார் எனும் பிராமணர் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவகோசரியாருக்கு உணர்த்த திண்ணார் வரும் வேளையில் சிவலிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவபெருமான். அதைக் வருவதைக் கண்ட திண்ணனார், பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். அதன்பொழுதும் அடங்காத குருதியினை நிறுத்த, தன் கண்களில் ஒன்றினை அம்பினால் அகழ்ந்து இலிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். இலிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்று, இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டு, லிங்கத்தின் இடக்கண் இருக்கும் இடத்தினை தன்காலொன்றால் அடையாளம் செய்தார். பின் இடக்கண்ணை அகழ்ந்தெடுக்க எத்தனித்தபொழுது சிவபெருமான் நில்லு கண்ணப்ப என மும்முறை கூறி தடுத்தருளினார்.

    ராம்,

    இக்கதையில் சிவ கோசரியார் எனும் பிராமணனுக்கு என்ன பாத்திரம் ? வில்லனா ? ஹீரோவா ?

    கண்ணப்ப நாயனாருக்கு வலக்கண் போனதற்கு காரணம் யார் ?

    சிவனை “ஆகம பஞ்சாயத்துக்கு” அழைத்து கண்ணப்ப நாயனாரின் கண்ணை பீடிங்கீயது யார் ?

    சிவ கோசரியார் எனும் பார்பனன் தானே ?

    • ஏன் நிறுத்திவிட்டீர்கள்.. கண்ணப்ப நாயனாரின் கண்ணைப் பிடுங்குவதற்காகவே பார்ப்பனர்கள் அவர் வரும் வழியில் சிவலிங்கத்தை நிறுவி பூசை செய்தார்கள் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்த வேண்டிய கடமையை மறந்துவிட்டீர்களா..

      • வாங்க அம்பி.

        என்ன நம்ம அன்பு தம்பி அம்பியை காணவில்லையே என்று மனம் கலங்கி இருந்தேன்!.

        அண்ணன் மனகலக்கத்தை துடைத்து எறிந்த அன்பு தம்பி அம்பி நீர் இப் புவியுள்ளவரை வாழ்க

        ….
        ….
        ….

        மேட்டர் என்ன என்றால் கண்ணப்ப நாயனாருக்கு வலக்கண் போனதற்கு காரணம்

        சிவனை “ஆகம பஞ்சாயத்துக்கு” அழைத்த சிவ கோசரியார் எனும் பார்பனரும்

        அவருக்கு நிபந்தனை இல்லா ஆதரவு கொடுக்கும் அம்பியும் தான் காரணம்

        • நானும் காரணமா..?! அண்ணாச்சி, இது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு.. அய்யகோ, இதைக் கேட்டு என் மனமும் கலங்குகிறதே.. இந்தப் பழியுடன் இப் புவியுள்ளவரை நான் வாழத்தான் வேண்டுமா..

          • சிவ கோசரியார் என்ற குற்றவாளிக்கு ஆதரவு அளிக்கும் எம் தம்பி அம்பியும் குற்றத்துக்கு உடந்தை தானே !

  48. Dear Ram,

    The story of “Kannapa Nayanar” is similar to the story The “Three Hermits” by Russian author Leo Tolstoy.

    http://en.wikipedia.org/wiki/The_Three_Hermits

    Major theme:
    ——————-
    Tolstoy explores the nature of prayer by contrasting the simple, faithful but unknowing prayer of the illiterate hermits with the formal, doctrinal prayer of the educated bishop who is critical of the hermits’ practice.

    The Story:
    —————–
    On an island there lived three old hermits. They were very simple people, and didn’t know complicated prayers. In fact they knew only one: “We are three, Thou art Thee, have mercy on us.” In spite of this one and only prayer, the hermits were said to have created many great miracles.

    One day the local bishop heard about the three hermits and their prayer, and he decided to visit them to give them prayers which were “more correct” to him and the church. He arrived on the island and endeavored to teach them several prayers from the church.

    Afterwards, as his boat was sailing away from the island, the bishop turned and saw a radiant light quickly gaining on the ship. As the light approached he discerned the three hermits, who were holding hands and running on the waves in an effort to catch the boat.

    “Bishop, we have forgotten the prayers you taught us”, they said, and asked him if he would please repeat them.

    The bishop shook his head in awe at the miracle he was witnessing. “Dear ones”, he replied humbly, “Please forgive me, and continue to live with your old prayer!”

  49. வள்ளலார் ஜோதியில் கலந்து அய்க்கியமானதாக கதைப்பது, அவருக்கு பெருமை செர்க்காது! அவர் கொள்கையான ‘சமரச சுத்த சன்மார்க்கம்’ கொள்கையே போதும, அவருக்கு பெருமை செர்க்க! திருமூலரும், மாணிக்கவாசகரும் பார்ப்பனர்கள் என்று கதை புனையப்பட்டது! அதற்கேற்ப மோட்ச நாடகங்கள்! புராணங்கள் எல்லாமே பொய்மையான கதைகளாயிருக்க, அவற்றை வரலாற்று ஆவணங்களாக சித்தரிப்பது பித்தலாட்டமே!

  50. நல்ல வேலையாக நினைவூட்டினீர்கள் மர்ம யோகி!நன்றி!

    பல்வேறு சாதிகளில் பிறந்து முற்போக்கான சிந்தனைகளை முன்வைத்ததால் பார்ப்பனர்களால் படுகொலை செய்யப்பட்டு ஜீவ சமாதி ஆனதாக புதைக்கப்பட்ட சித்தர்களின் சாதி மற்றும் புதைக்கப்பட்ட இடங்கள்.

    1]இடைக்காடர்- கோனார்- கொலைசெய்து புதைக்கப்பட்ட இடம்[ஜீவ சமாதி]-திருவண்ணாமலை.

    2]போகர்- குயவர்- கொ.பு.இ[ஜீவ சமாதி]- பழனி மலை

    3]சுந்தரானந்தர்- அகமுடையார்- கொ.பு.இ[ஜீ.ச.]-மதுரை

    4]கமலமுனி- குறவர்- கொ.பு.இ[ஜீ.ச]- திருவாரூர்

    5]காக புசுன்டர்- வன்னியர்- கொ.பு.இ[ஜீ.ச]-ஆச்சாள் புரம்

    6]சோதி முனி-பள்ளர்- கொ.பு.இ[ஜீ.ச]- சதுரகிரி

    7]டமரகர்- மறவர்- கொ.பு.இ[ஜீ.ச]- கொல்லி மலை

    8]கொங்கணவர்- கொல்லர்- கொ.பு.இ[ஜீ.ச]- திருப்பதி

    9]திருமூலர்- வேளாளர்- கொ.பு.இ[ஜீ.ச]- திருவாடுதுறை

    10]கருவூரார்- அகம்படியார்- கொ.பு.இ[ஜீ.ச]-தஞ்சாவூர்

    உண்மையில் இந்த பட்டியல் மிக நீண்டது.விரிவஞ்சி விடுத்தேன்.

    பி.கு: இதில் உள்ள சித்தர்களின் சாதி போகர் 7000த்தை ஆதாரமாக கொண்டது.

    • தோழர் ராம்,

      உங்கள் பின்னூட்டங்களின் நோக்கம் எனக்கு புரியவில்லை. இருந்தாலும் உங்களிடம் கடைசியாக முயற்சித்துப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

      உழுபவனுக்கு நிலம்; உழைப்பவனுக்கு அதிகாரம் என்பதை ஒரு கம்யூனிஸ்ட் நிலைப்பாடாய் கொண்டிருக்கிற பொழுது அது யாராக இருந்தாலும் பெறவேண்டும், பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் செயல்பாடாக இருக்க முடியும். ஆனால் உங்களது எல்லாவிதமான பின்னூட்டங்களும் வெறும் பார்ப்பன எதிர்ப்பை மையமாகக் கொண்டு கருத்தின்றி எந்த ஒரு நிலைப்பாடும் இல்லாமால் சுற்றி வருகிறது. முறுக்கு சுட்டு பிழைக்கும் மயிலாப்பூர் மாமியும், காஞ்சி சங்கராச்சாரியும் ஒன்றல்ல. பார்ப்பனர் சங்கர்ராமன் அயோக்கினல்லன்; பார்ப்பன எதிர்ப்பு பேசிய வீரமணி யோக்கியனுமல்லன்;

      இருந்தாலும் இந்து மதத்தை பார்ப்ப்னீய மதம் என்கிறோம் ஏன்? இரு நிகழ்வுகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். திருப்பதில் முடி எடுக்க ஆள்பற்றாக்குறை இருந்தும், அது தொழில் என்ற நிலையில் தாழ்த்தப்பட்டவர்களை தவிர எந்த சாதியும் செய்யத் தயாராகயில்லை; வறுமையில் வாடும் பார்ப்பனர் உட்பட; அதே சமயம் பலகோயில்களில் பிரசாதம் செய்ய ஆள்பற்றாக்குறை இருந்தும் பார்ப்பனர்களைத் தவிர யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதை எப்படி அணுகுவது?

      அனைத்து சாதி மாணவர்களுக்கு ஆகமங்கள் கற்றுகொடுத்து, வேதங்களைச் சொல்லிக்கொடுத்து பணிவழங்கும் நிலையில் தடையாணை பெற்றார்களே. அதை எப்படி புரிந்து கொள்ளமுடியும்? இதற்கு நேர்மாறாக, அனைவரும் இந்துதான் என்று சொல்லிவிட்டு கிடாவெட்டுத் தடைச் சட்டம் கொண்டு வந்தார்களே? இதை எப்படி புரிந்து கொள்ள முடியும்?

      ‘ஒரு இந்துவிற்கு சமூகம் என்பது தன் சாதிதான்’ என்றார் அம்பேத்கர். உங்களது அனைத்து பின்னூட்டங்களும் தாயுமானவன், அம்பி உட்பட அதைத்தானே பிரதிபலிக்கிறது!

      அம்பேத்கர் மேலும் சொன்னார்; ஒரு சீக்கியன் ஏழு இலட்சம் இந்துக்களுக்கு சமமானவன்; ஒரு இசுலாமியன் ஒட்டு மொத்த இந்துக்களுக்கும் சமமானவன் என்றார். (மறுகாலனியாக்க சமூகத்தில் தமீம் அன்சாரிக்காக எந்த முசல்மானும் வரவில்லை என்பது தனிக்கதை) ஏன்?

      செத்த மாட்டின் தோலை உரித்த காரணத்திற்காக நான்கு தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் அடித்தே கொல்லப்பட்டர்களே; வேதம், பசுவை உணவாகத்தான் அணுகியது என்று எந்த இந்துவாவது தட்டிக்கேட்டனா? பசு வதை பற்றி பேசுவதற்கு மோடிக்கு தைரியத்தை கொடுத்தது எது? மதம் என்பதை விட மதம் என் நம்பிக்கை என்று சொன்ன உங்களைப் போன்ற ஆட்கள் தானே? பார்ப்பனர் என்பதை விடுங்கள்; ஒரு இந்துவாக இருப்பதற்கு உங்களுக்குச் சம்மதமா?

      ஆறுமுகசாமி பாடல்பாடினால் தீட்டு என்று தண்ணீர் அபிசேகம் செய்தார்களே. சோதிப்பெருமை பேசுகிற யோகி வந்தாரா? கம்யூனிசம் ஈனப்பார்வை என்றாரே; தேவாரம் திருவாசகம் தெரியாத நமது தோழர்கள் சிற்றம்பலமேடையில் பாடினார்களே; அகநிலை அறிவியல் என்று சொல்கீறிரே உங்களது சந்தர்ப்பவாதம் எந்த வகை அறிவியல்?

      சங்கராச்சாரியை அம்பலப்படுத்திய அணுராதா ரமணனை பைத்தியம் என்றதே பார்ப்பனக் கூட்டம். உங்களது பதில் என்ன?

      உழைப்பவனுக்கு அரசியல் அதிகாரம் என்பது எமது நிலைப்பாடு என்றால் ஒரு பக்தனின் நிலைப்பாடு என்ன? அனைத்திற்கும் நீங்கள் பதிலிருக்க வேண்டும்.

      உண்மையில் நீங்கள் தூங்குகீறிர்களா? அல்லது தூங்குவதைப் போல் நடிக்கீறிர்களா?

    • அடப்பாவிகளா, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, சாதி என்னவென்றே தெரியாத, தமிழ் ஆசீவகச் சித்தர்களுக்குக் கூட இக்காலச் சாதிப்பெயர்களை இட்டு, அவர்களையும் சாதியடிப்படையில் பாங்கு போட்டுக் கொண்டு விட்டீர்களா, நாசமாப் போக! 🙂

  51. பழநி முருகனின் மூலத்திருவுருவச் சிலை செய்த போகரும் முருகனை சுரண்டிய |–பார்பனர்களும்–|
    ————————————————————————————————-
    [1]போகர் பதினெண் சித்தர்களுள் ஒருவர் ஆவார்.தமிழ்நாட்டில் பிறந்து பின்னர் சீனா சென்றவர்.சீனாவில் போகர் போ-யாங் என்று அறியப்படுகிறார்.போகர் ஏழாயிரம், 700 யோகம், போகர் நிகண்டு மற்றும் 17000 சூத்திரம் ஆகிய நூல்கள் போகரால் இயற்றப்பட்டவை.

    [2]பழநி முருகனின் மூலத்திருவுருவச் சிலை போகரால் செய்யப்பட்டது.இச் சிலை நவபாடாணங்களைக் கொண்டு செய்யப்பட்ட நவபாடாணச் சிலை என்று கருதப்படுகிறது.

    [3]இச்சிலை தற்போது சேதமடைந்து விட்டது. எனவே இச்சிலைக்கு அபிடேகம் நடைபெறுவதி‌ல்லை.

    [4]நவ பாசான சிலை சேதமடைய காரணம் சிலையின் பாடாணம் மருத்துவ குணமுள்ளதால், பூசை செய்யும் |—-பார்பனர்கள்—-| சிலையை சுரண்டி சித்த மருத்துவர்களுக்கும் பிறருக்கும் பணத்திற்கு விற்றார்கள்.

  52. கருவூரார் பார்பனர்களால் கொல்லப்பட்ட கதை
    ———————————————————————-

    கருவூரார்க்கு அரசரிடமும் ஊராரிடமும் செல்வாக்கு அதிகரிப்பதைக் கண்ட அவ்வூர் அந்தணர்கள் பொறாமை கொண்டனர். அவரை வம்பில் இழுத்துவிட நினைத்து மதுவையும், மாமிசத்தையும் அவர் இல்லத்தில் மறைத்து வைத்தனர். அரசரிடம் சென்று கருவூராரின் இல்லத்தில் மது மாமிசம் இருப்பதாக கூறினர்.

    அரசரின் ஆணைப்படி கருவூராரின் வீடு சோதனைக்குள்ளானது. ஆயினும் அங்கே பூசைக்கு உண்டான பொருட்களும் யாகத்திற்கு தேவையான பொருட்களும் இருப்பதைக் கண்ட மன்னர் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரினார். தன்னை முட்டாளாக்கிய வேதியர்கள் மீது கடும் கோபம் கொண்டான். கருவூரார் அவரைச் சமாதானப்படுத்தினார்.

    அவமானம் அடைந்த வேதியர்களுக்கு கருவூராரின் மீது கடும் சினம் ஏற்பட்டது. வேதியர்கள் ஒன்று கூடி அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் துரத்தினர். வேதியர்கள் நோக்கத்தினைப் புரிந்து கொண்ட கருவூரார் அவர்களுக்கு பயந்து திருஆனிலையப்பர் கோவிலுக்குள் ஓடினார்.

    கோவிலுக்குள் ஓடிய கருவூரார், “ ஆனிலையப்பா, பசுபதீசுவரா!” என்று கூறியழைத்து கருவறையிலிருந்த சிவலிங்கத்தைத் தழுவினார். இனி எந்தக் கருவிலும் ஊறுதல் இல்லாத கருவூரார் இறைவனுடன் இரண்டறக் கலந்து மறைந்தார்!!!!

  53. ராமசித்தலீலை
    —————–

    ராமசித்தரின் சித்துவேலையில் சித்தம்கலங்கும் மர்மயோகி

    மனம் விரும்பி மதிமயங்கும் மர்மயோகி

    அவர் எடுத்துவிடும் முன்-பின் கதைகள்

    உங்கள்பக்கமே கோல்போடும் அழகைபாரும்!

  54. ஐயா ராமசித்தரே !

    உங்கள்பக்கமே கோல்போட்டது [same side goal]

    போதும் ஐயா!

    முடிந்தால் இங்கு நடைபபெறும் நேர்-எதீர் ஆட்டத்துக்கு[விவாதத்துக்கு] வாருமையா !

    • உங்க பக்கமா கோல் போட்டா உங்க அணிதானே ஜெயிக்கும்? அப்புறம் ஏன் பதற்ரீரு

      • ராமுக்கு உங்கள் ,என் போன்ற தமிழ் வார்த்தைகளுக்கு பொருள் அவர் நண்பர்கள் சொல்லி கொடுத்தால் நன்று!

        ராம் நீர் என்ன பதில் கூறி இருக்க வேண்டும் ?

        என் பக்கமே கோல் போட்டா[same side goal] உங்க அணிதானே ஜெயீக்கும்……

        என்ன ஆச்சு ராம் ? ஏன் இந்த பதட்டம் ?

  55. சரவணன் …

    செய்யிறது copy n paste வேலை அதையாவது உருப்படியாக செய்ய தெரிகிறதா. விக்கிபீடியாவில் இருந்து சுட்டு கொண்டு வந்ததை உள்ளதை உள்ள படி சொல்லும் பண்பு இருக்க வேண்டும். அதை தான் உங்களை போன்ற கம்யுனிஸ்டுகளிடம் இருந்து எதிர்பார்க்க முடியாதே. சரி விசயத்திற்கு வருவோம்..

    இது நீங்கள் கூறியது..

    “வேதியர்கள் ஒன்று கூடி அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் துரத்தினர். வேதியர்கள் நோக்கத்தினைப் புரிந்து கொண்ட கருவூரார் அவர்களுக்கு பயந்து திருஆனிலையப்பர் கோவிலுக்குள் ஓடினார்.”

    ஆனால், விக்கிபீடியாவில் உள்ளது என்ன…

    “வேதியர்கள் ஒன்று கூடி அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் துரத்தினர். வேதியர்கள் நோக்கத்தினைப் புரிந்து கொண்ட கருவூரார் அவர்களுக்கு பயந்து ஓடுவதைப் போன்று திருஆனிலையப்பர் கோவிலுக்குள் ஓடினார்.”

    இரண்டுக்கும் பாரிய வேறுபாடு இருக்கிறதே சரவணன். பயந்து ஓடுவதை போன்று என்பதின் பொருள் அவருடைய வல்லன்மையை உலகிற்கு உணர்த்த அவ்வாறு பயந்து ஓடுவதை போன்று பாசாங்கு செய்தார் என்று தான் வரலாறு அதை பதிவு செய்கிறது. தாங்கள் என்னமோ பார்பனர்கள் உங்களை துரத்தினால் நீங்கள் எப்படி பயந்து ஒடுவீர்களோ அதை போன்று எழுதுகிறீர்கள்.

    அடுத்து நீங்கள் விக்கிபீடியாவில் இருந்த சுட்ட வரியை கவனியுங்கள்

    “கோவிலுக்குள் ஓடிய கருவூரார், “ ஆனிலையப்பா, பசுபதீசுவரா!” என்று கூறியழைத்து கருவறையிலிருந்த சிவலிங்கத்தைத் தழுவினார். இனி எந்தக் கருவிலும் ஊறுதல் இல்லாத கருவூரார் இறைவனுடன் இரண்டறக் கலந்து மறைந்தார்!!!!” இதை மட்டும் கூறி விட்டு சாமார்த்தியமாக அடுத்த வரியை கூறாமல் விட்டு விட்டீர்கள் சரி விடுங்கள் நான் கூறுகிறேன்.

    “கோவிலுக்குள் ஓடிய கருவூரார், “ ஆனிலையப்பா, பசுபதீசுவரா!” என்று கூறியழைத்து கருவறையிலிருந்த சிவலிங்கத்தைத் தழுவினார். இனி எந்தக் கருவிலும் ஊறுதல் இல்லாத கருவூரார் இறைவனுடன் இரண்டறக் கலந்து மறைந்தார்.

    கருவூராரைத் துரத்தி வந்தவர்கள் இந்த தெய்வீகக் காட்சியைக் கண்டார்கள். தங்கள் தவறுக்கு வருந்தி பரிகாரமாக ஆனிலையப்பர் கோவிலில் ஒரு தனி சந்நிதி அமைத்து அதில் கருவூராரின் வடிவத்தினை அமைத்து வழிபட்டனர். தஞ்சை பெரிய கோவிலிலும் அவரது சிலை பிரதிட்டை செய்யப்பட்டது.”

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)
    .
    இப்படி தான் ஒவ்வொன்றாக கம்யுனிஸ்டுகள் ஆகிய உங்களுக்கு தோதாக இருக்கும் படி புரட்ட வேண்டியது. என்ன இருந்தாலும் நாங்கள் கூறபோவதை நிச்சயம் நீங்கள் ஏற்க போவதில்லை. அனால் ஒன்று உங்களை நான் பாராட்டியாக வேண்டும் ஆதாரம் இல்லாமல் புரட்டல் வேலைகளை செய்வதில் கம்யுனிஸ்டுகள் கைதேர்ந்தவர்கள் என்று நான் கூறியதை நீர் நிருப்பித்ததர்க்காக மனமார்ந்த நன்றிகள்.

    • மு யோகி ,

      [1]உயிருக்கு பயந்து ஓடும் சித்தர் மர்மயோகி இடம் “பயந்த மாதிரி நான் ஓடுறேன்னு” செல்லிட்டு ஓடினாராக்கும் ?

      [2]“கோவிலுக்குள் ஓடிய கருவூரார், “ ஆனிலையப்பா, பசுபதீசுவரா!” என்று கூறியழைத்து கருவறையிலிருந்த சிவலிங்கத்தைத் தழுவினார். இனி எந்தக் கருவிலும் ஊறுதல் இல்லாத கருவூரார் இறைவனுடன் இரண்டறக் கலந்து மறைந்தார்”

      இப்படி தான் ஒவ்ஒரு மனிதரையும் ஜோதியீலும் , இறைவனுடனும் இரண்டறக் கலக்க வைப்பீரோ ?டுபாக்கூர் யோகி உமக்கு கொஞ்சமாவது அறிவு [commonsense] இருக்கா ?

      [3]விக்கிபீடியாவில் உள்ளத அப்படியே நம்ப நான் ஒன்றும் முட்டாள் யோகி இல்லை.அக் கதை கூறும் கருத்து என்ன? பாப்பான் துரத்துனான், கருவூரார் ஒடுனார்.இருதியில் இறைவனுடன் இரண்டறக் கலந்து மறைந்தார் என்றால் என்ன அர்த்தம் ? பாப்பார பசங்க அவரை கொன்று விட்டார்கள் என்று தானே அர்த்தம்!

      [4]முற்போக்கு மாதிரி வேஷம் போடாம நீர் போசம பாப்பானுங்க கூட நீயும் சேர்ந்து கொள். உண்ட சோறாவது கிடைக்கும்.

      [5]ஆமாம் நீர் type செய்யும் போது ஏதாவது போதை வஸ்து பயன் படுத்திகொண்டு தான் type செய்வீயா ?

      நீர் type செய்த இதுக்கு என்ன பொருள் ?

      “வள்ளலார் ஜோதி நிலை அடையவில்லை என்று தற்காலத்தில் கம்யுனிஸ்டுகள் நீங்கள் மட்டுமல்ல காஞ்சி மடம், ரமணர் ஆசிரமத்தில் இருக்கும் பார்பான்களும் ஒத்துக்கொள்வதில்லை”

      • // விக்கிபீடியாவில் உள்ளத அப்படியே நம்ப நான் ஒன்றும் முட்டாள் யோகி இல்லை.அக் கதை கூறும் கருத்து என்ன? பாப்பான் துரத்துனான், கருவூரார் ஒடுனார்.இருதியில் இறைவனுடன் இரண்டறக் கலந்து மறைந்தார் என்றால் என்ன அர்த்தம் ? பாப்பார பசங்க அவரை கொன்று விட்டார்கள் என்று தானே அர்த்தம்!//

        பாப்பார பசங்க எழுதியதில் பாதியை மட்டும் நம்பலாமா.. உண்மையில் நடந்தது என்ன.. பாப்பாரப் பசங்களுக்கும் கருவூராருக்கும் அடிதடி நடந்தது.. அதில் பல பாப்பான்களை கருவூரார் அடித்து வீழ்த்தினார்.. அதைக் கண்ட பாப்பார பசங்க பூணூலால் வலை பின்னி அதை வீசி கருவூராரை அமுக்கிவிட்டார்கள்.. பிறகு பாப்பார பசங்க ஒண்ணா சேந்து அமுக்கி விட்ட விசவாயு தாக்கி கருவூரார் மாண்டார்.. பகுத்தறிவுடன் சிந்திப்பவர்கள் என்றால் இப்படி வீரம், துரோகம், சதி, கொலை எல்லாவற்றையும் புட்டு புட்டு வைக்க வேண்டும்..

        • அன்பு தம்பி அம்பி,

          விக்கீயில் “கருவூரார்” படத்துக்கு கதை,திரைக்கதை,வசனம் எழுதிய பார்பனர் நீங்க தானா ?

          கதையில் கொஞ்சம் உண்மை கலந்து இருக்கும் போதே நீனைத்தேன் ,இது நம்ம அம்பி வேலையாக தான் இருக்கும் என்று !

          இக் கதையில் இருந்து உண்மையை மட்டும் decode செய்வது எளிமையாக தான் இருந்தது அம்பி.

          சிங்கம் II ரேஞ்சுக்கு பரபரப்பா “கருவூரார் ” பட கிளைமாக்ஸ் எழுதி உள்ளீர்களே ! வாழ்த்துகள் [வாழ்த்துகள் நடுவில் க் வரக்கூடாது அம்பி ]

    • மர்ம புன்னாக்கு ,

      உமக்கு என்று மூளை இருக்க இல்லையா ?

      கிடக்கும் வரலாற்று தடயங்களை சரியான முறையில் decode [குறிநீக்கம்] செய்தால் தானே உண்மை வெளிவரும் !

      உதாரணத்துக்கு ,

      ஆதித்த கரிகாலன் கொலையில், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், “விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்)” என்று கூறுவதை எப்படி decode செய்வது ?

      மேலும் ,

      ஆதித்த கரிகாலனை கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாகவும், இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது

      இரு ஆதாரங்கள் மூலம் ,

      “இரண்டாம் ஆதித்தன் என்ற ராஜ ராஜ சோழனின் அண்ணனை கொலை செய்த பார்பனர்கள் சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதி ராஜன், பரமேசுவரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்போர். அந்நால்வரும் உடன்பிறந்தோர் என்பது அக்கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது. பஞ்சவன் பிரமாதிராஜன், இருமுடிச் சோழ பிரமாதி ராஜன் என்னும் உயர்ந்த பட்டங்கள் பெற்றவராக இருத்தலால் அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்திருத்த அந்தணர் ஆவர்.”

      என்ற முடிவுக்கு வரலாற்று ஆய்வாலார்கள் வருகின்றனர் அல்லவா ?

      //இப்படி தான் ஒவ்வொன்றாக கம்யுனிஸ்டுகள் ஆகிய உங்களுக்கு தோதாக இருக்கும் படி புரட்ட வேண்டியது. என்ன இருந்தாலும் நாங்கள் கூறபோவதை நிச்சயம் நீங்கள் ஏற்க போவதில்லை. அனால் ஒன்று உங்களை நான் பாராட்டியாக வேண்டும் ஆதாரம் இல்லாமல் புரட்டல் வேலைகளை செய்வதில் கம்யுனிஸ்டுகள் கைதேர்ந்தவர்கள் என்று நான் கூறியதை நீர் நிருப்பித்ததர்க்காக மனமார்ந்த நன்றிகள்.//

  56. என்ன செய்வது வியாசன்..

    சித்தர்களை, ஞானிகளை சாதி என்கிற வட்டத்திற்குள் அடைப்பது பெரும் பாவம் தான். ஆனால், இந்த இடத்தில் கூற வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறதே. பார்பனர் அல்லாத நாயன்மார்களையும், சித்தர்களையும் பார்பனர்கள் கொன்று விட்டு சோதியில் கலந்தார்கள் என்று சரடு விடுவதாக கம்யுனிஸ்டுகள் குற்றம் சாட்டுகிறார்களே. சோதியில் கலந்து சித்தியடைதல் என்பது சித்தர் நெறி. இதற்கும் பார்பனியதிர்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அப்படி பார்த்தால் சித்தர்களில் எவருமே பார்பனர்கள் கிடையாது. அவர்கள் அனைவரும் ஜீவ சமாதி அல்லது ஒளிநிலை என்று எதாவது ஒரு வழியில் சித்தி அடைந்தார்கள் என்று தான் அவர்களின் பாடல்களே கூறுகிறது. அப்படி பார்த்தல், அனைவரையும் பார்பனர்கள் கொன்று புதைத்து விட்டதாக அர்த்தமா.

    • யோகி ,

      சித்தர்களின் சாதி பெயரை எந்த கம்யூனிஸ்ட் உம் இடம் கேட்டான் ?

      சித்தர்களின் சாதி பெயரை சொல்ல என்ன நிர்ப்பந்தம் உமக்கும் ,ராமுக்கும் ?

      சித்தர்களின் பார்பனர் அல்லாதோர் என்றால் போதாதா ?

      //////சித்தர்களை, ஞானிகளை சாதி என்கிற வட்டத்திற்குள் அடைப்பது பெரும் பாவம் தான். ஆனால், இந்த இடத்தில் கூற வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறதே. பார்பனர் அல்லாத நாயன்மார்களையும், சித்தர்களையும் பார்பனர்கள் கொன்று விட்டு சோதியில் கலந்தார்கள் என்று சரடு விடுவதாக கம்யுனிஸ்டுகள் குற்றம் சாட்டுகிறார்களே. //

    • //அவர்கள் அனைவரும் ஜீவ சமாதி அல்லது ஒளிநிலை என்று எதாவது ஒரு வழியில் சித்தி அடைந்தார்கள் என்று தான் அவர்களின் பாடல்களே கூறுகிறது.///

      அவங்க எல்லாரும் ஜோதியில கலந்தாங்கன்னா, மத்தவங்களால ஏன் அப்படி கலக்க முடியல? அவங்கட்ட இருந்த ஸ்பெசல் அயிட்டம் என்ன? முதல்ல என்னத்துக்கு ஜோதியில கலக்கனுங்கறேன்?

      சித்தர் மரபு எல்லாமே பார்ப்பன எதிர்ப்பு மரபு தான் அதாவது உங்களுக்கு தெரியுமா?

      இன்னிக்கும் யாராவது செத்துட்டாங்கன்னா, “அன்னார் சிவலோக பதவியடைந்தார் – வைகுண்ட பதவியடைந்தார்”ன்னு தான் சொல்றானுங்க ஒட்டுறாங்க.. அதுக்கு இப்ப என்னாங்கறீங்க? சிவலோகம் வைகுண்டம் இதெல்லாம் உண்மை, கம்யூனிஸ்டுகளுக்கு அது தெரியாம அவதூறு பண்றாங்கன்னு சொல்லுவீங்களா?

      வள்ளலாரை போற்றுகிற ஒருத்தனும் தீட்சிதர்களை – பார்பனீயத்தை எதிர்க்க மாட்டீங்கறானுவலே அதென்ன ரவசியம்?

    • விவாதம் நந்தனார், வள்ளலார் மரணம் பற்றி !

      இவ் விவாதத்தில் முதலில் கண்ணப்ப நாயனார்,திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர்,பட்டினத்தார் பெயர்களை இழுத்து விட்ட பேக்குகள்[லூசுகள்] யாரு ? கம்யுனிஸ்டுகளா இல்லை ராம் & யோகியா ?

      சித்தர்களை சாதி பெயருடன் பட்டியல் இட்ட பொறம்போக்குகள் யாரு ? கம்யுனிஸ்டுகளா இல்லை ராம் & யோகியா ?

      //பார்பனர் அல்லாத நாயன்மார்களையும், சித்தர்களையும் பார்பனர்கள் கொன்று விட்டு சோதியில் கலந்தார்கள் என்று சரடு விடுவதாக கம்யுனிஸ்டுகள் குற்றம் சாட்டுகிறார்களே. //

      • வழக்கம் போல், சரவணன் என்னும் செந்தில் குமரன் தன் மன சமநிலையை இழந்து திட்ட ஆரம்பித்து விட்டார்.

        அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் அர்ச்சகராக இன்று கூட முடியவில்லை.ஆனால் அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் சித்தர்களாகி உள்ளார்கள்.அதை பட்டியல் இட்டால் சரவணனுக்கு ஏன் வலிக்கிறது?

        • கண்ணப்ப நாயனார் மற்றும் சித்தர்களை சாதி பெயருடன் முதலில் பட்டியல் இட்டது நீர்.

          “பார்பனர் அல்லாத நாயன்மார்களையும், சித்தர்களையும் பார்பனர்கள் கொன்று விட்டு சோதியில் கலந்தார்கள் என்று சரடு விடுவதாக கம்யுனிஸ்டுகள் குற்றம் சாட்டுகிறார்களே” என்று புகைவது யோகி !

          உம் அணியீலெயெ ஒற்றுமை இல்லையே ! அதான் same side goal போடரீங்க !

        • ஒரு பதிவுல கூட பார்பனியத்தை எதீர்த்து போச துப்பு இல்லாத ராமுக்கு தீடீருனு எல்லா சாதிகாரனும் அர்சகர் ஆவது பற்றி அக்கறையும் , அதற்காக சித்தர்களை சாதி ரீதீயா வகை பிரிக்கும் நல்ல எண்ணமும எப்படி இருக்க முடியும் ?

    • //சரி உங்களின் வாதப்படியே நந்தனார், வள்ளலார் ஆகியோரை பார்பனர்கள் எரித்து கொன்று விட்டு சோதியில் இரண்டற கலந்தார்கள் என்று புரட்டை கூறினார்கள் என்று வைத்து கொள்வோம். சரி,ஸ்மார்த்த பிராம்மணர் என்று கூறப்படும் ஞானசம்பந்தரும் சோதியில் ஐக்கியம் ஆனதாக கூறப்படுகிறதே. பார்பனரான மாணிக்கவாசக பெருமான் என்னும் திருவாதவூராரும் சோதியில் ஐக்கியம் ஆகி இறைவனுடம் இரண்டற கலந்ததாக வரலாற்றில் இருக்கிறதே இதற்க்கு என்ன சொல்வது. இவர்கள் இருவரையும் எந்த பார்ப்பான் தீக்கிரை ஆகினான். ஆகவே, எதையும் நாம் பொய் என்று நிராகரிக்கவும் முடியாது.. விஞ்ஞானத்தின் எல்லை ஓரளவிற்கு தான். அதை வைத்து கொண்டு ஆணவத்தின் உச்சத்தில் ஆட கூடாது//

      //பார்பனர் அல்லாத நாயன்மார்களையும், சித்தர்களையும் பார்பனர்கள் கொன்று விட்டு சோதியில் கலந்தார்கள் என்று சரடு விடுவதாக கம்யுனிஸ்டுகள் குற்றம் சாட்டுகிறார்களே//

      [1]இப்படி வாய்க்கு வந்ததை எல்லாம் உளறும் கிறுக்கன் யாரு ?

      [2]விவாதம் நந்தனார், வள்ளலார் மரணம் பற்றி நடக்கிறது என்று கூட புரிந்து கொள்ளாமல் கண்ணப்ப நாயனார்,திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர்,பட்டினத்தார், சித்தர் பெயர்களை[சாதியுடன்] விவாதத்துக்கு இழுத்து விட்டு பின்பு பார்பனர் அல்லாத நாயன்மார்களையும், சித்தர்களையும் பார்பனர்கள் கொன்று விட்டு சோதியில் கலந்தார்கள் என்று சரடு விடுவதாக கம்யுனிஸ்டுகள் குற்றம் சாட்டுகிறார்கள் என்று பெனத்தும் மூளை மழுங்கீய முட்டாள் யாரு ?

      யோகியா ? இல்லை கம்யுனிஸ்டுகளா?

      • சரவணன்,

        அஜாத சத்ரு,தென்றல்,வியாசன் ஆகியோரின் பின்னுட்டம் தேதி,நேரத்தை பார்க்கவும் அதன் பிறகு கண்ணப்ப நாயனார் பற்றிய எனது பின்னுட்ட தேதி,நேரத்தை பார்க்கவும்.உங்கள் ஊரில் உள்ள அதிகபடியான வெயிலுக்கு நான் எந்த வகையிலும் பொறுப்பில்லை.

        • பார்ரா ,

          ராம் பொய் எல்லாம் செல்லராரு !

          [1] ராம் first refers கண்ணப்ப நாயனார் on ஏப்ரல் 19th 8.43pm
          [2] சரவணன் first refers கண்ணப்ப நாயனார் on ஏப்ரல் 20th 1.39pm

          மற்றவர்கள் கண்ணப்ப நாயனார் என்ற பெயரையே பயன் படுத்த வீல்லை.

          • உங்க நுண்ணறிவ பாத்து நான் அப்படியே ஆப் ஆயிட்டேன்.வள்ளலார் தவிர்த்து மற்றவர்களையும் அவர்கள் விவாதித்ததால் நான் கண்ணப்ப நாயனாரை வைத்து கேலி செய்தேன் புரிஞ்சுதா? உங்களுக்கு விளக்கம் கொடுத்தே எனக்கு வயசாய்டும் போல இருக்கு.

            • என் comment 61.4 அய் ஒழுங்கா படியும்.அது யாருக்கு எதற்காக எழுதபட்டது என்று உம் யோக தரிசன அறிவால புரிந்து கொள்ள முயலும் !

              முந்திரி கொட்ட போல யோகி பதில் அளீக்க வேண்டிய விடயத்துக்கு நீர் பதில் அளித்தால் எப்படி ?

              நான் மர்மயோகி இடம் கேட்டது என்ன ?

              “விவாதம் நந்தனார், வள்ளலார் மரணம் பற்றி நடக்கிறது என்று கூட புரிந்து கொள்ளாமல் கண்ணப்ப நாயனார்,திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர்,பட்டினத்தார், சித்தர் பெயர்களை[சாதியுடன்] விவாதத்துக்கு இழுத்து விட்டு பின்பு பார்பனர் அல்லாத நாயன்மார்களையும், சித்தர்களையும் பார்பனர்கள் கொன்று விட்டு சோதியில் கலந்தார்கள் என்று சரடு விடுவதாக கம்யுனிஸ்டுகள் குற்றம் சாட்டுகிறார்கள் என்று பெனத்தும் மூளை மழுங்கீய முட்டாள் யாரு ?”

              • கண்ணப்பநாயனாரை சொன்னதும்,சித்தர் பெயர்களை[சாதியுடன்] வெளியிட்டது யோகியா? அதை ஏன் அதில் சேர்த்தீர்?

                • comment 51ல் பட்டிநத்தார் பெயரையும் உமக்கு எடுத்து கொடுத்த மொக்க யாரு ?

                  மர்மயோகி!

                  இப்ப புரியூதா நான் ஏன் மர்மயோகி இடம் இக் கேள்வியை கண்ணப்ப நாயனார் ,சித்தர் பெயர்களை சேர்த்து கேட்டேன் என்று ?

  57. ஹலோ ராமு ,யோகி ,

    நீங்க ரெண்டு பேரும் போடும் மொக்க தாங்கல !

    ஒன்னு விவாதத்துக்கு வாங்க !

    இல்ல மொக்க போடுவதையாவது நிறுத்துங்க !

  58. தோழர் தென்றல்,

    //இந்து மதத்தை பார்ப்பனீய மதம் என்கிறோம்//

    பார்ப்பனீயம் என்பதை நான் புரோகித வாதமாக மட்டுமே பார்க்கிறேன்.இந்திய தரிசன மரபில் அதை மீமாம்சம்[பூர்வ மீமாம்சை] என்கிறோம்.அது நான்கு வேதத்தை ஆதாரமாக கொண்டது.இதர தரிசன மரபுகள் எதுவும் வேதத்தை ஆதாரமாக கொண்டது இல்லை.பின்பு அனைத்து தரிசனங்களுக்கும் வைதீக சாயம் பூசபட்டு வேதத்தை மூலமாக கொண்டதாக ஆக்கப்பட்டது.நிற்க.

    இங்கு விவாதத்துக்குரிய யோக தரிசனம் இம்மண்ணின் ஆக பழமையானது.திட்ட வட்டமாக ஆரியர்களின் வருகை முற்பட்டது என ஏற்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிக அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பசுபதி சிலை திருத்தமான யோக முத்திரையுடன் அமர்ந்துள்ளது.பின்பு எப்படி யோகம் பார்ப்பனிய இந்து மதத்தை சேர்ந்ததாகும்?

    தமிழ் சித்தமரபு யோகம் மற்றும் மருத்துவத்தை அடிப்படையாக கொண்டது.வள்ளலார் அந்த மரபின் தொடர்ச்சி என்பதே என் எண்ணம்.நான் பிராமணன் என்ற எண்ணத்தில் எனது பின்னூட்டங்களை நீங்கள் வாசிப்பதால் நான் பார்ப்பனியத்தை ஆதரிப்பதாக தோனுகிறது.நான் பார்ப்பனனும் இல்லை பார்ப்பனியத்தை ஆதரிக்கவும் இல்லை.நான் மறுத்தது உங்களின் ஆதாரமற்ற அவதூறுகளை மட்டுமே.கேலி செய்ததும் அதையே.

  59. ராமின் யோக தரிசனத்தீன் இலச்சனம்:
    ——————————————————————-

    புத்தர், சித்தர்கள் , வள்ளலார் வழீயீல் பார்ப்பனியத்துக்கு எதிராக போர் தொடுத்த பெரியார் அவர்களை ராம் அவர்கள் துற்றுவது ஏன் ?[comment 1.4.1 in]
    https://www.vinavu.com/2014/04/01/modi-indias-periyar-vijayakanth-cartoon/#comment-135483

    கள் மறுப்பு இயக்கத்துக்காக 100 மரங்களை வெட்டியதறக்காக பெரியாரை குறை சொல்லும் இந்த ராமின் நாக்கு ஒருவேலை மரங்களை வெட்டி இருக்கா வீட்டாலும் “காந்தி சொல்லியும்” வெட்ட வீல்லை என்று குறை சொல்லுமே ! அவர் வீட்டு மரத்தை அவர் கொண்ட கொள்கைக்காக பெரியார் வெட்டீயது அவர் கொண்ட கொள்கையில் அவருக்கு இருந்த உறுதியை தான் காட்டுகிறது.

    • //”காந்தி சொல்லியும்” வெட்ட வீல்லை என்று குறை சொல்லுமே!//

      லூஸு! காந்தி கள்ளு எறக்க வேணாம்னுதான் சொன்னாரு இந்தியாவ்ல தென்னமரமே இருக்க கூடாது எல்லாத்தையும் வெட்டனும்னு சொல்லவில்லை.சும்மா எதாச்சும் ஒளரிகிட்டு இருக்காம கம்னு இருங்க.

      • பெரியார் அவர் கொண்ட கொள்கைக்காக அவர் வீட்டு மரங்களை அவர் வெட்டியது அவர் கொண்ட கொள்கையில் அவருக்கு இருந்த உறுதியை தான் காட்டுகிறது.

        உமக்கு எங்க வலிக்குது !

  60. ராமின் யோக தரிசனத்தீன் இலச்சனம்:
    ——————————————————————-

    புரட்சியை பற்றி கிண்டல் செய்து வாங்கி கட்டிக்கொண்டது , எதிர் அணியினர் வாங்க பேசலாம் உங்க போன் நம்பர் கொடுங்க என்று கேட்ட உடன் பயந்து ஓடியது யாரு ? நம்ம ராமு !
    [comment nos 23,23.1,23.1.1,23.1.1.1 in ]
    https://www.vinavu.com/2014/04/01/modi-indias-periyar-vijayakanth-cartoon/#comment-135483

    • சரவணன்! நான் வாங்கி கட்டிகொண்ட வாசகத்தை இங்கு பதிவிடுமாறு வேண்டுகிறேன்.பின்னுட்ட பெட்டி இருக்கும் போது போன் நம்பர் எதுக்கு?.சின்ன புள்ளதனமா பேசுறதே உங்க வேலையா போச்சு.

      • மேலேயே லிங்க் கொடுத்து உள்ளேன் அல்லவா ? நீர் mouse button அய் click செய்து படியும் !

  61. காப்பி & பேஸ்ட் புகழ் சரவணன் என்கிற செந்தில் குமரன்…

    சத்தியமாக உமது குரைப்பை கண்டு சிரிப்பை அடக்க முடியாமல் தான் இதை தட்டச்சு செய்கிறேன்.

    ஏன்யா இப்படி லூசு மாதிரி நாயன்மார்கள் சித்தர்கள் பத்தி பேசும் போது சோழ மன்னர்களோட கால கழுவி குடிக்க போற. இப்ப சோழ மன்னர்கள பத்தி பேசி ஏன் பேச்ச திசை திருப்புற.

    நான் சாதியை ஆதரிப்பது கிடையாது.சித்தர்கள் பற்றி கூறும் போது சாதியை ராம் எதற்காக கூறினார் என்று தெளிவு படுத்தி விட்டேன். உன் மழுங்கிய மூளைக்கு புரியவில்லை என்றால் ஒரு 10 வயது சிறுவனை கூப்பிட்டு என் மறுமொழிகளுக்கான அர்த்தத்தை கேளு அவன் சொல்லுவான் மிக சரியாக.

    //[2]“கோவிலுக்குள் ஓடிய கருவூரார், “ ஆனிலையப்பா, பசுபதீசுவரா!” என்று கூறியழைத்து கருவறையிலிருந்த சிவலிங்கத்தைத் தழுவினார். இனி எந்தக் கருவிலும் ஊறுதல் இல்லாத கருவூரார் இறைவனுடன் இரண்டறக் கலந்து மறைந்தார்”//

    அட அறிவு..

    கருவூராரை கொலை செய்ய பார்பனர்கள் விரட்டியபோது அவர் உயிருக்கு பயந்து போனது உண்மை என்றால் அவர் நேராக மன்னரின் அரண்மனையை நோக்கி அல்லவா ஓடி இருப்பார். எதற்க்காக கோவிலுக்கு ஓட வேண்டும். மன்னருக்கு அவர் மீது நல்ல மதிப்பும் பெருமையும் இருக்கிறதே. ஏற்க்கனவே மன்னருக்கு பார்ப்பனர்கள் மீது இருக்கும் கோபத்தை சமாதன படுத்தியது கருவூரார் தானே. சித்தர்கள் எதாவது ஒரு தருணத்தில் தாங்கள் ஏன் இந்த உலகிற்கு வந்தோம் என்கிற வல்லன்மையை மக்களுக்கு புரிய வைப்பார்கள். அதன் ஒரு அடையலாம் தான் கருவுறார் கோவிலுக்குள் பயந்து ஓடுவது போன்று செய்தது. இதை கூட புரிந்து கொள்ளாத நீர் என்னை பார்த்து Common Sense இருக்கிறதா என்று கேட்கிறாய். அதை சென்சே இல்லாத நீர் கேட்பது தான் ஆகா பெரிய காமெடி.

    //ஆமாம் நீர் type செய்யும் போது ஏதாவது போதை வஸ்து பயன் படுத்திகொண்டு தான் type செய்வீயா ?//

    இப்படி எல்லாம் பிறரை இழிவாக பேசுவதற்கு முன்பு நம்முடைய Flash Backஐ கொஞ்சம் பார்க்க வேண்டும்.. தாயுமானவன் உங்களை பற்றி கூறியதை யோசிக்க வேண்டும். அவர் கூறியது

    “நீங்கள் எப்படி எப்போதும் கையில் கள்ளு பானையுடன் தீண்டாசேரியில் மொக்கை கவிதைகளை பாடிக் கொண்டு புலையர்களுடன் ஆடி கொண்டிருப்பீரோ… யாம் அறியோம் பராபரமே…”

    இதை கூறியதும் உமக்கு எப்படி ஆத்திரம் வந்தது. அதே போன்று தான் அனைவருக்கும். அடுத்தவரிடம் பேசும் போதும் நாகரிகத்தை கடை பிடிக்க வேண்டும் செந்தில்.

    விவாதம் என்பது கருத்து பரிமாற்றமாக தான் இருக்க வேண்டுமே தவிர தனி நபர் தாக்குதலாக மாற கூடாது. பொதுவான சித்தாந்தத்தை, கொள்கையை பற்றி தாக்குவதோ விமர்சனம் செய்வதையோ ஓரளவிற்கு ஏற்று கொள்ளலாம். ஆனால் தனி நபரை தாக்க யாருக்கும் இங்கு உரிமை கிடையாது. நாகரீகமாக மறுமொழி போடுவது எப்படி என்று திரு.தென்றல் அவர்களிடம் போய் கற்றுகொள். கொள்கை ரீதியாக அவர் கூறுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதே போன்று தான் அவருக்கு என்னிடமும். ஆனால், அதற்காக நாங்கள் இது வரை உன்போன்று தரம் தாழ்ந்து தனி நபர் தாக்குதலில் இறங்கியது கிடையாது. வாதங்களை தான் முன்வைப்போம். அவரிடம் இருக்கும் கருத்தாழமோ, விஷய ஞானமோ உம்மிடம் கொஞ்சமும் இல்லை ஏனென்றால், உமக்கு அறிவு சுத்தமாக கிடையாது. நியாயமாக உமது மறுமொழிகளுக்கு பதில் கூறி இருக்க கூடாது. ஏதோ உம்மை மனிதனாக நினைப்பதால் தான் நாங்கள் உன்னை மதித்து உனக்கு பதில் கூறுகிறோம். அதை தவறு என்பதை நிருபித்து விட்டீர். உங்கள் பேச்சு மன நலம் சரி இல்லாதவனை போன்று இருக்கிறது. நீர் எதற்கும் ஒரு நல்ல மன நல மருத்துவரை பார்ப்பது நலம்..

    • அட தாயு என்ற மர்ம ,

      நீர் போசும் போச்சு மோடி ஓதும் மத சார்பு அற்ற தன்மை போல உள்ளது !

      “நீங்கள் எப்படி எப்போதும் கையில் கள்ளு பானையுடன் தீண்டாசேரியில் மொக்கை கவிதைகளை பாடிக் கொண்டு புலையர்களுடன் ஆடி கொண்டிருப்பீரோ… யாம் அறியோம் பராபரமே…”

      இப்படி சாதி வெறி பிடித்து போசும் எத்துனை தாயுமாக்கள் எப் பெயரில் வந்தாலும் யாம் சந்திக்க தயார்.

    • தாயுமானவன் என்ற சாதி வெறி சைவ பூனையை வெளியே வர வைத்தோம் அல்லவா !!

      • //வெளியே வர வைத்தோம் அல்லவா!!//

        “வரவைத்தோம்” இதுக்கு என்ன அர்த்தம்? நீங்கதான் செந்தில்குமரன் என்று அர்த்தமா? இல்லை சரவணனும் செந்தில்குமரனும் சேர்ந்து வரவைத்தீர்களா?.கெட்டிகாரன் புளுகு எட்டுநாள்தான் நிக்கும்.

        • தாயுமானவன்/மர்மயோகி என்ற சாதி வெறி சைவ பூனையை மீண்டும் வெளியே வர வைத்தது ராமும் ,சரவணனும் தானே !

          • ராமை என் நண்பன் என்று எப்படி சொல்லலாம் என்று தென்றலிடம் வாதம் செய்துவிட்டு இப்போது சரவணனும் ராமும் சேர்ந்து வரவைத்ததைதான் சொன்னேன் என்று சமாளிக்கிறீரே உமக்கு வெட்கமாக இல்லை.

  62. ராமின் யோக தரிசனத்தீன் இலச்சனம்:
    ——————————————————————-

    ram said: “சீக்கியர்களையோ,தமிழர்களையோ கொள்வது பாசிசம் ஆகாது.அதை பற்றி பேசுவதும் முற்போக்கு ஆகாது.முற்போக்கு என்பது முஸ்லீம்களை ஆதரிப்பது மட்டுமே.மேலதிக விபரங்களுக்கு அ.மார்க்ஸ்சை அணுகவும்.?”
    comment 10.1 in
    https://www.vinavu.com/2014/04/15/modi-suppor-costs-joedcruz/

    ராமுக்கு டெல்லியில் நடந்த சீக்கியர் படுகொலை ,வன்னியில் நடந்த ஈழ தமிழர் படுகொலை பற்றீய வினவு கண்டன கட்டுரைகள் கண்ணுக்கு தெரியாதா?

    இதை எல்லாம் மறைத்து விட்டு மோடிக்கு ஒத்து ஊதுவது தான் |—ராமின் யோக தரிசனத்தீன்—| இலச்சனமா ?

    • தமிழ்நாட்ல முற்போக்குன்னா வினவு மட்டும்தானா? அ.மார்க்ஸ் ம.க.இ.க உறுப்பினரா? ஜோ டி குருஸ்சை ஆதரித்தா மோடி ஆதரவா?

      புரட்சிகர கம்னிஸ்டுன்னு புளுகும் நீங்கள் சரவணனாத்மி என்று பட்டம் வாங்கியது ஏன்?

      • ராம் உம் யோக தரிசனம் மோடி மீது இருக்க,…, ஜோ டி குருஸ்சை ஏன் எதிர்கின்றார்கள் என்று புரிந்தும் புரியாதது போல் நீர் பம்மாத்து வேலை செய்வது ஏன் ?

        இதற்கு பெயர் தான் மோடி யோக தரிசன மயக்கமா ?

      • நீர் எப்படி மோடி மோக யோக தரிசன மயக்க நோயால ஜோ டி குருஸ்சை ஆதரிக்கின்றிரோ அப்படி தான் பெரியார் அவர்கள் காந்தி மீது கொண்ட கொள்கை பற்று காரணமாக அவர் வீட்டு மரங்களை வெட்டினார்.

        • எத்தனை முறை சொன்னாலும் உம் மூளைக்கு புரியமாட்டேன் என்கிறது.1,30,000 தமிழன் தாலிய அறுத்த 3000 சீக்கியர்களை படுகொலை செய்த காங்கிரஸை ஆதரிக்கும் யு.ஆர்.அனந்தமூர்த்தியை ஏன் யாரும் எதிர்க்க வில்லை என்ற கேள்வியின் நீட்சிதான் என் பதில் புரிஞ்சுதா?

          • ராமுக்கு டெல்லியில் நடந்த சீக்கியர் படுகொலை ,வன்னியில் நடந்த ஈழ தமிழர் படுகொலை பற்றீய வினவு கண்டன கட்டுரைகள் கண்ணுக்கு தெரியாதா?

            1,30,000 தமிழர்களை கொன்ற 3000 சீக்கியர்களை படுகொலை செய்த காங்கிரஸை ஆதரிக்கும் யு.ஆர்.அனந்தமூர்த்தியை யாரும் எதிர்க்கவில்லை என்பதற்கா தான் நீர் கொலைகார மோடியையும் , மோடியை ஆதரிக்கும் ஜோ டி குருஸ்சையும் ஆதரிப்பிரோ ?

            இது தான் நீர் கண்ட யோக தரிசனமோ ?

            வினவின் பின்னூட்டங்களில் நீர் யு.ஆர்.அனந்தமூர்த்தியை அம்பல படுத்தும் !

            உம்மை தடுப்பது யார்? வினவா?

  63. யோகி ,

    ‘புண்ணில் சரம்பெடுக்கும்’ பொய்முகமாக புளுத்து நாறுகிறது உங்கள் வாதம்.

    நக்கிக் குடி; அதை நல்லதென்று சொல்; தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்து நாயினும் தாழ்ந்து போ”

    நாயும் வயிறு வளர்க்கும் வாய்ச் சோற்றை பெரிதென்று நாடலாமோ ?

    எப்படி எல்லாம் யோகியை[உம்மை] நன்றாக வசை பாடி , யோகியீன் பின்ங்கால் பீடரீயில் படும் அளவுக்கு துரத்தியது யார் என்று உமக்கு தெரியுமா ?

    refer comment 42.2

    மர்ம யோகி said ://நாகரீகமாக மறுமொழி போடுவது எப்படி என்று திரு.தென்றல் அவர்களிடம் போய் கற்றுகொள். கொள்கை ரீதியாக அவர் கூறுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதே போன்று தான் அவருக்கு என்னிடமும். ஆனால், அதற்காக நாங்கள் இது வரை உன்போன்று தரம் தாழ்ந்து தனி நபர் தாக்குதலில் இறங்கியது கிடையாது. வாதங்களை தான் முன்வைப்போம். //

  64. ஐன்ஸ்டின் காதல் செய்தார். முதல் மனைவி இருக்கும் போது இராண்டாம் பெண்னை காதலித்தார். முதல் மனைவி விவாகரத்து செய்யத போது, பணம் கொடுக்கவில்லை. ஆனால் கோர்ட்டில் தனக்கு விரைவில் பரிசு பணம் கிடைக்கும் அந்த பணத்தை ஜீவனாம்சமாக கொடுத்து விடுவதாக கூறினார். அப்படி அவருக்கு கிடைத்த நோபல் பரிசை தன் விவாகரத்தான முதல் மனைவிக்கு கொடுத்தார்..

    New letters shed light on Einstein’s love life Einstein admitted he spent time with six other women while married
    http://www.nbcnews.com/id/13804030/ns/technology_and_science-science/t/new-letters-shed-light-einsteins-love-life/

    Einstein in Love: A Scientific Romance
    http://www.amazon.com/Einstein-Love-A-Scientific-Romance/dp/0141002212

  65. விவாதம் குழம்பிய திசையில் செல்வதாக கருதுகிறேன். அதற்கான பார்வை;

    முதலில் சம்பந்தர் குறித்தது:

    வியாசன், சம்பந்தரை தமிழ் வளர்த்தவர் என்ற அடிப்படையில் அணுகுகிறார். மர்மயோகி சம்பந்தரும் சோதியில் கலந்தார் என்று கூறுகிறார். இதற்கு மறுமொழியாக வியாசன் வைப்பது “அவரையும் எரித்திருப்பார்கள்” என்பது. இதன் நீட்சியாக அம்பி வைக்கிற வாதங்கள் அதன் தொடர்ச்சியில் செல்வது எத்தகைய பலன்களைத் தரும்?

    என் வாதத்தில் சம்பந்தரை முற்றாக புறக்கணித்திருக்கிறேன். இனப்படுகொலைக்கு தலைமை தாங்கியவரை தமிழறிஞர் என்றமுறையில் போற்றினால் ஜெர்மானிய அமைச்சர் கோயபல்ஸை எப்படிப் போற்ற வேண்டும்? இவ்வகையில் வியாசனின் வாதம் யதார்த்தமல்ல. சம்பந்தர் தொடர்பாக தொ.பரமசிவனின் அறியப்படாத தமிழகம் என்ற நூலை ஆய்வது சரியாக இருக்கக் கூடும்.

    மற்றொன்றையும் குறிப்பிடுவது அவசியம்; சமணர்கள் கழுவில் ஏற்றப்படவில்லை என்று S.A. பெருமாள் காலச்சுவடியால் பிளிறியிருப்பார். வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் நிபுணர்கள் பலர் இதற்கு எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் காலச்சுவடு கண்ணன் பின்னூட்டப் பெட்டியை மூடவேண்டி இருந்தது. இந்த திசையில் விவாதம் செல்ல விரும்பினால் அதைத் தேடிப்படிப்பது உத்தமம்.

    மர்மயோகி மற்றொரு திரிபை முன்வைக்கிறார்; வள்ளலார் நால்வர் நாண்மணிமாலையில் சம்பந்தரை புகழ்ந்திருக்கிறார் என்பது. இந்த ஒப்பீடு யந்திரத்தனத்தனமானது. பாரதி தாழ்த்தப்பட்டவர்களுக்கு பூணுல் அணிவித்தால் புனிதப்படுத்தலாம் என்று நினைத்தார். அவரைப் பொறுத்தவரை ஒடுக்கப்பட்டவர்கள் அசுத்தமானவர்கள். இன்றைக்கு ஆர் எஸ் எஸ் தலித் பகுதிகளில் இதைத்தான் செய்கிறது. மோடியின் தலித்-பூசாரி திட்டம் இவ்வகைப்பட்டதே.
    ஆனால் பாரதியின் தாசன் என்று சொல்கிற பாரதிதாசன் “தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமனில் சாமிக்குச் சத்தில்லையோ?” என்றார். இருவரையும் ஊடறுத்துப் பார்ப்பதற்கு இது பயன்படுமென்றால் வரலாற்றில் வள்ளலாரும் சம்பந்தரையும் எப்படி ஒப்பீடுவீர்கள்?

    ராம் பார்ப்பனீய மதம் என்பதை புரோகிதவாதமாக பார்க்கிறார். சித்தர்களிடம் இருந்து எடுத்துக்காட்டு வைப்பவர் ஏன் இங்கிருந்து பின்னோக்கிச் செல்லக் கூடாது? அணுராத ரமணன், சங்கர்ராமன், அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆவது, கிடா வெட்டுத்தடைச் சட்டம், லட்டுபிடிப்பதில் பார்ப்பனர்கள், முடிவெட்டுவதில் தாழ்த்தப்பட்டவர்கள், செத்தமாட்டின் தோலை உரித்ததில் ஒடுக்கப்பட்டவர்கள் அடித்துக் கொல்லப்பட்டதில் நிலைப்பாடு என்னவென்று சொல்லமுடியவில்லையென்றால் வரலாற்றில் இருந்து என்ன கற்று கொள்ளமுடியும்?
    ———————————–
    சைவ சிந்தாந்தம், இதைப் பற்றி பேசுபவர்கள் சுயசாதிப் பெருமைபேசுபவர்களாகத்தான் இருந்திருக்கின்றனர். ஆதாரம்: வருண சிந்தாமாணி, வேளாள சாதிப்பெருமை பேசும் நூல். சாதிப்பெருமை தாண்டி சைவ சிந்தாந்தத்தில் பேசுவதற்கு என்ன இருக்கிறது?
    ———————————————————————
    ‘சோதியில் கலந்தார்’ என்பதகற்கும் “பூ மிதித்தல்” என்பதற்கும் என்ன வேறுபாடு உண்டு? தீ என்பதைத் தாண்டி அகநிலை அறிவியல் என்பதற்கு எது அடிப்படையாக இருக்கிறது?
    ——————–
    வரலாற்று பார்வையில் E=mc^2 எனும் கட்டுரையிலிருந்து நாம் வந்தடைவது என்ன?

    பின்னூட்டம் என்பதைத்தாண்டி தினமலர் ஒன்றை செய்தியாக வெளியிட்டது இப்படி;

    “அமிர்தம் எடுக்க மத்தாக பயன்படுத்திய மந்தார மலை கண்டுபிடிப்பு! ஏப்ரல் 19,2014.

    சூரத்: குஜராத்தின், கடல் பகுதியில் உடைந்த மத்து போன்ற, மந்தார மலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. புராண கதைகளின் படி, பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும், மந்தார மலையை மத்தாக பயன்படுத்தினர் என, கூறப்படுகிறது. அந்த மந்தார மலை, குஜராத் பகுதியில் அமைந்துள்ளதாக, கடல்சார் விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்து உள்ளனர். பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி தலைமையிலான, குஜராத்தின் தென் பகுதியில் உள்ள கடல் பகுதியில், கடல்சார் துறை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்ட போது, வித்தியாசமான தோற்றத்தில், கடலில் மூழ்கியிருந்த மந்தார மலையை கண்டுபிடித்து உள்ளனர்.”

    இது போன்ற பாசிஸ்டுகளுக்கு முடிவுகட்டுவது எப்பொழுது? சமூகமே பாசிசமயமாகி வரும்பொழுது சித்தருக்கு சீவிவிடுவது ஏன்?

    • தென்றல்,

      பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் பெரும்பான்மை தமிழர்களின் மதத்தை, மதநம்பிக்கையை, மதவுணர்வை உங்களைப் போன்றவர்கள் புண்படுத்துவதால் தான், பெரியாரிஸ்டுக்களும்,திராவிட வீரர்களும் பங்குபற்றும் அல்லது தலைமை தாங்கும் தமிழர்களின் நலன்களை, உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டங்களில் கூட, பெரும்பான்மைத் தமிழர்கள் இணையத் தயங்குகிறார்கள். அதனால் தான், தில்லையை மீட்கும் பெரியாரிஸ்டுக்களினதும், கம்யூனிஸ்டுக்களினதும் போராட்டம், பெரும்பான்மைத் தமிழர்களின் ஆதரவின்றிப் பிபிசுத்துப் போய், இன்றைக்கு “உள்ளதும் போச்சடா கொள்ளிக்கண்ணா” என்றது போல், தில்லைச் சிதம்பரம் முற்று முழுதாக தீட்சிதர்களின் கைகளுக்கு மாறிவிட்டது.. ஞானசம்பந்தர் தனது மதத்தை பரப்பினார், அது இனப்படுகொலையா? அப்படியானால், இஸ்லாம், கிறித்தவம் போன்ற மதங்கள் இந்தியாவில் பரப்பபட்ட போது மக்கள் கொல்லப்படவில்லையா, துன்பப்படவில்லையா? ஞானசம்பந்தரை தூற்றுவது போல் இஸ்லாமிய, கிறித்தவ புனிதர்களை பெரியாரிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் தூற்றுவதில்லையே, ஏன்?

      பெரியார் எப்படி, “பெண்ணக கத்தெழில் சாக்கியப் பேய்அமண்
      தெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே’ என்ற ஞானசம்பந்தரின் தேவாரவரிகளை உண்மையான பொருள் விளங்காமல், சமணப் பெண்களை எல்லாம் கற்பழிக்க அனுமதி கேட்கிறார் திருஞானசம்பந்தர் என்று கொச்சைப் படுத்தி, தனது வக்கிரபுத்தியைக் காட்டினாரோ, அதே போன்றது தான் சமணப் படுகொலைகள் என்ற பெயரில் சம்பந்தரை நீங்கள் கோயபல்சுடன் ஒப்பிடுவதுமாகும்.

      ‘பெரியாரின் கையில் தேவாரம்??’
      http://viyaasan.blogspot.ca/2013/12/blog-post_12.html

      //வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் நிபுணர்கள் பலர் இதற்கு எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். //
      சில இணைப்புகளை அல்லது நூல்களை அல்லது அதன் ஆதாரங்களையும் பதிவு செய்யலாமே.

      • தோழர் வியாசன்

        எந்த ஒரு மதத்திலும் கடவுளும் கடவுளை நம்புகிற மக்களும் அனாதைகளாகத்தான் நிறுத்தப்படுகின்றனர். ஏனெனில் மதம் என்பது மக்களுக்கானதல்ல. மதம் என்பது மக்களை அடக்கி ஒடுக்குகிற ஆளும் வர்க்கத்திற்கானது என்கிற வாதத்தை நீங்கள் எப்படி பார்க்கீறிர்கள்?

        புத்தரை எடுத்துக்கொள்ளுங்கள். மதம் ‘நம்பிக்கை’ என்பதை விட ‘உண்மையை உண்மையாகவும் உண்மையல்லாதவற்றை உண்மையல்லாதவையாகவும் புரிந்து கொள்’ என்று மேலான சுதந்திரத்தை முன்வைத்தார். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை புத்தமதம் இந்தியாவில் இந்து மதத்தைப் போன்று எதேச்சதிகார மதம்.

        கிறத்துவத்தில் புனிதபவுலின் திருவெளிப்பாட்டை வாசிக்கிற ஒருவர் வந்தடைகிற முடிவு என்ன? பக்தி என்பதை விட ‘வசூல் எங்கே?’ என்பதுதான் (ஆதாரம்: வரலாற்றில் கிறித்துவம், ஏங்கெல்ஸ், ரகுநாதனின் மொழிபெயர்ப்பு இணையத்தில் கிடைக்கிறது)

        கிறித்துவம் என்பது பற்றி ஆப்பிரிக்க விவசாயி என்ன சொல்கிறான் என்று கேளுங்கள்; “வெள்ளைக்காரன் வந்தபொழுது அவன் கையில் பைபிள் இருந்தது; எங்கள் கையில் நிலம் இருந்தது; ஆனால் இன்று; அவர்களின் கையில் நிலம் இருக்கிறது; எங்கள் கையில் பைபிள் இருக்கிறது”

        சகோரத்துவம் போதிக்கிற இசுலாம் முகம்மதுவின் காலத்திலேயே அடித்துக் கொண்டு நாறியது. இது பற்றி பருண்மையாக ஆய்வு செய்திருக்கிறார் அஸ்கர் அலி இன்ஞினீயர் (ஆதாரம்: இஸ்லாம் மதத்தின் தோற்றமும் வளர்ச்சியும், படிப்பகத்தில் இசக்கியின் தமிழ் மொழிபெயர்ப்பு கிடைக்கிறது)

        இந்நிலையில் மதநம்பிக்கைகளையும் மத உணர்வையும் கம்யுனிஸ்டுகள் புண்படுத்த வேண்டிய அவசியமில்லை. உடமை சாதனங்களை உற்பத்திசக்திகளை பாட்டாளிகளுக்கு உறுதிப்படுத்துகிற பொழுது கடவுள் நம்பிக்கை பற்றியும் மத உணர்வு பற்றியும் தொழிலாளிகளால் முடிவெடுக்கமுடியும். அதற்கென்று தனி இயக்கம் தேவையில்லை. இதை நீங்கள் கறாராக பரிசீலிக்க வேண்டும்.

        இரண்டாவதாக சம்பந்தரின் காலத்தில் மக்களின் வாழ்நிலை என்னவாக இருந்தது என்பதை நோக்குங்கள். புத்தரையும் சிவவாக்கியரையும் சமணர்களையும் நீங்கள் எப்படி அளவிடுகீறிர்கள்? சம்பந்தர் நமக்காக என்ன செய்தார்? சம்பந்தர் மதத்தைப் பரப்பினார் என்றால் யாருக்கான மதத்தைப் பரப்பினார்? இதனால் பயன்பெற்றது யார்?

        மூன்றவதாக பெரியார் குறித்து; கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்று சொன்ன பெரியார் தான் ‘பக்தி, சுயமரியாதைக்கும் தன்மானத்திற்கும் தகுதியானது’ என்பதை முதலில் உணர்ந்ததால் தான் மக்களின் சார்பாக ஆலய நுழைவுப்போராட்டம் நடத்தினார். ஆனால் நாம் இன்னும் இதை உணர்ந்தபாடாக தெரியவில்லை.

        நான்காவதாக தீட்சிதர்களுக்கு வீரமணி போன்றவர்களை எளிதில் சமாளிக்க இயலும். இருவரும் சொத்து என்பதைப் பொறுத்து ஓர் அணியில் திரள்கிறார்கள். தில்லையை பொறுத்தவரை முழுவேலை செய்தது யார் என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும். பக்தராகிய உங்களால் ஏன் வரமுடியவில்லை என்ற கேள்விக்கு கம்யுனிஸ்டுகள் காரணம் அல்ல என்பது சு சாமிக்குக் கூட தெரியும்.

        குறிப்பு: சமணர்கள் குறித்த விவாதம் காலச்சுவடில் உண்டு. அது தவிர வரலாற்று ஆய்வாளர் வேல்சாமி மற்றும் தொ.பரமசிவனின் ஆய்வு நூல்களையும் தாங்கள் ஆய்வு செய்யப் பயன்படுத்தலாம்.

    • //மற்றொன்றையும் குறிப்பிடுவது அவசியம்; சமணர்கள் கழுவில் ஏற்றப்படவில்லை என்று S.A. பெருமாள் காலச்சுவடியால் பிளிறியிருப்பார். வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் நிபுணர்கள் பலர் இதற்கு எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் காலச்சுவடு கண்ணன் பின்னூட்டப் பெட்டியை மூடவேண்டி இருந்தது. இந்த திசையில் விவாதம் செல்ல விரும்பினால் அதைத் தேடிப்படிப்பது உத்தமம்.//

      தென்றல்,

      இது குறித்த விவாதங்கள் வினவிலும் நடந்திருக்கின்றன.. 4 மாதங்களுக்கு முந்தைய இந்தக் கட்டுரையின் பின்னூட்டங்களில் காணலாம்.. :

      https://www.vinavu.com/2013/12/13/kanchi-madam-spin-doctors-of-history/

      காலச்சுவடு விவாதங்களின் சுட்டிகள் தர இயலுமா.. அதில் வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் நிபுணர்கள் காட்டிய ஆதாரங்களைக் காண ஆவலாயிருக்கிறேன்..

  66. தாயுமானவன என்ற சாதி வெறி என்ற மர்மநோய் கொண்ட மர்மயோகி,

    எதிர்கொள்வோம் II
    ————————————–
    கம்யூனிஸ்ட்டுகளை நக்கல்,நையாண்டி செய்யும் நோக்கத்துடன் ……

    “கம்யுனிச தோழர்கள் தான் மேற்படி நடந்த ஆன்மீக கொலைகளை துப்பறிய வேண்டும். உங்கள் அளவிற்கு யாராலும் துப்பறிந்து அறிக்கை சமர்பிக்க முடியாது. நீங்கள் தான் அதில் கைதேர்ந்த வல்லவர்கள். ம்ம்.. சீக்கிரம் செய்யுங்கள்”

    இதை கூறிய லூசு மர்ம யோகி நீ தானே !

    அரசியலும் , ஆன்மிகமும் இரண்டர கலந்த சோழ அரசில் பார்பனர்கள் ஏன் தம் இளவரசனையே கொன்றார்கள் என்ற கோள்விக்கு பதில் இல்லை.

    மேலும்

    ஆதித்த கரிகாலன் கொலையில், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், “விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்)” என்று கூறுவதை நீர் எப்படி decode செய்வீர் ?

    சொல் புத்தியும், சுய புத்தியும் இல்லாத நீர் இவ் விடயத்தை decode செய்யும் போது எவ்வளவு மொக்கையாக புரிந்து கொள்வாய் என்று எமக்கு தெரியாதா ?

    எனவே தான் உமக்கு புரியும் படி வரலாற்று சுவடுகளை எப்படி ஆய்வது என்று உதாரணத்துடன் விளக்கினேன்.

    நீர் சென்னதையே மறந்து அதற்கு மாறாக உளறும் உமக்கு என்ன split personality disorder நோயா இல்லை Dementia நோயா ?

    Dementia – Symptoms
    ——————————————
    1.Memory loss. This is usually the earliest and most noticeable symptom.
    2.Trouble recalling recent events or recognizing people and places.
    3.Trouble finding the right words.
    4.Problems planning and carrying out tasks, such as balancing a checkbook, following a recipe, or writing a letter.
    5.Trouble exercising judgment, such as knowing what to do in an emergency.
    6.Trouble controlling moods or behaviors. Depression is common, and agitation or aggression may occur.
    7.Not keeping up personal care such as grooming or bathing.

    மர்மயோகி said //சத்தியமாக உமது குரைப்பை கண்டு சிரிப்பை அடக்க முடியாமல் தான் இதை தட்டச்சு செய்கிறேன்.ஏன்யா இப்படி லூசு மாதிரி நாயன்மார்கள் சித்தர்கள் பத்தி பேசும் போது சோ…….//

    மர்மயோகி said //உங்கள் பேச்சு மன நலம் சரி இல்லாதவனை போன்று இருக்கிறது. நீர் எதற்கும் ஒரு நல்ல மன நல மருத்துவரை பார்ப்பது நலம்..//

  67. தாயுமானவன என்ற சாதி வெறி என்ற மர்மநோய் கொண்ட மர்மயோகி,

    எதிர்கொள்வோம் I
    ————————————–

    [1]ஒருவன் குடி ,கஞ்சா போன்ற போதை வஸ்துகளை உட் கொண்டு உளறனால் அவனை என்ன என்று அழைப்பது ? நீர் அது போல தானே உளறினீர்.

    “வள்ளலார் ஜோதி நிலை அடையவில்லை என்று தற்காலத்தில் கம்யுனிஸ்டுகள் நீங்கள் மட்டுமல்ல காஞ்சி மடம், ரமணர் ஆசிரமத்தில் இருக்கும் பார்பான்களும் ஒத்துக்கொள்வதில்லை”

    இதன் பொருள் என்ன என்று கேட்டாலும் கூற மாட்டீர். அப்படி என்றால் போதையில் உளறுவதாக தானே எடுத்து கொள்ள வேண்டியுள்ளது.

    இதற்கு பதில் கூற துப்பு இன்றி மீண்டும் உம் சாதி வெறி மர்மநோயை வெளிகாட்டியுள்ளிரே !

    தாயுமா/மர்மயோகி நீர் பாடிய அதே பாட்டை மீண்டும் பாடியுள்ளிரே !

    “நீங்கள் எப்படி எப்போதும் கையில் கள்ளு பானையுடன்

    தீண்டாசேரியில் மொக்கை கவிதைகளை பாடிக் கொண்டு

    புலையர்களுடன் ஆடி கொண்டிருப்பீரோ… யாம் அறியோம் பராபரமே…”

    [2]உம் தவறை சுட்டி காட்டினால் சாதி வெறி உடன் தான் பதில் அளிப்பிரோ ?பர்பனனுக்கும் ,தேவதாசிகளுக்கும் “முறை அற்ற உறவில்” பிறக்கும் உம் போன்ற “புள்ளங்க “,””முதலிங்க ” எமது தமிழகத்தின் பூர்வ குடிகளை ,பச்சை தமிழர்களை “தீண்டாசேரி புலையர்கள்” என்று கூறுவதில் என்ன வியப்பு இருக்க முடியும்?

    தொடரும் ……

    //இப்படி எல்லாம் பிறரை இழிவாக பேசுவதற்கு முன்பு நம்முடைய Flash Backஐ கொஞ்சம் பார்க்க வேண்டும்.. தாயுமானவன் உங்களை பற்றி கூறியதை யோசிக்க வேண்டும். அவர் கூறியது

    “நீங்கள் எப்படி எப்போதும் கையில் கள்ளு பானையுடன் தீண்டாசேரியில் மொக்கை கவிதைகளை பாடிக் கொண்டு புலையர்களுடன் ஆடி கொண்டிருப்பீரோ… யாம் அறி……//

  68. வினவு ,

    மர்மயோகியீன்/தாயுமாவின் சாதி வெறி தாக்குதலை மட்டும் அனுமதிப்பது ஏன்?

    வினவு எம் பதில்களை என் தடை செய்தால் நான் எப்படி பதில் அளிப்பது ?

    தாயுமாsaid and மர்மயோகி refers: //“நீங்கள் எப்படி எப்போதும் கையில் கள்ளு பானையுடன் தீண்டாசேரியில் மொக்கை கவிதைகளை பாடிக் கொண்டு புலையர்களுடன் ஆடி கொண்டிருப்பீரோ… யாம் அறியோம் பராபரமே…”

    • vinavu,

      A correction :

      வினவு எம் பதில்களை தடை செய்தால் நான் எப்படி பதில் அளிப்பது ?

  69. திரு. தென்றல்..

    //மர்மயோகி மற்றொரு திரிபை முன்வைக்கிறார்; வள்ளலார் நால்வர் நாண்மணிமாலையில் சம்பந்தரை புகழ்ந்திருக்கிறார் என்பது. இந்த ஒப்பீடு யந்திரத்தனத்தனமானது.//

    மன்னிக்கவும். எப்படி எந்திரத்தனமானது என்று கூறுகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. நால்வர்நாண்மணி மாலையில் தான் என்றில்லை திருஅருட்பா பாடலில் வரும் முதல் 5 திருமுறைகளை நீங்கள் படித்தீர்களானால் வழிநெடுக ஞானசம்மந்தரை போற்றி பல செய்யுள்களை இயற்றி இருப்பதை நீங்கள் காணலாம். தேவை இல்லாமல் ஒருவரை புகழ வேண்டும் என்கிற நிர்பந்தம் வள்ளல் பெருமானருக்கு இருந்ததில்லை.

    //சைவ சிந்தாந்தம், இதைப் பற்றி பேசுபவர்கள் சுயசாதிப் பெருமைபேசுபவர்களாகத்தான் இருந்திருக்கின்றனர். ஆதாரம்: வருண சிந்தாமாணி, வேளாள சாதிப்பெருமை பேசும் நூல். சாதிப்பெருமை தாண்டி சைவ சிந்தாந்தத்தில் பேசுவதற்கு என்ன இருக்கிறது?//

    இது எனக்கு எப்படி என்று புரியவில்லை. எந்த சைவ சித்தாந்தத்தில் வேளாள சாதியின் பெருமை பற்றி சொல்லி இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. பசு,பதி,பாசம் என்கிற முப்பொருள் உண்மையை, மூன்றும் சார்ந்த தத்துவ விழுபொருளை பற்றி தான் கூறுகிறதே ஒழிய எந்த இடத்திலும் சாதி பெருமையை பற்றி சைவ சித்தாந்தத்திலும் காணுதல் இயலாது. சைவ சித்தாந்த சாத்திரங்களுக்கு ஆதாரமாக விளங்குவது 14 நூல்கள் மட்டுமே. அவை,1.திருவுந்தியார்,2.திருக்களிற்றுப் பாடியார்,3.சிவஞான போதம் 4.சிவஞான சித்தியார்,5.இருபா இருபஃது,6.உண்மை விளக்கம் 7.சிவப்பிரகாசம்,8.திருவருட்பயன்,9.வினா வெண்பா,10.போற்றிப் பஃறொடை,11.கொடிக்கவி,12.நெஞ்சுவிடு தூது,13.உண்மை நெறி விளக்கம்,14.சங்கற்ப நிராகரணம் ஆகிய இவை பதினான்கு மட்டும் தான். இதில் நீங்கள் கூறும் வருண சிந்தாமணி என்கிற பெயரில் எதுவும் இல்லையே. ஒருவேளை சாதி பெருமை பேசும் வருண சிந்தாமணியை சைவ சித்தாந்தம் என்று யாரவது தங்களிடம் கூறினால் காலணியால் அடித்து விரட்டுங்கள்

    • மர்மயோகி

      எந்திரத்தனமானது என்று கூறுவதற்கு காரணம்;

      வள்ளலார் சம்பந்தரைப் புகழ்ந்தார் என்பது வாதத்தின் மையம் அல்ல. அதைச் சுட்டிக்காட்டவே பாரதியும் பாரதிதாசனையும் ஒப்பிடுகிறோம். நீங்கள் வள்ளலார் சம்பந்தரைப் புகழ்ந்தார் என்று கூறுவதன் மூலமாக வள்ளலாரையும் சம்பந்தரையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்துகீறிர்கள். இது எந்திரமயமானது.

      வரலாற்றில் இருவரும் இருவிதமாக வினையாற்றியிருக்கிறார்கள். இப்படிப் பார்ப்போம்; பாரதியின் இருப்பை விமர்சனம் செய்கிற பொழுது பாரதிதாசனே தன் பெயரை பாரதியைக் கொண்டு மாற்றுகிறபொழுது பாரதி எப்படி தவறாக இருக்க முடியும் என்று ஒருவர் கேட்கிறார் என்றால் அவருக்கு என்ன பதிலை வைப்பீர்கள்?

      இந்து தேசியம் பேசுகிற ஒரு நபர், பாட்டாளிகளைப் பற்றிப்பாடிய பாரதிதாசனுடன் எப்படி ஒப்பாக முடியும்? உண்மையில் உங்களின் ஒப்பீடு வள்ளலாரின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்வதாக இருக்கிறது.

      ————————————————-

      வேளாள சாதிப் பெருமை பேசுவதற்கு வேளாளர்கள் ஆதாரமாக் கொண்டது சைவ சித்தாந்தைத்தான். அதற்கு ஆதாரமாக நான் வருண சிந்தாமணி நூலை ஆதாரமாக வைத்தேன்.

      சைவம் குறித்த உங்களது மொத்த கேள்விக்கும் தொ.பரமசிவனின் பதிலையே வைப்போம். அவரது ஆய்வுகளை பரிசீலியுங்கள். இது சைவம் குறித்த உங்களது மொத்த பார்வையும் தவறு என்பதற்கு ஒரு சிறந்த ஆதாரம்.

      “தொ.பரமசிவனுடன் ஒரு நேர் காணல்” குறித்து கீற்றுவில் வெளிவந்த ஒரு பகுதி சைவ சித்தாந்தம் பற்றியது.

      “சைவ மதம் தமிழ் மதமே, சைவ மதத்தைப் பின்பற்றிய பார்ப்பனர்கள் தமிழர்களே, இது சரியா?

      சைவம் தான் தமிழ் மதம் என்பதை நிலைநிறுத்தும்போது பெரியார் கூட இருந்த சைவ அறிஞர்கள், குறிப்பாக மறைமலை அடிகள் போன்றோர் பார்ப்பன எதிர்ப்பு என்கிற அம்சத்திலே பெரியாரை ஆதரித்துக் கொண்டு, ‘சைவ மதம் தான் தமிழர்களின் உண்மையான மதம்’ என்ற நிலை எடுத்தார்கள். ‘பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்’ என்று மறைமலையடிகள் ஒரு புத்தகமே எழுதினார். இந்தக் கருத்தோட்டத்தை ஆராய்ச்சியாளர்கள் யாருமே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

      உமா கூட தமிழ்ச் சொல் அல்ல. பார்வதியைக் குறிக்கும் இதன் தமிழ் வடிவம் ‘உமை’. இந்தச் சொல் ஹிமா என்ற வடசொல்லுடைய தமிழ் வடிவம். ஹிமா என்றால் பனி என்று அர்த்தம். ஹிமாத்திரி என்றால் பனிமலை, இமயமலை என்று அர்த்தம். ஹிமா என்ற சொல் தமிழில் உமா என்று ஆகிவிட்டது. ஹிமாலாய என்பது தான் உமா. உமா தான் உமை; பார்வதியைக் குறிக்கும் பழைய சொல். பார்வதி என்பவள் இமயபர்வதத்தில் பிறந்தவள். முதலில் சைவ மதத்தின் வேர்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. அதே நேரத்தில் காஷ்மீரில் ஸ்ரீகண்டர் உருவாக்கிய பாசுபத சைவம் இங்கே வருகிறது. அதை வைத்துக்கொண்டுதான் சைவ தத்துவங்களை உருவாக்குகிறார்கள்.

      ராஜ ராஜ சோழனின் குருமார்கள் எல்லாம் காஷ்மீர் சைவப் பண்டிதர்கள்தான். தஞ்சாவூர் கோவில் பாசுபத சைவ அடிப்படையில் கட்டப்பட்டது தான்; சித்தாந்த சைவம் அல்லது தமிழ்ச் சைவம் என்ற அடிப்படையில் கட்டப்படவில்லை. கோயில் உள்ளே போனால் பார்க்கலாம். அகோரம், வாமம், சதாசிவம், ஜாதம், ஈசானம் என்ற 5 மூர்த்தங்கள் இருக்கின்றன‌. இதெல்லாம் பாசுபத சைவ நெறிகள்; தமிழ்ச் சைவ நெறிகள் அல்ல.

      பாசுபத சைவத்திற்கும் தமிழ்ச் சைவத்திற்கும் வேறுபாடு என்ன?

      63 நாயன்மார்களில் மதுரைக்குத் தெற்கே ஒருத்தர் கூட இல்லையே என்று கேட்டால் சைவர்கள் அதிகம் கோபப்படுவார்கள். இது தான் உண்மை. அப்பொழுது சமண மதம் செழித்து இருந்த பூமியாக அது இருந்தது.

      அதற்குப் பின்னாலே பாசுபதம் வந்தது. பாசுபத‌ சைவம் தமிழ்ச் சைவத்திற்கு மூத்த வடிவம். பாசுபத‌ சைவம் பற்றி விரிவாகப் பல நூல்கள் வந்துள்ளன‌. தமிழில் திருமந்திரம் கூட பாசுபத‌ சைவத்தில்தான் உள்ளது.

      எல்லா மன்னர்களாலும் ஆதரிக்கப்பட்ட மதமாக சைவம் இருந்தது. அப்பொழுது கூட தமிழ்ச் சைவம் வரவில்லை. ராஜராஜ சோழன் காலத்தில் கூட தமிழ்ச் சைவம் வரவில்லை. சோழ அரசு வைணவத்தை ஆதரிக்கவேயில்லை. சைவ மதத்தின் தோற்றம் என்று கேட்டால் அது காஷ்மீரகம் தான். ஸ்ரீகண்டர்தான் அதைத் தோற்றுவித்தார். அதை லகுலீசர் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்திருக்கிறார். கடாரிப்பட்டி மலைக்கோவிலில் லகுலீசர் சிற்பம் ஒன்று உள்ளது.”

      ———————–
      அனைத்தையும் ஆய்வு செய்து சைவம் குறித்த உங்களது பார்வையை முன்வையுங்கள். தொ.பரமசிவனின் ஆய்வுப்படி உங்களது வாதம் வரலாற்றுத் திரிபாகும்.
      ——————————————————————–

  70. சரவணன் என்கிற பெயரில் மறைந்து கொண்டு மறுமொழியிடும் ——— செந்தில்….

    ஒருவருடைய தவறை சுட்டி காட்ட “நீங்கள் இவ்வாறு தவறு செய்துள்ளீர்கள்” என்று சுட்டி காட்டினால் போதும். அதை விட்டு நீ என்ன போதையில் பேசுவியா என்று ஒருமையுடன் பேசினால் இப்படி தான் நிம்மதி இழந்து போவாய். பிறரை ஒருமையில் பேச உனக்கு எந்த உரிமையும் கிடையாது. இப்போது கூட நீ ஒருமையில் பேசியதால் தான் நான் பேசுகிறேன்.

    அப்புறம் இன்னொரு விடயம்.

    //பர்பனனுக்கும் ,தேவதாசிகளுக்கும் “முறை அற்ற உறவில்” பிறக்கும் உம் போன்ற “புள்ளங்க “,//

    நான் பார்பான், பிள்ளை சாதியை சேர்ந்தவனும் இல்லை முதலியும் கிடையாது. நான் மிக பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவன். இதற்க்கு மேல் என் சாதி பெயரை கூறுவது தேவை இல்லாதது. நான் என்ன சாதி என்பது கூட தெரியாமல் பேசும் உன் போன்ற மன நோயாளிகளுக்கு என்ன சொல்வது. ஒன்றும் சொல்வதற்கு இல்லை. முடிந்தால் நீ ஒரு மனநல மருத்துவரை போய் பார்ப்பது நல்லது. உனக்கு பைத்தியம் முற்றி விட்டது._____________________

    உன்மீது எனக்கு கோபமே வரவில்லை. ஏன்னா நீ மூளை வளர்ச்சி குன்றியவன் என்பது உன் பேச்சிலேயே தெரிகிறது . இப்போதும் சொல்கிறேன் உனக்கு அறிவு சுத்தமாக கிடையாது. copy and paste செய்து போடும் அளவிற்கு தான் உனக்கு மூளை வளர்ச்சி இருக்கிறது . openஆ சொல்றன் மொத்ததுல நீ ஒரு வேஸ்ட். தாங்கிட்ட பேச போதுமான விஷய தெளிவு இல்லாதவன் தான் அடுத்தவன் கிட்ட கோப படுவான். நீ எவ்வளவுக்கு எவ்வளவு வெறி புடிச்சு கத்துறியோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஏன்,அதை விட எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. அதுதான் என் வெற்றியும் கூட. இதே போன்று கத்தி கொண்டே இரு நிறுத்தி விடாதே. நீ பாட்டுக்கும் கத்தி கொண்டே இரு.நான் என் வேலையை பார்கிறேன். நீ பேசும் பேச்சுக்கு இங்கிருக்கும் சக கம்யுனிச தோழர்களே உன்னை அருவெறுப்புடன் தான் பார்பார்கள்.

    • யோகி ,

      உமக்கு இருப்பது Dementia என்ற memory loss நோய் தான் !

      நீ சொன்னதை நீ மறந்து விடுகின்றாய் !

      கம்யூனிஸ்ட்டுகள் மீது கோபம் கொண்டு வெறி பிடித்து கத்துவது நீ தான். உன் முதல் comment 42 ல் எப்படி கத்துகின்றாய் பார் !

      ” ஈனமான கம்யுனிச பார்வையில் ………

      விநாச காலம் தொடங்கிவிட்டது ……… ”

      உன் தவறை நான் சுட்டி காட்டும் இரு comments 43.1 ,60.1லும் உம்மை “நீ” என்று ஒருமையில் நான் அழைக்கவில்லையே ! படித்து பாரும்.

      நீ சாதி வெறியுடன் உன் comment 66 ல் பேச தொடங்கிய பின்பு உமக்கு நான் எதற்கு மரியாதை கொடுக்க வேண்டும் !

      உன் சாதி எது என்பது பற்றி எமக்கு அக்கறை இல்லை. ஆனால் என்னை எதற்காக தாயுமாணவ பிள்ளை சாதி வெறியுடன் எசிய அதே சாதிய சொற்களை refer செய்து பேசினாய் ? இன் நிலையில் தாயுமாவுக்கு எதிராக நான் பயன் படுத்திய வரலாற்று உண்மைகளை[பார்பனர் +தாசி =பிள்ளை ] தான் உனக்கும் பயன் படுத்துவேன் !

      நீ யார் [தாயு /யோகி ] என்பதை உம் எழுத்து வடிவம் , உள்ளடக்கம் கொண்டு அனைவரும் அறிந்து கொள்வர் !

      இவ் விளக்கம் கூட உமக்கு அல்ல.

      வினவை படிக்கும் வாசகர்களில் சாதி ,மத வெறி அற்ற வாசகர்களுக்கு மட்டுமே இவ் விளக்கம் கொடுக்கின்றேன் !

      உன் Dementia நோய்க்கு நல்ல neurologist Dr பாரு

      My Best wishes to you for quick recovery from Dementia !

  71. திரு. ராம்.

    //எத்தனை முறை சொன்னாலும் உம் மூளைக்கு புரியமாட்டேன் என்கிறது.1,30,000 தமிழன் தாலிய அறுத்த 3000 சீக்கியர்களை படுகொலை செய்த காங்கிரஸை//

    உங்களின் பயனுள்ள நேரங்களை செந்தில் குமரன் போன்ற—-வர்களுடன் செலவிடுவதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அவர் மனநலம் சரி இல்லாதவர். உங்களின் தர்க்க நியாயங்கள் எதுவும் அவர் மண்டையில் உரைக்காது. நன்றாக அவர் மறுமொழிகளை கவனித்து பாருங்கள். பொதுவாக ஒருவர் மீது கோபம் இருந்தால் அவரை மொத்தமாக திட்டி தீர்த்து விடுவோம். ஆனால் அவரோ யோசித்து, யோசித்து என்னை வசைபாடுவதை பாருங்கள். இது ஒரு விதமான மன நோய்.ஒரு நல்ல “Normal Mind” இருப்பவர்கள் இது போன்று செய்ய மாட்டார்கள். இவரை தவிர மாற்று கருத்துள்ள மற்ற தோழர்கள் யாரவது இப்படி பேசுகிறார்களா,இல்லையே. ஆகவே அவர் முதலில் ஒரு மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளட்டும் . அவர் பூரணமாக குணம் ஆன பிறகு அவருக்கு நாம் மறுமொழிகள் போடலாம்.

  72. என் குறிப்பு :
    வருண சிந்தாமணி நூலை 1901இல் எழுதியது கனகசபைப் பிள்ளை

    தமிழ் நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள் – நா. வானமாமலை

    வேளாளர் உயர்வைக் கூறும் நூலொன்று ‘வருண சிந்தாமணி’ என்ற தலைப்போடு 1901இல் வெளியாயிற்று.இந்நூலாசிரியர் வேதம், உபநிஷத்துக்கள், புராணங்கள் முதலியவற்றை ‘ஆரிய வேதம்’ என்றும் திருக்குறள், சைவத் திருமுறைகள் முதலியவற்றைத் ‘திராவிட வேதம்’ என்றும் கூறுகிறார். வேதங்களிலும் திராவிட வேதங்களிலும் சாதிப் பிரிவினைகளுக்கும் உயர்வு, தாழ்வுகளுக்கும் ஆதாரமில்லை என்று குறிப்பிடுகிறார்.

    வேதமுண்டான காலத்தில் ஆரியர்கள் ஏற்பாட்டில் சாதி என்பதே கிடையாது. வேதத்தில் சாதியின் குளறுபாட்டிற்கு ஆதரவேயில்லை. அந்தணர்களை மேன்மைப்படுத்தியதற்கும் சூத்திரர்களைக் கீழ்மைப்படுத்தியதற்கும் யாதொரு ஆதரவுமில்லை. சகல வருணத்தாருக்கும் ஒன்று சேர்ந்திருக்கவும் ஒன்றாயிருந்துண்ணவும் ஒருவருக்கொருவர் கொண்டு, கொடுத்திருப்பதற்கும் வேதத்துள் யாதொரு தடையும் தோற்றவில்லை.

    வேத சூக்தங்களில் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய இந்நால்வரும் ஒருவரைப் போலவே பிரமாவினிடத்து உதித்தவர்களாகவேயிருக்கிறார்கள். இதுவும் வேதத்தில் பூர்வ பாகத்தில் சேர்ந்ததன்று; பின்னிட்டதாம்.

    இதன் பின்னர் இவ்வாசிரியர் சைவசமயத் தத்துவத்தை விளக்கி அதைப் பின்பற்றும் சைவர், ஆரிய வேதத்தைப் பின்பற்றும் பிராமணருக்கு மேலானவர் என்று கூறுகிறார். ஆனால், பிற்பகுதியில் நால்வருணப் பிரிவை ஏற்றுக்கொண்டு வேளாளர்கள் தாம் செய்யும் தொழிலால் வைசியர் என்றும் அவர்களுக்கு ஏவல் புரியும் “வண்ணார், நாவிதர், குயவன், தச்சன், கொல்லன், கன்னான், கல்தச்சன், தட்டான், இடையன், செக்கான், சேணியன், சாணன், எருத்து வாணியன், தேவதாசி மக்கள், வேடன், பக்கிலியன்”போன்ற பற்பல தொழிலாளிகள் சூத்திரர்கள் என்றும் கூறுகிறார். இவ்வாறு வேளாளர், சைவ சமயத்தாராதலால், வேத சமயத்தைப் பின்பற்றும் பிராமணரிலும் மேம்பட்டவரென்றும் தொழிலால் வைசியரென்றும் சூத்திரர் அவர்களுக்குத் தாழ்ந்தவர்களென்றும் இந்நூல் கூறுகிறது. இக்கருத்துக்களின் முரண்பாடு எளிதில் விளங்கும்.

    தமிழ் நாட்டின் நிலப்பிரபுக்கள், சிறு நிலவுடைமையாளரில் பலர் சைவ வேளாள சாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தமக்கு மேலுள்ள வகுப்பாரோடு தங்களைச் சமமானவர்களாகவும் கீழுள்ளவர்களைத் தங்களுக்குத் தாழ்ந்தவர்களென்றும் கருதி அவர்களை அவ்வாறே வைத்திருக்கவும் விரும்பினார்கள் என்பதை இந்நூல் காட்டும். எனவே, இவர்கள் சாதி அமைப்பு முறையை எதிர்க்கவில்லை. அதில் தங்களுடைய பதவியை உயர்த்திக்கொள்ளவே விரும்பினார்கள். இதற்காகத் தமிழ் நூல்களையும் வேதங்களையும் பயன்படுத்தினார்கள்.

  73. தென்றல்,

    //ராம் பார்பனீய…….என்ன கற்று கொள்ள முடியும்?//

    நான் பார்பனீயத்தை ஏற்றுகொள்ளவில்லை என்பதால் அது சார்ந்த விசயங்களில் என் நிலைப்பாடு எதிராகதான் இருக்கும் என எடுத்துகொள்வீர்கள் என எண்ணினேன்.

    1]ஜெயேந்திரர் ஒரு பொறுக்கி அதை கண்டுபிடித்த சங்கர்ராமனை தீர்த்துகட்டியவர்.அனுராதாரமனன் அவர் பொறுக்கிதனங்களை துணிவுடன் வெளிப்படுத்திய பெண்.பொதுவாக மடங்கள் மடாதிபதிகள் மீது எனக்கு எந்த மரியாதையும் இல்லை அதுதான் என் நிலைப்பாடு.ஜெயேந்திரர் எப்படி வெளியில் இருக்கலாம் என்ற அடுத்த கேள்வியை கேக்காதீர்கள் இந்த விவாதம் அது குறித்து இல்லை.

    2]திருப்பதியில் மொட்டை அடிக்க ஏன் மற்ற சாதியை சேர்ந்தவர்கள் வருவதில்லை என்பது அடுத்த கேள்வி.இது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.தமிழ்நாட்டில் அழகுநிலையம்[இங்கு முடிவெட்டுவதும் உண்டு]வைத்து இருப்பவர்கள் மருத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இல்லை.பிறகு திருப்பதிக்கு ஏன் மற்ற சாதியினர் மொட்டை அடிக்கும் தொழிலுக்கு செல்வதில்லை? வருமானம்தான் காரணமாக இருக்கலாம்.

    3]லட்டு பிடிக்க பார்ப்பனர் மட்டுமே என்பது கண்டிப்பாக சாதிதிமிர்.பார்ப்பனர் மட்டுமே சுத்தமானவர்கள் மற்றவர்கள் அழுக்கானவர்கள் என்ற மனோபாவத்தில் இருந்து உருவாவது.வன்மையாக கண்டிக்கதக்கது.

    4]அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதில் எனக்கு மாற்றுகருத்தில்லை.ஆனால் கடவுள் மறுப்பாளர்கள் அர்ச்சகர் ஆவதில்தான் சிக்கல் ஆரம்பிக்கிறது.

    5]கிடா வெட்ட தடை சட்டம் நாட்டார் தெய்வமரபை முடக்கும் நோக்கம் உடையது.அதுதான் அப்போழுதே நீக்கப்பட்டுவிட்டதே.

    நிற்க!வள்ளலார் கொளுத்தப்பட்டார் என்பது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன? அந்த நோக்கில் தக்க தரவுகளுடன் ஆய்வு செய்த நூல் எதாவது உண்டா?

    //என் வாதத்தில் சம்பந்தரை முற்றாக புறக்கணித்து இருக்கிறேன்//

    சம்பந்தர் இனபடுகொலை செய்தவர்,திருநாவுக்கரசர் அதுக்கு துணை நின்றவர்,சுந்தரர் பாணபத்திர ஓணான்டி.அப்படி எனில் தேவாரம் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?

    • ராம்

      \\ கிடா வெட்ட தடை சட்டம் நாட்டார் தெய்வமரபை முடக்கும் நோக்கம் உடையது.அதுதான் அப்போழுதே நீக்கப்பட்டுவிட்டதே.\\

      தற்போதைய நிலைமையில் நாட்டார் தெய்வமரபு முழுவதும் ஆர் எஸ் எஸ் கைகளில் இருக்கிறது. கிராம பூசாரிகள் திட்டம் இதில் ஒன்று. இரண்டாவதாக ஓதுவார்களிடம் திருமணங்களை தமிழில் நடத்தக் கூடாது என்ற உத்தரவும் இருக்கிறது. எம் நண்பருக்கு ஓதுவாரை தேடியபொழுது ஆர் எஸ் எஸ் உத்தரவை காரணம் காட்டி அனேகம் பேர் மறுத்துவிட்டனர் என்பதை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

      \\ சம்பந்தர் இனபடுகொலை செய்தவர்,திருநாவுக்கரசர் அதுக்கு துணை நின்றவர்,சுந்தரர் பாணபத்திர ஓணான்டி.அப்படி எனில் தேவாரம் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?\\

      ஒட்டுமொத்த சைவ சித்தாந்தம் குறித்து திரி 74.1இல் தொ.பரமசிவனின் பார்வையை பதிவிட்டிருக்கிறேன். பார்க்க.

      \\ திருப்பதியில் மொட்டை அடிக்க ஏன் மற்ற சாதியை சேர்ந்தவர்கள் வருவதில்லை என்பது அடுத்த கேள்வி.இது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.தமிழ்நாட்டில் அழகுநிலையம்[இங்கு முடிவெட்டுவதும் உண்டு]வைத்து இருப்பவர்கள் மருத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இல்லை.பிறகு திருப்பதிக்கு ஏன் மற்ற சாதியினர் மொட்டை அடிக்கும் தொழிலுக்கு செல்வதில்லை? வருமானம்தான் காரணமாக இருக்கலாம்.\\

      இந்த பதில் சிறப்பாக இருக்கிறது. இருந்தபோதிலும் வறுமையில் வாடும் பார்ப்பனர் ஏன் இதை ஒரு தொழிலாக செய்யமுன்வருவதில்லை என்பதை எப்படி பார்க்கிறீர்கள்? மாறாக பணக்கார பார்ப்பனர் பியுட்டி சலூன் வைத்திருக்கிறார் என்பதை மறுக்க இயலாது.

      \\ அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதில் எனக்கு மாற்றுகருத்தில்லை.ஆனால் கடவுள் மறுப்பாளர்கள் அர்ச்சகர் ஆவதில்தான் சிக்கல் ஆரம்பிக்கிறது.\\

      மட்டையடியாக இருக்கிறது. கடவுள் மறுப்பாளர்கள் யாரும் அர்ச்சகர் ஆகவில்லை. அவர்களை கம்யுனிஸ்டுகள் ஏன் திரட்ட வேண்டும் என்கிற சோவின் புகைச்சல்தான் உங்கள் பதிலில் இருக்கிறது. பக்திக்கும் சுயமரியாதை உண்டு என்றால் இதை நாம் எடுக்கத்தான் வேண்டும் என்பது என் கருத்து. மேலும் கம்யுனிஸ்ட் மத மற்றும் கடவுள் நம்பிக்கையாளரை எப்படி அணுகுகிறார் என்பதற்கு திரி 70.1.1ல் ஐந்தாவது பாராவில் குறிப்பிட்டிருக்கிறேன். உங்கள் வாதத்தை முன் வையுங்கள்.

      \\ நிற்க!வள்ளலார் கொளுத்தப்பட்டார் என்பது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன? அந்த நோக்கில் தக்க தரவுகளுடன் ஆய்வு செய்த நூல் எதாவது உண்டா?\\

      இன்னும் வரலாற்று ஆய்வு என்பதற்குள் நாம் செல்லவில்லை. சோதியில் கலந்தார் என்று சொல்கிற வாதத்திற்கு இணையான வாதங்களான சிவபெருமான் தீட்சிதர்கல் ஒருவர் என்கிற அபிடவிட், ராமன் மனுவாதியாக சேர்க்கப்பட்டது போன்றவற்றை எப்படி அணுகுகீறிர்கள் என்று கேட்டிருந்தேன்.

      சோதியில் கலந்தார் என்பதற்கு தாங்கள் கலக்டரின் ஆவண பதிவை சுட்டிக்காட்டினீர். மேலும் அதை ஏற்றுக்கொள்வதற்கு “என் பார்வையில் கலெக்டர் நடுநிலைமையாளர்” என்கிற ஒரு தரச் சான்றிதழ் வழங்கியிருந்தீர்கள்.

      மேலும் சோதியில் கலப்பது அகநிலை அறிவியல் என்று உங்கள் வாதத்தை வைத்தீர்கள். அதை அறிவதற்கு அறிவியல்துறைக்கு இன்னும் நூறு ஆண்டுகள் கூட ஆகலாம் என்று மனிதர்களின் இயலாமையை சுட்டிக்காட்டீனிர்கள்.

      இத்தகைய பார்வை சரியா என்பதில் தான் முதலில் கவனம் செலுத்துகிறேன்.

      ஆக திரி70ல் ஒரு அணுகுமுறையை முன்வைத்தேன் இப்படி “‘சோதியில் கலந்தார்’ என்பதற்கும் “பூ மிதித்தல்” என்பதற்கும் என்ன வேறுபாடு உண்டு? தீ என்பதைத் தாண்டி அகநிலை அறிவியல் என்பதற்கு எது அடிப்படையாக இருக்கிறது?” இதற்கு உங்கள் வாதத்தை வையுங்கள். பிறகு நீங்கள் கேட்கிற வரலாற்று ஆதாரம் என்கிற வாதத்திற்குள் செல்வோம்.

  74. திருத்தம்: சமணர்கள் கழுவேற்றுதல் தொடர்பாக, காலச்சுவடில் வெளிவந்த கட்டுரையாளரின் பெயரை தவறாக குறிப்பிட்டிருக்கிறேன். கட்டுரை எழுதியது S A பெருமாள் அல்ல; பி.ஏ. கிருஷ்ணன்.

    பி.ஏ.கிருஷ்ணனின் கட்டுரை;
    http://www.kalachuvadu.com/issue-167/page09.asp

    எதிர்வினை குறித்த லிங்கில் ஆய்வாளர் வேல்சாமியின் கருத்து.
    http://www.kalachuvadu.com/issue-168/page80.asp

    வேல்சாமிக்கு எதிர்வினையாற்றி பி.ஏ.கிருஷ்ணனின் பதில்
    http://www.kalachuvadu.com/issue-169/page164.asp

  75. ராமும் தேவார நாயனாரும் ஒன்னு ! இத நம்பாதவங்க தலைகுள்ளே மண்ணு !

    https://www.vinavu.com/2013/12/31/vanakkarayya-short-story/
    comment 25.1, 25.1.1.1,25.1.1.1.1.2.2.1,28.1.1.1.1.1

    and the special comment from Devara nayananr….
    கார்பரேட் குருமார்கள் மீது எனக்கும் விமர்சனம் உண்டு.ஆனால் யோக மார்க்கம் அவர்களின் சொந்த கண்டுபிடிப்பு அல்ல.இந்த மண்ணின் ஆதி குடிகளுக்கு உரியது.அறிவியல் பூர்வ மானது.அதை யோக விஞ்ஞானம் அல்லது அக அறிவியல்[இன்னர் சயின்ஸ்] எனலாம்.எதிர்கால விஞ்ஞானம் அதை வளர்த்தெடுக்கும் என நம்பலாம்.comment 28.1.1.1.1.1.2.1

  76. இக் கட்டுரையீன் பின்னூட்டங்களில் அறிவியலுக்கு எதிராக, பார்பனியத்துக்கு ஆதரவாக comment 27 வரை “தாயுமானவ பிள்ளை ” என்ற பெயரில் பின்னூட்டம் இட்டு வந்தவர் அறிவியலாளர்கள் கொடுத்த பதில் அடியீன் வலி தாங்க முடியாமல் comment 42 முதல் “மர்மயோகி” என்று பெயரை மாற்றிக்கொண்டு “ஈனமான கம்யுனிச பார்வை” என்று அறிவியலாளர்களையும்,”வினவிற்கு விநாச காலம் தொடங்கி விட்டது” என்று வினவையும்,”நீங்கள் எப்படி எப்போதும் கையில் கள்ளு பானையுடன் தீண்டாசேரியில் மொக்கை கவிதைகளை பாடிக் கொண்டு புலையர்களுடன் ஆடி கொண்டிருப்பீரோ… யாம் அறியோம் பராபரமே” என்று சாதி வெறிகொண்டு என்னையும் வெம்பி தூற்றுவது ஏனோ ?

  77. தென்றல்…

    வள்ளலாரையும் சம்மந்தரையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தியதில் நீங்கள் என்ன குற்றம் கண்டீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. அவர் பார்பனர் என்பதாலா. இருவருமே தமிழில் தான் தங்கள் செய்யுகளை வடித்தார்கள். இருவருமே சாதி எதிர்பாளர்கள் தான். சம்மந்த பெருமான் தான் செல்லும் கோவில்களுக்கெல்லாம் தான் பதிகம் பாடும் பொழுது அதற்க்கு ஏற்றார் போல் இசை அமைக்க திருநீலகண்ட யாழ்பாணர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்தவரை தான் உடன் அழைத்து செல்வார். எதுவரை அழைத்து செல்வார். கோவிலின் கருவறை வரை திருநீலகண்ட யாழ்பானரையும் அவரது மனைவியார் மதங்க சூளாமநியாரையும் உடன் அழைத்து செல்வார். மூவரும் கோவிலின் கருவறைக்குள் நின்று தான் பதிகம் பாடுவார்கள்.

    வேறு என்ன சிக்கல், சமணர்களை கழுவில் ஏற்றியதா. முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் யாரும் அவர்களை கழுவில் ஏற்றவில்லை. அவர்களாகவே கழுவேறினார்கள்.அதற்க்கு காரணம் சம்பந்தர் கிடையாது. சமணர்களாகவே தேடி கொண்ட கதி அது . தேவை இல்லாமல் வாதுக்கு அழைத்து சமணர்களே தங்களுக்கான முடிவை ஏற்படுத்தி கொண்டார்கள். அனல் வாதம், புனல் வாதம் ஆகியவற்றில் நீங்கள் தோற்றால் என்ன செய்வீர்கள் என்று கூன் பாண்டியனின் அமைச்சன் குலச்சிறையார் சமணர்களை நோக்கி வினவிய போது, சமணர்கள் தாங்கள் தோற்று விட்டால் ஊரை விட்டே போய் விடுகிறோம் என்று கூறி இருக்கலாம்,அல்லது சைவ நெறிக்கு தாங்கள் மாறுவதாக கூறி இருக்கலாம். அதை விட்டு தோற்றால் கழுவில் ஏறுவதாக அவர்களாகவே தான் கூறினார்கள். வாதில் தோற்று போனார்கள், சொன்னபடி கழுவேறினார்கள்.இது தான் உண்மை வரலாறு

    மேற்சொன்ன ஞானசம்பந்தர் வாதில் வென்ற வரலாற்றை, வள்ளலார் பெருமானார் ஆறுமுக நாவலருடனான நீதி மன்ற வாதில் பெற்ற வெற்றியை ஒப்புமை கூறலாம். கழுவில் தான் எற்றபடவில்லையே தவிர வாதில் தோற்று போய் அவமான பட்டு இலங்கைக்கு திரும்பினார் நாவலர்.

    தொ. பரமசிவத்தின் ஆய்வுகளை கூறினீர்கள், அவர் கூறியபடி சைவ சமயம சார்ந்த என்னுடைய கருத்துகளை புரட்டு என்று கூறிவிட்டீர்கள்.. ஏதோ எனக்கு தெரிந்ததை கூறுகிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்

    முதலில் பாசுபத சைவம் என்பது ஆரியர்களுக்கு(ஸ்ரீகண்டர்) சொந்தமானது என்று யார் சொன்னது. வடநாட்டில் இருந்தது என்பதால் அது ஆரியர்களுக்கோ அல்லது ஆரிய சார்புடையவர்களுக்கோ சொந்தமானது என்று அர்த்தமா. முதலில் சைவ வழிபாடு என்னும் சிவ வழிபாட்டை இந்தியாவில் மேற்கொண்டவர்கள் யார். ஆரியர்கள் இந்திய நாட்டிற்க்குள் வரும் போது சைவ வழிபாட்டோடு வந்தார்களா? அவர்களின் வேத வாழிபாட்டில் மிருகங்களை கொன்று யாக குண்டத்தில் போடும் வெறியாட்டு வேள்விகளை தவிர பக்குவமான வழிப்பாட்டு முறை எதுவும் கிடையாது.

    சைவம் என்னும் சிவ வழிபாட்டை மேற்கொண்டவர்கள் சிந்து சமவெளி நாகரீகத்தில் வாழ்ந்த மக்கள்(திராவிட) இனத்தவர்கள் தான். ஆரியர்களின் நால் வேதத்தில் பழமையான வேதமாக போற்ற படும் ரிக்வேதத்தில் மட்டும் தான் சிவ வழிபாட்டை பற்றி சில இடங்களில் கூறி செல்கிறது. பாசுபதம் என்பது மிக பழமையான ஒரு சைவ வழிப்பாட்டு முறை இதன் உண்மையான சொந்தகாரர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்ததாக கூறப்படும் அந்நாளைய திராவிட தமிழர்கள் தான். இதற்க்கு ஒரு சிறந்த உதாரணம் ஹரப்பா நகரத்தில் கண்டெடுக்க பட்ட யோக நிலையில் அமர்ந்திருக்கும் பாசுபத நாதரின் முத்திரை படிவம்.

    சைவ வழிபாடு முழுக்க முழுக்க தமிழர்கள் உடையதுதான். தமிழர்களின் வரலாற்று அறியாமையால் அது ஆரிய பார்பன மாயமாகியது. பாசுபத சைவம் தமிழர்கள் உடையது தான். அதை ஸ்ரீகண்டர் உருவாக்கவில்லை. பாசுபததில் அவர் சில கோட்பாடுகளை புகுத்தினார். இப்படி சொன்னால் தங்களுக்கு புரியுமென்று நம்புகிறேன். தில்லை கோவில் யாருக்கு சொந்தம் என்பது தங்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் தீட்சித பார்பனர்கள் அந்த கோவில் தங்களுக்கு தான் சொந்தம் என்று தங்களின் பரம்பரை சொத்தை போல் கூறுகிறார்கள். தமிழன் கட்டிய கோவிலில் ஆரியம் புகுந்து ஆலயத்தை தனதென்று சொந்தம் கொண்டாடுவதை போல. சிந்து வெளி தமிழரின் இறை கோட்பாட்டில் ஆரியம் புகுந்து தான் உருவாக்கியது போன்று சொந்தம் கொண்டாடியது. இது ராஜ ராஜ சோழனை போன்ற தமிழனின் தொன்மை வரலாற்றை அறியாத மன்னர்களுக்கு புரியவில்லை. இதை நான் கூறவில்லை. சிந்து சமவெளி நாகரிகமாக கருதப்படும் ஹரப்பா நாகரிகத்தை ஆய்வு செய்த பின்லாந்தை சேர்ந்த புகழ் பெற்ற ஆராய்ச்சியாளர் திரு.அஸ்கோ பர்போலா என்பவர் கூறுகிறார். இவருடைய நூல்களில் இருக்கும் செய்திகளைத் தவிர வேறு எந்தப் புதிய தகவலையும் மற்றவர் யாரும் கொடுத்துவிட முடியாது. சைவ வழிபாடு சிந்து வெளி மக்களுடையது தான் அந்த சிந்துசமவெளியில் வாழ்ந்த மக்கள் திராவிடர்கள் எனப்படும் தமிழர்கள் தான் என்பதை தக்க ஆதாரங்களுடன் தன்னுடைய ” Deciphering the Indus Script “. என்னும் நூலில் கூறி இருக்கிறார். அந்த நூலை தாங்கள் அவசியம் படிக்கவும். முடிந்தால் தொ.பரமசிவன் அவர்களுக்கும் படிக்க கொடுத்தால் நல்லது.

    • சம்பந்தர் Vs வள்ளலார்
      ———————-

      வள்ளலாரையும் சம்பந்தனையும் சாதி எதிர்ப்பாளன் என்ற அடிப்படையில் இணைப்பது அறியாமை மட்டுமல்ல. மோசடியும் கூட. தத்துவ நெறி என்கிற அடிப்படையில் வள்ளலார் வைப்பதில் லோகாயதம் உண்டு. சம்பந்தர் வைப்பதில் என்ன உண்டு? சமரச சுத்த சன்மார்க்கம் எந்தவகையில் ஒரு மதவாதியின் கருத்துக்கு ஈடாக முடியும்?

      சம்பந்தர் தாழ்த்தப்பட்டவருடன் பழகினார் என்பதில் மோடி 2002இல் முசுலீம்களை கொல்வதற்கு தாழ்த்தப்பட்டவர்களையும் பயன்படுத்தினார் என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது?. அம்பேத்கர் ஒரு வரியில் சொல்வார்; “இந்துக்கள் கலவரத்தில் மட்டும் ஒன்று சேர்கிறார்கள்” அது சமணப்படுகொலையாக இருந்தாலும் சரி; முசுலீம்கள் படுகொலையாக இருந்தாலும் சரி. அன்று சம்பந்தன் இன்று மோடி. அவ்வளவே.

      ————————————————

      பாசுபத சைவம் Vs தமிழ் சைவம்

      கம்யுனிசத்தில் திருப்புவாதிகளை கேள்விப்பட்டிருக்கிறேன். சைவ நெறியில் திருப்புவாதியை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.

      பாசுபத சைவ நெறியும் தமிழ் சைவ நெறியும் ஒன்றல்ல. அவர்களும் நாங்களே என்று சொல்வதற்கு நுட்பம் மட்டும் போதாது; நெஞ்சழுத்தமும் வேண்டும் என்பது என் கருத்து. உதாரணத்திற்கு சைவ நெறி நூல்களாக நீங்கள் வைப்பது ஒரு நெறி. தமிழகத்தில் தஞ்சை பெரியகோயிலின் சைவ அடிப்படையே வேறு. இதை நீங்கள் பரிசீலிக்காமால் ஸ்ரீ கண்டரின் மேல் காண்டாக இருப்பது எதற்காக? தமிழ் சைவம் என்பதற்கு பதில் சொல்லாமல் பாசுபதம் திராவிடர்களுடையது என்று மட்டையடியாக அடிக்கிறீர்கள்.

      சைவர்கள் தன் நெறிக்கு பங்கம் ஏற்படுகிற பொழுது சிந்துசமவெளி தாழிக்குள் தங்கள் முகம் புதைப்பார்கள் என்று தெரியும்.

      சிந்துசமவெளி நாகரிகம் திராவிடர்களுக்குரியது என்று சொல்கிற நேரம், சைவர்களை தோலுரிக்கவும் தயங்கவில்லை கலை. இந்த கட்டுரையை படித்துவிடுங்கள்;
      “சிந்துவெளி நாகரிகம்: ஒரு திராவிட பொதுவுடைமை சமுதாயம்” http://kalaiy.blogspot.com/2014/02/blog-post_7.html

      பசுபதி சிவன் என்பது ஒருபுறமிருக்க, ஈராக் நாட்டு சிவபெருமானை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் கலை அவர்கள்.

      “சிவபெருமான்; ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?”
      kalaiy.blogspot.com/2012/10/blog-post_29.html‎

      தொ.பரமசிவன் சைவர்களை தமிழ் நாட்டில் இருந்து விரட்டினார். கலை சைவர்களை இந்தியாவை விட்டு விரட்டுகிறார்.

      சிந்து சமவெளிக்குள் ஒளிகிற சைவர்கள் இப்பொழுது ஈராக்கில் ஒளிவார்களா?
      ————————————————————————–

      சமணர்கள் கழுவேற்றுதல்
      ———————–

      காலச்சுவடில் உங்கள் சார்பாக பி.ஏ.கிருஷ்ணன் வாதாடியிருக்கிறார். உங்கள் தற்குறிப்பேற்ற அணியை நிறுத்திவிட்டு அவர் என்ன சொல்கிறார் என்பதையும் ஆய்வாளர் வேல்சாமி என்ன சொல்கிறார் என்பதையும் திரி 79இல் உள்ளதைப் முதலில் படியுங்கள்.

      இது பிடிக்கவில்லையென்றால் இந்து வெறியன் அர்ஜூன் சம்பந்தின் விசமம் திணமணியில் 08-05-2012 அன்று கக்கியதை ஒரு முறை நோக்குங்கள்
      “1500 வருடங்களுக்கு முன்பு திருஞான சம்பந்தர் மதுரைக்கு விஜயம் செய்தேபாது மந்திரி குலச்சிறையார் சம்பந்தர் பெருமானை இம்மடத்தில் தங்க வைத்தார். மதுரை மன்னன் கூன்பாண்டியன் சமண மதத்தை ஏற்றுக்கொண்டு வாழ்ந்த காரணத்தால் பாண்டிய நாடு முழுவதும் சமண மத ஆக்கிரமிப்பில் இருந்தது. சிவாலயங்களில் பூஜைகள் நடைபெறவில்லை, சிவநாமத்தைக் கேட்டால் கேட்டுமுட்டு என்கிற தீட்டு, சிவச்சின்னங்களைப் பார்த்தாலே கண்டுமுட்டு என்கிற தீட்டு என மக்கள் திருநீறு பூசக் கூட அஞ்சி வாழ்ந்தகாலம் அது. கூன்பாண்டியன் மனைவி பெயர் மானி. சோழநாட்டு இளவரசியான அவர் சைவ சமயத்தின்பால் பற்றுக் கொண்டு மார்பில் மறைவாக திருநீறு பூசி வாழ்ந்தார். மந்திரி குலச்சிறையாரும் சிவபக்தர். அரசியும் மந்திரியும் ஆலோசனை செய்து திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்தனர். மதவெறி கொண்ட சமணர்கள் சம்பந்தரைக் கொலை செய்யும் உள்நோக்கத்துடன் சம்பந்தர் தங்கியிருந்த இம்மடத்திற்கு தீ வைத்தனர். சம்பந்தர் மடத்தை விட்டு வெளியில் வந்து ஆலவாய் அண்ணைலை தேவாரப்பதிகப் பாடலால் வேண்டினார். நெருப்பு வெப்பு நோயாக மாறிக் கூன்பாண்டியைன வாட்டியது. சமணர்கள் மன்னனின் நோயைக் குணப்படுத்த பல முயற்சி செய்தும் பலனில்லை. ஞானசம்பந்தப் பெருமான் மன்னனின் வெப்பு நோயை திருநீற்றுப் பதிகம் பாடி குணப்படுத்தினார். சமணர்கள் மீண்டும் போட்டிக்கு அழைத்தனர். அனல் வாதம், புனல் வாதம் அைனத்திலும் ஞானசம்பந்தர் வென்று கூன்பாண்டியனின் கூன் முதுகு நோயை நீக்கி நின்றசீர் நெடுமாறனாக மாற்றினார். மதுரைக்கு வந்த அன்றைய சோதைன நீங்கியது.”

      சமணர்கள் மதவெறி பிடித்தவர்கள் என்றும் களப்பிரர்கள் என்றும் அதிகம் எழுதியது சைவசித்தாந்த எழுத்தாளர்களே. உதாரணத்திற்கு அருணாசலம் பிள்ளையின் களப்பிரர் காலம் இருண்ட காலம் தொடர்பான சென்னைப் பல்கலைக்கழகத்தின் வெளியீடு கூட உண்டு.

      பி.ஏ.கிருஷ்ணன், நீங்கள், அர்ஜுன் சம்பந் உங்கள் மூவரில் யார் யோக்கியர்? யார் பிழைப்புவாதி என்பதை முடிவு செய்யுங்கள்.

      ——————————————————————–

  78. அறிவியல் ரீதியில் சிந்திக்கப் புறப்பட்டால்…

    மனிதன் தான் மதத்தையும் கடவுளையும் படைத்தான் என்கிற முடிவிற்கு வருவீர்கள். பற்பல திசைகளில் பலபல கடவுள்கள் பலபல மதங்கள்.காலஓட்டத்தில் இந்த விதவிதமான மதங்களில் இருந்து புதுப்புது மதங்களும் புதுப்புது கடவுள்களும் முளைவிடுகின்றன…

    மனிதனோ! வர்க்கங்களாக பிளவுபட்டு தனிமைப் பட்டு இருக்கிறான்.

    இயற்கையழிவுகளால் இந்த மனிதகுலம் அழிபட்டு போவதாக இருந்தால் யாராலும் எதுவுமே செய்ய முடியாது. ஆனால் மனிதனால் உருவாக்கப் பட்ட கருவிகளால் மனிதன் அழியப் போகிற சகாப்தத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது
    தான் இன்னும் வியப்பூட்டுகிற அறிவியல்.

    யாருக்காக இந்த விவாதங்களை தொடர்ந்து நடத்துகிறீர்கள்? உங்கள் சொந்த அறிவியலை வெளிப்படுத்தவா..?.

  79. தோழர் தென்றல்,

    //தற்போதைய……தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்//

    எனக்கு கிராம பூசாரிகள் திட்டம் பற்றி எதுவும் தெரியாது.சற்று விளக்கினால் நல்லது.எங்கள் சுற்றுபுற கிராமங்களில் முதலமைச்சர் ஒரு கால பூஜை திட்டம்தான் அமுலில் உள்ளது.சுய மரியாதை திருமணத்திற்கு எதற்கு ஓதுவாரை தேடினீர்கள்? அப்படியே நண்பர் விரும்பி இருந்தாலும் பாணபத்திர ஓணான்டி,இன அழித்தொழிப்பு முதலியவைகளை விளக்கி தேவார திருமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமின்மையை விளக்கி இருக்கலாம்.போகட்டும் உங்களுடைய சிதம்பரம் போராட்டங்களை பார்த்து நண்பர் நம்பிவிட்டார்போல் உள்ளது.தமிழில் பாடி திருமணம் நடத்திவைக்க கூடாது என்று கட்டளை இட யாருக்கும் உரிமை கிடையாது.

    //இந்த பதில் சிறப்பாக இருக்கிறது…என்பதை மறுக்க இயலாது///

    முடி திருத்தும் தொழிலுக்கு போனால் வறுமை நீங்கி செல்வந்தர் ஆகிவிடலாமா? மருத்துவ சமூகத்தில் வறுமையில் வாடுபவர்களே இல்லையா?. முடிதிருத்தும் தொழில்தான் உலகில் ஆக எளிய தொழில் என எண்ணுகிறீர்கள் என நினைக்கிறேன்.வறுமையில் வாடும் அனைவரும் சலூனுக்கு வேலைக்கு போனால் சலூனை சுற்றி நாய்கள் நடமாட்டம் அதிகரிக்கும்.எதற்கு என்கிறீர்களா? காது வெட்டுபட்டு விழுந்தால் எடுத்துகொண்டு ஓடத்தான்.

    //மட்டையடியாக இருக்கிறது…..முன் வையுங்கள்//

    இதில் மட்டையடி எதுவுமில்லை.சுயமரியாதை பக்தி எனபது குறித்து எனக்கு புரியவில்லை.சற்று விரிவாக விளக்குங்கள் பிறகு இதுபற்றி பேசலாம்.

    //இன்னும் வரலாற்று ….எப்படி அணுகுகிறீர்கள் என்று கேட்டிருந்தேன்//

    இதற்கு பதில் திரி 41ல் கூறியிருக்கிறேன்

    //சோதியில் கலந்தார் என்பதற்கு…..தரச்சான்றிதல் வழங்கியிருந்தீர்கள்//

    நான் எனது பின்னூட்டங்கள் எதிலும் சோதியில் கலந்தார் என கூறவில்லை.உலகத்தார் கண்களுக்கு புலப்படாமல் மறைந்தார் என்பதே என்நிலை.வள்ளலார் வரலாறு அவர் உடன் இருந்தவர்களால் அவர் மறைந்து பல ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டுள்ளது.ஆனால் அவர்கள் எல்லாம் வள்ளலாரின் அடியார்கள்.எனவே அவர்கள் மிகை படுத்தலாம் என சந்தேகிக்க இடமுண்டு.ஆங்கிலேய அதிகாரியோ அப்படி இல்லை எனவே நடுநிலையாளர் என கூறினேன்.அப்படி இல்லை எனில் நீங்கள் விளக்கலாம்

    தொடரும்

    • திரி 84ன் தொடர்ச்சி

      //ஆக திரி 70ல்……வாதத்திற்குள் செல்வோம்//

      வள்ளலார் சோதில் கலந்தார் என்று நான் எப்பொழுதும் கூறவில்லை.வரலாற்று ஆவணங்களும் அப்படி கூறவில்லை.வள்ளலார் தன்னுடைய அருட்பாவில் மரணமில்லா பெருவாழ்வை பற்றி,தேகசித்தியை பற்றி மீள மீள பேசுகிறார்.எனவே தீ மிதித்தலை இதனோடு ஒப்பிட முடியாது.யாராவது தீ மூட்டி அதில் குதித்து மாண்டு அவரை சோதியில் கலந்துவிட்டார் என்று கூறினால் அப்பொழுதுதான் ஒப்பிடலாம்

  80. தென்றல்,

    //ஒட்டுமொத்த சைவ சித்தாந்தம் குறித்து திரி 74.1ல் தொ.பரமசிவனின் பார்வையை பதிவிட்டிருக்கிறேன்//

    பார்வை குழப்பமாக உள்ளதே.அதை பார்க்கலாம்.
    //முதலில் சைவ மதத்தின் வேர்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது//
    சரி

    //சைவ மதத்தின் தோற்றம் என்று கேட்டால் அது காஸ்மீரம்தான்//

    அது எப்படி? வேர் தமிழ்நாட்டிலும் மரம் காசுமீரகத்திலும் முளைத்ததா? அதை விளக்குங்கள்.

    //ராஜ ராஜசோழனின் குருமார்கள் எல்லாம் காஸ்மீர் சைவப் பண்டிதர்கள்//

    ஒரிருவர் பெயராவது கூறமுடியுமா? அவர் கேட்டு கொண்டதற்காக சைவ திருமுறைகளை தொகுத்த நம்பியாண்டார்நம்பி காசுமீரக பண்டிதரா?

    //பாசுபத சைவத்திற்கும் தமிழ் சைவத்திற்கும் வேறுபாடு என்ன?//

    மிக முக்கியமான இதுகுறித்து நீங்கள் எந்த விளக்கமும் தரவில்லை என்பதை கவனியுங்கள்.தமிழ் சைவ வடிவம்,பாசபத சைவ வடிவம் இரண்டையும் விளக்கி வேறுபடுத்திகாட்டுங்கள்.தமிழ் சைவம் பாசுபத சைவத்திடம் இருந்து எதை எல்லாம் எடுத்துகொண்டது என்பதையும் விளக்குங்கள்.

    //லகுலீசர் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்திருக்கிறார்//

    லகுலீசர் தமிழ்நாட்டு வருகைகுறித்து இலக்கிய சான்றுகளோ,கல்வெட்டு சான்றுகளோ உண்டா?

    மேலும் கண்டர்,திருமூலர்,லகுலீசர் காலம் குறித்து தோராயமாகவேணும் கூறுங்கள்.

    • சிவன் தமிழர்களின் கடவுள். சிவவழிபாடு தமிழ்நாட்டில் உருவாகி அங்கிருந்து தான் காஸ்மீரத்துக்குப் போனது. சிவன் குமரிக்கண்டம் காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ச் சித்தர். அதனால் தான் சிவபெருமான் முதல் தமிழ்ச்சங்கத்தின் தலைவன் என்று நம்ப்படுகிறது. ஆசீவக சித்தர்களில் ஒருவராகிய ஆதிநாதா தான் சிவன் என்கிறார்கள், இந்த காணொளிகளைப் பார்க்கவும்.

  81. ராம் அவர்களுக்கு,
    (84, 84.1, 85ல் எழுப்பிய வினாக்களுக்கான பார்வை);

    \\எனக்கு கிராம பூசாரிகள் திட்டம் பற்றி எதுவும் தெரியாது.சற்று விளக்கினால் நல்லது.எங்கள் சுற்றுபுற கிராமங்களில் முதலமைச்சர் ஒரு கால பூஜை திட்டம்தான் அமுலில் உள்ளது.\\

    ஆர்.எஸ்.எஸ். வெளீயிடாகவே “தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து எழுச்சியின் கதை” என்று வெளியிட்டிருக்கிறார்கள். படியுங்கள்.

    இதை முழுவதும் அம்பலப்படுத்தி புரட்சிகர அமைப்புகள் “தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி?” என்று சிறு வெளியீட்டை கொண்டுவந்திருக்கிறார்கள். இன்றைய சூழலில் இதன் தேவை மிகவும் அவசியம். கீழைக்காற்று வெளியீட்டகத்தில் கிடைக்கிறது. படியுங்கள்.

    ஆலயப் பாதுகாப்புக் கமிட்டி மற்றும் கிராமப் கோவில் பூசாரிகள் பேரவை போன்ற ஆர் எஸ் எஸ் விங்குகளில் ஏதாவது லிங்கு கிடைக்கிறதா என்றும் பார்க்கவும்.

    \\ முடி திருத்தும் தொழிலுக்கு போனால் வறுமை நீங்கி செல்வந்தர் ஆகிவிடலாமா? மருத்துவ சமூகத்தில் வறுமையில் வாடுபவர்களே இல்லையா?. முடிதிருத்தும் தொழில்தான் உலகில் ஆக எளிய தொழில் என எண்ணுகிறீர்கள் என நினைக்கிறேன்.வறுமையில் வாடும் அனைவரும் சலூனுக்கு வேலைக்கு போனால் சலூனை சுற்றி நாய்கள் நடமாட்டம் அதிகரிக்கும்.எதற்கு என்கிறீர்களா? காது வெட்டுபட்டு விழுந்தால் எடுத்துகொண்டு ஓடத்தான்.\\

    உங்களால் சமூக அவலத்தை வர்க்கமாக பார்க்கமுடிகிறெதென்றால் பாரட்டவே செய்வேன். தலித்தியம் போன்ற எல்லைகளை உங்களால் கடக்கமுடியும் என்றால் விவாத்தின் போக்கு இந்தத் திசையில் செல்வதை மகிழ்வுடன் நிறுத்துவேன்!

    \\ சுயமரியாதை பக்தி எனபது குறித்து எனக்கு புரியவில்லை.சற்று விரிவாக விளக்குங்கள் பிறகு இதுபற்றி பேசலாம்.\\

    காஞ்சா அய்லைய்யாவிடம் இருந்து பதில் வைப்போம். “நாட்டர் தெய்வ வழிபாட்டில் மைசம்மா உழைத்தாள் என்பதற்காகத்தான் அவளுக்கு தெய்வ நிலை. சரஸ்வதி படித்தாள் என்பதால்தான் இந்துமதம் அவளை கல்வியின் கடவுள் என்கிறதா?”

    பக்தியில் சுயமரியாதை தெறிக்கிறதா இல்லையா? “நான் ஏன் இந்து அல்ல?” படிப்பகத்தில் கிடைக்கிறது. தரவிறக்கி வாசியுங்கள்.

  82. \\ சுய மரியாதை திருமணத்திற்கு எதற்கு ஓதுவாரை தேடினீர்கள்?\\
    சுய மரியாதை திருமணம் என்பது சீர்திருத்த அளவிலானது. இணை ஏற்புவிழா என்பதுதான் புரட்சிகர அமைப்புகள் சுட்டிக்காட்டுகிற விழுமியங்கள். இணை ஏற்புவிழா என்பதன் அடிப்படையிலான மணங்களை இரண்டு முறைதான் பார்த்திருக்கிறேன். ஆக நண்பருக்கு நடந்தது சுயமரியாதை திருமணமோ அல்லது புரட்சிகரமணமோ அல்ல. எனில் ஓதுவாரை தேடியவர்கள் பார்ப்பன புரோகிதமுறை எங்கள் வாழ்க்கை கலாச்சாரம் அல்ல என்று சொல்கிற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பின்னிலையில் உணர்ந்தது தான் ஓதுவார்கள் ஆர் எஸ் எஸ்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பது. கொசுறாக மற்றொன்று. நண்பரின் திருமணம் பெண் ஓதுவாரால் நடத்தி வைக்கப்பட்டது. ஆனால் அங்கேயும் பார்ப்பன ஏதேச்சதிகாரத்தை பலமுனைகளில் எதிர்த்தே நடத்தவேண்டியிருந்தது.

    \\ அப்படியே நண்பர் விரும்பி இருந்தாலும் பாணபத்திர ஓணான்டி,இன அழித்தொழிப்பு முதலியவைகளை விளக்கி தேவார திருமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமின்மையை விளக்கி இருக்கலாம்.\\

    ஓணாண்டிப் புலவனைப் பற்றி கூறும் பொழுது உங்களாலேயே ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை எனும் பொழுது மதம் என் நம்பிக்கை என்று சொல்கிற பக்தனை கம்யுனிஸ்ட் துன்புறுத்த மாட்டார். பிழைப்புவாதி கருணாநிதி கூட பக்தர்களின் உரிமையில் தலையிட்டதில்லை. இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறார் என்று பார்ப்பனக் கூட்டம் (ஜெ. சு. சாமி, சோ, பா ஜ க) தான் கதறும். ஓட்டு வங்கி அரசியல் செய்யும் கருணாநிதியே அப்படி எனில் “உழைப்பவனுக்கு அதிகாரம்” என்று சொல்கிற நாங்கள் பக்தியையும் பக்தனையும் எப்படிப் பார்ப்போம் என்பதை விளக்குவது மிகவும் எளிது.

    உடமைச் சாதனங்களை உற்பத்திச் சக்திகளை உழைப்பாளிகளுக்குச் சொந்தமாக்குகிற பொழுது மதம் குறித்தும் பக்தி குறித்தும் அதன் தன்மை குறித்தும் உழைப்பாளிகளாலேயே முடிவு செய்ய இயலும் என்பதுதான் எமது உச்சபட்ச நிலைப்பாடு. மற்றபடி சமணப்படுகொலை, ஒணாண்டிப் புலவர்கள் எல்லாம் மதத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களை அம்பலப்படுத்தவே. நியாமாய் சொல்லப் போனால் இதை ஒரு பக்தர் தான் செய்ய வேண்டும். ஆனால் பாருங்கள் இரண்டு வாரமாக விளக்குகிறேன் விளக்குகிறேன் என்று இலவு காத்த கிளியாய் கதைக்க வேண்டியிருக்கிறது!

    \\ போகட்டும் உங்களுடைய சிதம்பரம் போராட்டங்களை பார்த்து நண்பர் நம்பிவிட்டார்போல் உள்ளது\\
    நண்பர் இருக்கட்டும். சிதம்பரம் போராட்டங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதை எழுதுங்கள்.

    \\ தமிழில் பாடி திருமணம் நடத்திவைக்க கூடாது என்று கட்டளை இட யாருக்கும் உரிமை கிடையாது.\\

    பின்னூட்டப் பெட்டியில் சொல்லி பயன் என்ன? போராட்டக் களத்தில் சொல்வீர்களா? உங்களை போன்ற ஆட்கள் அப்படி ஒருநிலை எடுத்தாலே தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் வெறியர்கள் கூடாரம் அமைக்க முடியுமா?

    \\ அது எப்படி? வேர் தமிழ்நாட்டிலும் மரம் காசுமீரகத்திலும் முளைத்ததா? அதை விளக்குங்கள்.
    மிக முக்கியமான இதுகுறித்து நீங்கள் எந்த விளக்கமும் தரவில்லை என்பதை கவனியுங்கள்.தமிழ் சைவ வடிவம்,பாசபத சைவ வடிவம் இரண்டையும் விளக்கி வேறுபடுத்திகாட்டுங்கள்.தமிழ் சைவம் பாசுபத சைவத்திடம் இருந்து எதை எல்லாம் எடுத்துகொண்டது என்பதையும் விளக்குங்கள்.\\
    தொ.பரமசிவனின் பதில்களை நீங்கள் முழுமையாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன். மீண்டும் ஒருமுறை படியுங்கள். தஞ்சை பெரியகோயில், பேரரசுகளின் காலத்தில் சைவம் என்பதற்கு போதுமான கீற்றுகளை பரமசிவன் வழங்கியிருக்கிறார்.
    ————————————————–
    அதற்கு முன்பு மர்மயோகி பாசுபதமும் நம்முடையதுதான் என்கிற வாதத்தை நோக்குங்கள். சிந்து சமவெளி நாகரிகத்தின் யோகமுத்திரையையும் பசுபதி இலச்சினையையும் திராவிடர்களின் பண்பாடு என்று வைத்துவிட்டு ஸ்ரீ கண்டர் சில இடைச் செருகல்களைச் செய்திருக்கலாம் என்கிறார். அதற்கு உங்கள் பார்வை என்ன? என்பதை முன்வையுங்கள். இதற்கு மறுமொழியாக திரி 82.1ல் கட்டுரையாளர் கலை அவர்களின் பார்வையை வைத்திருக்கிறேன் என்பதையும் நோக்குங்கள்.
    —————————————–
    இப்பொழுது கேள்விக்குள் செல்வோம்: மதத்தில் கோட்பாடுகளும் சரி மாற்றுக் கோட்பாடுகளும் சரி; சமூக பொருளாதார மாற்றங்களை முன்வைத்தே நடைபெறுகின்றன என்று இறுதியிடுகிறார் அஸ்கர் அலி இன்ஜினியர். இதைத் தான் எந்த ஒரு மத இயக்கங்களின் பருண்மையை புரிந்துகொள்வதற்கான வரையறையாக எடுத்துக்கொள்கிறேன்.
    சம்பந்தர் உமையவளிடம் ஞானப்பால் அருந்தினார் என்கிறபொழுது உமை என்ற சொல்லே தமிழ் வேர்ச்சொல் அல்ல என்று வாதிடுகிறார் தொ.பரமசிவன். ஹிமா என்பதன் திரிபுதான் உமா என்பது. எனில் தமிழ் சைவம் எதை உள்வாங்கியிருக்க முடியும் என்பது புலப்படும். இரண்டாவதாக தஞ்சை பெரியகோயில் பாசுபதத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது என்பதற்கு அதன் ஐம்பெரும் மூர்த்தங்களை (அகோரம், வாமம், சதாசிவம், ஜாதம், ஈசானம்) ஆதாரமாக வைக்கிற பொழுது எந்த சிவதலமாவது இதிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும். அப்படி ஒன்று இல்லை என்கிற பொழுது தமிழ் சைவம் என்ற பெயரில் மோடிமஸ்தான் வேலைதான் நடைபெற்றிருக்கிறது என்கிற வாதத்திற்கு வந்தாக வேண்டும். நிற்க.
    சிவதலங்கள் தமிழ் சைவ நெறியை விளக்க இயலாத பட்சத்தில் நமக்கு எஞ்சியிருப்பது செய்யுள்கள் மட்டுமே. செய்யுள்கள் என்ற வகையில் திருமூலரின் பாடல்கள் பாசுபத சைவத்தின் அடிப்படையில் என்கிறார் தொ.பரமசிவன். அப்படியானால் தமிழ் சைவத்தின் வேர்கள் எனும் கேள்விக்கு மற்ற சைவ நூல்களை ஆராய்ந்து தமிழ்ச் சைவ நெறிகள் என்ன என்பதை நீங்கள் தான் ஒரு அசைமெண்டாக எடுக்கவேண்டும். அது கடினம் என்றால் தொ.பரமசிவனின் மற்ற ஆய்வு நூல்களையும் பரிசீலனைக்கு எடுக்க வேண்டும்.
    \\ ஒரிருவர் பெயராவது கூறமுடியுமா? அவர் கேட்டு கொண்டதற்காக சைவ திருமுறைகளை தொகுத்த நம்பியாண்டார்நம்பி காசுமீரக பண்டிதரா?\\
    காசுமீர் சைவ பண்டிதர்களின் பெயர்கள் எனக்கும் தெரியாது. அதே சமயம், காஷ்மீர் பார்ப்பனர்கள் குறித்த செய்தியை (தொ.பரமசிவனின் பேட்டியிலிருந்து) உங்கள் பார்வைக்கு வைக்க இயலும்
    “இராஜ இராஜ சோழன் காலத்திலே காஷ்மீரிலிருந்து பார்ப்பனர்கள் அதிகமாக வந்தார்கள். அவர்கள் பெரும்பாலானோர் பிருகச்சரணம் என்று சொல்லக் கூடிய பிரிவாக இருந்தார்கள். பிருகச்சரணம் என்றால் பெரிய அளவில் இடம் பெயர்ந்தவர்கள் என்று அர்த்தம். நான்கு வேதம் படித்தவர்களை ‘சதுர்வேதி’ என்று அழைத்தார்கள். மூன்று வேதம் படித்தவர்கள் ‘திரிவேதி’ என்று அழைக்கப்பட்டார்கள். சோழர்கள் காலத்திலே வேதக் கல்வியை அரசாங்கம் ஊக்குவித்தது. வேதமுறைகளைக் கற்றுத் தருவதற்கு அரசாங்கம் ஏராளமான மானியம் கொடுத்தது. ஏனென்றால் கோவில் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பார்ப்பனியம் தன்னை ஆழமாக நிலைநிறுத்திக் கொண்டது.”
    ராஜராஜ சோழன் நம்பியாண்டார் நம்பியை மட்டும் நியமிக்கவில்லை. தேவாரத் திருப்பதிகங்களைப் பாடுவதற்கு நாற்பத்துஎட்டு பேர்களுக்கும் மேலானவர்களை நியமித்திருக்கிறான். நமது வாதம் தமிழ் சைவநெறி என்கிற பொழுது எதை அடிப்படையாக கொள்வீர்கள் என்பது? தஞ்சை கோயில் பாசுபதம்; ஆனால் பாடுவது தமிழ் சைவம் என்பதை எப்படி புரிந்துகொள்ள முடியும்?
    \\ லகுலீசர் தமிழ்நாட்டு வருகைகுறித்து இலக்கிய சான்றுகளோ,கல்வெட்டு சான்றுகளோ உண்டா? மேலும் கண்டர்,திருமூலர்,லகுலீசர் காலம் குறித்து தோராயமாகவேணும் கூறுங்கள்\\
    கடாரிப்பட்டி மலைக்கோவிலில் லகுலீசர் சிற்பம் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் தொ.பரமசிவன். கண்டர், திருமூலர், லகுலீசரின் காலத்தைப்பற்றி மர்மயோகி கூறினால் சரியாக இருக்கும். ஏனெனில் பாசுபதமும் தமிழர்களுடையது என்கிறார்.
    சிந்துசமவெளியில் இருந்து பதினேறாம் நூற்றாண்டுவரை (கி.பி, 1012 வரை) நூற்றாண்டுவரையிலான செய்திகளில் நான் அத்துணை புலமை பெற்றிருக்கவில்லை.

  83. விவாதம் செய்வது தவறு அல்ல. ஆனால் யாருடன் நாம் விவாதிக்கின்றேம் என்பது முக்கியம். சாதி வெறியை அப்பட்டமாக வெளிபடுத்தும் கீழ் கண்ட கருத்தை கூறிய ஒருவருடன் விவாதித்து என்ன பயன் ?

    //“நீங்கள் எப்படி எப்போதும் கையில் கள்ளு பானையுடன்

    தீண்டாசேரியில் மொக்கை கவிதைகளை பாடிக் கொண்டு

    புலையர்களுடன் ஆடி கொண்டிருப்பீரோ… யாம் அறியோம் பராபரமே…”//

    வினவு சாதி வெறியர் கருத்துகளை மட்டும் தான் தணிக்கை செய்யாமல் வெளியீடுமா ?

    வினவு என்ன சாதி வெறியர்களீன் இணையமா ?

  84. தினமலர் இணையத்தில் கூட சாதி,மத வெறியர்களுக்கு எதிராக நம் கருத்துகளை கூறி போராட முடியும்… ஆனால் வினவில் சாதி,மத வெறியர்களுக்கு எதிரான நம் கருத்துகள் தடை செய்யபடுகின்றது.
    இது தான் வினவின் பின்னூட்ட கொள்கையோ ?

    [If vinavu has guts than publish this]

Leave a Reply to ஆணி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க