privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்நியூட்ரினோ ஆய்வு மையத்தை தடை செய்!

நியூட்ரினோ ஆய்வு மையத்தை தடை செய்!

-

தேவாரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் மக்களின் கடுமையான எதிர்ப்பையும் கண்டு கொள்ளாமல் கடந்த 2009-ம் ஆண்டிற்குப் பிறகு துவங்கப்பட்டது.

இது ஒரு ஆராய்ச்சி படிப்புதான். இந்த நியூட்ரினோ கதிர்களால் எந்தப் பாதிப்பும் இல்லை என்ற கருத்து அறிவியல் அறிஞர்களாலும் , அதிமேதாவிகளாலும் திணிக்கப்பட்டது. அதனை மீறி எதிர்ப்பு தெரிவித்தவர்களை காவல் துறை வழக்குப் போடுவதாக மிரட்டி அடக்கியது.

ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்படுள்ள இந்த திட்டம் எப்படி செயல்படவிருக்கிறது என்று யாருக்குமே தெரியாத புதிராகவே இருக்கிறது. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த இதுவரை இந்த அரசு எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை.

ஆனால் அண்மையில் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் அவர்கள் அணு உலைக் கழிவுகளை கொண்டுவந்து நிரப்புவதற்குத்தான் இந்த சுரங்கத்தை பயன்படுத்தி வருகிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார் . அவருடைய கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் தான் ஆராய்ச்சி மற்றும் அணுக்கழிவுகள் கொட்டுவது என்ற பேரில் இது சார்ந்த துறையினர் உரிமம் கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளனர் என்ற உண்மை நம் உதிரத்தை உறைய வைக்கிறது.

இன்று இந்த பகுதியில் விவசாய நிலங்கள் எல்லாம் முகம் தெரியாத நபர்களால் இரகசியமாக வாங்கி குவிக்கப்படுகிறது. அண்மையில் இந்த பகுதியில் பணியாற்றி வரும் மத்திய அரசு வங்கி ஊழியர்களுக்கு நியூட்ரினோ அலவன்ஸ் என்ற சிறப்பு சலுகை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, மக்கள் எந்த ஆதரவோ, ஆலோசனையோ, ஆறுதலோ கூட சொல்ல ஆளின்றி அனாதைகளாக்கப்பட்டு கிடக்கிறார்கள்.

சாக்குளத்து மெட்டு, இராமக்கல் மெட்டுச் சாலை போன்றவை இந்த பகுதியின் முன்னேற்றத்திற்கு வகை செய்பவை. குறைந்த அளவு பணம் செலவிட்டாலே போதுமானது , ஆனால் மலை வளம் கெட்டுவிடும் , மிருகங்களுக்கு பாதுகாப்பு போய்விடும் என்று கதைகள் பல சொன்ன அரசாங்கம்தான் பல மைல்கள் மலையை குடைகிறது. மக்கள் நலனில் அக்கறையற்றவர்கள் என்ற உண்மையை நிருபிக்கிறது.

எல்லாவற்றிக்கும் மேலாக இந்த திட்டத்தில் இந்திய அணுசக்தி கழகம் அங்கம் வகிக்கிறது . அரை குறை விவசாயத்தையும் அழித்து இந்த பகுதியிலிருந்து யாரோ சில முதலாளிகளுக்கு மட்டும் பயன் தரக்கூடிய நியூட்ரினோ திட்டத்தின் உண்மை நிலவரத்தை அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கு பயனளிக்காத திட்டம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், விவசாயிகளையும் , விவசாயத்தையும் காக்கும் படியான ஆக்கப்பூர்வமான அறிவியல் ஆராய்ச்சி மையத்தை உருவாக்க வேண்டும்.

இதற்காக உழைப்பாளிகளின் உரிமைக்காக இரத்தம் சிந்தி போராடி வெற்றி பெற்ற, சரித்திரப்புகழ் பெற்ற தொழிலாளர் தினமான மே 1ஆம் நாளில் சபதமேற்போம் என்று அறைகூவல் விடப்பட்டது.

வாகனப்பேரணி

மே நாள் காலை 10.30 மணிக்கு மே நாள் வாகனப் பேரணி தேனிமாவட்டம் ராசிங்காபுரம் கிராமத்தில் இருந்து தொடங்கியது. பேரணியில் தேனி , மதுரை மாவட்டத்தை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டார்கள். இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அணிவகுக்க பேரணியை தேவாரம் பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணி செயற்குழு உறுப்பினர் தோழர் கே. பழனிச்சாமி அவர்கள் தொடங்கி வைத்தார். பேரணி திம்மி நாயக்கன் பட்டி, பொட்டிப்புரம், ராமகிருஷ்ணாபுரம் , புதூர் , டி. புதுப்பட்டி, தம்மிநாயக்கன் பட்டி, மரவபட்டி, எரணம் பட்டி, லட்சுமிநாயக்கன்பட்டி, கிருஷ்ணம் பட்டி, ரோட்டுப்பட்டி, வழியாக தேவாரம் வந்தடைந்த்து. பேரணி சென்ற இடங்களில் மக்கள் மத்தியில் நியூட்ரினோ திட்டம் பற்றி மக்கள் ம்த்தியில் தோழர்கள் விளக்கஉரையாற்றினார்கள். கடுமையான வெயிலிலும் தோழர்கள் உற்சாகமாக பயணமானார்கள். மக்கள் மத்தியில் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டது.

மாலை தேவாரம் நகரத்தின் பல்வேறு வீதிகள் வழியாக பேரணி நடத்தப்பட்டது . தேவாரம் பேருந்து நிலையத்தில் உசிலை வட்டார விவிமு செயலாளர் தோழர் குருசாமி அவர்கள் செங்கொடியை ஏற்றி வைத்தார். அதன் பிறகு பேரணி ஆர்பாட்டத் திடலை வந்தடைந்த்து.

ஆர்ப்பாட்டம்

மாலை 5,30 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டது, ஆர்ப்பாட்டத்திற்கு தேவாரம் பகுதி விவிமு செயற்குழு உறுப்பினர் தோழர் கே. முருகன் தலைமை தாங்கினார். தேவாரம் ஏரியாச் செயலாளர் தோழர் பாக்கியராஜ், உசிலைவட்டாரச் செயலாளர் தோழர். குருசாமி, தேனி மாவட்டச் செயலாளர் தோழர் . பா.மோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். நிறைவாக மதுரை மாவட்ட மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் மாவட்டச் செயலாளர் தோழர்.லயோனல் அந்தோணிராஜ்  கண்டனஉரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் குறித்த நாடகம் நடத்தப்பட்டது.

நான்கு ஆண்டுகளாக எந்த சலனமும் இல்லாமல் மக்களின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து நடந்துவரும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு தொடக்கமாக ஆர்ப்பாட்டம் இருந்த்து. தோழர்கள் பிரச்சாரம் செய்த கிராமங்களில் உள்ள மக்கள் தோழர்களின் கருத்துக்களுக்கு வரவேற்பு கொடுத்தார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
தேனி – மதுரை மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி