ரு வார விடுமுறையோட காலை நேரத்துல பெசன்ட் நகர் கடற்கரைக்கி போயிருந்தேன். எங்குழந்த கூட கொஞ்ச நேரம் விளையாடிட்டு மீன் பிடிக்கப் போகும் தொழிலாளிகிட்ட கொஞ்ச நேரம் பேசிட்ருந்தேன். அப்படியே ஒரு கூறு நெத்திலியும் வாங்கிகிட்டு  அதை சுத்தம் செய்ய குடுக்க மீனவ தொழிலாளிங்க குடியிருப்பு பக்கம் வந்தேன். அங்கத்தான் சுமன (பெண்) பாத்தேன்.

சுமனோட வீட்டு வாசல்லதான் எதிர் வீடடு மீன் காரம்மா சுத்தம் செய்ய ஆரம்பிச்சாங்க.

“ரெம்பவும் பொடி மீனு ஆய நேரமெடுக்கும் பிள்ளைய வச்சுகினு நின்னுகினே இருக்காமே நெழலுக்கா கொஞ்சம் ஒதுங்கு”ன்னு சொன்னாங்க மீன்காரம்மா.

எதித்தாப்புல இருக்கும் குடிசக்குள்ள போகலான்னு குனிஞ்சு பாத்தப்பதான் ஒரு குழந்தைய ஆசை தீர கொஞ்சிட்டிருந்தா அந்த பொண்ணு. அதப் பாத்ததுமே எம்மனசுக்கு பரவசமா இருந்துச்சு. நானும் கொஞ்ச நேரம் என்ன மறந்து பாத்துட்டே நின்னே. சுமன் கொஞ்சுன ஹிந்தி மொழி புரியலதான் அனா அதை உணர முடிஞ்சது.

எத்தன கொழந்த பெத்தாலும் இதுபோல சமயங்கல்ல மனசு மயங்காதவங்க கெடையாது. அப்ப எனக்கு ஒரு தாயா மனசுல வாஞ்சையும், குற்ற உணர்வும் ஒரு சேர வந்துச்சு.

சரி விசயத்துக்கு வருவோம்.

“உள்ள வா அக்கா”னு சொல்லிட்டு அவசர அவசரமா முக்காலிய எடுத்து தொடச்சு போட்டா சுமன்.

நாலு பேரு தாராளமா படுக்க முடியாத ஒண்டு குடுத்தன ஓலை குடிசை அது. திரும்பத் திரும்ப எண்ணுனாலும் பதினஞ்சு பாத்திரத்துக்கு மேல அங்க இல்ல. வீட்டோட மூலையில ரெண்டு பெட்டி. வீட்ட பாதி அடச்சாப்போல கீழையும் மேலையும் பேப்பரால செஞ்ச உருளை. இதுதான் சுமனோட வீடு.

இது என்னம்மா உருள உருளையா? இத வச்சு என்ன செய்வீங்க?

இது டோலக் செய்றது அக்கா. எங்க வீட்டுக்காரு இந்த தொழில்தான் செய்து.

அதுக்கு பிறகுதான் கூரை மேல டோலக் செஞ்சு தொங்க விட்டுருந்தத பாத்தேன்.

டோலக் செய்றதுக்கான உருளைங்க அழுத்தமான பேப்பர் அட்டையா இருந்துச்சு. வெறும் அட்டையா இருக்குற அந்த குழாயில பிளாஸ்டிக் அட்டையோ, தோலோ பொருத்தி கயிரால இருக்க கட்டி வர்ணம் பூசி டோலக் மேளங்கள உருவாக்கி இவங்களே அதை விக்கவும் செய்றாங்க.

மீனவ குப்பத்துல டோலக்கா! வடிவேலு சொல்றாப்போல என்னடா நடக்குது இங்க. இசையும் கவுச்சியும் ஒரே எடத்துல சங்கமமான்னு கேட்டா சரிகம பாடுற கர்நாடக சங்கீத வித்வான்கள் ஒத்துக்க மாட்டாங்களே. ஏதோ ஒரு குழப்பம் எனக்குள்ள.

யாரம்மா நீங்க? இங்க எப்படி வந்தீங்க? என்னோட ஆச்சர்யம் கேள்வியா வந்துருச்சு.

எங்களுக்கு சொந்த ஊரு உத்தரபிரதேசம் லக்னோ மாவட்டம். காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டு சென்னைக்கி வந்து அஞ்சு வருசமாச்சக்கா. இந்தத் தொழில்தான் எங்க வீட்டுக்காருக்கு தெரியும். இந்த தொழில் செஞ்சு லக்னோல வருமானம் கிடையாது. சென்னையில பானிபூரி வியாபாரம் செய்யும் எங்க ஆளுங்க சொல்லிதான் இங்க வந்தோம்.

இங்க எப்படி குடிவந்திங்க.?

எங்க பக்கத்து ஆளுங்க இங்க இருக்காங்க. மீனவங்களும் அவங்கள்ள ஒருத்தரா எங்கள பாத்துப்பாங்க. எந்த பயமும் இருக்காது.

நாங்க பேசும் போது பக்கத்துலேயே ரெண்டு குழந்தைங்க சப்பாத்தி சாப்டாங்க. தெருவுலேருந்து ஓடி வந்த மத்த ரெண்டு குழந்தைங்களும் அத பிச்சு திண்ணாங்க. பிள்ளைங்களுக்குள்ள சண்ட வந்துருச்சு.

ஏய் பையா பையா சண்ட போடாதிங்க. இந்தா வீட்டுல போயி சாப்புடுன்னு சொல்லி நாலஞ்சு சப்பாத்திய குடுத்து அனுச்சாங்க. குடுத்தது போக மீதியே அப்பளக் கட்டு போல குண்டா நெறைய இருந்துச்சு.

பாத்தரக் குண்டான மூடப்போன சுமன், “அக்கா சாப்புடக்கா”, என்றாள். “எல்லாருக்கும் சேத்தே செஞ்சிங்களா? என்றேன்.

அப்புடி இல்லக்கா. காலையிலேயே செஞ்சு வச்சுருவேன் குழந்தைங்க பசின்னு கேக்கும் போதெல்லாம் எடுத்து குடுப்பேன். இத்தோட நைட்டு சமைப்பேன்.

எனக்குங்கூட ஊருல இருக்கும் போது காலையிலேயே பானை நிறைய சோறு வடிச்ச பழைய ஞாபகம் வந்துருச்சு.

மீனவ குப்பத்துல டோலக்கா! வடிவேலு சொல்றாப்போல என்னடா நடக்குது இங்க. இசையும் கவுச்சியும் ஒரே எடத்துல சங்கமமா ஒத்துக்க மாட்டானுகளே.

சுமனுக்கு எத்தன குழந்தைங்க?

மூனு இருக்கே அக்கா.

22 ரெண்டு வயசுல மூனு குழந்தைங்களா?

“போங்கக்கா” என வெக்கப்பட்டு சிரிச்சா.

நீங்களும் டோலக்கு வேலை செய்வீங்களா?

“மூனு பிள்ளையக்கா.” எப்படி சாத்தியம் என்பது போல் சிரித்தவள், இவங்களுக்கு சப்பாத்தி சுடவும் தண்ணி எடுக்கவும் துணி துவைக்கவுமே நேரம் சரியாருக்கு. டாய்லெட் கூட போக முடியலக்கா.

டாய்லட் போக மூனு ரூவா (கட்டண கழிப்பிடம்) தரனுமக்கா. உள்ள போயி வரதுக்குள்ள பசங்க அடிச்சுகிட்டு ஒருத்தர் முகத்துல ஒருத்தர் மண்ண வாரி போட்டுக்குவாங்க. பாதியிலேயே ஓடியாரனும். திரும்பவும் மூன ரூவா குடுத்து போகனும்.

மூனடி எடம். ரெண்டு அஷ்பெட்டாஷ் சீட்டும் ஓல கீத்தும் பக்கவாட்டு சுவர். மேல ப்ளக்ஸ் பேனர் கூறை. இதுதான் சுமன் சொன்ன பாத்ரூம்.

நாம யார்டயாவது பேசிக்கிட்டு இருக்கும் போதுதான் தன் காரியத்த குழந்தைங்க  சமத்தா சாதிச்சுப்பாங்க. சுமனோட 4 வயசு மகனும் அதே போல வீட்டு கூறையில தொங்குன மேரி பிஸ்கெட்ட எடுத்து சாப்புடவான்னு கேட்டான்.

பதறிட்டாங்க சுமன். “பாருங்கக்கா கொழந்தைக்கி உள்ளத எடுக்குது! அது பாப்பாவுக்கு வேணும் இங்க தா” என்றதும் ஒரு வயசே ஆகாத தன் தங்கச்சிக்கி விட்டு குடுத்துட்டு வெளிய ஓடிட்டான் அந்த குழந்தை.

பத்து ரூபா பிஸ்கெட்டே பெரும் பொருளாதார பிரச்சனையா இருக்குற குடும்பத்துல அதுவும் குழந்ததானேன்னு என்னாலயும் நினைக்க முடியல.

அந்த பையன பாக்கவே பரிதாபமா இருந்துச்சு. பைக்குள்ள வச்சுருந்த சிப்சு பாக்கெட்ட குடுப்போன்னு எடுக்கும் போது சாப்பாத்திய பங்கு போட்ட அத்தன குழந்தைங்களும் ஓடி வந்துட்டாங்க.

“ஐயோ அக்கா அவங்க அப்படிதான் செய்வாங்க. நீங்க பாப்பாவுக்கு குடுக்காமெ இப்புடி பண்றிங்க. பசியோட இருக்க போகுது” என்றவர் ரெண்டு டம்ளர்ல டீயை ஊத்தி “சாப்பிடக்கா” என்றார்.

இந்த வீட்டுக்கு வாடகை எவ்வளவு சுமன்?

மூணாயிரம். தனி பாத்ரூம் இருக்குக்கா. என்றார்.

மூணடி எடம். ரெண்டு அஸ்பெஸ்ட்டாஸ் சீட்டும் ஓல கீத்தும் பக்கவாட்டு சுவர். மேல ப்ளக்ஸ் பேனர் கூரை. இதுதான் சுமன் சொன்ன பாத்ரூம்.

செய்யிற டோலக்க கடைகளுக்கு குடுப்பீங்களா?

இல்லையக்கா. தி.நகர் ரோட்டோரம். பெசன்ட் நகர் பீச்சோரம் வியாபாரம் செய்வோம்.

வண்டி வச்சு எடுத்துட்டு போவீங்களா?

பையில வச்சு எடுத்துட்டு போவாரு. கழுத்துல மாட்டிக்கிட்டு விப்பாரு. பத்துது எடுத்துட்டு போனா நாலு, மூனு விக்கும்.

ஒரு டோலக்கு என்ன ரேட்டுக்கு குடுப்பீங்க.?

சின்னது பெரிசுக்கு தகுந்த விலையக்கா. 300 இருந்து 600 வரைக்கும் குடுப்பாரு. பைசாவே இல்லாதப்போ வந்த விலைக்கி குடுத்துருவாரு.

தொல்லன்னு ஒன்னுமில்ல. ஆனா மூட்ட மூட்டயா கோதும வாங்கி குடுக்க சொல்றா. என சிரித்தார் மீன்காரம்மா.

வர்ர வருமானத்துல ஏதாவது மிச்சம் பன்னுவீங்களா?

சோறு திங்கற அளவு வருமானம் வருமான்னு கேளு. தப்பு தப்பு. சப்பாத்தி திங்கற அளவு வருமானம் வருமான்னு கேளு. என்றார் வாசல்ல இருந்த மீன்காரம்மா.

வெளியூர்லேருந்து பொழப்பு தேடி நம்மூருக்கு வந்துருக்காங்களே அதனால கேட்டேன். என்றேன்.

அவங்க ஊருல உயிர் வாழ முடியாமெ இங்க வந்தாங்க. இங்க உயிர் வாழ்ற அளவு வருமானம் வருது அவ்வளவுதான். அதுக்கு மேல என்னா கெடச்சுறப் போகுது சொல்லு. ராத்திரியான இவங்கள வந்து பாரு. இந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணலுல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு. நம்மளப்போல உள்ளவங்களுக்கு அது மட்டும் கடைசி வரைக்கும் இருந்தா போதும்மா.

பழக்க வழக்கத்துல உங்களுக்கும் அவங்களுக்கும் ஒத்து போகுமாம்மா?

கொஞ்சம் சுத்தமா இருக்க மாட்டா. தெருவுல இப்படி குப்ப சேக்காதே பெருக்கு அப்புடி ஏதாவது சொன்னா மாட்டேன்னு சொல்லாமெ செய்வா.

அவங்களால எந்த தொல்லையும் இல்லன்னு சொல்றீங்க. சரிதானம்மா.

தொல்லன்னு ஒன்னுமில்ல. ஆனா மூட்ட மூட்டயா கோதும வாங்கி குடுக்க சொல்றா. என சிரித்தார் மீன்காரம்மா.

மீன்காரம்மா தொடந்து பேசரதுக்குள்ள மீனு சுத்தம் செய்ய வேற ஒரு வாடிக்கையாளர் வரவும் கவனம் அவங்க பக்கம் திரும்பிருச்சு.

உ.பி-க்கு அம்மா அப்பாவ பாக்க சுமன் எப்ப போறீங்க.

எப்ப போவோன்னு சொல்ல முடியலையக்கா. போகனுன்னு ஆசை இருக்கு. போகனும் பாப்போம்…….

ஊருக்கு போயி எத்தன வருசமாச்சு.

மூனு வருசமாகப் போகுது.

போன வருசம் தேர்தல் வந்துச்சே ஓட்டு போட ஊருக்கு போகலையா?

ஊருலேயே இருந்தா ஓட்டு போடலாம். இங்கேருந்து உ.பி. போயி ஓட்டு போட்றது அப்புடி ஒன்னும் ஈசி கிடையாது. போக வர செலவுக்கு காசு வேணுமேக்கா என்ன செய்றது.

நீங்க சொல்றத யோகி ஆதித்யநாத் கேட்டா நீங்க நாட்டுக்கு துரோகம் செய்றீங்க சுமன்னு சொல்லிருவாரு.

யோகி ஆதித்யநாத்னா யாரக்கா என்றார்.

முதலமைச்சர் என்றேன். முதலமைசர்னா? என்றார். ஜெயலலிதா தெரியுமா என்றேன். தெரியும் என்றார். அது போல யோகி ஆதித்யநாத் என்றேன்.

ஓ! அப்படியா எனக்கு தெரியாது.

  • சரசம்மா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க