தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட படுகொலை. ஸ்டெர்லைட் முதலாளிக்காக அதன் அடியாளாக தமிழக அரசு முன்னின்று நடத்தியிருக்கும் பச்சைப் படுகொலை. இது அரச பயங்கரவாதம் என்பதை அம்பலப்படுத்தியும், இந்த அரச பயங்கரவாதத்துக்கு எதிராகத் தமிழகத்தின் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்று திரள வேண்டுமன்ற கோரிக்கைகளுடனும் மக்கள் அதிகாரம் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. தாங்கள் செயல்படும் பகுதிகளில் மாற்று அரசியல் கட்சியினரையும், இயக்கங்களையும், ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து அவர்களது பங்கேற்போடு இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்நிகழ்வுகளை, சுருக்கமாக இங்கே தொகுத்தளிக்கிறோம்.
திருச்சி
“பன்னாட்டு ஸ்டெர்லைட்டுக்காக சொந்த நாட்டு மக்கள் மீதே யுத்தம் !” திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்.
சென்னை
கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்தின் வாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசு 48 பேரை சிறையிலடைத்தது.
விருத்தாசலம்



கம்பம் சிக்னலில் மக்கள் அதிகாரம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்னிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்ளிட்ட தோழர்களை போலீசு கைது செய்தது.



சீர்காழி ஸ்டேட் பாங்க் அருகில் கண்டன ஆர்ப்பாட்டமும் 5 நிமிடம் உயிர்நீத்த போராளிகளுக்கு மவுன அஞ்சலியும் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் திராவிட கழகம், மக்கள் CPML, CPMLவிடுதலை, SDPI, CPM, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளை – கட்சிகளைச் சார்ந்த முன்னணியாளர்கள் பங்கேற்று கண்டனங்களை தெரிவித்தனர்.


புதுச்சேரி
வில்லியனூர் பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
கோவை
கோவையில் ஆதித்தமிழர் கட்சி, ம.தி.மு.க., த.பெ.தி.க. தி.வி.க., வி.சி.க., இளந்தமிழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளது பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
பசுமை வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பினர் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.



கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில் முற்போக்கு மக்கள் மேடை சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. மக்கள் அதிகாரம், சி.பி.எம்., வி. சி. க, வி. சி.க, நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்டு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.





