ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, 13 பேரை சுட்டுக்கொன்றது மோடி – எடப்பாடி கும்பல். இது அரசு பயங்கரவாதம். கார்ப்பரேட் நலனுக்காக சொந்த நாட்டு மக்கள் மீதே நடத்தப்பட்ட இந்த கொலைவெறிச்செயல், சென்னை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் கோபக்கனலோடு ஒரு காவிக் குரலின் திமிரையும் கேளுங்கள்!

ஸ்டாலின் கள்ளக்குறிச்சி, வோடோஃபோன் இணையதள கம்பி தடம் பதிப்பவர்.

தூத்துக்குடி ஜனங்க என்ன கேட்டாங்க? நச்சு காத்து, மூச்சுகூட விடமுடியல. தாகத்துக்கு தண்ணிய வாங்கி வைக்க முடியலனு கேட்டது தப்பா?

100 நாள் அமைதியா போராடுனாங்க. பேரணியில வன்முறை செஞ்சிட்டாங்கன்னு யாரை ஏமாத்துறானுங்க. இப்படித்தான் மெரினாவுலயும் சொன்னானுங்க. போராட ஜனங்க வரக்கூடாதுன்னு போலீசு மிரட்டினாங்க, அடிச்சானுங்க, இப்ப சுடுறானுங்க. போராடுறவங்கள அவங்க இடத்திலிருந்து வெளியே வரவழச்சு சாவடிக்கிறானுங்க.

அமைதியா உட்கார்ந்து போராடினாலும் எவனும் வந்து என்னன்னு பாக்க மாட்டானுங்க. அவங்கள தேடி போனாலும் பாக்கவுடாம சாவடிப்பானுங்களாம்.

பிரசன்னா,  டாடா நிறுவனத்தின் சைட் இன்ஜினியர்.

இது இன்னொரு ஜாலியன் வாலாபாக் படுகொலை. இது ஜனநாயக நாடு. நாட்டை ஆள சி.எம்., பி.எம். வர்றதுக்கு நம்ம ஓட்டு தேவை. ஆனா, நச்சு கம்பெனியை தூக்குனு சொல்ல உரிமையில்ல.

வெளியே வரக்கூடாது, 144 தடை உத்தரவு, கரண்ட் கட்டுன்னு இப்ப சொந்த இடத்திலேயே நம்மள அகதிகளாக்கிட்டானுங்க. கலவரத்தத் தடுக்குறதா நெனச்சு இப்ப இணையதளத்தையும் முடக்கிட்டானுங்க. இனிமேதான் உலகம் முழுவதும் பரவப் போகுது பாருங்க.

எஸ்.பி.யை மாத்தி விசாரணைக் கமிசன் வைக்கிறதா நாடகமாடுறாங்க. ஜல்லிக்கட்டு போராட்டத்தில போலீசு கொளுத்துனது ஊருக்கே தெரியும். எந்த கமிசன் தண்டிச்சது?

தினேஷ், புதுக்கோட்டை.

தூத்துக்குடி டவுனுல ஒரு வருஷம் ரோடு தோண்டுற வேல செஞ்சேன். பாத்ரூம் போனா குண்டி கழுவக்கூட தண்ணி கிடையாது. தெருவுல சுத்துற பத்துல 6 நாய்களுக்கு உடம்புல முடி இருக்காது. அந்தளவுக்கு மண்ணெல்லாம் விசம். மனுசங்க எப்படி வாழ முடியும்?

ஓட்டுப் போடுற உரிமையுள்ள மக்களுக்கு ஒரு கம்பெனியை வேண்டாமுன்னு சொல்றதுக்குக் கூட உரிமை இல்லையா?

கோபால், கால் டாக்சி டிரைவர்.

தப்பு எங்க மேலதான். அவங்களுக்கு ஓட்டுப் போட்டது நாங்கதானே! 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பி.ஜே.பி. காரனுங்க? அப்படியே குதிச்சிருப்பானுங்களே… தமிழனுங்களோட உயிர் அவ்வளவு சாதாரணமா போயிருச்சு.

செந்தில், கால் டாக்சி டிரைவர்.

100 நாள் அமைதியா போராடுனவங்கள போலீசு அசிங்கம் பன்றானுங்க. மீடியாகாரனுங்களும் அதுக்கு துணை போரானுங்க. நரகத்துல தள்ளிவிட்ட மாதிரி ஜனங்களோட வாழ்க்கை. 17 வயசு குழந்தைய வாயிலேயே சுட்டு இருக்கானுங்க. அவங்களா வன்முறையில இறங்குனாங்க? இதுக்கெல்லாம் பதில் சொல்லாத அவங்கள நாம் சும்மா விடக்கூடாது.

சந்திரசேகரன், தொலைத்தொடர்புத் துறை பொறியாளர் (ஓய்வு).

நானே இப்ப ஒரு கார்ப்பரேட் கம்பெனியிலதான் பார்ட் டைமா ஜாப் பன்றேன். எல்லா போராட்டத்திலும் ஆதாயம் பாக்கிறதுக்குன்னு சில பேர் காத்திருக்காங்க. அவங்கதான் இத வன்முறையா மாத்திட்டாங்க. அவங்க ஆதிக்கம்தான் இப்ப நாட்டுல நடக்குது. தினமலர் பேப்பர படிச்சுப் பாருங்க, உங்களுக்கே உண்மை தெரியும்.

முத்துக்குமார், பிளம்பர், காரைக்குடி.

மக்கள் மூனு மாதம் போராடும்போது எந்த அசம்பாவிதமும் நடக்கல. போலீசு வந்தா மட்டும் எப்படி அது வன்முறையா மாறுது? பட்டப் பகல்ல வேன்மேலே ஏறி டி-சர்ட் போட்டு போலீசு சுடுறான். இதைவிட பெரிய வன்முறை என்ன இருக்க முடியும்? பேரணி போனவங்க பொணமா ஆனதுக்கு யார் காரணம்? எந்த மீடியாவாவது இத சொல்றானா? எல்லோரும் கூட்டுக் கயவாளிங்க. ஸ்டெர்லைட்காரன் பணத்துல வாழுறானுங்க. உழைச்சு வாழுற ஜனங்க சாகுறாங்க.

சின்னதம்பி, லோடு லாரி உரிமையாளர், மடுவாங்கரை.

என்னால தாங்க முடியல. நெஞ்சு கொதிக்குது. மந்திரி, நீதிபதி இவனுங்கள  நடு ராத்திரியில, விபத்து நடந்த வண்டிய கிரேன்ல தூக்குற மாதிரி மொத்தமா ஒரு வண்டியில ஏத்தி புழல் ஜெயில்ல போடணும். வேற பேச்சும் இல்ல, வழியுமில்ல.

200, 300 ரூபா சொம்பு திருடுனா உடனே ஜெயிலு. அவன் ஒரு தலைமுறைக்கே அடிக்கிறான், எல்லாம் வேடிக்கை பாக்குறானுங்க. நோக்கியாவ ஏன் மூடுனான்னு எவனும் கேக்கல, ஸ்டெர்லைட்ட மூடச்சொன்னா சுடுறானுங்க. நம்மள காப்பாத்த ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்தா, இவனுக பணக்காரன் பின்னாடி நக்க போறானுங்க.

சிவா, லாரி உரிமையாளர்.

எங்கே போராட்டம்னாலும் அ.தி.மு.க.-க்காரனுங்க போலீச வுட்டு ரத்தத்தில மூழ்கடிக்கிறானுங்க. கடைசில போராட்டத்தில் வன்முறையாளர்கள் ஊடுருவிட்டாங்க, மாவோயிஸ்ட்டுங்க பூந்துட்டாங்க, நக்சலைட்டு வந்துட்டாங்கன்னு மீடியாவுல பேட்டி கொடுக்கிறானுங்க. யார ஏமாத்துரானுங்க.

முருகன், மெக்கானிக்.

மெரினா போராட்டத்தில கடைசி வரைக்கும் இருந்து அடிவாங்குனவன் நான். போலீசுகாரனுங்க இன்னா செய்வாங்கன்னு எனக்கு இஞ்ச் பை இஞ்சா தெரியும். முதல் திருடனுங்க அவங்கதான். நகை திருடுபோச்சுன்னு ஸ்டேசன் போனா, எவ்ளோ போச்சுன்னுதான் கேப்பாய்ங்க, எப்படிப் போச்சுன்னு கேட்க மாட்டாய்ங்க… பங்குதானே அவனுங்களுக்கு தேவை.

மெரினா போராட்டத்தப்ப பட்டப்பகல்ல ஆட்டோவ போலீசுதான் கொளுத்தினாங்க. அவனுங்கள இந்த நீதிபதிங்க என்னா புடுங்கிட்டாங்க.

இப்ப துப்பாக்கி சூட்டுல செத்தவங்க குடும்பம் மட்டுமில்ல, நாங்களும் வெறிபுடுச்சி அலையுறோம், அந்தச் சாவ பாத்து.

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்.