தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பதிமூன்று பேரை படுகொலை செய்தது அ.தி.மு.க. எடப்பாடி போலீசு. அதன் ரத்தக்கறை காயும் முன்னே ஆர்.எஸ்.எஸ். சங்கி ரஜினி மறைகழண்ட மங்கி போல அப்போராட்டத்தை கொச்சைப் படுத்தினார். சமூக விரோதிகள் – விஷக்கிருமிகள்தான் இதற்கு காரணம் என்றார். போராட்டத்தின் போது  போலீசு மீது கல்  எறிந்தவர்களின்  படங்களை பத்திரிகைகளில் வெளியிட வேண்டும். எல்லாவற்றுக்கும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகத்தான் மாறும் என்று சாபம் கொடுத்தார். ரஜினியின் சாபம் பலிக்குமா என்று சென்னை செங்கல்பட்டு மின்சார ரயிலில் மக்களிடம் கேட்டோம்! மக்கள் நெருப்பாய் சீறினர்.

சங்கர், திண்டிவனம் கோவிந்தசாமி  அரசு கலைக்கல்லூரி.
மக்கள் அவனை ஏத்தி விட்டது தான் எல்லாரையும் கேவலமா பேசுறான். மக்களுக்கு இப்பதான் அவன் சுயரூபம் தெரியுது. அது நல்லது தான். மீடியாக்காரனுங்க அவனை பெருசு பண்ணி விட்டுட்டானுங்க. என்ன பேசுறோம்னு தெரிஞ்சி தான் பேசுறான். அரசியலுக்கு வரதா சீன் காட்டி சினிமாவை ஓட்டுறான். எவ்ளோ திமிரு.

கிருஷ்ணமூர்த்தி.
நம்மகிட்ட பிராப்ளம் இருக்கு சார். நம்ம பேமிலிக்காக நாம ஓடிக்கினு இருக்கோம். இதனால் ரிட்டையர்டு ஆனவன் எல்லாம் தலைவன் ஆகிடலாம்னு பாக்கிறானுங்க. நாம திருந்தனும்.

பாலாஜி, ஐ.டி. ஊழியர்.
அவருடைய கருத்து, பி.ஜே.பி. கருத்து எல்லாம் ஒன்னு. யாரு சமூக விரோதின்னு பேர் சொல்லுறானுங்களா? வேல்முருகனா, தி.மு.க.வா? தமிழக மக்களா? யார் சொல்லு? சினிமாவா இது பன்ச் டயலாக் பேசுறதுக்கு. அந்தாளு போலீசு எழுதி கொடுக்கிறதை வரி விடாம படிக்கிறான்.

சுரேஷ்.
நடிச்சி சம்பாரிச்சி முடிச்சிட்டானுங்க. இப்போ மக்கள் மீது அக்கறை இருக்க மாதிரி நடிக்க பாக்குறானுங்க. மக்கள் மீது உண்மையிலே அக்கறை இருந்தா இந்த மாதிரி பேசுவானுங்களா? இது சென்ட்ரல் கவர்ன்மெண்டும், போலீசும் எழுதி கொடுத்தது. அதை அப்படியே சினிமா மாதிரி நெனச்சிக்கினு பேசிட்டார்.

பிரேம்நாத்,  இன்ஜினியர், தனியார் துறை.
டீட்டெயிலா  சொல்லனும்னா அந்த ஆளுக்கு ஒன்னும் தெரியாது. சினிமா சூட்டிங், ஏ.சி. ரூம் இது தவிர வேற எதுவும் தெரியாது. துப்பாக்கி வச்சிருந்தா போலீசு ஜனங்களை சுடலாம்னு இருக்குதா? அதைக் கேட்டானா அந்த ஆளு. மக்களை கெடுத்து சினிமா பைத்தியங்களா மாறினா சரியாமாம். ஆனால் போராடினா தப்பாம். அந்த அளவுக்கு மக்களை மடையனா நினைக்கிறார். எல்லாத்தையும் காலா  பட புரமோஷன் போல பாக்கிறார் போல.

ராஜி, தகவல் தொழில்நுட்பம்.  (புகைப்படம் தவிர்த்தார்)
எந்த ஆதாரமும் கொடுக்காம எப்படி சமூக விரோதிகள் காரணம்னு சொல்றாரு தெரியல. எந்த விசாரணையும் இல்ல. எந்த பொறுப்பும் இல்ல. அவரு பேசறதை ஒரு பேச்சாக்கூட எடுக்க முடியாது.

லோகு, கொத்தனார்.
தமிழ்நாட்டுல வந்து ஆட்டுவாராமாம் அவரு. எந்த ஊரு அவரு. அவரு நூறு ரூபா டிக்கெட்டை ஆயிரம் ரூபாக்கு விப்பாறு சம்பாதிப்பாரு. இப்ப  யாரை ஏமாத்தலாம்னு பாக்கற. மொக்கை பீசு.

கார்த்திகேயன், தனியார் நிறுவனம்.
எல்லோரும் பாலிடிக்ஸ் பண்றங்க. மீடியாகாரங்க அதுக்கு மேல பன்றாங்க . சமூக விரோதிங்க கலந்துக்கிட்டாங்கன்னு அவரு சொல்றார். போராடுன ஜனங்க அப்படி இல்லனு சொன்னா, அவங்க அப்பாவியா இருக்காங்கன்னு அர்த்தம். அவங்களுக்கு அது தெரியலன்னு நாம எடுத்துக்க கூடாதா, அவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சி தான் ஓ.பி.எஸ்.ஐயும் இ.பி.எஸ்.ஐயும் முதல் மந்திரியா தேர்ந்தெடுத்தாங்களா? அதுமாதிரி தான் இது.

ஜெயரன்.
ஜல்லிக்கட்டுல ஆட்டோவுக்கு தீ வச்சது யாரு. இரண்டு வருஷம் ஆச்சி. அதுக்கே இன்னும் நியாயம் வரல. இப்ப சுட்டுக்கொன்னுட்டு சமூக விரோதின்னு சொல்றாங்க போலீசு. அதைத்தான் இவரும் சொல்றார்.  இவருக்கு  தெரியும்னா யாரு சொல்லு. இது இன்னா படமா, டீசர் ஓட்றதுக்கு. நூறு நாள் போராட்டம் நடக்கும்போது நீ ஏன் அங்க போகல. ஆடிட்டர் குருமூர்த்தி அப்ப போ’ன்னு சொல்லலையா?

வினோத்குமார்.
பேசுறதுக்கே தகுதி இல்லாத ஆளுங்க. பால்குடம் தயிர்க்குடம்னு தன் கட்டவுட்டுக்கு ஊத்த சொல்லி ரசிச்சவன் அவன். போராட்டம் பத்தி பேசுறதுக்கு அவனுக்கு என்ன யோக்கிதை இருக்கு. காலா டிக்கெட் எப்படி ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய்க்கு விக்கிறதுன்னு பாக்க சொல்லுங்க. அந்த வேலைக்கு தான் அவர் லாயிக்கு.  கோழைங்க அந்த ஆளு. பி.ஜே.பி. சப்போர்ட்ல பேசுறாரு. இல்லாட்டி காலா படம் ஓடாதுன்னு  பயம். இ.பி.எஸ்.  ஒ.பி.ஸ்க்கே பயப்படுறாங்க. பச்சை துரோகி.

வளையாபதி.
தமிழ்நாட்டு மக்களுக்கு இவரு என்ன சினிமா காமிக்கிறாரா? மக்கள் எப்படி போராடணும்னு இவரு சொல்வாராம் நாம அதை கேட்டுக்கணுமாம். எல்லாம் தலையெழுத்து. நாற்பது வருசமா சினிமா சூட்டிங்கில் இருந்தவரு இப்பதான் வெளியே வந்து  நிஜ சூட்டிங்கை பார்த்து பயந்து போயிருக்கார்.

கோவிந்தன், துறைமுக ஊழியர்.
எச்ச ராஜா மாதிரியே பேசுறார். ஜனங்களுக்கு இல்ல. தன எஜமானன் பி.ஜே.பி.யை குளிர வைக்க பேசுறார். எச்ச ராஜா மாதிரியே உக்கார்ந்து இடத்துலயே விளம்பரம் தேடுறார். இதான் அவர் தனிவழியா? இவர்கிட்ட யாருகேட்டாங்க  காமெடி பீசு கருத்து சொல்லுறதுக்கு ஒரு தகுதி வேணாம்.

கோபி, சரண், சக்திவேல், டூரிசம் அண்டு  கேட்டரிங் மாணவர்கள்.
நம்மளை செருப்பு மாதிரி நினைக்கிறார் அவரு. நம்மள சொல்லணும். நம்ம சினிமா பாக்கிறவங்க தானே எல்லாம் சின்ன பசங்கன்னு நினைக்கிறார். போராடுவது நாம, கருத்து சொல்ல மட்டும் அவரா, இந்த அதிகாரம் அவருக்கு யாரு கொடுத்தது. மக்கள் போராடும்போது போயி ஒளிஞ்சிக்கினு இப்ப வீர வசனம் பேசுறார்.

சஞ்சய், துணை நடிகர்.
“யார் நீ” சின்னப்பையன் கேட்டதுல பயந்து போனாருங்க அவரு. நம்மளையே இப்படி கேக்குறானுங்களே. பி.ஜே.பி.க்கு இங்க யாரும் பயப்படல, சுட்ட பிறகு திருந்த மாட்டேங்குறாங்க. அந்த வெறி. சமூகவிரோதிங்க விஷக்கிருமிங்கன்னு உளருறாரு. “நான் தான் ரஜினின்னு” சொல்ல வச்சிட்டார் ஒரு சின்ன பையன். போலீசு தான் இனிமே அவருக்கு பாதுகாப்பு. போலீசுக்கு பின்னால பதுங்குறார். அதான் போலீசு ஸ்கிரிப்டை வரி விடாம படிக்கிறார்.

கணேசன், டிரைவர்.
நம்மள வெறுப்பேத்துறான் அந்த ஆளு. நூறு நாளு அவுங்க அங்க போராடி சாவாங்கலாம், இவரு அங்க கைய ஆட்டினு போயிட்டு கருத்து சொல்வாராம். வீட்டுக்குள்ள இருக்கும்போது போலீசை திட்டுவாரு. வெளில வந்தா போலீசை பாராட்டுவார். வடிவேல்தான் இவரு.

கதிர், கோடம்பாக்கம் சினிமாதுறை, ஊழியர்.
போட்டோபிளட் மின் விளக்கு பராமரிப்பவர். திருட்டு நாய் அவனை பத்தி பேசாதீங்க, தமிழ்நாட்டு மக்களை வச்சி வளந்துட்டான். போராட்டம் நடத்தும்போது எட்டிப்பாக்கல. இப்ப போலீசு சொல்றத வாந்தி எடுக்கிறான். மனசு ஆறலை அறிவுகெட்டவன்.

  • வினவு புகைப்பட செய்தியாளர்கள்.