தூத்துக்குடியில் ஒலித்த குமுறல் சத்தம்.. வாயிலேயே சுட்டு வீழ்த்திய போலீசு! | மருது வீடியோ

தூத்துக்குடியில் மக்கள் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு, ரஜினி அங்கு வரவேண்டிய அவசியம் என்ன? என்ன நோக்கம்?

தூத்துக்குடி மக்கள் போராடியது நியாயம் என்ற ஒரு உண்மை இப்போது இந்த அறிக்கையின் மூலமாக வெளிவந்திருக்கிறது. இந்த துப்பாக்கிச்சூட்டின் முதல் குற்றவாளி எடப்பாடி கே.பழனிசாமி. நாசிச ஹிட்லனின் சகாக்கலுக்கு எப்படிப்பட்ட விராசணையும் தண்டனையும் பகிரங்கமாக அளிக்கப்பட்டதோ, அப்படிப்பட்ட தூக்கு தண்டனையை தூத்துக்குடி மக்களை சுட்டுக்கொன்ற குற்றவாளிகளுக்கு வழங்க வேண்டும்.

ஆரிய பட்டியை சார்ந்த எங்கள் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் ஜெயராமன் எப்படி இறந்தார் என்று கேட்கும்போது, எங்கள் தோழர்கள் சொல்கிறார்கள். துப்பாக்கிக் குண்டுகள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வருகிறது என்று. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்த தியாகிகளுக்கு இன்றுவரை அஞ்சலி செலுத்த மறுத்துவருகிறார்கள்.

தூத்துக்குடியில் மக்கள் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு, ரஜினி அங்கு வரவேண்டிய அவசியம் என்ன? என்ன நோக்கம்? முதலில் ரஜினி சென்று போலீசுக்காரர்களை சந்தித்தார். பல போலீசு படுகாயம் அடைந்துள்ளார்கள் என்றார். ஆனால் ஒரேஒரு போலீசுக்காரருக்குதான் உதடு கிழிந்திருந்தது என்று ஆணையம் சொல்கிறது. நாங்கள் இப்படி கொல்லுவோம், மக்கள் ரஜினி வந்தால் ஏமார்ந்து விடுவார்கள் என்ற இவை அனைத்துமே ஒரு முன் திட்டம்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை பற்றி Galatta Voice யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு விளக்கங்களை தருகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

பாகம் 1

பாகம் 2

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க