தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து தமிழக போலீசு, மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்களை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. 243 பொய்வழக்குகள், 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச்சட்டம், இரண்டு பேர் மீது தேச துரோக வழக்கு என பல வகைகளில் மக்கள் அதிகாரம் அமைப்பை முடக்க முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மீனவர் அமைப்பைச் சேர்ந்த சிலரை வைத்தும், மடத்தூரைச் சேர்ந்த சிலரை வைத்தும் மக்கள் அதிகாரத்தின் மீது பொய்ப்புகார் ஒன்றை அளிக்கச் செய்து, மக்களிடமிருந்து தனிமைப்படுத்த முயற்சித்தது போலீசு.
இவையனைத்தையும் முன் வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவிடம் நேர்காணல் காண்கிறார் நக்கீரன் இணையதளத்தின் செய்தியாளர் ஃபெலிக்ஸ் இன்பஒளி !
பாருங்கள், பகிருங்கள்