புதிய கலாச்சாரம்

பரிமலையில் பெண்கள் நுழையலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால் சபரிமலைக்குச் சென்ற பெண்களின் மீது நடு வழியிலேயே ஆர்.எஸ்.எஸ். மற்றும் நாயர் சேவா சமூகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தோர் தாக்குதல் தொடுத்தனர்.

சபரிமலையில் பெண்கள் நுழைவது ஆகம விதிகளுக்கு எதிரானது; இந்துக்களின் பாரம்பரியத்தைக் கெடுக்கும் செயல்; மத விவகாரங்களில் நீதித்துறை தலையிடக் கூடாது என்றெல்லாம் ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரங்கள் கூறுகின்றன. பாலின சமத்துவத்திற்கான தீர்ப்பை இந்து தர்மத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் தீர்ப்பாக பிரச்சாரம் செய்கின்றன.

பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என அம்பேத்கர் சட்டமியற்றியபோது இதே எதிர்ப்பை இந்துத்துவவாதிகள் அப்போதும் தெரிவித்தனர். பார்ப்பனப் பெண்களை அழைத்துச் சென்று, பெண்களுக்கு சொத்தில் பங்கு வேண்டாம் என டெல்லியில் முற்றுகைப் போராட்டங்களை நடத்தினர்.

படிக்க:
சபரிமலை : அய்யனார் அய்யப்பனாக மாறிய வரலாறு !
சபரிமலை வன்முறை : கேரள பாஜக தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம் !

இதே போல தேவதாசி முறை சட்டப்படி ஒழிக்கப்பட்டபோதும் சரி, உடன்கட்டை ஏறும் முறை ஒழிக்கப்பட்ட போதும் சரி, இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் செயல் என்று முட்டுக்கட்டை போட்டனர் இந்து மதவெறியர்கள்.

பெண்கள் மட்டுமல்ல, தலித் மக்கள், பழங்குடி மக்கள், சில இடங்களில் சூத்திரர்கள் இவர்களுக்கும் இன்னும் சமத்துவத்தை வழங்க மறுக்கிறது பார்ப்பனியம். கோவில் கருவறை முதல், ஊரில் இருக்கும் கிணறு வரை இம்மக்களுக்கு அனுமதி மறுக்கப் படும் இடங்கள் பல. இதுதான் ‘வல்லரசு இந்தியாவின்’ இலட்சணம்!

பாடப் புத்தகங்களில் பாவம் எனச் சொல்லப்படும் தீண்டாமை, சட்டப் புத்தகங்களில் ஆகம விதிகளாக, மத நம்பிக்கையாக நிலை நாட்டப்பட்டிருக்கிறது. பார்ப்பனியத்தின் அதிகாரத்திற்காக வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம், மேற்கண்ட பிற்போக்குத்தனங்களை மக்களிடம் உசுப்பிவிட்டு அதையே இந்து தர்மம் என கற்பனையாக கட்டமைக்கிறது. அதன் ஒரு பகுதியாக, இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களை அபகரிக்க சதி செய்து வருகிறது.

வட இந்தியா முழுவதும் கலவரங்கள் மூலம் இரத்த ஆறு ஓடச் செய்த ஆர்.எஸ்.எஸ்., மக்களை இந்துமதவெறியின் பிடியில் திரட்டுவதற்கு கையில் எடுத்திருக்கும் ஆயுதம், இத்தகைய பிற்போக்கு பண்பாடுகள்தான். தமிழகம் மற்றும் கேரளாவில் அத்தகைய கலவரங்களைத் தூண்டிவிடவே ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவு விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள். வரவிருக்கும் பேராபத்தை எச்சரிக்கிறது இத்தொகுப்பு.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ? – புதிய கலாச்சாரம் நவம்பர் 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

“சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ?” நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • சபரிமலை: பெண்கள் நுழைவை தடுக்கும் இந்துத்துவ கும்பல் !
  • சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு
  • பெங்களூரு கோவிலில் நுழைந்த 15 தலித் சிறுவனுக்கு அடி உதை
  • போர் வரி, மீசை வரி, முலை வரி – திருவிதாங்கூர் பார்ப்பனியம்
  • சோடா பாட்டில் பார்ப்பனர்கள் – காலச்சுவடு போன்ற லிபரல் பார்ப்பனர்கள் : என்ன வேறுபாடு ?
  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பு : சபரிமலை ஐயப்பனின் ஆணாதிக்கம் தகர்ப்பு !
  • சபரிமலை பெண்கள் நுழைவு : போராட்டம் இன்னும் முடியவில்லை !
  • பெரியகோவிலை வைத்து பார்ப்பன தினமலர் பரப்பும் மூடநம்பிக்கை!
  • சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !
  • கோவில்கள் மதவெறியர்களின் கூடாரமாகிவிடக் கூடாது !
  • பட்டர்களின் தீண்டாமை – மீனாட்சியம்மன் முன்பு அர்ச்சகர் மாணவர் போராட்டம்
  • பிரசாத லட்டு கூட ‘அவா’தான் பிடிக்கணும் | – உயர்நீதிமன்றத் தீர்ப்பு !
  • இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி !
  • ஸ்ரீரங்கம் : பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !
  • பார்ப்பனரின் எச்சிலையில் உருண்டால் பவர் கிடைக்கும்
  • பெண்களை இழிவுபடுத்தும் சபரிமலை ஐயப்பனை கைது செய் !

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்

ஊடகங்களை மிரட்டும் மோடி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

இலுமினாட்டி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

ஆன்மீகக் கிரிமினல்கள்
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more