சியப் புரட்சியின் 101-வது ஆண்டையொட்டிமக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவோம் !” என்ற முழக்கத்தின் கீழ், புரட்சிகர அமைப்புகளின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்நிகழ்வுகளின் தொகுப்பு  – பாகம் 3

காஞ்சிபுரம்:

“மக்களை மரணக் குழியில் தள்ளும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தையும் பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம்’’ என்ற முழக்கத்தின் கீழ் காஞ்சிபுரம் பகுதி பு.மா.இ.மு மற்றும் பு.ஜ.தொ.மு சார்பாக கடந்த நவ-11 அன்று காஞ்சிபுரம் – அப்துல்லாபுரம் பகுதியில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

பு.ஜ.தொ.மு திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர் தோழர் எஸ். சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டு 90 பேர் கலந்து கொண்டு குடும்ப விழாவாகக் கொண்டாடினர்.

தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி பறையிசையோடு துவங்கிய இந்நிகழ்ச்சியில் புரட்சிகர பாடல்கள் இசைக்கப்பட்டன. காவியும் கார்ப்பரேட்மயமும் என்ற நாடகம்; நவீன ஔவையார் உரை ஆகியன நிகழ்த்தப்பட்டன.

இறுதி நிகழ்வாக, ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழர் துரை.சண்முகம் நவம்பர் புரட்சி தின விழாவின் சிறப்புகளை எடுத்துரைத்து உரையாற்றினார். ரஷ்ய புரட்சியின் வரலாற்று ஆவணங்களை பட்டியலிட்ட அவர், இங்கு நாட்டு மக்களை மரணக்குழியில் தள்ளும் ஆர்.எஸ்.எஸ். மதவெறிக்கும்பலையும் அக்கும்பலின் புராண புளுகுகளையும் அம்பலப்படுத்தினார். கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளி வர்க்கமாக அணிதிரண்டு மோதி வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பு.மா.இ.மு. காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் துணைவேந்தன் நன்றியுரையாற்ற, பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்தோடு நவம்பர் புரட்சி தின விழா நிறைவு பெற்றது.

***

வேலூர்:

“மக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும் பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம்!” என்கிற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பாக “நவம்பர் 7 ருஷ்யப் புரட்சியின் 101 வது ஆண்டு விழா” 11.11.2018 அன்று மாலை வேலூரில் கொண்டாடப்பட்டது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த தோழர் வாணி விழாவிற்கு தலைமையேற்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். “சபரிமலைக்கு பெண்கள் ஏன் போகக் கூடாது?” என்கிற தலைப்பில் இந்த பிரச்சனையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவாரங்களின் அரசியலை அம்பலப்படுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் வேலூர் மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன் உரையாற்றினார்.

“லெனின் யார்? அவரை ஏன் எனக்குப் பிடிக்கும்!” என்கிற தலைப்பில் அனைவருக்கும் இலவசக் கல்வி உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்கியவர் லெனின், அதனால் அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என பள்ளி மாணவர் சந்தோஷ் ஆற்றிய உரை சிறுவர்களை உற்சாகப்படுத்தியது.

நாடெங்கிலும் நடக்கும் கௌரவக் கொலைகள் மற்றும் ஆணவப் படுகொலைகளைப் பட்டியலிட்டு இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டுமானால் பார்ப்பன பாசிசத்திற்கு சவக்குழி தோண்டுவதோடு சாதி பேதமற்ற சோசலிச இந்தியாவை உருவாக்குவதுதான் ஒரே வழி என்றார், ஆலைத் தொழிலாளி வில்சன்.

ஆண் – பெண் சமத்துவத்தை தனக்கு உணர்த்தியது மார்க்சியம். பழைய பிற்போக்கு சாதி – மதச் சடங்குகளிலிருந்து விடுவித்து அறிவியல் பூர்வமான செயல்களில் தன்னை மாற்றி அமைத்தது மார்க்சியம் என்பதை தனது சொந்த அனுபவத்திலிருந்து மார்க்சியத்தின் அவசியம் குறித்து “பார்ப்பன வாழ்க்கை முறையும் கம்யூனிச வாழ்க்கை முறையும்” என்கிற தலைப்பில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் சரவணன்.

அடுப்படியில் சிக்கியிருந்த பெண்களை விடுவித்து அவர்களையும் ஆண்களுக்கு நிகராக சமூக உற்பத்தியில் ஈடுபடுத்தி பெண்களின் விடுதலைக்கு வித்திட்டது நவம்பர் புரட்சி என்பதை மிக எளிமையாக எடுத்துரைத்தார், அடுக்கம்பாறை பு.ஜ.தொ.மு. கிளைத் தலைவர் தோழர் முருகன்.

மார்க்சிய அரசியலை கற்றுக் கொண்டு சமூக விடுதலைக்குப் போராடும் போதுதான் பெண் விடுதலையும் சாத்தியம் என விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார் வழக்கறிஞர் பாலு.

இன்றைய சமூக அமைப்பில் அடித்தட்டு மக்களுக்கு எவ்வாறு மருத்துவம் மறுக்கப்படுகிறது என்பதை ஆதாரங்களோடு எடுத்துரைத்தார் மாணவி செஞ்சுடர்.

தோழர் துரை.சண்முகம் எழுதிய தீபாவளி – நமக்கு தீராவலி ; நவம்பர் 7 – கொண்டாடுவோம் நமது புரட்சியை ஆகிய கவிதைகள் வாசிக்கப்பட்டன.

கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறியும் மற்றும் பார்ப்பன பாசிசமும் மக்களை வாட்டி வரும் இன்றைய சூழலில் சோசலிமே ஒரே தீர்வு என்பதை வலியுறுத்தி நமக்கு ஏன் சோசலிசம் தேவைப்படுகிறது? என்கிற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் பொன்.சேகர் நிறைவுரையாற்றினார்.

விழாவில் இடையிடையே “கட்டபொம்மன், ஊமைத்துரை, சின்ன மருது, பெரிய மருது”…., “சபரி மலைக்கு வந்தா தீட்டா தீட்டா?”…, “பாரத மாதா நீயும் பாத்து இருந்துக்க பத்திரமா!”.., “மலைகளையே பிளந்திட்டோம்”…, “நாடு முன்னேற்றமுன்னு மோடி முழங்குறாரு…. ஆகிய பாடல்கள் பாடப்பட்டன.

நவம்பர் புரட்சி விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு மற்றும் ஓவியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர் அகிலன் நன்றியுரையோடு விழா நிறைவடைந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் விழாவில் குடும்பத்தோடு பங்கேற்றது மட்டுமன்றி இதில் சரி பாதிப் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, வேலூர்.

***

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் 10.11.2018, சனிக்கிழமை அன்று நவம்பர் 7 ரஷ்ய சோசலிச புரட்சிநாளையொட்டி அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பாளர் தோழர் ரஞ்சித் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழா, தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி தொடங்கப்பட்டது. பு.மா.இ.மு. மாணவர்கள் சார்பாக பறையிசை, சிலம்பாட்டம் நடத்தப்பட்டன.

திருவாரூர் பகுதியில் செயல்படும் மாற்று அமைப்பைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள் இவ்விழாவில் பங்கெடுத்து உரையாற்றினர். இறுதியாக, மக்கள் கலை இலக்கியக் கழக மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன் சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் “சோவியத் யூனியன் இரண்டாம் உலகப்போரில் பாசிசத்தை வேரோடு அழித்தது. அதைப்போல் நமது நாட்டில் தலைவிரித்தாடும் பார்ப்பன பாசிசத்தையும், ஏகாதிபத்திய – தரகுமுதலாளிகளின் சுரண்டலையும் ஒழித்துக்கட்ட  அணிதிரள வேண்டும்” என்று மாணவர்கள், இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திரளாக கலந்து கொண்டனர். சர்வதேசியகீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

***

தஞ்சாவூர்:

.க.இ.க., பு.மா.இ.மு. தஞ்சைக் கிளை சார்பாக கீழவாசல் காமராஜர் சிலை அருகில், நவ-07 அன்று நடைபெற்ற நவம்பர் புரட்சிதின விழாவில், ம.க.இ.க. மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன் செங்கொடியேற்றி வைத்தார். மேலும், கீழவாசல் கடைவீதியில் குழுமியிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு நவம்பர் புரட்சிநாளை கொண்டாடுவதன் நோக்கத்தை விளக்கிக்கூறும் பிரசுரங்களையும் இனிப்பு – பழங்களையும் விநியோகித்தனர்.

இதனைத் தொடர்ந்து நவம்பர் – 10 அன்று மாலை தஞ்சை பெசண்ட் அரங்கில் ” கம்யூனிசம் கனவல்ல அது மனித குலத்தின் மகத்தான இறுதி இலட்சியம்! மக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும் பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம்!” என்ற முழக்கங்களை முன்வைத்து அரங்கக்கூட்டம் நடைபெற்றது. ம.க.இ.க. தஞ்சைக் கிளை செயலர் தோழர் இராவணன் தலைமையில் நடைபெற்ற இந்த அரங்கக்கூட்டத்தில் ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் சிறப்புரையாற்றினார். மேலும், பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பாளர் தோழர் பாண்டியன், AITUC மாவட்டத் தலைவர் தோழர் சேவையா, சி.பி.ஐ.(எம்-எல்) மக்கள் விடுதலை மாவட்ட அமைப்பாளர் தோழர் அருணாச்சலம் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினர்.

தொகுப்பு:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க