யோகி ஆதித்யநாத் பற்றி ஒரு சரியான அலசலை தருவீர்களா …?

– எஸ். செல்வராஜன்

ன்புள்ள செல்வராஜன்,

யோகி ஆதித்நாத் காவிப் படையில் இருக்கும் ஒரு ரவுடி சாமியார். அவரைப் பற்றி வினவு தளத்தில் நிறைய கட்டுரைகள் உள்ளன. அவற்றிலிருந்து சில இணைப்புகளைத் தருகிறோம், படியுங்கள்!

*****

படிக்க: மோடி ஆசியுடன் போட்டியிடும் சன்னியாசி ரவுடி

“கோரக்பூரை கடந்த பதினைந்து ஆண்டுகளாக கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது யோகி ஆதித்யநாத். 1999-ம் ஆண்டிலிருந்து அவர் கோரக்பூர் பாராளுமன்றத் தொகுதியில் தொடர்ந்து வென்று வருகிறார். இம்முறையும் அவரே வேட்பாளர், அவரே வெற்றி பெறுவார் என்று பரவலாக கருதப்படுகிறது. கோராக்நாத் மடத்தின் தலைமை பூசாரியாகவும் இருக்கும் ஆதித்யநாத், ஹிந்து யுவ வாஹினி என்கிற குண்டர் படை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார்.

உ.பி.யின் கொலைகார முதல்வர் யோகி ஆதித்யநாத்.

ஹிந்து யுவ வாஹினியின் மூலமாக சிறு சிறு உள்ளூர் தகராறுகளில் தலையிடும் ஆதித்யநாத் கடந்த பத்தாண்டுகளில் சிறிதும் பெரிதுமாக சில பத்து கலவரங்களை நடத்தியிருக்கிறார். தானே முன்னின்று 2007-ம் ஆண்டு கோரக்பூரில் கலவரம் ஒன்றை ஒருங்கிணைத்து நடத்தி அதற்காக சிறை சென்றும் திரும்பியிருக்கிறார். கலவரங்களின் ஊடாக இந்து முசுலீம் மக்களிடையே பிளவுண்டாக்கி இந்துக்களின் காப்பாளராக தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார். தற்போது கிழக்கு உத்திரபிரதேசத்தின் சில பல சட்டமன்றத் தொகுதிகளது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவிலான செல்வாக்கையோ ஆதிக்கத்தையோ அவர் அடைந்துள்ளார்.”

*****

படிக்க: ரவுடி யோகி ஆதித்யநாத் : பார்ப்பனிய பாசிசத்தின் ஜனநாயகம்

“அவர்கள் (முஸ்லீம்கள்) ஒரு இந்துப் பெண்ணை எடுத்துக் கொண்டால், நாம் நூறு முசுலீம் பெண்களை எடுத்துக் கொள்வோம்” – இது கண்களில் கொலை வெறியும் கைகளில் சூலாயுதமும் காவி உடையும் காதில் கடுக்கனும் போட்டுக் கொண்டு திரியும் ஒரு சாமியாரின் பிரச்சார உரை. சுவாமி அசிமானந்தா, சாத்வி ஜோதி, சாத்வி ப்ரக்யா, சுவாமி சாக்‌ஷி மகராஜ் உள்ளிட்ட சாமியார்களைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால், இந்த சாமியாரைக் குறித்து அதிர்ச்சி அடைய மாட்டீர்கள். ஆனால் மேற்சொன்ன சாமியார்களை விட அபாயகரமான சாமியாரைக் குறித்து தான் நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் வேறு யாருமல்ல,  கடந்த ஞாயிற்றுக் கிழமை 19.03.2017 உத்தரப் பிரதேசத்தின் முதல்வராகப் பதவியேற்றிருக்கும் யோகி ஆதித்யநாத் தான் அவர்.

*****

படிக்க: உ.பி முதல்வரின் ஹிந்து யுவவாகினி மீது பாலியல் வன்முறை வழக்கு

“ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்தவுடன், திடீர் பசுப் பாதுகாவலர்களாக மாறிய இந்தக் கும்பல், மாநிலத்தில் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட மாடு வெட்டும் தளங்களையும் இழுத்து மூடியது. ஆண், பெண் இருவர் ஒன்றாக அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தாலே உடனடியாக அங்கு சென்று அவர்களைத் துன்புறுத்துவதும், போலீசில் ஒப்படைப்பதும் என ரோமியோ எதிர்ப்புப் படையாக ரவுடித்தனம் செய்து வந்தது. இந்த ரோமியோ எதிர்ப்புப் படைதான் தற்போது ஒரு பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளது.”

*****

படிக்க: கோராக்பூர் குழந்தைகள் படுகொலை – மரணத்தின் நிறம் காவி

நாளை ஆகஸ்டு 15 -ம் தேதி. இந்தியா “சுதந்திரமடைந்து” நாளையோடு 70 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எழுபது ஆண்டு இந்திய சுதந்திரத்தை எழுபது பிஞ்சுக் குழந்தைகளைப் பலியிட்டுக் கொண்டாடி உள்ளது பாரதிய ஜனதா. கடந்த ஒரு வாரத்திற்குள் பாரதிய ஜனதா ஆளும் உத்திர பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் எழுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

படிக்க: காவி பயங்கரவாதிகள் ஆட்சியில் காவி மயமாகும் உத்திரப்பிரதேசம் !

இந்த காவி மயமாக்கும் செலவுகளை வைத்து பல ஆயிரம் விவசாயிகளின் விவசாயக் கடனை ரத்து செய்திருக்கலாம். ஆனால் பார்ப்பன பாசிச பாஜக அரசுக்கோ விவசாயிகளை விட காவி மயம் தான் முக்கியம் என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் தேவையில்லை.

செத்துப் போன ஜெயா ஆட்சி அமைத்தவுடன் ஜோசியக்காரக் கூட்டம் சொன்னபடி அவருக்கு ‘ராசியான’ பச்சை உடையை அணிவதை வழக்கமாக்கினார். பிறகு தமிழகத்தின் பல்வேறு அரசு இடங்களில் பச்சை திணிக்கப்பட்டது. அதே போன்று ‘இந்து ராஷ்டிரத்தை’ நிலை நாட்டுவதற்கு கொலைகள் போக இப்படி காவி பெயிண்ட் அடிக்கும் வேலையை யோகி செய்து வருகின்றார். பெயிண்ட் அடிப்பதில் கூட பாசிஸ்டுகள் எப்படி ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள் பாருங்கள்!

*****

படிக்க: உ.பி காவி தர்பார் : 1200 போலி மோதல் கொலை – 160 பேர் NSA – வில் கைது ! சிறப்புக் கட்டுரை

இந்து ராஷ்டிரம் எப்படி இருக்கும் என்பதை இரத்த சாட்சியங்களுடன் சொல்கிறது உத்திரப் பிரதேசம். ஆட்சிக்கு முன் கலவரங்களின் மூலம் அச்சுறுத்திய பாஜக இப்போது கைது, கொட்டடிக் கொலை மூலம் தொடர்கிறது. திகைக்க வைக்கும் விவரங்கள், கைதுகள், கதைகள்….!

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும்  கேட்கலாம்:

தங்களின் கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க