நெய்வேலி 3-வது நிலக்கரிச் சுரங்கத்திற்காக நிலம் கையகப்படுத்திய என்.எல்.சி நிர்வாகம், அதற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடோ, வேலைவாய்ப்போ வழங்கவில்லை. மேலும் அங்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கும் வேலை நிரந்தரம் செய்யவில்லை.

அதனைத் தொடர்ந்து, “நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு இல்லை ! வேலையும் தரவில்லை!! ஒப்பந்தத் தொழிலாளர்களை இன்னும் நிரந்தரம் செய்யவில்லை! என்.எல்.சி நிர்வாகமே, மூன்றாவது சுரங்கம் யாருக்காக?” என்ற முழக்கத்தை முன் வைத்து, கடந்த ஜன-10 அன்று கம்மாபுரம் பகுதி, கிராம மக்களை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர் மக்கள் அதிகாரம் அமைப்பினர்.

அறிவித்தபடி, காலை முதலாகவே ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். முதலில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கியிருந்த போலீசு, கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்து அங்கிருந்து கலைந்து போகும்படி கூறியது.

போலீசின் நாடகத்தை அம்பலப்படுத்திய மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள், மக்கள் மத்தியில் நாம் போராடி கைதாவதா? இல்லை கலைந்து சொல்வதா? என்று கேள்வினர். அதற்கு பதிலளித்த மக்கள், “நாங்கள் போராடி கைதாகிறோம்” என்று போலீசு செவிகளுக்கு கேட்கும் படி அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டு, போலீசு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அனைவரையும்  கைது செய்தது போலீசு.

மக்கள் அதிகாரம்
விருத்தாசலம் வட்டாரம்
கடலூர் மண்டலம்.
தொடர்புக்கு : 97912 86994

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க