தொடர்ச்சியாக மக்களிடமிருந்து விளைநிலங்களை பிடிங்கிக் கொள்ளும் என்.எல்.சி நிர்வாகம் இதுவரை எந்த நிலத்திற்கும் முழு இழப்பீடு தொகையையும் வழங்கவில்லை. வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தவில்லை என மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசும், மூன்றாம் கட்ட விரிவாத்திற்காக நிலங்களை கையப்படுத்திவரும் ஒன்றிய அரசும் தொடர்ந்து செவிசாய்க்கவில்லை என்றால் பெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என குமுறி வருகிறார்கள் கடலூர் மாவட்ட மக்கள்.
மேலும் தொடர்ந்து களத்தில் நின்று போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இச்செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ந்து போராட்டத்திற்கு வலுசேர்க்க வேண்டும். இவ்விரிவாக்க பணிகளை உடனே நிறுத்தி விளைநிலங்களை பாதுகாக்க வேண்டும். இத்திட்டத்தை உடனே அரசு கைவிட வேண்டும்.
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!