தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை  –  என்ற செய்தி உண்மையா … ?

ண்பர்களே….

பொ.வேல்சாமி
டந்த இரண்டு மூன்று தினங்களாக முகநூலில் சிலர் பதற்றத்துடனும் கோபத்துடனும் ஒரு செய்தியை உலவ விட்டு இருந்தனர். அந்தச் செய்தி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகளை சமஸ்கிருத கல்வெட்டுகளாக மாற்றி தேவநாகரி எழுத்தில் பொறித்து வருகிறார்கள் என்பதாகும். உண்மையில் அப்படியான நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு எந்தவிதமான வாய்ப்பும் இந்திய தொல்லியல் சட்டத்தின்படி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட பல பழமையான கல்வெட்டுகள் தஞ்சை பெரிய கோவிலில் பதியப்பட்டுள்ளன. இந்த தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகள் அனைத்தையும் புலவர் ராசு அய்யா அவர்களைப் பதிப்பாசிரியாகக் கொண்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள “தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள்” என்ற நூலை படங்களாகக் கொடுத்துள்ளார். நண்பர்கள் அந்த நூலை தரவிறக்கம் செய்து ஆய்வு செய்வதற்கு வசதியாக அந்நூலின் இணைப்பை இதில் கொடுத்துள்ளேன்.

தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகள் தஞ்சை பெரிய கோவிலில் எப்படி எழுதப்பட்டிருக்க முடியும் என்று பலருக்கும் சந்தேகம் எழுவது இயல்புதான். அதற்கு பெரிய கோவிலின் வரலாற்றை சற்று கவனமாகப் பார்த்தால் விடை எளிதில் கிடைத்துவிடும். தஞ்சை பெரிய கோவிலில் இராசராசன் காலத்திலிருந்து சோழர்களின் கல்வெட்டுகளும் அடுத்து வந்த காலங்களில் நாயக்கர்களின் கல்வெட்டுகளும் தமிழில் எழுதப்பட்டுள்ளன. மராட்டிய காலத்திலும் பல கல்வெட்டுகள் புதிதாகப் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுகளின் மொழி மராத்தி. எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் தேகநாகரி என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க:
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்
தீஸ்தா செதால்வாட் : அரசியலமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர்

சரபோஜி மன்னர் காலத்தில் மராட்டியர் வரலாற்றை முழுமையாக எழுதிய கல்வெட்டுகள் தேவநாகரி எழுத்தில் தஞ்சை பெரிய கோவிலில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகளை தமிழ்மொழியில் மொழிபெயர்த்தும் மூல மொழியிலும் சரஸ்வதி மகால் நூலகம் “போன்ஸ்லே வம்ச சரித்திரம்” என்ற பெயரில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் : பொ வேல்சாமி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க