குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 1 | பாகம் – 4

அமனஷ்வீலி

முதல் ஆசிரியர்

டந்த சில நாட்களாக ஒவ்வொரு குடும்பத்திலும் என்னைப் பற்றித்தான் பேசுகின்றனர் என்பதில் சந்தேகமேயில்லை. தனிப்பட்ட முறையில் என்னைப் பற்றி இல்லாவிட்டாலும், மேற்கூறிய கடிதத்தை அனுப்பிய, செப்டெம்பர் 1-ம் தேதி தன் மாணவனைச் சந்திக்கப் போகும் ஆசிரியரைப் பற்றிப் பேசுகின்றனர். அம்மாவோ அப்பாவோ, தாத்தாவோ பாட்டியோ ஒவ்வொருவரும் ஒரு மாதிரியாக, குழந்தையைத் தமக்கு எவ்வளவு தெரியுமோ அதைப் பொருத்து, குழந்தை வளர்ப்பைப் பற்றிய தம் கண்ணோட்டத்தின்படிப் பேசுகின்றனர். தான் இதுவரை கண்டிராத தன் முதல் ஆசிரியரைப் பற்றி ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் எவ்வாறெல்லாம் கற்பனை செய்வார்கள் என்று கூறத் தேவையே இல்லை. இவர்கள் ஆசிரியரையும் அவரது குணநலன்களையும் பல்வேறு விதமாக சிந்தித்துப் பார்க்கின்றனர். என் கடிதத்தின் இறுதியில் நான் குழந்தைகளுக்கு ”வண்ணப் பென்சில்களையும் காகிதத்தையும் எடுத்து உன் முதல் ஆசிரியர் எப்படியிருப்பார் என்று வரை” என ஏன்தான் எவ்வித வேண்டுகோளையும் விடுக்கவில்லையோ!

ஒரு சில குடும்பங்களில் ஆசிரியரை, எல்லாவற்றையும் அறிந்த, அன்பான, மென்மையான, குழந்தைகளைப் பெரிதும் விரும்புபவராக பெற்றோர்களும் பெரியவர்களும் சித்தரிக்கின்றனர். இந்தக் குடும்பங்களில் உள்ள குழந்தைகள் என்னை சர்வ வல்லமை படைத்த அன்பானவனாக வரைந்திருப்பார்கள். இவர்கள் பள்ளிக்கு வந்ததும் என் பின்னால் சுற்றி வருவர், என், முன் முழங்காலிட்டு நின்றிருப்பார்கள், ஆயிரக்கணக்கான கேள்விகளைக் கேட்டிருப்பார்கள், தம்மைப் பற்றி மூச்சு விடாமல் சொல்லி, என் மீது உடனேயே அன்பு மழை பொழிந்திருப்பார்கள், ஏனெனில் இப்படிப்பட்ட ஆசிரியரை நேசித்தாக வேண்டுமே. நிச்சயமாக, இதற்கு நான் அத்தகைய அன்பு ஆசிரியருக்குரிய எல்லாத் தன்மைகளையும் பெற்றிருக்க வேண்டும்.

பெரியவர்கள் சொல்வதை எல்லாம் யார் கேட்கவில்லையோ, அம்மாவோ பாட்டியோ தருவதையெல்லாம் யார் சாப்பிடவில்லையோ, யார் முரண்டு பிடிக்கின்றார்களோ, சத்தம் போடுகின்றார்களோ, குறும்பு செய்கின்றார்களோ அவர்களையெல்லாம் ஆசிரியர் கடுமையாக தண்டித்து, பள்ளியிலிருந்தே துரத்தி விடுவார், அவர்… இதனிடையே இக்குழந்தைகள் என்னை ஒரு சூனியக்கார கிழவியைப் போல் படம் வரைந்திருப்பார்கள்.

மற்ற சில குடும்பங்களில் பெற்றோர்களும் பெரியவர்களும் ஆசிரியரைப் பற்றிப் பின்வருமாறு கூறுவார்கள்: ஒவ்வொரு குழந்தையின் ஒவ்வொரு சிறு நடவடிக்கையையும் உன்னிப்பாக அவர் கவனிப்பார், பெரியவர்கள் சொல்வதை எல்லாம் யார் கேட்கவில்லையோ, அம்மாவோ பாட்டியோ தருவதையெல்லாம் யார் சாப்பிடவில்லையோ, யார் முரண்டு பிடிக்கின்றார்களோ, சத்தம் போடுகின்றார்களோ, குறும்பு செய்கின்றார்களோ அவர்களையெல்லாம் ஆசிரியர் கடுமையாக தண்டித்து, பள்ளியிலிருந்தே துரத்தி விடுவார், அவர்… இதனிடையே இக்குழந்தைகள் என்னை ஒரு சூனியக்கார கிழவியைப் போல் படம் வரைந்திருப்பார்கள்.

மறு நாள் பள்ளிக்கு வந்து தன் ஆசிரியரைக் கண்டதும் சூனியக் கிழவியைக் கண்டது போல் பார்த்து, அம்மாவைக் கட்டிப் பிடித்து, ”பள்ளிக்கூடம் வேண்டாம், வீட்டிற்குப் போகலாம்” என்று இதயத்தைக் கரைக்கும் அளவிற்கு கூக்குரலிடுவார்கள். இந்த முதல் ஆசிரியரிடம் உண்மையிலேயே சூனியக் கிழவியின் குணங்கள் இருந்தால் என்ன ஆகும்? குழந்தைக்கு என்ன நேரிடும் என்று சிந்திக்கவே அச்சமாக உள்ளது. அன்பான ஆசிரியரின் மூளையும் பொறுமையும் மட்டுமே குழந்தையின் கனவுகளைக் காப்பாற்றும்.

மற்றும் சில வகையான குடும்பங்களிலோ குழந்தைகளால் ஒன்றுமே வரைய இயலவில்லை. ஆம், சிடுசிடுப்பான ஆசிரியரை எப்படி வரைவது? அவர் கண்ணுக்குத் தெரியாமல் வந்து குழந்தைகளைத் தூக்கிச் செல்வார், ஏன் ஒருவேளை குழந்தைகளைச் சாப்பிடக்கூடும். அவர் சர்வவல்லமை படைத்தவர், எல்லாம் அவருக்குத் தெரியும், உன் மனதில் என்ன உள்ளது என்று கூட அவர் கண்டுபிடித்து விடுவார், எனவே அவருக்குப் பிடிக்காத ஒன்றைப் பற்றி எண்ணிக் கூடப் பார்க்காதீர்கள். இப்படிப்பட்ட ஆசிரியரை குழந்தை எப்படி கற்பனை செய்ய முடியும்?

மறுநாள் சிறுவன் உண்மையான ஆசிரியரை வகுப்பறையில் பார்ப்பான், உதடுகளைக் கூட அசைக்காமல் அமைதியாக உட்கார்ந்திருப்பான், எதைப் பற்றியும் மோசமாகக் கூட யோசிக்க மாட்டான். சிடுசிடுப்பான ஆசிரியர், அதுவும் முதல் ஆசிரியர். இப்படிப்பட்டவர் எங்காவது இருக்கின்றாரா? அச்சத்திலிருந்து குழந்தைகளை விடுவிக்க, இவர்களின் சிந்தனைகளை விலங்கிலிருந்து விடுவிக்க, அவர்கள் சுதந்திரமாகப் பேசும்படி செய்ய அன்பான ஒரு ஆசிரியர் தேவை.

ஏன் ஒரு சில குடும்பங்களில் ஆசிரியர் அன்பு மிக்கவராயும் வேறு குடும்பங்களில் சூனியக் கிழவியைப் போன்றும், இன்னும் சில குடும்பங்களில் சிடுசிடுப்பானவராகவும் சித்தரிக்கப்படுகிறார்? இந்த ஆறு வயதுக் குழந்தைகளின் பெற்றோர்கள் அனேகமாக இளைஞர்களாக இருக்க வேண்டும், இவர்களுக்கு எவ்வித சூனியக்காரியையும் சிடுசிடுப்பானவரையும் கண்டு அச்சமில்லையே, ஏன் இவர்கள் தம் குழந்தைகளுக்குப் பயம் காட்டுகின்றனர்? தம் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் இவர்கள் ஏன் இந்தப் பயங்கர கதாபாத்திரங்களின் உதவியை நாடுகின்றனர்?

குழந்தையை பயமுறுத்துவதன் மூலம் எளிதாக வளர்க்கலாம் என்று ஏன் பெற்றோர்கள் எண்ணுகின்றனர்? மனிதனை வளர்த்து ஆளாக்குவதைப் பற்றிய அரிச்சுவடி கூட இளம் பெற்றோர்களுக்குத் தெரியாது என்று என் அனுபவம் காட்டுகிறது.

ஆம், உண்மையில் அவர்களுக்கு இந்த விஞ்ஞானம் எப்படித் தெரியும்? பள்ளியில் யாரும் அவர்களுக்கு இதை சொல்லித் தரவில்லை, அவர்கள்தான் எதிர்காலப் பெற்றோர்கள் என்பதை யாரும் உணரவில்லை. பள்ளியை முடித்ததுமே அந்த இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், 16 வயது வாலிபர்களும் யுவதிகளும் பெற்றோர்கள் ஆகலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவேதான் குழந்தை முரண்டு செய்யாமல் இருப்பதற்காக, குழந்தையை சாந்தப்படுத்துவதற்காக, அங்குமிங்கும் ஓடி, சத்தம் போட்டு விளையாட்டு சாமான்களை உடைக்காமலிருப்பதற்காக சகலவித பயங்கர கதாபாத்திரங்களும் வீட்டிற்குள் வருகின்றன. குழந்தை இத்தகைய பயங்கர கதாபாத்திரங்களைப் பார்த்ததில்லையாதலால் முதல் ஆசிரியரை இவ்வாறு சித்தரிக்கும் வாய்ப்பு தோன்றுகிறது.

லட்சோப லட்சம் வாலிபர்களுக்கும் இளம் பெண்களுக்கும் உயர்கல்விக் கூடங்களில் சகலவித விஞ்ஞானங்களையும் சொல்லித் தந்து இவர்களை முதல்தர நிபுணர்களாகப் பயிற்றுவிக்கின்றனர். ஆனால் இவர்கள் எதிர்காலப் பெற்றோர்கள் என்பதையும் குழந்தை வளர்ப்பு விஞ்ஞானம் இவர்களுக்குத் தேவை என்பதையும் இங்கும் மறந்து விடுகின்றனர். இதில் கற்றுக் கொள்ள ஒன்றுமேயில்லையா, இது அவ்வளவு எளிமையானதா? என்ன ஒரு தவறான கருத்து!

சிடுசிடுப்பான ஆசிரியரை எப்படி வரைவது? அவர் கண்ணுக்குத் தெரியாமல் வந்து குழந்தைகளைத் தூக்கிச் செல்வார், ஏன் ஒருவேளை குழந்தைகளைச் சாப்பிடக்கூடும். அவர் சர்வவல்லமை படைத்தவர், எல்லாம் அவருக்குத் தெரியும், உன் மனதில் என்ன உள்ளது என்று கூட அவர் கண்டுபிடித்து விடுவார், எனவே அவருக்குப் பிடிக்காத ஒன்றைப் பற்றி எண்ணிக் கூடப் பார்க்காதீர்கள். இப்படிப்பட்ட ஆசிரியரை குழந்தை எப்படி கற்பனை செய்ய முடியும்?

செப்டெம்பர் 1-ம் தேதிக்கு முதல் நாள் நள்ளிரவு வரை என் மேசை முன் அமர்ந்து நான் எதைப் பற்றி எண்ணுகிறேன்? எல்லா பெரிய வகுப்புகளிலும் பள்ளி மாணவர்கள் தம் கரங்களில் மிக அழகிய புத்தகத்துடன் மிக சுவாரசியமான வகுப்பிற்கு விரைந்து செல்ல வேண்டும்… எல்லா தொழிற் கல்விக்கூடங்கள், உயர்கல்விக் கூடங்களின் மாணவர்களும் இதே போன்ற அழகிய நூலுடன் மிக சுவாரசியமான விரிவுரையைக் கேட்க விரைந்து செல்ல வேண்டும். இந்த நூல்களிலும், சுவாரசியமான பாடங்களிலும் விரிவுரைகளிலும் உள்ள பாடத்திற்கு ”மனிதனை உருவாக்குபவன் மனிதனே” என்று நான் தலைப்பு தருவேன். ஆசிரியர் பயிற்சி எல்லோருக்கும் கட்டாயமான ஒரு பாடமாகிறது, ஏனெனில் குழந்தை வளர்ப்பாளராக இருப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையுமாகும். இக்கனவு நிறைவேற நீண்ட நாட்களாகுமா? இந்த இடைவெளியைக் குறைக்க எவ்வளவு விருப்பமாயுள்ளது.

பள்ளியில் நான் என்னாலியன்றதைச் செய்வேன்….

குழந்தைகளே, உங்களது புன்முறுவல்கள் எவ்வளவு அழகாக உள்ளன! வகுப்பில் இப்புன்முறுவல்களை மழுங்கடிக்கும் உரிமை எனக்கு உண்டா என்ன? அப்பாவோ, அம்மாவோ, பாட்டியோ, தாத்தாவோ என்னைப் பற்றி ஏதாவது சொல்லி உங்களில் யாரையாவது அச்சுறுத்தியிருக்கக் கூடும். இந்தப் பெரியவர்கள் ஏன் இப்படியிருக்கின்றனர்?

படிக்க:
நாடு நாசமாகக் கூடாதே என்பதால்தான் சிவாஜி முடிசூட்டுவதை தடுக்கிறேன் !
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்

உங்களுக்கெதிராக என்னையும் கூட்டு சேர்த்துக் கொள்ள முடியுமென்று நம்பிக் கொண்டிருக்கும் அவர்கள் அனைவரையும் நான் ஏமாற்றுவேன். என் அன்புக் குழந்தைகளே, பயப்படாதீர்கள், நான் அச்சுறுத்த மாட்டேன், நான் கொடியவன் அல்ல! நாளை தாமதமின்றி வாருங்கள். உங்களனைவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும், நான் உங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

என்னுடைய வகுப்புடனான கற்பனைப் பேச்சை நான் முடிக்கிறேன். ஒவ்வொரு புகைப்படத்தையும் கோப்பில் வைக்கிறேன். இவற்றை நாளை பள்ளிக்கு திரும்ப எடுத்துச் செல்ல வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!