ரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்பரப்பி கிராமத்தில் கடந்த 18-4-2019 அன்று திட்டமிட்டு பாமக, இந்து முன்னணி காலிகளால் சாதிக் கலவரம் நடத்தப்பட்டது.

இக்கலவரத்தை தலைமை தாங்கியவர்கள் இந்து முன்னணி மற்றும் பா.ம.க-வைச் சேர்ந்த வன்னிய சாதிவெறியர்களான  இராஜசேகர், பழனிவேல், சுப்ரமணியன், சொக்கன், பழனிச்சாமி, மதி, சத்தியசீலன், குமார், பாஸ்கர், வெற்றி, சரவணன்… ஆகியோருடன் உள்ளுர் மற்றும் வெளியூரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சாதிவெறியர்கள் பொன்பரப்பி காலணி பகுதியை தாக்கியுள்ளனர்.

தாக்குவதற்கு இரும்புக் கம்பிகள், பெரிய சவுக்கு மர உருட்டுக் கட்டைகள், கருங்கல், ஜல்லி என தயாரிப்புகளுடன் வந்துள்ளனர். இக்கும்பல் வெறி கொண்டு தாக்கியதில் 20 -க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். 13 -பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையிலும், 2 -பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இக்கலவரத்தை முன்னின்று நடத்தியது இந்து மதவெறி, ஆதிக்கசாதி வெறியர்கள் மட்டுமல்ல இவர்களைப் பாதுகாக்கும் போலீசும்தான். இவர்களால்தான் திட்டமிட்டு சாதிக் கலவரம் நடத்தபட்டுள்ளது.

பொன்பரப்பி கிராமம் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டது. இங்கு R.S.S., B.J.P -யின் இந்து மதவெறி பாசிசத்தை எதிர்கொண்டு களத்தில் நிற்கும் விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுவது இந்து முன்னணிகாரர்களுக்கு பொறுக்கவில்லை. தனது வெறியைத் தீர்க்க சாதியை முன்னிறுத்தி வன்னியர்களைத் தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

படிக்க:
பொன்பரப்பி வன்கொடுமை – ராமதாசே முழுப்பொறுப்பு : மக்கள் அதிகாரம் கண்டனம் !
♦ பொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் !

வாக்குசாவடியில் 1:00 மணிக்கு தொடங்கிய கலவரம் 3:00 மணிவரை நீண்டுள்ளது அதனால், பொன்பரப்பி காலனிபகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த அச்சத்தோடு அலறிஅடித்து கொண்டு ஓடியுள்ளனர் 100 -க்கும் மேற்பட்ட இந்து முன்னணி காலிகள், அவர்களை விடாது தெருக்களில் விரட்டி விரட்டி கற்களைக் கொண்டும், கட்டையாலும் தாக்கியதில் பலபேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் மக்களைச் சென்று பார்த்து விசாரித்தபோது இதற்குமுன் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை என்றும்,  “கடந்த காலங்களில் வன்னியர் பகுதி இளைஞர்களுக்கும் எங்கள் பகுதி இளைஞர்களுக்கும் கூட சச்சரவுகள் எல்லாம் வந்திருக்கிறது. ஆனால் இப்படி பெரிய பாதிப்பு இருக்காது, ஊருக்கு வெளியில் வைத்து பேசித் தீர்த்துக் கொள்வோம்.” என்றும் கூறுகின்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஆனால் இச்சம்பவம் அப்படி நடக்கவில்லை. பாமக, இந்து முன்னணியைச் சேர்ந்த குண்டர்கள் திட்டமிட்டு ஊருக்குள் புகுந்து, கொலைவெறியோடு தாக்கியிருக்கின்றனர். கலவரக்காரர்கள் கொண்டுவந்த பெட்ரோல் மற்றும் குண்டுகளைக் கொண்டு அப்பகுதி மக்களின் வாகனங்களை எரித்துள்ளனர். வீட்டிற்குள் குண்டுகளை வீசியுள்ளனர்.

“பறத்தேவிடியா பசங்களா உங்களுக்கு என்னடா… இவ்வளவு திமிராடா? எங்களுக்கு எதிரா பானைக்கு ஓட்டு போடுவிங்களாடா ?” என்று மரக் கட்டையாலும் இரும்பு கம்பியாலும் தாக்கினார்கள்.

பானை சின்னம் வரையப்பட்ட வீடுகளை அடித்து நொறுக்கியிருக்கின்றனர். பா.ம.க, அதிமுக, இந்துமுன்னணி ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்த குண்டர்கள் சேர்ந்துதான் இக்கலவரத்தை நிகழ்தியுள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் காவல்துறைக்கு தகவல்கொடுத்தும், மிகவும் அலட்சியமாக 2½ மணிநேரத்திற்குப் பின்னர்தான் கலவரம் நடந்த இடத்திற்கு போலீசார் வந்துள்ளனர்.

இதிலிருந்து இக்கலவரம் போலீசின் துணையோடுதான் நடந்துள்ளது என்பது அம்பலமாகியுள்ளது. இவர்கள் சொல்லக்கூடிய துணை ராணுவம், போலீசு, தேர்தல் ஆணையம் இவை எல்லாம் எங்கே போனது? தேர்தல், ஜனநாயகம் என்ற பெயரில் இந்த அரசு எதற்காக இருக்கிறது ? மக்களைப் பாதுகாக்கவா? காவிகுண்டர்களுக்கு காவல் நிற்கவா ?

செய்தி :
மக்கள் அதிகாரம்,
விருத்தாசலம் வட்டம், கடலூர் மண்டலம்.
தொடர்புக்கு : 97912 86994

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க