மே – 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் முதலாம் ஆண்டு நினைவு நாள் !

ந்த நாளில் தங்கள் மண்ணைக் காக்க உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தக்கூட முடியாது என்ற நிலைதான் தமிழகத்தில் உள்ளது.

பல இடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் தடுப்புக் காவல் என கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசு தோழர்களை நள்ளிரவில் கைது செய்து தனது அராஜகத்தை நிகழ்த்தியுள்ளது. பல இடங்களில் மக்கள் அதிகாரம் நடத்தவிருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிகளை போலீசு தடை செய்துள்ளது.

ஆனால் இந்த தடைகளைத் தாண்டி பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் ஆர்ப்பாட்டம் – போராட்டங்களை நடத்தியுள்ளனர். அவற்றின் தொகுப்பு.

***

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 11:00 மணிக்கு மக்கள் அதிகாரம் சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு தோழர்கள் திரளுவதற்கு முன்பே போலீசு குவிந்துவிட்டது. அதுமட்டுமல்லாது கைது செய்து அழைத்துப் போவதற்காக வாகனங்களையும் தயார் நிலையில் வைத்திருந்தது.

இந்நிலையில் சரியாக 11:00 மணிக்கு மக்கள் அதிகாரம் தோழர்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் படங்களை ஏந்தி; முழக்கமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தை துவங்கினர். அதைத் தொடர்ந்து தோழர் வெற்றிவேல் செழியன் ஊடகங்களுக்கு பேட்டியளிததார்.

அதன் பின் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றது போலீசு.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள், மாணவர் – இளைஞர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை.

***

விருத்தாசலத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு, மக்கள் அதிகாரம் அலுவலகத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்
விருத்தாசலம் வட்டாரம்
9791286994

***

டலூரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு, கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சேத்தியாத்தோப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத் தியாகிகளின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள பெரிய குப்பம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சார்ந்த தோழர் மணிகண்டன் தலைமையில் நடந்தது. இதில் விசிக வை சார்ந்த ரஜினிவளவன், காங்கிரஸ் கட்சியை சார்ந்த மாதவர், சாரங்கபாணி ஆகியோரும் இறுதியாக தோழர் மணியரசன் (மாவட்ட செயலாளர், புமாஇமு) ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

இதில் 1) கொலைகார நிறுவனமான ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்தை அகற்ற தனிசட்டம் இயற்று (2) படுகொலைக்குப் காரணமான போலீசாருக்கு கொலை குற்றத்தில் தண்டனை வழங்கு (3) ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு நினைவிடம் அமை! என்ற மூன்று கோரிக்கையை வலியுறுத்தியும் வேதாந்தா குழுமத்திற்கு பிஜேபி மோடி அரசு தடை விதிக்காமல் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, நாகை மாவட்டங்களில் விவசாய நிலங்களில் திறந்த வெளியில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் இலட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பறிபோகும் என்ற நிலைமை உருவாகும் என்பதை கண்டித்தும் பேசப்பட்டது. மேலும் நம் மண்ணை, காற்றை, நீரை பாதுகாக்க ஸ்டெர்லைட்டை போன்ற வீரசெறிந்த போராட்டத்தை நடத்த வேண்டும் என்று கிராம மக்கள் சார்பாக அறைகூவல் விடப்பட்டது.

தகவல் :
மக்கள் அதிகாரம்
கடலூர்.

***

துரையில் பெரியார் நிலைம் அருகில் உள்ள கட்டபொம்மன் சிலையருகில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் “ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று ! படுகொலை செய்த போலீசாரை கைது செய் ! தியாகிகளுக்கு நினைவிடம் அமைத்துக் கொடு !” ஆகிய முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசு கைது செய்தது. கைது செய்யப்பட்ட 62 பேரில் மூன்று பேர் பெண்கள் ஆவர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
மதுரை.

***

டுமலை வட்டம், ஆண்டியூரில் மே-22 தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மக்கள் அதிகாரம் சார்பாக, அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
உடுமலை.

***

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு, மண்ணை காக்கும் போராட்டத்தில் 14 பேர் துப்பாக்கி சூட்டில் இறந்து தியாகி ஆனார்கள். இந்த நிகழ்வின் முதல் வருட நினைவை குறிக்கும் வகையில்;

காலை 10.00 மணிக்கு திருவாரூர் மாவட்டத்தில்; திருவாரூர் புதிய ரயில்வே நிலையம் வாயிலில் தியாகிகளின் படங்களை வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகாரத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர். தங்கசண்முக சுந்தரம் தலைமை தாங்கினார்.

இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் :

  • தோழர் ஜி.வரதராஜன். மாற்றத்திற்கான மக்கள் கழக அமைப்பாளர்
  • தோழர் எஸ்.டி.ஜெயராமன். B.S.P. பொருப்பாளர்.
  • தோழர் சீமா.மகேந்திரன். விடுதலை சிறுத்தை கட்சியின் பொருப்பாளர்.
  • தோழர் கா.கோ.கார்த்திக். மக்கள் சனநாயக குடியரசு கட்சி.
  • திரு எஸ்.ரஜினிகாந்த். தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றியச் செயலாளர்.
  • தோழர் கே.ஆர்.சிவா . D.Y.F.I.
  • தோழர் ஜே. வானதீபன். D.Y.F.I.
  • தோழர் தாஜீதீன். வி.சி.க வழக்கறிஞர்.
  • தோழர் அ.லூர்துசாமி. அம்பேத்கார், பெரியார் மார்க்ஸ் படிப்பு வட்டம்.
  • தோழர் கோ.வேதராஜ். 108 தொழிலாளர் சங்கம்.
  • திரு ஆர்.ரமேஷ். நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம்.
  • தோழர் தா.கலைவாணன். வி.சி.க.
  • திரு சுதாகர். தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட துணைச் செயலாளர்.

ஆகியோர் கலந்து கொண்டார்கள். இதே போன்று குளிக்கரை கடை வீதியிலும், ஆணை தென்பாதியிலும், மக்கள் அதிகாரம் ஏற்பாட்டில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.
தொடர்புக்கு : 82207 16242.

***

திருச்சியில், மே 22 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு மக்கள் அதிகாரம் சார்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில்  நினைவஞ்சலி  மற்றும்   தடையை மீறி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

தூத்துகுடி நச்சு ஆலை  ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு நினைவஞ்சலி  நடத்த சென்னை, மதுரையில்  காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகாரத்தின் சார்பாக திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் லெ.செழியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தபட்டது. தோழமை அமைப்பான ம.க.இ.க தோழர் ம. ஜீவா, தோழர் கோவன் மற்றும் விவசாய சங்கத் தலைவர் சின்னதுரை ஆகியோர் கலந்துகொண்டனர். பிற கட்சியினர், பொதுமக்களைத் திரட்டி தடையை மீறி பெண்கள், சிறுவர்கள், தோழர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்நிகழ்வை தடுக்கவும் முடியாமல் கைது செய்யவும் முடியாமல் காவல்துறை சிறிது நேரம் தவித்தது.

ஆயிரக்கனக்கான மக்கள் மத்தியில் நாம் தியாகிகளுக்கு ஒரு நிமிடம்  மௌன அஞ்சலி செலுத்த பட்டது,அதை அடுத்து ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிர்நீத்த தியாகிகளுக்கு நினைவிடம் அமைத்தது போல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கும் நினைவிடம் அமைக்க வேண்டும், சுட்டுக் கொன்ற போலீசைக் கொலை வழக்கில் தூக்கிலிட வேண்டும்; ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன முழக்கம்  எழுப்பபட்டது. இதனை தொடர்ந்து முன்னணித் தோழர்களை காவல்துறை கைது செய்து இரண்டு வேனில் கொண்டு சென்றது. திருச்சியின் பிரதான பேருந்து நிலயைத்தில் தோழர்கள் நடத்திய போராட்டத்தை ஆதரித்தும் பிரசுரங்களை மக்கள் தானாக பெற்று சென்றனர்.

மேலும் மக்கள் அதிகாரம் அமைப்பு செயல்படும் பகுதியிலும் ஸ்டெர்லைட் மூட வலியுறுத்தி தூத்துக்குடி போராட்ட தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கல்லாங்காடு,காஜாப்பேட்டை ,மாரனேரி ,லால்குடி  பகுதியில் மக்கள் மத்தியில் பிரசுரம் கொடுத்து ,பகுதியில் பிளக்ஸ் பேனர் வைத்து பொதுமக்கள் மற்றும் தோழர்கள் உணர்வுப்பூர்வமாக கலந்து கொண்டு மலர்தூவி , மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்தினர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

***

தூத்துக்குடியில் மண்ணைக் காக்க உயிர் ஈந்த தியாகிகளின் வீடுகளுக்கு சென்று வழக்கறிஞர்கள் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

புனித சகாய மாதா ஆலயத்தில், ஸ்னோலின் பெயரில் அமைக்கப்பட் அரங்கில் அஞ்சலி செலுத்தும் வழக்கறிஞர்கள் :

 

( படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஸ்டெர்லைட் எதிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த கிளஸ்டன் அவர்களின் கல்லறையில் வீரவணக்கம் செலுத்தும் வழக்கறிஞர்கள் :

ஸ்டெர்லைட் எதிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த ஜான்சி அவர்களின் கல்லறையில் வீரவணக்கம் செலுத்தும் வழக்கறிஞர்கள் :

ஸ்டெர்லைட் எதிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த மணிராஜ் அவர்களின் வீட்டிற்கு வழக்கறிஞர்கள் சென்று அஞ்சலி செலுத்தினர்:

மணிராஜ்

ஸ்டெர்லைட் எதிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த கார்த்திக் அவர்களின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தும் வழக்கறிஞர்கள் :

கார்த்திக்

ஸ்டெர்லைட் எதிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த ரஞ்சித் அவர்களின் வீட்டிற்கு வழக்கறிஞர்கள் அஞ்சலி செலுத்த சென்றபோது, அவரது இழப்பை தாங்காத அவரது தாயார் புகைப்படத்தையும்; அவர் இறந்த மே 22-ஐ சுட்டும் நாள்காட்டியையும் திருப்பு வைத்துள்ளார். மேலும் காலையில் இருந்து தொடர்ந்து அழுது மயக்க நிலைக்கு சென்றுள்ளார் ரஞ்சித்தின் தாயார்.

திருநெல்வேலியிலும் வழக்கறிஞர்கள் தூத்துக்குடி தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்தும் விதமாக அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் : 
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு,
தூத்துக்குடி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க