புதன்கிழமை ( ஜூன் 5) அனுசரிக்கப்பட்ட உலக சுற்றுச்சூழல் நாளின் இந்த ஆண்டுக்கான கரு ‘காற்று மாசுபாடு’. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் நாளில் மரம் நடுவது ஒரு சடங்காகவே பாவிக்கப்படுகிறது.

காற்று மாசுபாடு குறித்தோ, குறைந்து வரும் மழையளவு, அதிகரிக்கும் வெப்பம், கடுமையான வறட்சி குறித்த நீண்ட காலத்துக்கான திட்டமிடலை உலகின் எந்த நாடுகளும் முன்னுரிமை கொடுத்து செய்வதில்லை.

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள், பெருமுதலாளிகளுக்கு இயற்கை வளங்களை கூறுபோட்டு விற்பதையே அதிவேகமாகச் செய்ய விரும்புகின்றன. குறிப்பாக, அதானி – அம்பானிகளுக்கு வனங்களை அழிக்கும் முழு பொறுப்பையும் அளித்துள்ள மோடி அரசு, சுற்றுச்சூழலை காக்க என்ன திட்டங்களைத் தீட்டும்? உலக சுற்றுச்சூழல் தினத்தில் இந்தியாவின் சூழலை விளக்கும் சில படங்கள் இங்கே…

தானே-யில் உள்ள ‘ஏரி’யை ‘உலக சுற்றுச்சூழல் நாளை’ ஒட்டி தூய்மையாக்கும் பணியில் செயல்பாட்டாளர்கள்…

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கிரிக்கெட் வீரர் கபில் தேவ், நடிகர் ஜாக்கி ஷெராப், நாட்டுப்புற பாடகர் மாலினி அஸ்வதி உள்ளிட்டோர், ‘உலக சுற்றுச்சூழல் தின’த்தை முன்னிட்டு டெல்லியில் மரக்கன்று நட்டனர். இத்துடன் மத்திய அமைச்சரின் சுற்றுச்சூழல் நாள் கடமை முடிந்தது ! மீத நேரங்களில் அதானி அம்பானிகளுக்கு வனங்களையும், மலைகளையும் அள்ளிக் கொடுப்பதுதான் பிரதான வேலை ..

வழக்கமாக நடக்கும் சில சுற்றுச்சூழல் நாள் நிகழ்ச்சிகளில் ‘சைக்கிள் பேரணி’யும் உண்டு. டெல்லியில் நடந்த அப்படிப்பட்ட சைக்கிள் பேரணிகளில் ஒன்று…

அனைத்து நடப்புகளுக்கும் மணலால் சிற்பம் வடிக்கும் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்னாயக், உலக சுற்றுச்சூழல் நாளுக்கு ஒடிசாவின் பூரி கடற்கரையில் வடித்த மணல் சிற்பம்.. ‘காற்று மாசுபாட்டை வெல்லுங்கள்’ என்கிறது.

உலக சுற்றுச்சூழல் நாளில் குவாஹாத்தி மாநகராட்சி குப்பைகளை கொட்டும் பொரகான் என்ற இடத்தில் மறுசுழற்சிக்குரிய பொருட்கள் ஏதேனும் கிடைக்குமா எனத் தேடும் குப்பை சேகரிப்பாளர்கள்.

மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் உலக சுற்றுச்சூழல் நாளில் குப்பைகளுக்கு நடுவே நடந்து செல்லும் மக்கள்…

பொரகான் குப்பை மேட்டில் பறவைகள், விலங்குகளுக்கிடையே ஏதேனும் பயன்படுத்தத்தக்க குப்பை கிடைக்குமா எனத் தேடும் சிறுவன்…

குவாஹாத்தியின் பொரகான் குப்பை மேட்டில் ‘வாழும்’ செங்கால் நாரைகள்… இதுவும் உலக சுற்றுச்சூழல் நாளில் பதிவான காட்சியே…

மும்மையில் உள்ள அலையாத்தி மரங்கள் சூழ்ந்த மிதி ஆற்றின் அருகே எரிக்கப்படும் குப்பைகளின் ஊடாகக் கடந்து செல்லும் மக்கள்…

பசுமை சூழ்ந்த வனத்தின் பின்னணியில் குவிந்து கிடக்கும் பொரகான் குப்பை மேட்டியில், பிழைப்புக்காக பயன்படுத்தத்தக்க பொருட்கள் கிடைக்குமா என தேடி அலையும் இரு பெண்கள்…

பொரகான் குப்பை மேட்டில் குப்பைகளை மேயும் மாடுகளுக்கிடையே, பயன்படுத்தத்தக்கப் பொருளைத் தேடும் பெண்…

அமிர்தசரசில் குப்பை மேட்டில் பயன்படுத்தத்தக்க பொருட்களைத் தேடிம் குப்பை சேகரிப்பாளர்கள்…

அமிர்தசரஸ் நகரின் புறநகரில் உள்ள குப்பை மேட்டை தன்னுடைய பிழைப்புக்கான நம்பிக்கைக்குரிய இடமாகப் பார்க்கும் ஒரு இளைஞர்…


கலைமதி
நன்றி : அவுட்லுக் இந்தியா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க