‘இந்து ராஷ்டிரம்’ அல்லது ‘இந்து தேசம்’ என்கிற உட்கருத்தை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? இது நிதர்சனமா அல்லது ஒரு செயல்திட்டமா? பல காலமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இந்து ராஷ்டிரம் குறித்து சங்க பரிவாரங்களைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் சில சமயம் பேசுவதில்லை. மாறாக, அவர்கள் இந்தியாவை ‘மாற்ற’ வேண்டும் எனப் பேசுகிறார்கள். இது இந்து ராஷ்டிரம் என்பது ஒரு செயல்திட்டம் என்பதையும் அது இன்னும் முடிக்கப்படவில்லை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

இன்று, இந்துத்துவத்தின் பிடி ஒரு புதிய நிலையை அடைந்திருக்கிறது. அதன் மேலாதிக்கம் அனைத்து நிலப்பரப்புகளுக்கும் விரிவடைந்திருக்கிறது. மேலும், சமூகத்தின் ஆழம் வரை சென்றுள்ளது. அதனுடைய ஏவலாளிகளின் கூற்றுப்படி அது மேலும் விரிவுப்படுத்தப்படும், ஆழப்படுத்தப்படும்.

ஆனால், அதன் இறுதி நோக்கம் என்ன? இந்த செயல்திட்டம் எப்போது நிறைவை எட்டும்? பெயரளவிலோ அல்லது வெளிப்படையாகவோ ஒரு இந்து அரசு நிறுவப்படும்வரை, முறையான இந்து ராஷ்டிரத்தை உருவாக்க முடியாது என்பதே உண்மை.

தன்னுடைய நீண்டகால வரலாற்றில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம், இந்து ராஷ்டிர கட்டுமானம், அரசியல்ரீதியாகவும் தார்மீகரீதியாகவும் அரசின் முறைகேட்டுக்குரிய செல்வாக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவில் தள்ளி நின்றது.

70-களின் மத்திய பகுதிகளில் இது மாற்றத்துக்குள்ளானது. அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவது, நிரந்தரமான இந்து ராஷ்டிரத்தை உருவாக்கவும் நிறுவனமயமாக்கவும் ஒரு முக்கியமான கருவியாக பார்க்கப்பட்டது.

அதன் விளைவாக, காலப்போக்கில் இரண்டு மாற்றங்கள் ஒரே நேரத்தில் கொண்டுவரப்பட்டன. முதலாவது, பாரதிய ஜனதா கட்சியுடனான சமநிலையான உறவைப் பேணுதல், ஆர்.எஸ்.எஸ். மற்றும் மற்ற சங் பரிவார அமைப்புகள் பாஜகவை நோக்கி மாறுதல்.

இரண்டாவது, பாஜகவின் உள்ளே அதிக அதிகாரத்தை மையத்தை நோக்கிய நகர்வும், பிரதமராக நரேந்திர மோடிக்கு அதிகாரத்தையும் அவரைச் சுற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட குழு உண்டாக்கப்பட்டது. ஆனால், சங்க பரிவார படையும் அதன் செயல்பாட்டாளர்களும் பாஜகவுக்கு தேர்தல் பணி செய்யும் இயந்திரங்களாக தேவைப்பட்டனர். மேலும், பரந்துபட்ட சமூகத்தை ஒருங்கிணைக்கும் பணியையும் அவர்கள் செய்ய வேண்டியிருந்தது.

படிக்க:
♦ கார்ப்பரேட் காவி பாசிசம் ! புதிய ஜனநாயகம்
♦ காவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் ! வெற்றி உரையில் மோடி பெருமிதம் !

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். மற்றுமுள்ள முக்கிய சங்க பரிவாரங்களிடமிருந்து இப்போதும் பிறகும்கூட தப்பமுடியாது. இதன் பொருள் என்னவென்றால், சங்க பரிவாரங்கள் ஒருபோதும் ஒரு நபரை நம்பி இல்லை என்பதே.

பாஜக மற்றும் சங்க பரிவாரங்களின் வலதுசாரி பாசிஸ்டு (சிலர் நேரடியாகவே பாசிஸ்டு) குணங்களை முதலில் முதன்மைப்படுத்தியது இடதுசாரி அறிவுஜீவிகளே என்றாலும், அவர்கள் சொன்னது போல அது ஒரு பாசிஸ்டு அரசாக இருக்காது என்பதை அறிவார்கள்.

தாராளவாதிகள் பாஜக என்பது எதிர்பாராதவிதமாக மதவாத போக்குள்ள ஒரு வலதுசாரி சக்தி என பேசுகிறார்கள். ஆனால், மையத்தில் அதிகாரத்தின் பொறுப்பில் அமரும்போது, இந்த அம்சத்தை மிதப்படுத்த அந்த அதிகாரம் உதவும் எனவும் நம்புகிறார்கள். ஆனால், ஜனநாயத்தின் அனைத்து அடிப்படை முக்கியத்துவங்களையும் நீக்கும் ஒரு தலைவர் தலைமையிலான ஒரு கட்சி சர்வாதிகாரம் இருக்கப்போவதில்லை எனில், மேலும் மிக முக்கியமான சட்டப்பூர்வமாக்குதல் நோக்கங்களுக்காக, அனைத்து வழிகளிலும் தேர்தல் முறையானது துல்லியானது என நம்பப்பட்ட நிலையில், அது அதிகாரத்தை உண்மையில் தக்கவைத்துக்கொண்டுள்ளது, எனில் அதன் இறுதி நோக்கம்தான் என்ன?

பல்வேறு வகையான சிவில் உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலமும், நடைமுறையில் இருக்கும் அடக்குமுறை சட்டங்களை தீவிரமாக்குவதன் மூலமும், பொது ஊடகங்களை மறைமுகமாகவும் சூழ்ச்சியுடனும் கையாளுவதும், விருப்பமான நியமனங்களைச் செய்து புலனாய்வு அமைப்புகள், ஆட்சிப் பணிகள், தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றை துணையாக்கிக் கொள்ள முயல்வது போன்றவற்றின் மூலம் இந்திய ஜனநாயகத்தை அதன் உள்ளிருந்து வரும் காலங்களில் மேலும் ஒன்றுமில்லாமல் ஆக்கக்கூடும் என எதிர்ப்பார்ப்பதற்கு இது போதுமானதாக இல்லை. மோடியின் முதல் ஆட்சிக் காலத்தில் என்ன நடந்ததோ அதன் தொடர்ச்சியாகவே இதுவும் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

நிலைத்த ‘இந்து ராஷ்டிர’த்தை உருவாக்க முன்னேறும்போது, முசுலீம்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதற்கும் சில தனிநபர்கள் மற்றும் இந்துக்களுக்கு மற்ற சமூகத்தினருக்குக் கிடைக்காத கூட்டு உரிமைகளை வழங்கவும் அரசியலமைப்பின் கீழ் சில புதிய சட்டங்களை உருவாக்கும் முயற்சி நடக்கும்.

பாஜகவும் சங் பரிவாரங்களும் நீண்ட நாட்களாக அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவர காத்திருக்கும் நிலையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதற்கான தனிபெரும்பான்மையை அடையும் முயற்சிகளும் இருக்கும். 370 பிரிவை நீக்குவது மட்டுமே நோக்கமாக இருக்காது. ஆனால், நேபாளம் முன்பு மதசார்ப்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்து மதத்துக்கு தனி அந்தஸ்து வழங்கும் வகையில் புதிய பிரிவு சேர்க்கப்பட்டப்பட்டது போல, இங்கே முயற்சிக்கப்படலாம். அதாவது, ‘சனாதன மத கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில்’ இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம்.

படிக்க:
♦ மனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு !
♦ புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ! ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் !

கிறிஸ்டோபர் ஜஃப்ரிலாட் சொன்னதைப் போல, இஸ்ரேலின் இந்துத்துவ வடிவம் என்பதே அவர்களின் நீண்ட காலத் திட்டம். ஆனால், அவர்கள் பேராசிரியர் சம்மி ஸ்மூஹா உருவாக்கிய, அபாயகரமாக வழிநடத்தக்கூடிய “இன ஜனநாயகம்” என்ற வார்த்தையை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஒரு யூத அரசாக இஸ்ரேலின் இருப்புக்கு, அரபு பாலஸ்தீன மக்களை இரண்டாம் தர குடிமக்களாக ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்த வார்த்தை மூலம் பொருள் தருகிறார்கள்.

ஆம் உண்மைதான் “இன ஜனநாயம்” என்பதன் பொருள் இஸ்ரேலில் ஜனநாயகமில்லாத தன்மையும் உள்ளது என பொருள். ஆனால், மேலோட்டமாக இது ஜனநாயகத்தைக் கடத்துகிறது. இந்தப் பார்வையை பல இஸ்ரேலிய ஆதரவு தாராளவாதிகள் ஆதரிக்கிறார்கள், மேலும் பல மேற்கத்திய நாடுகளும்கூட இதை ஆதரிப்பதன் மூலம் இஸ்ரேலின் ஜனநாயகம் அல்லாத, இனப்பாகுபாட்டிற்கான உறவுகளை ஒருங்கிணைக்க ஆர்வமாக உள்ளனர். இதே நேரத்தில் தெற்கு ஆப்பிரிக்காவின் இனக் கொள்கை (சாதி அடிப்படையில் மக்களை இங்கே பிரிப்பதைப் போல, நிற அடிப்படையில் உருவாக்கப்பட்ட பிரிவினை), மேற்கத்திய ஜனநாயக சக்திகளால் உருவாக்கப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது. இதுதான் தெற்கு ஆப்பிரிக்காவில் ஜனநாயகமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு இந்து ராஷ்டிரம் என்பது அடிப்படையில் ஜனநாயமற்ற அரசாகவும் சமூகமாகவும் இருக்கும். மேலும் மத பெரும்பான்மையினருக்கு பல ஜனநாயக அம்சங்களும் அதையும் கடந்தும்கூட சில அம்சங்கள் வழங்கப்படக்கூடும். ஆனால், உயர்சாதியினரின் இரக்கமற்ற வன்முறையை தன்னகத்தே கொண்ட சாதிய அமைப்பு இல்லாத இஸ்ரேலைப் போல, அது ஜனநாயகமாக இருக்காது.

தேர்தல் ஜனநாயகத்தின் மூலம் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது இடது வலது அல்லது மைய அரசு ஆனாலும் ஒரு யூத நாடு என்கிற இஸ்ரேலின் அடிப்படை பண்பை மாற்ற முடியாது. இந்துத்துவமும் அதுபோன்றதொரு அரசியல் நிதர்சனத்தை உருவாக்க முனைகிறது. அப்படி உருவாகிவிட்டால் எந்தக் கட்சி டெல்லியில் ஆட்சி அமைத்தாலும் அடிப்படை மாறாது.

இந்த தேவையின் அடிப்படையில் இரண்டு முக்கியமான ஒப்புமைகளைக் காணலாம். முதலாவது, இஸ்ரேலின் எந்தக் கட்சியும் எந்தவொரு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியையும் முழுமையான சுதந்திரமான இறையாண்மையுள்ள பிரதேசமாக அதை அனுமதிக்காது. அந்தப் பகுதியின் முழு கட்டுப்பாட்டாளர்களாக அவர்கள் இருப்பார்கள். சர்வதேச சட்டங்களின்படி, ஜம்மு காஷ்மீரின் நிலைமை பாலஸ்தீனத்தின் நிலையைவிட முற்றிலும் வேறானது. ஆனால், இஸ்ரேலின் கொள்கையின்படி, இந்தியாவில் இருக்கும் எந்தக் கட்சியும் ஜம்மு காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரத்தைத் தர முன்வராது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் வசிக்கும் மக்களுக்கு உள்ள மனித உரிமைகள் கூட காஷ்மீர்வாசிகளுக்குக் கிடைக்காது.

இஸ்ரேல் மற்றும் இந்திய அரசியல் வர்க்கத்துக்கு, “மக்களைக் காட்டிலும் நிலமே மிக முக்கியமானது”. ஆழ்ந்து அந்நியப்படுத்தப்பட்ட மக்கள் மீதான வன்முறையின் மூலம் அவர்கள் ஆட்சி செய்வார்கள். இஸ்ரேல் தன்னாட்சி என்பது சில கோணங்களில் வேறுபட்டிருந்தாலும், தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பு சர்வதேச சட்டங்கள் முன் கேள்விக்குள்ளாக்கப்படும்போது இஸ்ரேல் தனது நிலையிலிருந்து பின்வாங்கிக் கொள்ளும். அதுபோல, ஜம்மு காஷ்மீர் கையகப்படுத்தலின்போது அளிக்கப்பட்ட அரசியலைப்பின் 35 ஏ மற்றும் 370 பிரிவுகளை பாஜக நீக்கும்.

1948-ம் ஆண்டு உறுதியளிக்கப்பட்ட தன்னாட்சி வாக்குறுதியை முன்னர் மத்தியில் ஆண்ட கட்சிகள் கிடப்பில் போட்ட நிலையில், பாஜக தன்னாட்சி என்பதை சட்டத்தின் மூலமாகவே அகற்ற விரும்புகிறது.

இரண்டாவது, இஸ்ரேல் தனது குடிமக்கள் சட்டத்தில் உலகில் உள்ள யூதர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம் என சொல்கிறது. அதுபோல, பாஜக தனது குடிமக்கள் சட்டத்திருத்த மசோதாவில் எப்போது வேண்டுமானாலும் திரும்ப, முசுலீம் அல்லாத பாகிஸ்தானியரை, வங்காள தேசத்தவரை, ஆப்கனை சேர்ந்தவரையும் இந்து மதப் பிரிவுகளைச் சேர்ந்த தெற்காசிய ஆசியாவைக் கடந்த மக்களையும்கூட அழைக்க நினைக்கிறது.

நிச்சயமாக, இவர்களின் இந்த மோசமான மற்றும் ஜனநாயக விரோத திட்டங்களுக்கிடையே ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது.

தற்போதுள்ள இஸ்லாமாபோபியா மீது அமர்ந்து பயணிக்க சியோனிஸம் மகிழ்ச்சி கொள்கிறது. ஆனால், அதன் அடிப்படையான எதிரி இசுலாம் அல்ல, பாலஸ்தீனியர்கள்தான் – அவர்கள் கடவுள் மறுப்பாளர்களா, முசுலீம்களா அல்லது கிறித்துவர்களா என்பதல்ல. எனவே, இது மிகவும் சகிப்புத் தன்மையுள்ள மத நிலை.

ஆனால், இந்துத்துவத்தின் அடிப்படையே முசுலீம்களுக்கு எதிரான நிலைப்பாடுதான். இந்து ராஷ்டிரம் என்பது சகிப்புத் தன்மையற்ற மத அரசு.

நாம் அதை இன்னும் நெருங்கவில்லை எனிலும், அதற்கான எச்சரிக்கை மணி அடிக்கத் தொடங்கிவிட்டது.


கட்டுரையாளர் : Achin Vanaik
கலைமதி
நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க