ங்கிகளின் ஆட்சியில் நாட்டில் எந்த ஒரு மூலையிலும் ஒரு எழுத்தாளரோ, பத்திரிகையாளரோ, செயல்பாட்டாளரோ தாக்கப்படுவது இயல்பானதாகிவிட்டது. அத்தகைய சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு ஆதரவுக் குரல்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து ஒலிப்பதைப் பார்த்திருக்கிறோம்.

தமிழகத்தில் ஒரு ‘முன்னணி’ எழுத்தாளர், சினிமா வசனகர்த்தா தாக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அந்தத் தாக்குதலைக் கண்டிப்பதற்குப் பதிலாக, சமூக ஊடகங்களில் அதைக் கொண்டாடுகிறார்கள்.

எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டதை ஒரு சிலர் மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் என்றும், ஒருவர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள நிலையில் அவரை கேலி செய்வது சரியல்ல எனவும் எழுதியிருக்கின்றனர்.

ஆனால், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வந்த பெரும்பாலான பதிவுகளில் ஜெயமோகனின் ‘அறமே’ , ‘பின் தொடரும் நிழலின் குரலாய்’ வந்து ஒலிக்கிறது !

***

டிவிட்டர் பதிவுகள்…

ரேவன் : 

புளிச்ச மாவு பிரச்சினையில குத்து வாங்கிய எழுத்தாளர் ஜெயமோகன் எடுத்த வாந்தியில் இதுவும் ஒன்று.

”ஏன் சமஸ்கிருதத்தை வெறுக்கிறார்கள் தமிழர்கள்? அறிவியல்,விண்வெளி ஆய்வில் பிராமணர்கள் சாதனை புரிகின்றனர். அதனால் அவர்களின் மொழியில் தமிழர்களுக்கு பொறாமை,வெறுப்பு.”

மூக்கு பொடைப்பா இருந்தா…

***

ஷிவானி சிவக்குமார் :

நீங்க பெரிய எழுத்தாளர்னு சொல்லியிருக்கலாம்ல..!
சொன்னதுக்கு பிறகு தாண்டா வெளுத்தான் – ஆசான்

♦ புளிச்சமாவு என்ற நாவலில் இருந்து !!

***

மஞ்சள் நிலா :

#மாவு என்பது ஒரு வார்த்தை ! ஆனால் …

3 நாள் #புளிச்சமாவு என்பது உணர்வுப்பூர்வமானது!! #ஜெயமோகன்

***

புத்தன் :

கிரைண்டர் மிக்சி எல்லாம் தூக்கிவீச வேண்டியது அப்பறம் வீட்ல மாவாட்ட முடியாம கடைல புளிச்ச மாவு வாங்கி அடிவாங்க வேண்டியது … பைத்தியகாரனுக …

***

இப்ராஹிம் சிராஜ் :

ஜெமோவை தாக்குனது வெளிநாட்டு சதி யுவர் ஆனர் …
உக்கார்றா சங்கி, அது புளிச்ச மாவு பிரச்சனையாம்….

***

சாம்ராஜ் குமார்:

ஒருவேளை ராஜாஜி ஒரு மளிகை கடை பெண் மீது புளிச்சமாவு பாக்கெட்டை வீசியிருந்தால், பெரியார் அந்த பெண்ணிடம் ராஜாஜியை அழைத்து மன்னிப்பு கேட்க வைத்து இருப்பார்! கொள்கையில் இணையாத இருதுருவங்கள்!,. தற்போது ரவி பெரியாருமில்லை ஜெமோ ராஜாஜியுமில்லை.

***

நிமேஷிகா:

அடுத்த நாவலோ அல்லது அடுத்து வசனம் எழுதும் திரைப்படமோ அரசு மருத்துவமனை சார்ந்ததாக இருக்கும்.

எனவே அரசு மருத்துவமனையின் அவல நிலையை நேரிடையாகக் கண்டறிய புளிச்ச மாவு வியாபாரியிடம் வாண்ட்டடா அடி வாங்கி மருத்துவமனையில் தஞ்சமடைந்திருக்கும் உண்மை நம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை!

***

சுபேஷ்:

புளிச்சமாவு = மாவு+ஈஸ்ட் = மாவோயிஸ்ட்
ஜெயமோகனை அடிச்சது மளிகைக்கடைக்காரன் இல்லையாம்.. மாவோயிஸ்ட்டாம்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிருக்கான்.. #Prayforjeyamohan

***

கவாத்து:

ஒரு எழுத்தாளனோட மனைவி அழக்கூடாது.. என்ன நடந்துச்சுனு மட்டும் கேளு..
மாவு வாங்க போனேனா.. அவன் புளிச்ச மாவு கொடுத்துட்டான்.. அதான் இந்த களபரம்.

***

ரவிக்குமார்:‌

அணு உலைக்கு எதிரா போராட்டம் பண்ணி உதை வாங்கி இருந்தா யாராவது கிண்டல் பண்ணீருப்பாங்களா… புளிச்ச மாவு விக்கிறவன் கிட்ட போய் தர்ம அடி வாங்கிட்டு வந்ததால் தான் கிண்டல் பண்றோம்..

***

மது:

டி.எல்-ல சிலர் புளிச்ச மாவு சண்டைக்கு கண்டன கூட்டம் நடத்தணும்-ங்கிற ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்காங்க.. நடந்தது கருத்தியல் சண்டை இல்ல.. கடைக்காரருக்கும் கஸ்டமருக்குமான சண்டை.. கெளரி லங்கேஷ்-க்கு போட்ட ட்விட்ட ஜெமோ-க்காக தூசி தட்டுறது கொஞ்சம் மிகையா இருக்கு..

***

கோபிநாத்:

தோசைக்கு புளிச்ச மாவென்றால்…
வீசும் காற்றில் விஷம் பரவட்டும்!

***

கல்யாண் குமார்:

ஒருநாள் புளிச்ச மாவை உன்னால் சகிக்க முடியவில்லையே! 2000 வருசமா நீங்கள் அரைக்கும் இந்துமதம் எனும் மாவு எவ்வளவு புளித்திருக்கும்!

***

My name is not that important:

ஜெ : என்னவே 2 நாள் புளிச்ச மாவைப் போய் குடுத்துட்டீரே..

அண்ணாச்சி : நீர் மட்டும் 2000 வருஷ புளிச்சி வெண்முரச குடுக்குதீரு.. நான் 2 நாள் புளிச்ச மாவு குடுத்தா உமக்கு வலிக்குதோ..

***

விஜய்:

பேசாம பொன்னார்க்கு பதிலா ஜெமோவை அங்க நிறுத்தியிருந்தா எழுத்தாளர்ன்னு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சிருக்கலாம். இப்படி மாவு வாங்க போயிருக்க தேவையில்ல. #PrayforJemo

***

முகநூல் பதிவுகள்…

மனுஷ்ய புத்திரன் :

துரதிஷ்டம் பிடித்த இரவொன்றில்
மகா கலைஞன் ஒருவனை
விதி மாவுக்கடை ஒன்றை நோக்கி
அழைத்துச் சென்றது

மகா கவிஞன் ஒருவனுக்கு
மதமேறிய கோயில் யானை ஒன்றால்
துயரம் காத்திருந்ததுபோல
மகா கலைஞனுக்கு
ஒரு குடிவெறியேறிய
மாவுக்கடைக்காரன் வடிவில்
துயரம் காத்திருந்தது

இப்படித்தான் தோழர்களே
வரலாற்றில் மகத்தான சம்பவங்கள்
முதல் முறை அவலத்திலும்
இரண்டாம் முறை கேலிக்கூத்திலும் முடிகின்றன

ஒரு புளித்த மாவு பாக்கெட்டிற்குள்
காப்பியங்களை கறைப்படுத்தும்
சாத்தானின் கைகள் ஒளிந்திருப்பதை அறியாமல்
மகா கலைஞன்
மாவுப்பாக்கெட்டுடன் வீடு திரும்பினான்

புளித்த மாவிலிருந்த
உயிர்க்கொல்லி பாக்டீரியாக்கள்
கண் விழித்து எழுந்ததை
தன் கூர்மையான படைப்புக் கண்களால் கண்டுகொண்ட மகாகலைஞன்
திடுக்கிட்டு மாவுபாக்கெட்டோடு
கடை நோக்கி விரைந்தான்
நீதி கேட்டு ஒரு நகரை எரித்த நிலம் இது
அறத்திற்காக பெற்ற மகனை
தேர்க்காலிட்ட நாடு இது
ஒரு புளித்த மாவுக்கான நீதி
பொங்கும் நேரம் வந்துவிட்டதை
யாருமே கவனிக்கவில்லை

ஏற்கனவே புளித்த வாழ்க்கையில்
புளித்த சாராய போதையில்
புளித்த மாவுவிற்ற கடைக்காரனால்
ஒரு மகா கலைஞனின் மொழியை
புரிந்துகொள்ள முடியவில்லை

பட்டத்து யானையின் காதில் புகுந்த
எறும்பைபோல
மகா கலைஞனின் தலைக்குள் புகுந்துவிட்ட
புளித்த மாவின் பாக்டீரியா
காவியச்சுவை குன்றிய
மானுட நடத்தை நோக்கி
மகா கலைஞனை நடத்தியது
அவன் அறம் கூறி வீசி எறிந்த
புளித்த மாவு பாக்கெட்
தரையில்பட்டு சிதறியபோது
பிரளயம் தொடங்கியது

மாவிலிருந்த
பல்லாயிரம் பாக்டீரியாக்கள்
பரவத் தொடங்கின
முதலில் கடைத்தெருவில்
பரவிய பாக்டீரியா
பிறகு அடுத்த தெருவுக்கு பரவியது
பிறகு பக்கத்து ஊருக்கு பரவி
சிற்றூர்களெங்கும் பரவியது
சிற்றூர் தாண்டி
பெரு நகரத்தையும் ஆக்ரமித்த
புளித்த மாவின் பாக்டீரியா
கடல்தாண்டி புலம் தாண்டி
நாடு கடந்து பரவத் தொடங்கியது

ஒரு பாக்டீரியா
மகாகலைஞனுக்காக பேசியது
இன்னொரு பாக்டீரியா மாவுக்கடைக்காரனுக்காக பேசியது
இன்னொரு பாக்டீரியா புளித்த மாவின் அரசியல் பேசியது
வேறொரு பாக்டீரியா சமூக நீதி பேசியது
சில பாக்டீரியாகள் அறம் பேசின
சில பாக்டீரியாக்கள் மறம் பேசின
சில பாக்டீரியாக்கள் புறம் பேசின
மகா கலைஞனின் தத்துவார்த்த விரோத பாக்டீரியாக்கள்
மகா கலைஞனின் தத்துவமும் புளித்துபோனவை என்றன
மகா கலைஞனின் இலக்கிய விரோத பாக்டீரியாக்கள்
மகா கலைஞனின் சொற்களும்
புளித்தவையே என்றன
மகா கலைஞனின் ஆதரவு பாக்டீரியாக்கள்
மகாகலைஞனின் எதிர்ப்பு பாக்டீரியாக்களை
கடித்துத் துப்ப முயன்றன
நடு நிலை பாக்டீரியாக்கள்
எந்தப்பக்கம் போவது என்றும் தெரியாமல்
குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தன

புளித்த மாவிலிருந்து கிளம்பிய பாக்டீரியாக்கள்
டினோனஸர்களாக மாறி
ஊரைச்சூறையாடக்கண்ட மகா கலைஞன்
மனமுடைந்துபோனான்
ராப்பபகலாய் பாக்டீரியாக்களின்
உறுமல்களில் அவனால் தூங்க முடியவில்லை

அரசு மருத்துவமனையின்
பச்சை நிறப்படுக்கையொன்றில்
பாதுகாப்பாக ஒளிந்துகொண்டபோதுதான்
புளித்த மாவின் பாக்டீரியாக்களைவிட
மருத்துவமனையின் நிஜ பாக்டீரியாக்கள்
எவ்வளவு பயங்கரமானவை
என்பதை உணரத் தொடங்கினான்

ஒரு புனிதக் கலைஞனின்மீது
ஒரு புனித எழுத்தின்மீது
ஒரு பாக்கெட் புளித்தமாவு கொட்டினால்
எல்லாமே எவ்வளவு புளிப்பாகிவிடும் என்பதை
வரலாறு பதிவு செய்துகொண்டது

மாவீரன் நெப்போலியனை
வைரஸ் காய்ச்சல் ஒன்று வென்றதைப்போல
மகா கலைஞனின் உன்னதங்களை
புளித்த மாவின் பாக்டீரியா ஒன்று
வேட்டையாடிக்கொண்டிக்கிறது

பார்வதிபுரம் காவலர்
புலனாய்கின்றார்
17.6.2019
பிற்பகல் 3.30.
மனுஷ்ய புத்திரன்

***

படிக்க:
♦ நவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்!
♦ அறம் தின்ற ஜெயமோகன் !

***

இரா. முருகவேள் :

ஜெயமோகன் மீது முகநூலில் வெளிப்பட்ட வெறுப்பின் தீவிரம் அவரது ஆதரவாளர்களுக்கும், நண்பர்களுக்கும் அதிர்ச்சியளித்திருக்கிறது போலிருக்கிறது. எனவே மளிகைக் கடையில் ஜெயமோகன் தவறிழைக்கவில்லை. அப்படியே சிறுதவறு செய்திருந்தாலும் எழுத்தாளர் என்றவிதத்தில் மன்னிக்கக் கூடியதே என்று வாதிடுகிறார்கள்.

JAYAMOHANபுளித்த மாவு ஒரு உடனடிக் காரணம் மட்டுமே. ஜெயமோகன் அவரது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ் அரசியலுக்காகவே விமர்சிக்கப்படுகிறார். அவர் தன்னைக் காந்தியவாதியாகக் காட்டிக் கொள்ள முயன்றாலும் அவரது பாசிச அரசு ஆதரவு நிலைபாடுகள் காட்டிக் கொடுத்து விடுகின்றன.

மக்கள் கலைஞர்களின் தவறுகளை மன்னிக்கக் கூடியவர்கள்தான். சௌபா தன் மகனைக் கொன்ற போதும், தனது முடிவைச் சந்தித்த போதும் முகநூலில் ஒரு துயரார்ந்த மனநிலையே நிலவியது.

ஜெயமோகன் எள்ளி நகையாடப்படுகிறார் என்றால் அதற்குக் காரணம் அவர்தான். புளிப்பு விவகாரமாக அதைச் சுருக்க முயன்றால் மேலும் மேலும் அது ஜெயமோகனுக்கே எதிராகத்தான் முடியும்.

இப்போதே மளிகைக்கடைக்காரரின் பிழைப்பில் மண் போட்டார், ஏழை நோயாளியின் படுக்கையை ஆகிரமித்தார், எம்பியைப் பயன்படுத்தினார். உணவுப் பொருள் கெட்டுப் போனதென்றால் அதற்கு உரிய இடத்தில் புகார் அளிக்காமல் (பாலபாரதி பதிவைப் பார்க்கவும்) குறுக்கு வழியில் போலீசை நாடியது தவறு என்றெல்லாம் வரத் தொடங்கிவிட்டது.

ஜெயமோகனுக்கு இருப்பதாகக் கருதப்பட்ட இடத்தை தமிழ் அறிவுலகம் ஒருபோதும் அவருக்குக் கொடுத்ததில்லை என்பதைத்தான் இந்த சம்பவம் நிரூபித்திருக்கிறது.

***

யமுனா ராஜேந்திரன் :

ஜெயமோகன் அடிப்படையில் மனம் நிறைய வன்முறையையும் வன்மத்தையும் கொண்டு திரியும் ஒரு நபர். ஒரு பெண்ணின் மீது ஒரு பொருளை வீசுவது என்பது உச்சபட்ச வன்முறை.

இது ஒரு சாதாரணமான கஸ்டமர் கம்ப்ளெய்ன்ட் பிரச்சினை. அந்த நிலையில் எந்தக் கணவன் இருந்தாலும் மனைவிக்கு ஆதரவாக இதைத்தான் செய்வான்.

குடிப்பவனெல்லாம் கெட்டமனிதனா? ஜெயமோகன் மருத்துவமனை சென்றது நாடகீயமான ஒரு பில்ட்அப். ஒரு பாராளுமன்ற உறுப்பினரான ரவிக்குமார் விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட ஒருவருக்காக காவல்துறையை இன்புளுவன்ஸ்ஸ் செய்தது அதிகார துஷ்பிரயோகம்.

இது அரசியல் தலையீடு இல்லையா? ஒரு சிவில் தகராறுக்கு இலக்கியச் சாயமும் கருத்துரிமைச் சாயமும் பூசுவது பச்சை அயோக்கியத்தனம் …

***

கோ. சுகுமாறன் :

ஜெயமோகனையும் கைது செய்ய வேண்டும்!

ஜெயமோகன் கொடுத்த புகாரில் மளிகைக் கடைக்காரர் செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். மாவுப் பாக்கெட்டை முகத்தில் வீசி, சாதியை குறிப்பிட்டு பேசியதாக மளிகைக் கடைக்காரர் மனைவி கொடுத்த புகார் மீது வழக்குப் பதிவு செய்து ஜெயமோகனையும் கைது செய்ய வேண்டும்.

***

தயாளன் :

எழுத்தாளன், கவிஞன், புலவன், அறிஞன் எனப்படுவோர் ஏதோ வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் போலவும், மாவுக்கடைக்காரர்கள் ஏதோ வேண்டாததற்கு பிறந்து விட்டது போலவும் சலம்பித் தள்ளுகிறார்கள். எழுத்தாளனுக்கு எழுத்து ஒரு தொழில். அவ்வளவுதான்.

மாவுக்கடைக்காரருக்கு மாவு அரைப்பது ஒரு தொழில். அந்த வெட்டி எழுத்தாள”ன்” ஒரு பெட்டி கேஸுல உள்ளே போயிறக்கூடாதுங்கிற அவசரத்துல முந்திக்கிட்டு புகார் எழுதிக் கொடுத்துட்டு ஆஸ்பத்திரில படுத்திருக்கார். இதுவே ஒரு ரொம்ப சீப்பான அல்பத்தனம். அவ்வளவு வன்மமா அவருக்கு.

மாவு பாக்கெட்டை வீசியெறிஞ்சுட்டு பெரிய “சர்க்கார் தனம்” பண்ணியிருக்கார். ஒரு சாதாரண பெட்டிக் கேசுக்கு எம்பி வரைக்கும் சிபாரிசு. ஜெயமோகன் ஒன்றும் எழுத்தாள தேவதூதன் அல்ல. பி.எஸ்.என்.எல்.-லிலும் வேலை பார்த்துக் கொண்டு, பகுதி நேரமாக கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் அறமற்ற வணிக எழுத்தாளன். புத்தகங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் தனி.

இதுல கருத்துரிமைக்கு ஆதரவா ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கு. மாவுக்கடைக்காரரின் வாழ்வுரிமை பத்தி நாம பேச வேண்டாமா? மாவுக்கடைக்காரரின் மனைவியிடம் மன்னிப்பு கேள்! ஜெயமோகன் செய்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். எழுத்தாள அராஜகவாத குண்டர்களிடமிருந்து எளிய மக்களைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

***

ஷோபா சக்தி :

ஜெயமோகன், விஷ்ணுபுரத்தோரை ஊருலகம் தெரியாத அப்புராணிகளாக வளர்த்துவருவது உள்ளபடியே வருந்தத்தக்கது. நேற்றுப் பாருங்க இந்த வெண்பாவும் அனோஜனும்; டாஸ்மாக் கலாசாரம்தான் கூடாதது, பைவ் ஸ்டார் குடி கலாசாரம் பரவாயில்லை என்பதுபோல பேசியிருக்கிறார்கள்.

அடிதடி, கொலை, கொள்ளை, பவுடர், ரேப், இனவாதம் மதவாதம் எல்லாமே இந்த பைவ் ஸ்டார் பப்புகளில் நிறைந்திருக்கும்.

சென்னையின் தலையாய பப்பான பார்க் ஓட்டல் பப்பில் ஒருமுறை நானும் சாருவும் இருந்தபோது கவிஞர் தய். கந்தசாமியை போனில் அழைத்து, பப்புக்கு வருமாறு கேட்டோம். அப்போதெல்லாம் கந்தசாமி பார்ப்பதற்கு சாட்சாத் அய்யனார் போலவேயிருப்பார். உள்ளே விட மறுத்துவிட்டார்கள். சண்டைபோட்டு உள்ளே அழைத்துவந்தோம். பின்பும் தகராறாகி வெளியேறினோம். இதைச் சாரு அப்போது பத்தி பத்தியாக எழுதியிருந்தார்.

அதைவிடுங்க.. இப்போது 3 மாதங்களிற்கு முன்பு அவுஸ்ரேலியாவில் சிட்னி நகரின் ஒரு பப்பிற்குள் என்னை நுழையவிடவில்லை. என்னுடன் அடையாள அட்டையை வைத்திருக்கவில்லை எனச் சப்பைக் காரணம் சொன்னார்கள். ஆனால் உண்மையான காரணம் என் நிறம். கூடயிருந்த சாட்சி Kishoker Stanislas . இதெல்லாம் அவுஸ்ரேலியாவில் ‘வழமையானது’ என நண்பர்கள் சொன்னார்கள்.

டாஸ்மாக் கலாசாரம் அடித்தள மக்கள் கலாசாரம். அங்கே சக மனிதர் மீதான அக்கறையையும் பரிவையும் சமாதானத்தையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் விதத்தை அனுபவித்தவருக்கே அதன் அருமை தெரியும். டாஸ்மாக் கலாசாரம் எவ்வாறு மானுடம் தழுவியது என்பதை அண்மையில்தானே நம் கவி பிரான்ஸிஸ் கிருபா நிரூபித்தார்.

சில மாதங்களிற்கு முன்பு ஜெயமோகன் ஒரு கட்டுரையில் இந்திய விமானநிலையங்களின் கழிவறைகளில் பணியாற்றும் சுத்திகரிப்புத் தொழிலாளிகள் இனாம் கேட்டு நச்சரிப்பதாகவும் அது நாட்டிற்கே அவமானம் எனவும் எழுதியிருந்தார்.

இந்திய விமான நிலையங்களில் உயர்மட்ட அதிகாரிகளிலிருந்து எல்லா நிலைகளிலுமே இனாம் கேட்பார்கள். சிலபேர் கொண்டுபோகும் விஸ்கிப் போத்தலைக் கூடக் கேட்பார்கள். போர்டிங் போடும்போது கவுண்டரில் இருக்கும் நுனிநாக்கு ஆங்கில யுவன்களும் யுவதிகளும் முதல் வகுப்பு இருக்கை தருகிறோம் 200 ஈரோக்கள் தருகிறீர்களா? என இரகசியமாக வழிவார்கள். இந்திய விமான நிலையங்களில் லஞ்சம் எப்படி விளையாடும் என்பதை ஈழத் தமிழரைவிட நன்கறிந்தோர் வேறு எவர்!

எளிய – அடித்தட்டு மக்கள் மீதான ஜெயமோகனின் பார்வை முன்முடிவுகள் கொண்ட சராசரி இந்திய தத்துவ ஞானப் பார்வை என நினைக்கிறேன். தெருவில் நவ்வாப் பழம் விற்கும் சிறு வியாபாரியைக் கண்டித்தும் கார்ப்பரேட் அங்காடிகளைச் சிலாகித்தும் ஜெயமோகன் எழுதியதும் ஞாபகம் வருகிறது.

ஆசிரியரை எதுவரை தொடரலாம் என்பதற்கும் எல்லைகளுள்ளன. இறைச்சியைச் சாப்பிட்டால் எலும்பைக் கோர்த்துக் கழுத்தில் கட்டிக்கொள்ளத் தேவையில்லை என்பது ஈழத்து வழக்கு.

படிக்க:
♦ ஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் ? கருத்துக் கணிப்பு
♦ சுந்தர ராமசாமி – ஜெயமோகன் : 12,600 வார்த்தைகள் !

***

அ. மார்க்ஸ் :

ஜெயமோகன் பிரச்சினை குறித்து முழு விவரங்களையும் கேட்டு அறிந்தேன். நாகர்கோவில் நண்பர்கள் உதவினார்கள். ஒரு சாதாரண பிரச்சினையை அவர் இத்தனை சிக்கலாக்கியிருக்க வேண்டியதில்லை.

உள்ளூர் நண்பர்கள், இது போன்று மாவு பாக்கெட்கள் விற்கும் சிறு கடைக்காரர்கள் ஆகியோரிடமும் பேசியபோது ஜெயமோகன் சற்றுப் பொறுமையாக இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

அன்றாடம் எத்தனையோ அநீதிகளைப் பொறுத்துக் கொண்டு போகிறோம். உடைந்து கிடக்கும் சாலைகள், ஏமாற்றும் கான்டிராக்டர்கள் இவை குறித்தெல்லாம் நாம் கவலைப்படாமல் கடந்து போய் விடுகிறோம். இப்படியான பிரச்சினைகளை இந்த ‘லெவலு’க்குக் கொண்டு சென்றிருப்பது ஒரு அப்பட்டமான “மிடில் கிளாஸ் மென்டாலிடி” என்றுதான் சொல்ல வேண்டும்.

திருச்சியிலிருந்து ஒரு நண்பர் ஜெயமோகன் 2008 -ல் எழுதிய பதிவொன்றை அனுப்பி இருந்தார். ஒரு முறை ஜெயமோகன் ATM கதவு ஒன்றைச் சரியாகத் திறக்கத் தெரியாமல் அதை உடைத்துத் திறந்து வெளிவந்தன் கதையை அவரே எழுதியது அது.

அதைப் படிக்கும்போது ஒன்று விளங்குகிறது. தான் ஒரு எழுத்தாளன் என்கிற வகையில் ஏகப்பட்ட சிந்தனைகளைச் சுமந்து எப்போதும் தாஸ்தாவெஸ்கி, காம்யூ போன்ற சிந்தனைகளில் ஈடுபட்டிருக்கும்போது இபடித்தான் பொறுமை இல்லாமல் நடந்து கொள்ள முடியும் என அவர் தன்னை நியாயப்படுத்துகிறார். மூர்க்கமாக நடந்து கொண்ட அச் சம்பவத்தையும் தனது மேதமையின் அடையாளமாகச் சித்திரிக்கும் அம் முயற்சி உண்மையில் நேற்று வாசிக்கும்போது எனக்கு வெறுப்பைத்தான் ஏற்படுத்தியது.

ATM கதவை உடைப்பது பெரிய குற்றம். அது வழக்காகி இருந்தால் சிக்கல். எனினும் ஒரு எழுத்தாளர் என்கிற வகையில் அந்த வங்கி அதிகாரிகள் மிக்க பொறுமையுடன் அந்த நிகழ்வைக் கையாண்டுள்ளனர், அவர்களே அதை ‘ரிப்பேர்’ செய்து உரிய தொகையை மட்டும் பெற்றுக் கொண்டு வழக்கு ஏதும் இல்லாமல் செய்துள்ளனர். அவர்களின் அந்தப் பொறுமைக்கு ஒரு நன்றி தெரிவிக்கும் பண்பு கூட அப்பதிவில் ஜெயமோகனிடம் காணவில்லை.

இப்படியான ஒரு புளித்த மாவுப் பிரச்சினையில் நானாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் எனச் சற்று யோசித்துப் பார்த்தேன். மாவு புளித்திருக்கு என மனைவி சொல்லி இருந்தால், “சரி அதைத் தூக்கி எறி. வீட்டில் கோதுமைக் குருணை இருந்தால் கொஞ்சம் கஞ்சி போடு. சாப்பிட்டுவிட்டுப் படுப்போம். உடம்புக்கும் நல்லது” என்று அது இப்படியான சம்பவமாக ஆக்கப்படாமல் கழிந்திருக்கும்.

இரண்டு விடயங்கள் முடிக்கு முன்:

1. அந்த கடைக்காரர் செல்வம் என்பவர் குறித்தும் நாகர்கோவில் நண்பர்கள் ரொம்பவும் நல்ல அபிப்பிராயத்தையே சொல்கின்றனர்.

2. மருத்துவமனையில் அட்மிட் ஆகும் அளவிற்கு ஜெயமோகனுக்கு ஒன்றும் இல்லை. வழக்கை மெய்ப்பிப்பதற்காகவும், வலுவாவதற்காகவும் வழக்கமாக எல்லோரும் செய்யும் தந்திரம்தான் இது என்பதை பாரதி மணி போன்ற பெரியவர்களும் கூடப் பதிவு செய்துள்ளனர். அரசு மருத்துவர் ஒருவர் இப்படி வழக்குக்காக அரசு மருத்துவமனையில் வந்து வேண்டுமென்றே படுத்துக் கொள்வது எப்படி ஒரு உண்மையான நோயாளிக்குக் கிடைக்கக் கூடிய மருத்துவ வசதியைப் பாதிக்கிறது என அவர் உளமார்ந்த வருத்ததுடன் எழுதியிருந்தது நெஞ்சைத் தொடுகிறது..

இந்தப் பின்னணியில் நான் ஜெயமோகனிடம் முன்வைக்கும் அன்பான வேண்டுகோள் இதுதான். ஜெயமோகன் கடைக்காரர் செல்வத்தின் மீது தொடுத்துள்ள வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டு இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும்.

நாகர்கோவில் எழுத்தாள நண்பர்களான லட்சுமி மணிவண்ணன் முதலானோர் இதற்கு உதவ வேண்டும்..

ஜேயமோகனிடமிருந்து வேறு பல நியாயமான காரணங்களுக்காக கருத்து வேறுபடுபவர்கள் இச்சம்பவத்தைப் பயன்படுத்தி அவரை வசைபாடுவதைநிறுத்திக் கொள்வோம்.

***

அதிஷா வினோத் :

வசனம் எழுதும் படங்களுக்கு பலகோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அவர் நினைத்தால் தனியாக மாவு ஃபேக்டரியே தொடங்க முடியும். இருந்தும், இன்னமும் தன் மாவை தானே போய் கடையில் வாங்குகிறார் என்றால் அவருடைய எளிமை இதிலிருந்தே விளங்குகிறது… இன்றைய காந்தி அவர்.

பாருங்கள் எவ்வளவு அடிபட்டாலும் கோடிகோடியாக சொத்துபத்து இருந்தாலும் அரசு மருத்துவமனையில்தான் வைத்தியம் பார்க்கிறார். இதே காரியத்தை அஜித்குமார் பண்ணியிருந்தால் அவருடைய ரசிகர்கள் தலடா கொலடா எளிமைடா வலிமைடா… தல போல வருமா என கொண்டாடியிருப்பார்கள். ஆனால் தமிழ் எழுத்தாளர் என்பதால் அவரை கிண்டல் பண்ணுகிறார்கள்.

இத்தனை காலமும் தன் மாவை தானே வாங்கிக் கொண்டிருந்ததும் அவருடைய எளிமையும் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. இதை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த உதவிய அந்த மாவுக்கடைக்காரருக்கு நன்றி.

– நடுநிலை அறம் குமார்!

***

அறிவு செல்வம் :

பெரியார் தாக்கப்பட்டிருக்கிறார். கலைஞர் தாக்கப்பட்டிருக்கிறார். அவர்களெல்லாம் கொள்கைக்காக தாக்கப்பட்டார்கள்.

புளிச்ச மாவுக்காக அல்ல..


தொகுப்பு : அனிதா