டந்த ஒரு வாரத்தில் நாட்டின் பல இடங்களில் இந்துத்துவ கும்பல் அரங்கேற்றிய தாக்குதல் சம்பவங்களின் போது, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கம் முதன்மையாக இடம்பெற்றிருந்திருக்கிறது. பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சியினர் பதவி ஏற்கும்போது ”ஜெய் ஸ்ரீராம்” என்ற முழக்கத்தைக் கூவினர் பாஜக எம்பிக்கள்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்துத்துவ வெறியேற்றப்பட்ட ஒரு கும்பல் தாக்கியதில் தப்ரேஸ் அன்சாரி என்ற இளைஞர் கொல்லப்பட்டார். அவரை ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்ல கட்டாயப்படுத்தி அடிக்கிறது அந்த கும்பல். அதுபோல, கொல்கத்தாவில் இரயிலில் சென்ற முசுலீம் இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போதும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்லும்படி காவிக் கும்பல் அவரைக் கட்டாயப்படுத்தியிருக்கிறது.

இப்படி ‘ஜெய் ஸ்ரீராமின்’ பெயரால் காவி கும்பல் கையிலெடுத்துள்ள வன்முறையைக் கண்டிக்கும் வகையில் #NoToJaiShriRam என்ற ஹேஷ் டேக் டிவிட்டரில் டிரெண்டானது. இதை டிரெண்டாக்கியவர்கள் தமிழர்கள். தமிழர்களின் எதிர்ப்புக்குரலில், நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து கொண்டனர். அதிலிருந்து சில தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளை இங்கே தொகுத்திருக்கிறோம்.

தமிழ் நடராஜ்:

சான்றிதழின்படி நான் இந்து. ஆனால், நான் “ஜெய் ஸ்ரீராம்” சொல்ல மாட்டேன். இது என்னுடைய வாழ்தலுக்கான லட்சியத்தை கூறவில்லை. இன்று ‘வேண்டாம் ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்கிறேன், ஏனெனில் இது மனிதநேயத்தைக் குறிக்கிறது. வாழ்தலுக்கான நோக்கத்தைக் குறிக்கிறது.

பழுவேட்டரையர்:

கடவுள் ராமனுக்கு வெற்றியை என முழங்கி, மக்களைக் கொல்கிறீர்கள். ராமனுக்கு நீங்கள் சமர்ப்பிக்கும் வெற்றி எத்தகையது? கோழைத்தனமான கிரிமினல்தனத்தின் மூலம் மனித சதையை சமர்ப்பிப்பதால் மகிழ்ச்சியடைவாரெனில் என்ன வகையான  கடவுள் அவர் ?

வைசாலி:

இந்தியாவில் உள்ள எவருக்கும், ஏன் மோடிக்குமே கூட முசுலீம்களாகிய உங்களை  ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்ல வற்புறுத்த உரிமை கிடையாது.

மணிமாறன் ராஜசோழன்:

ராமன் யார்? ராமாயண கதையின்படி தனது மனைவியை நம்பாத ஒருவர். ராமன் ஒரு கதாபாத்திரம் மட்டுமே. இவர் உண்மையான கடவுள் இல்லை. இந்த முட்டாள்கள் ராமனை வழிபட விரும்புகிறார்கள். நான் ஏன் வழிபட வேண்டும்?

விவேக் கோபாலகிருஷ்ணன்:

காவி இந்துத்துவக் கும்பல் சக முசுலீம் சகோதரர்களை மதத்தின் பேரால் கொல்வதற்கு எதிராக தமிழர்கள் நாங்கள் நிற்கிறோம்.

குரு தமிழ் :

ராவணனைப் போல இதுவும் கற்பனைக் கதாபாத்திரம்தான். ராமன் தன்னுடைய மனைவியை சந்தேகித்து நெருப்பில் இறங்கச் சொன்னார். அவரை ஒரு மனிதராகக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியிருக்கும்போது ஏன் அவரைக் கடவுளாக வழிபடுகிறார்கள்?

ஆஸ்டின் பெஞ்சமின் :

மதம் மனிதனை, விலங்காக மாற்றுகிறது.

இக்‌ஷ்தீப் சிங்:

இந்திய அரசியலமைப்பு நமது மதத்தைப் பின்பற்றும் உரிமையை வழங்கியுள்ளது. ஒருவருடைய மத நம்பிக்கையை கட்டாயமாக திணிக்கும் சக்தி எவருக்கும் இங்கே இல்லை.

சித்தார்த்தா சரண்:

எங்களுடைய கடவுளர்கள் அய்யனார், கருப்பன், சுடலைமாடன், மதுரைவீரன் போன்றோர். அவர்கள்தான் எங்களைக் காப்பவர்கள், வீரர்கள். நாங்கள் எங்களுடைய தாய்மொழியில் அவர்களை துதிப்போம். ராமன் யார்? தனது மனைவியை சந்தேகித்துக் கொன்றவன். நாங்கள் ஏன் அந்த சமஸ்கிருத பயங்கரவாதியைத் துதிக்க வேண்டும்?

அமெரிக்காவாசி:

நாட்டின் சிறுபான்மையினரைக் கொன்று கொண்டிருக்கும் “ஜெய் ஸ்ரீராம்” சொல்வதை நிறுத்துவோம். இந்தியா எப்போதும் மதச்சார்பற்ற நாடுதான்.

குரு:

உங்கள் அருகே யாரேனும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழங்கிக் கொண்டிருந்தால், நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள். அவன்/அவள் ஒரு பயங்கரவாதியாக இருக்கலாம்.

அனுஷ்கா அகர்வால்:

ஒரு ரயில் நிலையத்தில் முசுலீம்கள் தொழுதுகொண்டிருப்பதைப் பார்த்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என சிலர் கத்தும் வீடியோவை இப்போது பார்த்தேன். தயவு செய்து மனிதத்தன்மையற்ற இந்தச் செயலை நிறுத்துங்கள்.

இதனால் உங்களுக்குக் கிடைக்கப்போவது என்ன? அனைத்து இந்தியர்களும் சகோதர, சகோதரிகளே.. தயவுசெய்து நிறுத்துங்கள்.

சுபம் ராஜ் பிராமி:

இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நம்முடைய நாட்டில் இத்தகைய வன்முறைகளுக்கு இடமில்லை. இது மதச்சார்ப்பற்ற நாட்டின் மீது விழுந்த அடி. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சக நாடாளுமன்றவாதிகளை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழங்க வேண்டாம் என்றும் வலியுறுத்துங்கள்.

முகமது ஆரிஃப்:

கும்பல் வன்முறையாளர்களால் ஐம்பதுக்கும் அதிகமான முசுலீம்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அரசு அதுபற்றி கவலைப்படவில்லை. சட்டமும் இல்லை, நடவடிக்கையும் இல்லை. இதுதான் நாம் விரும்பும் இந்தியாவா? தயவுசெய்து உங்களுடைய குரல்களை உயர்த்துங்கள்.

அப்துல் அஜீஸ்:

மனிதநேயம் தேவையாக உள்ளது.

கணேஷ் பாண்டியன்:

உங்களுடைய அமைதி அவர்களை கொல்லக்கூடும்.

முகமது உமர்:

நீங்கள் சிறு குற்றச்சாட்டுக்கு உள்ளான முசுலீம் எனில் கொல்லப்படுவீர்கள். நீங்கள் இந்து, பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் எனில் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்படுவீர்கள்.


தொகுப்பு : அனிதா